சனி, 31 ஆகஸ்ட், 2019

உலக கடித தினம் செப்டம்பர்-1



உலக கடித தினம் செப்டம்பர்-1

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.



கடிதம் எழுதலாம் வாங்க!

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள்.
பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களிலும் படித்துவருகிறீர்கள்!.
தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம்.
சில நாடுகளில் டிசம்பர் 7 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதுதவிரப் பல்வேறு நாடுகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவிப்பதற்காகத் தேசிய கடிதம் எழுதும் நாளை தனியாகக் கொண்டாடுகிறார்கள். கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் அனைவரின் நோக்கம்.
உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள். சந்தேகம் எழுந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கேளுங்கள்.
கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் பலப்பல திறமைகள் கிடைக்கும். ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு நீங்கள் கைப்பட கடிதம் எழுதினால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் கடிதங்கள் உங்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும்.



காணாமல்போன கடிதங்கள்...!

 (செப்டம்பர் 1-ந்தேதி) உலக கடித தினம்.

கடிதம் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் எழுச்சி மிகு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். கடிதம் எழுதுதல் என்பது ஒரு தனிக்கலை. கடிதம் தகவல் பரிமாற்றத்திற்கான களம்.

ஒருவர் பிறரிடம் நேரடியாகப் பேச முடியாத சூழல் உருவாகும் போது உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளை வார்த்தைகள் மூலம் புலப்படுத்தும் முறைமையாக கடிதங்கள் கருதப்படுகின்றன. கடிதங்கள் இரு தனிநபர்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. இது எழுத்து வடிவிலான உணர்வுப் பரிமாற்றம். இல்லை. உறவுப் பரிமாற்றம்.

தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் எனப் பல வசதிகள் இருப்பினும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் அறிந்த ஒரே தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டும் தான்.

எப்போது கடிதம் வரும் என ஏங்கிக் கிடந்தவர்களும் உண்டு. ஏன் இந்தக் கடிதம் வந்தது என்று பயந்து நடுங்கியவர்களும் உண்டு. காரணம் கடிதம் தாங்கி வரும் செய்தி இன்பமா? துன்பமா? தெரியாது.

எனவே வீட்டு வாசலில் ‘தபால்’ என்ற குரல் கேட்டாலே வீடு மட்டுமல்ல அந்தத் தெருவே பரபரப்பாகிவிடும். வந்த கடிதத்தை ஒருவர் விடாமல் படித்து மகிழ்ந்ததுடன் உடனடியாகப் பதில் கடிதத்தையும் எழுதித் தபாலில் சேர்ப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களை வாழ்வியலோடும் சமூக எதார்த்தத்தோடும் உறவுகளை, நண்பர்களை, பகைவர்களைக் கூட கட்டிப்போட்ட மாபெரும் மக்கள் தொடர்பு சாதனமாக கடிதம் இருந்தது.

ஆனால் இன்றைய கணினி உலகில் கடிதம் அனுப்புவதும், வருவதும் விலை மதிக்க முடியாத பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வாக மாறிவிட்டது.

நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், வணிகக் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள் எனக் கடிதங்கள் பல வகைப்பட்டாலும் ஒவ்வொன்றும் ஒருவித ஆழமான, அழகான கருத்தினை வெளிப்படுத்துபவை.

கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது. இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன. இதற்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கடிதங்களே சாட்சி.

தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் இழந்த அடையாளங்களை மீட்கப் போராடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. கட்சியினரின் கருத்துகளை அறிவதற்கும், தொண்டர்களுக்குச் சமகால அரசியல் போக்குகளை அறிவிப்பதற்கும், தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கும் ‘தம்பிக்கு...’ என அவர் எழுதிய கடிதங்கள் அரசியலில் ஓர் புதிய பாதையை வகுத்தன.

அண்ணாவைத் தொடர்ந்து திராவிடக் காரர்களை மட்டுமன்றி வெகுஜன மக்களையும் காலந்தோறும் தன் கடிதங்களால் கட்டிப்போட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ‘உடன் பிறப்பே’ என அழைக்கும் அவரின் கடிதங்கள் முற்போக்குச் சிந்தனைகளை, மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முழுப்பகுத்தறிவுக் கருத்தாக்கங்களாகத் திகழ்ந்தன. கலைஞரின் எழுத்துக்கள் சுருக்கமானதாகவும் எளிமையான தெளிந்த கருத்தாழம் மிக்க தன்மை கொண்டதாகவும் இருந்தன.

தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் பிற கட்சியினரும் படித்து ரசிக்கும் அளவில் இலக்கிய நயம் குழைத்துத் தந்ததால் கலைஞரின் கடிதங்கள் காலம் கடந்தும் பேசப்படுவது மட்டுமன்றி, தொண்டர்கள் அவரின் கடிதங்களுக்காக ஏங்கும் நிலையையும் உருவாக்கியது. எந்தப் பிரச்சினையானாலும், கடிதம் எழுதி அதற்குப் பதில் கடிதம் பெறுவதையே பெரும் தீர்வாக எண்ணிக் கடிதங்களை வரைந்தார்.

மூதறிஞர் ராஜாஜி தனக்கு வரும் கடிதங்களைத் தவறாமல் படித்து அதற்குத் தன் கைப்பட பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு சிறையிலிருந்த போது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதம் மிகவும் புகழ் பெற்றவை. மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அன்பை வெளிப்படுத்தினாலும் மொழிப் பற்றையும் புரட்சிகர கவிதைகளையும் பறைசாற்றி நிற்கும்.

யார் மீதாவது கோபம் வந்தால் அவ்வளவுதான், அவருக்குக் கோபமாக கடிதம் எழுதும் பழக்கமுடையவர் ஆபிரகாம் லிங்கன். துன்பமான சூழலிலும் மனைவிக்கு அன்பையும் நம்பிக்கையையும் தன் கடிதங்கள் வழியே பகிர்ந்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். தமிழறிஞர்கள் மு.வ., உ.வே.சா. போன்றோரின் கடிதங்கள் இலக்கியச் செழுமைக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக இன்றும் பேசப்படுகின்றன.

கடிதம்! வெறும் வார்த்தைகளைத் தாங்கி வரும் காகிதம் அல்ல. எழுதுபவரின் எண்ணங்களைப் படிப்போரின் நெஞ்சில் பதிய வைக்கும் பண்பாட்டுப் பெட்டகம். உணர்வோடும் உறவோடும் கலந்து நிற்கும் காலக் கண்ணாடி.

மகன் அம்மாவுக்கு எழுதும் கடிதம் அன்பின் வெளிப்பாடு. தந்தை மகனுக்கு எழுதும் கடிதம் அறிவுரைகளின் தொகுப்பு. நண்பர்களின் கடிதம் நட்பின் உன்னதப் பிரதிபலிப்பு. காதலர்களின் கடிதம் புது விடியலை வரவேற்கும் வாசல்கள். இப்படிக் கடிதங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் எழுத்தாளனை அறிமுகப்படுத்தும் அடையாளச் சீட்டு.

மனித வாழ்வின் சாட்சியாகத் திகழும் கடிதங்கள் வாழ்க்கையை, காலத்தைப் பதிவு செய்கின்றன. எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையிடம் எழுதும் வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் கலாசாரப் பரிணாமம் அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும். இல்லையெனில் இனி வரும் தலை முறைகளுக்குக் கடிதம் காட்சிப் பொருளாகி விடும்.  நன்றி தினத்தந்தி.

இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி டயானா நினைவு தினம்- ஆகஸ்ட் 31, 1997.


இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி
டயானா நினைவு தினம்- ஆகஸ்ட் 31, 1997.
******************************************
சாதாரண பெண்ணாய் பிறந்து சார்லசை மணந்து இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி.அரச சுகபோக வாழ்க்கைக்கு மட்டும் சொந்தக்காரியாகாமல்,பொதுவாழ்க்கையிலும் புகழின் உச்சியை தொட்டவர்.சார்லசை மணந்தது முதல் மரணம் வரை உலகத்தின் முக்கிய சர்ச்சையானவர்.

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா.

பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், எம்.ஜி.ஆர் மாதிரி அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட முடிந்தது அவரால். உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அத்தனை பேரும் டயானாவுக்கு சிநேகிதமானார்கள்.

எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் எடுத்துரைத்தவர் டயானாதான்.

கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது...

அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.

அவரது தனி வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றங்களால் ராணியையும் இளவரசரையும் வெறுப்பேற்றுவதற்காகவே பல ஆண்களைத் துரத்த ஆரம்பித்தார்.

ஆ! எப்பேர்ப்பட்ட காதல்கள்! டயானா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அவர்தான் எப்போதும் முதல் பக்கக் கதாநாயகி. துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள். துருவித் துருவிச் செய்தி சேகரித்தார்கள்.

டயானாவை இறுதிவரை தொடர்ந்தன, காதல்களும் கேமராக்களும். அவர் உயிரைக் குடித்ததும் அவையேதான். மக்களின் இளவரசியாக வாழ்ந்தவர் டயானா.

சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.

டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.

அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம்.

அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர்.

இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31, 1870.


மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31,
1870.

👉மரியா மாண்ட்டிசோரி
💉 இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

💉 நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றை கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தன. அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.

💉 சுமார் 200 ஆண்டுகளின் கல்வி முறை குறித்து ஆராய்ந்தார். பல நு}ல்களை எழுதியுள்ளார். பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நுல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்துக்கான கோட்பாடுகளை 1897-ல் உருவாக்கினார்.

💉 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939-ல் இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்ட்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார். இவர் 'இந்தியா என் 2-வது வீடு" என்பார்.

💉 இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டிசோரி 82-வது வயதில் (1952) மறைந்தார்.

தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார் நினைவு நாள்


தமிழ்மாமுனிவர்’ மங்கலங்கிழார் நினைவு நாள் ஆகஸ்ட்31,1953.

 தமிழ்நாட்டின் எல்லையினை, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம்” எனத் தொல்காப்பியம் காட்டியது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அது ‘வடதணிகைத் தென்குமரி’ எனச் சுருங்கிப்போய்விட்டது. தமிழகத்தின் வடக்கெல்லையில் இழப்பு நேரும் சூழல் எழுந்தபோது, அறிஞர் மங்கலங்கிழார் போர்க்குணத்துடன் ஆற்றிய புகழார்ந்த செயல்கள் வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை; என்றென்றும் தமிழ் மக்களின் வணக்கத்துக்குரியவை!

                மொழிவகையில் தமிழராகவும், நில வகையில் தெலுங்கராகவும் வாழ்ந்த மக்கள், தமிழரென்பதையே மறக்கத் தொடங்கிய, நிலையில் சித்தூர், தணிகைப் பகுதி மக்களுக்குத் தமிழுணர்வு ஊட்டியவர் மங்கலங்கிழார்!

களுக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். ஆதைத் தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து குருவப்பேட்டை என்னும் ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தினார். அதற்காக, ‘அறநெறித் தமிழ்ச் சங்கம்’ என்றோர் அமைப்பை உருவாக்கி, தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பற்றும் தழைத்துச் செழித்திட, தளர்வறியாது தொண்டாற்றிய செம்மல் ஆவார். அப்பெருந்தகையை மக்கள் அன்போடும் மரியாதையோடும் ‘தமிழ்மாமுனிவர்’ என்றே அழைத்தனர்.

                மங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், ‘சகலவலாவல்லிமாலை’ க்கு உரை விளக்கமும் ‘நளவெண்பா’வுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘யையும், ‘நன்னூல் உரை’ நூலையும் ஆக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மனை­வியர் தினம் ஆகஸ்ட் 30, Wife_Day_August_30


மனை­வியர் தினம் ஆகஸ்ட் 30, Wife_Day_August_30.

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை!

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த    ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.


உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர்.


சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் திகதி    ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

“கணவன் – மனைவி உறவு” பற்­றியும், சிறந்த தம்­பதி எப்­படி இருக்க வேண்­டு­மென்றும் அருட்தந்தை அழ­காக விப­ரித்­துள்ளார்.


மனைவி அமை­வ­தெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞன் அழ­காக வர்­ணித்­துள்ளான். குடும்ப அமை­திக்கு வித்­திட்ட என் மகான் மனை­விக்குக் கொடுத்த அன்பு பரிசு” மனைவி நல­வேட்பு”

இரு மனங்கள் இணை­கிற வைபோ­கமே திரு­மணம். இது மனித வாழ்வில் புனிதம் நிறைந்த உறவின் திற­வுகோல். ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஆத­ர­வா­கவும், ஆதா­ர­மா­கவும் அமையும் இந்த உற­வில்தான் நிறைவு வரும். ஞானம் வரும்.

ஒரு ஆணின் வாழ்வு பெண்ணின் வரு­கை­யாலும், ஒரு பெண்ணின் வாழ்வு ஆணின் வரு­கை­யாலும் இனிமை காண வேண்டும்.: இன்னால் காணக் கூடாது. கண­வனும், மனை­வியும்  ஒரு­வரை ஒருவர் மன­தார விரும்ப வேண்டும்..

முழு­மை­யாக நம்ப வேண்டும்..இரு­வரின் ரச­னையும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.ஒருவர் ரச­னையில் ஒருவர் குறுக்­கி­டாமல் இருக்கும்  பெருந்­தன்­மையே போதும்.

இந்த உலகில் பெற்ற தாய் தந்­தைக்கு அடுத்­த­படி ஆறுதல் தரு­கின்ற, அக்­க­றைப்­ப­டு­கின்ற உறவு கண­வ­னுக்கு மனை­வியும்,மனை­விக்கு கண­வனும் தான்.

ஆண்,பெண் உற­வு­களில் நிலவும் ஒழுக்­கத்தின் மூலமே உயர்ந்த நாக­ரிகம் உண்­டாகும். இந்த ஒழுக்­கத்தை பாது­காக்கும் கவ­சமே திரு­ம­ண­மாகும். ஓவ்­வொரு கணவன் – மனைவி உறவை உயி­ரிலும் மேலா­ன­தாக மதித்துப் போற்ற வேண்டும்.

உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்­றையும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன­தார அர்ப்­ப­ணித்து, இன்ப, துன்­பங்­களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதி­க­மாக அடங்­கி­யுள்­ளது.


தமது பண்­பாட்­டின்­படி பார்த்தால்,பெண்கள் இயற்­கை­யி­லேயே தியா­கிகள் என்று சொல்­லலாம். கணவன் வீட்­டுக்கு வரும்­போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்­நிலை எல்­லா­வற்­றையும் துறந்­து­விட்­டுத்தான் வரு­கி­றார்கள். திரு­மண வாழ்­க­கையைத் தொடங்­கு­வ­தற்கு முன்பே, துறந்து வரக்­கூ­டிய ஒரு இயல்பு அவர்­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றது.

இப்­படி எல்­லா­வற்­றையும்;     துறந்து விட்டு இங்கே அன்பு நாடி வந்த பெண்­ணுக்கு ஆத­ரவு கொடுக்க வேண்­டி­யது அவ­சியம். இந்த உண்மையை ஒவ்­வொரு கண­வனும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

ஒரு மனைவி என்ற மதிப்பு மட்­டு­மல்ல.. பெண்­மையும், தாய்­மையும் ததும்பும் எல்­லோ­ருக்கும் தர வேண்­டிய அதே மதிப்பு நம் வீட்­டுக்கு வாழ வந்த பெண்­ணுக்கும்  உண்டு என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். கணவன்- – மனைவி உறவில் இந்தப் பண்­பாடும் தியா­கமும் இருந்தால் போதும் அதை­விடப் பெரிய இன்பம் இந்த உல­கத்­தில் வேறு இருக்க முடி­யாது.

ஒரு­வ­ருக்­கொ­ருவர் சச்­ச­ரவு இல்­லாத குடும்­பத்­தில்தான் குழந்­தை நன்­றாக இருக்கும். பிரச்­சினை உள்ள குடும்­பங்­களில் அடக்கு முறைக்கு குழந்­தை­களின் சுதந்திரம் பறி­போகும்.

இந்தப் போராட்­டத்தால் குழந்­தையின் உடல்­ந­லமும்,மன­ந­லமும் கெடும். ஒரு­வ­ருக்­கொ­ருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழ்­வ­துதான் திருமண பந்தம் என்­பதைப்  புரிந்து கொண்ட வீடு­களில் இந்தப் போராட்டம் இல்லை.

விட்­டுக்­கொ­டுப்­ப­தற்குப் பதி­லாக, ஒவ்­வொ­ரு­வரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்­துதான் உயர்ந்­தது” என பிடி­வாதம் காட்­டினால் பிணக்­குதான் வரும்.

கண­வனும்,மனை­வியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷ­யங்­களில் எந்தக் குறையும் இருக்­காது.

ஒரு குடும்­பத்தில் கணவன், மனைவி இரு­வரின் உற­வி­னர்­களும்; விருந்­தி­னர்­க­ளாக வர­வாய்ப்­புகள் உண்டு. அவர்­களை ஒத்த மதிப்­போடு இரு­வரும் உப­ச­ரிப்­பது கணவன் – மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உண­வே­யா­யினும் விருந்­தி­னரை உப­ச­ரிப்­பதில் இன்­முகம் காட்­டுங்கள்.

‘இறை­வனே மனைவி வடி­வத்தில் வந்து எனக்குத் துணை­யாக இருக்­கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனை­வியும் கண­வனை இப்­படி கடவுளின் வடி­வ­மா­கவே தனக்கு உற­வாகி வந்­த­தாக நினைக்க வேண்டும். இப்­படி ஒரு­வ­ரிடம் இன்­னொ­ருவர் தெய்­வ­நி­லையைக் கண்­டு­விட்டால் போதும்.

எத்­தனை துன்­பங்கள் வந்­தாலும் அவற்றை சமா­ளிக்கும் வலிமை கிடைக்கும். இல்­லற வாழ்க்­கையில் யாரும் அனு­ப­வித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.

மனித இனம் வியப்­பா­னது. ஒரு பொருளை விரும்­பினால், அதை அடை­வ­தற்கு முன்பு அது பற்றி பல நன்­மை­க­ளையும், மேன்­மை­க­ளையும் கற்­பனை செய்­து­கொண்டு இன்பம் அடையும். ஆனால், அதை அடைந்­த­பி­றகு, எப்­போதும் குறை­களைக் கண்­டு­பி­டித்து சோர்ந்து போகும்.

கணவன் – மனைவி உறவில் முக்­கி­ய­மாக தவிர்க்க வேண்­டி­யது இதைத்தான். உங்கள் துணை­யிடம் இருக்கும் நல்ல விஷ­யங்­க­ளையும், உயர்ந்த குணங்­க­ளையும் பாராட்­டுங்கள். குறை­களை மனதை புண்­ப­டுத்­தாமல் எடுத்துச் சொல்லி நிறைவு செய்ய முயற்­சி­யுங்கள். வாழ்வு வளம் பெறும், குடும்பம் தழைத்­தோங்கும்.

உல­கத்­தி­லேயே நட்பு மிக மிகச் சிறந்­தது.: பய­னு­டை­யது. அதிலும் கணவன் – மனைவி நட்பு பற்றி சாதா­ர­ண­மாகச் சொல்­லி­விட முடி­யாது. புனி­த­மான உறவில் தோன்­றிய உன்­ன­த­மான நட்பு.

இரு­வ­ரு­டைய வாழ்க்­கையும் மேன்மை பெறவும், குடும்பம் வளர்ச்சி பெறவும், இந்த நட்பே பிர­தா­ன­மாக தேவைப்­ப­டு­கி­றது. இப்­ப­டிப்­பட்ட குடும்­பத்தில் வளரும் குழந்­தைகள் எத்­த­கைய நற்­பண்­பு­க­ளுடன் திகழும் என்­பதை நினைத்துப் பாருங்கள்!

கண­வனை மனை­வியும், மனை­வியை கண­வனும் பாராட்ட வேண்­டி­யது மிக மிக அவ­சியம். .சிறப்­பாக எதை­யா­வது செய்­தாலும், உயர்­வான பண்­பு­களை வெளிப்­ப­டுத்­தி­னாலும் மனம்­தி­றந்து பாராட்­டுங்கள். இது அன்­பையும், நட்­பையும் இறுக்­க­மாக்கும்.

இதற்­காக எப்­போதும் எல்­லா­வற்­றையும் பாராட்­டிக்­கொண்டு இருக்க வேண்டும். என்­ப­தில்லை. அப்­ப­டிச்­செய்து கொண்­டி­ருந்தால் அது வெறும் முகத்­துதி ஆகி மதிப்பு இழந்து விடும்.    உள்­ளதைப் பாராட்­டி­னாலே போதும்.

ருசி­யாக மனைவி சமைத்துப் பரி­மா­றினால், “நன்­றாக இருக்­கி­றது” என்று சொல்­லலாம். இல்­லையா? பல­ருக்கு இதைச் சொல்ல வராது. .மாற்றிக் கொள்ள வேண்டும். காலை முதல் மாலை வரை நல்ல விஷ­யங்­களைப் பாராட்டிக் கொண்டே இருங்கள். அதுவே பண்­பாட்டின் உயர்வு.

சில குடும்­பங்­களில் கண­வனோ, மனை­வியோ பலரால் பாராட்­டப்­படும் பெரு­மைக்­கு­ரிய சாத­னை­யா­ள­ராக இருக்­கலாம். இப்­படி ஊரே தங்­களைப் பாராட்­டும்­போது, தங்கள் வாழ்க்கைத் துணையும் பாராட்­டப்ப­ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருக்கும். ஆனால், அப்­படி நினைப்­ப­வர்கள் ஒரு உண்­மையை உணர வேண்டும்.

தன் கண­வரை   ஊரே பாராட்­டும்­போது அதில் சந்­தோ­ஷமும், பூரிப்பும் அடைந்­தி­ருப்பார் மனைவி. கண­வனும், மனைவியும் இரண்டு உடல்­க­ளாகப் பிரிந்தி­ருக்கும் ஒற்றை உயிர்தான் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு இருக்கும். கண­வ­னுக்குக் கிடைக்கும் பாராட்டு தனக்கும் சொந்­த­மா­னதே என்ற பூரிப்பில் திளைத்­தி­ருப்பார்.

அந்த நினைப்பில் இருக்­கும்­போது அவ­ருக்கு கண­வனைப் பாராட்டத் தோன்­றாது. எனவே இதைக் குறை­யா­கவும் எடுத்­துக்­கொள்ளக் கூடாது. அலட்­சியம் செய்­வ­தா­கவும் நினைக்கக் கூடாது.

இதே­போல இன்­னொரு விஷ­யத்­தையும் புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் சொல்லும் கருத்து சரி­யா­ன­தாக இருந்­தாலும், அது எத்­தனை உயர்­வா­ன­தாக இருந்­தாலும், உங்கள் வாழ்­க்­கைத்­துனை ஒப்­புக்­கொள்ளா விட்டால்

அதை ஒதுக்­கி­வைத்து விடுங்கள். அவர் ஏற்­றுக்­கொள்­ளும்­வரை காத்­தி­ருங்கள். குடும்ப அமை­தியை இழந்­து­விட்டுப் பெறும் எந்த விஷ­யத்­தாலும் பயன் இல்லை.

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில் பெற்­றோரை, பிறந்த ஊரை,.உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.
நன்றி இலக்கியா 

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் ஆகஸ்ட் 30,



சர்வதேச காணாமல் போனவர்கள் தினம்
ஆகஸ்ட் 30, 

*சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ, அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.*

*யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா கண்டித்திருக்கிறது.

அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் தேவை என்றும் கோரியுள்ளது.

லட்சக்கணக்கானோரைக் காணவில்லை

உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

பலர் கட்டாயமாக காணாமல் செய்யப்படுகிறார்கள். குறித்த நபர்களை விரும்பாத ஒரு அரசியல் பிரமுகரோ அல்லது ஒரு இராணுவ தலைமையோ அவரை அவரது குடும்பத்தில் இருந்து அல்லது வீட்டில் இருந்து தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடும். அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதும் தெரியாமல் போய்விடும். அவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்தலாமா அல்லது முடியாதா என்பதுகூட உறவினர்களுக்கு அதன் பின்னர் தெரியாது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வருடக்கணக்கில் தொடரலாம் என்று கூறுகிறார் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் குறித்த ஐ நா சாசனம் கடந்த வருடம் முதல் அமலுக்கு வந்தது. ஆனால், கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல் இன்னமும் ஒரு கவலைக்குரிய வழமையாகவே தொடர்வதாக ஐ நா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது

சில நாடுகளில் ஜனநாயகத்தை முறையாகக் கோருவோரை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ இது ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் ஐநா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும், கட்டாயமாகக் காணாமல் செய்யப்படுதல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐநா வலியுறுத்துகிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2019

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29.


தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29.

தயான் சந்த் (29, ஆகஸ்ட், 1905 - 3, டிசம்பர், 1973)  பிறந்த நாள். இதைத்தான் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.. அந்த அளவுக்கு தயான் சந்த் செய்த சாதனை என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், உலகில் ஒரு காலத்தில் இந்தியா கொடி கட்டி பறந்தது. அதற்கு துவக்கத்தை கொடுத்தவர் தயான் சந்த். 1928 ஆம்ஸ்டர் டாம் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்றது. அப்போது, கப்பல் மூலம் சென்ற அணிக்கு வாழ்த்து கூறி வழியனுப்பியர்கள், 5 பேர். அதே அணி, நாடு திரும்பியபோது, மும்பை துறைமுகத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற இந்திய அணியின் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் தயான் சந்த். அந்த ஒலிம்பிக்கில், 5 ஆட்டங்களில், 14 கோல்களை அடித்தார் தயான் சந்த். இந்தியா தங்கம் வென்றவுடன், ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் வந்த செய்தியின் தலைப்பு இது ஹாக்கியே இல்லை. ஏதோ மாயஜாலம் நடந்தது. அதை நடத்திய மந்திரவாதி தயான் சந்த்' இந்த ஒன்றே போதும், தயான் சந்தின் பெருமையை கூறுவதற்கு,

இந்தியாவுக்கு, 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்தவர் தயான் சந்த். 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவருடைய உண்மையான பெயர் தயான் சிங். இரவில் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அப்போதெல்லாம், தற்போதுள்ள அளவுக்கு மின்விளக்கு வசதிகள் கொண்ட மைதானம் கிடையாது. நிலவின் வெளிச்சத்தில் பயிற்சி மேற்கொண்டதால், அதை குறிக்கும் வகையில், சந்த் (நிலவை இந்தியில் சந்த் என்றழைப்பர்) தயானுடன் சந்த் சேர்ந்தது. அதுவே அவருடைய பெயராகவும் மாறியது.

ஹாக்கி போட்டிகளில், 200க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். ராணுவம் மற்றும் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், பயிற்சியாளராக தனது சேவையை தொடர்ந்தார். அவரிடம் பந்து சென்றுவிட்டால், அது கண்டிப்பாக கோலாகிவிடும் என்று, மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் திரும்பி விடுவார்கள். மைதானத்தில் தயான் சந்தின் வேகத்தை குறிக்கும் வகையில், ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவருடைய சிலையை வைத்துள்ளனர். அதில் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டையுடன் தயான் சந்த் இருப்பார்.

பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள தயான் சந்த் நினைவாக, 2012 முதல், அவருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். விளையாட்டு துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்படுகிறது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26.


 உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26.

நாய்
விலங்கு
வேறொரு மொழியில் படிக்கவும்
இந்தப் பக்கத்தைக் கவனிக்கவும்

வீட்டு நாய்
புதைப்படிவ காலம்:Late Pleistocene -
இராசபாளையம் நாய்
காப்பு நிலை
கொல்லைப்படுத்தப்பட்டுவிட்டது
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
யூக்கார்யோட்டா
[நல்லுயிர் (அல்) பாவுயிர்]
(Eukaryota)
திணை:
விலங்கினம்
தொகுதி:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
ஊனுண்ணி
குடும்பம்:
நாய்ப் பேரினம்
பேரினம்:
நாயினம்
கேனிசு (Canis)
இனம்:
சாம்பல் ஓநாய்
கேனிசு லூப்பஸ்
(C. lupus)
துணையினம்:
C. l. familiaris
மூவுறுப்புப் பெயர்
Canis lupus familiaris
(லின்னேயசு, 1758)


தமிழகத்திலிருக்கும் ஒரு நாய்

நாய்: சிறியது+பெரியது
நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000  ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.


பெயர்களும், வகையும்

நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்.

அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)

அறிவுத்திறன்
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

நாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்

நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.

பாகுபாட்டியல்

உயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த "நான்கு கால்கள்" கொண்டவை ("quadruped") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய canis என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை Canis vulpes என்றும், ஓநாய் என்பதை Canis lupus என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை Canis canis என்று குறிப்பிட்டிருந்தார்.

பின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த Canis canis என்பதை நீக்கிவிட்டார், ஆனால் "நான்குகால்கள்" ("quadruped") விலங்குகளின் குழுவில் Canis என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத aegyptius (தோல்நாய்கள்), aquaticus எனப்படும் "நீர்மீட்பு நாய்கள்", mustelinus எனப்படும் "குட்டைக்கால் நாய்கள்" அல்லது "பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் Canis domesticus என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், Canis familiaris, நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.

வீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர்.[9][10] இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, Canis lupus familiaris (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு (Canis familiaris) என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது.

இந்திய நாய்கள் மிக முக்கியதுவம் வாய்ந்தவை(ராஜபாளையம்/கன்னி/கோம்பை/அலங்கு)

ஓநாயிலிருந்து வேறுபாடு

ஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் . மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும். நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள் .

தொன்மவியல்

நாயுடன் பைரவர்
தொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும். நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும். பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது.
கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது.

இந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு.

இலக்கியங்களில் நாய்

நாலடியாரில் நாய்

நாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில் நாய்

இலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது.


நாய்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்....

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில‌் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.


 நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு #world_dog_day

நாட்டு மாடுகளைப் போன்று தமிழர் களின் வாழ்க்கை முறை, பாரம்பரி யத்தோடு ஒன்றியவை நாட்டு நாய் கள். ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்துள்ளன.

தற்போது வெளிநாட்டு நாய் களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஜெர்மன் ஷெப் பர்டு, டாபர்மேன், லேப், டால் மேஷன், பக், ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை காவ லுக்காகவும், வர்த்தக ரீதியிலும் வளர்க்கும் ஆர்வம் அதிகரித் துள்ளது. நாட்டு நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இனங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டு நாய் இனங்களை அழிவில் இருந்து காத்து, மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹௌண்ட்ஸ்’ (Proud owners of royal tamil hounds) எனும் இக்குழு சமூக வலைதளங்களில் நாட்டு நாய் ஆர்வலர்களை தொடர்ந்து ஒருங் கிணைத்து வருகிறது.

இக்குழுவின் அட்மின் கன்னி யாகுமரியைச் சேர்ந்த எம்.நாக ராஜன் கூறியதாவது: வீரமும், விசுவாச குணமும் அதிகம் கொண் டவை நாட்டு நாய்கள். இவை அழியும் ஆபத்தான சூழலில் இருப் பதால், ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டெடுத்ததுபோல் நாட்டு நாய்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதனால், கல்லூரி ஆசிரியர் பணியை துறந்து, இளைஞர்கள் அடங்கிய குழுவைத் தொடங்கி பாரம்பரிய நாட்டு நாய்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோம்பை இன நாட்டுநாய்கள் சிங்கம், புலியைகூட எதிர்க்கும் குணாதிசயம் கொண்டவை மட்டு மின்றி உடல் பலம் மிக்கவை. இதற்காகவே இவற்றை பொள் ளாச்சி, சத்தியமங்கலம், உத்தரா கண்ட் போன்ற மலையோர பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர்.

வெள்ளை குதிரை போல் கம்பீர மும், வளர்ப்பவரிடம் விசுவாசமும் கொண்டவை ராஜபாளையம் நாய் கள். கிராமப்புறங்களில் பெண் வீட் டார் சீதனமாக கொடுக்கும் கன்னி நாய் வகைகளை மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதியினர் ஆர்வ முடன் வளர்க்கத் தொடங்கியுள்ள னர்.

சிறந்த தோட்ட காவலாளியான வேட்டை குணாதிசயம் கொண்ட சிப்பிப்பாறை இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரளவு காணப் படுகிறது. சென்னையில் இருந்த பாரம்பரிய நாட்டு நாய்கள் அபி விருத்தி மையம் மூடப்பட்டதால், எங்கள் குழுவைச் சேர்ந்த இளை ஞர்கள் அந்தந்த பகுதிகளில் பண்ணை அமைத்து நாட்டு நாய் இனங்களை மீட்டு வருகிறோம். இதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

நோய்கள் தாக்காது

கன்னியாகுமரி அரசு கால்நடை மருத்துவர் அனிஷ் கூறும்போது, “ நமது நாட்டு தட்பவெப்பத்துக்கு ஏற்றவை நாட்டுநாய்கள். உடலில் முடி குறைவாக உள்ளதால் நோய் கள் பாதிக்காது. வெளிநாட்டு நாய் களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு. நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். நாட்டுநாய்களுக்கு பிரத்யேக கவனம் செலுத்த வேண் டியதில்லை. சாதாரண உணவே போதும். நாட்டுநாய்கள் வளர்ப்பு குறித்து படித்த இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப் பதால், அவை அழிவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.
நன்றி இந்து தமிழ் திசை.


நாய்களுக்கான உணவு

நாய்களுக்கு உணவு அளிப்பதில் எவ்விதக் காலதாமதமும் ஏற்படக்கூடாது. சாதாரணமாகத் தினசரி நாய்களுக்கு 8 மணி நேர இடைவெளியில் மூன்று முறை உணவு அளிக்கலாம்.
பதிவு: மே 10,  2018 11:27 AM
காலை நேரத்தில் பாலும், இரவில் அளவான உணவும், நடுப்பகலில் நல்ல சத்தான உணவும் தேவைக்கேற்றவாறு அளிக்கலாம். இடையில் நாய்களுக்கு சிறிதளவு ரொட்டி, பிஸ்கெட்டுகள் அளிக்கலாம். நாய்களுக்கு மோப்ப உணர்வு அதிகமாக உள்ளதால் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவை முதலில் முகர்ந்து பார்த்துப் பின்னர் உண்ணும். ஆகவே, அவற்றிற்கு அளிக்கப்படும் உணவு எந்த வகையான உணவாக இருந்தாலும் சத்தாகவும், சுத்தமான புதிய உணவாகவும் இருக்க வேண்டும்.

நாய்களுக்கான உணவில் 40 சதவீதம் இறைச்சி, 30 சதவீதம் காய்கறி, 30 சதவீதம் மாவுச்சத்துக்கான பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு கொடுக்கும் போது இறைச்சிக்குப் பதிலாக பயறு வகைகள் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கெட்டுப்போன உணவுப் பண்டங்களை கொடுக்கக்கூடாது. உண்டு முடித்த பின்னர் மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு அன்னியர் தரும் உணவை பயன்படுத்தக் கூடாது. மேலும், தெருக்களில் எறியப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிட நாய்களை அனுமதிக்கக்கூடாது. கோடைக்காலத்தில் நாய்கள் குறைந்த அளவு உணவை உட்கொள்ளும். ஆகையால் சைவ உணவு உட்கொள்ளும் நாய்களுக்கு தேவையான அளவு எரிசக்தி கிடைப்பதில்லை. இந்த நேரங்களில் உணவுடன் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுடன் தாது மற்றும் உயிர்ச்சத்துக்களை கொடுக்க வேண்டும். வாசனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளை தவிர்க்க வேண்டும். உணவு வகைகளையும், உணவிடும் நேரத்தையும் அடிக்கடி மாற்றம் செய்தல் கூடாது.

நாய்களுக்கு கொடுக்கப்படும் சில உணவுகள் கெடுதலை தரும். சாக்லெட், காபி, டீ போன்றவற்றில் உள்ள புரோமின் என்னும் வேதிப்பொருள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இவற்றை சாப்பிடும் பொழுது நாய்களுக்கு சோர்வு, வாந்தி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படும். திராட்சை மற்றும் உலர் திராட்சையை நாய்கள் சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கும்.

செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை எந்த காரணம் கொண்டும் நாய்களுக்குக் கொடுக்கக்கூடாது. இவை சிறுநீரகத்தை பெரிதளவு பாதிக்கும். வேகவைக்காத இறைச்சியை நாய்கள் சாப்பிட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் நாய்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். நாய்களுக்கு உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இதே போல் வெங்காயம், பூண்டு அதிக அளவில் உணவில் சேர்த்தால், நாய்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடும்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26.


அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26.1910.

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

புனிதர் அன்னை தெரசா!
அன்னை தெரசாவிற்கு இன்று வாட்டிக்கனில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. அதன் வீடியோ

'அன்னை தெரசா'  எனும் பெயரை 'அன்னை' எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. அந்தளவுக்கு நம் மனதில் வாழும் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் . அவரது வாழ்விலிருந்து சில துளிகள்...

இளமைப் பருவம்!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார். தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார். தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன்னிரண்டு வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல், மருத்து வைத்து விடுதல் ஆகிய பணிகளைச் செய்ததும், அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்.


இந்திய வருகையும், 'தெரசா' பெயர் மாற்றமும்!

சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்த தெரசா, தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார். அதன்படி தாய், சகோதரி மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வந்த அண்ணனிடமும் சம்மதம் பெற்றார். வீட்டிலிருந்து விடுபட்டு 'Sodality of children of Mary' என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார்.  ஒருமுறை இந்தியாவின் மேற்கு வங்கம் பயணம் முடித்து திரும்பிய அச்சகோதரிகளின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினரை பற்றி தெரிந்துகொண்டார். பின்னர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக, துறவறம் செல்ல முடிவெடுத்தார். அதன்படி 1928-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி ராத் ஃபர்ன்ஹாம் (Rathfarnham) எனப்படும் அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்போதுதான் 'ஒரே தேவை, சேவை'. அதுவும் குழந்தைகள், பெரியவர்கள், ஏழைகள், நோயாளிகள் என பாரபட்சம் இன்றி எல்லோருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தார். பிறகு 1929-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். சட்ட விதிகளின்படி புதிதாக வந்து அங்கு சேருபவர், பெயரை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பிரான்ஸ் நாட்டின் சகோதரி 'தெரசா மார்டின்' ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு அவரது உடல்நிலை இடம்தராததால், 'காசநோயால்' தனது 24 வயதில் மரணித்தார். அவரது நினைவாக தனது பெயரை 'தெரசா' என மாற்றிக் கொண்டார்.

சேவையில் ஈடுபாடு!

* கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரசா, அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலையில்லா திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்களைக் கண்டு வருத்தம் கொண்டார். அச்சூழலில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகளிடம் அன்பு காட்டி பாடம் கற்பித்தார். சில காலங்களிலேயே 'இந்தியாதான் இனி என் தாய்நாடு' என முடிவெடுத்தார். இந்தி மொழியும் கற்றுக் கொண்டார். மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார். அங்கு கல்வியுடன், சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார். ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார். ஆசிரியையாக இருந்த தெராசா, பின்நாளில் பள்ளி முதல்வரானார். பதினேழு ஆண்டுகள் கல்வி பணியில் இருந்து, ஏராளமான நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.


* 1942-43 -ம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரும், விடுதலைப் போராட்டங்களும் உச்சத்தில் இருந்தது. மக்கள் பஞ்சத்தில் தவிப்பதைக் கண்டு அவர்களுக்கு அதிக நேரம் உதவி செய்ய நினைத்தார் தெரசா. ஆனால் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், கல்வி பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். 1948-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தன் விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அன்றுமுதல் முழு நேரமாக தன் சேவை பணியைத் தொடங்கினார். அன்றைய தினத்தில் ஐந்து ரூபாய் பணம், மூன்று நீல நிற சேலைகள்தான் அவரது சொத்தாக இருந்தது. குடிசையில் வசித்த மக்களைச் சந்தித்து, ஆறுதலாக பேசினார். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார். பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனைக்குச் சென்று தன் செவிலியர் பணியை மேம்படுத்திக் கொள்ள போதிய பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். பல விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அப்போது மருத்துவத் துறைக்குத் தேவையான 'உற்சாகம்', 'ஆர்வம்', 'பொறுப்பு' ஆகிய மூன்று நற்குணங்களையும் தெளிவுற கற்றுக்கொண்டார்.

* தெரசாவுடன் லொரேட்டாவின் முன்னாள் மாணவியர்கள் பத்து பேர் கொண்ட முதல்கட்ட சேவைக்குழு உருவாகி, மக்களுக்காக பணிசெய்ய தொடங்கியது. 1949-ல் கொல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை 'பள்ளிக்கூடம்' என்பதைத் தெரிந்துகொண்டார். சில காலங்களிலேயே ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார். மாணவர்களின் எண்ணிக்கையும் சீக்கிரமே அதிகரித்தது. சில காலங்களிலேயே நோயுற்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பெண்மணியை கண்டு மனம் உருகினார். உடனே, சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று உபரி மருத்துவ பொருட்களைத் தாருங்கள். பல ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டார். பல தரப்பிலும் இருந்து உதவிகள் கிடைத்தன.

* 1950-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' என்ற சபையைத் துவங்கி, பசியால் வாடும், வீடின்றி தவிக்கும், மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இருந்தும் ஆதரவற்றும் அடைகலம் இன்றியும் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கருணை இல்லம் ஒன்றை உருவாக்க ஆசைபட்டார். அரசின் உதவியுடன் 'காளிகட்' என்ற இடத்தில் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற முதியோர் கருணை இல்லத்தை ஆரம்பித்தார். பின்னாளில் அது, 'காளிகட் இல்லமானது'. அதே ஆண்டு ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்ற சேவை அறக்கட்டளையைத் தொடங்கி, நோய்வாய்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

* 1955-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி, ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார்.

* தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி, அதே ஆண்டு 'காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எஸ்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

* சிறை கைதிகளுக்கும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளுடன், ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்து வந்தார்.


* உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும், உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து, மருத்துவம் செய்து பராமரித்தார். அதனைக் கண்ட பலரும் 'ச்சீ' என சொல்லியதும் உண்டு. பதிலுக்கு 'ச்சீ' எனச் சொல்லி ஒதுங்கினால் காயம் குணமாகாது. அவர்களுக்கு பணிவிடை செய்வதுமட்டுமே தீர்வு என்பதையே பதிலாக கூறுவார்.

* இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளுக்கும் 'பிறர் அன்பின் பணியாளர்' சபையினை சேவைகளை விரிவுபடுத்தினார். அதன்படி 1965-ம் ஆண்டு வெனிசூலாவிலும், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சேவை மையங்களை நிறுவினார். சுதந்திரப் போராட்டங்கள், போர், உள்நாட்டு கலவரங்கள் என எந்த நாட்டில் மக்கள் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சென்று உதவிகள் செய்துவந்தார்.


சோதனைகளும் சாதனைகளும்!

* தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார். அவர் தெரசாவை கண்டும் காணாமலும் இருந்தார். தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார். கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை,  தெரசாவின் கையில் துப்பினார். சற்றும் பொறுமையை இலக்காத தெரசா, இது நீங்கள், எனக்கு கொடுத்தது. பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும், அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிக்ச் செய்தார். இப்படி ஒவ்வொரு நாளும், பல வழிகளில் அவமானங்களையும், சங்கடங்களையும் சந்தித்துக்கொண்டுதான் சேவையாற்றி வந்தார். ஆனால் அவரது ஒரே நோக்கம், இவ்வுலகில் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் துன்பங்களைச் சந்திப்போர் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் என்னால் இயன்றவர்களுக்கு உதவி செய்யவே கடவுள் என்னைப் படைத்திருக்கிறார் எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.


* தெரசா உலகம் முழுக்க பலராலும் 'சிறந்த சேவகர்' எனப் பாராட்டப்பட்டாலும், விமர்சனக் கணைகளையும் சுமக்காமல் இல்லை. கருக்கலைப்பிற்கான எதிர்ப்பு, கொல்கத்தா நகரின் புகழையும் குலைத்து விட்டார் என ஏராளாமான விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். இது போதாத குறையாக இவரின் மருத்துவ சேவையின் தரம் மற்றும் நன்கொடையாக வரும் பணத்தை செலவு செய்யும் விதம் பற்றி ஊடகங்களுக்கும் பல விமர்சனங்களை தெரசாவின் மீது சுமத்தினார்கள். இவற்றை எல்லாம் தகுந்த முறையில் எதிர்கொண்டு, நேர்மையான முறையிலும், அகிம்சை முறையிலும் தன் சேவைப் பணியைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, 1969-ல் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஆவணப்படம் வெளிவந்த பிறகு, உலகம் முழுக்க பிரபலமானார்.

இறப்பு!


1983-ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை ரோம் நகரில் சந்தித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பலமுறை இருதயக் கோளாறுகளால் அவதிபட்டு வந்தார். அதனால் 1991-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனாலும் அந்த அமைப்பின் மற்ற அருட்சகோதரிகள் இவரைத் தலைமைப் பொறுப்பில் இருக்க வற்புறுத்தினர். ஆனால் கால் முறிவு, மலேரியா, இருதயக் கோளாறு என இவரது உடல்நிலை மோசமாகவே, 1997-ல் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகினார். 45 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றோர் எனப் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் சேவை புரிந்து வந்த தெரசா, 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.  தெரசாவை, இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் 'அன்னை தெரசா'வாக அழைத்தனர்; அவரது சேவையைப் போற்றினர். அன்னை தெரசா மரணமடைந்த போது, உலகின் பல தரப்பட்ட மக்களின் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக அவர் மரணமடைந்த போது, அவரது 'பிறர் அன்பின் பணியாளர் சபை' 123 நாடுகளில் 610 சேவை மையங்களை இயங்கி வந்ததுடன், 4 ஆயிரத்தும் அதிகமான அருட்சகோதரிகளையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டும் இருந்தது.

பெற்ற விருதுகள்!


1962-ல் பத்மஶ்ரீ விருது.

1972 -ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது.

1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு.

1980- இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது.

1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை.

தவிர பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகள்.

இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள்.
2003-ல் 'அருளாளர்' பட்டம் பெற்றார்.

* 2002-ம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸ் என்ற பெண் புற்றுநோய் கட்டியால் துன்பப்பட்டு வந்துள்ளார். அன்னை தெரசாவின் உருவம் பதித்த பதக்கத்தை அணிந்து, அவரை வணங்கியதால் அவரது உடல் பூரணமாக குணமடைந்துள்ளது. இந்த நிகழ்விற்காக 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு 'அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.

* பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனம் உருக பிரார்த்தனை செய்து வந்ததாகவும், அதனால் அவரது உடல் பூரண குணம் பெற்றதாகவும் கூறினர். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அங்கீகரித்துதான், அன்னை தேராசின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான இன்று (செப்டம்பர் 4-ம் தேதி) அவருக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியுள்ளார், போப் பிரான்சிஸ்.

அன்னை தெரசாவிற்கு அவர் வாழ்ந்த மதம் வழங்கும் உயரிய அங்கீகாரம், 'புனிதர் பட்டம்'. மக்களின் மனதில் அன்போடும், கருணையோடும் போற்றப்படுபவார். இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

புனிதர் பட்டம்!

இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தேர்வுகள் தொடங்கும். நான்கு நிலைகளைக் கடந்து, அப்பட்டத்தினைப் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் 'புனிதர்' என நம்பப்படுவோர், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் முதல் நிலையான 'இறை ஊழியர்' (servant of god) என்ற பட்டம் வழங்கப்படும்.

* பிஷப்பினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இறந்த ஒரு நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும். அவர் நற்பண்புகளுடன் இருக்கிறார் என்று பரிந்துரை செய்யும் பட்சத்தில், அவருக்கு இரண்டாம் நிலையான 'வணக்கத்திற்குரியவர்'(venerable) என்ற பட்டம் வழங்கப்படும்.

* கிறிஸ்தவ நம்பிக்கையினைப் பின்பற்றி, சிறப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் எனவும், மற்றவர்களின் நலனுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராகவும், அற்புதம் (miracle) செய்பவராக இருக்கிறார் எனவும் உறுதி செய்து, மூன்றாம் நிலையான 'அருளாளர்' (முக்திப் பேறு) (blessed) பட்டம் வழங்கப்படும்.

* மேற்கண்ட மூன்று நிலைகளும் முடிந்த பின்னர் மீண்டும் ஓர் அற்புத நிகழ்வு நடந்தால் நான்காம் மற்றும் இறுதி நிலையான 'புனிதர் பட்டம்' (saint) வழங்கப்படும். இவ்விருது வழங்கப்படும் இறந்த மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியிலில் சேர்க்கப்படுவார்.


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அடிமை வர்த்தகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 23



அடிமை வர்த்தகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 23,(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, August 23 )

அடிமைகள் வியாபாரத்தையும், அது ஒழிந்த விதத்தையும் நினைவுப்படுத்தும் சர்வதேச நாள் தான், அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்.

இதை ஆங்கிலத்தில் International Day for the Remembrance of the Slave Trade and its Abolition, August 23 என்பார்கள்.

மனித இன வரலாற்றில் அடிமைகள் வியாபார முறையையும், அதனை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர  நடவடிக்கைகளை  பற்றியும் நினைவு கூறும் நாள்தான் இது...!

இன்று உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.


#வரலாறு...

உலக அளவில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் நினைவூட்டும் தினமான இது கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஹைத்தி நாட்டிலும், 1999 ஆம் ஆண்டு செனகல் நாட்டிலும் இந்தத் தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்றைய தேதியில் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றன.

#அடிமை வியாபாரத்திற்கு எதிராக கிளர்ச்சி....!

கடந்த 1791 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவும் ஆகஸ்ட் 23 ஆம்ம் தேதியும் செயின்ட் டோமிங் என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி) அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது.

இது கலவரமாக மாறியது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் மற்றும் பாதிப்புகள் இனியும் தொடரக் கூடாது என்பதை  நினைவுப்படும் விதமாகவே இந்தத் தினம் உருவானது. 

உலக தேனீக்கள் தினம் ஆகஸ்ட் 17.


உலக தேனீக்கள் தினம் ஆகஸ்ட் 17.

கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது.
கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி  சொல்லும் உதாரணம், தேனீ மாதிரி உழைக்கணும் என்பதே. அப்படிப்பட்ட தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை 'உலக தேனீக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.

பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான். ஆனால், இங்கு பெண் அதாவது, ராணித் தேனீதான் தலைவன். அனைத்து தேனீக்களும் இதன் கட்டுப்பாட்டுக்குள்தான். பல்வேறு கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் முக்கிய வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீக்கு அடிமையாக வேலை செய்யும். அது மட்டுமல்லாமல் ஆண் தேனீக்களும் ராணித் தேனீக்களுக்கு அடிபணியும். பார்ப்பதற்குக்கூட ஆண் தேனீயைவிட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை டீ-ஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான இடங்களுக்குப் பயணம் செய்து தேன் சேகரிக்கும். தேனீக்கள் தன்னுடைய கூடு இருக்கின்ற இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் வரை சென்று தேனைச் சேகரிக்கும். உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளராக தேனீக்கள் இருக்கின்றன. உயிரினங்களின் யானை, ஆமைதான் அதிக ஞாபகசக்தி கொண்டவை. ஆனால், அவர்களைக் காட்டிலும் கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டது தேனீக்கள். தேனீக்கள் மிக அதிகமாகச் சுத்தம் பார்ப்பவை.

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன். ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாள்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், ராணித் தேனீ  2 லிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாள்கள் உயிருடன் இருக்கும். ராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 முதல் 7 லட்சம் முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும். இவற்றுக்கு 6 கால்கள் உண்டு. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். நிமிடத்துக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும்.

தேனீக்கள் தேன்

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது. தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவையே. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது. அதேபோல், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்துவிடுகிறது. தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவதும் தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலர் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள். தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர் என்று பலர் தேனீக்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.

குடும்பத்தின் தேவைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும், மருத்துவத்துக்கும் அதிகளவில் பயன்படும் தேனீக்களை, கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பாளையம் அருகேயுள்ள இயேசுராஜப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான சந்தியாகு என்பவர் பல்வேறு வருடங்களாக வளர்த்து வருகிறார்.

சந்தியாகு

தேன் வளர்ப்பு முறையும், தேனினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவர் கூறுகையில், தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை. தேனீக்களை மிக எளிதாக வீட்டின் அருகிலேயே வளர்க்கலாம். தேனீக்கள் வளருவதற்குப் பாதுகாப்பு முக்கியம். முக்கியமாக எறும்புகள் இருக்கும் இடத்தில் அவற்றை வளர்க்கவே கூடாது. தேன் கூடு வைத்த பிறகு அடிக்கடி அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பெட்டியில், எலி, பல்லி, பாம்பு, பூச்சிகள், கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்றவை உயிரினங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில்தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். பெட்டிகளில் வெடிப்புகள் பிளவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். பெட்டியை ஆடாமல் வைக்க மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துக்குள் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், தேன் கிடைக்காது. காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும்.

தேனீ வளர்பு

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தேனீப் பெட்டிகள், தேன் பிரிக்கும் இயந்திரம் என்று அனைத்தும் கடைகளிலும் வந்து விட்டன. தேனீப் பெட்டிகள் 6,500 ரூபாய் வரை கிடைக்கிறது. எந்தக் கலப்படமும் இல்லாதத் தூய்மையான தேனில் உயிர் காக்கும் நன்மைகள் உள்ளன. இயற்கை முறையில் உடலைப் பருமனாக மாற்றவும், உடல் பருமனை குறைப்பதிலும் அதிக பங்குவகிக்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால், குமட்டல் மற்றும் தலைவலி குணமாகும். தேனையும் மாதுளம் பழரசத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், இதய நோய்கள் தீரும். கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் குணமாகும். வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றித் தேன் தடவ வேதனைக் குறையும். இவை, கிராமப்புறங்களில்  கண்டுணர்ந்த இயற்கை வைத்திய முறைகள். அதுமட்டுமின்றி ரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நல்ல தூக்கம் வருவதற்கும், குடல் புண், வாய்ப்புண், ரத்த சோகை போன்ற பல்வேறு நோய்களையும் தேன் குணமாக்குகிறது என்கிறார்.

தேனீ

மேலும், தொடர்ந்த அவர், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். தற்போது பயன்பாட்டில் இருப்பவை சுத்தமான தேன்களாக இருப்பதில்லை. வியாபாரத்துக்காகக் கலப்படம் செய்யப்படுகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

தேன் கலப்படத்தைக் கண்டறியும் சில முறைகள்!

சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விட்டால், தண்ணீரில் கரையாமல் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
சுத்தமான காட்டன் துணியைத் தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாகச் சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன்.
சுத்தமான தேனை வாணலியில் சூடு செய்தாலும் அதன் அடர்த்தி குறையாது.
சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கும்போது அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும்.
சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும்.

சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக  உடனே ஒட்டாமல் குமிழ் போலப் பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போலப் பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும். இது போன்று பல்வேறு வழிமுறைகளில் கலப்படத்தை கண்டறியலாம் என்கிறார்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களாலும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கின்றன. நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதும், நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களைப் பாதுகாக்க நாம் தேனீக்களை வளர்க்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் சிறிதளவு தேனீக்களையும் அழிக்காமல் இருக்க, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம். இயற்கையைப் பாதுகாக்கலாம். இயற்கைக்குத் துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும்.

உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!


உலக தேனீக்கள் தினம் : அழிந்து வரும் தேனீக்கள்... காப்பாற்ற என்ன வழி...?

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .

ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.

தேனீக்களை எப்படி பாதுகாப்பது என்பதைக் இங்கே காணலாம்.....

பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணியுங்கள் : பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு , சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

தேனீக்களின் விருப்பமான மலர்கள் : தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும்.

தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு : வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க , பாதுகாக்க முன்வருவார்கள்.

தேனீக்களின் காப்பானாக இருங்கள் : பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சென்னை தினம் ஆகஸ்ட் 22.


சென்னை தினம் ஆகஸ்ட் 22.

சென்னை தினம் 380: சென்னையின் சில சுவையான முதல்கள்

* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா

*இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.

* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன.

* இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.

* ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !

* இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !

* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான்.

* இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் .

* இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.

* இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம்.

இன்றொடு சென்னைக்கு வயசு 379 ! #chennai380 #chennaiday #chennai #madras

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19.


உலக புகைப்பட தினம் ஆகஸ்ட்.19.
பழசு என்றும் புதுசு:
1839 ஆக., 19ல் உலகில் முதன் முதலாக புகைப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175வது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

முதல் படம்:

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. இதன் பின் புகைப்படத்துறை பல்வேறு நிலைகளில் முன்னேறியது. பல அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

வரலாற்றில்...:

20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற "டேங்க் மேன்', வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த "சிறுமியின் புகைப்படம்', 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த "குழந்தையின் புகைப்படம்' ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

நன்மை மட்டும் :

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஒரு 'க்ளிக்'; ஓராயிரம் 'லைக்!':

தூரிகையை எடுக்காமல் தீட்டப்படும் ஓவியம்; நான்கு கட்டங்களில் சொல்லக்கூடிய காவியம்; ஒற்றை 'பளிச்'சில், ஒரு சரித்திர பதிவு. நிஜத்தை நிழலாக்கி, நிழலுக்கு உயிர் கொடுக்கும், விரலின் வித்தைநமது எண்ணத்தின் ஒருமைப்பாடு, கலையாக பிரதிபலிக்கிறது. அந்தக் கலையில் ஒன்று தான், ஒரு கண்ணை மறைத்து 'ஆங்கிள்' பார்க்கும் புகைப்படத் துறை. ஓராயிரம் கவிதைகள், ஒரு பக்க செய்திகள் ஆகியவற்றை விட, நான்கு கட்டங்களுக்குள் அடங்கும் ஒரு புகைப்படம் பல தகவல்களை சொல்லி விடும்.போபால் நகர் சம்பவத்தின் கொடூரத்தை, இன்று வரை, கண்ணை மூடாமல் இறந்த சிறுவனின் புகைப்படம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம், கடந்த கால வரலாறுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் கூற்றையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.புகைப்படக்காரர்களின் சிறப்பையும், இவர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ம் தேதி, உலக புகைப்பட நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுவேரே என்பவர், 'டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார்.கடந்த 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி, பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு, 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு, பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஏனென்றால், இவர்கள் கனவுகளை தின்று திறமை வளர்ப்பவர்கள்.இன்று உலக புகைப்பட தினம் : ஆகஸ்ட் 19ம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த தினம் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளம் மற்றும் வர்த்தக ரீதியாக புகைப்பட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1839ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதியன்று காப்புரிமை பெறாமல், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டது.அதன் நினைவாகவே, ஆண்டுதோறும் புகைப்படதினம் கொண்டாடப்படுகிறது. முதல் வணிக ரீதியிலான புகைப்படம், 90 ஆண்டுகளுக்கு முன்பு, 110 மற்றும் 120 எம்.எம்., பிலிம் மூலம் எடுக்கப்பட்டது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 'டிஜிட்டல் கேமரா' பிரபலமானது.தற்போது 'ஸ்மார்ட் போன்' இருந்தாலே, ஒருவர் புகைப்பட நிபுணர் ஆகிவிடுகிறார் என்ற நிலை வந்து விட்டது.


புகைப்பட கலையின் வரலாறு :

மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது புகைப்படக்கலை. இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகைப்பட கலையின் தாக்கம் மிக அதிகம். இந்த பூமியையே செயற்கைக்கோள் என்னும் பெரிய கேமரா தினமும் படம் பிடித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவத் துறையில் மனிதனின் உடலினுள் கூட சென்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறது கேமரா. ஆனால், புகைப்படக் கலையின் வரலாறு 1000 ஆண்டுகள் பழமை உடையது. கி.மு., 300 களில் அரிஸ்டாட்டில் எனும் அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியே புகைப்படத்திற்கு ஆணிவேர்.கேமரா என்னும் சொல் 'இருட்டு அறை' என்று லத்தின் மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய கேமரா மூலம் உருவங்களின் பிம்பத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தினர். பின், 16ம் நூற்றாண்டில் தான் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1700ம் ஆண்டுகளில் நடந்த ஆராய்ச்சியில் வெள்ளி முலாம் பூசப்பட்ட தகட்டில் ஒளி பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது. நைஸ் போர் என்பவரால் 1826ல் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. கடந்த 1850ல் புகைப்படக்கலை இந்தியாவிற்கு வந்தது.


ஸ்மைல் ப்ளீஸ்...
 உலக புகைப்பட தினம்

 ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.


ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே

சிறந்த நிழல் படம்...

காலம் தின்ற

கண்ணாடிக்குள் கரையான் அரித்த

அட்டையில்

ஒட்டியிருக்கும்

என் அம்மாவின்

சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

புகைப்படக் கலை

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்... ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.


போட்டோகிராபி

1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

ஒளியின் எழுத்து

போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பிலிம் புகைப்படங்கள்

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

கேமரா அறிமுகம்
1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

டிஜிட்டல் கேமராக்கள்

முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதிர வைத்த ஐலான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

எளிதான புகைப்படக்கலை

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன

செல்போன் செல்ஃபிக்கள்

கேமராக்களில் மற்றவர்கள் நம்மை புகைப்படம் எடுத்தது போய் இப்போது செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. என்னதான் செல்போனில் செல்ஃபி எடுத்தாலும் கறுப்பு வெள்ளையில் அட்டென்சன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
நன்றி தினமலர்.