வியாழன், 31 ஆகஸ்ட், 2017

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் செப்டம்பர் 1, 1715.



சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த தினம் செப்டம்பர் 1, 1715.

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்  சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
“ "நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே" ”
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.

பூழி நாடு

பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால்
வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72
பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம்
நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின. வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.

பெயர் காரணம்
பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம்
நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.

பட்டியல்
தலைமுறை பெயர் ஆ
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 137
2 வடக்காத்தான் பூலித்தேவன் 142
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 151
4 சமசதி பூலித்தேவன் 154
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 157
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 160
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 161
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 163
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 166
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 172
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த
பாளையக்காரர் போர்களின் முன்னோடி.


பிறப்பு

மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில்
விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில்
மதுரை ,திருவில்லிப்புத்தூர் ,திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்  வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.

பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர்
சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும்
'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.

வாழ்க்கை

இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால்
பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர்.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார் . கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும் , பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி , சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர்
அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை
வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கு

1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. [4] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். [6]
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால்
பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.

அன்னியர் எதிர்ப்பு

பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.
ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.
பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.
மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.
ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.
இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.
1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.
1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார்.
1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

மறைவு

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு மாளிகை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


பூலித்தேவன் .விடுதலைப்போராட்டத்தில் பங்கு...

நெல்லை சீமையில் சிவகிரி பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் என்னும் குறு நில பகுதியை ஆண்ட மன்னன்தான், பூலித்தேவன். இவனது பிறப்பு,-வளர்ப்பு பற்றி முந்திய வார பகுதியில் படித்தோம். இந்த மன்னன், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியானவன்.
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன், திருச்சிக்குத் தனது படையுடன் சென்று, ஆங்கிலேயரை எதிர்த்தான்.
இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. 1755–ம் ஆண்டு ஆங்கிலேய தளபதி கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான், பூலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது, “என்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது” என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து, வெற்றி பெற்றார், பூலித்தேவன்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில், ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை, பூலித்தேவன் தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியை, பூலித்தேவன் தோற்கடித்தார். 1756 மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் பூலித்தேவர் நடத்திய போரில், புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை, ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த பூலித்தேவன், போரை நிறுத்தித் திரும்பினார்.
அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன், புலித்தேவனிடம் தோற்றான்.1760–ம் ஆண்டு யூசுப்கான், நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766–ம் ஆண்டு கேப்டன் பௌட்சன், வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் , பூலித்தேவன், கடுமையாக போராடி அவர்களை முறியடித்து வெற்றி கொண்டார்.
1766–ம் ஆண்டை தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால், பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல், சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின்தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் பூலித்தேவன் தலைமறைவாகி விட்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில், அவருக்கு உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் முன் வந்தனர் ஆனால் அவர்களின் உதவியை ஏற்க பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
பூலித்தேவர் ஆட்சி செய்த காலம், தென் பாண்டியில் பாண்டியராட்சியின் முடிவும், மதுரையில் நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள், ஆங்கிலேயரின் படைகளுடன் போர் என்று பலவிதமான சம்பவங்களை சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் பூலித்தேவர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி, அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்..

உலக கடித தினம் செப்டம்பர்-1


உலக கடித தினம் செப்டம்பர்-1

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு கொண்டு வரபட்ட ஒரு விஷயமாகும். கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.


கடிதம் எழுதலாம் வாங்க!

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’ என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும். உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில் சேர்ப்பார்கள்.
பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும், கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா? இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து, தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு. பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. அதனால்தான் அது குறித்துப் பாடப் புத்தகங்களிலும் படித்துவருகிறீர்கள்!.
தனிப்பட்ட வகையில் எழுதப்படும் கடிதங்கள், அலுவலக மற்றும் வணிக நோக்கங்களுக்காக எழுதப்படுபவை, அரசியல்ரீதியானவை எனக் கடிதங்கள் பல வகைப்படும். புகழ் பெற்ற தலைவர், எழுத்தாளர்களின் கடிதங்கள் அவற்றின் ஆழமான கருத்துகளுக்காகப் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது மகள் இந்திராவிற்கு எழுதிய ‘மகளுக்குக் கடிதம்’ இந்த வகையில் புகழ் பெற்றவை.
தகவல் தொடர்பின் முக்கிய அம்சமான கடிதம் எழுதுதலை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டிக் கடிதம் எழுதும் போட்டிகள்கூட நடத்தப்படுகின்றன. கடிதம் எழுதும் கலையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவரால் தொடங்கப்பட்டது உலகக் கடிதம் எழுதும் தினம்.
சில நாடுகளில் டிசம்பர் 7 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதுதவிரப் பல்வேறு நாடுகளும் கடிதம் எழுதுதலை ஊக்குவிப்பதற்காகத் தேசிய கடிதம் எழுதும் நாளை தனியாகக் கொண்டாடுகிறார்கள். கடிதம் எழுதுவதை மறந்துவிட்ட இந்தக் காலத்தில் அதை மீட்பதுதான் அனைவரின் நோக்கம்.
உலகக் கடிதம் எழுதும் நாளை முன்னிட்டு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு பேனா, பேப்பர் எடுங்கள். ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி, விருப்பத்திற்குரிய உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாருக்கேனும் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்களே உங்கள் கைப்பட எழுத முயற்சி செய்யுங்கள். சந்தேகம் எழுந்தால் பெற்றோர், ஆசிரியரிடம் கேளுங்கள்.
கடிதம் எழுதும் பழகத்தால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நட்பு பாராட்டுவது, நயமாக நாம் சொல்ல வருவதைத் தெரிவிக்கும் பழக்கம் பலப்பல திறமைகள் கிடைக்கும். ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு நீங்கள் கைப்பட கடிதம் எழுதினால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் கடிதங்கள் உங்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும்.
குழந்தைகளே, எங்கே போகிறீர்கள்? ஓ… கடிதம் எழுதவா?

நடிகை

கரீனா கபூர் ( பிறப்பு செப்டம்பர் 1, 1980), அடிக்கடி செல்லமாக பெபோ , என்று அறியப்படுபவர், பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். அவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள், அதன் காரணமாக மிகவும் சிறிய வயதிலிருந்தே, கரீனா ஊடகத்தின் இடவொளியிலேயே திளைத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும், 2000 ஆண்டுவரை அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை, அவ்வாண்டில் அவர் முதன்முதலாக
ரெப்யுஜீ என்ற படத்தில் தோன்றினார், மேலும் அதில் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்த உணர்ச்சி மிக்க இன்ப முடிவுகொண்ட கபி குசி கபி கம் என்ற திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் மிகவும் அதிகமான தொகையை ஈட்டிய இந்தியப்படமாகும் மேலும் வணிகரீதியில் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமுமாகும்.
2002 மற்றும் 2003 ஆண்டுகளுக்கிடையே திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்ததற்கு மக்களிடமிருந்து எதிர்மறை விமர்சனம் பெற்றதால், அச்சுமுகமாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் துணிச்சலான பாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் நடிப்பில் பெரும் பல்துறைத்திறமையை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றார். [4] சமேலி (2004) என்ற படத்தில் அவர் ஒரு விலை மாதுவாக நடித்தது அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்ந்தது மேலும் அதனால் அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான பரிசும் கிடைத்தது. [5] அதற்குப்பிறகு அவர் பிலிம்பேர் விழாவில், சிறந்த நடிகை என்று திறனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட விருதுகளை தேவ் (2004) மற்றும் ஓம்காரா (2006) என்ற படங்களில் திறம்படத்தக்க என்று ஆர்பரிக்கப்பட்ட வகையில் நடித்ததற்கு இரண்டு விருதுகளை பெற்றார்.
2007 ஆம் ஆண்டில், இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வீ மெட் என்ற காதல்நயம் கொண்ட நகைச்சுவைப் படத்தில் அவருடைய செயல்திறனுக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை ஈட்டினார். அவர் நடித்த படங்களால் பாக்ஸ் ஆப்பீஸ் (கல்லாப்பெட்டி) பணப்பெட்டியில் குவிந்த வருமானத்தொகை மாறுபட்டிருந்தாலும், கரீனா தன்னை ஒரு முதன்மையான தற்காலத்து நடிகையாக இந்தி திரைப்பட உலகில் நிலைநாட்டியுள்ளார். [6][7][8] கரீனாவின் நிஜ வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஊடகங்கள் காரணமாக எப்பொழுதும் செய்தி கிடைப்பதற்காக நிருபர்கள் பின்தொடர்ந்து சூழ்ந்துகொண்டே இருப்பதால் அவளைப் பற்றியும், அவளுடைய நண்பரான நடிகர் சைஃப் அலி கானைப் பற்றியும் அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்துகொண்டே இருந்தன, அவர்கள் இருவரும் மணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவலாக உலவியது. [9][10]
ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்
பஞ்சாபி கத்திரி வம்சத்தை மூலமாகக்கொண்ட திரைக்குடும்பமான கபூரின் இல்லத்தில் மகாராட்டிரத்தில் உள்ள மும்பையில் பிறந்த அவர், நடிகர்களான ரந்தீர் கபூர் மற்றும் பபிதா (அல்லது சிவதாசினியின்) மிகவும் இளைய மகளாவார். அவர் நடிகரும் படத்தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பேத்தியாவார், நடிகர் ப்ரித்திவிராஜ் கபூரின் கொள்ளுப் பேத்தியாவார், நடிகை கரிஸ்மா கபூரின் தங்கையாவார் மற்றும் நடிகர் ரிஷி கபூரின் உடன் பிறந்தவரின் மகளுமாவார். [1] கரீனா சொல்வதன்படி, "கரீனா" என்ற பெயர் அன்ன கரேனினா என்ற புத்தகத்தில் இருந்து பிறந்ததாகும், அவளுடைய தாயார் அவளை கருவில் சுமந்த போது அந்த புத்தகத்தை அவர் படித்தார். [11] அவரை இயல்பாகவே அடிக்கடி பெபோ என்ற பெயரிலும் செல்லமாக அழைப்பதுண்டு. [12][13]
குழந்தைகளாக இருக்கும் போதே, கபூர் சகோதரிகள் நடிகைகளாக வரவேண்டும் என்று கனவு கண்டனர். [14] குறிப்பாக நடிகைகளான நர்கீஸ் மற்றும் மீனா குமாரி கபூரை மிகவும் கவர்ந்தவர்கள். [14] இருந்தாலும், அவர்களுடைய குடும்பப்பின்னணி அப்படி அமைந்தபோதும், அவளுடைய தந்தை பெண்கள் படங்களில் நடிப்பதை விரும்பவில்லை ஏன் என்றால் அவ்வாறு செய்வதால் அவளால் தன குடும்பத்திற்குள்ள கடமையை சரிவர செய்ய இயலாமல் போகும் என்ற நம்பிக்கையே ஆகும். [15] இதனால் அவளுடைய பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வலுத்தது, முடிவில் கபூரின் தாயார் கரீனாவின் தந்தையை பிரிந்து வந்து விட்டார். [16] 1991 ஆம் ஆண்டில் கரிஸ்மா ஒரு நடிகையாக அறிமுகமாகும்வரை, லோகன்ட்வாலா என்ற இடத்தில் அவரது தாயார் அவர்கள் இருவரையும் வளர்க்கும் சுமையை ஏற்றுக்கொண்டார் மேலும் அவர்களை கரையேற்ற பல இடங்களில் பணிபுரிந்தார். [17]
கரீனா முதலில் மும்பையிலுள்ள ஜமுனாபாய் நாற்சீ பள்ளிக்கூடத்தில் படித்தார், அதன் பிறகு தெஹ்ரா தூன்னில் உள்ள வெல்ஹாம் பெண்கள் விடுதிப்பள்ளியில் படிக்கச்சென்றார். மும்பையில் விலே பார்லெயில் உள்ள மிதிபாய் கல்லூரியில் அவர் இரண்டு வருடங்களுக்கு வர்த்தகம் படித்தார். [14] இருந்தாலும், அங்கு படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை, ஆனால் அவர் தன் குடும்பத்தின் அருகாமையில் இருந்ததால் படிப்பதை தொடர்ந்து வந்தார். [14] அதற்குப்பிறகு கரீனா அமேரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் மைக்ரோ கம்ப்யுடருக்கான மூன்று மாத வேனில்காலத்து பயிற்சி வகுப்பிற்காக தன்னை பதிவுசெய்து கொண்டார். [14] பிறகு சட்டப்படிப்பில் அவர் கவனம் சென்றது மேலும் சர்ச்கேட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். [14] இருந்தாலும், சர்ச்கேட்டில் ஒரு வருடகாலம் முடிந்தபிறகு, கரீனா திரும்பவும் தனது நீண்டநாள் கனவான நடிகை ஆவதற்கு திட்டமிட்டார் மேலும் அந்தேரியிலுள்ள கிஷோர் நாமிட் கபூரின் நடிப்பு நிறுவனத்தில் பயிற்சிகள் பெறத்தொடங்கினார். [18][19]
தொழில் வாழ்க்கை
அறிமுகம் மற்றும் பெருவளர்ச்சி, 2000-2003
2000 ஆம் ஆண்டில் கரீனா முதலில் ராகேஷ் ரோஷனின் கஹோ நா... ப்யார் ஹை என்ற படத்தில், இயக்குனரின் மகன் ரித்திக் ரோஷனுக்கு எதிராக நடிப்பதாக இருந்தது. [10] இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் கழித்து, அவர் அத்திட்டத்தை கைவிட்டார் மற்றும் பின்னர் "விதிவசால் நான் அந்தப் படத்தில் நடிப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை" என்று குறைப்பட்டுக் கொண்டார். என்ன இருந்தாலும், அந்தப் படம் அவரது மகனை திரை உலகில் நிலை நிறுத்தும் நோக்குடன் தயாரித்த படமாகும். எல்லோர் கவனமும் மகன் மேல் தான் இருந்தது. இப்போது நான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்." [14]
பிறகு அதே வருடத்தில் ஜெ.பி. தத்தாவின் ரெப்யுஜீ என்ற போர் குறித்த நாடகத்தில் கரீனா அறிமுகமானார். 1971 ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரை மையமாக கொண்ட அந்தப்படம், ரெப்யுஜீ என்று மட்டுமே அறியப்பெற்ற ஒரு மனிதனை சுற்றிவருவதாகும். (அந்த வேடத்தை முதன் முதலில் அறிமுகமான
அபிஷேக் பச்சன் சித்தரித்தார்). அவன் சட்டவிரோதமாக மக்களை இந்தியா-பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பாலும் இப்பாலும் அழைத்துச்செல்கிறான். கரீனா அப்படத்தில் நாசை என்ற வங்க தேசத்துப் பெண்ணின் வேடத்தை ஏற்றார், அவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடிபெயருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ரெப்யுஜீயிடம் காதல் வசப்படுகிறார். அவளுடைய அறிமுகத்தோற்றத்தை ரசிகர்கள் யாவரும் பாராட்டினார்கள்; இந்தியா எப் எம் (indiaFM) இன் தரன் ஆதர்ஷ் எழுதினார்: கரீனா கபூருக்கு ஒரு காந்த சக்தியுடைய ஆளுமை இருக்கிறது, அதன் காரணம் அவளை பார்த்தவுடன் ஒருவன் அவளிடம் காதல் கொள்வான். நீங்கள் எதிர்பாராதது என்ன என்றால் அது அவர் மிகவும் கடினமான காட்சிகளிலும் கூட எவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே [...]அவர் இயற்கையாகவே நடிப்புத்திறன் மிகுந்தவர் மேலும் அவர் படக்கருவிகளுடன் (காமெராவுடன்) நட்பு கொண்டவர் என்பதையும் மறுக்க இயலாது." [20] 2000 ஆம் ஆண்டில் ரெப்யுஜீ மிகையாக பண வருமானத்தை ஈட்டிய படங்களில் ஐந்தாவதாக இருந்ததுடன் கபூரின் நடிப்பு அவளுக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது. [21]
2001 ஆண்டில் கரீனாவின் முதல் பாத்திரம்
முஜே குச் கஹ்நா ஹை என்ற காதல்நயத்துடன் கூடிய நகைச்சுவைப் படத்திலாகும், அப்படம் அவ்வருடத்தில் மிகையான வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது. [22] இந்து பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம், "கரீனா ஒரு கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடிகையாகும், அவர் அபிஷேக்குடன் அறிமுகமான ரெப்யுஜீ மற்றும் இப்போது
முஜே குச் கஹ்நா ஹை ஒரு அடையாளம் என்றால் [...] படம் முழுதும் கரீனா பிரகாசிக்கிறார், இப்பொழுதே அவர் ஒரு பக்குவம் பெற்ற ஆறறிவாளர் போல வெளுத்துக் கட்டுகிறார்" என்று கருத்துரைத்தது. [23] அதற்கு அடுத்ததாக அவர் சுபாஷ் கையின் குடும்ப நாடகமான
யாதென் என்ற படத்தில் ஜாக்கீ ஷராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தார். இதன் கூத்தானது ராஜ் சிங் பூரி என்ற நடுத்தர வகுப்பை சார்ந்த ஒரு குடும்பத்தலைவன் மற்றும் அவன் பெற்ற பெண்களின் திருமண நிகழ்வுகளை சுற்றிவருவதாகும். இப்படத்தில் கரீனா மிகவும் இளைய மகளாக ரோஷனிடம் காதல் வயப்பட்ட, இஷா சிங் பூரியின் வேடம் பூண்டார். படம் வெளிவந்த பிறகு, மக்களிடம் அப்படம் ஒரு கலவையுடன் கூடிய எதிர்வினையை பெற்றது மற்றும் கல்லாப்பெட்டியில் (பாக்ஸ் ஆபீஸ்) சரியான பணவரவு பெறவில்லை. [22][24] அதற்குப்பிறகு கரீனா அப்பாஸ்- மஸ்தானின் அதிர்வு தரும் படமான அஜநபீ யில் நடித்தார். 1992 ஆண்டின் கண்சென்டிங் அடல்ட்ஸ் (ஒப்புக்கொள்ளும் பெரியவர்கள்) என்ற படத்தை ஆதாரமாக கொண்ட இப்படம், இந்தியாவில் சுமாரான கல்லாப்பெட்டி (பாக்ஸ் ஆபீஸ்) வெற்றியை பெற்றுத்தந்தது. [22][25]
பிறகு அதே வருடத்தில், அவர் சந்தோஷ் சிவனின் பழங்காலக்காவியமான அசோகா வில் நடித்தார், அப்படம் அசோகா தி கிரேட் என்ற மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. ஐக்கிய இராச்சியத்திலும் வடக்கு அமெரிக்காவிலும் இப்படத்திற்கு ஒரு நல்ல வலுவான வரவேற்பு இருந்தது. இப்படம் வெனிஸ் நகரத்தில் நடந்த (வெனிஸ் பிலிம் பெஸ்டிவல்) வெனிஸ் திரைப்பட திருவிழாவில் திரையிட்டனர் மற்றும் 2001 ஆம் ஆண்டில் நடந்த டொரோண்டோ அனைத்துலக திரைப்பட திருவிழாவிலும் திரையிட்டனர். [26][27] அவருக்கு எதிராக ஷா ருக் கான் அசோகராக நடித்தார், கரீனா கவுர்வகி என்ற பாத்திரத்தை சித்தரித்தார், கலிங்க நாட்டு இளவரசியாகும் வரும் அவர் மீது ஷா ருக் கான் காதல் கொள்கிறார். படத்திற்கு பொதுவாக நல்ல விமரிசனம் கிடைத்தாலும், சில திறனாய்வாளர்கள் கரீனாவின் நடிப்பைப்பற்றி எதிர்வினை கலந்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள். ரிடிப்ப்.காம் முடிவானது என்ன என்றால், "முதல் பகுதியில் மிக்க நேரமும் ஓடிப்போன இளவரசர் மற்றும் கரீனாவுக்கிடையே மலரும் காதலை சித்தரித்தாலும், மற்றும் அவர்களுக்கிடையே படத்தில் ஒரு விதமான இரசாயன சேர்க்கையினை அவர்கள் திறமையால் உருவாக்கினாலும், அவர் நடிப்புத்திறமையைப்பற்றி என்னால் இன்னும் கூற இயலவில்லை." [28] இருப்பினும், அவர் நடிப்பை சில திறனாய்வாளர்கள் புகழ்ந்தார்கள் மேலும்
பிலிம்பேர் விருது களுக்கான நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான வகையில் முதன்மை தெரிவை ஈட்டியது.
2001 ஆம் ஆண்டின் இறுதியில் கரீனா நடித்து வெளிவந்த படம் கபி குசி கபி கம் என்ற படமாகும், அதை கரன் ஜோஹர் இயற்றினார். இப்படம், அமிதாப் பச்சன் , ஜெயா பச்சன், ஷா ருக் கான், கஜோல் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் போன்றவர்களின் குழுவைக்கொண்டதாக இருந்தது, மேலும் அப்படம் அவ்வாண்டின் வணிகரீதியில் மிகையாக வெற்றிபெற்ற படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது மற்றும் கரீனாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அனைத்துலக அரங்கிலும் அது நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலிவுட்டின் வெற்றியாக திகழ்ந்தது, அதற்கு கிடைத்த தொகை மொத்தம் 1,000 மில்லியன்($22.5 மில்லியன்)ஆகும். அவர் சித்தரித்த 'பூ' என்ற கதாபாத்திரம் திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மேலும் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தெரிவையும் பெற்றது. [29]
2002 மற்றும் 2003 ஆண்டுகளில், அவர் தனது தொழில்வாழ்க்கையில் ஒருசரிவைக் கண்டார். அவர் ஆறுபடங்களில் நடித்தார் -
முஜே தோஸ்தி கரோகே ! , ஜீனா ஸிர்ப் மேரே லியே ,Talaash: The Hunt Begins... குசி ,
மை பிரேம் கி திவானி ஹூன் , மற்றும் நான்கு மணிநேரப்போர் காவியமான எல் ஒ சி கார்கில் - அவையாவும் இந்தியாவில் இக்கட்டு நிறைந்ததாகவும், வணிகரீதியாக தோல்வியை தழுவியதாகவும் திகழ்ந்தது. [30][31] கபூரின் நடிப்பு மிக்கவாறும் பல திறனாய்வாளர்களால் சுமாறானதாகவும், திரும்பத்திரும்ப ஒரேபோன்றதுமாகவும், உத்வேகம் குறைந்தும் இருந்ததாக அவர்கள் கருதினர். [32][33] அவர் ஒரு அச்சுமுகமாக மாறி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர் ஆனால் இவ்வகையான எதிர்மறை விமர்சனங்கள் அவரை ஒரு நடிகையாக இருப்பதற்கான ஒருமைப்பாட்டை வரும் காலத்தில் மேம்படுத்த தூண்டுவதற்கு அடிப்படை காரணிகளாக இருந்தன மற்றும் மேலும் உத்வேகத்துடன் கூடிய பாத்திரங்களில் நடிக்க ஊன்றுகோலாகவும் இருந்தன. [5]
[34]
திருப்புமுனை, 2004–2006
கபூரின் தொழில்வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்மறை காலத்திற்கப்பால், 2004 ஆம் ஆண்டு முதல் அவர் மேலும் தீவிரமான பாத்திரங்களில் நடிக்கத்தொடங்கினார், அவை வணிகரீதியாக வெற்றிபெறவில்லையானாலும், அவற்றில் மிக்கவை அவருக்கு பெருமையை தேடித்தந்தன. [5][34] சுதிர் மிஸ்ரா இயக்கிய சமேலி என்ற படத்தில் ராகுல் போசிற்கு எதிராக கரீனா ஒரு விலைமாதர் வேடத்தில் நடித்தார். இந்தப்படத்தில் ஒரு இளவயது விலைமாது ஒரு மனைவியை இழந்த முதலீட்டு வங்கியாளரை சந்திக்கிறார் மற்றும் இருவரும் அவர்களுடைய இடிந்துபோன வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துகொள்கின்றனர் மற்றும் அவர்களுடைய உறவு இவ்வாறு தொடர்ந்து வலுவடைகிறது. சமேலி படத்திற்கு மேம்பட்ட ஐயமில்லாத விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூரின் நடிப்பை பொதுவாக திறனாய்வாளர்கள் வரவேற்றனர், மற்றும் இந்தியா டைம்ஸி ன் விமரிசனம் "கரீனாவின் அருமையான உள்ளுணர்வுகளை" புகழ்ந்து, அவர் எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் மீறிவிட்டதாக சான்றுரைத்தது. [35] இருந்தாலும், மற்றொரு திறனாய்வாளர் கபூரின் நடிப்பு உப்புசப்பில்லாததாக அச்சுவார்த்ததுபோல இருந்ததாகவும், மேலும் அவர் "ஒரு பதின்வயதினர்போல் நடித்ததாகவும், ஆனால் ஒரு செயலறிவற்ற, மனம் கனத்துப்போன தெருக்கூத்தாடியைப்போல் அது இருக்கவில்லை என்று குறைகூறினார் மற்றும் படத்தில் அவளுடைய நடையுடைபாவனைகள் ஒரு கேலிச்சித்திரம் போல் இருந்ததாகவும் சூளுரைத்தார். [36] எனினும், கபூரின் நடிப்பு அவருக்கு பிலிம்பேரின் சிறப்பு நடிகைக்கான விருதை கிடைக்கவைத்தது, மேலும் அவரது தொழில்வாழ்க்கையின் போக்கில் ஒரு மாறுபாட்டை காண முடிந்தது. [37]
அதற்குப்பிறகு கரீனா அமிதாப் பச்சன் மற்றும் பார்தீன் கானுடன் கோவிந்த் நிஹலானியின் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற தேவ் என்ற படத்தில் தோன்றினார், அப்படமானது இந்தியாவில்
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை மையமாக கொண்டதாகும். [38] அதில் கரீனா ஆலியா என்ற ஒரு முஸ்லீம் பலியாட்டின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், அப்பாத்திரம் வடோதராவில் நடந்த பெஸ்ட் பேகரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக்கை ஆதாரமாக கொண்டதாகும். [38] இந்தப்படம் அவருக்கு பிலிம்பேரின் திறனாய்வாளர்களின் சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் வேறுபல விருது வழங்கும் விழாக்களில் சிறந்த நடிகை க்கான தெரிவிலும் அவர் பெயர் முன்மொழியப்பட்டது. தரன் ஆதர்ஷ் சொன்னது, "கரீனா கபூர் முதல் தரமாகும். கவர்சியில்லாத ஒரு நோக்குடன், இந்த நடிகை ஒரு பெரிய சாதனையே படைத்துவிட்டார். அமிதாப் பச்சனுடன் ஒரு காட்ச்சியில், (அவர் சாட்சிகளை முன்னுக்கு வருமாறு அழைத்தபோது) அவருடைய நடிப்பு ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டாகும்." [39]
சிறிது நாட்களில், பிடா என்ற எழுச்சியூட்டும் படத்தில் முதல்முறையாக (சாகித் கபூர் மற்றும் பர்தீன் கானுக்கு எதிராக) தீயவள் வேடம் பூண்டார். இப்படம் வலைத்தளத்தில் திருட்டு நடப்பது மற்றும் மும்பையின் பாதாளவுலகம் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கிறது. இப்படம் வணிகரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், அவர் நடிப்புக்காக கரீனா நல்ல பாராட்டை பெற்றார், மேலும் சில திறனாய்வாளர்கள் அவளுடைய முந்தைய பாத்திரங்களை சுட்டிக்காட்டி தனிப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டார்கள். [40][41] அதற்குப்பின் வெளிவந்த அவளுடைய படங்களானது அப்பாஸ் மஸ்தானுடைய சுமாரான எழுச்சியூட்டும் படமான
ஐத்ராஜ் மற்றும் பிரியதர்சனின் நகைச்சுவைப் படமான ஹல்ச்சல் , அதுவே 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்லாப்பெட்டி நிறைந்த முதல் வெற்றிப்படம். [40]
2005 ஆம் ஆண்டில், தர்மேஷ் தர்சன் இயக்கிய படமான பேவபா வில் நடித்தார். இப்படத்தில் கரீனா அஞ்சலி என்ற ஒரு இந்திய-கானடியப் பெண்ணாக தோன்றினாள், அவர் தன்னுடைய சகோதரியின் இறப்பிற்குப்பிறகு அவள் கணவனை மணக்கிறார், ஆனால் அந்த திருமணவாழ்க்கை மனதிற்கு ஒவ்வாதுபோனதால் அவர் தன்னுடைய முந்தைய நண்பனுடனான நட்பை மீண்டும் துவங்குகிறார். இந்தப்படம் எதிர்மறை விமரிசனங்களுக்கு ஆளாயிற்று மற்றும் கபூரின் நடிப்பு மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. [42] இந்தியா டைம்ஸி ன் நிகத் கஜ்மி கரீனா ஒரு தீவிரமான நடிகையாக ஆவதற்கான முயற்சியில், கரீனா பேவபா வில் ஒரு முதிர்ந்த மற்றும் தளர்ந்துவிட்ட பாத்திரத்தில் அவளுடைய வயதுக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் உருக்கொடுக்க நினைப்பது, அவள் வயதுள்ள பெண்களுக்கு விசித்திரமாக காட்சியளித்ததாக நம்புகிறார். [42]
அதற்க்கப்புறம் அந்த வருடத்தில், அவர் பிரியதர்சனின் காதல்நயம்கொண்ட படமான
க்யோன் கி யில் நடித்தார். இந்தப்படம், மனநிலை சரியில்லாதோர்களுக்கான ஒரு மருத்துவமனையில் எடுத்தது, ஒரு மனநிலை குன்றிய நோயாளியின் காதல்கதையை சித்தரிக்கிறது, அவ்வேடத்தில் சல்மான் கான் நடித்தார், மேலும் அவருடைய மருத்துவராக, கரீனா கபூர் நடித்தார். இந்தப் படம் வணிகரீதியில் தோல்வியை தழுவியது,[43] ஆனால் கபூரின் நடிப்பு பொதுவாக திறநாய்வாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மற்றும் பிபிசி தெரிவித்தது, "நடிப்பைப்பொறுத்த வரை அவர் ஒரு இயற்கையைப்போல் தூய்மையானவர் என்பதை சொல்லாமல் சொல்லலாம்" என்பதாகும். [44] கரீனா அப்புறம் அக்ஷய் குமார், போபி தியோள், மற்றும் லாரா தத்தாவுடன் இணைந்து காதல் படத்தில்நடித்தார். இந்தியாவில் வெற்றிபெறவில்லை என்றாலும், அப்படம் 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைடெட் கிங்டம்) மிகையாக வருவாயினை ஈன்றெடுத்த பாலிவுட் படமாகும் [45]
2006 ஆம் ஆண்டில், கரீனா மூன்று படங்களில் தோன்றினார். 36 சைனா டவுன் என்ற மனதை தூண்டும் படத்தில் முதலில் நடித்தார், அதற்குப்பின்னர் சுப் சுப் கே என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்தார், இரு படங்களும் நல்ல விமரிசனங்கள் பெற்றன. [46] அடுத்ததாக வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ என்ற நாடகத்தைத்தழுவிய ஓம்காரா என்ற ஹிந்திப்படத்தில் அவர் டெஸ்டெமோனாவிற்கு சமமான பாத்திரத்தில் நடித்தார். விஷால் பரத்வாஜ் இயக்கிய இந்தப்படம், உத்தரப்பிரதேச அரசியல் முறைமையை பின்னணியாக கொண்டு மற்றும் பாலியல் சார்பான பொறாமை காரணமாக விளைந்த பெருந்துன்பத்தை சித்தரிக்கிறது. [47] இந்தப்படத்தின் முதல் காட்சி 2006 ஆம் ஆண்டு நடந்த கான் திரைப்பட விழா வில் திரையானது மற்றும் கைரோ அனைத்துலக திரைப்பட விழா வில் திரையிடுவதற்கும் தெரிவானது. [48][49] ஓம்காரா திறனாய்வாளர்களின் நன்மதிப்பை பெற்றது மற்றும் கபூரின் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள், அதன் மூலம் அவருக்கு நான்காவது பிலிம்பேர் விருது கிடைத்தது மேலும் முதன் முதலான ஸ்டார் ஸ்க்ரீன் விருதும் கிடைத்தது. ரிடிப்ப்.காம் வழங்கிய முடிவுரை, "அவர் நடித்த பாத்திரம் நடிப்பதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும், ஏன் என்றால் அவர் காதலிலும் சிக்கி பயபக்தியிலும் தவிக்கிறாள், அச்சமும் திகைப்பும் அவளை ஆட்கொள்கின்றன, தந்தையை எதிர்க்கவும் துணிகிறாள் மேலும் கடைசியில் அவளை ஆட்கொண்டவரிடம் பணிகிறாள். கரீனாவிற்கு பேசுவதற்கு (வசன)வரிகளில்லை, ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏராளமான சந்தர்ப்பங்கள் அமைகின்றன, மேலும் அவர் அதை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார்." [50] கரீனா அவர்களே ஓம்காரா வில் தான் நடித்த பாத்திரத்தை தனது தொழில்வாழ்க்கையில் ஒரு "புதிய மட்டக்குறி"யாக கருதுகிறார் மேலும் கரீனா டாலி என்ற பாத்திரத்தில் நடித்ததையும், மேலும் தன வாழ்க்கையில் அவர் ஒரு பெண்ணாக முதிர்ந்து வருவதையும் எண்ணி அவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். [8]
அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.
2007 ஆம் ஆண்டில், கரீனா ஷாகித் கபூருக்கு எதிராக இம்தியாஸ் அலியின் காதல்நயம்கொண்ட நகைச்சுவைப்படமான
ஜப் வீ மெட் டில் நடித்தார். இரு வேறுபட்ட மனோபாவங்கள் கொண்ட மக்கள் ரயிலில் பயணிக்கும்போது சந்தித்து மற்றும் இறுதியில் காதல்வயப்படும் இக்கதையில், கரீனா கீத் தில்லண் என்ற படைப்பில் முதன்மை வாய்ந்த, சீக்கியரினத்தை சார்ந்த, வாழ்க்கையை உற்சாகம் மிக்க ஆர்வத்துடன் ரசித்துவாழத்துடிக்கும் பெண்ணாக தோன்றுகிறார். இப்படம் திறனாய்வாளர்களால் நன்றாக வரவேற்கப்பெற்றது. மேலும் அவ்வருடத்தின் மிகவும் வெற்றிபெற்ற படங்களில் ஒன்றாக அது திகழ்ந்தது, அதன் மூலம் உள்நாட்டில் கிடைத்த மொத்த வருமானமானது ரூ 303 மில்லியன் (US$ 6.45 மில்லியன்) ஆகும். [51] கரீனா அவருடைய நடிப்பிற்காக பல விருதுகளைப்பெற்றார், அதில் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதும் அடங்கும் மேலும் அவருக்கு அவருடைய இரண்டாவது ஸ்டார் சிறப்பு நடிகைக்கான திரைப்பட விருதும் கிடைத்தது. சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) னின் ராஜீவ் மசாந்த் குறிப்பிட்டது, "தடையில்லாமலும் இயல்பாகவும் நடித்த கரீனா கபூர் இப்படத்தின் ஆத்மாவாகும், இப்படத்தின் மிகப்பெரிய வலிமை, அவர் அந்த சூட்டிகையான வசனங்களோடு மட்டுமல்லாமல், இதர நடிகர்களிம் காண இயலாத ஒரு விதமான வெளிப்படைத்தன்மையுடன் அந்த பாத்திரத்தை சித்தரித்து உயிர்கொடுத்திருக்கிறார்." [52]
ஜப் வீ மெட் டிற்குப்பிறகு, கரீனா அக்ஷய் குமார், ஸைப் அலி கான் , மற்றும் அணில் கபூருடன் தஷான் என்ற சண்டைக்காட்ச்சிகள் நிறைந்தபடத்தில் (2008) நடித்தார். இந்தியா எப்எம் (indiaFM) என்ற நிறுவனம் நடத்திய வாக்களிப்பு அப்படத்தை அவ்வருடத்தின் மிகுந்த எதிபார்ப்புகளுடன் கூடிய படமாக கோஷித்தபோதும்,[53] நாளடைவில்
தஷான் வணிகரீதியிலும் மற்றும் உய்யநிலையிலும் தோல்வியை தழுவியது. [54][55] அடுத்ததாக கரீனா யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னீ பிக்ச்சர்சின் கார்டூன் படமான ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) வில் லைலா என்ற தெருநாய்க்கு குரல் கொடுத்தார், அந்த நாய் ரோமியோ என்ற தெருநாயின் காதல்நாயகியாகும். ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவால் வடக்கு அமெரிக்காவில் வெளியிட்ட பாலிவுட்டின் இரண்டாவது படம் இதுவேயாகும். [56] இதற்கு ஆயத்தம் செய்வதற்காக, கரீனா பல ஹாலிவுட் அசைவூட்டிய படங்களை பார்த்து நடிகர்கள் எப்படி குரல் கொடுத்தனர் என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தார். [57] கரீனா இதர திட்டங்களில் கவனம் செலுத்தியதால், இப்படத்தை சரியாக ஆதரிக்காமல் விட்டதற்காக திறனாய்வாளர்கள் குறை கூறினர். [58]
2006 ஆம் ஆண்டில் வெளிவந்த கோல்மால் என்ற படத்தை ஆதாரமாக கொண்டு, அதன் பின்தொடற்சியாக வந்த கோல்மால் ரிடேர்ன்ஸ் என்ற ரோஹித் ஷெட்டியின் நகைச்சுவைப் படத்தில் கரீனா அடுத்ததாக நடித்தார். அஜய் தேவ்கன், அர்ஷத் வார்சி, துஷார் கபூர், ஸ்ரேயஸ் தால்பாடே, அம்ரிதா அரோரா, செலினா ஜைத்லீ, மற்றும் அஞ்சனா சுகானி போன்றோர் அடங்கிய ஒரு நடிகர்களின் குழுமத்தின் அங்கமாக இருந்து, கரீனா தனது கணவனின் கற்பை சந்தேகிக்கும் மனைவியாக நடித்தார். இந்தப்படத்திற்கு திறநாய்வாளர்களிடமிருந்து ஒரு கலவையான விமரிசனம் கிடைத்தது மற்றும் கபூருக்கு கலவையுடன் கூடிய விமரிசனமே பெற்றுத்தந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் திரைக்கதை உயிரூட்டம் இல்லாததாக குறிப்பிட்டது மேலும் "கணவன் மீது சந்தேகம் கொண்ட ஒரு பெண்மணி குறிப்பாக தன் கணவன்மீது ஒரு கண் வைத்திருப்பது பெரிய நூதனமான விசயமல்ல, மேலும் அந்த பாத்திரத்தை கையாள்வதில் கரீனா புதுமை எதையும் புகுத்தவுமில்லை." [59] இருந்தாலும்,
கோல்மால் ரிடேர்ன்ஸ் ஒரு பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது, ரூ 793 மில்லியன்($17.84 மில்லியன்) மற்றும் உள்நாட்டில் மட்டும் மேலாக வருமானம் ஈட்டியது. [54]
2009 ஆம் ஆண்டில், கரீனா அக்ஷய் கானுடன்
கம்பக்த் இஷ்க் என்ற சபீர் கானின் நகைச்சுவைப்படத்தில் நடித்தார். இரு வேறுபட்ட மனிதர்களிடையே நிலவும் உறவுகளை ஆராய்ந்து பார்க்கும் இப்படம், இந்தியப்பட வரலாறில் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் டில் படமானது மேலும் பல ஹாலிவுட் நடிகர்கள் சிறு வேடங்களில் அவ்வப்போது தோன்றினார்கள். [60] கரீனா சிம்ரிதா ராய் என்ற பாத்திரத்தில் நடித்தார், ஒரு பகுதிநேர முதன்மையான முன்மாதிரியாகவும், மற்றும் ஒரு அறுவை மருத்துவநிபுணராக விரும்பும் பெண்ணாகவும் அவர் இருந்தார். படம் வெளிவந்த பிறகு, படத்திற்கு எதிர்மறை விமரிசனங்கள் குவிந்தன மேலும் கபூரின் நடிப்பு சரிவர வரவேற்கப்படவில்லை. [61] தி டைம்ஸ் ஒப் இந்தியா அவர் நடிப்பை "ஒரு முழுமையான ஏமாற்றம்" என்று விவரித்தது மட்டுமல்லாமல், "அவர் ஒரு முதன்மையான முன்மாதிரியாகவோ, அல்லது ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவோ, இருப்பதாக தெரியவில்லை" என்று சூளுரைத்தது. [62] இருந்தாலும் இப்படம் பொருளாதார வெற்றி அடைந்தது, மேலும் உலகளவில் சுமாரான வருமானத்தை ஈட்டியதுரூ 840 மில்லியன்($18.9 மில்லியன்)
ஆகஸ்ட் 2009 வரையான நிலவரத்தின் படி, கரீனா பிரேம் சோனியின் படமான மை அவுர் மிஸ்ஸிஸ். கன்னா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அதில் அவர் சல்மான் கானுடன் நடிக்கிறார். [63] மேலும் அவர் ராஜ்குமார் ஹிரானியின்
த்ரீ இடியட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதன் முக்கிய படப்பிடிப்பு ஜுலை 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது. [64]
இதர பணி(கள்)
அவர் திரைப்படத்துறையில் இருந்த காலங்களில், கரீனா தனது நேரத்தை இதர கடமைகளில் செலவழிக்கத்தவறவில்லை, அவர் மனிதநேயப்பணிகளுக்காக தன் நேரத்தை செலவழித்தார் மற்றும் மேடை நாடகங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டில், கரீனா தனது முதல் உலகப்பயணத்தை மேற்கொண்டார், ஹார்ட்த்ரோப்ஸ் கான்செர்ட் (the Heartthrobs Concert) (இதயத்துடிப்புகளின் கச்சேரி) , என்ற நிகழ்ச்சியில், ஹ்ரித்திக் ரோஷன், கரிஸ்மா கபூர், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஆப்தாப் ஷிவ்தாசனி போன்றோருடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா முழுதும் நடந்தது மேலும் அது வெற்றிவாகை சூடியது. [65] நவம்பர் 2003 ஆம் ஆண்டில், கரீனா உலக இளைஞர் அமைதி மாநாடுக்காக நிதி திரட்ட
மார்கோ ரிச்சி ஈச் ஒன் ரீச் ஒன் பெனிபிட் கான்செர்ட் (the Marco Ricci Each One Reach One Benefit Concert) என்ற நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றார், மற்றும் 2005 ஆம் ஆண்டில், இதர பாலிவுட் நட்ச்சத்திரங்களுடன் ஹெல்ப் !
டெலேதோன் கான்செர்ட் (HELP!Telethon Concert) என்ற நிகழ்ச்சியில் 2004 ஆம் ஆண்டில் இந்திய மகாசமுத்திரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்குகொண்டார். [66] அதற்குப்பின் அந்த வருடத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் இதயமாகவுள்ள பாலைவனங்களுக்கு சென்று நமது ஜவான்களை ஊக்கமளிப்பதற்காக என்டிடிவி NDTV யின் காட்சியான, ஜெய் ஜவான் என்ற நிகழ்ச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாடும் வாரத்தை ஜவான்களுடன் குதூகலமாக கலந்து கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியானது, கேளிக்கை செய்வோர் மற்றும் நட்ச்சத்திரங்கள் என்டிடிவி யின் குழுமத்துடன் ஆங்காங்கே தனிமையில் வாடும் இந்திய துருப்பினரை சென்று கண்டு அவர்களை மகிழ்விப்பதேயாகும். [67]
2006 ஆம் ஆண்டில், கரீனா சல்மான் கான், சயெத் கான், ஜான் அப்ரகாம், ஷாகித் கபூர், ஏஷா தியோள் மற்றும் மல்லிகா ஷேரவாத் ஆகியோருடன் ரோக்ச்டார்ஸ் கான்செர்ட் (Rockstars Concert) நடத்திய உலகசுற்றுலாவில் கலந்துகொண்டார். [68] அதற்கடுத்த வருடத்தில், கரீனா, பிரியங்கா சோப்ராவுடன், கோன் பனேகா குரோர்பதி என்ற ((Who Wants to Be a Millionaire?) யார் கரோட்பதியாக விரும்புகின்றனர் என்பதன் இந்திய பதிப்பில்) வென்ற அவளுடைய பகுதி பங்கான ஐந்து மில்லியன் ரூபாயை, செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லம் மற்றும் மவுண்ட் மேரியின் பாந்த்ராவிற்கு நன்கொடையாக வழங்கினார். [69] ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா விளையாட்டு நிகழ்ச்சியான க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைன்? என்ற நிகழ்ச்சியில் அவளுடைய நண்பன் ஸைப் அலி கானுடன் கலந்துகொண்டார், மற்றும் அவருக்கு வெற்றியின் காரணமாக கிடைத்த தொகையின் பகுதிபங்கை, பாந்த்ராவில் உள்ள செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு [70] நன்கொடையாகரூ5,000,000 ($112,500) வழங்கினார். 2009 ஆம் ஆண்டிலும், தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வென்ற தொகையை, அவர் மீண்டும் செய்ன்ட் அந்தோணியின் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக [71][71] வழங்கினார்.
கரீனா பல வணிகச்சின்னங்களை ஆதரித்து வந்துள்ளார், அவற்றில் குர்குரே மற்றும் ஆடைகளின் சங்கலித்தொடரான க்லோபஸ் நிறுவனம் போன்றவை அடங்கும். [72] கரீனா க்லோபஸ் என்ற வணிகச்சின்னத்தின் உலகளாவிய தூதராகும், மற்றும் அவ்வணிகச்சின்னத்தின் விளம்பரங்களில் தோன்றி வருகிறார்; அவர் தொடர்ந்துவந்ததில் இருந்து, அவ்வணிகச்சின்னத்தின் பொருட்களின் விற்பனை 75 விழுக்காட்டையும் தாண்டியுள்ளது. [73]
தனிப்பட்ட வாழ்க்கை
கரீனா தனது பாய் ஃப்ரெண்ட் ஸைப் அலி கானுடன் 2008 ஆம் ஆண்டின் 53 ஆவது பிலிம்பேர் விருது விழாவில்.
2004 ஆம் ஆண்டில், கரீனா நடிகர் ஷாகித் கபூரை அடிக்கடி சந்திக்கத்தொடங்கினார்,[74] ஆனால் ஜப் வீ மெட் படப்பிடிப்பு நடக்கும்போது, 2007 ஆம் ஆண்டில் அவர் அவரிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்தார். [75][76] செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில், அவர் ஸைப் அலி கானை சந்திப்பதாக ஊகம் பரவலாக பரவியது. அக்டோபர் 18, 2007 ஆம் ஆண்டில், லக்மே பேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் மனிஷ் மல்ஹோத்ராவின் பிரம்மாண்டமான இறுதிக்காட்சி நடைபெறுகையில், கான் அவர்கள் இருவரிடையே நிலவிய உறவினை ஊடகங்களுக்கு உறுதி செய்தார். [9][77][78]
கரீனா அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கம் கொண்டிருந்தார், [79] மற்றும் அவர் தாயார் பபிதாவுடன் வாழ்க்கையின் மிக்க நாட்களையும் கழித்தார். கரீனா அவர் தாயாருடன் லோக்ண்ட்வாலா வில் சேர்ந்து வாழ்ந்தார்கள் மற்றும் அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு மும்பையில் உள்ள பாந்த்ராவில் பார்க் அவேநியூவிலும் வசித்து வந்தார்கள். மேலும் 2008 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் அவர் தாயார், அக்ஷய் குமாரின் மனைவியான டிவிங்கிள் கன்னா வடிவமைத்த மும்பையிலுள்ள கார் என்ற இடத்தில் அடுத்தடுத்துள்ள கட்டிடங்களை வாங்கி அதில் வசித்தனர். [80] கரீனா தமது ஒய்வு நேரங்களில் புத்தகப்புழுவாக இருப்பதாகவும் மற்றும் நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பதாகவும் கூறியுள்ளார். [14]
கரீனாவின் எடை மற்றும் பத்தியமுறை ஊடகங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயமாகும். 2006 ஆம் ஆண்டில், கரீனா தன் எடையைக் குறைப்பதற்காக சைவ உணவிற்கு மாறுவதாக தெரிவித்தார். [81] கரீனா பசியின்மை காரணமாக தவிப்பதாகக் கூறும் வதந்திகளை மறுக்கிறார் மற்றும் தனது குறைவான எடைக்கு யோகா மற்றும் மிகவும் கவனத்துடன் கண்காணிக்கும் சமச்சீரான உணவே என்று வாதாடுகிறார். [73][82] 2008 ஆம் ஆண்டில்,
தஷான் படப்பிடிப்பின்போது எடைகுறைந்து படப்பிடிப்பு மேடையில் மயங்கி விழுந்தபோது, ஊடகங்களில் அவளுடைய உடல்நலம் பற்றிய செய்திகள் பரவலாக இருந்தது. அவர் இந்நிகழ்ச்சியை ஒரு சாதாரண உடல் நல பாதிப்பே என்று கூறி முத்தாய்ப்பு வைத்துவிட்டார். [82]
ஊடகங்களில்
கரீனா அவர்கள் 2000 ஆம் ஆண்டிற்குப்பின்னரே படங்களில் நடிக்க அறிமுகமானாலும், திரைப்படத்துறையில் மிகவும் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளானதால், கரீனா தமது சிறு வயதினிலேயே ஊடகங்களின் இடைவொளிக்கு காரணமானார். [14] குழந்தையாக இருக்கும் போதே, கரீனா அவர் தாயார் பபிதா மற்றும் சகோதரி கரிஸ்மா கபூருடன் பல விருது வழங்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மற்றும் அவர் சகோதரியின் படப்பிடிப்பின் போதும் அவர் அவளுடைய சகோதரியுடன் கூட படப்பிடிப்புக்கு வருவார். [79] முன்னதான வருடங்களிலேயே, ஊடகங்களின் யூகங்களை மனதில் கொண்டு, கரீனா ஊடகங்களுடன் ஒரு அமைதியான உறவுமுறைகளை பூண்டார் மற்றும் அவர் தன்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையைப்பற்றி ஒளிவுமறைவின்றி பேசும் திறமையை ஊடகங்களுடன் தடையில்லாமல் வளர்த்துக் கொண்டதற்கு பெயர்பெற்றவரானார். [83]
[84]
2005 ஆம் ஆண்டின் போது, கரீனா கரன் ஜோஹரின் பேட்டி நிகழ்ச்சியான காபி வித் கரன் (Koffee with Karan) என்ற நிகழ்ச்சியில் ராணி முகெர்ஜி யுடன் பங்கேற்றார், மேலும் இரு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் ஷாகித் கபூர் மற்றும் கரிஸ்மா கபூருடன் பேட்டி கொடுத்தார். [85][86] அதற்கடுத்த வருடத்தில், அவர் பிரியங்கா சோப்ராவுடன் இந்தியன் ஐடல் என்ற பாட்டுத்திறமையை கண்டறியும் திறமை போட்டியினை சோதிக்கும் ஒரு விருந்தாளி நடுவராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். [87] பல மாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற
பேஷன் வீக் 2006 என்ற நிகழ்ச்சியில், கரீனா மற்றும் நடிகர்களான ஷாகித் கபூர் மற்றும் உர்மிளா மடோன்கர் ஆகியோர் வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வின் பேஷன் காட்சியான, பிரீடம் என்ற தலைப்புகொண்ட நிகழ்ச்சியில், மாதிரியாக இருந்து சரிவு மேடையில் உடைகளை காட்சிவைக்கும்படி நடந்துசெல்ல தெரிவு செய்யப்பட்டனர். [88] 2007 ஆம் ஆண்டில், கரீனா மற்றும் பல்வேறு பாலிவுட்டை சார்ந்த பிரமுகர்கள் சண்டிகரில் கபில் தேவி ன் இந்தியன் கிரிக்கெட் லீகின் (ICL) [89] திறப்பு விழாவில் மேடையில் நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டினர். ஜூன் 2008 ஆம் ஆண்டில், கரீனா மறுபடியும் மனிஷ் மல்ஹோத்ராவின் பேஷன் கலைக்காட்ச்சிக்கு மாதிரியாக 2008 ஆம் ஆண்டின் ஐஐஎப்ஏ (IIFA) பேஷன் கலைவிழாவில் பங்கேற்றார். [90]
கரீனா ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஊடகங்கள் நடத்தும் வாக்களிப்பு தெரிவுகளில் பங்கேற்கிறார். 2004 ஆம் ஆண்டில், ரிடிப்ப் நடத்திய "முதன்மை பெற்ற பெண் நட்சத்திர நடிகைகளின்" பட்டியலில், கரீனா மூன்றாம் இடத்தை பிடித்தார். [91] பிறகு அவர் 2005-2006 ஆண்டுகளில் ஏழாவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையாக பிடித்தார் மற்றும் 2007 ஆம் ஆண்டில், மீண்டும் மூன்றாம் இடத்திற்கு திரும்பி வந்தார். [7][92][93] பெப்ரவரி 2007 ஆம் ஆண்டில், கபூர்
இன்டியாடைம்ஸ் பட்டியலிட்ட "பாலிவுட்டின் முதன்மை பெற்ற முதல் 10 நடிகைகளின்" தர வரிசையில் நான்காவதாகவும், [94] பிறகு அவ்வருடத்தில், இந்த நடிகை U.K. நாட்டு பத்திரிகையான ஈஸ்டேர்ன் ஐய்யில் "ஆசியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக" எட்டாவது இடத்தில் தெரிவு செய்தது. [95] கரீனா பல்வேறு சைவ உணவு விருதுகளையும் வலைதள ஆன்லைனில் பெற்றுள்ளார், பிஈடிஏ இந்தியா (PETA INDIA) நிறுவனம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் "சைவ உணவு உண்ணும் அழகான பெண் பிரமுகியாக" தெரிவு செய்யப்பட்டார். [96] மார்ச் 2009 ஆம் ஆண்டில், பிலிம்பேர் பத்திரிகை யின் வருடாந்தர "சக்திவாய்ந்த மக்கள் பட்டியலில்", பாலிவுட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பத்து மக்களின் வரிசையில் பெண்களில் அவர் மட்டுமே இடம் பெற்றார். [97]
திரைப்பட விவரம்
ஆண்டு (திரைப்படம்) பாத்திரம்
2000 அகதி
நஸ்நீன்
"நாஜ் " எம். அஹ்மத்
2001
முஜே குச் கஹ்நா ஹை பூஜா சாக்சென
யாதேன் இஷா சிங்க் புரி
அஜநபீ பிரியா மல்ஹோத்
அசோகா (2001) கவுர்வகி
கபீ குசி கபீ கம் பூஜா "பூ" ஷர்ம
2002
முஜ்ஸே தோஸ்தி கரோகே
டினா கபூர்
ஜீனா சிர்ப் மேரே லியே
பூஜா /பிங்கி
2003.
தலாஷ்: தி ஹன்ட் பெகின்ஸ் ...
போர்ட்லாந்து,ஆர டாக்கி, டினா பிர(2003).
கபீ குசி கபீ கம் குஷி சிங்க் (லால
மைன் பிரேம் கி திவானி ஹூன்
சஞ்சனா
எல் ஒ சி கார்கில் சிம்ரன்
2004
சமேலி சமேலி
யுவா மீரா
தேவ் ஆலியா
பிதா நேஹா மெஹ்ரா
ஐத்ராஸ் ப்ரியா சக்சேனா/ மல்ஹோத்ரா
ஹல்ச்சல் அஞ்சலி
2005
வேக்ஸ் மேன் , ஷேரன்(2005).
பேவபா
கியூங் கி டா.தன்வி குரான
தோஸ்தி: பிரிஎண்ட்ஸ் போறேவேர்
அஞ்சலி
2006
36 சீனா டவுன் பிரியா
சுப் சுப் கே ஸ்ருதி
ஓம்காரா டாலி ஆர். மிஸ்ரா
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்
காமினி
2007
க்யா லவ் ஸ்டோரி ஹை
அவராகவே
ஜப் வீ மெட் கீத் தில்லான்
2008
ஹல்லா போல் அவராகவே
தஷான் பூஜா சிங்க்
ரோட்சைட் ரோமியோ லைலா (குரல்)
கோல்மால் ரிடேர்ன்ஸ் ஏக்தா
2009
லக் பை சான்ஸ் அவராகவே
பில்லு அவராகவே
கம்பக்த் இஷ்க் சிம்ரிதா ராய்
மைன் அவுர் மிஸ்ஸிஸ் கன்னா
ரைனா கன்னா
குர்பான்
திரீ இடியட்ஸ் பியா

கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31 , 1870.



கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் ஆகஸ்ட் 31 , 1870.

மரியா மாண்ட்டிசோரி ( ஆகஸ்ட் 31 , 1870 – மே 6 , 1952 ) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6 , 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து
மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும்
இலங்கையிலும் பணியாற்றினார்.
மாண்டிசோரி முறைக் கல்வி
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child"

மாண்டிசோரி முறைக் கல்வி என்றால் என்ன ? What is the Montessori method of education?

இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் மற்றும் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கியா
மரியா மாண்ட்டிசோரி...
மரியா மாண்ட்டிசோரி ஆகஸ்ட் 31, 1870 தொடக்கம் மே 6, 1952 வரை வாழ்ந்தார்.இவர் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர்,மனோதத்துவ மருத்துவர்.இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்.இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6,1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
மாண்டிசோரி முறைக் கல்வி
****************************************
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர்.நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.
இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும்,தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை,மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும்.அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child"
https://www.youtube.com/watch?v=0ON181052xM
**********************************************************
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை (அதிகாரம்:கல்வி குறள் எண்:400)
பொழிப்பு: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.
மணக்குடவர் உரை: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல.
இது கல்வி அழியாத செல்வமென்றது.
பரிமேலழகர் உரை: ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.(அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியேயாம். மற்றவை செல்வங்கள் அல்ல. அழியாது இருப்பதாலும் பிறவிதோறும் தொடர்வதாலும் களவு முதலியனவற்றிற்கு உட்படாததாலும் பிறருக்கு வழங்கக் குறைவுபடாததாலும் 'கேடில் விழுச் செல்வம்' என்றார். கல்வி, கற்றாரை உயர்த்துவதால் 'விழுச்செல்வம்' என்றார். இத்தகு சிறப்புக்கள் மற்ற 'பொருள்' முதலியவற்றிற்கு இல்லாமையால் அவை, 'செல்வம்' அல்ல என்றார்.


The Montessori method of teaching aims for the fullest possible development of the whole child, ultimately preparing him for life's many rich experiences. Complemented by her training in medicine, psychology and anthropology, Dr. Maria Montessori (1870 - 1952) developed her philosophy of education based upon actual observations of children.
Children pass through sensitive periods of development early in life. Dr. Montessori described the child's mind between the time of birth and six years of age as the "absorbent mind". It is during this stage that a child has a tremendous ability to learn and assimilate from the world around him, without conscious effort. During this time, children are particularly receptive to certain external stimuli. A Montessori teacher recognizes and takes advantage of these highly perceptive stages through the introduction of materials and activities which are specially designed to stimulate the intellect.
Encouraged to focus her attention on one particular quality, the child works at her own optimum level – in an environment where beauty and orderliness are emphasized and appreciated. A spontaneous love of "work" is revealed as the child is given the freedom (within boundaries) to make her own choices.
Montessori teachers are trained facilitators in the classroom, always ready to assist and direct. Their purpose is to stimulate the child's enthusiasm for learning and to guide it, without interfering with the child's natural desire to teach himself and become independent. Each child works through his individual cycle of activities, and learns to truly understand according to his own unique needs and capabilities.
Everything in a Montessori classroom has a specific use or purpose. There is nothing in the prepared environment that the child cannot see or touch. All of the furniture and equipment is scaled down to the child's size and is within easy reach.
A quality Montessori classroom has a busy, productive atmosphere where joy and respect abound. Within such an enriched environment, freedom, responsibility, and social and intellectual development spontaneously flourish!

புதன், 30 ஆகஸ்ட், 2017

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30.


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் ஆகஸ்ட் 30.

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.


ஆரம்ப வாழ்க்கை

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

பிறப்பு

அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.


சினிமா பயணம்

தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.


சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.


அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தன.


மறைவு

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார்.

#இன்று ஆகஸ்டு 30 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினம்.....

*நாகர்கோவில் ஒழுகினசேரி யில் பிறந்தவர். வறுமையால் 4-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார்.

*காலையில் டென்னிஸ் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பகலில் மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை.

*மாலையில் நாடகக் கொட்ட கையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு விற்பனை.

*நாடக மேடை அவரை ஈர்த்தது. மகனின் ஆர்வத்தைக் கண்ட தந்தை அந்த ஊரில் நாடகம் போட வந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார்.

*பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார். நாடகத்தில் வில்லுப்பாட்டு போன்ற பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்.

*பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதான ஈர்ப்பு குறையவில்லை.

*மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே பலமுறை நாடகம் போட்டிருக்கிறார்.

*இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. ஆனால், அதன் பிறகு இவர் நடித்த ‘மேனகா’ முதலில் வெளிவந்தது.

*முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை எழுதினார். நகைச்சுவைக்கு என்று தனி ட்ராக் எழுதிய முதல் படைப்பாளி.

*நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது இவர்தான். பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.

*காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில் தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.

*சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, ‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

*இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.

*தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

*சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார்.

*அண்ணாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு டாக்டரைப் பற்றி புகழ்ந்து பேசினார்.

*கடைசியில், ‘இவ்வளவு நல்ல டாக்டரை சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு யார் வைத்தியம் பாப்பாங்க? அதனால் அவரை இங்கேயே வைத்துக்கொண்டு அண்ணாவுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பி வையுங்கள்’ என்றார்.

*குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர்.

1947-ல் சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது.

*கலைவாணருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. உதவி என்று கேட்டு யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் இவர்.

*நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய இவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*நகைச்சுவை மூலம் மக்களின் சிந்தனையைத் தூண்டி, இன்றும் மக்களின் மனங்களில் வாழும் என்.எஸ்.கே. 49 வயதில் காலமானார்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30


அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30

அனைத்துலக காணாமற்போனோர் நாள் ( International Day of the Disappeared ) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால்
இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை , மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு , செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.


அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.
காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம், அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது.
இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித்தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற்போனோர் இடம் பெற்றதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.
அடிமைத்துவ யுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற்போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல்நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் சுவிடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் என்பவர் காணாமல்போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார்.
20ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஓல் வொலண்பேக் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமற்போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஓல் வொலண்பேக் இன்று வரை போற்றப்படுகிறார்.
1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஓல் வொலண்பேக் ரஸ்யப்படையினால் கைது செய்யப்பட்டார்.இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது.
காணாமற்போனோர் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரங்களில் ரஓல் வொலண்பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.
காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ, மாஃபியா குழுக்கலாலோ, ஆயுதக்குழுக்களினாலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில் உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத்தினம் ஏற்படுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.
அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான "மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு" மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன.
"அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.
அண்மைக்காலத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ, அல் காயிதா பயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள் என்று கூறப்படுகிறது.
இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைபபலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொணடனர். இதனூடாகவும் காணாமட் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மைக்காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத்தில் கூட பல்வேறு பட்ட வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இயற்கைகாரணிகளாலும் காணாமல் போவது இடம் பெறுகின்றது. உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமல் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர்பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத்திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள், இளம் பெண்களை கடத்தல், பழிவாங்கும் நோக்கத்தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல் உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்.... இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.
'அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ, பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்" என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும், ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக்கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடைமுறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொண்டாடி வருகிறது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில், மனித குலத்திலேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில், அரசுகள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன் என்றும் அவ்வறிக்கையில் மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.
ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் - சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள், தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர்கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் - இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன; அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னால் செயலாளர் கொண்டலீசா ரைஸ், 'ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்" என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வேதச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார். நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.
இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில், ஒப்பந்தத் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல், தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் "புரோக்கர்'களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில்,சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது.
இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். 2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.
சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே எவ்வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அந்த அறிக்கை உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில், பாலியல் தொழிலுக்கான தேவையே, ஆள் கடத்தலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது.
வேலைக்காக ஆட்களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள், வீட்டு வேலையாட்கள், பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி, ஊமைகளாய்த் தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது.
அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக்கைக்கும் உரியது. மனிதநேயமற்ற, கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
காணாமற்போனோர் பற்றி எடுத்துப் கொள்கையில் காணாமற்போனவர் ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
மனிதாபிமானத்தை மீறி காணாமற்போனோர் இடம் பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand, ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.


இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் (Dhyan Chand,  ध्यान चंद) பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1905.

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி : ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும் ஓர்
இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.

சிறப்பு நிகழ்வுகள்

ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக என சுவரொட்டிகள் எழுந்தன.
1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).
ஹாலந்தில் அவரது வளைதடியில் காந்தம் ஏதேனும் உள்ளதா என அறிய தடியை உடைத்து பரிசோதித்தனர்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர்.
வாழ்க்கை வரலாறு
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பத்ம பூசண் விருது
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்.


பாரத் ரத்னா
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா 2014 வரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.
பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தியான் சந்த் விருது (Dhyan Chand Award)

இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற
வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு இந்திய ரூபாய்கள் ஐந்து
இலட்சம் (500000) நிதிப்பரிசு தவிர ஓர் பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், மற்றும் அலங்கார உடையும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர் பட்டியல்
எண் பெயர் ஆண்டு விளையாட்
1. அபர்ணா கோஷ் 2002 கூடைப்பந்த
2. அசோக் திவான் 2002 வளைதடிப் பந்தாட்டம்
3. சாகுராஜ் பிரஜ்தார் 2002 குத்துச்சண்ட
4. சார்லசு கார்னியலசு 2003 வளைதடிப் பந்தாட்டம்
5. தரம் சிங் மான் 2003 வளைதடிப் பந்தாட்டம்
6. ஓம் பிரகாஷ் 2003 கைப்பந்தாட்ட
7. ராம் குமார் 2003 கூடைப்பந்த
8. சிமிதா யாதவ் 2003 துடுப்பு படகோட்டம்
9. அர்தயாள் சிங் 2004 வளைதடிப் பந்தாட்டம்
10. லாப் சிங் 2004 தடகளம்
11. மெகெந்தளே பரசுராம் 2004 தடகளம்
12. மனோஜ் கோத்தாரி 2005
பில்லியர்ட்சு மற்றும்
மேடைக் கோற்பந்தாட்ட
13. மாருதி மானே 2005 மற்போர்
14. ராஜிந்தர் சிங் 2005 வளைதடிப் பந்தாட்டம்
15. அரிச்சந்திர பிரஜ்தார் 2006 மற்போர்
16. நந்தி சிங் 2006 வளைதடிப் பந்தாட்டம்
17. உதய் பிரபு 2006 தடகளம்
18. ராஜேந்திர சிங் 2007 மற்போர்
19. சம்சேர் சிங் 2007 கபடி
20. வரீந்தர் சிங் 2007 வளைதடிப் பந்தாட்டம்
21. கியான் சிங் 2008 மற்போர்
22. அக்கம் சிங் 2008 தடகளம்
23. முக்பெய்ன் சிங் 2008 வளைதடிப் பந்தாட்டம்
24. இஷார் சிங் தியோல் 2009 தடகளம்
25. சத்பீர் சிங் தயா 2009 மற்போர்




“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.”
என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர்
“He scores goals like runs in cricket” – Bradman
தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக அறியப்படுபவர். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தேசம் தாண்டியும் அறிமுகம் கொண்ட இவரை இந்தியாவில் பலர் இன்னமும் அறியாமல் இருப்பது ஆச்சர்யமே.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அங்கீகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் என்றால் அது மிகையல்ல. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 இவரது பிறந்த நாளிலே கொண்டாடப்படுகிறது.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுவது போல, விளையாட்டில் சிறந்த விளங்கியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தயான் சந்த் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
சந்திரன் வருகை
ஆரம்பத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது 16 வயதில் அப்போதைய பிரிட்டன் இந்திய ராணுவத்தில் இணைந்த பின்னர் தான் ஹாக்கி விளையாட துவங்கினார்.
ராணுவ நண்பர்கள் இவரை சந்த் என செல்லமாக அழைக்கத் துவங்கினர். சந்த் என்றால் சந்திரன் என அர்த்தம், பணி நேரம் முடிந்ததும் எல்லோரும் உறங்கும் வேளையில் தயான் மைதானத்தில் தனித்து நிற்பார்.
மின்விளக்குகள் அற்ற அக்காலத்தில் இரவு சந்திரன் வெளிச்சத்திற்காக அலைகளைப் போல இவர் காத்திருப்பார். இரவெல்லாம் பயிற்சி செய்வார்.
பல வருடங்களுக்கு பிறகு 1928 ல் ஒலிம்பிக்கில் ஹாக்கி மீண்டும் சேர்க்கப்பட்டது.ஆங்கிலேயர்களால் பிரிட்டன் இந்திய அணி உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் பயிற்சி பெற்ற அணி இங்கிலாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய அணியுடன் இங்கிலாந்து தேசிய அணி விளையாடியது.
11-0 என இங்கிலாத்தை சிதறடித்தது பிரிட்டிஷ் இந்திய அணி. இதன் காரணமாக தி கிரேட் பிரிட்டன், 1928 ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் அணியை அனுப்பவில்லை.
அவர்கள் தேசிய அணி இந்தியாவிடன் தோல்வியுற்றதையும் தாண்டி இங்கிலாந்து சர்வதேச களத்தில் அடிமை நாடான இந்தியாவை சந்திக்க அஞ்சியது ஒரு காரணமாகலாம்.
தயான் சந்த் பற்றி அதுவரை உள்ளுர் மக்கள் மட்டுமே அறிந்திருந்தனர். தயான் சந்த ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் பந்தை தட்டிக்கொண்டே 2 கிமீ தொலைவிற்கு விடாமல் பயிற்சி செய்வார் என மக்களால் கிசுகிசுக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியா
1928 ல் பிரிட்டிஷ் இந்தியா தன் முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரியா நாட்டை 6-0 என வென்றது. சந்த் 3 கோல்கள் அடித்தார், அடுத்தடுத்து தொடர் வெற்றி காண இறுதி போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும் உடல் நல குறைவால் சந்த் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை.
நெதர்லாந்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-0 கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை வசமாக்கி முதல் தங்கத்தை ருசித்தது. அந்த ஒட்டுமொத்த தொடரிலும் இந்தியாவிற்கு எதிராக எந்த கோலும் அடிக்கப்படவில்லை என்பது சரித்திரம்.
தன் வல்லமையான மட்டை திறனால் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவராக பெருமை அடைந்தார் சந்த். அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
This is not a game of hockey, but magic.
Dhyan chand is in fact the magician of hockey.
செல்லும் போது 3 நபர்கள் வழியனுப்பிய அணிக்கு, நாடு திரும்பிய போது பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்றனர்.
உள்ளுர் போட்டி ஒன்றில் எவ்வளவு முயன்றும் தயானால் கோல் அடிக்க முடியவில்லை, உடனே அவர் நடுவரிடம் சென்று கோல் கம்பத்தை அளக்க சொன்னாராம்.
அதிசயதக்க வகையில் சர்வதேக விதிமுறைகளை விட அதன் அகலம் குறைவாக இருந்தது.
அரண்ட அமெரிக்கா
1932 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. வழக்கம் போல ஜப்பான் போன்ற அணிகளை 11-0 கணக்கில் தோற்கடித்து இறுத்திக்குள் நுழைந்த இந்திய அணி போட்டி நடத்தும் அமெரிக்காவை எதிர் கொண்டது.
தயான் 8 கோல்கள், ரூப் சிங் 10 கோல்கள் உட்பட 24-1 என்ற கணக்கில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்தை சூரையாடியது. அந்த நேரத்தில் அதிக கோல்கள் அடித்த உலக சாதனை போட்டியாக இது அமைந்தது.
கதற விடப்பட்ட அமெரிக்க ஹாக்கி அணி அப்போது விட்ட விளையாட்டை இன்னும் சரிவர பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.
தயானின் சகோதரர் ரூப் சிங் பற்றி கூறிய ஆக வேண்டும். அவரை போன்ற ஒரு இடது உள்பக்க வீரர் இந்தியாவிற்கு இன்னமும் கிடைக்கவில்லை.
தயானிற்கு துணை நிற்கும் இவர் எப்போதும் அணியின் நம்பிக்கையை ஏமாற்றியது இல்லை. ஹாக்கி வரலாற்றில் நடுவரோடு வாதிட ஆட்டக்கார்களில் இவரும் ஒருவர்.
1932 ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோல்களில் தயான்-ரூப் அடித்த கோல்கள் மட்டுமே 25. ஹாக்கியின் இரட்டையர்களாக இவர்கள் வர்ணிக்கப்பட்டார்கள்.
காந்தம் இருக்கிறதா
தொடர்ந்து இந்த அணி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாது என பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றது.
ஒருமுறை ஹாலாந்து சென்ற போது இவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருப்பதால சந்தேகம் கொண்ட மக்கள் அவரது மட்டையை உடைத்தே பார்த்தார்களாம்.
ஒரு பெண் இவரிடம் தனது கைத்தடியை கொடுத்து விளையாட சொல்ல அதை வைத்துக் கொண்டும் எப்படியோ ஒரு கோல் அடித்தார் இந்த சாம்பவான்.
அந்த பெண் இங்கிலாத்தின் ராணி எனவும் சிலரால் கூறப்படுகிறது.பயண முடிவில் 37 போட்டிகளில் கலந்து கொண்டு 34 வெற்றி, 2 சமன்,1 ரத்து என உலகை பிரமிக்க வைத்தது இந்திய ஹாக்கி. 338 கோல்கள் அடித்த அணியில் 133 கோல்களை சந்த் அடித்திருந்தார்.
கேப்டன் தயான்
1934ல் சந்த் இந்திய ஹாக்கி அணியுன் கேப்டனாக பொறுப்பேற்று நடத்தினார்.
1935 ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் கிரிக்கெட் சாம்பவான் பிராட்மேன் இவர் ஆட்டத்தை காண நேர்ந்தது.
வியந்து போன பிராட்மேன் ஹாக்கி என சொல்லிவிட்டு கிரிக்கெட்டை காட்டுகிறார்கள், அவர் நாங்கள் ரன் எடுப்பது போல கோலகளை அடித்து கொண்டே இருக்கிறார் என்றார்.
1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பணத்தை தயார் செய்து செல்ல வேண்டிய காட்டாயம் இருந்தது.
இந்திய அணி கப்பலில் போக 50000 வரை செலவு பிடிக்கும். அவர்கள் பலரிடம் ஸ்பான்சர் கேட்டுச் சென்றனர். காந்தி இந்த ஹாக்கி பொருள் என்பது என்னவென்று கேட்டாராம், அன்றைய அரசியல் சூழல் அப்படி.
டாட்டா பிர்லா போன்றோர் உதவினர். பெரும் கடல் பயணத்திற்கு பின் ஒருவழியாக பெர்லினை சென்றடைந்தார்கள்.


தயான் vs ஹிட்லர்
அன்று வரை தோற்கடிக்கவே முடியாத பலம் வாய்ந்த இந்திய அணி பயிற்சி போட்டியில் ஜெர்மனியிடம் 1-4 என அதிர்ச்சி தோல்வியுற்றது.
இவர்கள் ஆட்டம் அடங்கிவிட்டது என மற்றவர் எண்ண தயான் தன் அணியுடன் பலவீனத்தை ஆலோசித்தார்.
தங்கள் வலது பக்க ஆடுநபர் சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்தவர்கள் டாரா என்பவரை அழைத்து வர கேட்டுக் கொண்டார். முதலாவதாக விமானத்தில் பறந்து வந்தவர் அவர் மட்டுமே.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள் என்ற போஸ்டர் பெர்லின் தெருவெங்கும் ஒட்டப்பட்டது.
இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களை காண அரங்கத்திற்கு வாருங்கள்.
ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்த அந்த ஒலிம்பிக் போட்டி நாசி ஒலிம்பிக்(Nazi Olymbic) என அறியப்பட்டது.
ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திதால் ஜெர்மன் அணி மிக வலுவான மனநிலையில் இருந்தது.
ஹிட்லர் தன் நாட்டு ரசிகர்களோடு ஆட்டத்தை ஆர்வத்தோடு கவனிக்க வந்திருந்தார்.
அன்றும் ஆகஸ்ட் 15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மற்ற மூவர்ண கொடியை வணங்கி களத்தில் வீரர்கள் இறங்கினர்.
போட்டி துவங்கியதும் இந்திய அணி பெரும் ஆக்ரோஷத்தை சந்தித்தது. ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது, ரசிக ஆரவாரங்கள் மண்ணை பிளந்தன.
சுற்றி வளைப்பட்ட தயான் எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் சற்று காட்டுத்தனமான கோல்கீப்பரால் அவர் பல் பறி போனது தான் மிச்சம்.
ஜெர்மனி வீரர்களின் உடல் வலிமை சிறப்பாக இருந்தது. இந்தியர்கள் வலிமையானவர்கள் அல்ல என்ற கூற்றை ஹிட்லர் விரும்பியதும் ஒரு காரணம்.
இந்தியர்களின் வாழ்வா சாவா போராட்டமாக இரண்டாவது பாதி தொடங்கியது. தயான் சந்த் தனது காலணிகளை கழற்றி வீசி வெற்று கால்களோடு களத்தில் இறங்கினர்.
>நீங்கள் ஹாக்கி விளையாட்டை கவனித்திருந்தால் காலுறை உள்ளே பலமான அட்டையை பொருத்திருப்பார்கள்.
அது மட்டையை வீசும் வேகத்தில் கால் எலும்புகள் உடையாமல் வீரர்களை பாதுகாக்கும், அதுவும் அப்போதைய காலத்தில் மாற்று வீரரெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அடிபட்டால் அவ்வளவுதான்.
ஆனால் அந்த நிமிடத்திலிருந்து தான் போட்டி சூடுபிடித்தது. இந்திய அணி ஒரு நேர்த்தியான ஹாக்கி விளையாட்டை ஜெர்மனுக்கு சொல்லி தர விரும்பியது.
புராதாண இந்திய ஹாக்கி ஒன்று அங்கே அரங்கேறியது. பந்து லாவகமாக ஜெர்மன் வீரர்களை தாண்டி இலக்கை சென்றடைந்தது.

தயான் சந்த் தன் மந்திர ஜாலத்தை பந்தாடினார். தொடர்ச்சியாக ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஜெர்மன் வீரர்களை மிரள வைத்தார், போட்டி முடிவடிகையில் இந்தியா 8 கோல்கள்.
ஜெர்மனி அடித்த ஒரு கோல் தான் பெர்லினின் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை.
திருடி விட்டு மாட்டிக் கொண்ட குழந்தை போல ஹிட்லர் முகம் மாறியிருந்தது. 50000 ரசிகர்களும் ராணுவ அமைதியில் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.
தயான் சந்த் என்ன சொன்னார் தெரியுமா. “ நான் ஒரு ஹாக்கி வீரன் தான், ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவ வீரன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அவரது சூரத்தனமாக ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் தயான் சந்தின் மட்டையை விலைக்கு வாங்க விரும்பினாராம்.
ஜெர்மன் பத்திரிக்கைகள் இந்திய ஹாக்கி அணியை இதுபோல் உலகின் தலைசிறந்த நேர்த்தியான அணி இனிமேல் உருவாக போவதில்லை,தயான் சந்த் யை போன்ற ஆட்டக்காரரும் என்றது.
அடையாளம்
வியான்னா வில் தயான் சந்த்ற்கு நான்கு கைகளும் அதில் நான்கு ஹாக்கி மட்டையோடு இருப்பது போன்ற சிலை உருவாக்கப்பட்டது.
அப்படிபட்ட ஒருவரால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என பொருள் தருமாறு அது உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை அது ஒரு மர்மமாகவே உள்ளது , பல பத்திரிக்கைகளில் குறிப்பிட்டிருந்தும் அச்சிலையை யாருமே பார்த்தது இல்லை.
அவரது மகன் அசோக் சந்த் 1975 ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுடம் முக்கிய கோல் அடித்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கி தந்தவர்.
அவர் ஒருமுறை நியூசிலாந்து செல்கையில் அங்கிருந்த உணவக நிறுவாகி நீங்கள் இந்திய ஹாக்கி அணியா என விசாரித்து தான் சிறுமியாக இருந்தபோது தயான் சந்தின் அனைத்து போட்டிகளையும் பார்த்துள்ளேன், அந்த மாயத்தை என்னால் மறக்க முடியாது என்றாராம்.
டெல்லியில் தேசிய மைதானத்திற்கு தயான் சந்த் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூசன் விருது பெற்ற ஒரே ஹாக்கி வீரர் இவர் மட்டுமே.
>அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவின் உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது. பதம் பூஷன் விருது வாங்கிய ஒரே ஹாக்கி வீரர் இன்று வரை இவர் மட்டுமே. இவரது பிறந்த நாளை(ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமான இந்தியா அறிவித்தது.
லண்டன் ஜிம்கானா கிளப்பில் ஹாக்கி அரங்கித்திற்கும் லண்டன் சுரங்க ரயில் பாதை நிலையம் ஒன்றிற்கும் இவர் பெயர் சூடிடப்பட்டுள்ளது.
அவரது மாநிலத்தில் அவரது உயரிய சிலை ஒன்று மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது, தற்போது அதனடியில் அமர்ந்தே இளைஞ்ர்கள் கஞ்சா அடிக்கின்றனர்.
இந்தியாவின் முகம்
1956 க்கு பிறகு அவர் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றார். அவரது இறுதி காலங்கள் வறுமையிலே வாடியது.
உலக புகழ் பெற்ற இந்தியன் ஆனாலும் உள்ளூர் மக்களிடம் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.
22 வருடம் ஹாக்கி சகாப்தத்தினை அகமதாபாத் உள்ள நகர போட்டியின் போது யாரென தெரியவில்லை என மக்கள் கூறினார்கள்.
தன் முதுமை பருவத்தில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டார் சந்த். 1978 அவரது சகாப்தம் முடிவுற்றது.
நியாப்படி சொல்லப்போனால் முதல் பாரத ரத்னா இவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும், சச்சின் 21 நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் என்றால் உலக களத்தில் இந்தியாவை பெருமையடைய வைத்த இவர் 20 நூற்றாண்டு மட்டுமல்ல ஆல்-டைம் தலைசிறந்த வீரராக இருப்பார்.
ஹாக்கி உள்ளவரை இவர் பெயரும் நுணுக்கமும் உலக ஒசையில் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
இறப்பதற்கு சில காலம் முன்பு அவர் சொன்னது, “நான் மரணித்த பிறகு உலகில் பலரும் எனக்காக கண்ணீர் சிந்துவார்கள் என எனக்கு தெரியும், ஆனால் என் இந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.”



ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்

இந்திய ஹாக்கியில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கலாம். சிலர் எப்போதாவது நினைவு கூறப்படலாம். சிலர் காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஓய்வுபெற்ற 66 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உலகைவிட்டு சென்றுவிட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு ஹாக்கி வீரர் பேசப்படுகிறார் என்றால், அந்த மகத்தான வீரர் வேறு யாருமல்ல அவர்தான் “மேஜிக் மேன்” மேஜர் தயான் சந்த்.
ஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு “மேஜிக் ஷோ” போன்றுதான் இருக்கும். அதன் காரணமாக பின்னாளில் “மேஜிக் மேன்” என்றழைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த்.
சந்தும் சந்திரனும்…
தனது 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் மல்யுத்த விளையாட்டை மறந்து ஹாக்கியில் காலடி வைத்தார். ஹிந்தியில் சந்த் என்றால் நிலவு என்று அர்த்தம். பெயருக்கேற்றாற்போலவே இந்த சந்துக்கும், அந்த சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. தினந்தோறும் பணியை முடித்துவிட்டு இரவில் ஹாக்கி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தயான் சந்த். ஆனால் அப்போது மைதானங்களில் மின்விளக்குகள் கிடையாது என்பதால், சந்திரன் ஒளிவீசத் தொடங்கிய பிறகுதான் இந்த சந்தின் ஆட்டமே தொடங்கும். அதனால் அவருடைய நண்பர்கள் தயான் சந்தை “சந்திரனே” என்றுதான் அழைப்பார்களாம்.
திருப்புமுனை
1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட தொடர். அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர் பெற்றார் தயான் சந்த்.
ஒலிம்பிக் பயணம்
ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த்.
முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. அப்போதே இந்திய ஒலிம்பிக் அணியில் அவருடைய இடமும் உறுதியானது.
ஒலிம்பிக்கில் நிகழ்ந்த மேஜிக்
1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.
ஆனால் தயான் சந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரால் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் விளையாட இயலாமல் போனது. எனினும் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கோல் கீப்பர் ரிச்சர்ட் ஆலன், எதிரணிகளிடம் ஒரு கோல்கூட வாங்காமல் புதிய சாதனை படைக்க, அதிக கோல் அடித்தவர் என்ற பெருமை தயான் சந்துக்கு (14 கோல்கள்) கிடைத்தது. அப்போது இந்தியாவின் வெற்றியைப் புகழ்ந்த பத்திரிகை ஒன்று, “இது ஹாக்கி விளையாட்டல்ல, மேஜிக். ஹாக்கியின் வித்தைக்காரர் தயான் சந்த்” என்று குறிப்பிட்டது.
1932-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.
இந்தியாவின் கேப்டன்
1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது.
பயிற்சி ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றிருந்ததால், இந்திய வீரர்கள் மிகுந்த பதற்றத்தோடு இருந்தனர். மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு களமிறங்கிய இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார்.
ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956-ம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
வறுமையான வாழ்க்கை
ஓய்வுக்குப் பிறகும் ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது.
இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த், பணத்திற்காக எப்போதுமே விளையாடியதில்லை. அதனால்தான் ஹிட்லரின் அழைப்பைக்கூட அவர் மறுத்தார். வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ்
மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.
தயான் சந்த் வாழ்வார்
தயான் சந்த் மறைந்துவிட்ட போதிலும், அவர் ஆடிய ஆட்டமும், காட்டிய மேஜிக்கும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வீரர்கள் இன்னும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகைவிட்டு சென்று 35 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எங்கேயோ ஒரு மூலையில் யாராவது ஒருவர் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் அவருடைய மேஜிக்கும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.
தேசிய விளையாட்டு தினம்
வாழும்போது அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

“மேஜிக் மேனு”க்கு இன்று 109-வது பிறந்த நாள்.
ஹிட்லரை கவர்ந்த தயான் சந்த்
*22 ஆண்டுகால ஹாக்கிப் பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்திருக்கிறார். டெல்லியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானம், லண்டனில் உள்ள இந்திய ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் ஆகியவற்றுக்கு தயான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*ஒருமுறை ஹாக்கி விளையாடியபோது தயான் சந்தால் கோலடிக்க முடியவில்லை. அப்போது நடுவர்களிடம் சென்ற அவர், கோல் கம்பத்தின் அளவு தொடர்பாக வாதிட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் சர்வதேச விதிமுறைப்படி இரு கோல் கம்பம் இடையிலான அகலம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. இதிலிருந்து தயான் சந்தின் ஆட்டம் எவ்வளவு துல்லியமானது என்பதை அறியலாம்.
*1936 ஒலிம்பிக் போட்டியின்போது “ஹாக்கி மைதானத்தில் இப்போது “மேஜிக் ஷோவையும்” பார்க்கலாம். இந்திய “மேஜிக் மேன்” தயான் சந்தின் ஆட்டத்தைக் காண செல்லுங்கள்” என ஜெர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
*கிரிக்கெட்டின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேனும், தயான் சந்தும் 1935-ம் ஆண்டு அடிலெய்டில் சந்திக்க நேர்ந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. தயானின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த பிராட்மேன், கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போல் தயான் சந்த் கோலடிக்கிறார் என புகழ்ந்தார்.
*ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 4 கைகள் மற்றும் 4 ஹாக்கி மட்டைகளுடன் இருப்பார். அவரின் அபாரத் திறமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
*லண்டனில் உள்ள சுரங்க ரயில்பாதையில் உள்ள ஒரு நிறுத்தத்துக்கு தயான் சந்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் தயான் சந்த் விளையாடியபோது அவருடைய மேஜிக் ஆட்டத்தைப் பார்த்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. அவருடைய மட்டையின் உள்புறத்தில் காந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது.
*1936 ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து ஜெர்மனியை அப்போது ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரே, அசந்து போனார். அதன் எதிரொலியாக ஜெர்மனி குடியுரிமை தருவதாகவும், ஜெர்மனி ராணுவத்தில் பணி வழங்குவதாகவும் கூறி தயான் சந்தை இழுக்க நூல்விட்டார் ஹிட்லர். ஆனால் தயான் சந்தோ, சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்.