சனி, 13 ஏப்ரல், 2019

தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14.



தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு

ஒரு புத்தாண்டுக் கோலம்
கடைபிடிப்போர்
தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ் தமிழர்
வகை
பண்டிகை,
முக்கியத்துவம்
தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாட்டங்கள்
பகிர்ந்து உண்ணுதல், பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
நாள்
தமிழ் நாட்காட்டியில் சித்திரை முதல் நாள்
2018 இல் நாள்
ஏப்ரல் 14
தொடர்புடையன
வைசாக்கி, விஷூ (கேரளா), பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய்லாந்தின் புத்தாண்டு


ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

வரலாறு
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி  முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.

மரபுகள்

தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி. புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
தைப்புத்தாண்டு சர்ச்சை
தைப்புத்தாண்டு
முதன்மைக் கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்  தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஆண்டுகள்
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது.
சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்
 பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பானை தினம் ஏப்ரல் 13.


பானை தினம் ஏப்ரல் 13.

மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.

பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.


பானை செய்முறை :

இதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி  , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள்  (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள  வண்டிச்சக்கரத்தின்   நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் .


பானை வகைகள்

நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.

அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
ஓதப் பானை - ஈரப் பானை
ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
கரிப்பானை - கரி பிடித்த பானை
கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
காடிப் பானை - கழுநீர்ப் பானை
காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
கூர்ப் பானை - கூர் முனைப் பானை
கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
சின்ன பானை - சிறிய பானை
தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
படரப்பானை - அகற்ற - பெரிய பானை
பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
மிண்டப் பானை - பெரிய பானை
மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை


பானைகளுக்குள்பானைகளுக்குள்  பண்பாடு..  பண்பாடு.

இயந்திரத்தைக் காட்டிலும் மனித கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களில் கலைநயம் மிளிரும். கலைநயத்துடன் பக்குவமாய் வடிவமைக்கப்படும் பொருள்தான் மண்பானை.பழந்தமிழர்கள் களிமண்ணால் செய்து சூளையில் சுட்டு பயன்படுத்திய தொழில்நுட்பமே பானை. உலோகங்கள் கண்டுபிடிப்பதற்கு முன் சமைக்கவும் தண்ணீர் பிடித்து வைக்கவும் பானைகள் பயன்படுத்தப்பட்டன; பண்டங்கள் நிரப்பி வைக்கவும் பயன்பட்டன. பிள்ளைகள் விளையாடும் சின்ன சொப்பில் இருந்து பெரிய பெரிய பானைகள் வரை விதவிதமான வடிவில் தயாரிக்கப்பட்டன.பானைகளை செய்வதற்கு அதற்கென்று உரிய களிமண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அதை பதமாகக் குழைத்து சக்கரத்தில் ஏற்றி தேவையான வடிவில் பானைகளைச் செய்வார்கள்.உலக நாகரிகத்தின் முன்னோடியாக மண்பானைகள் கருதப்படுகின்றன. மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஓட்டுத்துகள்களைக்கொண்டு காலத்தையும் நாகரிகத்தையும் கண்டறிகின்றனர் தொல்லியல் அறிஞர்கள். பானைகளிலும் பாறைகளிலும் சித்திரங்கள் எழுதித் தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட மனிதன் எழுத்துருவைப் பிற்காலத்தில் கண்டுபிடித்தான். தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இறந்தவர்களை பானைக்குள் வைத்து புதைக்கும் பழக்கம் ஆதிக்காலத்தில் இருந்துள்ளது. இதை ஈமத்தாழி என்று அழைத்தனர். மண் சட்டியை பானை கலம் குடம் தாழி குழிசி தசும்பு என பல்வேறு பெயர்களில் அழைத்தனர். பல்வேறு வடிவங்களில் அமைத்தனர்.'மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறை' என்பது புறநானூற்று(௩௩) வரி. காட்டில் வேட்டையாடிய வேடுவன் மான் கறியை வட்டியிலே கொண்டு வந்து கொடுக்கிறான். அதற்கு பண்டமாற்றாக ஆயர்குல பெண் தயிரை பானையில்(தசும்பு) கொண்டுவந்து தருவாள் என்கிறது இந்தப் பாடல்.'ஆங்கண் இருஞ்சுனை நீரோடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி'இது அகநானூற்று(௩௯௩)பாடல். பானைகளில் (குழிசி) சுனை நீர் கொண்டு வந்து சோறு சமைத்து உண்டதை தெரிவிக்கிறது இந்தப் பாடல்.பானை குடங்களைச் செய்து பழகிய தமிழர்கள் அக்குடங்களில் அழகியலை புகுத்தினர். பல்வேறு பூ வேலைப்பாடுகளையும் வண்ணங்களையும் தீட்டி அழகு பார்த்தனர். 'நுண் செயல் அம்குடம் இரீஇப் பண்பின்'(அகம் ௩௩௬) என்ற வரிதான் நம் மூதாதையர் பானைகளில் வண்ணங்களையும் ஓவியங்களையும் தீட்டி மகிழ்ந்தனர் என்பதற்கு சாட்சி.பண்டை தமிழ் மக்கள் இறந்து விட்டால் ஈமத்தாழி எனப்படும் பெரிய பானைகளில் வைத்து புதைத்தனர். அரசன் மீது அன்பு வைத்திருக்கிறாள் ஒரு பெண். அரசனோ இறந்து விடுகிறான். அந்தப் பெண்ணோ அரசனுடன் சேர்ந்து தானும் இறந்து போக ஆசைப்படுகிறாள். அதற்காக குயவனிடம் தனக்கும் சேர்த்து பெரிய பானையாக செய்யுமாறு கூறுகிறாள். 'கலம்செய்கோவே கலம் செய் கோவே......வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி'(௨௫௬)என்று துயரத்துடன் வேண்டுகோள் வைக்கிறாள். மண்பானையில் சமைக்கும் உணவு சுமை மிகுந்தது. ஆரோக்கியம் மிக்கது. ஆனால் மண் பானைகள் வெறும் சமையல் பாத்திரங்களாக மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவை சரித்திர பானைகளாகவும் காலத்தை அறியும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன.மண்ணின் இயல்புமண்ணுக்கென்று ஓர் இயல்பு உண்டு. வெப்பமற்று இருக்கையில் தனித்தனித் துகள்களாய் இருக்கும். ஒன்றோடொன்று பிணைபடாமல் அதன் மூலக்கூறுகள் அமைந்திருக்கும். ஆனால் ஈரமானதும் அவற்றுக்கிடையே நீரேறுவதால் சற்றே நெகிழ்வடைந்துவிடும். வண்டல் அதிகமுள்ள களிமண் தான் ஏற்றுக்கொண்ட நீரை எளிதில் இழக்காது. முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கும். அந்த மண் தான் பானைகள் செய்வதற்கு ஏற்றது. நெகிழ்வும் நுண்மையும் களிமண்ணுக்கு அதிகம். அவ்வாறு ஈரத்தில் குழைத்து குழைத்துப் பிசைந்த களிமண்ணை தேவையான வடிவங்களில் வார்த்து எடுக்கலாம். வார்க்கப்பட்ட பொருள்கள்தாம் மட்பாண்டங்கள். பின்பு அவற்றைக் காயவைத்தாலோ தீயிலிட்டுச் சுட்டாலோ பிரிக்கமுடியாதவாறு இறுகிவிடும். அதனால்தான் சுட்ட பாண்டங்கள் உறுதியாக இருக்கின்றன. நன்றி தினமலர்.


ஆரோக்கியம் தரும் மண் பானை சமையல்

உணவு பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அனைவருமே தங்களுடைய ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே வரத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் ஆர்கானிக் பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் தயாரிக்கப்படுகின்ற உணவின் மூலக்கூறுகளால் மட்டுமே, முழு ஆரோக்கியத்தை பெற முடியாது. உணவு சமைக்கப்படும் பாத்திரம், எரியூட்டப்படும் நெருப்பு ஆகியவையும் முக்கியம்தான் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“உணவு சமைப்பதற்கு மண் பாத்திரமே மிகச்சிறந்தது. மண்பானை பாத்திரம் என்பது மரபு மட்டும் அல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரித்து தரக்கூடியது. மண் பானை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது. இப்போது கிடைக்கக்கூடிய பாத்திரத்தில் உலோகத் தன்மை இருப்பதால் உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் சில்வர் பாத்திரத்தில் சமைத்த உணவை உண்ணுவது சிறந்தது. ஆனால் இவை அனைத்தும் வியாதி உள்ளவர்களுக்கு சொல்லக்கூடியது. நல்ல பசி, நல்ல தூக்கம், சிக்கல் இல்லாத இயற்கை உபாதை, இவை மூன்றுமே மனிதனுக்கு மூன்று தூண்கள் போன்றது. இவை மூன்றையுமே மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நமக்கு வழங்குகிறது. மண் பானை ஒரு குளிர் பதன பொருளாகவும் பயன்படுகிறது.

சென்னை போன்ற இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. ஆனால் மண் பானையை பயன்படுத்த முடியும். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண் பானையில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. மண்பானை உணவு ரத்தக் குழாய்களை சீராக்குகிறது, ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

உடல் சூட்டை தணிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ள வேண்டி நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பதே புத்திசாலித்தனம். இயற்கை உணவுகள் எப்பொழுதுமே நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது. அவற்றை முறையாக சமைத்து உண்ணும் போதுதான் அதனுடைய முழு சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.


மண்பானை சமையல் & மண் பானை குடிநீர் நன்மைகள்:

பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும்.மண்பானை சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப் புறங்களில் கூட காணாமல் போய்விட்டது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண்பானை சமையல் முறையில் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

மண் பானை பயன்கள் :
மண்பானை சமையல்:
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.

மண்பானையில் தயிர் ஊற்றி வைத்தால் நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்கிறது. மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்றவை குணமாகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. நீண்ட ஆயுள் தருகிறது. ஆகையால் நாம் தினமும் மண்பானையில் சமைப்போம்.


மண் பானை குடிநீர் :

மண் பானை குடிநீர் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னெல்லாம் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்களும் கிடைத்தது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. .

நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன. அந்த தாதுக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கப்படும்.

மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.


தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும். பிராண சக்தி அதிகரிக்கும். மண் பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.

புட் பாய்சன் (Food Poison) குணமாக கைவைத்தியம்..!

 முன்னோர்கள் கூறிய மண் பானை பயன்கள் -:
மண்பானை சமையல் அந்த காலத்து முன்னோர்கள் அதிக வயது வரை வாழ்ந்த காரணம் என்ன என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் மண்பானையில் சமைத்தது தான் காரணம்.

மண்பாண்டத்தை மட்டும் அந்த காலத்து முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. மண்பானையை போல் பயன் அளிக்ககூடிய பித்தலை, செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி என்ற ஐந்து வகையான உலோகங்களை சமையல் பாத்திரங்களாக பயன்ப்படுத்தி உள்ளனர்.

அவற்றிலும் வெள்ளிப் பாத்திரங்கள் உடலுக்கு மிக அதிகமாக குளிர்ச்சியை அளிக்கிறது.

நீண்ட ஆயுள் வேண்டுமா?களிமண் பாத்திரங்கள்
நாம் உடலுக்கு அதிகம் நன்மை அளிக்க கூடிய பித்தலை, செம்பு, வெண்கலம் மற்றும் மண்பானைகள் ஆகியவற்றை தினமும் உங்கள் சமையல் பாத்திரங்களாக பயன்படுத்தினாலே போதும். நீண்ட ஆயுள் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

மண் பானை பயன்கள் அறிந்து கொண்டீர்களா சரி இனியாவது மண்பானை சமையல் மற்றும் மண்பானை குடிநீர் அருந்தும் பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.