திங்கள், 30 ஆகஸ்ட், 2010

கிருஷ்ண ஜெய‌ந்தி

கிருஷ்ண ஜெய‌ந்தி
தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம். மதுராபுரியை ஆட்சி செய்தவர் உக்கிரசேனன். இவரது மகன் கம்சன். தம்பி தேவன். அமைச்சர் வசுதேவர். இவரது மூத்த மனைவி ரோகிணி, கோகுலத்தில் வசித்தாள். தேவனுக்கு தேவகி என்ற மகள் இருந்தாள். இவளை வசுதேவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர். இவரது நண்பர் நந்தகோபன் கோகுலத்தில் வசித்தார். இவரது மனைவி யசோதை.
தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. இதனிடையே, தேவகியின் எட்டாவது பிள்ளையால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அறிந்த கம்சன், அவளைக் கொல்ல முயன்றான். வசுதேவர் இதைத்தடுத்து, தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி தேவகி, வசுதேவரைச் சிறையிலடைத்த கம்சன், அவர்களுக்குப் பிறந்த ஆறு பிள்ளைகளைக் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.
அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே சொல்லி விட்டார்.
அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் பிள்ளை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள், வெண்ணெய், சீடை என்றெல்லாம் செய்ய வேண்டுமே… அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில் பதிக்க வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கிருஷ்ணர் கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி வந்தார். மக்கள் பழம், தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர். ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான மனது இருந்தது. அவர் வீட்டு வாசலுக்கு சுவாமி வந்தார். “பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’ என்றார். “கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய் எல்லாம் உன்னிடமே இருக்கிறது. உன்னிடத்தில் என்ன இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு திருப்தி…’ என்றாராம் பக்தர்.“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’ என கிருஷ்ணர், பதிலுக்கு கேட்க, “கிருஷ்ணா… கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர். எனவே, இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே, என் மனதை உனக்குத் தருகிறேன்…’ என்றார். பகவான் உருகிப் போய் விட்டாராம். நெருப்பில் உருகும் நெய்ப்பண்டத்தை விட, உள்ளம் உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுப்போமே!

இளைய இசைஞானி யுவன் உதய நாள் ஆகஸ்டு 31,

இளைய இசைஞானி யுவன் உதய நாள்  ஆகஸ்டு 31,
யுவன் சங்கர் ராஜா ( ஆகஸ்டு 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன்.
இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்
தமிழில்


அரவிந்தன் (1997) (அறிமுகம்)

வேலை (1998)

கல்யாண கலாட்டா (1998)

பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)

உனக்காக எல்லாம் உனக்காக (1999)

ரிஷி (2000)

தீனா (2000)

துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)

மனதை திருடி விட்டாய் (2001)

நந்தா (2001)

ஜூனியர் சீனியர் (2002)

காதல் சாம்ராஜ்ஜியம் (2002)

ஏப்ரல் மாதத்தில் (2002)

பாலா (2002)

மௌனம் பேசியதே (2002)

புன்னகைப் பூவே (2002)

பாப் கார்ன் (2002)

வின்னர் (2003)

காதல் கொண்டேன் (2003)

புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)

தென்னவன் (2003)

குறும்பு (2003)

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)

உள்ளம் (2004)

எதிரி (2004)

பேரழகன் (2004)

7 ஜி ரெயின்போ காலனி (2004)

மன்மதன் (2004)

போஸ் (2004)

அது (2004)

ராம் (2005)

அறிந்தும் அறியாமலும் (2005)

தாஸ் (2005)

ஒரு கல்லூரியின் கதை (2005)

கண்ட நாள் முதல் (2005)

சண்டக்கோழி (2005)

கள்வனின் காதலி (2005)

அகரம் (2005)

புதுப்பேட்டை (2005)

பட்டியல் (2006)

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)

கேடி (2006)

வல்லவன் (2006)

திமிரு (2006)

பருத்திவீரன் (2006)

தாமிரபரணி (2006)

தீபாவளி (2007)

சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)

சத்தம் போடாதே (2007)

தொட்டால் பூ மலரும் (2007)

கண்ணாமூச்சி ஏனடா (2007)

கற்றது தமிழ் (2007)

வேல் (2007)

மச்சக்காரன் (2007)

பில்லா 2007 (2007)

வாழ்த்துகள் (2008)

சரோஜா (2008)

யாரடி நீ மோகினி (2008)

ஏகன் (2008)

சிலம்பாட்டம் (2008)

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)

சிவா மனசுல சக்தி (2009)

சர்வம் (2009)

வாமணன் (2009)

முத்திரை (2009)
யோகி (2009)


16 (2009)

பையா (2009)

ஆரண்ய காண்டம் (2009)

கோவா (2009)

காதல் 2 கல்யாணம் (2009)

பாணா (2009)

ஈர்ப்பு (2009)

சுராங்கனி (2009)

நானும் என் சந்தியாவும் (2009)

பேசு (2010)

தீராத விளையாட்டு பிள்ளை (2010)

தில்லாலங்கடி (2010)

நான் மகான் அல்ல (2010)

பாஸ் எங்கிற பாஸ்கரன் (2010)

சேரி (2010)

மா (2010)

வாலிபன் (2010)

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அன்னை தெரேசா அவதரித்த நாள் ஆகஸ்டு 26,

அன்னை தெரேசா அவதரித்த நாள் ஆகஸ்டு 26,
அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்படமேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும்ஒரு காரணமாகும். இவர் 1979-ல் சமாதானத்துக்கான நோபல் பரிசையும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவையும் பெற்றார். அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.
பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக்கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன
மரணத்திற்குப் பின் அவர் போப் இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டுகொல்கத்தாவின் ஆசிர்வதிக்கப்பட்ட தெரேசா என்ற பட்டம் சூட்டப்பட்டார்.

பொருளடக்கம்

1 தொடக்க வாழ்க்கை

2 மிஷினரீஸ் ஆப் சேரிட்டி

3 அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்.

4 ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்

5 உலக அங்கீகாரமும் வரவேற்பும்

5.1 இந்தியாவில் வரவேற்பு

5.2 ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு

6 ஆன்மீக வாழ்வு

7 அற்புதமும் முக்திபேறும்

8 நினைவு அஞ்சலி
தொடக்க வாழ்க்கை
வார்ப்புரு:Indian Christianity ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்) ஆகஸ்டு 26,1910 ல் ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் அஸ்கப் (தற்போது மேசிடோனியக் குடியரசின்ஸ்கோப்ஜி)இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திரு முழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார். அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர். அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், ஸ்கோப்ஜி அல்பேனியாவிற்கு வெளியே தள்ளப்பட்ட ஒரு அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதகர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி,லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார்.அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்த்தாரிலர்.
இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக,அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ். 1929 ஆம் வருடம் அவர் இந்தியாவை வந்தடைந்து இமய மலை அருகே உள்ள டார்ஜீலிங்கில்தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். கன்னிகாஸ்திரிகளுக்கான முதன்மை மத பிரமாணங்களை அவர் மே 24,1931 இல் எடுத்துக்கொண்டார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்.
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது.1943-ன் பஞ்சம், துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

மிஷினரீஸ் ஆப் சேரிட்டி

செப்டம்பர் 10,1946 இல் வருடாந்திர தியானத்திற்காக கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் மேற்கொண்டிருந்த பொழுது அவருக்கு நேர்ந்த உணர்வு பின்னர் அவர் அதனை "அழைப்பினுள் நேர்ந்த அழைப்பு" என வர்ணிக்க வைத்தது. "நான் கன்னிமடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதற்கு ஒப்பானது."1948 இல் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார் அவர். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதம மந்திரி உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
தெரேசா தனது நாட்குறிப்பில் எழுதினார் தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்று.வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும் ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்தது. இவ்வாறான ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதுண்டு. இவ்வாறு தெரேசா தனது நாட்குறிப்பில் எழுதினார்.
“Our Lord wants me to be a free nun covered with the poverty of the cross. Today I learned a good lesson. The poverty of the poor must be so hard for them. While looking for a home I walked and walked till my arms and legs ached. I thought how much they must ache in body and soul, looking for a home, food and health. Then the comfort of Loreto [her former order] came to tempt me. 'You have only to say the word and all that will be yours again,' the Tempter kept on saying ... Of free choice, my God, and out of love for you, I desire to remain and do whatever be your Holy will in my regard. I did not let a single tear come.”
1950 அக்டோபர் 7 ஆம் தேதி, மிஷினரீஸ் ஆப் சேரிட்டியாக பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் பங்குக் குழுமத்தைத் துவக்க தெரெசாவுக்கு வாடிகனின் அனுமதி கிடைத்தது. அதன் கடமையாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்க ளெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இது. இன்று 4000,௦௦௦க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக பரிதவிப்பதாய் இருக்கிறது.
1952 இல் கல்கத்தா நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (தி காளிகாட் ஹோம் பார் தி டையிங்) என்று பெயரிட்டார். பின்னர் அதனை சுத்த இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார்(காளிகாட்,தி ஹோம் ஆப் தி பியூர் ஹார்ட்-நிர்மல் ஹ்ரிதை). இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் மருத்துவக் கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்களாயும், அவர்கள் சார்ந்துள்ள மதச்சடங்குகளுடன் கூடிய கௌரவமான மரணத்தையடையும் வாய்ப்பைப் பெற்றவர்களையும் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கைஜலமும், கத்தோலிக்கர்களுக்கு இறுதிச் சடங்குகளும் கிடைத்தன."அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும்.அன்னை தெரேசா விரைவில் ஹேன்சன்'ஸ் டிசீஸ் எனப்படும் தொழுநோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத்(சமாதானத்தின் நகரம்) துவக்கினார்.தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் விநியோகித்து வந்தது.
மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக் குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னைதெரேசா உணரப் பெற்றார்.1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞருக்காகவும் தொடங்கினார்.

இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், தர்மத்திற்கான நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 களில் நல்வாழ்வுமையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியாமுழுவதும் ஆரம்பித்தது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் விஸ்தரித்தார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புக்கான முதல் இல்லம் 1995 இல் வெனிஸுயெலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1968 இல் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும்தொடங்கப்பட்டது. 1970 களில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கணக்கற்ற நாடுகளில் இல்லங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவியது. அவரது தத்துவமும், அமலாக்கும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்றுக் கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்.வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனைக்குள்ளாவது மக்களை இறை இயேசுவுக்கருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், தி லேன்சட் ,தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை தோலடி ஊசிகளின் மறு உபயோகத்தையும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் குறைகூறின.

1963 இல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி சகோதரர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. சாமான்ய கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், சாமான்ய மிஷினரீஸ் ஆப் சேரிட்டிகளாகவும் பதிவு செய்யப்பட்டனர்.பாதிரியார்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 -ல், பாதிரியார்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும், 1984 -ல், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி பாதர்ஸ்என்ற அமைப்பையும் தொடங்கினார். இதன் நோக்கம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அலுவல்குறிக்கோள்களை, பாதிரியார்த்துவத்துக்கு கீழ்பட்ட ஆதாரங்களோடு இணைப்பது. 2007 க்குள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஏறத்தாழ 450 அருட் சகோதரர்களையும், 120 நாடுகளில் 600௦௦ சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 ௦௦௦ அருட்சகோதரிகளையும், கொண்டிருந்தது.
அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்.

1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்து முன்னோடித் தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார். செஞ்சிலுவை சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று இளம் நோயாளிகளை வெளியேற்றினார்.
1980 களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் அதீத வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்து தனது முயற்சிகளை விஸ்தரித்தார். கருக்கலைப்புமற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரை பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும்.
அன்னை தெரேசா எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்காளானவர்களுக்கும், அர்மீனியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார். 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர்அல்பேனியாவின் டிரானாவில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.
1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார். நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின்முதல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தெற்கு பிராங்க்ஸிலும், நியுயார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984 க்குள் இவ்வமைப்பு நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது.
அவர் நன்கொடை பணத்தை செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ்மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
மேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள் வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைதியின்எதேச்சாதிகார, நேர்மையற்ற டியுவேலியேர் குடும்பத்தில் இருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ் ஏஞ்சல்ஸின் மாவட்ட துணை வழக்குரைஞர் பால் டர்லி, கீட்டிங்கால் திருடப்பட்ட ஏழை தச்சனொருவனைப் போன்றோரின் பணத்தை, தெரேசா அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை வைத்து திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். நன்கொடைப் பணம் என்னவாயிற்று என்றும் தெரியவில்லை, டர்லிக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
கோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை அவரது புத்தகமான ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த் அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை தெரேசா சிறந்த தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார்.மதபோதனைகளை விட செயல்கள் மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை அன்னை தெரேசா அவரது சீடர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந் நிறுவனத்தின் சில நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர் கூறுகிறார்.அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளை போக்குவதற்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது (ஆண்டவர் பெலவீனர்களையும் அறிவிலிகளையும் பலப்படுத்துகிறார் எனக் கூறிக் கொண்டு), மற்றும் நண்பர்களை விட்டு தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்தரமான எண்ணங்கள் மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை வலியுறுத்துவதன் மூலமும், மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அதன் அருட்சகோதரிகளை குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர்.
ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்
83-ல் போப் இரண்டாம் ஜான் பாலை ரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்கு செயற்கை துடிப்புமூலம் பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார்.மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய வோட்டின் மூலம் அவர் அபபணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர். அமைப்பின் தலைவியாகத் தொடர அன்னை தெரேசா ஒப்புக்கொண்டார்.
ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதயகீழறைக் கோளாற்றினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருந்தகங்களில் ஒன்றில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது. மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுபட்டு செப்டம்பர் 5, 1997-ல் மரணமடைந்தார். கல்கத்தாவின் ஆர்ச்பிஷப் ஹென்றி செபாஸ்டியன் டி 'சூசா, இதய கோளாறுகளினிமித்தம், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் தான் எண்ணிய காரணத்தால் அவரது அனுமதியோடு அவரை மந்தரிக்கும்படி ஒரு பாதிரியாரை பணித்ததாகக் கூறியுள்ளார்.
அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட் சகோதரிகளையும், [மேற்கோள் தேவை][61] 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் [மேற்கோள் தேவை][62], 10,000 த்திற்கும் மேலான சாமான்ய தொண்டர்களையும் கொண்டிருந்தது. [மேற்கோள் தேவை] [63]இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது.
உலக அங்கீகாரமும் வரவேற்பும் இந்தியாவில் வரவேற்பு
1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால்நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட பிரதான இந்திய உயர்விருதுகளை அடுத்ததடுத்த பத்தாண்டுகளில் பெற்று வந்தார்.
அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.
அன்னை தெரசாவைப் பற்றிய இந்தியாவின் கருத்துகள் ஒரே சீராக சாதகமானவைகள் அல்ல. கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் குறை கூறுகிறார் அரூப் ச்சேட்டர்ஜி.இந்துக்களின் உரிமையைஅவ்வப்போது எதிர்த்து வந்ததால், அவரது சமூகமும், ரூபமும் இந்திய அரசியல் சமுதாயத்தில் எரிச்சலை உண்டுபண்ணின. பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பிரதிநிதியை அனுப்பியது. ஆனால் விஸ்வ இந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய உடல் தகனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.அதன் நிர்வாகி கிரிராஜ் கிஷோர் கூறினார், "அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது. பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய ஞானஸ்நானங்கள் மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ப்ரண்ட் லைன் பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய மக்களின் கல்கத்தாவாசிகளின் எண்ணத்தில், எந்த தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும் கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.அண்மையில், இந்திய நாளேடான தி டெலிக்ராப்அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும் இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து விசாரிக்கும்படி ரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் ராணுவ மரியாதையுடன் கூடிய உடல் தகனம் செய்யப்பட்டது.
ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.
தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமோன் மேக்சேசே விருதைப் பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தர்மகர்த்தாக்களின் குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1970 களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலக பிரபலமானார். 1969 ன் விளக்கப்படமான மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், சம்திங்க் பியுடிபுல் பார் காட் -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார். அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஓளியமைப்பு சூழ்நிலையில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் படப்பிடிப்புக் குழுவினரின் உபயோகத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக கட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார். அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால் ஏற்பட்ட விளைவே என்றெண்ணினர். முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராக மாறி விட்டார்.
இவ்வேளையில் கத்தோலிக்க உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் பகிரங்கமாகப் புகழ ஆரம்பித்தனர். 1971-ல்அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார். அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப் பெற்றார். தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசாபுனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறி தற்பொழுது முக்தி பேறினை எட்டியிருக்கிறார்.
அன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.இங்கிலாந்தும், அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கிய பின் 1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனிய நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்தியதோடல்லாமல் 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது.இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருதையும் அவர் ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும், சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட் மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின் நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார்.
மேற்க்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்கு கௌரவப் பட்டங்களைஅளித்தன. ஏனைய குடிமக்கள் விருதுகளாவன, மனிதநேயம், சமாதானம் மற்றும் சகோதரத்துவ விருத்திக்காகபல்சான் விருது (1978),மற்றும் ஆல்பெர்ட் ஷ்வேய்த்சர் அனைத்துலக விருது ஆகியன.
1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக் அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும் என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம் கேட்டார்கள், "உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்று.அவர் கூறினார், "வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்", என்று.இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் அவர் இவ்வாறு கூறினார். "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது. தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."மேலும் அவர் கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணியெனக் கூறி வந்தார்.
அவரது இறுதி நாட்களில் மேலை நாடுகளின் ஊடகங்களிடையே சில எதிர்மறை விளைவுகளை ஈர்க்க நேர்ந்தது. பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அன்னை தெரேசாவின் உத்வேகமுள்ள விமர்சகராவார். பிரிட்டிஷ் சேனல் 4க்காக, அன்னை தெரேசாவைப் பற்றிய விளக்கப்படமான ஹெல்'ஸ் ஏஞ்சல்ஸ் -ல் சக எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இது அரூப் சேட்டர்ஜியின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்த போதிலும், படத்தின் உணர்வுபூர்வமான அணுகுமுறை அவருக்கு மனநிறைவை தரவில்லை.அவரது விமர்சனங்களை ஹிச்சன்ஸ் 1995 ஆம் ஆண்டுப் புத்தகமான தி மிஷினரி பொசிஷன் என்ற நூலில் விவரித்துள்ளார்.
உயிரோடிருக்கும்பொழுது அன்னை தெரேசாவும் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றெழுத்தாளர்களும், தனது விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்ததாகவும், அவர் மேலை நாட்டு பத்திரிகையாளர்களின் விமர்சன கருத்துகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் சேட்டர்ஜி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அவர் பிரிட்டனின் தி கார்டியனில் வெளிவந்த, "அன்னை தெரேசாவின் அநாதை இல்லங்களில் காணப்படும் ஒட்டுமொத்த உதாசீனத்தையும், உடல் மற்றும் உணர்ச்சிகளின் தவறான பிரயோகத்தையும்",கடுமையாகத தாக்கி எழுதப்பட்ட விரிவான செய்தியையும், மற்றொரு விளக்கப்படமான மதர் தெரேசா: டைம் ஃபார் சேஞ்ச்? பல ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. சேட்டர்ஜி, ஹிச்சன்ஸ் இருவருமே தங்களது கருத்துக்களுக்காக விமர்சனத்துக்குள்ளாயினர்.
ஸ்டேர்ன் எனும் ஜெர்மானிய சஞ்சிகை அன்னை தெரேசாவின் முதல் நினைவுநாளில் ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. இது பணவிஷயங்களைக் குறித்தும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்பட்ட விதத்தைப் பற்றியுமானது. மருத்துவப் பத்திரிகைகளும் வெவ்வேறானக் கண்ணோட்டங்களிலிருந்து, நோயாளியின் தேவைகளில் முதன்மையானவற்றைக் கருதுவதினால் எழும் விமர்சனங்களை அவரை மையமாக வைத்து வெளியிட்டன. நியு லெஃப்ட் ரெவ்யு பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரான தாரிக் அலி மற்றும் அயர்லாந்தில் பிறந்த புலன் விசாரணைப் பத்திரிகையாளரான டோனல் மேக்கின்டைர் போன்றோர் ஏனைய விமர்சகர்களாவர்.
மதசார்பற்ற சமூகங்களிலும் மதவாத சமூகங்களிலும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிட்ட இரங்கல் செய்தியில் மேலான குறிகோட்களுக்காக அதிக நாள் வாழ்ந்த ஒரு அரிய, தனி தன்மை பெற்ற நபர் அன்னை தெரேசா எனவும் ஏழை எளியோர், நோயாளிகள்,தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் நலத்திற்காக அவரது வாழ்க்கை முழுவதுமான பிரயத்தனம் மனிதகுல மேம்பாட்டிற்கான சேவைகளின் மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்." எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் ஐ நா சபையின் பொதுச் செயலாளர் ஜேவியேர் பெரேஸ் டி கியுல்லர் கூறுகிறார், "அவரே ஐ நா சபையாவார்.அவர் உலகத்தின் சமாதானமாக இருந்தார்."[68] அவரது வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னும் அன்னைத் தெரேசாவை அமெரிக்காவில் பரவலாகப் புகழப்பட்ட தனிப்பெரும் நபர் என கேல்லப் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு காலங்காலமாகக் கணித்து வந்திருக்கிறது. 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணி என கணிக்கப்பட்டுள்ளார். அனைத்து பதில்களையும் விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிக குறைந்த வயதில் புகழ் பெற்றவர்கள் என்ற அணியைத் தவிர அனைத்து மக்கள் தொகை இனங்களிலும் முதலிடம் பிடித்தார் அன்னை தெரேசா.
ஆன்மீக வாழ்வு
அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்ததிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கேட்டார்: "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பெலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனை பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது பரிசுத்த வதனத்தையும்,புனிதமான இருதயத்தையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பத்து வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவுபரியந்தம் வரை நீடித்தது. அவ்வமயம், "அவர் தனது மனதினுள்ளோ, நற்கருணையினுல்லோ எவ்வித தெய்வீகப் பிரசன்னத்தையும் உணர்ந்ததில்லை." என்கிறார், அவரது புனிதத்துக்காகப் பிரயாசைப்படுபவரான அருட் தந்தை பிரையன் கொலோடிச்சக். அன்னை தெரேசா இறைபிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசமின்மையைக் குறித்தும் ஆழமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.
“Where is my faith? Even deep down ... there is nothing but emptiness and darkness ... If there be God—please forgive me. When I try to raise my thoughts to Heaven, there is such convicting emptiness that those very thoughts return like sharp knives and hurt my very soul ... How painful is this unknown pain—I have no Faith. Repulsed, empty, no faith, no love, no zeal, ... What do I labor for? If there be no God, there can be no soul. If there be no soul then, Jesus, You also are not true.”

ச்செக் குடியரசின் ஒலோமோக்கில் உள்ள வென்செஸ்லஸ் சதுக்கத்தின் ஒரு கட்டடத்தில் அமைந்த அன்னை தெரேசாவுக்கர்ப்பணிக்கப்பட்ட நினைவு பெயர்ப் பலகைக் கல்.
இக்கூற்றினை முன்னிட்டு அவரது புனிதத்துவத்திற்குப் பிரயாசைப்படுபவரான (அவரது அர்ச்சிப்பிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் அதிகாரி) அருட் தந்தை.பிரையன் கொலோடிச்சக் அவரது வாழ்க்கையின் அர்த்தத்தை சிலர் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமிருப்பதாகவும், ஆனாலும் ஆண்டவர் அவர் மூலமாக செயலாற்றுகிறார் என்ற அவரது விசுவாசம் எள்ளளவேனும் குறையவில்லை எனவும் ஆண்டவரின் அருகாமையிலிருக்கிறோம் என்ற உணர்ச்சி குறைபாட்டால் அவர் புலம்பினாலும் அவரது பிரசன்னத்தைக் குறித்து அவர் கேள்வியெழுப்பியதில்லை எனத் தெரிவித்துள்ளார். று சில புனிதர்களுக்கும் இத்தகைய மதரீதியான சந்தேக அனுபவங்கள் இருந்ததுண்டு.இவற்றை ஆவிக்குரிய சோதனைகளாகக் கத்தோலிக்கர்கள் கருதுகின்றனர். அன்னை தெரேசா அல்லாத மற்றொரு தெரேசா, புனித தெரேசா டி லிசியுவின் ஒன்றுமில்லாத இரவுகள் (நைட் ஆப் நத்திங்க்னஸ்)இதைப் போன்றதாகும்.அவர் வெளிக்காட்டிய சந்தேகங்கள் அவரது புனிதத்துவத்துக்கு இடையுறாக இருக்குமென்ற சிலரது தவறான அபிப்ராயங்களுக்கு மாறாக இத்தகையதொரு நிலைமை புனிதத்துவமடைந்த விசுவாசிகளுக்கு சகஜமானது.
பத்துவருட சந்தேகத்திற்குப் அன்னை தெரேசா ஒரு குறைந்த கால விசுவாச மீட்சியை வெளிக்காட்டினார். 1958 ன் இலையுதிர்காலத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பையஸ் மரணத்தின் பொழுது, அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக நடத்தப்பெற்ற திருப்பலியில் அவர், தான் நீண்ட இருளிலிருந்தும், இனம்புரியாத பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பெற்று விட்டதாகக் கூறினார். எனினும் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விசுவாசக் குறைபாட்டுக்குள் மீண்டும் நுழைந்து விட்டதாக விவரித்தார்.
அன்னை தெரேசா பாவசங்கீர்த்தனத்தைக் கேட்கும் குருவானவர்களுக்கும், தலைமை பொறுப்பு வகிப்போருக்கும், 66 ஆண்டுகளாகப் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.தனது கடிதங்களைப் பற்றி மக்கள் அறியவரும் பட்சத்தில், "இறை இயேசுவைக் காட்டிலும் என்னைப் பற்றிய எண்ணத்தின் ஆக்கிரமிப்பிலாழ்ந்து விடுவர்", என்ற கவலையுடையவராய் அவற்றை அழித்து விடக் கேட்டுக் கொண்டார். எனினும் இக்கோரிக்கையின் பிறகும் இத்தகைய கடிதத் தொடர்புகள் தொகுக்கப்பட்டு மதர் தெரேசா: கம் பி மை லைட் (டபுள் டே).ஆவிக்குரிய நண்பர் ஒருவரான அருட்திரு.மைக்கேல் வேன் டெர் பீட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு எழுதினார், "இறைஇயேசு உம்மீது தனிப்பட்ட அன்பை உடையவராயிருக்கிறார். ஆனால் எனக்கோ, என்னைச் சூழ்ந்துள்ள அளப்பறிய அமைதியும் வெறுமையும் என்னை பார்த்தும் பார்க்காதவளைப் போலவும், கேட்டும் கேட்காதவளைப் போலவும், ஜெபத்தில் நாவை அசைத்தும் பேச்சற்றவளாகவும் இருக்கச் செய்கின்றன... ஆண்டவரது செயலே என்னுள் ஓங்கும்படிச் செய்ய எனக்காக உம்மை ஜெபிக்க வேண்டுகிறேன்.
பல புதிய கருத்துக்கள் அன்னை தெரேசாவின் எழுத்துக்களை விசுவாசத்தின் இக்கட்டின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் போன்ற அன்னை தெரேசாவின் விமர்சகர்கள், அன்னை தெரேசாவின் எழுத்துக்களை, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் மாறாக விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வெளித்தோற்றத்திற்கான ஆதாரங்கள் எனக் கருதினார். ஹிச்சன்ஸ் இவ்வாறு எழுதுகிறார், "இப்படியாக எது நிதர்சனமானது: தங்கள் கதாநயகிகளுள் ஒருவர் தனது விசுவாசத்தின் சுவடுகளை இழந்துவிட்டார் எனும் உண்மையை விசுவாசிகள் தைரியமாக எதிர்கொள்வதா அல்லது விசுவசிப்பதை நிறுத்திவிட்ட ஒரு குழம்பிய மூதாட்டியை விளம்பர முத்திரையாக தொடர்ந்து சபை நிறுத்துவதா?" ஆனால் கம் பி மை லைட் -ன் பதிப்பாசிரியர் பிரையன் கொலோடிச்சக் போன்றவர்கள், 16 ஆம் நூற்றாண்டு ஆன்மீகவாதியான புனித சிலுவை அருளப்பர் "ஆன்மாவின் இருண்ட காலத்தை" சில ஆன்மீகவாதிகளின் வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு நிலையாகக் கருதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.இக்கடிதங்கள் அவரது புனிதத்துவத்தை எட்டும் பிரயாசத்திற்குத் தடையாக இருக்கப்போவதில்லை என வாடிகன் தெரிவித்துள்ளது. உண்மையில் அவரது புனிதத்துவத்துக்காகப் பிரயாசைப்படும் அருட்சகோதரர் பிரையன் கொலோடிச்சக் என்பவரே இப்புத்தகத்தின் பதிப்பாசிரியராவார்.
டியெஸ் கேரிடஸ் எஸ்ட் என்ற தனது முதலாம் சுற்றறிக்கையில் திருத் தந்தை பதினாறாம் பெனெடிக்ட் கல்கத்தாவின் அன்னை தெரேசாவைப் பற்றி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சுற்றறிக்கையின் முக்கிய கருத்து ஒன்றை தெளிவுபடுத்த அவரது வாழ்க்கையைப் பயன்படுத்தியுள்ளார். "கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசாவின் சான்றில், ஆண்டவருக்கு ஒதுக்கப்படும் ஜெப நேரம் நம்மைச் சுற்றியிருப்போருக்காற்றும் உபயோகமுள்ள அன்புப் பணியில் இருந்து விலகிவிடாமல் நம்மைக் காப்பதோடல்லாமல் அப்பணியின் குறைவற்ற ஊற்றாகும்." அன்னை தெரேசா குறிப்பிடுகிறார், "மனதின் பிரார்த்தனையாலும், வேதத்தை வாசிப்பதாலும் மட்டுமே பிரார்த்தனையெனும் வெகுமதியை நாம் பயிரிட முடியும்."
அன்னை தெரேசாவின் சபைக்கும் பிரான்சிஸ்கன் சபைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும் புனித பிரான்சிஸ் அசிஸியாரின் தீவிர பக்தையாகவிருந்த காரணத்தால்,அவரது அசைவுகளும் வாழ்க்கையும் பிரான்சிஸ்கன் சபையின் தாக்கத்தைக் கொண்டிருக்கும். மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அருட்சகோதரிகள் புனித பிரான்சிஸ் அசிஸியாரின் சமாதானத்துக்கான ஜெபத்தை நற் கருணைக்குப் பிந்தைய நன்றியறிதலின் பொழுது கூறுகின்றனர். மேலும் பல பிரமாணங்களும், பரிந்துரைகளும் இவ்விரு சபைகளுக்கும் பொதுவானவையே. புனித பிரான்சிஸ் அசிஸியார் ஏழ்மையையும், புனிதத்தையும், கீழ்படிதலையும் கிறிஸ்துவுக்கொப்புக்கொடுத்தலையும் வலியுறுத்தினார். அவரும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு குறிப்பாக தொழுநோயாளிகளுக்கு ஒப்புக்கொடுத்தவராவார்.
கிறிஸ்தவ புனிதர்
1997 ல்,அன்னை தெரேசாவின் மரணத்துக்குப் பின் போப்பானவரின் அரியணை, அவர் அர்ச்சிப்பிற்கு முந்தைய நிலையான முக்திப்பேறு நிலையை எய்துவதற்கான முயற்சியில் இறங்கியது. இச்செயல் அன்னைதெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த அற்புதத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை உள்ளடக்கியது. 2002-ல், மோனிகா பேஸ்ரா என்ற இந்திய பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி அன்னை தெரேசா உருவம் பதிக்கப்பட்ட பேழையை அணிந்ததும் குணமாகிவிட்டதை அற்புதமாக அங்கிகரித்தது. அன்னையின் உருவத்திலிருந்து புறப்பட்ட ஒளிவெள்ளம் புற்றுநோய்க்கட்டியைக் குணப்படுத்தியதாக மோனிகா பேஸ்ரா கூறினார். மோனிகா பேஸ்ராவின் மருத்துவ ஊழியர்கள் சிலரும், தொடக்கத்தில் அவரது கணவரும் கூட வாடிக்கையான மருத்துவ சிகிச்சை கட்டியை அளித்ததாகக் கூறி வந்தனர். மோனிகாவின் மருத்துவ அறிக்கைகள், மேல்நிலையொலியறிக்கைகளையும், மருந்துச் சீட்டுகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கொண்டிருப்பதால் அதை வைத்து அவர் குணமானது அற்புதமா இல்லையா என்பதை நிரூபித்து விடலாம் என்பதே எதிரணியினரின் கருத்தாகும். மோனிகா, சாமான்ய மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அங்கத்தினரான அருட்சகோதரி பெட்டா என்பவர் தங்களைப் பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார். இவ்வெளியீடு அருட்சகோதரி பெட்டாவிடமிருந்து, "விளக்கம் எதுவுமில்லை" என்ற கூற்றினைப் பெற்றது. மோனிகா சிகிச்சை பெற்று வந்த பாலர்காட் மருத்துவமனை அதிகாரிகள் அவருக்குக் கிடைத்த சுகத்தை அற்புதமாக அறிவிக்கக் கோரி தங்களுக்கு கத்தோலிக்க சபைகளால் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் குறை கூறியுள்ளனர்.பாரம்பரியமான நடைமுறையான புனிதத்துவம் கொடுப்பதை எதிர்ப்பவர் பாத்திரத்தை வாடிகன் நீக்கி விட்டதால்,கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ்மட்டுமே வாடிகனால் அன்னை தெரேசாவின் முக்திபேற்றிற்கும் அர்ச்சிப்பிற்கும் எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வாடிகனால் அழைக்கப்பட்டவர்.ஹிச்சென்ஸ் வாதாடினார், "அவரது நோக்கம் மக்களுக்கு உதவி செய்வதல்ல" என்று. மேலும் அவர் அன்னை தெரேசா கொடையாளர்களிடம் அவர்களது நன்கொடைகளின் உபயோகத்தைப் பற்றி பொய் கூறுபவர் என்று குற்றம் சாட்டுகிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் அவரது உறுதியான நிலையை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. அவர் ஏழ்மையைப் போக்க பிரயத்தனப்படவில்லை. அவர் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே குறியாயிருந்தார். அவர் மேலும் கூறினார், "நான் சமூக சேவகி அல்ல", என்று.நான் சமூகசேவைக்காக இவற்றைச் செய்யவில்லை. கிறிஸ்துவுக்காக இதை செய்கிறேன். சபைக்காக இதை செய்கிறேன். முக்திப்பேற்றை அடையச் செய்வதற்கும்,புனிதராக்குவதற்கும், ரோமானிய நீதிபதிகளின் குழு (வாடிகன்)அவரது வாழ்க்கையைக் குறித்தும் பணிகளைக் குறித்தும் எழுந்த வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத எண்ணிறந்த விமர்சனங்களுக்கான ஆவணங்களைப் பரிசீலித்தது. ஹிச்சன்ஸின் குற்றச்சாட்டுகள் புனிதர்களுக்கான குழுமம் எனும் அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் அன்னைதெரேசாவின் முக்திப்பேற்றிற்கு எவ்வித தடையும் இல்லையெனும் முடிவுக்கு அவர்கள் வந்ததாகவும் வாடிகனின் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்மீதான தாக்குதல்களினிமித்தம் சில கத்தோலிக்க எழுத்தாளர்கள் அவரை முரண்பாடுகளின் அடையாளம் என அழைத்திருக்கின்றனர். அக்டோபர் 19,2003 ல் மாதர் தெரேசாவிற்கு முக்திப்பேறு அளிக்கப்பட்டு, அவருக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.அவர்புனிதர் பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ்த்தப்பெற வேண்டும்.
நினைவு அஞ்சலி
முதன்மைக் கட்டுரை: Commemorations of Mother Teresa

அன்னை தெரெசாவுக்கு பலதரப்பட்ட விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் மூலமாகவும், பல்வேறு சபைகளின் காவல் புனிதராக நியமிக்கப்பட்டதன் மூலமாகவும், விதவிதமான கட்டுமான அமைப்புகள் மற்றும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதின் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றின் ஆசிரியரான நவீன் சாவ்லா வால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நடிகை எஸ். வரலட்சுமி பிறந்த நாள் ஆகஸ்ட் 13

நடிகை  எஸ். வரலட்சுமி பிறந்த நாள் ஆகஸ்ட் 13 ,
எஸ். வரலட்சுமி, (ஆகஸ்ட் 13, 1927 - செப்டம்பர் 22, 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வரலாறு
வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைவு
சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் [[2009], செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்[1]. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
விருதுகள்
*கலைமாமணி
*கலைவித்தகர்
*கவிஞர் கண்ணதாசன் விருது (2004)
*சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007.
திரைப்படப் பட்டியலில் சில ...
நடிகை
குணா, 1992
அடுத்த வாரிசு
கனகதாரா (தெலு)
கோடாரிகம் (தெலு)
லாயர் சுகாசினி (தெலு)
மாமாகாரம் (தெலு)
சதி துளசி (தெலு)
டிங்கு ரங்கு (தெலு)
வய்யாரி பாமா (தெலு)
நத்தையில் முத்து,1973,
பால பாரதம், 1972, (தெலு)
பொம்ம பொருசா, 1971, (தெலு)
பிரேம் நகர், 1971,(தெலு)
ஆதர்ச குடும்பம், 1969 (தெலு)
ஆபூர்வ பிறவிகள், 1967
பாமா விஜயம், 1967
சத்ய அரிச்சந்திரா, 1965
பவ்ரு வாகனா,
லவ குச, 1963,
ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம், 1963 (தெலு)
மகாமந்திரி திம்மரசு, 1962 (தெலு)
ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம், 1960 (தெலு)
மாங்கல்ய பலம், 1958
சக்கரவர்த்தி திருமகள்,1957
சதி சாவித்திரி, 1957,
எதிர்பாராதது, 1954,
சதி சக்குபாய், 1954,
சுவப்னசுந்தரி, 1950
வாலி சுக்ரீவா, 1950 (தெலு)
ஜீவிதம், 1949, (தெலு)
பாலராஜூ, 1948 (தெலு)
சேவா சதன், 1938
பாலயோகினி, 1936 (தெலு)
வீரபாண்டிய கட்டபொம்மன்
கந்தன் கருணை
ராஜராஜ சோழன்
பூவா தலையா
சவாலே சமாளி
நினைத்ததை முடிப்பவன்
நீதிக்குத் தலைவணங்கு
மாட்டுக்கார வேலன்
பணமா? பாசமா
பாடகி
குணா, 1992
கந்தன் கருணை, 1967
வீரபாண்டிய கட்டபொம்மன், 1959

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் -ஆகஸ்ட் 25 ,

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் -ஆகஸ்ட் 25 ,
திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.
இயல், இசைக் கல்வி
இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
சொற்பொழிவு ஆற்றல்
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கெüரவித்தார்கள்.
தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
திருப்புகழ் அமிர்தம்

சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
எழுதிய நூல்கள்
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
மறைவு
1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.
நன்றி -விக்கிபீடியா .

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அற்புதமான நடிகர் டி.எஸ்.பாலையா..பிறந்த நாள் ஆகஸ்ட் 23 ,

அற்புதமான நடிகர் டி.எஸ்.பாலையா..பிறந்த நாள் ஆகஸ்ட் 23 , 
டி. எஸ். பாலையா அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் (ஆகத்து 23, 1914 - 1976), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என தமிழ் சினிமா உலகமே வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள்.அதிலும் ராதாவும்,பாலையாவும் வில்லனாகவும்...நகைச்சுவையிலும் கொடிகட்டி பறந்தவர்கள்.
பாலையா...1936 ஆம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார்.இவர் கதானாயகனாக நடித்த படம்'வெறும் பேச்சல்ல"
பின்..வில்லன் பாத்திரங்களும்..நகைச்சுவை பாத்திரங்களுமே இவரைத் தேடி வந்தன.மணமகள் படத்தில் பத்மினிக்கு பாட்டு வாத்தியாராக வந்து..'சின்னஞ்சிறு கிளியே' பாடலை அழுதுக் கொண்டே பாடி..தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியில்..அவர் அழுது அற்புதமாக நடிக்கும் போது...நாம் அடக்கமுடியாமல் சிரிப்போம்.
தூக்கு தூக்கி படத்தில்...சேட்ஜியாக வந்து...நம்மள்...நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார்.இதற்குப் பின்னரே..இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும்...நாடகங்களிலும் பேசப்பட்டது எனலாம்.
பின்...வேலைக்காரி,மதுரை வீரன்,புதுமைப்பித்தன்,தாய்க்குப்பின் தாரம்,அன்பு, காத்தவராயன் என பல படங்களிலும் அவர் நடித்தார்.
கே.ஆர்.ராமசாமி,டி.ஆர்.மஹாலிங்கம்,ஜெமினி,எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.,சிவாஜி என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர்.
பாகப்பிரிவினையில்..இவர் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட்டது.பாமா விஜயம் காமெடி தூள் கிளப்பி இருப்பார்..இவரைப் பற்றி எழுதும் போது...நம்மால் மறக்கமுடியாத இரண்டு படங்கள்..காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள்.
தி.மோ.வில் நாதஸ்வர கலைஞராக வந்து..ரயிலில்..சி.கே.சரஸ்வதியுடன் இவர் செய்யும் குறும்புகள்....இருங்கள்..சிரித்து விட்டு வருகிறேன்..
காதலிக்க நேரமில்லை படத்தில்...நாகேஷுடன் இவர் கதைக் கேட்கும் காட்சி..சிரித்து..சிரித்து..வயிறு புண்ணாகும் காட்சியாகும்.
திருவிளையாடலில்...ஹேமாநாத பாகவதராய் வந்து..அலட்சியத்துடன்...இவர் பாடும்'ஒரு நாள் போதுமா" இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
டி.எஸ்.பாலையா..என்ற அற்புதநடிகர்..1976ல் காலமானார்.
அவரின் புகழ்பெற்ற  படங்கள்:
*வேலைக்காரி (1949)
*உத்தம புத்திரன் (1940)
*ஆர்யமாலா (1941)
*மனோன்மணி (1942)
*மீரா (1945)
*வால்மீகி (1946)
*மோகினி (1948)
*ஏழை படும்பாடு (1950)
*ஓர் இரவு (1951)
*மதுரை வீரன் (1956)
*பாகப்பிரிவினை (1959)
*திருவிளையாடல் (1968)
*பாமா விஜயம் (1967)
*தில்லானா மோகனாம்பாள்.

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜீவா பிறந்த நாள் ஆகஸ்ட் 21 ..

ஜீவா பிறந்த நாள் ஆகஸ்ட் 21 ..
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு.
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.
இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் இணைதல்...
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.
வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
இதழாசிரியராக...
ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961). கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959 இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933 இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.
அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
பொதுவுடமைக் கட்சியில் இணைதல்...
ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).
ஜீவாவின் நூல்கள்..
*மதமும் மனித வாழ்வும்
*சோஷலிஸ்ட் தத்துவங்கள்
*புதுமைப்பெண்
*இலக்கியச்சுவை
*சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
*மொழியைப்பற்றி
*ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
*மேடையில் ஜீவா (தொகுப்பு)
*சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
*கலை இலக்கியத்தின் புதிய பார்வை
*தேசத்தின் சொத்து (தொகுப்பு)
ஜீவாவின் கூற்றுக்கள்
எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிர்டையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன். ”
நான் ஒரு நாத்திகன் - ஜீவா.

இந்திய தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி பிறந்த நாள் ஆகஸ்டு 20 ..

இந்திய தொழிலதிபர் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி பிறந்த நாள் ஆகஸ்டு 20 ..
நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
இந்திய அரசு, அவரது தொண்டுள்ளத்தை பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம வீபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இளமை.
திரு நாராயண மூர்த்தி, 1946ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 20ம் நாள் கன்னட மத்வபிராமண குடும்பத்தில் பிறநதார்.மின் பொறியியல் பட்டத்தை மைசூர் பல்கலைகழகம் சார்ந்த தேசிய பொறியியல் கழகம்

தேசிய பொறியியல் கழகத்தில் 1967ம் ஆண்டு பெற்றார். பொறியியலில் முதுநிலை பட்டத்தை 1969ம் ஆண்டு இந்திய தொழிற்நுட்பக் கழகம், கான்பூரில் பெற்றார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் ஆகஸ்ட் 20,

ராஜீவ் காந்தி பிறந்த நாள் ஆகஸ்ட் 20,
ராஜீவ் காந்தி  (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். ]." இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பில் கிளின்டன் பிறந்த நாள் ஆகஸ்டு 19,

பில் கிளின்டன் பிறந்த நாள் ஆகஸ்டு 19,
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் (பிரப்பு வில்லியம் ஜெஃபர்சன் பிலைத், ஆகஸ்டு 19, 1946) ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர் ஆவார். இதன் முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் மனைவி இலரி 2008ல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார். புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட இவர், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக கோட்பாட்டிலும் நல காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவாதாக கருதப்படுகின்றன.

சங்கர் தயாள் சர்மா பிறந்த நாள் ஆகஸ்டு 19

சங்கர் தயாள் சர்மா பிறந்த நாள் ஆகஸ்டு 19 .
சங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999) இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.

ஓர்வில் ரைட் பிறந்த நாள் ஆகஸ்ட் 19 .

ஓர்வில் ரைட் பிறந்த நாள் ஆகஸ்ட் 19 .
ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தொல்.திருமாவளவன் உதய நாள் ஆகஸ்ட் 17

தொல்.திருமாவளவன் உதய நாள் ஆகஸ்ட் ௧௭..
பிறந்த நாள் : 17.08.1962
குடும்பம் : திருமணமாகாதவர்
அப்பா : இராமசாமி (எ) தொல்காப்பியன்
அம்மா : பெரியம்மாள்
தம்பிகள் : செங்குட்டுவன், பாரிவள்ளல்
அக்கா : வான்மதி
முகவரி : அங்கனூர் & அஞ்சல்
செந்துரை வட்டம்,
பெரம்பலூர் மாவட்டம் - 621 709
கல்வி:
புகுமுக வகுப்பு ‍(பியு.சி) (1978-79)
அருள்மிகு கொளஞ்சியப்பர்அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்.
பட்ட வகுப்பு -‍‍‍ இளம்வேதியல்(பி.எஸ்.சி) (1979‍-82)
மாநிலக் கல்லூரி, சென்னை.
பட்ட மேற் வகுப்பு முதுகலை குற்றவியல்(எம்‍.ஏ) (1983- 85)
சென்னை பல்கலைக் கழகம், சென்னை
சட்ட வகுப்பு இளநிலைச் சட்டம்(பி.எல்) (1985 -88)
சென்னை சட்டக் கல்லூரி, சென்னை.
அரசுப்பணி :
தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், அறிவியல் உதவியாளராக 5.4.1988 இல் மதுரையில் பணியமர்த்தம் மதுரை, கோவை,சென்னை ஆகிய இடங்களில் பணி செய்தல். 1999 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 17.08.1999 இல் பணி விலகல்.
பொதுவாழ்க்கை:
1983
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வெடித்த மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது.

தலித் மாணவர் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கர் போராட்டங்களில் பங்கேற்பு.
1984
'கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை' யின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்பு. பேரவையின் சார்பில் 'ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை சென்னை பெரியார் திடலில் தலைமையேற்று நடத்தியது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 'விடுதலை புலி' எனும் கையெழுத்து ஏட்டை பொறுப்பேற்று நடத்தியது.
1985
கடலோர பகுதியை சார்ந்த தலித் மற்றும் மீனவ இளைஞர்கள் , மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ' இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தியது. அவ்வியக்கத்தின் சார்பில் ஈழ விடுதலைக்க்கு ஆதரவாக மிதிவண்டிப் பேரணி, ஆர்பாட்டங்கள், கருத்தரங்கள் நடத்தியது.
1986
ஈழம் சென்ற இந்திய அமைதிப்படையின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னின்று நடத்தியது.

புதிய கல்வி கொள்கை (நவோதயா) திட்டத்தின் நகலை எரித்து சென்னை சட்டக் கல்லூரி முன் கைதானது.

திராவிடர் கழகம் நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சென்னை சைதாபேட்டையில் கைதானது.
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்பபு. 1987 ஈழத் தமிழர் பாதுகாப்பு க் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தை பாரிமுனைப் பகுதியில் தலைமை யேற்று நடத்தியது.
1990
விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் தலைமை பொற்ப்பேற்றது.

1990-99
தீவிரமான பல்வேறு போராட்டங்களை வழிநடத்தியது.

1999
முதன் முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்தது.
2001
சட்டமன்றப் பொதுதேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றது.
2004
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க அணியில் தாழ்தப்பட்ட சமுகத்தினருக்கு உரிய 'அரசியல் மதிப்பு' மறுககப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.(3.2.2004).
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்,ஐக்கிய சனதாதளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த்தேசியம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி' அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டது. அத்தேர்தலில் சுமார் 2,57,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. 2006: அ.தி.மு.க கூட்டணியுடன் அமைத்து தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, தமிழகத்தில் 2 இடங்களில் (காட்டுமன்னார் கோயில், மங்களூர்) வெற்றிபெற்றது.
2007‍ - 08
ஈழத்தமிழர் ஆதரவு, மனித நேயப்பேரணி, கருத்துரிமை மீட்பு மாநாடு உள்ளிட்ட கட்சியின் எண்ணற்ற போராட்டங்கள் மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்.
2009
ஈழத்தமிழர்களுக்காக சென்னை மறைமலை நகரில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம்.

ஈழத்தில் போர்நிறுத்தத்திற்காக "நாம் தமிழர்" நடைப்பயணம்.

நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள் ஆகஸ்ட் 17 .
ஷங்கர் (Shankar) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குனராக
வருடம் படம் நடிகர்கள் குறிப்புகள்
*1993 ஜென்டில்மேன் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினீத், மனோரமா, மா.நா.நம்பியார் தெலுங்கில் ஜென்டில்மேன் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.
*1994 காதலன் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன், கிரீஸ் கர்னாடு ஹிந்தியில் ஹம்சே ஹை முக்காபலா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .தெலுங்கில் ப்ரேமிகுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*1996 இந்தியன் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.தெலுங்கில் பாரதீயுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*1998 ஜீன்ஸ் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராஜு சுந்தரம், லக்ஷ்மி ஹிந்தியில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
தெலுங்கில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
*1999 முதல்வன் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
*2001 நாயக்:உண்மை நாயகன் அனில் கபூர், ராணி முகெர்ஜி, அம்ரிஷ் பூரி, சுஷ்மிதா சென் ஹிந்தி திரைப்படம் .
*2003 பாய்ஸ் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல் தெலுங்கில் பாய்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
*2005 அந்நியன் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், யானா குப்தா, நாசர், நெடுமுடி வேணு ஹிந்தியில் அபரிசித் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
தெலுங்கில் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2007 சிவாஜி: தி பாஸ் ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன், மணிவண்ணன் தெலுங்கில் சிவாஜி: தி பாஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2010 எந்திரன் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் படபிடிப்பில் உள்ளது .
தயாரிப்பாளராக...
வருடம் படம் நடிகர்கள் குறிப்புகள்
*1999 முதல்வன் அர்ஜுன், மனிஷா கொய்ராலா , சுஷ்மிதா சென், லைலா, ரகுவரன் தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2004 காதல் பரத், சந்தியா தெலுங்கில் ப்ப்ரேமிச்டே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2006 இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி வடிவேலு, தேஜாஸ்ரீ, நாகேஷ், மனோரமா, நாசர் தெலுங்கில் ஹிம்சராஜா 23வா புலிகேசி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2006 வெயில் பசுபதி, பரத், பாவனா, ஷ்ரியா ரெட்டி தெலுங்கில் வேசவி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
*2007 கல்லூரி அகில் , தமன்னா .
*2008 அறை எண் 305-இல் கடவுள் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜ்யோதிர்மயி .
*2009 ஈரம் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன்
*2010ரெட்டைசுழி கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி .
நன்றி -விக்கிப்பீடியா

புதன், 11 ஆகஸ்ட், 2010

பிடல் காஸ்ட்ரோ பிற‌ந்த‌ நாள் ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ பிற‌ந்த‌ நாள் ஆகஸ்ட் 13.
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் (சனாதிபதியாகப்) பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.