வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி
( Mohandas Karamchand Gandhi , குசராத்தி :
મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 -
ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி
என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை
வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியதன் காரணமாக இவர்
" விடுதலை பெற்ற இந்தியாவின்
தந்தை " [1] என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது
அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு
விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில
நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில்
காந்தி ஜெயந்தி என்று
கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை
இளமை
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869
அன்று இந்திய நாட்டின் குஜராத்
மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில்
பிறந்தார். இவரது தாய் மொழி
குஜராத்தி . தந்தையார் பெயர்
கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய்.
காந்தி தனது 13ஆம் வயதில் தம்
வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.
பின்னாளில் இருவரும் நான்கு ஆண்
மகன்களைப் பெற்றெடுத்தனர்:
ஹரிலால் (1888), மணிலால் (1892),
ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).
தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை
இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள்,
வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான
மாணவனாகவே காணப்பட்டார்
காந்தி. தனது 18ஆம் வயதில்
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர்
(barrister) எனப்படும் வழக்குரைஞர்
படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து
சென்றார். தன் படிப்பை
வெற்றிகரமாக முடித்து தாயகம்
திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம்
வழக்குரைஞராக பணியாற்றினார். இது
வெற்றிகரமாக அமையாததால் தன்
அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு
சென்ற காந்தி, அங்கேயுள்ள
நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின்
படிவங்களை நிரப்பும் எளிய பணியில்
ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த
ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய
தகராறால் இவ்வேலையும் பறிபோனது.
இச்சமயத்தில்
தென்னாப்பிரிக்காவில் தன்
தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக
அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம்
அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய
நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே
அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில்
ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும்
இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது.
இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது
தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே
கவனித்து வந்த இளைஞராயிருந்தார்
காந்தி. தென்னாப்பிரிக்காவில்
அவருக்கேற்பட்ட அனுபவங்கள்,
பின்னாளில் அவரை ஒரு மாபெரும்
அரசியல் சக்தியாக உருவாக்க
உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal)
மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில்
உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய
வழக்கப்படி தலைப்பாகை அணிந்து
வழக்காடச்சென்ற காந்தியிடம்
அத்தலைப்பாகையை விலக்குமாறு
நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.
காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும்
பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே
வெளியேறினார். பிறகொரு
நாள் பிரிட்டோரியா (Pretoria)
செல்வதற்காக தகுந்த
பயணச்சீட்டுடன் தொடருந்தில்
முதல் வகுப்புப் பெட்டியில் பயனம்
செய்த காந்தி, அவர் ஒரு
வெள்ளையர் இல்லை என்ற
காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி
ஒருவரால் (Pietermaritzburg)
தொடருந்து நிலையத்தில்
பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
வெள்ளையர் அல்லாத ஒரே
காரணத்தால் இது போன்று பல
இன்னல்களை காந்தி அனுபவித்தார்.
இதன் மூலம்
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின
மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும்
படும் இன்னல்களை காந்தி
நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில்
காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து
இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது,
அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப்
பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை
இயற்ற இருப்பதாக செய்தித்தாளில்
படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி
அவரது இந்திய நண்பர்களிடம்
அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம்
இதற்குத் தேவையான சட்ட அறிவு
இல்லையெனக் கூறி, காந்தியின்
உதவியை நாடினர். காந்தியும் அவர்கள்
வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம்
திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு
இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி
பெறாவிட்டாலும் அங்குள்ள
இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு
நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற
பெயரில் கட்சி தொடங்கி
அதற்கு அவரே
பொறுப்பாளரானார். இதன்
மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த
இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி,
அவர்களை தங்கள் உரிமைக்காக
குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில்
நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக
சத்தியாகிரகம் எனப்படும்
அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.
அகிம்சை , ஒத்துழையாமை,
கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல்
ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப்
போராட்டத்தின் பண்புகளாகும். இந்த
காலகட்டத்தில் காந்தியும் அவருடன்
சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை
சென்றனர். தொடக்கத்தில்
ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக
அடக்கியது போல் தோன்றியது. பின்னர்
பொதுமக்களும் ஆங்கில
அரசாங்கமும் இவர்களின் உண்மையான
மற்றும் நேர்மையான வாதங்களை
புரிந்துகொண்டு இவர்களுடைய
கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின்
மூலம் தென்னாப்பிரிக்க வாழ்
இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும்
முயற்சியில் வெற்றி கண்ட காந்தி
தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை
துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில்
அடியோடு உருமாறியிருந்தார். தழையத்
தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி,
தொள தொள ஜிப்பா,
அங்கவஸ்திரம், தலையில் பெரிய
முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி
விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய
காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே
வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க,
மிதவாத அரசியல் தலைவர்
கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு
செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த
மோட்டார் காரில் காந்தியையும் அவரது
மனைவியையும் அமரச் செய்து
ஊர்வலமாக இட்டுச் சென்றார்.
(தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து
வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
கொண்டாடப்படுகின்றது) [2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம்
நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய்
பெட்டார் சாலையில் மவுண்ட்
பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு
வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி
தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி
இந்திய மக்கள் அறிந்திருந்தனர்.
காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே ,
ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு
ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து
ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப்
போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
இயக்கத்தின் தலைவராக காந்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல
மாற்றங்களை அறிமுகப்படுத்தி
இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற
கொள்கைகளையும் வலியுறுத்தி
காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின்
மாபெரும் விடுதலை
இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரக தண்டி
யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு,
இந்தியாவில் இந்தியர்களால்
தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது.
மேலும், இந்தியாவில் இந்தியரால்
தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ்
அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்
கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை
விலக்கிக் கொள்ளுமாறு காந்தி
பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில்
இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி
மார்ச் 2, 1930 அன்று 78
சத்தியாகிரகிகளுடன்
அகமதாபாத்திலிருந்து குஜராத்
கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல்
நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள்
நடைப் பயணத்திற்குப் பிறகு, தன்
சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த
காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி
உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு
எதிராக பகிரங்கமாக
பொதுமக்களுக்கு விநியோகித்தார்.
மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த
அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு
தயாரித்து பயன்படுத்தச்
சொன்னார். இந்தியாவின் பல
இடங்களில் இது போல் நடந்தது; காந்தி
உட்பட பல்லாயிரக் கணக்கான
இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-
முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
காந்தியடிகளுடன் முகமது அலி
ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ்
அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை
நடத்தி இறுதியில் வரியை நீக்கிக்
கொண்டது. உப்பு சத்தியாகிரகம்
என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய
விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு
திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல்
நடைபெற்ற வெள்ளையனே
வெளியேறு போராட்டத்திலும் காந்தி
பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள்
இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது.
ஆனால் காந்தியோ, சுதந்திர
கொண்டாட்டங்களில் கலந்து
கொள்ளாமல், இந்தியா-
பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம்
வருந்தி துக்கம் அனுசரித்தார்.
உண்ணாநிலைப்
போராட்டங்கள்
முதன்மைக் கட்டுரை: காந்திஜியின்
உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்
காந்திஜி இந்திய விடுதலைக்கும் , சமூக நீதியை
வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும்,
தீண்டாமைக்கு எதிராகவும், முழு
மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள்
உண்ணாநிலைப் போராட்டங்கள்
மேற்கொண்அவற்றி அவற்றில்
மூன்று முறை 21 நாட்கள் கொண்ட
தொடர் உண்ணாநிலைப்
போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா
காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம்
அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்
மறைவு
பிர்லா மாளிகை (காந்தி சமிதி)
மகாத்மா காந்தியின் அஸ்தி
அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு
காட்சி ஜவகர்லால் நேரு,
மகாத்மா காந்தியின்
புதல்வர்கள் ராம்தாஸ்
(கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ்
ஆகியோருடன்
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ,
ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி)
தன் வாழ்நாளில் இறுதியாக 144
நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா
மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில்
நாதுராம் கோட்ஸே ஆல்
சுட்டுக்கொலை
செய்யப்பட்டார்.
நினைவு நாள்
ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள்
தினமாக நடத்தப்படுகிறது.
கொள்கைகள்
பகவத் கீதை, ஜைன சமய
கொள்கைகள்,
லியோ டால்ஸ்டாயின்
எழுத்துக்கள்
போன்றவற்றால்
ஈர்க்கப்பட்ட காந்தி,
சத்தியம், அகிம்சை
ஆகிய
கொள்கைகளை
தன் வாழ்நாள்
முழுவதும் விடாமல்
கடைபிடித்தார். அசைவ
உணவுகளை தவிர்க்கும்
வைணவ குடும்பத்தில்
பிறந்த காந்தி, சிறு வயதில் புலால்
உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ
உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை,
ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு
வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை
விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது
என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக
அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம்
ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும்
கடைபிடித்தார். இவர் தனது காமத்தை
வெல்லும் பொருட்டு பல்வேறு
சோதனைகளைச் செய்து வந்தார். அவை
பெரும் விமரிசனத்திற்கு
உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது
மனைவியின் அனுமதியுடன் தான்
செய்தார். இவை இன்றளவும்
சரியாகப் புரிந்து
கொள்ளப்படாமல்
விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு
ஒருநாள் மௌன விரதம்
மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை
அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே
அணியத் தொடங்கினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி
உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும்
என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு
செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்
என போராட்டங்கள் எழுந்த
பொழுது, அனைவரும் இந்து மதத்தின்
அறத்தைப் பேண வேண்டும் என காந்தி
சொன்னார் என அம்பேத்கர் எழுதி
உள்ளார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப்
பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த
வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி
விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத
அறத்தின்படி சரி என காந்தி
வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி
நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress
party) வெளியேற முடிவெடுக்க
தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில்
ஈ. வெ. இராமசாமி
நாயக்கருக்கும் , காந்திக்கும் பேச்சு
வார்த்தைகள் நடைபெற்றது. இக்
கலந்தாய்விலும், காந்தி இந்து மத
அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ.
வெ. இராமசாமி நாயக்கர்
பேராய கட்சியிலிருந்து வெளியேற
முடிவெடுத்தார்  .
சுயசரிதை
காந்தி குஜராத்தி மொழியில்
எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற
பெயரில் தமிழ் மொழியிலும்
An Autobiography: The Story of My Experiments
with Truth என்ற பெயரில்
ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன.
தமிழ்நாடு நினைவுச்
சின்னங்கள்
மகாத்மா காந்தி நினைவு
மண்டபம் கன்னியாகுமரி
மகாத்மா காந்தி
அருங்காட்சியகம்- மதுரை
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது
தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில்
சென்னை கிண்டியில் காந்தி மண்டபம்
மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
மதுரையில் இராணி மங்கம்மாள்
காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்
1959 முதல் காந்தி அருங்காட்சியகம்
செயல்பட்டு வருகிறது.  இங்கு
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான புகைப்படக்
கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும்
சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில்
நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு
அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு
சிலை ஒன்று வளாகத்திலும்,
மற்றொன்று
அருங்காட்சியகத்திலும்
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள்
அமரக்கூடிய அளவில் அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல்
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
தொடர்பான புகைப்படங்கள்
மற்றும் பொருட்கள்
கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள
அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.

மகாத்மா காந்தி
பயன்படுத்திய
பொருள்கள்
ஏலம்
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி
பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி
உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில்
விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000
பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி),
அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும்
(சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது.
இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும்
எந்த தடையும் இந்திய அரசு
ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம்
செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப்
பொருட்களுக்கு ஏற்பட்டது. [12]
விமர்சனங்கள்
பகத்சிங்கின் தூக்குதண்டனை
பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது
வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை
அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி
கையொப்பம் இட்டார். [13] தி
லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி
திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான
ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்)
கையெழுத்திட்டதற்காக காந்தியை
மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும்
காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை
பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும்
தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்?
என்பது போல கருத்துகள் மக்களால்
பேசப்பட்டன.
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதம்
தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின்
பல்லக்குப் பணியாளன் (The South African
Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற
நூலும் தெய்வீக முகமூடிக்குப்
பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind
the Mask of Divinity) என்ற நூலும் பிற பல
கட்டுரைகளும் காந்தியை அவரது தென்
ஆப்பிரிக்க எழுத்துக்களையும்
செயற்பாடுகளையும் முன்வைத்தும்
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதியாகவும், வெள்ளை
அரசுக்கு சார்பான ஆரிய
பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன,
விமர்சிக்கின்றன. [14] எ.கா நற்றல் (Natal)
நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு
காந்திய எழுதிய ஒரு கடிதத்தில்
பின்வருமாறு கூறுகிறார்: [15]
“ I venture to point out that
both the English and the
Indians spring from a
common stock, called the
Indo-Aryan. … A general
belief seems to prevail in the
Colony that the Indians are
little better, if at all, than
savages or the Natives of
Africa. Even the children are
taught to believe in that
manner, with the result that
the Indian is being dragged
down to the position of a
raw Kaffir.” ”
“ இந்தியர்களும்
ஆங்கிலேயர்களும் இந்தோ-
ஆரியர்கள் என்ற ஒரே
பொதுவான
மூலத்தில் இருந்து
வந்தவர்கள்.
...கொலனிகளில்
இந்தியர்கள் ஆப்பிரிக்க
காட்டுமிராண்டிகளை விட
மேம்பட்டவர்களாக
கருதப்படவில்லை.
குழந்தைகளும் இதனை நம்ப
கற்பிக்கப்படுகிறார்கள்.
இதனால் இந்தியர்கள்
பச்சைக் காப்புலிகளின்
நிலைக்கு கீழே
இழுக்கப்படுகிறார்கள். ”

இன்று உலக சைவ தினம் அக்டோபர் 1.

இன்று உலக சைவ தினம் அக்டோபர் 1.

இன்று உலக சைவ தினம் (World Vegetarian Day).
தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உலக முதியோர் தினம் அக்டோபர் 01.


உலக முதியோர் தினம் அக்டோபர் 1.

ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி
சர்வதேச முதியோர் தினம் ( International Day of
Older Persons ) உலகம் முழுவதும் அக்டோபர் 1-
ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நோக்கம்
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை
மதிக்கவும், மரியாதையை செலுத்தவும்,
குடும்பம் , சமூகம் மற்றும் நாட்டுக்கு
அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும்
வகையிலும், அவர்களின் அறிவு , ஆற்றல்
மற்றும் சாதனைகளை பார்த்துக்
கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு
எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
முதியோர் நலன்
பொதுவாக 60 வயதை கடந்த
ஆண், பெண் அனைவரும் மூத்த
குடிமக்கள் அல்லது முதியோர் என்று
கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை
பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை
மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றன.
உலக அளவில்
1991 -ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை
அறிவுறுத்தலின் படி, கீழ்க்கண்டவை
முதியோர்களுக்கான அத்தியாவசிய
விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை,
இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள்
போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை
உருவாக்கிக் கொள்ள
அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட
வேண்டும்.
அவர்களை பாதிக்ககூடிய எந்த
கொள்கை முடிவுகளிலும் அவர்களின்
கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க
வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள்
கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள்
அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை
அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும்
பொதுவான வரைமுறை ஆகும்.
இந்திய அளவில்
பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள்
நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007,
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின்
தேவையான பராமரிப்பை உறுதி
செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள்,
அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும்
இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில்
13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர்,
கோவா, குஜராத், ஹரியானா,
கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்,
மகாராஷ்டிரா, ஓடிசா,
ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா,
மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு
யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை
இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி
உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் /
யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின்
விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை
நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை
எடுக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
இந்த சட்டம் வழங்குவது :
தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான
மற்றும் கட்டாயமான குழந்தைகள் /
உற்றார் மூலம் பெற்றோர் மற்றும்
மூத்தோர் நலன். பராமரிப்பு
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த
குடிமக்களின் சொத்துக்களை
மீண்டும் ஒப்படைத்தல்.
கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு
சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு
இல்லங்கள் நிறுவுதல்.
மூத்த குடிமக்களின் சொத்துக்கள்
மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு
மருந்துகள் கிடைக்க செய்தல்.
தமிழ் நாட்டில் முதியோர்
நலத்திட்டங்கள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக
தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும்
முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள்
நடைபெறுகின்றன.
65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத
மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை
உதவித்தொகையாக
வழங்கப்படுகிறது.
இலவச மத்திய உணவு திட்டமும், இலவச
அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக
வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு
தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி
செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.
......................
பள்ளி விடுமுறைக்கு
தாத்தா, பாட்டி
வீட்டுக்கு போகிறோம்
என்று
சொன்னாலே குழந்தைகள் குதூகலம்
ஆகிவிடுவார்கள். காரணம்
அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில்
தான் காணமுடியும்.
இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா
தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும்
உணர்த்துவதற்காகவும்,
உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம்
- அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.
கடந்த 1982-ம் ஆண்டில் ஐ.நா. அமைப்பால்
உருவாக்கப்பட்ட கமிட்டியின் மூலம்
முதியோர்களின் தேவைகள், அவர்களின் பங்களிப்பு
மற்றும் அவர்களை பாதுகாப்பது போன்றவை
தொடர்பாக ஆராயப்பட்டு 1990-ம்
ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இனி உலக
முதியோர்கள் தினம் என பிரகடனப்படுத்தியது.
முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள்
அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது
கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து
அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
படிப்பதற்காக, சுற்றுலாவுக்காக என
இந்தியா வரும் அயல்நாட்டவர்கள்,
இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக
வாழ்வதை பார்த்து இங்கே திருமணம்
செய்து கொண்டு செட்டில்
ஆவதையும் பார்த்திருக்கிறோம்.
அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில்,
அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம்
சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு
வளர்த்த தந்தையையும் வீட்டில் வைத்து பராமரிக்க
முடியாமல் ரோட்டுக்கு அனுப்பும் அவலமும்
நடக்கிறது.
அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத
பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்
உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு
தள்ளப்பட்டது.
ஏன் இந்த நிலை?
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும்
பெண் வீட்டார் முதலில் போடும்
கண்டிஷன், 'கல்யாணத்துக்கு அப்பறம்
பொண்ணும் மாப்பிள்ளையும் தனிக்
குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான்.
பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.
'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும்
பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும்
புகுந்த வீட்டுக்கு வர்றோம்.. ஏன் நீங்க வந்தா
என்ன தப்பு?' என புரியாமல் பேசும்
பெண்களை என்னவென்று
சொல்வது.
தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள்
அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து
பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட
ஆரம்பித்து திருமணம், குழந்தைகள் வளர்ப்பு,
அவர்களது படிப்பு, திருமணம் என அனைத்து
கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி
காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின்
பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என
நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில்
மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான்
இங்கே இருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு
பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர
இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர்.
தொழில்நுட்பத்தை கற்றுத்தரும்
இணையதளம் கலாச்சாரம், பண்பாடு,
ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது.
ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால்
ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது
அனுபவங்களை பகிர்ந்து
கொள்வார்கள். குழந்தைகளை
மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில்
எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும்
மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும்.
இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார்
ஷேக்ஸ்பியர். எனவே தான் முதியவர்கள் சக
குழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர்.
பொக்கிஷமாக பாதுகாக்க
வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து
பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும்
ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனியாவது சிந்திப்பீர்களா?
சரி இனி பேருந்தில் நின்று கொண்டு
வரும் முதியவர்களுக்காவது இடம்
கொடுப்பீர்கள் தானே?

******************"****************
அக்டோபர் 1ஆம் தேதி “உலக முதியோர் தினமாக”
கொண்டாடப்பட்டு வருகிறது. 1990
ஆம் ஆண்டிலிருந்து இந்த “சர்வதேச முதியோர்
தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் எனக்கு இம்மாதிரி
தினங்களை கொண்டாடுவதில்
உடன்பாடில்லை. ஆனால் இன்றைய அவசர
உலகில் இம்மாதிரியான தினங்கள்
அவசியம் தான் என்ற எண்ணம் தோன்ற
ஆரம்பித்து விட்டது. குறைந்தபட்சம்
இம்மாதிரியான தினங்களை ஒரு
விழிப்புணர்வு தினமாகவாவது நினைக்க
தோன்றுகிறது. “பெண்கள் தினம்”,
“ஆண்கள் தினம்” (இந்த தினம் அதிகம்
பிரபலமடையவில்லை – ஆண்கள்
எல்லாத்திலும் விட்டுக்கொடுத்து
போவது தான், பிரபலமடையாமல் இருப்பதற்கு
காரணம்), “அன்னையர் தினம்”, “தந்தையார்
தினம்” என்கிற வரிசையில் “முதியோர் தினமும்”
சேர்ந்து விட்டது. இன்றைக்கு இந்த விழிப்புணர்வு
தினம், மிகவும் அவசியம் தான்.
பெற்றோர்கள் தங்களின் கடமையாக
பிள்ளைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில்
அவர்கள் முன்னேற வழி வகுக்கிறார்கள்.
ஆனால், பிள்ளைகளோ, வளர்ந்த பின்பு,
பெற்றோர்களை பாதுக்காப்பது தங்களின்
கடமை என்பதை மறந்து, அவர்களை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பதும், அவர்களின் தேவைகளை
பூர்த்தி செய்யாமல் இருப்பதும்,
இன்னும் ஒரு சில பிள்ளைகளோ, தங்களின்
தேவைக்கு அந்த வயதான பெற்றோர்களை
வேலைக்கு அனுப்புவதும் உலகம் முழுவதிலும்
நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.
இங்கு சிட்னியிலும், நான் அலுவலகத்துக்கு
செல்லும் வழியில், ஒரு சில முதியவர்கள்
சாலையோரத்தில் உட்கார்ந்து, பிச்சை எடுக்கும்
அவலத்தை பார்த்திருக்கிறேன். அவர்கள்
பக்கத்தில் ஒரு அட்டையில் “Domestic Violence.
Homeless now.Help needed” என்கிற
வாசகங்கள் இருக்கும். அவர்களிடம்
சென்று அனுமதி பெற்று புகைப்படம்
எடுக்கலாம் என்று எண்ணுவேன். ஏனோ,
அவர்களை காட்சிப் பொருளாக
ஆக்குவதற்கு மனம் இடம்
கொடுத்ததில்லை.
இங்கும் முதியோர் இல்லங்கள் நம் நாட்டைப் போல்
நிறைய இருக்கின்றன. ஓவியாவின் முதல்
பிறந்த நாளை, இந்த மாதிரி ஏதாவது ஒரு
முதியோர் இல்லத்துக்கு சென்று
அவர்களுடன் கொண்டாடலாம்
என்று நினைத்தோம். ஆனால் வெளி
மனிதர்கள் யார் வேண்டுமானாலும்
முதியோர் இல்லங்களுக்கு சென்று இந்த
மாதிரி நிகழ்வுகளை கொண்டாட
முடியாது, முதியோர் இல்லத்தில்
இருப்பவர்களின்
சொந்தக்காரர்கள் மட்டும் தான்,
இந்த மாதிரி நிகழ்வுகளை
கொண்டாடமுடியும் என்று
சொல்லிவிட்டார்கள். அந்த
சமயத்தில் தான், அடாடா, நாம் நம்
நாட்டில் இல்லாமல் போய்விட்டோமே என்ற
ஏக்கம் ஏற்பட்டது.
அன்றைக்கு கூட்டுக்குடும்பமாக இருந்த கால
கட்டத்தில், இவ்வளவு வியாதிகள்
வந்ததில்லை. மேலும் எதற்கெடுத்தாலும்
மருத்துவரிடம் சென்றதுமில்லை. அதற்கு
காரணம் பெரியவர்கள் கூறும் “பாட்டி
வைத்தியம்” தான். இன்றைக்கு அந்த பாட்டி
வைத்தியம், மறைந்து கொண்டு வருகிறது.
நாம் சாதாரண சளி பிடித்தால் கூட
மருத்துவரிடம் செல்வது பழகிவிட்டது.
இன்றைய நவநாகரிக உலகில், பாட்டி,
தாத்தாவுடன் வளரும் குழந்தைகள் மிகவும்
கொடுத்து வைத்தவர்கள். இந்த
தலைமுறையினர் தான் கூட்டுக்கும்ப
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து
விட்டார்கள். அடுத்த தலைமுறையினராவது,
அந்த முற்றுப்புள்ளியை அழிப்பார்களா
என்று தெரியவில்லை.
முதியவர்களின் அருமைகைளை தெரிந்து,
அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்து அவர்களை
குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே
பிள்ளைகளின் முக்கிய கடமையாகும். நாம்
வாழ்க்கையில் வேற எந்த நற்செயலை
செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை, முதியவர்களை புறக்கணிக்கும்
தீய செயலை செய்யாமல்
இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி
பெற முடியும்.


வியாழன், 29 செப்டம்பர், 2016

தமிழ் விக்கிப்பீடியா உதய நாள் செப்டம்பர் 30.

தமிழ் விக்கிப்பீடியா உதய நாள்செப்டம்பர்  30.

விக்கிப்பீடியா ( Wikipedia, i/ˌw ɪ k ɪˈ piː di ə/
அல்லது i/ˌw ɪ k i ˈp iː di ə/ WIK-i-PEE-dee-ə )
என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா
நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும்,
கூட்டாகத் தொகுக்கப்படும்,
பன்மொழி, கட்டற்ற இணையக்
கலைக்களஞ்சியமாகும். தமிழ்
விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட
கட்டுரைகளுடன் சேர்த்து இதன்
மொத்தக் கட்டுரைகளான 24
மில்லியன் கட்டுரைகளும்
உலகெங்கிலுமுள்ள
தன்னார்வலர்களால் கூட்டாக
எழுதப்படுகின்றன. பெரும்பாலும்
இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப்
பயன்படுத்தும் எவராலும்
தொகுக்கப்பட முடியும். [6] மேலும்
இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான
பங்களிப்பாளர்களையும்
கொண்டுள்ளது. [7][8]
செப்டம்பர் 2016 வரையில்,
விக்கிப்பீடியா 285 மொழிகளில்
செயற்படுகிறது. இது இணையத்தளத்தில்
இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே
மிகவும் பெரியதும், அதிகப்
பிரபலமான ஒன்றுமாகும். [9][10][11][12]
மேலும், இது அலெக்சா
இணையத்தளத்தில் காணப்படும்
இணையத்தளங்களின் தரவரிசையில்
ஆறாவது இடத்தில் உள்ளதோடு,
உலகளாவிய ரீதியில் அண்ணளவாக
365 மில்லியன் வாசகர்களையும்
கொண்டுள்ளது. [9][13]
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி
சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-
இல் ஆரம்பிக்கப்பட்டது. [14] சாங்கர்
அவர்கள், விக்கிப்பீடியா என்ற
சொல்லை, [15] விக்கி (ஒருவகை
கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய்
மொழியில் "விரைவு" எனப்
பொருள்படும் விக்கி என்ற
சொல்லிலிருந்து பெறப்பட்டது.)
[16] மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின்
ஆங்கிலச் சொல்லான
என்சைக்ளோபீடியா விலிருந்து), ஆகிய
சொற்களின் இணைப்பாக
உருவாக்கினார். 2006-இல், டைம் சஞ்சிகை,
உலகளாவிய ரீதியில் இணைய மக்கள்
கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு
யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக்
ஆகியவற்றுக்கு மேலதிகமாக
விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும்
குறிப்பிட்டுள்ளது. [17] விக்கிப்பீடியா, ஒரு
செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்
படுகிறது. இதற்குக் காரணம், முக்கியச்
செய்திகள் தொடர்பான
கட்டுரைகள் அடிக்கடி
இற்றைப்படுத்தப்படுவதேயாகும். [18][19][20]
விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு
சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது.
இவற்றுள் கட்டுரைகளின் தரம், [21] தேவையற்ற
தொகுப்புக்கள் [22][23] மற்றும்
தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக்
குறிப்பிடலாம். சில கட்டுரைகள்
உறுதிப்படுத்தப்படாத அல்லது
முரண்பாடான தகவல்களைக்
கொண்டிருந்தாலும், [24] நேச்சர்
இதழ் மூலம் 2005-இல்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம்,
இதிலுள்ள விஞ்ஞானக் கட்டுரைகள்,
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின்
கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை
கொண்டன எனக்
கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும்
முக்கியத் தவறுகள் ஒரேயளவினதாய்
இருந்தன. [25] இதற்குப்
பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா
இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும்
முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத்
தெரிவித்தது. [26] எனினும் இதனை
மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில்
இதற்கான முறையான அறிக்கையையும்,
பிரிட்டானிக்காவின் முக்கிய
மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும்
வெளியிட்டது. [27]
வரலாறு
முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
'போமிஸ்' ஊழியர்களால் நுபீடியா
ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம்,
நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை
இலவசமாக வெளியிடுவதாகும்.
நுபீடியாவின் நிறுவுனர் ஜிம்மி வேல்ஸ்
ஆவார். லாரி சங்கர் தலைமை ஆசிரியராக
பணியாற்றினார். நுபீடியாவிட்கு இனைய
விளம்பர நிறுவனமான 'போமிஸ்' நிதி
வழங்கியது. பின்பு, ‘விக்கிப்பீடியாத் திட்டம்’
ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம்
ஆண்டு இணையத்தில்
தொடங்கப்பட்டது. யாரும்
இலகுவில் வேகமாக இணையத்
தொடர்பையும் உலாவியையும் மட்டும்
பயன்படுத்தித்
தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம்
அமைந்துள்ளது.
“அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில்
மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும்
கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின்
உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப
நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, நடுநிலைமையை
வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும்,
கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு
உபயோகிக்கப்படுகின்றது
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல
மொழிகளிலுமாகச் சேர்த்து,
12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள்
எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில
மொழியில் மாத்திரம் 2.7
மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள்
எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும்
மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள்
உள்ளன. இதில் ஏறத்தாழ 100
மொழிகளில்,
தொடர்ச்சியான மேம்படுத்தல்கள்
இடம் பெற்றவண்ணமுள்ளன. 14
மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை
எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த
பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும்
விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும்
நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
இயல்புகள்
“ பிரபலமான
நகைச்சுவையொன்று
கூறுகிறது,
"விக்கிப்பீடியாவிலுள்ள
பிரச்சினை
என்னவென்றால், அது
பயன்பாட்டு ரீதியில் சிறந்தது.
ஆனால், கொள்கை
ரீதியில் பயனற்றது." ”
—மீக்கா ரியோக்காசு [28]
தொகுத்தல்
ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப்
போலல்லாது, விக்கிப்பீடியா
வெளித்தொகுப்புக்களை
ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது
குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில
கட்டுரைகள் தொகுக்க முடியாமல்
பாதுகாக்கப்பட்டுள்ளன. [29] மேலும்,
கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு
வாசகரும் கணக்கொன்று
இல்லாமலேயே கட்டுரைகளைத்
தொகுக்க முடியும். எனினும்,
வெவ்வேறு
மொழிப்பதிப்புகளில் இக்
கொள்கை வித்தியாசமாகக்
கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக,
ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த
பயனர் மட்டுமே புதிய
கட்டுரையொன்றை உருவாக்க
முடியும். [30] எந்தவொரு கட்டுரையையும்
அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை
கொண்டாட முடியாது என்பதோடு,
எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட
அதிகாரத் தரப்பும் அதனை ஆராய
முடியாது. அதற்குப் பதிலாகத்
தொகுப்பாளர்கள்,
தம்மிடையேயான கருத்தொருமிப்பின்
அடிப்படையில் கட்டுரைகளின்
உள்ளடக்கங்களையும் அமைப்பையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும். [31]
வழமையாக, கட்டுரையொன்றில்
மேற்கொள்ளப்படும்
தொகுப்பானது உடனடியாக
இற்றைப்படுத்தப்படும். எனவே, இக்
கட்டுரைகளில் துல்லியமின்மை, கருத்துக்
கோடல்கள் அல்லது காப்புரிமைத் தகவல்கள்
இடம்பெறலாம். ஒவ்வொரு
மொழிப்பதிப்பும் வெவ்வேறு
நிர்வாகக் கட்டுப்பாடுகளைக்
கொண்டிருப்பதுடன்,
இக்கொள்கைகளிலும் திருத்தங்களைக்
கொண்டுவரலாம்.
உதாரணமாகச், செருமானிய
விக்கிப்பீடியாவில் கட்டுரைத்
தொகுப்புக்கள் சில
மேற்பார்வையிடல்களுக்குப் பின்
உறுதிப்படுத்தப்படுகின்றன. [32] பல்வேறு
சோதனை ஓட்டங்கள் மற்றும்
கலந்துரையாடல்களுக்குப் பின் டிசம்பர் 2012
அன்று "மாற்றங்களுக்கான
காத்திருப்பு" முறைமை, ஆங்கில
விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
[33] இம்முறைமையின் கீழ்ச், சர்ச்சைக்குரிய
அல்லது குழப்பம் விளைவிக்கக்கூடிய
ஆபத்துடைய கட்டுரைகளின் மீதான புதிய
பயனர்களின் தொகுப்புக்கள்,
அங்கீகரிக்கப்பட்ட ஒரு விக்கிப்பீடியா
பயனரின் மேற்பார்வையின் பின்னரே
வெளியிடப்படும்.
விக்கிப்பீடியாவுக்கு உதவும்
‘மென்பொருட்கள்’
பங்களிப்பாளர்களுக்கு உதவிகரமாக
இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும்
காணப்படும் "வரலாற்றைக் காட்டவும்"
பக்கம், திருத்தங்களைப் (திருத்தங்கள்
அவதூறான தகவல்கள், குற்ற
அச்சுறுத்தல் அல்லது காப்புரிமை மீறல்
போன்றன மீளமைக்கப்படக் கூடியனவாய்
இருப்பினும்) பதிவு செய்யும். [34] இப்
பக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம்
பயனர்கள், விரும்பத்தகாத
தொகுப்புக்களை மீளமைக்கவோ,
இழக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறவோ
முடியும். ஒவ்வொரு
கட்டுரைக்குமான ‘பேச்சுப்பக்கம்’ பல்வேறு
பயனர்களும் தம்முள் ஒருங்கிணைந்து
செயற்பட உதவுகிறது. [35]
முக்கியமாகத்
தொகுப்பாளர்கள்,
பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்திக்
கருத்தொருமிப்புப் பெற
முடியும். [36] சிலவேளைகளில் இதற்காக
வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
தொகுப்பாளர்கள் இவ்விணையப்
பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும்
காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில்
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான
பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல்
ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம்,
தமக்கு விருப்பமான கட்டுரைகளில்
அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள
மாற்றங்களைப் பார்வையிட முடியும்.
அதிகமான கட்டுரைகளைக் கொண்ட
மொழிப் பதிப்புக்களில்,
தொகுப்பாளர்கள் கவனிப்புப்
பட்டியலைப் பேண விரும்புகின்றனர்.
தொகுப்புக்கள் அதிகரிப்பதன்
காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’
பகுதியில், சில தொகுப்புக்கள்
இடம்பெற முடியாமல் போவதே இதற்குக்
காரணமாகும். புதிய பக்கக்
கண்காணிப்பு செயன்முறையின் மூலம்
புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில்
நிகழும் வெளிப்படையான தவறுகள்
கண்காணிக்கப்படுகின்றன. [37] அடிக்கடி
தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு,
அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக்
குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே
தொகுக்கும் வகையில்
பாதுகாக்கப்படுகின்றன. [38]
குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள்
பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே
மாற்றங்களை மேற்கொள்ளும்
வகையில் காக்கப்படுகின்றன. [39]
தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச்
செய்நிரல்கள்’ மூலமாக
எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய
வேண்டிய பணிகள்
செய்யப்படுகின்றன. உதாரணமாக
இவற்றின் மூலம் பொதுவான
எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப்
பிரச்சினைகள் அல்லது புவியியல் சார்
கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக்
குறிப்பிடலாம். [40][41][42] சில
தானியங்கிகள், வேண்டத்தகாத
தொகுப்புக்களை
மேற்கொள்ளும் பயனர்களை
எச்சரிப்பதற்காகவும்
பயன்படுத்தப்படுகின்றன. [43] இதன்மூலம்,
வேறு இணையத் தளங்களுக்கான
இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில
குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி
முகவரிகளினால் தொகுப்புக்கள்
ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும்.
விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள்,
இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால்
அங்கீகரிக்கப்படல் வேண்டும். [44]
கட்டுரைப் பக்க அமைப்பு
விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள்
அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய
அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். [45]
ஒரு புதியகட்டுரை பெரும்பாலும்
வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள்
மாத்திரமே கொண்ட ஒரு
குறுங்கட்டுரை யாகவே ஆரம்பிக்கப்படும்.
அதேபோல் பெரும்பாலான விடயங்கள்
உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள் என வகைப்படுத்தப்படும்.
சில விக்கிப்பீடியாக்களில்,
ஒவ்வொரு நாளும்
தொகுப்பாளர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக்
கட்டுரை”யொன்று
விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில்
காட்டப்படும். [46][47] ‘சியாகோமோ
பொதேரி’ எனும் ஆய்வாளரின்
கண்டுபிடிப்பின்படி, சில
தொகுப்பாளர்கள் ஊக்கத்துடன்
குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத்
தொகுப்பதன் மூலமே
சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது. [48]
2010-இல் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வொன்று
சிறப்புக்கட்டுரைகளிடையே அவற்றின் தரங்கள்
வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு,
கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச்
செயற்பாடு’ போதிய தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து
வெளியிட்டது. [49] 2007-இல், அச்சுவழிப்
பதிப்பொன்றை உருவாக்கும்
நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா
கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும்
அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய
தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.
[50]
விக்கிப்பீடியா
தொகுப்பாளர்களின்
குழுவொன்று, விக்கித்திட்டம் ஒன்றை
உருவாக்கிக் குறிப்பிட்ட ஒரு துறையில் தமது
பங்களிப்புக்களை வழங்குகின்றது.
இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்க’த்தின் மூலம்,
பல்வேறு கட்டுரைகளிலும்
மேற்கொள்ளப்படும் மாற்றங்களை
ஒருங்கிணைப்பர்.
மென்பொருளும்
வன்பொருளும்
விக்கிப்பீடியா ஒரு விநாடிக்கு
2000-க்கும் மேலான
‘வேண்டுதல்’களைப் பெறுகிறது.
100-க்கும் மேலான ‘வழங்கி’கள்,
இதனை நிறைவேற்ற
அமைக்கப்பட்டிருக்கின்றன.
விக்கிப்பீடியா கட்டற்ற “விக்கிமீடீயா”
மென்பொருளில் இயங்குகிறது.
இது “பி.எச்.பி”, “மைசீக்குவல்” ஆகிய ‘இணைய
நிரல் மொழிக’ளால்
எழுதப்பட்டது. இவற்றோடு “எச்.டி.எம்.எல்”,
“சி.எசு.எசு” ஆகியவையும் பக்கங்களை
வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
விக்கிப்பீடியா ஒரு தனி ‘வழங்கி’யில் 2004
வரை இயங்கி வந்தது. அதன் பின்னர்ப்
“பல்நிலை வழங்கிக் கட்டமைப்பு”க்கு
விக்கிப்பீடியா மாற்றப்பட்டது. தற்போது 100-
க்கும் மேற்பட்ட வழங்கிகள், உலகின்
நான்கு பகுதிகளில் விக்கிப்பீடியாவை
வழங்குகின்றன.
மொழிப்பதிப்புக்கள்
தமிழ் விக்கிப்பீடியா
முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003
ஆம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது இதில்
88,805 கட்டுரைகள் உள்ளன. 1,03,221 பயனர்
கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புத்தக வடிவில்
நியூயார்க்கைச் சேர்ந்த ஆசிரியர் ‘மைக்கேல்
மாண்டி’ என்பவர், ஆங்கில விக்கியைப்
புத்தகமாகத் தொகுத்துள்ளார்.