ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

கர்ம வீரர் காமராசர் நினைவு தினம் அக்டோபர் 02.

கர்ம வீரர் காமராசர் நினைவு தினம் அக்டோபர் 02.

காமராசர் (காமராஜர்) தமிழ்
நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள்
ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு
அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர்
ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள்
தமிழகத்தின் முதல்வராகப் பதவி
வகித்தார். தமிழகத்தில் பள்ளிக்
குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும்
பெயர் பெற்றவர். இவரை,
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை,
அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்
என்றெல்லாம் புகழ்வர். இவர்
"கருப்பு காந்தி" என்றும் அன்போடு
அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு,
1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத
ரத்னா விருது வழங்கியது. மதுரைப்
பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் என்றும், சென்னை
பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்
உள்நாட்டு முனையத்திற்கு காமராசர்
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக் கட்டுரையைக் கேட்கவும் ( info/dl )
இந்த ஒலிக்கோப்பு மார்ச் 30, 2013
தேதியிட்ட காமராசர் பதிப்பில்
இருந்து உருவாக்கப்பட்டது. இது
கட்டுரையின் பிந்திய
தொகுப்புக்களைக்
காட்டாது. ( ஒலி உதவி )
பிற பேச்சுக் கட்டுரைகளைக் காண
தொடக்ககால
வாழ்க்கை
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு
ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய
பெற்றோர் குமாரசாமி நாடார்
மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர்
நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக்
குல தெய்வமான காமாட்சியின்
பெயரையே முதலில் சூட்டினார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும்,
அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார்.
நாளடைவில் காமாட்சி என்ற பெயர்
மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது
பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா
பள்ளியில் தொடங்கினார்.
படிக்கும் போதே மிகவும்
பொறுமையுடனும் விட்டுக்
கொடுக்கும் மனத்துடனும்
விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு
இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா
நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார்.
மற்றொருவர் பெயர்
காசிநாராயண நாடார். இவர்
திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி
வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத
நிலை ஏற்பட்டதும் காமராசர் தன்
மாமாவின் துணிக்கடையில் வேலையில்
அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ.
வரதராசுலு நாயுடு போன்ற தேசத்
தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு
அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும்
ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம்
வயதில் காங்கிரசின் உறுப்பினராக
ஆனார்.
ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு
மாதம், வேதாரண்யத்தில் உப்பு
சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில்
கலந்து கொண்டார்.
அதற்காகக் காமராசர் கைது
செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர்
சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்
அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர்
வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம்
டாக்டர் பெ. வரதராசுலு
நாயுடுவின் வழக்காடும் திறமையால்
குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை
ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே
விருதுநகர் நகராட்சித் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது
மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும்
நேராகச் சென்று தன் பதவி
விலகினார். பதவிக்கு நேர்மையாக
முழுமையாகக் கடமையாற்ற முடியாத
நிலையில் அதில் ஒட்டிக்
கொண்டிருப்பது தவறு என்பது
அவருடைய கொள்கையாக இருந்தது.
மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி
நடவடிக்கைகளுக்காகக் கைது
செய்யப்பட்டார். இந்த முறை மூன்று
ஆண்டுகள் தண்டனையாகப்
பெற்றார்.
அரசியல் குரு
காமராசர், சிறந்த பேச்சாளரும்
நாடாளுமன்றவாதியும் ஆன
சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக
ஏற்றுக் கொண்டிருந்தார். 1936 -ல்
சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின்
தலைவரானபோது காமராசரைச்
செயலாளராக ஆக்கினார்.
இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி
நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில்
பெருவெற்றி பெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி
கேட்டுக் காமராசர் முதலில்
சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று
அங்குதான் தேசியக் கொடியை
ஏற்றினார்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953 -க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு
அவர் கொண்டு வந்த குலக்கல்வித்
திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள்
கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித்
தலைமைப் பொறுப்புக்கு வரத்
தயங்கியதற்கு அவருக்கிருந்த
மொழிவளம் குறித்த
தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம்.
(அப்போது தமிழகம் சென்னை
ராச்சியமாக ஆந்திராவின்
பெரும்பகுதி, கர்நாடகாவின் சில
பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே
கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின்
செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக்
கொண்டிருக்க,
மொழிவாரி மாநிலங்கள்
அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-
ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும்
சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே
ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி
விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக
அளவில் தீர்மானித்துக் கொள்ள
அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான்
அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு
எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம்
கொண்டு வர வேண்டாம. நானே
விலகிக் கொள்கிறேன்’ என்று
அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத்
தன்னுடைய முக்கிய ஆதரவாளரான
சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை
செய்தார். அவருடைய
இன்னொரு முக்கிய
ஆதரவாளரான எம். பக்தவத்சலம்
அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின்
கூட்டத்தில் காமராசர்
பெருவாரியான வாக்குகள்
முன்னணியில் வெற்றி பெற்றார்.
இதுதான், காமராசர் தமிழக
முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு
அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி
இராமநாதன், - சா. கணேசன் , -
இராஜாஜி - பாகனேரி
பில்லப்பா, - காமராசர், - ரா.
கிருஷ்ணசாமி நாயுடு
அமைச்சரவை
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில்
சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)
அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட
சி.சுப்பிரமணியம் , அவரை
முன்மொழிந்த எம். பக்தவத்சலம்
இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம்
பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர்,
ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு
நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும்
காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க
ஆதரவோடு வென்றவர்கள். (1952
தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை
என்றாலும் அது சில வேட்பாளர்களை
வெளிப்படையாக ஆதரித்தது.
"தி.மு.க.வின் திராவிட நாடு
கொள்கையை ஆதரிக்கிறேன்;
சட்டமன்றத்தில் திமுக-வின்
கொள்கைகளை
எதிரொலிப்பேன்; தி.மு.க
வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு
பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில்
பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு
எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத்
தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக.
அப்படிக் கையெழுத்துப் போட்டுக்
கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து
வெற்றி பெற்று அமைச்சர்
ஆனவர்கள் இந்த இருவரும் [சான்று தேவை ].)
அமைச்சரவையின் இன்னொரு
குறிப்பிடத் தக்க அம்சம், பி. பரமேசுவரன்
என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த
பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம்
மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த
குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார்.
அவரது ஆட்சிக் காலத்திற்குள்
தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000
ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு
ஆதரவுடன் சென்னை
மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம்
கொண்டுவரப்பட்டது. முதலில்
ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு
மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத்
திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்
மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு
படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில்
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு
எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில்
விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின்
முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத்
திட்டம் இன்று உலக அளவில்
பாராட்டப்படும் திட்டமாகும். அதன்
பலனாகப் பள்ளிகளில் படிப்போரின்
எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது.
(பிரித்தானியர் காலத்தில் இது 7
விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில்
வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக
உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத்
தொழில்நுட்ப நிறுவனம்
தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி
வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம்,
நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்,
கல்வி, தொழில் வளத்துக்கு
முன்னுரிமையளித்து பல திட்டங்களை
நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9
முக்கிய நீர்பாசனத்திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டன. அவைகீழ்
பவானித்திட்டம் , மேட்டூர்
கால்வாய்த்திட்டம், காவேரி
டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
மணிமுத்தாறு , அமராவதி , வைகை ,
சாத்தனூர் , கிருசுணகிரி, ஆரணியாறு
ஆகியவையாகும். கன்னியாகுமரி
மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக்
குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக்
காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர்
தொட்டிப் பாலம் ஆசியாவின்
மிகப்பெரிய
தொட்டிப்பாலமாக இன்றளவும்
உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில்
தொடங்கப்பட்ட முக்கிய
பொதுத் துறை நிறுவனங்களும்
பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில்பெட்டி இணைப்புத்
தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள்
தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள்
தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி
மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல்
ஆண்டிலேயே அனைத்துத்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும்
ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார்.
பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும்
அதன்பின்னர் தனியார் கல்லூரி
ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம்
வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை
நீட்டித்தார். [1]
1967 ஆம் ஆண்டுத் தேர்தல் தோல்வி
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக
சட்டமன்றப் பொதுத் தேர்தலில்
தமது சொந்த ஊரான விருதுநகர்
தொகுதியில் பெ. சீனிவாசன்
என்பவரால் 1,285 வாக்குகள்
வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். [2]
நாகர்கோயில் மக்களவைத்
தொகுதியில் 1969 இல்
நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி
பெற்றார். [3][1]
அகில இந்திய காங்கிரசு
தலைமை
திருமங்கலம் பி.கே.என்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
அமைந்துள்ள காமராசரின்
சிலை
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63)
முதலமைச்சராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர்,
பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே
முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக்
கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட
விரும்பிக் கொண்டு வந்த திட்டம்
தான் K-PLAN எனப்படும் 'காமராசர்
திட்டம் ' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த
தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம்
ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச்
செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம்
சொன்னதை அப்படியே ஏற்றுக்
கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை
முன்மொழிந்த கையோடு தன்
முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல்
செய்து (2. அக்டோபர் 1963)
பொறுப்பினை பக்தவத்சலத்திடம்
ஒப்படைத்து விட்டு டெல்லி
சென்றார் காமராசர். அக்டோபர் 9
அன்று அகில இந்தியக் காங்கிரசின்
தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி ,
மொரார்சி தேசாய், எசு. கே.
பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர்
அவ்வாறு பதவி துறந்தவர்களில்
முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின்
செல்வாக்கு கட்சியினரின்
மரியாதைக்குரியதாக இருந்தது.
அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு
இறந்தவுடன் இந்தியாவின் தலைமை
அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை
முன்மொழிந்து காமராசர்
சொன்ன கருத்தினை அனைவரும்
ஏற்றனர். 1966-ல் லால் பகதூர்
சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட
அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது
இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக
வரச் செய்ததில் காமராசருக்குக்
கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன்
ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக்
காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை
ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான
சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில்
செல்வாக்குடன் திகழ்ந்தது.
ஆனாலும் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால்
அதன் பலம் குன்றிப் போகக் காமராசர்
தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக
அளவில் சுருக்கிக் கொண்டார்.
தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச்
சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி
நெருக்கடி நிலையினை அமல்
செய்தபோது அதனைக் கடுமையாக
எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர்.
இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த
குறையும் கவலையும் கொண்டிருந்த
நிலையில் காமராசர் இருந்தார்,
இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட
ஜெயப்பிரகாஷ் நாராயணன் ,
மொரார்ஜி தேசாய் மற்றும் பல
தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா
காந்தி அரசால் கைது
செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர்
இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று
அவர்கள் விடுதலை
செய்யப்படுவார்கள் என்று
எதிர்பார்த்திருந்தார் காமராசர்.
ஆனால், அன்று ஆச்சார்ய
கிருபளானியும் கைது செய்யப்பட்டார்
என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர்
துறந்தார். [4] 1975 அக்டோபர் திங்கள்
இரண்டாம் நாள் (காந்தியின்
பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப்
பின்னர் அவரின் உயிர் பிரிந்தது[5] . அவர்
இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு
பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ,
சொந்த வீடோ, வேறு எந்த வித
சொத்தோ இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி
வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
காமராசர் நினைவிடம், கிண்டி
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப்
போற்றும் வகையில் சென்னை கிண்டியில்
நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக்
காமராசரின் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில்
காமராசர் மணிமண்டபம் ஒன்றையும்
அமைத்துள்ளது. இங்குக் காமராசரின்
மார்பளவு சிலையும் நூலகமும்
அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான
புகைப்படங்கள் பொதுமக்கள்
பார்வைக்குக் கண்காட்சியாக
வைக்கப்பட்டுள்ளது. பார்க்க
திரைப்படங்கள்
2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற
பெயரில் அவருடைய வாழ்க்கை
வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம்
வெளியானது. அதன் ஆங்கில
மொழியாக்க குறுந்தகடு 2007-
ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராசரைப் பற்றிய
கருத்துக்கள்
“தனது பலவித கஷ்டங்களையும்
பொருட்படுத்தாது, சதா
காலமும் நாட்டின் நலன்களிலே
ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே
சகல தர்மங்களையும், நிதிகளையும்
நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு
மகாபுருசர்.”- காஞ்சி
சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர
சரசுவதி
"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு
எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர்
அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில்
காமராசர் சென்னை முதல்
அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு
மேலும் மேலும் தொண்டுபுரிய அவர்
நீண்ட காலம் வாழ்வாரென
நான் நம்புகிறேன். -நேரு
“சென்ற இரண்டாயிரம்
ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத
மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது
ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது
காமராசர்தான். ஊர்தோறும் சாரம்
தொழில்வளம் ஏற்பட்டுள்ளன.
மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த
அதிசயத்தைச் சாதித்த நமது
காமராசரின் அறிவுத்திறனை மறுக்க
முடியுமா?" -பெரியார்.
“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி
மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய
பிரச்சினகளையும் புரிந்து
கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த
தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா
காந்தி
"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை
நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன்.
நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.
அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை
நான் குனிந்து பார்த்தேன். இன்று
அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம்
சுப்ரமண்யம்
"காமராசர் என் தலைவர், அண்ணா
என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்
"தியாகச் சுடர், தமிழ் மக்களின்
நெஞ்சில் நீங்காத இடம்
பெற்றவர்."- கருணாநிதி
"காமராசர் அரசு பிற
மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக
இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும்,
சுதந்திரமான சர்க்காரிலும்,
நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு
வழிகாட்டியாக இருக்கிறது." - மத்திய
உணவு அமைச்சர் ஏ.எம்.தாமசு .
..............................
கல்வியின் நாயகன்
’காமராஜர்’- வரலாற்று
நாயகர்!
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம்.
நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள்
என்கிறோம், உலக அரசியலை அலசிப்
பார்த்தால் பல தலைவர்கள் தங்கள்
நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக
சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக்
கொண்ட அவலம் தெரிய வரும்
சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும்
அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற
தலைவர்களுக்கு மத்தியில் அத்திப்
பூத்தாற்போல்தான் ஒருசில பெரும்
தலைவர்கள் தோன்றுகின்றனர்.
பொதுநலத்தை உயிராகப் போற்றி
தங்கள் பணியை செவ்வெனச்
செய்கின்றனர். அரசியலில் லஞ்சம்,
ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை
மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு
மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே
ஆச்சரியமாக இருக்கிறது.
தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற
ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான
கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம்
தெரியாமல் அரசியல் நடத்தியவர்
மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி
வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை
கொண்டு வந்து அதற்கு முன்
உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே
துறந்தவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத்
திறக்கும்' என்று கூறி பட்டித்
தொட்டிகளெல்லாம்
பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப்
பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும்
என்பதால் புரட்சிக்கரமான மதிய
உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.
தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில்
வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள்
எதையும் தராதவர், சினிமாவில்தான்
இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க
முடியும் என்று சொல்லுமளவுக்கு
தமிழகத்தில் நம்ப முடியாத
நல்லாட்சியைத் தந்து இறவாப்
புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர்
கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில்
தொடர்ந்திருந்தால் நமது
மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு
உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத
உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம்
நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில்
குமாரசாமி நாடார் சிவகாமி
அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்
காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின்
காரணமாகவும், படிப்பு ஏறாத
காரணத்தினாலும் அவரால் ஆறு
ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின்
துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது
இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ
கொழுந்துவிட்டு எரிந்து
கொண்டிருந்தது. அவருக்கு 15
வயதான போது ஜாலியன் வாலாபாக்
படுகொலைப் பற்றிய செய்தி
அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம்
காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை
ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர்
காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக
சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள்
சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல்
கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின்
உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து
கொண்டார். அதனால் அவருக்கு
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த
முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5
முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே
கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த பொறுப்பை அடுத்த 14
ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு
நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2
ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின்
முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த
பொறுப்பை ஏற்றுக்
கொண்டதாக வரலாற்றுக்
குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில்
ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு
மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே
முதன்முறை. ஆனால் ஆங்கிலம்
தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற
கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை
ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு
தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு
வழங்கினார். அவரது கால கட்டத்தில்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்
நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற
பெருமையை பெற்றது தமிழ்நாடு
அப்படி அவர் என்ன செய்தார்?
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர்
அரவனைத்த கதையை நீங்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர்
முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம்,
எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன்
அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர்
தனது அமைச்சர்களுக்கு சொன்ன
அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை
எதிர்கொள்ளுங்கள் அவை
எவ்வளவு சிறியதாக இருந்தாலும்
பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான
வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது
செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி
அடைவார்கள்” என்பதுதான்.
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும்
தொழிற்துறையிலும் தமிழ்நாடு
துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம்
முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட
உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர்
செய்யப்பட்டு ஒவ்வொரு
கிராமத்துக்கும் ஒரு
தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு
பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி
இருப்பதை உறுதி செய்தார்.
எழுத்தறிவின்மையை போக்க வேண்டும்
என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை
இலவச கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின்
வயிறு காயாமல் இருக்க மதிய உணவு
வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம்
செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற
பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப்
பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை
வழங்கினார். அவ்ர் ஆட்சியில்
தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம்
கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி
நிலையங்களிலும் தமிழைப் போதன
மொழியாக்கியதோடு அறிவியல்
தொழில்நுட்பப் பாடப்
புத்தகங்களும் தமிழில் வெளிவரச்
செய்தார். அரசாங்க
அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு
இயந்திரங்கள் அறிமுகம்
செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும்
வழக்குகளை தமிழில் நடத்த
ஊக்குவிக்கப்பட்டது.
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல
வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு
அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம்
சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு
திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார்
காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி
சென்னை ஆவடி ராணுவ தளவாடத்
தொழிற்சாலை சென்னை
ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என
பல பெரியத் தொழிற்சாலைகள்
தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை
பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய
பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த
முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம்
தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை
வழங்கியதால்தான் தொடர்ந்து
மூன்றாவது முறையாக முதலமைச்சராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும்
செய்த அவர் அடுத்து செய்த
காரியம் அரசியலுக்கே ஒரு புதிய
இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ்
கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து
வருவதாக உணர்ந்த காமராஜர்
எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும்
தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா
செய்துவிட்டு நாட்டு நலனுக்காக
கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு
திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை
செய்தார்.
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை
ஏற்றுக்கொண்டது காங்கிரஸ்
பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர்
திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது
திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க
1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது
முதலமைச்சர் பதவியை ராஜினாமா
செய்தார் அந்த அதிசய தலைவர்.
அவரைத் தொடர்ந்து லால் பகதூர்
சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய்,
எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும்
பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய
காங்கிரஸ் கட்சியின் தலைமைப்
பொறுப்பை தந்தார் ஜவகர்லால்
நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத்
தொடர்ந்து இந்தியாவின் அடுத்த
பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன்
மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும்
மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது
நிரம்பியிருந்த நேருவின் மகள்
இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த
பிரதமராக்கினார் காமராஜர். அந்த
இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர்
மிக லாவகமாக செய்து முடித்ததால்
காமராஜரை ' கிங்மேக்கர்' என்று அழைத்தனர்
பத்திரிக்கையாளர்களும் மற்ற
அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில்
மெச்சதக்க பொற்கால
ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு
வரை சமூகத்தொண்டு
செய்வதிலேயே குறியாக இருந்தார்.
1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள்
தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய
“பாரத ரத்னா” விருது வழங்கி
கெளரவித்தது இந்திய அரசு. சமூகத்
தொண்டையே பெரிதாக
நினைத்ததால் தனக்கென்று ஒரு
குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை
காமராஜர். ஆம் அவர் திருமணமே
செய்து கொள்ளவில்லை மேலும்
சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து
வருந்திய அவர் தான் சிறைவாசம்
சென்ற போதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாக
ஆங்கில நூல்களை வாசிக்க
கற்றுக்கொண்டார். ஒரு
மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும்
அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை
வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான்
வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக
இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன்
தாய்க்குக்கூட எந்த சலுகையும்
வழங்கியதில்லை. அவர் தனக்கென
வைத்திருந்த சொத்துக்கள் என்ன
தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும்,
சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய
பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை
எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி
சந்திக்க முடியும். அதனால்தான் அவரை
கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும்
இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு.
அப்படிப்பட்ட ஒரு கன்னியமான
நேர்மையான இன்னொரு தலைவனை
தமிழக வரலாறு மட்டுமல்ல உலக
வரலாறும் இனி சந்திக்குமா என்பது
சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர்
நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக
கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின்
முதலமைச்சராகி இவ்வுளவும்
செய்திருக்கிறார் என்றால்
“துணிந்தவனால் எதையும் செய்ய
முடியும் என்றுதானே பொருள்”
நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு
அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும்
மக்களும் நலம்பெற வேண்டும் என்ற
வேட்கையும், சுயநலமின்றி சமூக
நலத்தொண்டு செய்ய
வேண்டுமென்ற நல் எண்ணமும்தான்
காரணம். அதே காரணங்கள் நமக்கும்
வானத்தை வசப்படுத்த
உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும்
விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும்
நாம் விரும்பும் வானம் வசப்படாமலா
போகும்!
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும்
சாதனையாளனே”
......................
எத்தனை பேருக்கு தெரியும் இந்த
உண்மை....
யார் சிறந்த மனிதர்? ஏது 100 ஆண்டு பேசும்
சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில
மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர்
முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த
ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000
பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு
வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி
உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத்
திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப்
பற்றாக்குறை, அரசாங்க கஜானா
காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக்
கார மாநிலமாக முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த
காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை
இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது
மாநிலமாகக் கொண்டுவந்து
நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி
எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம்
தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன
தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர்
தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட்
தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம்
தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு
நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ்
உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது
3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித்
தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித்
தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை,
மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி,
தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
தோழர்களே...! காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும்
சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள்
ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச்
சாதனைகளில்... இந்தியாவிலெயே
தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு
வந்த காமராஜர் செய்தது
சாதனை.

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் 02.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி
( Mohandas Karamchand Gandhi , குசராத்தி :
મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 -
ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி
என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை
வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியதன் காரணமாக இவர்
" விடுதலை பெற்ற இந்தியாவின்
தந்தை " [1] என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது
அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு
விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில
நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில்
காந்தி ஜெயந்தி என்று
கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை
இளமை
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869
அன்று இந்திய நாட்டின் குஜராத்
மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில்
பிறந்தார். இவரது தாய் மொழி
குஜராத்தி . தந்தையார் பெயர்
கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய்.
காந்தி தனது 13ஆம் வயதில் தம்
வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.
பின்னாளில் இருவரும் நான்கு ஆண்
மகன்களைப் பெற்றெடுத்தனர்:
ஹரிலால் (1888), மணிலால் (1892),
ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).
தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை
இழந்தார்.
இளமை வயதில் காந்தியடிகள்,
வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான
மாணவனாகவே காணப்பட்டார்
காந்தி. தனது 18ஆம் வயதில்
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர்
(barrister) எனப்படும் வழக்குரைஞர்
படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து
சென்றார். தன் படிப்பை
வெற்றிகரமாக முடித்து தாயகம்
திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம்
வழக்குரைஞராக பணியாற்றினார். இது
வெற்றிகரமாக அமையாததால் தன்
அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு
சென்ற காந்தி, அங்கேயுள்ள
நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின்
படிவங்களை நிரப்பும் எளிய பணியில்
ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த
ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய
தகராறால் இவ்வேலையும் பறிபோனது.
இச்சமயத்தில்
தென்னாப்பிரிக்காவில் தன்
தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக
அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம்
அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய
நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே
அங்கு பயணமானார்.
தென்னாப்பிரிக்காவில்
இச்சமயம் தென்னாப்பிரிக்காவில்
ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும்
இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது.
இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது
தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே
கவனித்து வந்த இளைஞராயிருந்தார்
காந்தி. தென்னாப்பிரிக்காவில்
அவருக்கேற்பட்ட அனுபவங்கள்,
பின்னாளில் அவரை ஒரு மாபெரும்
அரசியல் சக்தியாக உருவாக்க
உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal)
மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில்
உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய
வழக்கப்படி தலைப்பாகை அணிந்து
வழக்காடச்சென்ற காந்தியிடம்
அத்தலைப்பாகையை விலக்குமாறு
நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார்.
காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும்
பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே
வெளியேறினார். பிறகொரு
நாள் பிரிட்டோரியா (Pretoria)
செல்வதற்காக தகுந்த
பயணச்சீட்டுடன் தொடருந்தில்
முதல் வகுப்புப் பெட்டியில் பயனம்
செய்த காந்தி, அவர் ஒரு
வெள்ளையர் இல்லை என்ற
காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி
ஒருவரால் (Pietermaritzburg)
தொடருந்து நிலையத்தில்
பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
வெள்ளையர் அல்லாத ஒரே
காரணத்தால் இது போன்று பல
இன்னல்களை காந்தி அனுபவித்தார்.
இதன் மூலம்
தென்னாப்பிரிக்காவின் கறுப்பின
மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும்
படும் இன்னல்களை காந்தி
நன்குணர்ந்தார்.
தென்னாப்பிரிக்காவில்
காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து
இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது,
அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப்
பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை
இயற்ற இருப்பதாக செய்தித்தாளில்
படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி
அவரது இந்திய நண்பர்களிடம்
அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம்
இதற்குத் தேவையான சட்ட அறிவு
இல்லையெனக் கூறி, காந்தியின்
உதவியை நாடினர். காந்தியும் அவர்கள்
வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம்
திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு
இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி
பெறாவிட்டாலும் அங்குள்ள
இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு
நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற
பெயரில் கட்சி தொடங்கி
அதற்கு அவரே
பொறுப்பாளரானார். இதன்
மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த
இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி,
அவர்களை தங்கள் உரிமைக்காக
குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில்
நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக
சத்தியாகிரகம் எனப்படும்
அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார்.
அகிம்சை , ஒத்துழையாமை,
கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல்
ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப்
போராட்டத்தின் பண்புகளாகும். இந்த
காலகட்டத்தில் காந்தியும் அவருடன்
சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை
சென்றனர். தொடக்கத்தில்
ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக
அடக்கியது போல் தோன்றியது. பின்னர்
பொதுமக்களும் ஆங்கில
அரசாங்கமும் இவர்களின் உண்மையான
மற்றும் நேர்மையான வாதங்களை
புரிந்துகொண்டு இவர்களுடைய
கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின்
மூலம் தென்னாப்பிரிக்க வாழ்
இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும்
முயற்சியில் வெற்றி கண்ட காந்தி
தாயகம் திரும்பினார்.
மும்பை துறைமுகத்தில்
1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை
துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில்
அடியோடு உருமாறியிருந்தார். தழையத்
தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி,
தொள தொள ஜிப்பா,
அங்கவஸ்திரம், தலையில் பெரிய
முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி
விவசாயி உடையில் காட்சியளித்தார்.
அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய
காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே
வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க,
மிதவாத அரசியல் தலைவர்
கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு
செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த
மோட்டார் காரில் காந்தியையும் அவரது
மனைவியையும் அமரச் செய்து
ஊர்வலமாக இட்டுச் சென்றார்.
(தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து
வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
கொண்டாடப்படுகின்றது) [2]
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம்
நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய்
பெட்டார் சாலையில் மவுண்ட்
பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு
வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி
தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி
இந்திய மக்கள் அறிந்திருந்தனர்.
காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே ,
ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு
ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய
காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து
ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப்
போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
இயக்கத்தின் தலைவராக காந்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல
மாற்றங்களை அறிமுகப்படுத்தி
இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற
கொள்கைகளையும் வலியுறுத்தி
காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின்
மாபெரும் விடுதலை
இயக்கமாக்கினார்.
உப்பு சத்தியாகிரக தண்டி
யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு,
இந்தியாவில் இந்தியர்களால்
தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது.
மேலும், இந்தியாவில் இந்தியரால்
தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ்
அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்
கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை
விலக்கிக் கொள்ளுமாறு காந்தி
பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில்
இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி
மார்ச் 2, 1930 அன்று 78
சத்தியாகிரகிகளுடன்
அகமதாபாத்திலிருந்து குஜராத்
கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல்
நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள்
நடைப் பயணத்திற்குப் பிறகு, தன்
சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த
காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி
உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு
எதிராக பகிரங்கமாக
பொதுமக்களுக்கு விநியோகித்தார்.
மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த
அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு
தயாரித்து பயன்படுத்தச்
சொன்னார். இந்தியாவின் பல
இடங்களில் இது போல் நடந்தது; காந்தி
உட்பட பல்லாயிரக் கணக்கான
இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-
முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)
காந்தியடிகளுடன் முகமது அலி
ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ்
அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை
நடத்தி இறுதியில் வரியை நீக்கிக்
கொண்டது. உப்பு சத்தியாகிரகம்
என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய
விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு
திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல்
நடைபெற்ற வெள்ளையனே
வெளியேறு போராட்டத்திலும் காந்தி
பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில்
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள்
இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது.
ஆனால் காந்தியோ, சுதந்திர
கொண்டாட்டங்களில் கலந்து
கொள்ளாமல், இந்தியா-
பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம்
வருந்தி துக்கம் அனுசரித்தார்.
உண்ணாநிலைப்
போராட்டங்கள்
முதன்மைக் கட்டுரை: காந்திஜியின்
உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்
காந்திஜி இந்திய விடுதலைக்கும் , சமூக நீதியை
வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும்,
தீண்டாமைக்கு எதிராகவும், முழு
மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள்
உண்ணாநிலைப் போராட்டங்கள்
மேற்கொண்அவற்றி அவற்றில்
மூன்று முறை 21 நாட்கள் கொண்ட
தொடர் உண்ணாநிலைப்
போராட்டங்களை நடத்தினார்.
மகாத்மா
காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம்
அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்
மறைவு
பிர்லா மாளிகை (காந்தி சமிதி)
மகாத்மா காந்தியின் அஸ்தி
அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு
காட்சி ஜவகர்லால் நேரு,
மகாத்மா காந்தியின்
புதல்வர்கள் ராம்தாஸ்
(கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ்
ஆகியோருடன்
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ,
ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி)
தன் வாழ்நாளில் இறுதியாக 144
நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா
மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில்
நாதுராம் கோட்ஸே ஆல்
சுட்டுக்கொலை
செய்யப்பட்டார்.
நினைவு நாள்
ஜனவரி 30 இந்தியாவில் தியாகிகள்
தினமாக நடத்தப்படுகிறது.
கொள்கைகள்
பகவத் கீதை, ஜைன சமய
கொள்கைகள்,
லியோ டால்ஸ்டாயின்
எழுத்துக்கள்
போன்றவற்றால்
ஈர்க்கப்பட்ட காந்தி,
சத்தியம், அகிம்சை
ஆகிய
கொள்கைகளை
தன் வாழ்நாள்
முழுவதும் விடாமல்
கடைபிடித்தார். அசைவ
உணவுகளை தவிர்க்கும்
வைணவ குடும்பத்தில்
பிறந்த காந்தி, சிறு வயதில் புலால்
உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ
உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை,
ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு
வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை
விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது
என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக
அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம்
ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும்
கடைபிடித்தார். இவர் தனது காமத்தை
வெல்லும் பொருட்டு பல்வேறு
சோதனைகளைச் செய்து வந்தார். அவை
பெரும் விமரிசனத்திற்கு
உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது
மனைவியின் அனுமதியுடன் தான்
செய்தார். இவை இன்றளவும்
சரியாகப் புரிந்து
கொள்ளப்படாமல்
விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு
ஒருநாள் மௌன விரதம்
மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து
இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை
அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே
அணியத் தொடங்கினார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி
உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும்
என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு
செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்
என போராட்டங்கள் எழுந்த
பொழுது, அனைவரும் இந்து மதத்தின்
அறத்தைப் பேண வேண்டும் என காந்தி
சொன்னார் என அம்பேத்கர் எழுதி
உள்ளார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப்
பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த
வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி
விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத
அறத்தின்படி சரி என காந்தி
வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி
நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress
party) வெளியேற முடிவெடுக்க
தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில்
ஈ. வெ. இராமசாமி
நாயக்கருக்கும் , காந்திக்கும் பேச்சு
வார்த்தைகள் நடைபெற்றது. இக்
கலந்தாய்விலும், காந்தி இந்து மத
அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ.
வெ. இராமசாமி நாயக்கர்
பேராய கட்சியிலிருந்து வெளியேற
முடிவெடுத்தார்  .
சுயசரிதை
காந்தி குஜராத்தி மொழியில்
எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற
பெயரில் தமிழ் மொழியிலும்
An Autobiography: The Story of My Experiments
with Truth என்ற பெயரில்
ஆங்கிலத்திலும்
மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன.
தமிழ்நாடு நினைவுச்
சின்னங்கள்
மகாத்மா காந்தி நினைவு
மண்டபம் கன்னியாகுமரி
மகாத்மா காந்தி
அருங்காட்சியகம்- மதுரை
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது
தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில்
சென்னை கிண்டியில் காந்தி மண்டபம்
மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
மதுரையில் இராணி மங்கம்மாள்
காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்
1959 முதல் காந்தி அருங்காட்சியகம்
செயல்பட்டு வருகிறது.  இங்கு
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான புகைப்படக்
கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும்
சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில்
நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு
அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு
சிலை ஒன்று வளாகத்திலும்,
மற்றொன்று
அருங்காட்சியகத்திலும்
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள்
அமரக்கூடிய அளவில் அரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல்
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
தொடர்பான புகைப்படங்கள்
மற்றும் பொருட்கள்
கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள
அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.
மகாத்மா காந்தி
பயன்படுத்திய
பொருள்கள்
ஏலம்
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி
பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி
உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில்
விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000
பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி),
அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும்
(சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது.
இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும்
எந்த தடையும் இந்திய அரசு
ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம்
செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப்
பொருட்களுக்கு ஏற்பட்டது. [12]
விமர்சனங்கள்
பகத்சிங்கின் தூக்குதண்டனை
பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது
வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை
அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி
கையொப்பம் இட்டார். [13] தி
லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி
திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான
ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்)
கையெழுத்திட்டதற்காக காந்தியை
மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும்
காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை
பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும்
தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்?
என்பது போல கருத்துகள் மக்களால்
பேசப்பட்டன.
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதம்
தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின்
பல்லக்குப் பணியாளன் (The South African
Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற
நூலும் தெய்வீக முகமூடிக்குப்
பின்னால் உள்ள காந்தி (Gandhi Behind
the Mask of Divinity) என்ற நூலும் பிற பல
கட்டுரைகளும் காந்தியை அவரது தென்
ஆப்பிரிக்க எழுத்துக்களையும்
செயற்பாடுகளையும் முன்வைத்தும்
கறுப்பின மக்களுக்கு எதிரான
இனவாதியாகவும், வெள்ளை
அரசுக்கு சார்பான ஆரிய
பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன,
விமர்சிக்கின்றன. [14] எ.கா நற்றல் (Natal)
நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு
காந்திய எழுதிய ஒரு கடிதத்தில்
பின்வருமாறு கூறுகிறார்: [15]
“ I venture to point out that
both the English and the
Indians spring from a
common stock, called the
Indo-Aryan. … A general
belief seems to prevail in the
Colony that the Indians are
little better, if at all, than
savages or the Natives of
Africa. Even the children are
taught to believe in that
manner, with the result that
the Indian is being dragged
down to the position of a
raw Kaffir.” ”
“ இந்தியர்களும்
ஆங்கிலேயர்களும் இந்தோ-
ஆரியர்கள் என்ற ஒரே
பொதுவான
மூலத்தில் இருந்து
வந்தவர்கள்.
...கொலனிகளில்
இந்தியர்கள் ஆப்பிரிக்க
காட்டுமிராண்டிகளை விட
மேம்பட்டவர்களாக
கருதப்படவில்லை.
குழந்தைகளும் இதனை நம்ப
கற்பிக்கப்படுகிறார்கள்.
இதனால் இந்தியர்கள்
பச்சைக் காப்புலிகளின்
நிலைக்கு கீழே
இழுக்கப்படுகிறார்கள். ”

உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .


உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .

உலக சைவ உணவு நாள் ( World Vegetarian Day ) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது, 1977 இல்
வட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு-நாள் கொண்டாட்டமாகும்.  மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


உலக சைவ உணவு நாள்
World Vegetarian Day
அதிகாரப்பூர்வ பெயர்
உலக சைவ உணவு நாள்
கடைபிடிப்போர் உலகெங்கணும் உள்ள சைவ உணவாளர்கள்
கொண்டாட்டங்கள் சைவ (தாவர) உணவின் சிறப்புகளையும் பயன்களையும் வலியுறுத்தும் நோக்கில் உள்ளூர், பிராந்திய, மற்றும் தேசியக் குழுக்கள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன.
நாள் அக்டோபர் 1
காலம் 1 நாள்
நிகழ்வு ஆண்டுதோறும்
தொடர்புடையன சைவ உணவு விழிப்புணர்வு மாதம், World Farm Animals Day, பன்னாட்டு சைவ உணவு வாரம், உலக தாவர உணவு நாள்


உலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .

சைவ உணவு சாப்பிடுறவங்களா? அப்ப "உலக சைவ உணவாளர் தினம்" கொண்டாடுங்க...

அசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் "உலக சைவ உணவாளர் தினம்" ( World Vegetarian Day) ஆக உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. 


இந்த உலகில் அசைவ உணவை உண்ணாமல் சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும் என்று ஒருசிலர் இருக்கின்றனர். உண்மையில் அசைவ உணவை உண்டால் தான் வாழ முடியும் என்பதில்லை. சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.


சொல்லப்போனால் இந்த நாள் கொண்டாடுவதின் ஒரு நோக்கம், அனைத்து உயிர்கள் மீதும் அன்பை தெரிவிக்க வேண்டும் என்பதனால் தான். இதாவது எந்த உயிரையும் கொன்று சாப்பிடக்கூடாது என்பது தான். மேலும் ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. இருப்பினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் சார்ந்து வாழ்கின்றோம்.


மேலும் அசைவ உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும், கீரை, முளைக்கட்டிய பயிர்கள், தானியங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அசைவ உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் காய்கறிகள், தானியங்கள் போன்றவை அன்றாடம் நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடியவையே. மேலும் அவை விலைமலிவானது.



உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் அசைவ உணவுகளை சாப்பிடுகிறோமா என்ன? வாரத்திற்கு ஒரு முறை தானே சாப்பிடுகின்றோம். அவ்வாறு ஒரு முறை மட்டும் சாப்பிட்டதால் தான் நாம் இவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோமா என்ன? சைவ உணவுகளைத் தானே பெரும்பாலும் சாப்பிடுகின்றோம். சொல்லப்போனால், அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனாலேயே சில சமயங்களில் நிறைய உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் அதுவே சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும்.


ஆகவே அவற்றை கொன்று சாப்பிடுவதை விட, நாம் உற்பத்தி செய்யும் உணவுகளான, காய்கறி, பழங்கள், பயிர்கள், கீரைகள் மற்றும் மற்றவைகளை சாப்பிட்டாலே, நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம். மேலும் அசைவ உணவுகளில் தான் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று நினைப்பவர்கள், அந்த தவறான கருத்தை நீக்கி, சைவ உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நம்பி, அந்த உணவுகளையும் விரும்பி சாப்பிடுங்கள்.

உலக முதியோர் தினம் அக்டோபர் 1 .


உலக முதியோர் தினம் அக்டோபர் 1 .
(International Day of Older Persons )  

சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons ) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 1, 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும்
நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு , ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
முதியோர் நலன்
பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உலக அளவில்

1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதியோர்களுக்கும்
உணவு , உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.
அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

இந்திய அளவில்

பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.

இந்த சட்டம் வழங்குவது :

தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.
கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.
மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.
தமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.
65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.

வியாழன், 27 செப்டம்பர், 2018

உலக வெறிநாய்க்கடி நோய் நாள் செப்டம்பர் 28.


உலக வெறிநாய்க்கடி நோய் நாள்
செப்டம்பர் 28.

வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபீஸ் நோய் (Rabies ) என்பது மனிதர் ,
விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய்க்காரணிகளுள் ஒன்றான ரேபீஸ் தீநுண்மத்தால் (rabies virus),
இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளில் ஏற்படும் மூளையழற்சி
நோய் ஆகும்.  பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு
தொற்றுநோய் ஆகும்.
நோய் பரவல்
காடுகளில் வாழும் சிலவகை வௌவால்,
நரி , ஓநாய் , மற்றும் வீட்டு விலங்கான
நாய்போன்ற ஒரு சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் இந்த வைரசு, அவ்விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ, அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ இந் நோய் ஏற்படுகிறது. கொல்லைப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கான நாயிலிருந்தே இந்நோய் பொதுவாக மனிதர்களுக்குப் பரவுகின்றது.
இந்த வைரசு அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை 'உறக்கத்தில்' இருந்துவிட்டுக் கூடத் தாக்கலாம்.

நோயின் தன்மை
மூளையழற்சி ஏற்படுத்தி, மைய நரம்பு மண்டலத்தைக் கடுமையாகப் பாதித்து, பின்னர் மூளையையும் பாதித்து இறுதியில் மரணத்தை விளைவிக்கும் இந்த தீநுண்மம், உமிழ்நீரில் அதிகமாக வாழ்ந்து கொண்டு, இந்நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கடிக்கும்போதோ ,ஏற்கனவே உள்ள ஆறாத காயத்தில் உமிழ்நீர் படுவதாலோ மிக எளிதாக மனிதரின் இரத்தத்தில் கலந்துவிடுகிறது.
நோய் தடுப்பு
இந்த வைரசால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விலங்கு கடித்துவிட்டால் உடனடியாக நோய்த் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். முதலிலேயே சரியான தடுப்பு மருந்து (anti-rabies vaccine-ARV) பயன்படுத்துவதன் வாயிலாக வீட்டு விலங்குகளை இந்நோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


ரேபீஸ் வெறிநாய்க்கடி நோய்

ஆலன் ஜோயஷ் சாமுவேல்... வயது 24... சென்னை கிறித்துவக் கல்லூரி முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர். 5 மாதங்களுக்கு முன் வகுப்புத் தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குட்டி நாயொன்று இருவரையும் கடித்துவிட்டது. லேசான காயம்தான். ஆனாலும், இருவரும் கல்லூரி மருத்துவமனையில் காயத்துக்கு முதலுதவி பெற்றுக் கொண்டனர்.
அதன் பிறகு சாமுவேலின் தோழி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போட்டுக் கொண்டார். சாமுவேலோ ‘சிறிய காயம்தானே... அதுவும் குட்டி நாய் கடித்தது. என்ன செய்யப்போகிறது...’ என்று அலட்சியமாக இருந்துவிட்டார். ரேபீஸ் தடுப்பூசியை இவர் போட்டுக் கொள்ளவில்லை. அதன் விளைவு, சாமுவேலுக்கு ‘ரேபீஸ்’ நோய் வந்து, சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
நாய்க்கடியைப் பொறுத்த வரை, அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒன்றே போதும். ‘ரேபீஸ்’ நோய் குறித்து மக்கள் மத்தியில் இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. உலகில் ‘குணப்படுத்தவே முடியாது...
நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் ‘ரேபீஸ்’தான். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர்.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அதேவேளையில், இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மை.எது ரேபீஸ்?
ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கி றார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டி கள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலூட்டி மனிதரைக் கடித்தாலும் ரேபீஸ் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது.
அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். நோய் வரும் வழி? ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து கொள்ளும்.
அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, ரேபீஸ் நோயை உண்டாக்கும். இதுதவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால், பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம்.
முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அறிகுறிகள்? பொதுவாக, வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுவது. இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. ரேபீஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள்.
காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள்.
இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர். இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்து வதும் கடிக்க வருவதுமாக இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள்.
முதலுதவி?
காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்புத் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும். வேகமாக விழுகின்ற குழாய் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. காயத்தின் மீது ஏதாவது ஒரு ஆன்டிசெப்டிக் மருந்தைத் தடவலாம் (எடு: பொவிடன் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான்). மாறாக, காயத்தின் மீது சுண்ணாம்பு தடவுவது, எருக்கம்பால் விடுவது, காபித்தூள் அல்லது சாணம் வைப்பது, மண்ணைத் தூவுவது, சுடுகாட்டில் மந்திரிப்பது போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
முடிந்த வரை காயத்துக்குக் கட்டுப் போடுவதையும் தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் ரேபீஸ் தடுப்புப் புரதம் (Rabies immunoglobulin) ஊசியைப் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரேபீஸ் தடுப்பூசியைப் போடுவது மிகமிக முக்கியம்.
உயிர் காக்கும் தடுப்பூசி!
நடைமுறையில், வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது அந்தக் காலம். இப்போது நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் வர விடாமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை. புஜத்திலேயே போட்டுக் கொள்ளலாம். நாய் கடித்த அன்றே இச்சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
நாய் கடித்த நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என 5 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6வது ஊசியை 90வது நாளில் போட்டுக் கொள்ளலாம். இதற்கு அதிக செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இத்தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
வீட்டு நாய் கடித்துவிட்டால்?
வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட வேண்டும். அதே நேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7) நிறுத்திக் கொள்ளலாம். நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல்கள் தெரிந்தால், மீதமுள்ள தடுப்பூசிகளையும் (14, 28) போட்டுக்கொள்ள வேண்டும்.
வெறிநாயின் அடையாளம்?
ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும்.
தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும். எந்நேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும். எதுவும் சாப்பிடாமல் இருந்து 10 நாளில் இறந்து போகும்.
எச்சரிக்கை தேவை!
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். யார் இவர்கள்? இந்தியக் குழந்தைகள்தான் இந்தப் பட்டியலில் முதலில் இடம் பெறுகிறார்கள்.
காரணம், இந்தியக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர் துணையின்றித் தெருக்களில் விளையாடுவார்கள். நாய் பிராண்டுதல், நாவினால் தீண்டுதல் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளை இவர்கள் அறியமாட்டார்கள். ஆகவே, நாய் பிராண்டி யது என்றோ, நாய் தீண்டியது என்றோ பெற்றோரிடம் சொல்லமாட்டார்கள். இவர்களுக்கு ரேபீஸ் வந்த பிறகுதான் நடந்தது தெரியவரும்.
தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அவ்வாறான ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், பணிபுரிந்துவிட்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்புவோர், கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், அஞ்சல் பணியாளர்கள், காவல்துறையினர்,
ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியாளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆரம்பச் சுகாதாரப் பணியாளர்கள், இறந்த விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், விலங்குகளை வேட்டையாடுவோர், மிருகக்காட்சிசாலையில் பணிபுரிவோர் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி
மேலே கூறப்பட்டவர்கள் ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, 2வது ஊசியை 7வது நாளிலும், 3வது ஊசியை 28வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose ) இத்தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நாய் கடித்துவிட்டால் இப்படிச் செய்ய வேண்டும்: நாய்க்கடி காயத்தை ஏற்கனவே சொன்னதுபோல் நன்றாகச் சுத்தப்படுத்தி விட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், 3வது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டு நாய்க்கும் தடுப்பூசி!
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதற்கு ரேபீஸ் தடுப்பூசியை கண்டிப்பாகப் போட வேண்டும். நாய்க்குட்டிக்கு 3 மாதம் முடிந்ததும் ஒன்றும், 4 மாதம் முடிந்ததும் ஒன்றும் மொத்தம் 2 தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும்.
தெரு நாய்களுடன் வீட்டு நாய்களைச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்வாக இருந்தாலோ, சாப்பிடாமல் இருந்தாலோ, எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தாலோ கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் அந்த நாய் இறந்துவிட்டால், ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய்க்கடிக்கு நவீன சிகிச்சை!
ரேபீஸ் நோயாளியை சில மருந்துகள் மூலம் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு சென்று, அமான்டடின் எனும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை ஒரு வாரத்துக்குக் கொடுத்து வந்தால், ரேபீஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை உடல் பெற்றுவிடுகிறது. இதன் பலனால், நோய் குணமாகிவிடுகிறது. இது எல்லோருக்கும் பலன் தரும் எனக் கூற முடியாது.
உடலுக்குள் புகுந்த ரேபீஸ் கிருமிகள் வீரியம் குறைந்ததாக இருந்தால் அல்லது இவை மூளையைத் தாக்குவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால் ரேபீஸ் நோயாளி உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இதுவரை உலகில் 7 ரேபீஸ் நோயாளிகள் இப்படி உயிர் பிழைத்து வரலாறு படைத்துள்ளனர். உயிர் காக்கும் இந்தச் சிகிச்சைக்கு மில்வாக்கீ புரோட்டக்கால் (Milwaukee protocol) என்று பெயர். தமிழகத்தில் வேலூரிலுள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ரேபீஸ் நோய் உள்ளவர்கள்
தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படுவதால், ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்கமாட்டார்கள்.
வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவதில்லை. அது அந்தக் காலம். இப்போது நவீன தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில் ரேபீஸ் நோயை 100 சதவிகிதம் தடுத்துவிடலாம்.
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். யார் இவர்கள்? இந்தியக் குழந்தைகள்தான் இந்தப் பட்டியலில் முதலில் இடம் பெறுகிறார்கள். நன்றி விக்கீப்பீடியா. குங்குமம்.


புதன், 26 செப்டம்பர், 2018

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் செப்டம்பர் 27.




இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்
பகத் சிங்  பிறந்த தினம்  செப்டம்பர் 27.

பகத் சிங் ( Bhagat Singh , செப்டம்பர் 27/28, 1907 –மார்ச் 23, 1931  ) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் ( சாஹீது என்பது
மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது
மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு .

பஞ்சாப் மாநிலத்தில், பகத் சிங் ,
சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தபார் ஆகியோர்களின் சிலைகள்
இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து
பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்[5] . பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது .

தொடக்க வாழ்க்கை காலங்கள்
பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.  இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட
சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.  அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி
தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப்
பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.
தன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங்
ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார்.
பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.

1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார். மார்ச் 1926இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார். ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

பகத்சிங் அம்ரிட்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார்.  மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார்.  செப்டம்பர் 1928இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் அவர் உருவெடுத்தார்.

பிந்தைய புரட்சி நடவடிக்கைகள்

லாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்
இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு,
சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.  பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.

மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,
தப்பிச் செல்லுதல்
சான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார்.
பகத்சிங்கின் தூக்குத்தண்டனை
பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். [24] தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற
இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.

உலக சுற்றுலா நாள் செப்டம்பர் 27 ( World Tourism Day )


உலக சுற்றுலா நாள் செப்டம்பர் 27 ( World Tourism Day )

உலக சுற்றுலா நாள் ( World Tourism Day )
உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில்
செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல்
ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் , 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல்
பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா ,
2007இல் தெற்காசியா ; 2008இல்
அமெரிக்கா , 2009இல் ஆபிரிக்கா .
2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women ).

உலக சுற்றுலா தினம்
🌹 உலக சுற்றுலா நிறுவனத்தின் (றுவுழு) ஆதரவில் 1980ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 27ஆம் தேதி உலகெங்கும் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

🌹 சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும்இ சுற்றுலா எப்படி மக்களின் சமூகஇ கலாச்சாரஇ அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.







தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.


தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.

சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ்
நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில்
இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.

இளமைக் காலம்
சொந்த ஊர் காயாமொழி ( திருச்செந்தூர் தாலுகா - தூத்துக்குடி மாவட்டம் )
ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார்.
இலண்டனில் இருந்தபடியே
சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா,
தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின்
சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை
தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்,
தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச்
சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி , சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே
தினத்தூது , தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ்
ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி
சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து,
இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.
மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.


தமிழ் இதழியல் முன்னோடி
தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவருமான சி.பா.ஆதித்தனார் (Si.Ba.Adithanar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்ற கிராமத்தில் பிறந்தார் (1905). தந்தை, வழக்கறிஞர். சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் என்பது இவரது முழுப்பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பும் பயின்றார்.
*கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி?, தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
*‘சுதேசமித்ரன்’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் லண்டனிலிருந்து வெளிவந்த ‘ஸ்பெக்டேட்டர்’ வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா திரும்பியவுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் சென்று பணியாற்றினார்.
*1942-ல் தமிழகம் திரும்பினார். முதன்முதலில் ‘மதுரை முரசு’ என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் ‘தமிழன்’ என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.
*1942, நவம்பர் மாதம், மதுரையில் ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மாலை மலர்’ என்ற மாலைப் பத்திரிகையையும் ‘ராணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். 1947-ல் ‘தினத்தாள்’, ‘தினத்தூது’ ஆகிய பத்திரிகைகளையும் தொடங்கினார்.
*எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டார். ‘ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்’ என்ற சீனப் பழமொழிக்கேற்ப தனது நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டார்.
*அனைத்துவிதமான செய்திகளையும் வெளியிட்டு அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவினார். மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தின் கீழ் ‘ராணி முத்து’ என்ற இதழை ஆரம்பித்தார்.
*காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்ச்சி, அதைக் காகிதமாக மாற்ற கடுமையாக உழைத்தார். மாணவர்களுக்கு என ‘வெற்றி நிச்சயம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி கல்வியை வளர்த்தார்.
*தமிழரசுக் கட்சி, நாம் தமிழர் இயக்கங்களைத் தொடங்கி தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். 1942 முதல் 1953 வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1967-ல் சபாநாயகராகவும், 1969-ல் தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.
*‘இதழாளர் கையேடு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் இதழாளர்களுக்கு இன்றும் பயன்படும் நூலாக விளங்குகிறது. ‘தமிழ்ப் பேரரசு’ என்ற நூலும் எழுதியுள்ளார். இவரது பெயரில் இரண்டு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார், 1981-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

உலக மருந்தாளுனர் தினம் செப்டம்பர் 25 .


 உலக மருந்தாளுனர் தினம்  செப்டம்பர் 25 .

செப்டம்பர் 25 உலக மருந்தாளுனர் தினம்.... இன்று ஒரு மருந்தாளுனனாக பெருமைப்படுகிறேன்... !! தளத்தில் யாரேனும் என் துறையை சார்ந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.. ஒரு மருந்தாளுனனாக பெருமைப்படுவோம். உலக மக்களின் நலம் காப்போம்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மகள்கள் தினம்


மகள்கள் தினம் என்றால் என்ன? எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா!
#Happy Daughters Day

மகள்கள் தினம் என்றால் என்ன?

இதன் பெயரிலேயே தெளிவாகப் பதில் இருக்கிறது. மகள்களைக் கொண்டாடும் அற்புதமான நாள். பல்வேறு நாடுகள் வெவ்வேறு நாட்களில் மகள்கள் தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 23ல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்?

குழந்தைகள் என்றுமே கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது யாராக இருந்தாலும் சரி. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இருப்பினும் குறிப்பிட்ட நாளில் மகள்களைக் கொண்டாடுவது, அவர்களை மேலும் பெருமைப்படுத்தும் தருணம் என்றே கூறலாம். முன்னதாக பெற்றோர்களைக் கொண்டாட தாய் தினம், தந்தையர் தினம் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மகள்கள் தினத்தின் வரலாறு:

குழந்தைகளைக் கொண்டாடுவதற்கு காரணம் எதுவும் வேண்டுமா என்ன? இருப்பினும் பல்வேறு நாடுகளில் பெண் குழந்தைகள் ஒரு சுமையாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆண் குழந்தைகளுக்கு சமமான மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ஆண் - பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன. இதனைத் தேசிய அளவிலான நிகழ்வாக அறிவித்து கொண்டாடுகின்றனர். அரசு மற்றும் சட்டத்தின் முன்னிலையில் அனைத்து குடிமக்களும் சமம். இந்த மனப்பான்மை பொதுமக்களிடையே ஊக்குவிக்கப்பட வேண்டும்.
Daughter Day Quotes: மகள்களின் அன்பைப் போற்றும் ‘மகள்கள் தின’ வாழ்த்துச் செய்திகள்!!


மகள்கள் தினத்தின் சிறப்புகள்:
இந்த நிகழ்வின் வெற்றியானது, காலம் எவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. மகள்களைக் கொண்டுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒட்டுமொத்த குடும்பமும் தங்கள் மகள்களுக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் அளித்து பெருமைப்படுத்துகின்றனர். இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அனைவரும் விடுமுறை நாளில் இருப்பர். இதனால் கொண்டாட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்து விடுகின்றது.
மகள்கள் தினக் கொண்டாட்டம்:
குடும்பத்தினர் மகள்கள் தினத்தைக் கொண்டாட ஏராளமான வழிகள் இருக்கின்றன. வாழ்த்து அட்டைகள், அன்புக் கடிதங்கள், குறுந்தகவல்கள், ஆச்சரியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். இதன் பிறகான கொண்டாட்டம் என்பது குடும்பத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. சிலர் பிரம்மாண்ட விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். மகள்களுடன் வெளியில் சென்று, விருந்திற்கு ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றனர். இருப்பினும் கொண்டாட்ட முறையை மகள்களே தீர்மானிப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


ஒரு தந்தைக்கு இன்னொரு தாயாக இருக்கும் மகள்களைக் கொண்டாடும் ‘மகள்கள் தினம்’ செப்டம்பர் 23 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை வாரிசு என்பார்கள், அதே ஒரு பெண் குழந்தைப் பிறந்தால் மகாலட்சுமி என்பார்கள். ஒரு வீட்டை அன்பானதாகவும் அழகானதாகவும் மாற்றுபவர்கள் பெண் குழந்தைகள்.
எப்போதும் ஒரு மகனை விட மகளையே வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்ப்பார்கள். அதிலும், வீட்டில் மற்றவர்களை விட மகளை அதிகம் நேசிப்பவர் தந்தையே. ஏனென்றால், ஒரு தந்தை தனது மகளின் வழியே தன் தாயைப் பார்ப்பதால்தான், அந்த அளவு பாசம்.
வாட்ஸ்ஆப்பில் சமயம் தமிழ் Subscribe
திருமணத்திற்குப் பின், தன் பிறந்த வீட்டை விட்டு, புதிதாக ஒரு வீட்டிற்குச் சென்று, அதை தன் வீடாக மாற்றும் ஒரு மனப்பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் இடையே தன் அன்பால் பாலத்தை ஏற்படுத்துபவர் பெண்கள்.
அத்தகைய மகள்களின் அன்பை போற்ற வார்த்தைகள் பத்தாது. இன்று அத்தகைய மகள்களின் தினத்தை கொண்டாடுவோம்.


பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்....
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது...
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்..
நன்றி சமயம்.