ஞாயிறு, 30 ஜூன், 2019

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.


தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.
(National Doctors' Day)

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.


மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.


உயிர் காப்பவர்களுக்கு ஒரு சல்யூட்..!

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day)   கொண்டாடப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ல பாங்கிபோர் என்ற ஊரில் 1882, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy). ஏழைகள் மேல் மிகவும் அன்பு கொண்ட பி.சி.ராய், மருத்துவப் பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர்.


இவர் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நெருக்கமானவாராக இருந்தவர். காந்தியுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியதோடு மட்டுமல்லாது, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தார். அத்துடன் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்  அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்கள் சேவையாற்றினார்.

தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட கொடுத்த டாக்டர் பி.சி.ராய், முதல் அமைச்சராக இருந்த காலத்தில்கூட ஏழைகளுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்தவர்.

இவர், தான் பிறந்த தேதியான (1962-ம் ஆண்டு) ஜூலை 1-ம் தேதியிலே மரணம் அடைந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மார்ச் 30-ம் தேதி டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், டாக்டர் பி.சி.ராயின் நினைவாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல்  டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக்  கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.


இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது.  இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69  முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.

அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி  இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு  வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது.

தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும்  அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!
நன்றி விகடன்.

சனி, 29 ஜூன், 2019

உலக நாடாளுமன்றம் தினம் ஜூன் 30.World Parliament Day June 30


உலக நாடாளுமன்றம் தினம் ஜூன் 30.
#WorldParliamentDayJune30

நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் (parliament) என்பது ஒரு நாட்டின் சட்டவாக்க அவை (சட்டங்களை ஆக்கும் இடம்) ஆகும். பொதுவாக இது மக்களாட்சிக்கான அரசு ஒன்றின் சட்டவாக்க அவையைக் குறிக்கும்.
ஒரு நாடாளுமன்றம் பொதுவாக பின்வரும் மூன்று வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்: பிரதிநிதிகள் அவை, சட்டவாக்கம், மற்றும் நாடாளுமன்றக் கட்டுப்பாடு.

தோற்றம்

சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது. ஐசுலாந்து பரோயே ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.

நாடாளுமன்ற அரசாங்கம்

நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் நாடாளுமன்ற முறையின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, செயலாட்சியரே நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக ஈரவை அல்லது ஓரவை முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.


உலக நாடுகளின் பாராளுமன்ற பெயர்கள்:

இந்தியா - மக்களவை, மாநிலங்களவை
இங்கிலாந்து - பார்லிமென்ட்
ஆஸ்திரியா - ரெய்ஸ்ராத்
பல்கேரியா - சோப்ராஞ்சி
டென்மார்க் - ரிக்ஸ்தாக்
அயர்லாந்து - டய்ல்ஜரான்
பிரான்சு - தேசிய அசெம்ப்ளி
ஜெர்மனி - ரெய்ஸ்டாக்
ஐஸ்லாந்து - அல்திங்
இஸ்ரேல் - நெஸ்ட்
இத்தாலி - செனேட்
ஜப்பான் - டையட்
நெதர்லாந்து - ஸ்டேட்ஸ் ஜெனரல்
நார்வே - ஸ்டேர்டிங்
பெர்சியா - மஜ்லிங்
போலந்து - செஜம்
போர்சுகல் - கோர்ட்ஸ்
ரஷ்யா - சுப்ரீம் சோவியத்
ஸ்பெயின் - கோர்ட்ஸ்
ஸ்வீடன் - ரிக்ஸ்டாக்
சுவிட்சர்லாந்து - பெடரல் அசெம்ப்லி
சிரியா - மஜ்லிங் - அய்-நெளவம்
அமெரிக்கா - காங்கிரஸ்
மேற்கு ஜெர்மனி - புன்தஸ்டாக்

பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) 

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள் செனட்டர்கள் என்றோ பிரபுக்கள் என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம்.பி" (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

வெஸ்ட்மினிஸ்டர் முறை

இந்தியா

இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

இலங்கை

இலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.

சிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறியப்படுவர்.
பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பாகிஸ்தானின் தேசிய அவை(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது.


இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இந்திய நாடாளுமன்றம்
இந்திய சின்னம்
வகை
நிறுவிய ஆண்டு
26 சனவரி 1950 (69 ஆண்டுகளுக்கு முன்னர்)
வகை
ஈரவை
அவைகள்
மாநிலங்களவை
மக்களவை
தலைமை
குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த்
25 ஜூலை 2017 முதல்
மாநிலங்களவைத் தலைவர்
வெங்கையா நாயுடு
11 ஆகஸ்ட் 2017 முதல்
மாநிலங்களவை துணைத்தலைவர்
ஹரிவன்ஷ் நாராயண் சிங், ஐக்கிய ஜனதா தளம்
9 ஆகஸ்ட் 2018 முதல்
பெரும்பான்மைத் தலைவர்
(மாநிலங்களவை)
அருண் ஜெட்லி, பாஜக
2 ஜூன் 2014 முதல்
மக்களவைத் தலைவர்
சுமித்ரா மகாஜன், பாஜக
6 ஜூன் 2014 முதல்
அமைப்பு
Council of States, India.svg
மாநிலங்களவை அரசியல் குழுக்கள்
தேஜகூ (தனிப்பெரும் கூட்டணி)
ஐமுகூ
House of the People, India, 2019.svg
மக்களவை அரசியல் குழுக்கள்
தேஜகூ (பெரும்பான்மைக் கூட்டணி)
ஐமுகூ
தேர்தல்
கூடும் இடம்
Indian Parliament Bhavan.jpg
சன்சத் பவன்
வலைத்தளம்
parliamentofindia.nic.in
அமைச்சரவை நாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

நாடாளுமன்ற விதிகளும் நடைமுறையும்

பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவை

 மக்களவை
மக்களவை அல்லது லோக் சபா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.

ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையை தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர்.

தற்பொழுது 17 வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை


இந்திய நாடாளுமன்றம்

மாநிலங்களவை
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.

மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.

மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.

மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடம்

நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.[8]

இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.



செவ்வாய், 25 ஜூன், 2019

உலக கைம்பெண்கள் தினம் ஜுன் 23


#உலக_கைம்பெண்கள்_தினம் ஜுன் 23

காலங்கள் செய்திடும் கோலங்களில்
கறைபட்டு போன கன்னிகள்.....

பூப்பூக்கும் நந்தவனத்தில் இனி...
பூவே பூக்காத காலம்...

மேகமில்லா வானத்தில் சூரியன்..
இனி வரமுடியாத நேரம்..

இதுவல்ல உங்களின் விதி
நீங்கள் நகருகின்ற சுவர்களாக ....
நாள்தோறும் இருந்தது போதும்...

நீங்கள் உணர்ச்சியற்ற உள்ளங்களுக்கு..
ஒடுங்கியிருந்தது போதும்!...

புதியதோர் சகாப்தம் படைக்க...
புறப்படு பெண்ணே புறப்படு...

நீங்கள் கையெழுத்திட்டால்...
கான உலகமும் இயங்குகின்ற நேரமிது..

நீங்கள் தரலாம் பலருக்கு வாழ்வு –அதை
நிச்சயம் உலகம் ஏற்கும்....

ஜுன் 23 ஆம் நாள் உலகம் முழுவதும் பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தேதியினை பன்னாட்டு விதவைகள் நாளாக அறிவித்துள்ளார்கள்.

இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து அவர்கள் நல்வாழ்விற்கு வழி வகுக்கும்.

பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் அனைவரும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர்.

காபூல் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3 வது குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒரு மனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.

உலகில் எத்தனையோ பெண்கள் ஆண் துணையின்றி குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரித்து வாழ்க்கையில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற இன்றைய சூழலில் இத்தகைய பெண்களின் வாழ்க்கை போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

அவர்கள் வாழ இந்த சமுதாயம் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை.

அவர்கள் மேல் வீண் அவச்சொற்களை கூறாமல் இருந்தாலே அவர்களால் ஒரு சிறப்பான இடத்தை அடைய முடியும்.
இவர்கள் வாழ்வும் மலர வாழ்த்துவோம்.

ஞாயிறு, 23 ஜூன், 2019

உலக இளம் மருத்துவர்கள் தினம் ஜூன் 24.


உலக இளம் மருத்துவர்கள் தினம் ஜூன் 24.

#உலகஇளம்மருத்துவர்கள்தினம்

💉 மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது.


💉 எனவேஇ இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டுஇ ஜூன் 24ஆம் தேதி இத்தினம் அறிவிக்கப்பட்டது.


வெள்ளி, 21 ஜூன், 2019

உலக இசை தினம் ஜூன் 21.


உலக இசை தினம் ஜூன் 21.

#WorldMusicDay

இசை தோற்றத்தின் சுவாரஸ்யமான கதை..

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது!

ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி. அதுபோல தூக்கத்திலும் பாடலை கேட்டால், யாராக இருந்தாலும் ஆடாமல் இருக்க முடியாது. வசனம், பாடல், பின்னணி என்று, திரைப்படங்களில் இசை, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல தலைமுறைகள் தாண்டிய இசையமைப்பாளர்கள், தமிழ் திரையுலகிற்கு, தங்கள் படைப்புகளை அளித்துக்கொண்டு வருகின்றனர்.


இவர்களின் படைப்புகளுக்கு மெருகூட்டும் வகையில், பாடகர்களும் உயிர் கொடுக்கின்றனர். மொழி வேறுபாடு அறியா இசைக்கு, உலகம் முழுவதுமுள்ள மக்கள் ரசிகர்களாகின்றனர். மைக்கேல் ஜாக்சன், இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் அதற்கு சான்றே. இந்த பரந்த உலகத்தில் இசை இலாத இடமே கிடையாது என்று அடித்து கூறலாம். அனைவரும் கூறுவார்கள் இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று அது போன்றுதான் இசையும் தூணிலும் உருவாகும் துரும்பிலும் உருவாகும். ஒரு மனிதன் எவ்வளவு கோவமாக இருந்தாலும் ஏதாவது ஒரு இசையை கேட்டால் போதும் நாணத்தில் எவ்வளவு பெரிய கவலையோ, சோகமோ என்னவாக இருந்தாலும் மறைந்து விடும் என்பதும் எழுதபடாத உண்மை.


இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்றும் ஒரு பொருள் உண்டு. இசை என்பது சிறந்த கலைகளில் ஒன்று. மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.  சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். எனவே தான் உலகின் நிறைய இசைக்கலைஞர்கள் தங்களின் இசையால் மக்களை கட்டிபோட்டு வைத்திருகின்றனர். 

இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. இசையால் பல நோய்களை குணமாக்க முடியும் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியடைந்த உலகத்தில், இசைக்கு அளவே இல்லை. இசையில்லாமல் நீண்ட தூரப் பயணத்தை யாராலும் நினைத்துப் பார்க்கவே முடியாது. அதுபோல் அமைதியிலும் இசையை ரசிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை

வியாழன், 20 ஜூன், 2019

உலக அகதிகள் தினம் ஜூன் 20. #WorldRefugeeDay


 உலக அகதிகள் தினம் ஜூன் 20.
#WorldRefugeeDay 

வீடு, உடமை, சொந்த பந்தம், உரிமை என அனைத்தும் இழந்து, ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


'அகதிகளுடன் செயல்படுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்துவன்முறையால் எதிர்கால 
வாழ்க்கைக்கு, கனவுகளை தவிர மற்ற அனைத்தையும் இழந்து, உள்நாட்டிலோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக நிற்கின்றனர். இவர்களுக்கு அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.

* ஒவ்வொரு அகதியின் குழந்தையும் கல்வி பெற வேண்டும்.
* ஒவ்வொரு அகதி குடும்பமும், ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும்.
* ஒவ்வொரு அகதியும் வேலை அல்லது புதிய திறன்களை கற்றுக்கொண்டு, தங்களது குடும்பத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். என இத்தினம் வலியுறுத்துகிறது.
யார் அகதிகள்
நிறம், உள்நாட்டு போர், இனம், அரசியல், மதம், வன்முறை, பயங்கரவாதம், வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் அகதிகள் உருவாக்கப்படுகின்றனர்.

30

பயங்கரவாதம், போர் அல்லது வன்முறையால் நிமிடத்துக்கு 30 பேர் இருப்பிடத்தை
இழக்கின்றனர்.

6.85
உலகளவில் 2017 கணக்கின்படி, 6.85 கோடி பேர், தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர்
என யு.என்.எச்.சி.ஆர்., ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 2.54 கோடி பேர் அகதிகள். 4 கோடி பேர் சொந்த நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். 31 லட்சம் பேர் தஞ்சம் தேடுவோர்.

6.71
2018 ஏப்., கணக்கின்படி, மியான்மரை சேர்ந்த 6.71 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்,
வங்கதேச அகதிகள் முகாமில் உள்ளனர்.

3ல் 2

மூன்று அகதிகளில் இருவர் சிரியா, ஆப்கன், தெற்கு சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்தவர்கள்.

64

அகதிகளாக உள்ள பள்ளி செல்லும் வயதுடைய 64 லட்சம் மாணவர்களில், 29 லட்சம் பேர் மட்டுமே கல்வி பெறுகின்றனர்.

1.20

2016ல் சிரியா உள்நாட்டுப்போரால் 1.20 கோடி பேர் இருப்பிடத்தை இழந்தனர். இது அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி.



உலக யோகா தினம் ஜுன் 21. #InternationalYogaDay


உலக யோகா தினம் ஜுன் 21.
#InternationalYogaDay

சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஒவ்வொரு வருடமும் ஜுன்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இன்று 3வது சர்வதேச யோகா தினம் ஆகும்.

2014 டிசம்பர் 11ம் தேதி 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜுன் 21ம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

5ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினத்தை ஆண்டின் ஒரு நாளாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா பொதுச்சபையில் கேட்டுக்கொண்டார்.

2014 செப்டம்பர் 27ம் திகதி இதுதொடர்பாக இந்தியப்பிரதமர் வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன.

முதல்முறையாக சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி இந்தியத் தலைநகர் டில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது.

யோகா செய்வதனால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும்! நீங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு - இவற்றில் எதைத் தேடினாலும் சரி உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் சரி, உள்நிலை மாற்றம்தான் உங்கள் நோக்கம் என்றாலும் சரி, இங்கு வழங்கப்படும் யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிகச் சுலபமாய் கையாள வழி ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே யோகா செய்வதனால் ஒவ்வொருவரும் பின்வரும் நன்மைகளை அடையமுடியும்.


.ஞாபக சக்தி, மனம்குவிப்பு திறன், செயல்திறன், மேம்படுகிறது.

· உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன.

· முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது.

· முதுகு வலி, மன அழுத்தம், பயம் மற்றும் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை.

· நாட்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

· வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது.

· அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்கச் செய்கிறது.

யோகா பயிற்சியானது மக்கள் நல்வாழ்விற்கான முழுமையான அணுகு முறையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனி, 15 ஜூன், 2019

உலக காற்று தினம் ஜூன் 15


உலக காற்று  தினம் ஜூன் 15 

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது

 பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.

இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே  உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!!

காற்று மாசடைவதை தடுப்போம் !!

தந்தையர் தினம்.தந்தையர் தின வரலாறு,


தந்தையர் தினம்.தந்தையர் தின வரலாறு..
#HappyFathersDay

தந்தையர் தினம் (Fathers Day)மேற்கத்திய நாடுகளில் தாய்மார்கள் தினம், காதலர் தினம் என்று தாய்மார்களுக்கும், காதலர்களுக்கும் தனித் தினங்கள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்படுவது போல், தந்தையர்களுக்கு ஒரு தினம் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டுக்கு நாடு தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபுர்வமான, அர்த்த புர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பலவிதமான பதில்கள் காத்திருக்கின்றன. அமெரிக்கா நாட்டின், மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும், வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்வதுண்டு.

சிக்காகோ நகரின் 'லயன்ஸ் கழகத்தின்' தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு 'தந்தையர் தின நிறுவனர்', என்று பட்டமளித்ததாகவும் வரலாற்று குறிப்பு உண்டு.

எது எப்படி இருப்பினும், 'தந்தையர் தினம்' என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்து நிற்கிறது.

1909 ஆம் ஆண்டளவில் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் (ச்போக்ணே) நகரின் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாய்மார்கள் தினம் கொண்டாடப்படுவது, அப்போதுதான் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேவாலயத்தில் அமர்ந்திருந்து பிராத்தித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு மட்டும் தாயின் நினைவுகள் நிழலாடவில்லை. மாறாக, அவளுக்கு தன் தந்தையின் ஞாபகங்கள் தான் நெருணி நிரைத்த வண்ணம் இருந்தன. ஏனென்றால் அப்பெண் மிகச்சிறு வயதாக இருந்த போதே அவளது தாயார் இறந்து விட்டாள். அந்த பெண்ணையும், அவளது ஐந்து சகோதரர்களையும் அன்புடன் பராமரித்து, தாயாக அன்புகாட்டி தந்தையாக வளர்த்து வந்தது அவளது தகப்பனார் தான். அந்த ஆராதனையில், தாயை பற்றிச் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவளுக்குத் தன் தந்தையைத்தான் ஞாபகப்படுத்தியது.

திருமணமாகி தன்னுடைய குடும்ப வாழ்வை தொடங்கி விட்டிருந்த அந்த பெண்மணியின் பெயர் திருமதி சொனாரா டொட் (ம்ர்ச்.சோனொர ளௌய்செ டோட்ட்). திருமதி சொனாரா டொட்டின் தாயார் தனது மகவொன்றின் பிரசவத்தின் போது 1898 ஆம் ஆண்டு அகால மரணமடைந்திருந்தார். சொனாராவையும், அவரது ஐந்து சகோதரர்களையும், தனி ஒருவனாக அவர்களது தந்தையே வளர்த்திருந்தார். அந்த தந்தையின் பெயர் வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட் (நீல்லியம் ஜாச்க்சொன் ச்மர்ட்) தன்னுடைய சின்னஞ்சிறிய குழந்தைகளை- ஆறு பிள்ளைகளை- தாயாக, தந்தையாக அன்பு காட்டி அரவணைத்து வளர்த்தெடுத்த வில்லியம் ஜக்ஸன் யார் தெரியுமா நேயர்களே? ஓரு போராளி! தனது நாட்டுக்காகப் போராடிய போர் வீரன்! தனது மனைவியை இழந்த போதும், தன் தாய் நாட்டின்மீது தான் காட்டிய நேயத்தை, தாயை இழந்த தன் மகவுகளிடம் காட்டிய ஓர் உண்மையான மனிதன், தந்தை கிறிஸ்தவச் சமயத்தின் அம்மையப்பன். அன்று - அன்றைய தினம் - தேவாலயத்தில் தாய்மார்களின் சிறப்பைப்பற்றிய உரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த போராளியின் மகளுக்கு, அவையெல்லாம் தன் தந்தையைப் பற்றித்தான் சொல்வது போலிருந்தன.

தன்னந்தனியனாகத் தம்மை வளர்ப்பதற்கு, தம் தந்தை பட்ட கஷ்டங்களெல்லாம் அந்த மகளின் மனதை மீண்டும், மீண்டும் உருக்கின. தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை - என்ற எண்ணம் அந்த பெண்ணுக்கு, அந்த மகளுக்கு உருவானது. அது வலுப்பெற்றது. அவள் ஒரு போராளியின் மகள் அல்லவா! ஆகையால், அவள் தன் எண்ணத்தை செயலாற்றத் துணிந்தாள்.

கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக, மதகுருமார்கள் ஊடாக, திருமதி சொனாரா டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை, பரப்புரையை ஆரம்பித்தார். ஏற்கனவே, தாய்மார்கள் தினத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்த பத்திரிகைகள், திருமதி சொனாரா டொட்டின், தந்தையர் தினத்தை வரவேற்றுச் செய்திகளை வௌயிட ஆரம்பித்தன. ஸ்போக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள்.

வில்லியம் ஜென்னல்ஸ் பிரைன் போன்ற அரசியல்வாதிகளும், தந்தையர் தினம் என்ற திட்டத்தை வரவேற்று பேசினார்கள். வாஷிங்டன் நகர், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை, தந்தையர் தினமாக பிரகடனப்படுத்திக் கொண்டாட ஆரம்பித்தது.

திருமதி சொனாரா டொட்டின் தந்தையான வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட்டின் பிறந்த மாதமும், ஜூன் மாதத்தில் தான் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், தாய்மார்களின் தினம் போல், தந்தைமார் தினம் உடனடியாக பிரபலம் அடையவில்லை என்பதே உண்மையாகும்.
(அதனை இன்றைய தந்தைமாரும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது வேறு விடயம்.)

1916 ஆம் ஆண்டளவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் (நோஒற்றொந் நீல்சொன்), இந்த தந்தையர் தினக் கருத்தை ஏற்றுக் கொண்ட போதும் அது, தேசிய மயமாக்கப்படவில்லை.

1924 ஆம் ஆண்டு, ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் (சால்வின் சோஒலிட்கெ) தந்தையர் தினத்தை, ஒரு தேசிய நிகழ்வாக பிரகடனம் செய்தார். 1966 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த லின்டன் ஜோன்சன், யூன் மாதத்து 3 ஆவது ஞாயிற்றுக்கிழமையை அமெரிக்காவின் தந்தையர் தினமாக பிரகடனம் செய்தார். ஆயினும், உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு மாத தினங்களில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதனை நாம் காணக்
கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும், நியுசிலாந்திலும் செப்டெம்பர் மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம். வெள்ளை ரோஜா மலரும், சிவப்பு ரோஜா மலரும் தந்தையர் தினத்திற்கு உரிய மலர்கள் என்பதை, இங்கே ஒரு உபரித் தகவலாக தர விழைகின்றோம்.

வெள்ளை ரோஜா மலர் - ஒருவரது தந்தை காலமாகி விட்டார் என்பதையும்,
சிவப்பு ரோஜா மலர் - ஒருவரது தந்தை வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டு கௌரவப்படுத்துகின்ற விடயங்களாகும்.

மேற்கத்தைய நாடுகளில் தந்தையர் தினம் என்பதை, இன்று ஓர் அவசியமான தினமாகப் பரிமாணம் எடுத்துள்ளதோடு, பழையன கழிதலும், புதியன புகுதலும் ஓர் இனத்தின் பண்பாட்டு மேன்மைக்கும் நாகரிகச் சிறப்பிற்கும் அத்தியாவசியமாக அமைந்து வருகின்றன. அத்தகைய சிறப்பும், தகுதியும் தமிழ் மொழிக்கு இருப்பதனால் தான், தமிழ் மொழியும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுக் காலமாக அழியாது, தழைத்து சிறந்து, வளர்ந்து வளர்கின்றது.

பழைமையை போற்றுவதாக நினைத்துக் கொண்டு, புதுமையை ஏற்றுக் கொள்ள மறுத்தோமேயானால், நாங்கள் பழைமையை இழப்பதோடு மட்டுமல்லாது, புதுமையையும் தவறவிடுகின்ற வரலாற்றுத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்க நேரிடும். புதுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் தாக்கிப்பதற்கு 'எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்', என்பதல்ல பொருள்.

முன்னர் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்து செரிவானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
பொருள் கொள்ளலாம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்; அப்பொருள்,
மெய்ப்பொருள் காண்பதறிவு - என்பதே வள்ளுவரின் வாக்கு ஆகும்.

மற்ற இனங்களைப் போல, ஆணாதிக்கக் கட்டமைப்பு முறை, தமிழரிடையே இருந்தாலும், அடிப்படையில் அது ஒரு தாய்வழிச் சமுதாயமாகவே இயங்கி வந்துள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும், 'தந்தை என்பவருக்குரிய பண்புகளும், பொறுப்புகளும் தொல் தமிழர் வாழ்விலே எடுத்துக் கூறப்பட்டிருப்பதை நாம் காணுகிறோம்.

தந்தை என்ற தமிழ் சொல்லே தந்தைக்குரிய தகுதியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. ஒருவன், ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகிறான். உலகியலில் உள்ள தருதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும்.

தந்தை-என்ற பெயருக்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாகும். மகவைத் தந்தவன் தந்தையானான். பழந்தமிழர் வாழ்க்கை முறையில், இன்னும் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்ககூடும்.

காதல் வாழ்க்கையின் போதும், மணவாழ்க்கையின் போதும், தலைவன் தலைவி என்றும், கணவன் மனைவி என்றும், ஆணை முதன்மைப்படுத்தியே விளிக்கப்பெற்று வந்தததையும் மகவு பிறந்த பின்னர், தாய்-தந்தை, அம்மையப்பன் என்று பெண்ணை முதன்மைப்படுத்துவதையும், நாம்
சுட்டிக் காட்டலாம்.

தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம்.

"தந்தை மகற்காற்று நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல் - (குறள்-67) என்ற குறள் மூலம் தந்தையானவன், தனது மகவுக்கு செய்ய வேண்டிய முதற்கடமை, அவனை கல்வியில் சிறந்தவன் ஆக்குதலே என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

ஒரு தந்தை, தனது மகனை செல்வனாக்குவதிலும் பார்க்க, அவனை கல்விமானாக்குவதே சிறந்தது என்பது இக்குறளின் உட்கருத்தாகும். தந்தையின் இந்த முதற் கடமையை நாம் புறநானூறிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. பொன்முடியார் பாடிய இப்பாடல் ஒரு மறக்குடித்தாயின் மனநிலையை கூறுவது போல் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாக அமைகின்றது.

புறநானூறில் 312 ஆவது பாடல், இவ்வாறு கூறுகின்றது -

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே:
சான்றோன் ஆக்குதல், தந்தைக்குக் கடனே:
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே:
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவான் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து
பெயர்த்தல் - காளைக்குக் கடனே
என்னுடைய முதன்மையான கடமை பெற்று வளர்த்து
வெளியே அனுப்புதல்.

தந்தையின் கடமையோ, அவனை சான்றோனாக ஆக்குதல்.

வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியன அளித்தல் வேந்தனுடைய கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளைப் போர்க்களத்திலே சுற்றிக் கொண்டு அஞ்சாது நின்று வென்று பகை மன்னர் களிற்றையும் கொன்று, மீண்டு வருதல் வளர்ந்து, காளையான அவனது கடமையாகும். இதனை அறிவீராக. என்று புலியுர் கேசிகன் பொருள் கூறுகின்றார்.

தந்தையர் தினத்தின் மூலம் தனது தந்தையை உலகளாவிய முறையில் திருமதி சொனாரா டொட் அவர்கள் உயர்த்திச் சிறப்பித்தார். இதே விடயத்தைத் திருவள்ளுவர் மறுவடிவமாகக் கூறுதல் மிகுந்த நயமுடையதாக உள்ளது.

"மகன் தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும்
சொல்" - குறள் 70-தான் பிறந்ததில் இருந்து, தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் பிழைப்பதற்கு ஒரு தொழிலில் பயிற்று, மணம் செய்வித்து மனையறப் படுத்தி, தனது தேடலிலும், ஒரு கூறளித்த தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன!

மகன் செய்ய வேண்டிய கைம்மாறு 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். அதாவது மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை அவர்கள் வாயிலிருந்து தானாக வரச் செய்தலாகும். இந்த குறளில் இன்னுமொரு நயம் உள்ளது. இங்கே சொல் என்பது சொல்லைப் பிறர் மூலம் வருவிப்பதைக் குறித்து நிற்கின்றது. கொல் என்பது ஐயம் குறித்த இடைச் சொல்லாகும். தந்தை நெடுங்காலமாக செய்து வந்த பல்வேறு பெருநன்மைக்கும், மகன் செய்யவேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று, ஒருவகை அணிநயம் படத் திருவள்ளுவர் கூறுகின்றார். இதனால் தந்தை செய்த நன்றிக்கு சரியாக ஈடு செய்தல் அது என்ற உட்பொருளையும் காணுகின்றோம்.

அன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த அன்னை அறிமுகப்படுத்தும் முதல் வி.ஐ.பி. அப்பா. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவார்.

தந்தை என்பவர் ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புகிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாக வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம். நாம் எழுமுன் வேலைக்கு சென்று, நாம் தூங்கிய பின்பு வீடு திரும்பும் தன்னலமில்லா உள்ளம்.

அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.

பிரசவ அறையின் வாசல் முதல், தன் பிள்ளையை கல்லூரி சேர்க்கும் வரை கால் கடுக்க காத்திருப்பவர் தான் தந்தை. தன் குழந்தைகள் வண்ண வண்ண சட்டைகள் அணிய தம் வாழ்வின் பெருவாரியான நாட்களில் கந்தை சட்டையும், பனியனுமே அணிந்திருப்பார். தமக்கு ஆடை வாங்கும்போது விலையையும், குழந்தைகளுக்கு வாங்கும்போது தரத்தையும் பார்ப்பவர்.

பிள்ளைகளின் பழக்க வழக்கம், பண்புக்கு ரோல் மாடலே அப்பா தான். அப்பாவின் அன்பு ஆழமானது. சில சமயங்களில், அந்த அன்பு ரகசியமாகி விடுகிறது. ஒரு சில நேரங்களில் தந்தையிடமிருந்து அர்சனை, கண்டிப்பு என்று இருந்தாலும் அவை தான் எதிர்கால வாழ்க்கைக்கு பாடம். இதனால் கண்டிப்பானவர், வளைந்து கொடுக்காதவர் என்று பெயர். ஆனால். பிள்ளைக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு என்றால் அவர்கள் தூங்கும் போது அவர்களுக்கே தெரியாமல் கால்களை நீவிவிட்டு நலம் விசாரிக்கும் அன்பு உள்ளம். பிள்ளைகள் சாப்பிடாமல் தூங்கி விட்டால், எழுப்பி சோறூட்டி மீண்டும் தூங்க வைப்பார். பிள்ளைகளின் தூக்கத்தில் தந்தையின் அன்பு மறைந்திருக்கும். தன் குழந்தைகளைப் பற்றி பிறரிடம் பெருமையாக பேசி அளவில்லா மகிழ்ச்சி கொள்வார்.

அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். பிள்ளைகள் துவண்ட போதும், 'நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே' என்னும் நம்பிக்கையை தோற்றுவித்து. தன் பிள்ளையின் நிழலாகவே இருப்பார். தந்தை தனது குழந்தைக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு போராடும் எதிர்நீச்சலை கற்றுத் தருகிறார்.

சிந்தனைகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன் பிள்ளைகளை ஆளாக்க தான் பட்ட துயரங்கள் கண்களை கலங்க வைக்கும். தனக்கு படிப்பு வாசனை இல்லாவிட்டாலும் தன் குழந்தைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு காண்பர். அவரின் வியர்வை துளிகளை பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உரமாக்கியவர். எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தந்தை தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று தோளில் சுமந்து உலகை காட்டுபவர்.

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில், நரம்பு தெரியும் கைகளில், நரை விழுந்த தலைமுடியில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாக குடிகொண்டிருக்கிறது.

தன் மகனோ, மகளோ வளர்ந்து பெரியவனான பிறகும் சிறு பிள்ளையாகவே பார்க்கிறார். 'நான்பட்ட கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது' என பாடுபடும் தந்தைக்கு நாம் தந்தையர் தினத்தன்று கொடுக்கும் விலை மதிப்பற்ற பரிசு அன்பான வார்த்தைகளே.
Thanks -worldtamilswin.

தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை


இன்று தந்தையர் தினம்! தந்தையரை போற்றுவோம்...
#HappyFather'sDay

தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை.


உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு  கெளரவிக்கப்படுகிறது.

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்கு மகத்தானது. தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை.

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையின் தியாகங்களையும், அவர் பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.

புதன், 12 ஜூன், 2019

அரிமா என அன்போடு அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள் ஜூன் 11 .


 அரிமா என அன்போடு அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவு நாள் ஜூன் 11 .

ஒரு இலக்கியவாதியாக, தமிழ் அறிஞராக மட்டுமன்றி, அடங்கா தமிழராக தமிழையும் தமிழர் தேசங்களையும் காக்க போராடிய ஒரு கொள்கை மிக்க போராளியாகவும் அறியப்பட்டவர் பாவலரேறு அவர்களாவார்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரவணைத்து காத்ததோடு பல வேறு ஈழ போராளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து எல்லோரையும் ஒற்றுமையாக வைத்திருக்க முயன்றவர்.

தமிழ் நாட்டின் விடுதலை ஒன்றே தமிழர்களின் விடுதலைக்கு ஒற்றை வழி எனப் போராடிய தோழர் தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதரவு சக்தியாக விளங்கி தனித்தமிழ் நாட்டுக்கு தொடர்ந்து முழங்கி வந்தவர்.

பல போராட்டங்களில் நேரடியாக போராடி 20 முறை சிறை சென்று வந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது அடங்கா வீரத்தின் வெளிப்பாட்டில் எதிரிக்கு அடங்கா அரிமாவாக தோற்றமளித்தவர்.

பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆகியோருக்கு சேலம் மாவட்டம், சமுத்திரம் ஊரில் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் பெயர் வைத்துக் கொண்டார்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ்உணர்வும் புகட்டினர்.

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர்ச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்குப் பணிபுரிந்த பொழுது அவர்தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார்.

கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களையும் எடுத்துக் கொண்டு பாவேந்தரைச் சந்திக்க புதுச்சேரி சென்றார்.

ஆனால் பாவேந்தர் அந்நூல்களைப் பார்க்க அக்காலத்தில் மறுத்து விட்டதையும் பின்னர் ஒரு நூலைக் கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதுண்டு.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படும் அம்மையார் அவர்கள்.

தாமரை அம்மா ஈழத்து போராளிகளுக்கு ஒரு தாயாக திகழ்ந்தவர். குறிப்பாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பாசத்தை வென்றெடுத்தவர்.

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.

தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார்.

இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப்பணிகளுக்கு அரசுப்பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப்பணியை உதறினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப் பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது.வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.

பாவாணரின் உலகத்தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.

தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக் கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்த போது சிறை செய்யப்பட்டார். இக்காலக்கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.

இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்த போது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.

பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!

என்று தமிழ்மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்துப் பெருஞ்சித்திரனார் எழுதிய கட்டுரை கண்ணீர் வரச் செய்யும் தரத்ததாகும்.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.

1983-84ஆம் ஆண்டில் மேற்கு உலக நாடுகளில் இவர்தம் சுற்றுச் செலவு அமைந்தது. 1985இல் மலேசிய நாட்டிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்தார்.

1988இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது. மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

இவர் தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்து சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர்.

பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடி இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தவர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் அரசியலாகும். தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்பதாக தனித்தேசமாக உருவாக வேண்டும் என்பது பெருஞ்சித்திரனாரின் அரசியல் நிலைப்பாடாகும். அவர் தனது தென்மொழி இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்தி வந்தார்.

அவர் எழுதிய நூல்கள்:

அறுபருவத் திருக்கூத்து
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
இட்ட சாவம் முட்டியது
இனம் ஒன்று பட வேண்டும் என்பது எதற்கு?
இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
கழுதை அழுத கதை
கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
கொய்யாக் கனி (பாவியம்)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு
செயலும் செயல்திறனும்
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தன்னுணர்வு
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-1
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
நமக்குள் நாம்....
நூறாசிரியம்
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
அருளி
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை
கவிதைக்கீற்றுகள்[தொகு]

பெருஞ்சித்திரனாரின் கவிதைகள் எழுச்சி மூட்டுபவை. அத்தகைய கவிதைகளில் ஒரு கவிதை:

உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்து விடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்து விடாதே!

சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!

அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்


செவ்வாய், 4 ஜூன், 2019

அருள் நிறைந்த ரமலான் பண்டிகை!


அருள் நிறைந்த ரமலான் பண்டிகை!

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் 'ரம்ஜான் பண்டிகை', மற்றும் தியாகத் திருநாள் 'பக்ரீத் பண்டிகை' என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர் ஆன், இப்பூவுலகில் அருளப்பட்ட மாதம் என அனைத்தும் அருள் நிறைந்த மாதமாக இருப்பதால், சிற்சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை.

பரிசு பரிசுப்பெட்டியில் தான் வரும் னு யார் சொன்னது?ராயல் சுந்தரம் லைப்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி, அன்பு மற்றும் நம்பிக்கையின் உண்மையான பரிசு.

நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ரய்யான் என்ற சொர்க்க வாசல் குரானில் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு இருந்தவர்கள் மட்டுமே இந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்பது இஸ்லாம் மத நம்பிக்கை. இந்த ரமலான் மாதத்தில் பயிற்சி பெற்றவர்கள், அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பலன் அனுபவிப்பார்கள். அவர்கள் நேர்மை தவறும்பொழுது, இந்த ரமலான் மாதத்தில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் அவர்கள் செய்யவில்லை என்பது பொருளாகிவிடும்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது. இந்த மாதத்தில் நன்மைகள் செய்யாதவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் இழந்தவர் என்றும், பாவமன்னிப்புக் கேட்காதவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு வெகு தொலைவில் இருப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

நோயின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் முதுமை உள்ளிட்ட பிற காரணங்களால் நோன்பினை அனுசரிக்க முடியாதவர்கள், ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என்று திருக்குர் ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மனித வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், கணக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை தீமைகள், நம் இறப்பிற்குப் பிறகு நம்மை வந்து சேரும். அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி நாம் திருக்குர் ஆன் படி வாழ்ந்தால், நம்மிடையே மறுமலர்ச்சியை உருவாக்கி, ஆரோக்கியமான நல்ல சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது ஆழமான நம்பிக்கை.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்!!!
நன்றி விகடன்

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5


உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5

1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள் கடல் மட்டதுக்கு அல்ல என்ற வாசகத்தை இந்த ஆண்டு(2014) ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.


இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.


சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன. புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.


இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசுபட்டு கிடக்கிறது. இந்த மாசடைதலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவது நிலம் மாசடைதல், 3-வது நீர் மாசுபடுதல். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், சோலைகள், கடற்கரைகளில் ஏற்படும் மாசுபாடுகள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி மனித, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச் சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது.

நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக்கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலேயான உறவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை.

மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மரங்களை அழித்து உலகை பாலைவனமாக்கி வருகிறோம். உலகில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன்- மோனாக்சைடும், காரீயமும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவை நச்சுதன்மை வாய்ந்தவை.

வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கார்பன் அளவு அதிகமானால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும்.

இதேபோல சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிளாஸ்டிக் திகழ்கிறது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடலாம் என்றாலும் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும்.இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்பது நியாயமான கேள்வி. அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத் தக்கூடாது என்பது நடை முறைக்கு உகந்தது அல்ல.ஆனால் நாம் வைராக்கியம் கொண்டால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க முடியும். பூமி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பாகும்.

பூமி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். மனிதர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த பூமி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகிறது. இத்தகையை சிறப்பு வாய்ந்த பூமி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறது.

எனவே உஷ்ணமடைதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலாம் பாதிப்பு, கடல், கடற்கரை பிரதேசங்கள், காடு ஆகியவை அழிப்பு, உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ரசாயன பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சுழலை பாதுகாப்போம்..எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அதிசயங்களினை விட்டுச்செல்வோம் என இந்த நாளில் சூளுரைப்போம்.