ஞாயிறு, 31 ஜனவரி, 2010

உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2
உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.
சதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.
இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.
ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.
கேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.
19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.
இதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.
 
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!

செவ்வாய், 12 ஜனவரி, 2010

உலகின் முக்கிய தினங்கள்...


உலகின் முக்கிய தினங்கள்...
ஜனவரி
26 - உலக சுங்க தினம்

30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்

15 - உலக நுகர்வோர் தினம்

20 - உலக ஊனமுற்றோர் தினம்

21 - உலக வன தினம்

22 - உலக நீர் தினம்

23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 - உலக காசநோய் தினம்

28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்

05 - உலக கடல் தினம்

07 - உலக சுகாதார தினம்

12 - உலக வான் பயண தினம்

18 - உலக பரம்பரை தினம்

22 - உலக பூமி தினம்

30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்

03 - உலக சக்தி தினம்

08 - உலக செஞ்சிலுவை தினம்

12 - உலக செவிலியர் தினம்

14 - உலக அன்னையர் தினம்

15 - உலக குடும்ப தினம்

16 - உலக தொலைக்காட்சி தினம்

24 - உலக காமன்வெல்த் தினம்

29 - உலக தம்பதியர் தினம்

31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்

05 - உலக சுற்றுப்புற தினம்

18 - உலக தந்தையர் தினம்

23 - உலக இறை வணக்க தினம்

26 - உலக போதை ஒழிப்பு தினம்

27 - உலக நீரழிவாளர் தினம்

28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்

11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்

03 - உலக நண்பர்கள் தினம்

06 - உலக ஹிரோஷிமா தினம்

09 - உலக நாகசாகி தினம்

18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்

08 - உலக எழுத்தறிவு தினம்

16 - உலக ஓசோன் தினம்

18 - உலக அறிவாளர் தினம்

21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்

02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்

05 - உலக இயற்கைச் சூழல் தினம்

08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

09 - உலக தபால் தினம்

16 - உலக உணவு தினம்

17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

18 - உலக மனநோயாளிகள் தினம்

19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்

02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 - உலக மனித உரிமைகள் தினம்


14 - உலக ஆற்றல் தினம்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சுவாமி விவேகானந்தர் உதய‌ நாள் ஜனவரி 12...


சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
 இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
மேலைநாடுகளில்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
 இந்தியா திரும்புதல்
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.
 மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
 விவேகானந்தரின் கருத்துக்கள்
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
 புத்தகங்கள்
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

வியாழன், 7 ஜனவரி, 2010

புர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பிற‌ந்த நாள் ஜனவரி 17


எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
இளமைப்பருவம்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.
திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்
அரசியல்
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.


விருதுகள்

பாரத் விருது - இந்திய அரசு

அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

பாரத ரத்னா விருது - இந்திய அரசு

பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)

சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)

வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி

நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)

மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்

பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்

மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்

கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்

கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்

கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்

கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்

கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்

திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

 பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்

கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா

நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்

பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்

மக்கள் திலகம் - தமிழ்வாணன்

வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்

புரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்

இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்

மக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்

ஆளவந்தார் - ம.பொ.சிவஞானம்
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.
1. சதி லீலாவதி -1936

2. இருசகோதரர்கள் -1936

3. தட்சயக்ஞம் -1938

4. வீரஜகதீஷ் -1938

5. மாயாமச்சேந்திரா -1939

6. பிரகலாதா-1939

7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941

8. அசோக்குமார் -1941

9. தமிழறிவும் பெருமாள் -1941

10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943

11. அரிச்சந்திரா -1944

12. சாலிவாகணன் -1945

13. மீரா -1945

14. ஸ்ரீ முருகன் -1946

15. ராஜகுமாரி -1947

16. பைத்தியக்காரன் -1947

17. அபிமன்யு -1948

18. மோகினி -1948

19. ராஜமுக்தி -1948

20. ரத்னக்குமார் -1949

21. மருதநாட்டு இளவரசி -1950

22. மந்திரிகுமாரி -1950

23. மர்மயோகி -1951

24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)

25. சர்வாதிகாரி -1951

26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)

27. அந்தமான் கைதி -1952

28. குமாரி -1952

29. என் தங்கை -1952

30. நாம் -1953

31. ஜெனோவா -1953(மலையாளம்)

32. ஜெனோவா -1953

33. பணக்காரி -1953

34. மலைக்கள்ளன் -1954

35. கூண்டுக்கிளி -1954

36. குலோபகாவலி -1955

37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956

38. மதுரை வீரன் -1956

39. தாய்க்குப் பின் தாரம் -1956

40. சக்கரவர்த்தி திருமகள் -1957

41. ராஜராஜன் -1957

42. புதுமைப்பித்தன் -1957

43. மகாதேவி -1957

44. நாடோடி மன்னன் -1958

45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959

46. பாக்தாத்திருடன் -1960

47. ராஜா தேசிங்கு -1960

48. மன்னாதி மன்னன் -1960

49. அரசிளங்குமரி -1961

50. திருடாதே -1961
51. சபாஷ் மாப்ளே -1961


52. நல்லவன் வாழ்வான் -1961

53. தாய்சொல்லைத் தட்டாதே -1961

54. ராணி சம்யுக்தா -1962

55. மாடப்புறா -1962

56. தாயைகாத்த தனையன் -1962

57. குடும்பத்தலைவன் -1962

58. பாசம் -1962

59. விக்கிரமாதித்தன் -1962

60. பணத்தோட்டம் -1963

61. கொடுத்து வைத்தவன் -1963

62. தர்மம் தலைகாக்கம் -1963

63. கலை அரசி -1963

64. பெரிய இடத்துப் பெண் -1963

65. ஆனந்த ஜோதி -1963

66. நீதிக்கு பின் பாசம் -1963

67. காஞசித் தலைவன் -1963

68. பரிசு -1963

69. வேட்டைக்காரன் -1964

70. என் கடமை -1964

71. பணக்காரக் குடும்பம் -1964

72. தெய்வத்தாய் -1964

73. தொழிலாளி -1964

74. படகோட்டி -1964

75. தாயின் மடியில் -1964

76. எங்க வீட்டுப் பிள்ளை -1965

77. பணம்படைத்தவன் -1965

78. ஆயிரத்தில் ஒருவன் -1965

79. கலங்கரை விளக்கம் -1965

80. கன்னித்தாய் -1965

81. தாழம்பூ -1965

82. ஆசைமுகம் -1965

83. அன்பே வா -1966

84. நான் ஆணையிட்டால் -1966

85. முகராசி -1966

86. நாடோடி -1966

87. சந்திரோதயம் -1966

88. தாலி பாக்கியம் -1966

89. தனிப்பிறவி -1966

90. பறக்கும் பாவை -1966

91. பெற்றால் தான் பிள்ளையா? -1966

92. தாய்க்கு தலை மகன் -1967

93. அரச கட்டளை -1967

94; காவல்காரன் -1967

95. விவசாயி -1967

96. ரகசிய போலீஸ்115 -1968

97. தேர்த்திருவிழா -1968

98. குடியிருந்த கோயில் -1968

99. கண்ணன் என் காதலன் -1968

100. ஒளிவிளக்கு -1968

101. கணவன் -1968

102. புதிய பூமி -1968

103. காதல் வாகனம் -1969

104. அடிமைப் பெண் -1969

105. நம்நாடு -1969

106. மாட்டுக்கார வேலன் -1970

107. என் அண்ணன் -1970

108. தலைவன் -1970

109. தேடிவந்த மாப்பிள்ளை -1970

110. எங்கள் தங்கம் -1970

111. குமரிக்கோட்டம் -1971

112. ரிக் ஷாக்காரன் -1971

113. நீரும் நெருப்பும் -1971

114. ஒரு தாய் மக்கள் -1971

115. சங்கே முழங்கு -1972

116. நல்ல நேரம் -1972

117. ராமன் தேடிய சீதை -1972

118. நான் ஏன் பிறந்தேன் -1972

119. அன்னமிட்டகை -1972

120. இதய வீணை -1972

121. உலகம் சுற்றும் வாலிபன் -1973

122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973

123. நேற்று இன்று நாளை -1974

124. உரிமைக்குரல் -1974

125. சிரித்து வாழவேண்டும் -1974

126. நினைத்ததை முடிப்பவன் -1975

127. நாளை நமதே -1975

128;. இதயக்கனி -1975

129. பல்லாண்டு வாழ்க -1975

130. நீதிக்கு தலைவணங்கு -1976

131. உழைக்கும் கரங்கள -1976

132. ஊருக்கு உழைப்பவன் -1976

133. நவரத்தினம் -1977

134. இன்று போல் என்றும் வாழ்க -1977

135. மீனவ நண்பன் -1977

136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977

தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்

1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956

2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956

3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957

4.மகாதேவி (மகாதேவி) -1958

5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.

6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959

7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960

8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961

9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961

10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961

11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962

12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962

13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962

14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962

15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963

16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963

17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963

18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964

19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954

20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954

21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964

22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964

23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964

24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965

25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965

26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965

27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966

28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966

29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967

30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967

31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967

32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967

33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967

34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967

35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967

36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968

37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968

38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968

39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968

40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968

41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969

42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969

43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969

44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970

45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970

46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971

47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971

48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972

49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972

50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972

51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973

52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975

53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975

54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975

55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976

56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976

57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976

58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978

59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978

60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978
இந்தி மொழி மாற்ற படங்கள்
1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956

2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961

3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962

4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963

5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966

6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970

7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974

8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975

9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976
புர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...
தமிழ் நூல்கள் :

1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்

வெளியீடு - கல்வி உலகம் , இளந்தேரி (1977)
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள்.

ஆசிரியர் – சாலி.இக்பால்

வெளியீடு – நூர் பதிப்பகம் , சென்னை (1980)

3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை.

ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்f

வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)

4. அண்ணனுக்குப் பின் மன்னன்.

ஆசிரியர் – அடியார்.

வெளியீடு - மல்லி பதிப்பகம் , சென்னை (1978)

5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்

வெளியீடு – வானதி பதிப்பகம் , சென்னை (1985)

6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)

7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – நாகை தருமன்

வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம் , சென்னை (1979)

8. வரலாற்று நாயகன்

ஆசிரியர் – திருமூலன்

வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)

9. காலத்தை வென்றவர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி

ஆசிரியர் – அறிஞர் அண்ணா தொகுப்பு- ஆர்.சீனிவாசன்

வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)

11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)
12. அண்ணா தி.மு.க. வரலாறு

ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்

வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)

13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்

வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)

14. சத்துணவும் சத்துணர்வும்

ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்

வெளியீடு – வள்ளி புத்தக நிலையம் , சென்னை (1984)

15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்)

ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்

வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , சென்னை (1985)

16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு

ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன்

வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)

17. எம் தலைவன் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1987)

18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி

வெளியீடு – வித்வான் பதிப்பகம் , சென்னை (1975)

19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை)

ஆசிரியர் – ராஜவர்மன்

வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ் , சென்னை (1984)
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர்

ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு

வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1983)

21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர்

ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்

வெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1986)

22. நினைவுகளின் ஊர்வலம்

ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன்

வெளியீடு – திருமகள் நிலையம் , சென்னை (1986)

23. எமனை வென்ற எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – தஞ்சை தமிழழகன்

வெளியீடு - மக்கள் பதிப்பகம் , சென்னை (1985)

24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர்

ஆசிரியர் – அ.வசந்தகுமார்

வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம் , சென்னை (1985)

25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும்

ஆசிரியர் – எஸ்.குலசேகரன்

வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம் , சென்னை (1985)

26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை)

ஆசிரியர் – வலம்புரிஜான்

வெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)

27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – பாலாஜி

வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)

28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம்

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

29. அப்பலோ டு அமெரிக்கா

ஆசிரியர் – பா.ஜீவகன்

வெளியீடு – மேத்தா பிரசுரம் , சிவகாசி (1985)

30. சத்துணவு பாடல்கள்

ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன்

வெளியீடு - அறிவரசி பதிப்பகம் , தருமபுரி (1984)
31. இந்தி ஆதிக்கப் பேரில் புரட்சித்தலைவர்


ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன்

வெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)

32. நான் ஏன் பிறந்தேன்?

ஆசிரியர் – வேலன்

வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம் , சென்னை (1988)

33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள்

ஆசிரியர் – கா.சுப்பு

வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை , சென்னை (1984)

34. நான் கண்ட எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1988)
36. முப்பிறவி எடுத்த முதல்வர்

ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார்

வெளியீடு - சாயிகீதா பதிப்பகம் , சென்னை (1985)
37. சொல்லும் செயலும்

ஆசிரியர் – ஆ.அசோக்குமார்

வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)

38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – புலவர்.செ.இராச

வெளியீடு – கொங்கு ஆய்வு மையம் , ஈரோடு (1985)

39. எம்.ஜி.ஆர் சரணம்

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு - நெய்தல் பதிப்பகம் , சென்னை (1988)
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்

வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம் , சென்னை (1981)

41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள்

ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம்

வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1986)

42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம்

ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன்

வெளியீடு – அப்போலா வெளியீடு , சென்னை (1988)
43. முப்பிறவி கண்ட முதல்வர்

ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன்

வெளியீடு - ரேவதி பதிப்பகம் , சென்னை (1985)

44. செம்மலின் பொன்மனம்

ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன்

வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ் , மதுரை (1988)

45. புரட்சியார் ஒரு காவியம்

ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி

வெளியீடு - சித்ரா பதிப்பகம் , வேலூர் (1987)

46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும்

ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம்

வெளியீடு – கலைக்கருவூலம் , சென்னை (1988)

47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)

48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை

ஆசிரியர் – மாருதிதாசன்

வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம் , நாமக்கல் (1981)

49. உலா வரும் உருவங்கள் (கவிதை)

ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன்

வெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)

50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1985)
51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள்


ஆசிரியர் – நாகை தருமன்

வெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)

52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை

ஆசிரியர் – கழஞ்சூர் சொ செல்வராஜி

வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , வேலூர் (1985)

53. வெற்றித்தலைவர் வீர வரலாறு

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு - தில்லை பதிப்பகம் , சேலம் (1987)

55. ஜீவ நதிகள்

ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன்

வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம் , சென்னை (1988)

56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி

ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன்

வெளியீடு - தாமரைப் பதிப்பகம் , சென்னை (1985)

57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை

ஆசிரியர் – ஏ.கே.வில்வம்

வெளியீடு - ரோமா பதிப்பகம் , சென்னை (1985)

58. வள்ளலும் உள்ளமும்

ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி

வெளியீடு - ஆரோம் பதிப்பகம் , குமரி (1987)

59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும்

ஆசிரியர் – ரசிகன் அருணன்

வெளியீடு - அருணா பப்ளிசிட்டி , சென்னை (1987)

60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1984)
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா?

ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை

வெளியீடு – நெல்சன் பதிப்பகம் , சென்னை (1961)

62. தர்மம் வென்றது

ஆசிரியர் – ஜெ.பாலன்

வெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1987)

63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1

ஆசிரியர் – எஸ்.விஜயன்.

வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ் , சென்னை (1989)

64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம்

ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன்

வெளியீடு – கன்னிப் பதிப்பகம் , சென்னை (1985)

65. சத்தியா மைந்தன் சாதனை

ஆசிரியர் – ஜெயா பொன்முடி

வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)

66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ் , சேலம் (1978)

67. சத்துணவு நாயகன்

ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்

வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம் , சேலம் (1987)

68. இதயவானில் உதய நிலவு

ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன்

வெளியீடு - இளவளகி பதிப்பகம் , வேலு\ர் (1985)
69. பரிபூரண அவதாரம் (நாடகம்)

ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்

வெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1985)

70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2

ஆசிரியர் – எஸ்.விஜயன்

வெளியீடு - அருள்மொழி பதிப்பகம் , சென்னை (1991)

71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா?

ஆசிரியர் – கி.வீரமணி

வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு , சென்னை (1982)

72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள்

ஆசிரியர் – இனியவன்

வெளியீடு – அவ்வை மன்றம் , சென்னை (1986)
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ்

ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன்

வெளியீடு - குறளகம் , பழனி (1988)

74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு

ஆசிரியர் – ஜோதிமணவாளன்

வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சிவகாசி (1993)

75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும்

ஆசிரியர் – மோகன்தாஸ்

வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ் , பெங்களுர் (1993)

76. காலத்தை வென்றவர்

ஆசிரியர் – மணியன்

வெளியீடு - இதயம் பதிப்பகம் , நாகப்பட்டினம் (1991)

77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள்

ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்

வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1991)

78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா

வெளியீடு – மயிலவன் பதிப்பகம் , சென்னை (1993)

79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கு.சண்முகசந்தரம்

வெளியீடு – குமரன் பதிப்பகம் , சென்னை (1992)

80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு

ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ

வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம் , சென்னை
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம்

ஆசிரியர் – மெய்க்கீர்த்தி

வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை , சென்னை (1978)

82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும்

ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன்

வெளியீடு – புரட்சியார் ரசிகன் , சென்னை (1985)

83. அண்ணா கொள்கைக்கு நாமம்

ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள்

வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு , சென்னை
84. வெற்றி நமதே

ஆசிரியர் – ஜோதி மணவாளன்

வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சென்னை (1991)

85. அரசும் தமிழும்

ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன்

வெளியீடு - தமிழ்ச்சுரங்கம் , மதுரை (1986)
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம்

ஆசிரியர் – குமரிச் செல்வன்

வெளியீடு - நாகர்கோவில் ( 1982)

English Books:




1.Dr.M.G.R.A.Phenomenon

Author- Dr.Jagathrakshakan

Publisher- Appolo Publications, Chennai (1984)



2.All India Anna Diravida Munnetra Kazhagam

Author- Dr.R.Thandavan

Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)



3.Poems- I Call M.G.R an Angel

Author- S.Yesupatham

Publisher- Packiam Publications, Chennai (1984)



4.Impact M.G.R.Films

Author- V.Kesavalu

Publisher- Movie Appreciation Society, Chennai (1990)



5.The Dynamic M.G.R

Author- A.P.Janarthanam M.P.

Publisher- Chennai (1978)



6.M.G.R.-The Man and Myth

Author- K.Mohndass

Publisher- Panther Publishers, Chennai (1992)



7.The Image Trap (M.G.R Film & Politics)

Author- M.S.S.Pandian

Publisher- Sage Publications India, New Delhi (1992)

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்
1. வேதநாயகன்

ஆசிரியர் – ரவீந்திரன்

வெளியீடு - சென்னை ( 1993)

2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம் ,வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு

வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம் , சென்னை
3.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – கலைமணி

வெளியீடு – தமிழ் நிலையம் , சென்னை (1967)

4. ஆயுள் பரிசு

ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்

வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம் , சென்னை

5. இதயத்தில் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – மா.செங்குட்டுவன்

வெளியீடு – வண்ணக் களஞ்சியம் , சென்னை (1967)

6. தமிழக முதல்வர்

ஆசிரியர் – சிவாஜி

வெளியீடு - அசோகன் பதிப்பகம் , சென்னை.

7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு

வெளியீடு - சேகர் பதிப்பகம் , சென்னை

8. அண்ணாவின் அரசு

வெளியீடு - அன்பு நிலையம் , சென்னை

9. அண்ணாவின் பாதை

வெளியீடு – ராஜா பதிப்பகம் , அருப்புக்கோட்டை

10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்

வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ் , சென்னை

11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர்

வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ் , சென்னை

12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

13. வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.

ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்

14. வரலாற்று நாயகன்

ஆசிரியர் – கரு.கருப்பையா

15. புரட்சித்தலைவர்

ஆசிரியர் – தேவிப்பிரியன்
16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர்

ஆசிரியர் – சக்கரைப்புலவர்

17. தலைவா உன்னை யாசிக்கிறேன்

ஆசிரியர் – அடியார்
18. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.

19. Dr. M.G.R in Indian News Papers

Author- Dr. Mohanrajan


20. C.M. Speech's

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ஆஸ்கார் நாய‌க‌ன் உதய‌ தின‌ம் சனவரி 6...

அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு...
ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.
திரைப்பட இசையமைப்புகள்



ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்


1992 ரோஜா ரோஜா ரோஜா
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே
1993 புதிய முகம்
1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
1993 உழவன்
1994 டூயட்
1994 காதலன் ஹம்ஸே ஹே முக்காப்லா
1994 கருத்தம்மா
1994 மே மாதம் 1994 புதிய மன்னர்கள்
1994 வண்டிச்சோலை சின்னராசு
1994 பவித்ரா
1994 சூப்பர் போலீஸ்
1994 கேங் மாஸ்டர்
1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
1995 இந்திரா
1995 முத்து
1995 ரங்கீலா ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
1996 லவ் பேர்ட்ஸ் ஃபயர்
1996 மிஸ்டர் ரோமியோ
1997 இருவர்
1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே
1997 ரட்சகன் ரக்ஷடு
1997 தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே
1998 தோலி சஜா கே ரக்ஹ்னா
1998 கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
1999 தாஜ் மஹால்
1999 சங்கமம்
1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு
1999 ஜோடி
1999 தாளம் தாள்
1999 என் சுவாசக்காற்றே
1999 படையப்பா
1999 1947 எர்த்
1999 தக்ஷக்
1999 புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி
2000 ரிதம் ரிதம்
2000 தெனாலி தெனாலி
2000 தில் ஹே தில் மே
2001 ஸ்டார்
2001 பார்த்தாலே பரவசம் பரவசம்
2001 அல்லி அர்ஜூனா
2001 சுபைதா
2001 ஒன் 2 கா 4
2001 லவ் யூ ஹமேஷா
2001 லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா
2002 பாபா
2002 காதல் வைரஸ்
2002 தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
2002 சாத்தியா
2003 உதயா
2003 பரசுராம்
2003 பாய்ஸ் பாய்ஸ்
2003 வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு
2003 கண்களால் கைது செய்
2003 தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
2004 நியூ நானி
2004 தேசம் ஸ்வதேஸ்
2004 லகீர்
2004 மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
2004 தில் நே ஜிஸே அப்னா கஹா
2004 கிஸ்னா
2005 போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
2005 மங்கள் பாண்டே - தி ரைஸிங்
2005 அ... ஆ ...
2005 வாட்டர்
2006 ரங் தே பசந்தி
2006 சில்லுனு ஒரு காதல்
2006 வரலாறு
2007 குரு குரு குரு
2007 ப்ரோவோக்டு
2007 சிவாஜி
2007 அழகிய தமிழ் மகன்
2007 எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008 ஜோதா அக்பர்
2008 ஜானே து யா ஜானே நா
2008 அடா : எ வே ஆப் லைப்
2008 சக்கரகட்டி
2008 யுவ்ராஜ்
2008 ஸ்லம் டாக் மில்லியனியர்
2009 டில்லி 6
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
1993 யோதா (மலையாளம்)
1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
2003 Tian di ying xiong (சீன மொழி)
1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).
[திரைப்பட அல்லாத இசையமைப்புகள்


தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)


செட் மீ ஃப்ரீ (1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000)
பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
இவர் பெற்ற விருகள்...
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.


ந‌ன்றி விக்கிபீடியா