புதன், 25 நவம்பர், 2009

மாவீரர் நாள்

மாவீரர் நாள்

தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.
வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகள்
புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப் பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27 ம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.
கொடியேற்றுதல்
மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.
கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.
மாவீரர்நாள்

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.
மாவீரர் நாள் பாடல்
மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
 மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
 தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.
புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.
தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.

கார்த்திகைப் பூ
இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மாவீர‌ன் உத‌ய‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 26


வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
குடும்பப் பின்னணி
வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட சைவ நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.
சிறுவயது அனுபவங்கள்
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
வரலாற்று முக்கியத்துவம்.
பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசிய வாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.

பிரபாகரன் கூற்றுக்கள்.
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."




'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'


"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."


"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."


"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."


"செய் அல்லது செத்துமடி."

வியாழன், 19 நவம்பர், 2009

நவ.,21ம் தேதி ஹலோ தினம்.....

ஹலோ தினம்!  இமெயில், மொபைல் போன் என தகவல் தொடர்பு வசதிகள் பெருகி, உலகமே சுருங்கிவிட்டதால், இன்று ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் விட்டு பேசுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்த குறையை போக்கத் தான் ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவ.,21ம் தேதி ஹலோ தினமாக கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு எகிப்து, இஸ்ரேலிடையே நிகழ்ந்த மோதல்களும், சமாதானமுமே ஹலோ தினம் உருவாக காரணமாக இருந்தது. இன்று 180 நாடுகள் ஹலோ தினம் கொண்டாடுகின்றன. இந்த ஹலோ தினத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் 10 பேரை சந்தித்து ஹலோ கூறினால் போதுமானது.தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்கும் இருவர் பேசிக்கொள்ளும் போது தீர்வு கிடைக்கிறது. பெரிய சிக்கல்களுக்கும் சுமூகமான முடிவை எட்ட வழி பிறக்கிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு வழி கிடைக்கிறது.நம் இதயத்தில் உள்ள சுயநலமும், பயமும் அகன்று நம்பிக்கையும், இரக்கமும் உருவாகும் போது தான் அமைதி பிறக்கும் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன். இவ்வாறு தனிநபர்களிடையே ஏற்படும் சமாதானம், உலக அமைதிக்கும் உதவுகிறது.நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் ஹலோ தினத்துக்கு பின்னணியில் உள்ள உன்னத நோக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகில் அமைதி ஏற்படுத்துவதற்கு முதல் படியாக இரு இதயங்களுக்கிடையே சமாதானத்தை உருவாக்குவதே ஹலோ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். 

ஞாயிறு, 15 நவம்பர், 2009

அனைத்துலக மாணவர் நாள் நவம்பர் 17 ...


அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

வரலாறு 
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

நவம்பர் 17

கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன

காதல் மன்னன் ஜெமினியின் பிறந்தநாள்  17 நவம்பர் ....
ஜெமினி கணேசன்  17 நவம்பர் 1920 – 22 மார்ச்சு 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்குகிறது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளையும், பட்டங்களை வழங்கப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாகலாம். தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ் ரேவதி சுவாமிநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

வியாழன், 5 நவம்பர், 2009

வீரமாமுனிவர் பிறந்தநாள் நவம்பர் 8...


வீரமாமுனிவர்
தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். (இத்தாலிய இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi,ஆங்கிலம் - Father Constantine Joesph Beschi) இவர் இயேசு சபையைச் சேர்ந்த, ஒரு பாதிரியார் ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு சேசுசபைப் பாதிரியாரானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்க்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

பெயர்மாற்றம்...
மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
தமிழக வாழ்க்கை முறை..
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்
அவரின் தமிழ் படைப்புகள்...
இவர் எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரைப் பதித்தவர்.
சதுரகராதியை,நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும் முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும் நகரினை ஒக்கும் வீடே
இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.
அன்பு வைத்த உயிர்நிலை அ•திலார்க் கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன் துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான் ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.
முடுகு முரசொலி முடுகு முழவொலி முடுகு முருகொலி முடிவிலாக் கடுகு பறையொலி கடுகு கலமொலி கடுகு கடலொலிக னிவெழாத் தொடுகு குழலொளி கொடுகு குரலொலி தொடுகு துதியொலி தொடுதலாற் படுகு முகிலொலி படுகு கடலொலி படுத லிலமண மாயதே.

திங்கள், 2 நவம்பர், 2009

உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...


உலக நாயகனின் உதய நாள் நவம்பர் 7...
கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
*கமல்ஹாசன் இதுவரை 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்,
1960 - தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம்

1962 - மலையாளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்

1977 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்

 கமல்ஹாசன் கலைப்பயணம்

2009 - "உன்னைப்போல் ஒருவன்" 'WEDNESDAY' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மீள்தயாரிப்பு

2008 - தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)

2006 - வேட்டையாடு விளையாடு

2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (ஹிந்தி (த) (எ)

2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)

2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

2004 - விருமாண்டி (த) (எ) (இ)

2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)

2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)

2003 - அன்பே சிவம் (எ)

2002 - பஞ்சதந்திரம்

2002 - பம்மல் கே.சம்பந்தம்

2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)

2001 - லேடீச் ஒன்லி

2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)

2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)

2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (ஹிந்தி) (இரட்டை வேடம்) (எ)

2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)

2000 - தெனாலி

2000 - தெனாலி (தெலுங்கு)

2000 - ஹே ராம் (த) (எ) (இ)

2000 - ஹே ராம் (ஹிந்தி) (த) (எ) (இ)


தொண்ணூறுகள்

1998 - காதலா காதலா

1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)

1996 - அவ்வை சண்முகி

1996 - பாமனெ (தெலுங்கு)

1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)

1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)

1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)

1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)

1995 - சதி லீலாவதிi (த)

1994 - நம்மவர்

1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)

1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)

1994 - மகாநதி (திரைப்படம்) (b)

1993 - கலைஞன்

1993 - மகராசன் (த)

1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.

1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)

1992 - சிங்காரவேலன்

1991 - குணா

1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)

1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)

1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)

1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)


எண்பதுகள்

1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்

1989 - வெற்றி விழா

1989 - சாணக்யன் (மலயாளம்)

1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.

1989 - ச்ப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)

1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)

1988 - உன்னால் முடியும் தம்பி

1988 - சூர சம்ஹாரம்

1988 - டெய்சி (மலையாளம்)

1988 - சத்யா (த)

1988 - பேசும் படம்

1987 - புஷ்பக் (ஹிந்தி)

1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)

1987 - புஷ்பக விமானா (கன்னடம்)

1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)

1987 - நாயக்குடு (தெலுங்கு)

1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)

1987 - நாயகன் - ஹிந்தித் திரைப்படமான தயவன் இல் இப்படத்தினை போன்ற சாயல்.

1987 - பேர் சொல்லும் பிள்ளை

1987 - அந்த்தரிகந்தே கனுடு (தெலுங்கு)

1987 - விரதம் (மலயாளம்)

1987 - காதல் பரிசு

1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)

1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)

1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)

1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)

1986 - விக்ரம் (த)

1986 - நானும் ஒரு தொழிலாளி

1986 - சிப்பிக்குள் முத்து

1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - ஹிந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்

1986 - மனக்கணக்கு (நட்புக்காக)

1985 - தேகா பியார் துமாரா (ஹிந்தி)

1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)

1985 - மங்கம்மா சபதம்

1985 - ஜிராப்டார் (ஹிந்தி)

1985 - சாகர் (ஹிந்தி)

1985 - உயர்ந்த உள்ளம்

1985 - அந்த ஒரு நிமிடம்

1985 - காக்கிச் சட்டை

1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.

1984 - கரிஷ்மா (ஹிந்தி)

1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)

1984 - ராஜ் திலக் (ஹிந்தி)

1984 - யாட்கார் (ஹிந்தி)

1984 - ஏக் நை பகெலி (ஹிந்தி)

1984 - ஜே தேஷ் (ஹிந்தி)

1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)

1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)

1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)

1983 - சத்மா (ஹிந்தி)

1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்

1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)

1983 - சினேக பந்தம் (மலையாளம்)

1983 - சட்டம்

1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)

1983 - சாரா ஸீ சிந்தகிi (ஹிந்தி)

1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)

1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)

1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)

1982 - பகடை பன்னிரெண்டு

1982 - ஜே தோ கமல் ஹொகயா (ஹிந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் ஹிந்தித் தயாரிப்பு.

1982 - ராணித் தேனி (நட்புக்காக)

1982 - எழம் ராத்திரி (மலையாளம்)

1982 - சகலகலா வல்லவன்

1982 - சனம் தேரி கசம் (ஹிந்தி)

1982 - ஷிம்லா ஸ்பெஷல்

1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக ஹிந்தியில் மறுதயாரிப்பு.

1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)

1982 - அந்தகடு (தெலுங்கு)

1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)

1982 - வாழ்வே மாயம்

1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)

1981 - எல்லாம் இன்பமயம்

1981 - டிக்! டிக்! டிக்!

1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)

1981 - சங்கர்லால்

1981 - சவால்

1981 - கடல் மீன்கள்

1981 - எக் துஜே கெ லியே (ஹிந்தி)

1981 - ராஜ பார்வை (த)

1981 - ராம் லக்சுமன்

1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)

1981 - மீண்டும் கோகிலா

1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)

1981 - தில்லு முல்லு (நட்புக்காக)

1980 - நட்சத்திரம் (நட்புக்காக)

1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)

1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)

1980 - வறுமையின் நிறம் சிகப்பு

1980 - குரு

1980 - உல்லாசப் பறவைகள்

 எழுபதுகள்

1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)

1979 - நீல மலர்கள் (நட்புக்காக)

1979 - மங்கள வாத்தியம்

1979 - கல்யாணராமன் (தமிழ்)

1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)

1979 - இடிகாதா காது (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்

1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)

1979 - நினைத்தாலே இனிக்கும்

1979 - தாயில்லாமல் நான் இல்லை

1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)

1979 - நீயா!

1979 - சிகப்புக்கல் மூக்குத்தி

1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.

1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)

1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)

1978 - மதனோல்சவம் (மலையாளம்)

1978 - யீட்ட (மலையாளம்)

1978 - அவள் அப்படித்தான்

1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!

1978 - சிகப்பு ரோஜாக்கள்

1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)

1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)

1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)

1978 - இளமை ஊஞ்சலாடுகிறது

1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)

1978 - நிழல் நிஜமாகிறது

1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)

1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்

1977 - நாம் பிறந்த மண்

1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - ஆடு புலி ஆட்டம்

1977 - 16 வயதினிலே

1977 - ஊர் மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)

1977 - நிறைகுடம் (மலயாளம்)

1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)

1977 - கபிதா (வங்காளம்)

1977 - உன்னை சுற்றும் உலகம்

1977 - சிறீதேவி (மலையாளம்)

1977 - மதுர சொப்னம் (மலையாளம்)

1977 - அவர்கள் (நட்புக்காக)

1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)

1977 - சிவதாண்டவம் (மலையாளம்)

1977 - உயர்ந்தவர்கள்l

1976 - லலிதா (நட்புக்காக)

1976 - மோகம் முப்பது வருஷம்

1976 - மூன்று முடிச்சு

1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)

1976 - பொன்னி (மலையாளம்)

1976 - இதய மலர்

1976 - குமார விஜயம்

1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)

1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)

1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது

1976 - சத்தியம்

1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)

1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)

1976 - மன்மத லீலை

1976 - சமசியா (மலையாளம்)

1976 - அப்பூப்பான் (மலையாளம்)

1976 - அக்னி புஷ்பம் (மலயாளம்)

1975 - அந்தரங்கம்

1975 - ராசலீலா (மலையாளம்)

1975 - மற்றொரு சீதா (மலையாளம்)

1975 - திருவோணம் (மலையாளம்)

1975 - அபூர்வ ராகங்கள்

1975 - மாலை சூட வா

1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)

1975 - பட்டிக்காட்டு ராஜா

1975 - தங்கத்திலே வைரம்

1975 - மேல்நாட்டு மருமகள் (வானி கண்பதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)

1975 - தேன் சிந்துதே வானம்

1975 - ஆயிரத்தில் ஒருத்தி

1975 - பட்டாம்பூச்சி

1975 - சினிமா பைத்தியம்

1974 - பணத்துக்காக

1974 - ஆய்னா (ஹிந்தி)

1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)

1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)

1974 - அவள் ஒரு தொடர்கதை

1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)

1974 - அன்புத் தங்கை

1974 - கன்யாகுமாரி (மலையாளம்)

1974 - நான் அவனில்லை

1974 - குமாஸ்தாவின் மகள்

1974 - பருவ காலம்

1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்

1973 - அரங்கேற்றம்

1972 - குறத்தி மகன்

1970 - மாணவன்

அறுபதுகள்

1963 - ஆனந்த ஜோதி

1963 - வானம்பாடி

1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)

1962 - பாத காணிக்கைi

1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)


1960 - களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசனின் தயாரிப்பில் வந்த திரைப்படங்கள்

ராஜ பார்வை

அபூர்வ சகோதரர்கள்

சத்யா

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

மைக்கேல் மதன காமராஜன்

தேவர் மகன்

ஹே ராம்

விருமாண்டி

மகளிர் மட்டும்

மும்பை எக்ஸ்பிரஸ்

கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்


1999 - விவி நெ.1 (இந்தி)

1997 - விராசாத் (இந்தி)

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்

1998 - Chachi 420

2000 - ஹே ராம்

2004 - விருமாண்டி

மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்

2006 - புதுப்பேட்டைi (பின்னணிப் பாடகர்)

2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)

2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)

2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)

2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)

2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)

1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)

1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)

1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)

1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)

1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)

1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)

1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)

1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)

1974 - ஆய்னா (நடனங்கள்)

 விருதுகள்

*மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)

*சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)

18 பிலிம்பேர் விருதுகள்.

பத்மஸ்ரீ விருது (1990)

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005)