வெள்ளி, 24 ஏப்ரல், 2020

உலக மலேசியா தினம் ஏப்ரல் 25


உலக மலேசியா தினம் ஏப்ரல் 25.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மலேரியா... அறிகுறிகள், பரிசோதனைகள், தீர்வுகள்! #WorldMalariaDay #DataStory

`அது ஒரு காலம்...’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். `எங்க காலத்துல ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லை’ என்று கூறியவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் யார் என்று கேட்டால், `நான்’ என்று பதில் வருவது மிகவும் அரிது. தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு நோய் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் ஏற்பட்ட பல்வேறு மரணங்களைத் தமிழக அரசும் மூடி மறைத்தது. இதேபோல், பல வருடங்களாகவே உலகம் முழுவதும் அதிக அச்சத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் மலேரியா.

இது மிகவும் பழைமையான, கொடிய நோய். இதை இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இன்னும் ஒழிக்க முடியவில்லை. மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக, அது தொடர்பான விழிப்பு உணர்வை உலகம் முழுக்க ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25-ம் தேதியை `உலக மலேரியா தினம்’ எனக் கடைப்பிடித்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் மக்களுக்குத் தைரியத்தை கொடுக்கும் ஒரு வசனத்துடன் விழிப்பு உணர்வு ஏற்படுத்திக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வசனம், `மலேரியாவை முறியடிப்போம்!’ 

`இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு மலேரியா தோற்று ஏற்படுகிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். `ஒவ்வோர் ஆண்டும் மலேரியா நோயைத் தடுக்கவும், அதற்காகத் தடுப்பு மருந்து வழங்கவும், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய்’ என்கிறது உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம். 2016-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுக்க 21,59,00,000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, அதில் 4,45,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

132 கோடி மக்கள்தொகை கொண்ட நம் இந்தியாவில் `தூய்மை இந்தியா’, `சுகாதாரமான இந்தியா’ எனப் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், சுகாதாரச் சீர்கேட்டால்தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் மலேரியாவால் 1,31,70,000 பேர் பாதிக்கப்பட்டு, ஒரு வருடத்தில் மட்டும் 23,990 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக மலேரியா ஆய்வறிக்கை 2014-ன்படி, இந்தியாவில் வசிக்கும் மக்களில் 22 சதவிகிதம் பேர் மலேரியா அதிகம் பாதிக்கும் பகுதிகளிலும், 67 சதவிகிதம் பேர் குறைவாகப் பாதிக்கும் பகுதிகளிலும், 11 சதவிகிதம் பேர் மலேரியா தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் வாழ்வதாகத் தெரிகிறது.

மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஓர் ஒட்டுண்ணி. இதற்கு, `பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்’ (Plasmodium vivax) என்று பெயர். பெரும்பாலும் சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்யும் பெண் அனோஃபிலெஸ் (Anopheles) கொசுக்கள் மூலமே மலேரியா பரவுகிறது.


எப்படிப் பரவுகிறது?

ஒட்டுண்ணி தொற்றுள்ள அனோஃபிலெஸ் கொசு, மனிதனைக் கடிக்கும்போது ஒட்டுண்ணி ரத்தத்தில் கலந்து 30 நிமிடங்களுக்குள் மிக வேகமாகக் கல்லீரலுக்குச் செல்லும். கல்லீரலை அடைந்த ஒட்டுண்ணி, மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும். (சில ஒட்டுண்ணிகள் கல்லீரலில் செயல்படாமல் தங்கிவிடும். இவை எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் செயல்திறன் பெற்று, பாதிப்பை ஏற்படுத்தலாம்). இனப்பெருக்கம் அடைந்த ஒட்டுண்ணி, ரத்தத்தில் கலந்து ரத்தச் சிவப்பு அணுக்களைத் தாக்கி, மேலும் அதிக அளவில் பரவும். இதன் மூலம் மற்ற சிவப்பணுக்களிலும் தொற்றை ஏற்படுத்தும்.

இப்படி, தொடர்ச்சியாக இனப்பெருக்கம் அடையும்போது, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து காய்ச்சல் ஏற்படும். இதன் காரணமாக அதிகக் காய்ச்சல் மற்றும் குளிர்க் காய்ச்சல் ஏற்படும். தொற்று ஏற்பட்டவரின் உடலிலிருந்து நன்கு வளர்ச்சியடைந்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்டவரை, அனோஃபிலெஸ் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது, இந்த ஒட்டுண்ணி மூலம் வேறொருவருக்கு மலேரியா பரவும்.

குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சல் வந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சையளிக்க வேண்டும். ஏனெனில், உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் மலேரியா காய்ச்சலால் அதிகமாக (அதாவது 70 சதவிகிதம்) பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை மலேரியா தோற்று நோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் மலேரியா தாக்கினால் அவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

அறிகுறிகள்...

மலேரியா தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் நம் உடலுக்குள் பரவ ஆரம்பித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு ஏழு நாள்களிலேயே நோய் பாதிப்பு ஏற்படும்.

நோய் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரம் (Plasmodium falciparum) என்னும் மலேரியா ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டு, கடுமையான நோயால் பாதிக்கப்படுவோம். சில நேரங்களில் பாதிப்பு அதிகமானால் மரணமும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளுக்கு மூளை தொடர்பான நோய், கடுமையான ரத்தச்சோகை, வளர்சிதை மாற்றம், சுவாசப் பாதிப்பு, மஞ்சள்காமாலை, மூளைக் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

மூன்று கட்டங்களில் மலேரியாக் காய்ச்சலை கண்டறியலாம். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு போன்றவை இருக்கும். அதேபோல், தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு குளிர்க் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்படும்.

இரண்டாவது கட்டத்தில் கடுமையான காய்ச்சல் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும்.

மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, உடல் முழுக்க வியர்வை வழியும். உடல் விரைவாகக் குளிர்ந்துவிடும். நோயாளி சாதாரணமாகவே காணப்படுவார். இதையடுத்து மறுநாளோ, ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாள்களுக்கு ஒரு முறையோ மீண்டும் காய்ச்சல் வரும். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சில முக்கியப் பரிசோதனைகள்...

1. ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை
2. மலேரியா எதிர் அணுக்கள் பரிசோதனை
3. 'க்யூபிசி' (QBC Malaria Test) பரிசோதனை
4. ஆர்.டி (RD - Rapid Diagnostic Test) - பி.சி.ஆர் (PCR) மற்றும் நெஸ்டெட் பி.சி.ஆர் (Nested PCR) பரிசோதனை
5. ரத்த அணுக்கள் மொத்தப் பரிசோதனை.

மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி?

மலேரியா நோயிலிருந்து நாம் தப்பிப்பதற்கு குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின் (Primaquine) போன்ற மருந்துகளை உட்கொள்ளலாம். அதேபோல், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சரியாகவும், பரிந்துரைத்த காலம் வரை தவறாமல் உட்கொள்வதன் மூலம் மலேரியாவிலிருந்து தப்பிக்கலாம்.

நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்து கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் மலேரியா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் வந்தால் கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. உடனே, மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. எந்தக் காய்ச்சல் வந்தாலும், மலேரியாவுக்கான பரிசோதனையும் செய்துகொள்வது மிகவும் நல்லது.

உலகளவில் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தது 35 நாடுகளில் மலேரியாவால் ஏற்படும் இறப்பை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தவும், மலேரியாவால் ஏற்படும் பாதிப்பை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25 World Malaria Day April 25.


 உலக மலேரியா தினம் ஏப்ரல் 25
World Malaria Day April 25.

உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக (World Malaria Day ) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் வழக்கத்தில் இருக்கிறது.

அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்

இந்த மலேரியா காய்ச்சலுக்கு முக்கிய காரணம் கொசு.

 மலேரியாவின் வரலாறு :
மலேரியாவின் வரலாறு :
கொசுக்கள் மூலம் மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்பதை திரு. ரொனால்டு ரோஸ் என்ற இங்கிலாந்து மருத்துவர் கண்டுபிடித்தார். இவருக்கு 1902 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன.

 நோய்த்தாக்கம் :
நோய்த்தாக்கம் :
நோயின் மிகவும் கடுமையான தன்மை பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரத்தனால் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax), பிளாஸ்மோடியம் ஓவலே (Plasmodium ovale) மற்றும் பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது

 மலேரியா ஒட்டுண்ணிகள் :
மலேரியா ஒட்டுண்ணிகள் :
இதற்கு பொதுவாக கொல்லும் தன்மை இல்லை. ஐந்தாவது இனமான பிளாஸ்மோடியம் நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள் வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள் என்று கருதப்படுகின்றன.

 பாதிப்பு :
பாதிப்பு :
கிட்டத்தட்ட 105 நாடுகளில் 330 கோடி பேர் மலேரியாவின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிரார்கள். ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மலேரியாவால் மரணம் அடைகிறார்கள்.

 காரணிகள் :
காரணிகள் :
குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர், சாக்கடை போன்ற இடங்களில் வரும்ம் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன. வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

 இந்தியாவில் பாதிப்பு :
இந்தியாவில் பாதிப்பு :
இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 அதிக உயிரிழப்பு :
அதிக உயிரிழப்பு :
2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர் என மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியான மலேரியா ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 2013ம் ஆண்டுக்கான மலேரியா தின வாசகம்:
2013ம் ஆண்டுக்கான மலேரியா தின வாசகம்:
மலேரியாவை ஒழிக்க முதலீடு செய்யுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்
Thanks One India tamil.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

உலக புத்தக தினம் ஏப்ரல் 23.


உலக புத்தக தினம் ஏப்ரல் 23.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ( World Book and Copyright Day ) அல்லது உலக புத்தக நாள் , என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் ( யுனெஸ்கோ ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ தீர்மானம்
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
பங்குபற்றும் பிற அமைப்புக்கள்
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு
அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் ( International Publishers Association)
உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர் ,
இன்கா டி லா வேகா ( Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ் , ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு
ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ( காப்புரிமை ) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்! #WorldBookDay

புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.
‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!
 புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்... மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!


உலக புத்தக தினம்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அதே போல,
“சொர்கம் என்பது ஒரு வகையான நூலகம் போல இருக்கும் என்றே எப்போதும் கற்பனை செய்திருக்கிறேன்” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் போர்ஹேவின் கருத்தையும் குதூகலத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.


* புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
* 1995 ல் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்பெய்னின் மாட்ரிட் முதல் உலக புத்தக தலைநரகமாக தேர்வு செய்யப்பட்டது.
* கடந்த ஆண்டு தென் கொரியாவின் இன்சியான் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு போலந்து நாட்டின் வரோக்லா (Wrocław) நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்நகரில் புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்த நகரில், சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பொது போக்குவரத்தில் புத்தகம் வாசித்த படி சென்றால் டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது.
• இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் 3 நாள் புத்தக கண்காட்சி நடைபெறுகிது.
• கினியா குடியரசில் உள்ள கோனாக்ரே (Conakry) நகரம் 2017 ம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் 17 வது உலக புத்தக தலைநகரமாக இது திகழ்கிறது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் #BookDay எனும் ஹாஷ்டேகுடன் புத்தக பிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
• 2016 உலக புத்தக தினம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தின ஆண்டாகவும் அமைகிறது. செர்வாண்டிசின் 400 வது நினைவு தின ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு சர்வதேச புகைப்பட போட்டியும் யுனெஸ்கோவால் நடத்தப்படுகிறது.
#WordsofTolerance எனும் ஹாஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரச்சார இயக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


உலக புத்தக தினம் ஏப்ரல் 23


உலக புத்தக தினம் ஏப்ரல் 23...!

பவுத்தம்
"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.".ஹென்றி வார்ட் பீச்சர்.

புத்தகமும்..உலக புத்தகதினமும்...!

 நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு எழுத்துக்கள் மூலம் பதிவு செயப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். எப்படியாயினும் புத்தக படிப்பை ஊக்குவிக்க, சில சமயம் ஒரு தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கு, வாசிப்பு ருசிக்கு யாரோ ஒருவர் தூண்டலாக இருந்திருக்கின்றனர். யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பும் கூட, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவிக்கப்படுகிறது. அது முதல் ஏப்ரல் 23 உலக புத்தக் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம் . நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்குகாக புத்தகம் அச்சிட்டு, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..

எழுத்தாளர்களின் குறியீடான புத்தக தினம்..!

ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உருவானதிற்கு ஓர் அருமையான பின்னணி உண்டு. உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.

அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது. 1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்களும் இந்த உலகத்தைப் பார்த்த நாள் ஏப்ரல் 23 தான். இவர்களை மரியாதை செய்யும் வகையில், ஒரு குறியீடாக ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாச்சார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்..!

 வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப் பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும், ஓட ஓட விரட்டி இருக்கின்றன. "கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது" என துண்டுப் பிரசுரம் கொடுத்ததிற்காக, மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே, சிறைக் கம்பிகளுக்கிடையேயும், மற்றவர் வாசிக்கக் கேட்டு, மேதையானார். உலகப் புகழ் பெற்ற கவிதையான "பாரடைஸ் லாஸ்ட்" (Paradise lost) என்ற அழியா நூலை உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட "லத்தீனை" எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காகவே பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம் ஈடுபட்டு, தூக்கத்தைத் துறந்தவர்..!

முதல் புத்தகம்..குகையும்..எலும்புகளும்..!

 இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கிவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை என்பது, வலைத் தளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து..! படிக்கப் படிக்க இன்பமும் தேடுதலும் கிடைக்கும். புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குகைச் சுவர்களிலும், இஷாங்கோ (Ishango) எலும்புகளிலும் தான். இவை , சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன. பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும், ஆட்டின் தோலிலும் எழுதப்பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்..! வரலாற்றுப் பதிவுகள்தான்..!

எழுத்தாளர் தினம்...புத்தக தின வரலாறு ..!

 ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா (Catalonia) என்ற ஊரில் 1436ம் ஆண்டில், ஏப்ரல் 23 , செயின்ட் ஜார்ஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும், விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம். இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது. அது போல, புத்தக தினத்தில் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். உலக புத்தக தினம் & காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், மனித நேயமிக்க தன்னார்வல நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவர்களால்தான். இவர்கள் அனைவரும் யுனெஸ்கோ அமைப்பை அணுகி, கேட்டுக் கொண்டதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மிகுந்த வெற்றியுடன் உலகப் புத்தக தினமும், காப்புரிமை தினமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

•  "மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..!" என 20 ம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

மனித நாகரிக வரலாறு..!

 இந்த பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உயிரினம் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும் பரிணாமத்தின் வயது 50 இலட்சம் ஆண்டுகள்..! நாம் பல நிலைகளைக் கடந்துதான் இன்று "வெள்ளையும் சொள்ளையுமாக" நாகரீக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம். ஆதி மனிதன் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். மனித இன பரிணமிப்பில் மூன்று நிகழ்வுகள் உலகைப் புரட்டிப்போட்டு சாதனை படைத்தவை.

1 . ஒலி, மொழியான பரிணமிப்பு சுமார் 2,00,000 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு. அனைத்து சமூக விலங்குகளும் (தேனீ முதல் திமிங்கலம் வரை )ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாற்றம் நடத்தினாலும், மனித இனம் மட்டுமே மற்ற விலங்குகளிலிருந்து மாறுபட்டு அதனை மொழியாக மாற்றியது.

2. ஒலிகளை, எண்ணங்களைப் பதிவு செய்தல் (சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன், எலும்பில் பதிவு& குகைப் பதிவு).

3 . புத்தக உருவாக்கம்.

சக்கரம் சுழலத் துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது. ஆனால் அதற்கும் முன்பே, பலப் பல வடிவங்களில் மனிதன் தன கருத்துகளை, எண்ணங்களை பதிவு செய்யத் துவங்கிவிட்டான்..!

உலகின் முதல் நூலகம்..!

இதுவரை கண்டறிந்ததில் உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் (20,000 cuneiform tablets) பலகைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழி (Semitic language and closely elated Akkadian) கலந்தது. இப்போது அவை சிரியாவின் அலெப்போ, டாமாஸ்கஸ் & இட்லிப் ,(Syrian museums of Aleppo, Damascus, and Idlib)அருங்காட்சியகத்தில் உள்ளன.

முதல் புத்தகம்/முதல் பேப்பர் பணம்!

பேப்பர் பாரம்பரியமாக சீனாவில் காய்லூன் காலத்தில் கி.பி. 105ல் உருவானது. மல்பரி இலை மற்றும் வேறு சில சணல் கழிவுகளைக் கொண்டு பேப்பர் தயாரித்தனர். பின் கி.பி. 3ம் நூற்றாண்டில்தான் இது எழுத பயன்பட்டது. அங்கு தான் முதன் முதலில் கி.பி. 1000த்தில் முதல் பேப்பர் பணத்தை சீன சங் வம்சம் அச்சடித்தது. 9ம் நூற்றாண்டில், டையமண்ட் சூத்திரங்கள் (Diamond suthra) என்ற 868 சூத்திரங்கள் அடங்கிய முதல் அச்சுப் புத்தகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை எல்லாம் உருவாக்கபடுவதற்கு முன், நம் மூதாதையர்கள் உலகில் நடந்த அனைத்தையும் பாரம்பரியமாக வாய் வழி மரபாகவே தன் சந்ததிகளுக்குக் கதையாகச் சொல்லி வந்தனர்.

உலகின் முதல்..பதிவு..!

குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர். ஆம், ஆனால் முதன் முதலில் இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய வந்துள்ளது. அதுதான் உண்மை..!.. பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக குறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,௦௦௦000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.

 எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.

காலப் பதிவுகள்..மனிதப்..பரிணாமத்தில்...!

1. கி.மு..2,00,000 -1,00,000  பேச்சு பிறந்தது.
2. கி.மு...40,௦௦௦000- …. குகை ஓவியம்/கிறுக்கல்கள்.ஐரோப்பாவில்
3. கி.மு.. 30,000 -6,500 விலங்குகளின் எலும்பில் எழுத்து .பிரான்சில்
4. கி.மு ..5,500 - 4.,500 …எழுத்துப் பதிவின் துவக்கம் ஆப்ரிக்கா
5. கி.மு ..3,500 -3,000 ….. சுமேரியப் படப் பதிவு
6. கி.மு ..3,000 - 2,800 ……எகிப்தின் களிமண் பதிவுகள்
7. எகிப்திய பாப்பிரஸ் எழுத்துக்கள்
8. கி.மு ..2,500 .. உலகில் கிழக்குப் பகுதி நோக்கி கியுனிபாரம் எழுத்துக்கள் பரவுதல்
9. கி.மு ..2,500     சிந்துசமவெளி நாகரிகம், எழுத்து மற்றும் படப் பதிவுகள்
10. கி.மு ..2,100    களிமண் எழுத்துக்கள்-எலும்பு எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
11. கி.மு ..1,500௦௦   சீனர்களின் குறியீட்டு எழுத்துப் பதிவு
12. கி.மு ..1,400     உகாரிட் பதிவுகள்
13. கி.மு ..1,100 - 900    தமிழ் நவீன எழுத்துக்கள்
14. கி.மு ..8,000௦௦     கிரேக்க நவீன எழுத்துக்கள்

நூலக...பிறப்பு...!

எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு 247ல் உலகின் மிக பெரிய நூலகம் இருந்ததாம். சுமார் 7,00௦,000௦க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு இருந்தனவாம்; 5,௦௦௦௦௦௦௦௦௦000 மாணவர்கள் படித்தனராம். இந்தியாவில் கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன அரசன் உருவாக்கிய நூலகம் "நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நுல்களும், 36,௦058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன. நாம் யன் படுத்தும் காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகப் புரட்சியைப் செய்தவர்கள் அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தகக் கடைகள் இருந்தனவாம்.

 தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல், அக்டோபர் 21ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது..! இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ! ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..!

1990களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டுவண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர் ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க்கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர் . இப்போதும் கூட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலக புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராக சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து வாசிப்பு முகாம்களை, குறிப்பாக குழநதைகள் கல்வி குறித்த்து நடத்திக்கொண்டிருக்கிறது.

மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே..!

"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். . மனிதன் வரலாற்றுக்குரியவன் ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

  ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார்.

   இந்தியநாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான்.

  ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.

  ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் ‍ சர் ஐசக் நியூட்டன்.

  துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்..மார்ட்டின் லூதர் கிங்.

  ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.

   "மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். "--பாவ்லோ பிரையர்

  உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

   "ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.

   "வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்

   "ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது" ஜார்ஜ் பெர்னாட்ஷா

   "ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" -ஜேம்ஸ் ரஸ்ஸல்

  "ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்"..-அரேபியப் பழமொழி.

  என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று- பெட்ரண்ட் ரஸ்ஸல்

  புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்..நெப்போலியன்

  மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்..தாமஸ் கார்லைல்

  வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்

   ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்

 அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!
 குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...!
 நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.

"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"
நன்றி கீற்று.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ஏப்ரல் 23 (World Book and Copyright Day April 23)

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ஏப்ரல் 23  (World Book and Copyright Day  April 23)

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ தீர்மானம் தொகு
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

பங்குபற்றும் பிற அமைப்புக்கள் தொகு
Printing3 Walk of Ideas Berlin.JPG
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு
அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)
உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் தொகு
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புதன், 22 ஏப்ரல், 2020

ஏப்ரல் 23 வரலாற்றில் இன்று



ஏப்ரல் 23 வரலாற்றில் இன்று

தினம் ஒரு வரலாறு...
இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்..!!

உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்


📖 வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துக்களான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.
வில்லியம் ஷேக்ஸ்பியர்



இன்று இவரின் நினைவு தினம்..!!
✍ எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் காலத்தால் அழியாமல் நிற்கும் ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

✍ இவர் லண்டனில் இருந்தபோது அலைக்கழித்த அந்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்க காரணம். 24 ஆண்டு இலக்கியப் பணியில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.

✍ யு ஆனைளரஅஅநச Niபாவ'ள னுசநயஅ‚ யுள லுழர டுமைந ஐவ‚ வுhந வுயஅiபெ ழக வாந ளூசநற‚ வுhந ஆநசஉhயவெ ழக ஏநniஉந‚ சுழஅநழ யனெ துரடநைவ‚ ர்யஅடநவ‚ ழுவாநடடழ‚ முiபெ டுநயச‚ துரடரைள ஊயநளயச‚ யுவெழலெ யனெ ஊடநழியவசய போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்.

✍ இன்றும் உயிரோவியங்களாக நம்மிடையே உலா வரும் படைப்புகளை தந்த இவர் 1616ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🎼 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வசீகர குரல் கொண்டவரும், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியுமான எஸ்.ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.
🏥 1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.
★ 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.



ஏப்ரல் 22 வரலாற்றில் இன்று.


ஏப்ரல் 22 வரலாற்றில் இன்று.

சிந்திப்போம்.. பூமியின் வளங்களை பாதுகாப்போம்.. இன்று உலக புவி தினம்..!!
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

உலக புவி தினம்


🌍 புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (புயலடழசன நேடளழn) என்கிற அமெரிக்கர் கருதினார். எனவே அவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார்.

🌍 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி புவியைப் பாதுகாக்க 2 கோடி பேர் கலந்துக்கொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, உலக புவி தினமாக மாறி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விளாதிமிர் லெனின்


👉 'லெனின்" என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ்.

👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார்.

👉 1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

👉 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 53ம் வயதில் (1924) மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.
மோன்டால்சினி


💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (சுவைய டுநஎi ஆழவெயடஉini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

💉 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.

💉 இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 இவருக்கு ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்" என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோன்டால்சினி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் பிறந்தார்.



செவ்வாய், 21 ஏப்ரல், 2020

உலக பூமி தினம் ஏப்ரல் 22.


உலக பூமி தினம் ஏப்ரல் 22.

உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.

ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!



சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.


பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.

நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!


”நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்” புவியை பாதுகாக்காவிட்டால்- உலக பூமி தினம் இன்று

 நாம் வாழும் "பூமித்தாய்" நம்மை தாங்கிப் பிடிக்காவிட்டால் இந்த தேர்தல், ஓட்டு, ஊழல் என்று எதுவுமே இருந்திருக்காது.

ஆனால், நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே!அப்படித்தான் பூமியையும் நாம் மறந்தே போனோம்.

அதனை நினைவில் நிறுத்தத்தான் இன்று அனுசரிக்கப்படுகின்றது "உலக பூமி தினம்".1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 44 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.


 World Earth Day 2014 today…

எதிர்வினை நிச்சயம்:

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.

மறந்துபோன இயற்கை:

இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது .

"ஒருநாள்"தான் ஒதுக்குகிறோம்:

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .

காயப்படும் பூமி:

பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் .

எதிரான அறிவியல்:

இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் .

பூமி எனும் குப்பைத்தொட்டி:

நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

பயன்படுத்து - தூக்கி எறி:

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . "பயன்படுத்தியபின் தூக்கி எறி" கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது . இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் .

மனிதனுக்கும் இதுதான் நிலை:

ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது .

குப்பை வாழ்க்கை:

நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் .அதற்கு நாம் மட்டுமே காரணம் .

குறையுங்கள் குப்பைகளை:

சரி எப்படி பூமியை பாதுகாப்பது என்று கேட்கிறீர்களா? பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் குறையுங்கள்.

முடிந்தவரை உபயோகி:

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ, மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

மீண்டும் உருவாக்கு:

மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .

இயற்கையை சேமிப்போம்:

இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

கடைசியில் நரகம்தான்:

முடிந்த அளவுக்கு இவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . இல்லையெனில் சுனாமியும், சூரியனும் சுட்டெரித்து நாமெல்லோரும் நரகத்திற்குத்தான் போக வேண்டும்.அதற்குள் பூமியே நரகமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.


பூமிக்குப் பிறந்த நாள்... மரக்கன்றை பரிசளிப்போம்!

பூமியின் சாயலில் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை.

நாம வசிக்கிற இந்த பூமிக்கு நாளைக்குத்தான் பிறந்தநாள். அதாவது பூமியோட நலனை பாதுகாப்பதற்காக அதைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் புவி தினம் நாளை (ஏப்ரல் 22) கடைப்பிடிக்கப்படுகிறது. நாம வசிக்கிற இந்த பூமியைப் பத்தியும், புவி தினத்தோட அவசியம் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமா...

* சூரிய குடும்பத்தில் உள்ள ஒரே உயிர்க்கோள் பூமி. உருண்டை வடிவம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், பூமி உண்மையில் உருண்டையானதல்ல. சில பக்கங்களில் சாய்வுகள் கொண்ட கோள வடிவமானது. பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

* பூமியில் உள்ள ஈர்ப்புவிசையே நாம் நடக்கவும், பூமியை விட்டு விலகிவிடாமல் இருக்கவும் காரணமாக இருக்கிறது.

* பூமியைச் சுற்றிலும் கடல் சூழ்ந்துள்ளது. கடல்பரப்பில் நாம் அறிந்து கொண்டது கால் பகுதிகூட இருக்காது. ஆயிரக்கணக்கான உயிரினங்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் கடலில் அறியப்படாத 2.5 கோடி உயிரினங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விஞ்ஞானியாகி அந்த புதிய உயிரினங்களை கண்டுபிடித்துச் சொல்லலாம்.

*  நீங்கள் நகரங்களுக்குச் செல்லும்போதும், பயணங்களின் போதும் எங்கு பார்த்தாலும் மக்கள் வசிப்பதை பார்க்கலாம். அதனால் பூமியில் ஜன நெருக்கடி அதிகமாகிவிட்டது என்று கருதிவிட வேண்டாம். இப்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால், 20 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு 56 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அப்படியென்றால் பூமி எவ்வளவு பரந்து விரிந்தது என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

* பூமியின் சாயலில் பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்படவில்லை. வேற்றுக் கிரகத்தில் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியும் இன்னும் சாத்தியமாகவில்லை. செவ்வாயில் மனித காலனியை உருவாக்கும் திட்டம் நிறைவேறவும் இன்னும் நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். எனவே பூமியே நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். மரங்களை அழிப்பதாலும், பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற கரிமப் பொருட்களாலும் பூமியின் சுற்றுச்சூழல் மாறிவருகிறது. பூமியின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதன் மூலமே நாம் இங்கு நிம்மதியாக வசிக்கலாம். அதை வலியுறுத்தவே பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

* 1969–ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 1970–ம் ஆண்டு மார்ச் 21–ந் தேதி முதன்முதலில் புவிதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்கா புவி நாளுக்கு தனி தினம் ஒதுக்க கோரி ஏப்ரல் 22–ந் தேதியை பரிந்துரை செய்தது. 1970 முதல் அந்த தேதியில் புவி தினமாக அனுசரித்து வந்தது. 1990 முதல் ஏப்ரல் 22–ந் தேதி புவிதினமாக அனுசரிக்க ஐ.நா.சபையும் ஒப்புதல் அளித்தது. பல இடங்களில் அந்த வாரம் முழுவதும் புவி வாரமாக அனுசரிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. 2009–ம் ஆண்டு ஐ.நா. சபையானது புவிதினத்தை, சர்வதேச தாய்பூமி தினமாக அறிவித்தது.

புவியின் சூழல் பற்றிய சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்...

* உலகின் சரிபாதி வெப்ப மண்டலக் காடுகள்  அழிந்துவிட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

* ஒரு மனிதன் தினமும் 2 கிலோ கழிவுகளை தூக்கி எறிகிறான். 45 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஆண்டுதோறும் உபயோகிக்கிறான். இதனால் இயற்கை வளம் வேகமாக காலியாவதுடன், மாசுபட்டும் வருகிறது.

* அமெரிக்காவில் 27 சதவீத காகிதங்களே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. 100 சதவீத காகிதங்களையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் ஆண்டு தோறும் 25 கோடி மரங்களை வெட்டப்படாமல் தடுக்கலாம்.

* ஆண்டுதோறும் 204 கோடி கிலோ அளவுள்ள கழிவுகள் கடலுக்கு செல்கின்றன. அவை ஆண்டிற்கு 10 லட்சம் உயிரினங்களை பலி வாங்குவதாக கணிக்கப்படுகிறது.

* எம்.பி.யாக இருந்த கேலார்டு நெல்சன், புவிதினத்தை அமெரிக்காவில் தொடங்கி வைத்தார். அவரது முயற்சியால் நாடு முழுவதும் புவிதின விழிப்புணர்வு பரவியது. அதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

* டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் புவிதினம் உலகம் முழுவதும் கொண்டாட காரணமாக இருந்தார். உலகம் முழுவதும் இந்த தினத்தை விடுமுறையாக அறிவித்தால் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தினத்தை சிறப்பாக அனுசரிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

* முதல் புவிதினத்தை அமெரிக்காவில் 2 கோடி பேர் கலந்து கொண்டு கொண்டாடினார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக அமைதிப் பேரணி நடத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் 2 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 10 ஆயிரம் ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இதில் பங்கெடுத்தன.

* மரங்களை நட்டும், கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தியும், கடல்பரப்பை சுத்தம் செய்தும், கையெழுத்து போராட்டம் நடத்தியும், சுற்றுச்சூழலுக்கான திட்டமிடல் செய்தும் புவிதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் புவி வாரமாக அனுசரித்து புவி பற்றிய பாடங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள்.

* சீனாவில் 2012–ம் ஆண்டு ஒரு லட்சம் பேர் சைக்கிள்களை ஓட்டி கார்பன்–டை–ஆக்சைடு மாசு இல்லாத பயணத்திற்கு சைக்கிள்களை பயன்படுத்துவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

* ஆப்கானிஸ்தானில் 2011–ம் ஆண்டு புவி தின அமைப்பு 2.8 கோடி மரங்களை நட்டு பிரமிக்க வைத்தனர்.

* பனாமா புவிதின கொண்டாட்டத்தில் 100 வகையான அருகி வரும் பூச்செடிகளை எல்லா இடங்களிலும் நட்டு அவற்றின் அழிவைத் தடுக்க சபதமேற்றனர்.

*  புவிதினத்தை மற்றவர்கள் எப்படி கடைப்பிடித்தார்கள் என்று பார்த்தோம். நாமும் புவி தினத்தை பூமியின் பிறந்த தினமாக கொள்வோம். அவற்றுக்கு விருப்பமான மரக்கன்றுகளை பரிசாக நிலத்தில் நட்டு பராமரிப்போம்!

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

ஏப்ரல் 21 வரலாற்றில் இன்று



ஏப்ரல் 21 வரலாற்றில் இன்று :
 தேசிய குடிமை பணிகள் தினம்..!!

👉 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

👉 நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மேக்ஸ் வெபர்


✍ உலக புகழ்பெற்ற சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் நகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மேக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்.

✍ இவர் 1903ஆம் ஆண்டு பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார்.

✍ 1905ஆம் ஆண்டு இவர் எழுதிய 'தி ப்ரொடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கேப்பிடலிசம்" கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது. பின்பு அது புத்தகமாக வெளியிடப்பட்டது.

✍ பொது நிர்வாகத்துறையிலும், சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளை தொடங்கி வைத்த மேக்ஸ் வெபர் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.
வி.கிருஷ்ணமூர்த்தி


✍ சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.

✍ இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்" என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிக்கைகள் மாநாட்டில் இவரது பத்திரிக்கை முதல் பரிசு பெற்றது.

✍ இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா" என்று பெயர் சூட்டினார்.

✍ கல்கியின் 'கோகுலம்" குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

✍ 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய இவர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

ஏப்ரல் 17 இன்றைய வரலாறு...



ஏப்ரல் 17 இன்றைய வரலாறு...

உலக இரத்த உறையாமை தினம் !

உலக ஹீமோபிலியா தினம்


உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துக்கொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தீரன் சின்னமலை


இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (னூநநசயn ஊhinயெஅயடயi) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.

இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.

வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்" என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை" என்று அழைக்கப்பட்டார்.

இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு மறைந்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன்



இன்று இவரின் நினைவு தினம்..!!
நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் விதத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1923ஆம் ஆண்டு இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.

இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம் காந்தி.

நாட்டின் முதல் துணை குடியரசுத் தலைவராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு மறைந்தார்.




திங்கள், 13 ஏப்ரல், 2020

புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14.


புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14.

#Dr_BR_Ambedkar

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 14, 1891

இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா

பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்

இறப்பு: டிசம்பர் 6,  1956

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”

இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்

வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.

பெளத்த சமயம் மீது பற்று

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

அம்பேத்கரின் பொன்மொழிகள்

“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

தமிழ்ப் புத்தாண்டு


தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு
#TamilNewYear

ஒரு புத்தாண்டுக் கோலம்
கடைபிடிப்போர்
தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ் தமிழர்
வகை
பண்டிகை,
முக்கியத்துவம்
தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாட்டங்கள்
பகிர்ந்து உண்ணுதல், பரிசில் வழங்கல், வேப்பம்பச்சடி உண்ணல், உறவுகளோடு அளவளாவுதல், மருத்துநீர் வைத்தல்
நாள்
தமிழ் நாட்காட்டியில் சித்திரை முதல் நாள்
தொடர்புடையன
வைசாக்கி, விஷூ (கேரளா), பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, லாவோ புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய்லாந்தின் புத்தாண்டு
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

வரலாறு

தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.

மரபுகள்

தமிழ்ப்புத்தாண்டில் பரிமாறப்படும் மரபார்ந்த சிற்றுண்டிகள்.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி. புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
புத்தாண்டு இனிப்பு, கசப்பு முதலான எல்லாச் சுவைகளையும் கொண்டுவரும் என்பதன் குறியீடாக புத்தாண்டு அன்று உண்ணப்படும் மாங்காய்ப்பச்சடி.
தைப்புத்தாண்டு சர்ச்சை
தைப்புத்தாண்டு
முதன்மைக் கட்டுரை: திருவள்ளுவர் ஆண்டு
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.

வடமொழி அறுபது ஆண்டுகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் ஆண்டுகள்

சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன.எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10. 'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்!'




உலக உடன்பிறந்தோர் தினம் மார்ச் 10.
'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்!'

 #WorldSiblingDay

இன்று (மார்ச் 10) உலக உடன்பிறந்தோர் தினம். ஒரு வீட்டில் ஏழு குழந்தைகள், ஆறு, நான்கு என்பது சுருங்கி இரண்டு என்பதாகி... தற்போது ஒரு குழந்தை என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பொருளாதார நெருக்கடி, பார்த்துக்கொள்ள ஆள் இல்லா நிலை, நிலையில்லா வேலை ஆகியவற்றை மனதில் கொண்டு ஒன்றே போதும் என்கிற மனநிலைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஷேரிங்கில் ஆரம்பித்து ஸ்நாக்ஸ் வரை ஒவ்வொன்றுக்கும் சண்டை வருதல் இயல்பு. அதன் மூலமே, அன்பும், விட்டுக்கொடுத்தலும் கற்று வந்தவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

 கடைசிக் காலத்தில் எனக்குப் பிறகு உனக்குன்னு ஒருத்தன்/ஒருத்தி இருக்கா. எதாவது பிரச்னைன்னா அவள்/அவன் பாத்துப்பா என்று பெற்றவர்கள் சொல்லி வளர்த்தார்கள். அதில் உண்மையும் உண்டு. தற்போது காலம் ஒற்றைக் குழந்தை என்பதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது... எனவே, இருக்கும் ஒற்றைக் குழந்தையை ராஜா, செல்லம் என்று கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அது சரிதானா... அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஜெயந்தினி.

''ஏன் இரண்டு குழந்தைகள் அவசியம்?''

 ''மனக்கஷ்டம், சந்தோஷம், விட்டுக்கொடுத்தல் என வாழ்வின் கடைசி காலம் வரை துணை என்கிற ஒன்றுக்காகவே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். நிஜமாகவே நல்ல விஷயம்தான். நாம் நம் பிரச்னை, பொருளாதாரம், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று நம்மை மட்டும் சிந்தித்தே பல முடிவுகளை எடுக்கிறோம். நம் சந்ததிகளுக்கு உறவுகளையும், அன்பையும் கொடுக்க இரு குழந்தைகள் அவசியம் தேவை, இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை என்பது... ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் மட்டுமே பெற்று வளார்க்க வேண்டிய விஷயம். சில விஷயங்களை இழந்தால் தப்பில்லை நம் பிள்ளைகளுக்காக'' என்ற மருத்துவர் ஒற்றைக் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் வளர்ப்பு விஷயத்தில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது பற்றி பேசினார்.

''இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்...

'' 'நீ தான் எங்கள் இளவரசன், நீ தான் எங்கள் இளவரசி' என்கிற ரேஞ்சில் அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள். இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள்.  'நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்' என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.ஒற்றைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில்... இன்று அப்பாவுக்குப் பிடித்த பூரி டிபன் செய்து நாம் மூவரும் ஷேர் செய்யலாம்... நாளைச் செல்லத்துக்கு பிரியாணி, நாளை மறுநாள் அம்மா செல்லத்துக்கு இட்லி என்று அன்பாக, அழகாக ஷேரிங் என்பதைக் குழந்தை மனதில் பதிய வையுங்கள்.

 அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.

அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன... என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம். பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.''
நன்றி விகடன்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.