புதன், 14 அக்டோபர், 2009

உலக வறுமை ஒழிப்பு நாள்...அக்டோபர் 17 .


உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையால் 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பட்சாமக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் 1987 முதலாவதாக பிராண்சின் பரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.
ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.இந்தியாவில் மும்பையில் சாலையோரத்தில் ஏழைப் பெண்கள் துணி துவைக்கும் காட்சி.ஏழ்மை நிலையை absolute அல்லது தீவிர ஏழ்மை நிலை என்றும் relative ஏழ்மை நிலை என்றும் அதன் வீச்சை வேறுபடுத்தி காட்டுவர்.ஏழ்மை நிலையை ஒரு மக்கள் தொகையின் விழுக்காடாக குறிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக