திங்கள், 27 ஜனவரி, 2020

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட... பஞ்சாப் சிங்கம் பிறந்த தினம் !!



இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட... பஞ்சாப் சிங்கம் பிறந்த தினம் !!
இன்றைய பொன்மொழி !
ஓடிச்செல்லும் ஆறு ஒரு பாறையை பொடித்து உடைப்பது அதன் பலத்தால் அல்ல... அதன் விடாமுயற்சியால்..!! விடாமல் முயற்சி செய், எதையும் உன்னால் சாதிக்க முடியும்..!!லாலா லஜபதி ராய்


இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ஆம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று கூறினார். இவர் 1928ஆம் ஆண்டு மறைந்தார்.இராஜா இராமண்ணா


இந்திய அணுவியல் நிபுணர் இராஜா இராமண்ணா 1925ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.

எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களின் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.

1974ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்" (ழுpநசயவழைn ளுஅடைiபெ டீரனனாய) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, லுநயசள ழக Pடைபசiஅயபந (1991)இ வுhந ளுவசரஉவரசந ழக ஆரளiஉ in சுயபய ரூ றுநளவநசn ளுலளவநஅள (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

இந்திய அணு ஆற்றல் துறைக்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
1882ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது.1898ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி இந்திய தரைப்படையின் முதல் படைத்தலைவர் கே.எம்.கரியப்பா பிறந்தார்.

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு

 உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு

ஜனவரி
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

பிப்ரவரி
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

ஏப்ரல்
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஜீன்
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்

செப்டம்பர்
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26. குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!



இந்திய குடியரசு தினம் ஜனவரி 26.
குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!!

உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு.
 
உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின.
சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, ஜனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

இந்தியர்களாகிய நாம் இன்று 71 வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.


உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின.
சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, ஜனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
இந்தியர்களாகிய நாம் இன்று 69வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.

இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.

உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.

இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..

மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.

பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
நன்றி சமயம்.
இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

இன்றைய தினம்... வரலாறு ஜனவரி 19



திரைப்பட பின்னணி பாடகர்... சங்கீத அகாடமி விருது... இன்றைய தினம்... வரலாறு !
சீர்காழி கோவிந்தராஜன்

🎼 கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பின்னணி பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பிறந்தார்.

🎼 பி.எஸ்.செட்டியார், அவர்களின் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். 1951ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

🎼 1953ஆம் ஆண்டு பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

🎼 சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

🎼 தன் இனிமையான குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 1988ஆம் ஆண்டு மறைந்தார்.ஜேம்ஸ் வாட்


🏆 பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

🏆 இவருக்கு சிறுவயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் அதிகம். 18 வயதில் லண்டனில் கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றார். பின்பு இயந்திரங்கள் தயாரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

🏆 இவருக்கு 1764ஆம் ஆண்டு தாமஸ் நியூகாமன் என்பவரின் நீராவி இயந்திரத்தைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்றம் செய்தார். இந்த மாற்றங்களால் இயந்திரத்தின் சக்தி பல மடங்கு பெருகியது. அதற்கு காப்புரிமையையும் பெற்றார்.

🏆 இவர் இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் சென்ட்ரிஃபியூகல் கவர்னர் கருவி, அழுத்தமானி, பொருள் அளவு, விசை, வேகம், தொலைவு ஆகியவற்றை பதிவு செய்யும் கருவி, நீராவியைக் கட்டுப்படுத்தும் த்ராட்டில்-வால்வு ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

🏆 இவர் பொறியாளர் மேத்யூ போல்டனுடன் இணைந்து பல்வேறு நீராவி இயந்திரங்களைத் தயாரித்துள்ளார். எனவே தொழிற்புரட்சிக்கு வித்திட்ட நாயகர் என்று உலகம் இவரைப் போற்றியது.

🏆 மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு வாட் என இவரது பெயரே சூட்டப்பட்டது. ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவர் இவரே.

🏆 இயற்கையான நீராவி சக்தியை கொண்டு மகத்தான பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜேம்ஸ் வாட் 1819ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1990ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஓஷோ மறைந்தார்.👉 1806ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது.


வெள்ளி, 17 ஜனவரி, 2020

இன்றைய தினம்... வரலாற்றில் தடம் பதித்தவர்கள்... யார்? யார்?



இன்றைய தினம்... வரலாற்றில் தடம் பதித்தவர்கள்... யார்? யார்?
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
'வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே... என்ன செய்கிறாய்? என்பதை அறிந்து செய்.. செய்வதை விரும்பிச் செய்.. செய்வதை நம்பிக்கையோடு செய்..!"எம்.ஜி.ராமச்சந்திரன்



✌ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

✌ இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

✌ சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

✌ 1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காகத்" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

✌ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.பெஞ்சமின் பிராங்கிளின்



🌀 ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர் பெஞ்சமின் பிராங்கிளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார்.

🌀 இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளார்.

🌀 இவர் 'Pழழச சுiஉhயசனள யுடஅயயெஉம" என்ற புகழ்பெற்ற இதழை இவ்வுலகுக்குத் தந்தவர்.

🌀 மின்சாரம் பற்றியும், இடி மற்றும் மின்னல் பற்றியும், புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (டிகைழஉயட படயளளநள) மற்றும் பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.

🌀 அறிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிராங்கிளின் 1790ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வளைகுடாப் போர் ஆரம்பித்தது. l

புதன், 15 ஜனவரி, 2020

பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்




பொங்கல் - தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்

#பண்டைய நாள் முதல்
#போகிப் பண்டிகை
#தைப் பொங்கல்
#மாட்டுப் பொங்கல்
#காணும் பொங்கல்

திருநாளின் நோக்கம்
அறிமுகம்
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல்தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும். தமிழர்கள், நன்றி செலுத்துவதில் தன்னிகரற்றவர்கள். உழைப்பாளிகளாகிய அவர்கள் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி செலுத்துவதற்காக வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

பண்டைய நாள் முதல்
தமிழர்கள், தோன்றிய காலம் முதல், இயற்கையை வழிபட்டு, வணங்கி தாங்கள் வாழ்வதற்கு வளங்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுடன் தைப் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். சங்க காலத்திலேயே, பொங்கல் நோன்பு இருந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சங்க காலத்தில், விவசாயமே, மக்களின் தொழிலாக இருந்தது. மண்ணை நம்பியே மக்களுக்கு மும்மாரி மழை தேவை. மழை பெய்தால், பயிர் செழிக்கும். நாடு கொழிக்கும். இதனை மனதில் வைத்துத்தான், தை நோன்பை சங்ககாலப் பெண்கள் கடைபிடித்தார்கள். மார்கழியில் தொடங்கிய நோன்பை, தை முதல் நாள் முடிப்பார்கள். தங்கள் பயிர் செழிக்க உதவிய பகலவனுக்கும், மண்ணுக்கும் (பூமிக்கும்), உழுத கால்நடைகளுக்கும், பால் வழங்கிய பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்தையும் சுத்தப்படுத்தி, அலங்கரித்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கல் திருநாள், வேளாண்மையைத் தொடர்புபடுத்தியே நடத்தப்படுகிறது.

"மணிமேகலை" காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா 28 நாட்கள் வரை நடந்திருக்கிறது. அதாவது 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப, ஏறக்குறைய தை மாதம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இப்போது போகி, அன்று, பழையனவற்றைக் கழித்து, வீட்டை, தெருவைச் சுத்தப்படுத்துவது போல, அப்போதும் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்ததைத்தான் காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். வீதிகளைச் சுத்தப்படுத்தி, புதுமணல் பரப்புவர்.

காவல் தெய்வம், இஷ்டதெய்வம், ஊரின் பொது தெய்வம் என அனைத்துத் தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்தனர். மழைக்கு உரிய தெய்வம் இந்திரன். இந்திர வழிபாட்டால், மாதம் மும்மாரி பொழியும் என்று நம்பினர். உலக உயிருக்கு ஒளி கொடுத்து, ஆதார சுருதியாக இருக்கும் சூரியனை வணங்கி, கொண்டாட்டத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதோடு வாழ்வின் நோக்கம் & மக்களின் பசி, நோய் நீங்க வேண்டும். பகைமை மறைய வேண்டும். உறவுகள் மலர வேண்டும் என்பதுதான்.

ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஐப்பசியில் மழை பொழிய, உழைப்பால் விளைவித்த நெல்லை மார்கழியில் சேகரித்து, தங்கள் உழைப்பின் பயனை நுகரும் நாளே, தைத் திருநாள். புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகையில், 'தை'க்கு சிறப்பு தெரிவித்து பாடல்கள் உள்ளன. பொங்கல் திருநாள் தற்போது நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் உலகில் வாழும் பகுதிகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை
'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தமிழரின் மரபு. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்-களைக் கழித்து, வீட்டை சுத்தமாகத் துடைத்து, வர்ணம் தீட்டி, புதுப் பொலிவோடு மாற்றுவார்கள். இப்படிச் செய்யும் மாற்றம், வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை. இதில் பழைய பொருட்களை, தேவையற்றவைகளை தீயிட்டுக் கொளுத்துவது சேர்ந்துவிட்டது. இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று வலியுறுத்தப்படுவதால் 'போகி கொளுத்துவது' கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இது ஆரோக்கியமான விஷயம். இப்போது 'தூய்மை இந்தியா' நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளிலேயே 'தூய்மை இல்லத்தை தொடங்கி வைத்தவர்கள், அதற்காக ஒரு விழாவினைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் என்பது பெருமைதானே!

தைப் பொங்கல்
தை முதல் நாளில், அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானை வைத்து, புது அரிசியிட்டு, பொங்க வைப்பார்கள். தலைவாழையிலையில், நிறைகுடம் வைத்து, விளக்கேற்றுவர். சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உண்டு. கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று, 'பொங்கலோ... பொங்கல்' என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை எடுத்து சூரியனுக்குப் படைத்து, உற்றார், உறவினர், சுற்றத்தாருக்குக் கொடுத்து, அதன்பின்னே குடும்பத்தார் உண்பார்கள். 'மகிழ்வித்து மகிழ்' என்னும் தமிழனின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு இது.

மாட்டுப் பொங்கல்
தமிழனின் உழவுக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது ஆவினங்களே, அந்த ஆவினங்களுக்கு நன்றி கூறும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. அதோடு பண்டைய தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் அன்று நடைபெறும். கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கரித்து, அவைகளுக்கு பொங்கலிட்டு, 'பட்டி பெருக, பால் பானை பொங்க, நோவும், பிணியும் தொழுவோடு போக' என்று முழக்கமிட்டு, மாடு, பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். கிராமத்து வீதிகளில் ஜல், ஜல், சலங்கை ஒலிகளோடு, மாடுகள் உலா வருவது, மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கும். பிற உயிரையும், தன் உயிராக நினைக்கும், உயர், தமிழர் பண்பாடே மாட்டுப் பொங்கல்.

காணும் பொங்கல்
மனிதனை சமூக விலங்கு என்பர். காரணம், மனிதனும் கூடி வாழ்பவன்தான்-. கூடி வாழ்ந்தால், கோடி நன்மை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். உற்றார், உறவினர்களை, காணும் பொங்கலன்று, கண்டு, பரிசளித்து மகிழ்வர். அதோடு குடும்பத்தார், சுற்றத்தார் புடை சூழ நகரை வலம் வருதலும் காணும் பொங்கலன்று நடக்கும் உன்னத நிகழ்ச்சியாகும். வீட்டை விட்டே வெளியே செல்லாதவர்கள் கூட, காணும் பொங்கலன்று வெளியே வந்து, வெளியுலக மகிழ்ச்சியை அனுபவிப்பர்.

திருநாளின் நோக்கம்
பொங்கல். இது ஒரு தமிழர் இனத் திருவிழா. சாதி, சமயம் மற்றும் பல வேறுபாடுகளை மறந்து, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த குடியின் அடையாள, பண்பாட்டு விழாவாக பொங்கல் திகழ்கிறது. உழைப்பின் மகிமையை ஊருக்கு, உலகுக்கு சொல்லும் விழா, பொங்கல் விழா, இது இயற்கையோடு இயைந்த மூத்த குடியின் திருநாள். இத்தகைய பொங்கல் விழாவினை ஏன் கொண்டாடுகிறோம் என்பதனை கவிஞர் வாணிதாசன், தனது கவிதையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த மழைக் களிர் வாடையை வீழ்த்தி விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம் வெளியெலாம் விளைவினைக் கண்டோம்! பண்ணிடைக் கலந்த தமிழ்ச் சுவை போல மனத்திடைப் பரந்ததே இன்பம்! கண்ணிடை மகிழ்ச்சி கருத்திடைத் தெளிவு கண்டனம் வாழ்த்துவோம் பொங்கல்என! மனிதன் உயிர் வாழ உணவு தேவை. நமது முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இதனை விளைவித்து, அறுவடை செய்து, வையத்து உயிருக்கெல்லாம் சோறிடும், அறுவடைத் திருநாளான பொங்கல் விழா போற்றத் தகுந்ததல்லவா! பொங்கல் நன்றி தெரிவிக்கும் விழா, மேற்கு நாடுகளிலும், நமது பொங்கல் போன்றே, நன்றியைத் தெரிவிப்பதற்காக ஒரு விழா, கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், தை முதல் நாளைப் போன்று (ஜனவரி 14, 15 வாக்கில்) சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். சூரியன், தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழைந்து, உத்தரயானத்தில் சஞ்சரிக்கும் காலம் தொடங்கிறது. இதுவே மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

உலகெங்கிலும் மக்கள் விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கம். இயந்திர கதியிலான தங்கள் இயல்பு வாழ்க்கையில் சோர்வு நீங்கி, சுறுசுறுப்படைவதற்காகத்தான். தேக்கமான வாழ்க்கைக்கு வடிகாலாக இருப்பவைகளே விழாக்கள். விழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம், புத்துணர்வும், புது எழுச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. காலைக் கதிரவன் அன்றைய நாளின், நம்பிக்கையின் அடையாளம். விழாக்கள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மகிழ்ச்சியின் அடையாளம்