புதன், 30 அக்டோபர், 2019

தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31.


ஒற்றுமையின் நாயகனே!  தேசிய ஒற்றுமை தினம் அக்டோபர் 31.

சுதந்திரத்துக்குப்பின் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் வல்லபாய் படேல். 'இரும்பு மனிதர்' என போற்றப்படும் இவரது பிறந்த தினம், அக்., 31ல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நாடியாத் கிராமத்தில் 1875, அக், 31ல் விவசாய குடும்பத்தில் படேல் பிறந்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார். 'பாரிஸ்டர்' பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். வறுமை காரணமாக சக மாணவர்களிடம் புத்தகங்களை கடன் வாங்கி படித்தார். இரண்டே ஆண்டுகளில் படிப்பை முடித்து

இந்தியா திரும்பினார்.

ஆமதாபாத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.விடுதலை உணர்வுபின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். காந்திஜியின் உப்பு சத்யாகிரக போராட்டத்தில், இவரது பங்கு முக்கியமானது. இதனால் சிறை சென்றார். ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்ததுடன், மகன், மகள் வைத்திருந்த வெளிநாட்டு ஆடைகளையும் துாக்கி எறிந்தார். 1931ல் கராச்சியில் நடந்த மாநாட்டில் காங்., கட்சி தலைவரானார். 1942, ஆக.,9ல், வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இவர், 1945 ஜூன் 15ல் விடுதலையானார்.
ஒரே குடையில்

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, நாடு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இவை சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்த படேலிடம்ஒப்படைக்கப்பட்டது.


பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது.


காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.
இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார். ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்தார். 1950, டிச. 15ல் காலமானார். மறைவுக்குப்பின் 1991ல் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.

உயரமான சிலை



இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமர் மோடியின் முயற்சியால்,
குஜராத்தின் சர்தார் சரோவர் அணை அருகே, உலகின் மிக உயரமான சிலை 2018 அக்., 31ல்
திறக்கப்பட்டது. உயரம் 597 அடி.
நன்றி தினமலர்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தமிழ்நாடு தினம் நவம்பர் 01.


தமிழ்நாடு தினம் நவம்பர் 01.

தமிழ்நாடு உருவான தினம்!! ஒரு சிறப்பு பார்வை!
 
தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில உருவாக்க நாள் என்பது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 1, 1956-ம் ஆண்டில் தான் நமது தமிழகம், சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்து "தமிழ்நாடு" என பெயர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு என தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.


இந்நிலையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 தேதியை "தமிழ்நாடு தினமாக கொண்டாப்பட்டு வருகிறோம்.

தமிழரின் அடையாளத்தை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 25 அக்டோபர், 2019

தீபாவளி பண்டிகை


தீபாவளி பண்டிகை

#அறிமுகம்
#தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
#தீபாவளி பண்டிகையின் வரலாறு
#பெயர்க் காரணம்
#தோற்ற மரபு
#புராணக் கதைகளின் படி நரகாசுரனின் நிஜப்பெயர்
#தீபாவளியின் பெருமை
#கொண்டாடும் முறை
#சகோதரிகளுக்கு பரிசு
#மேற்குநாடுகளில் தீபாவளி
#தலைத் தீபாவளி



#அறிமுகம்

பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திராவிடர் கதை சொல்லி நிம்மதியை கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம்.

வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.

அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.  இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.

இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.

மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.

எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.

ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம். தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.

#தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்:

கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.


#தீபாவளி பண்டிகையின் வரலாறு

தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.

தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.

தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்தங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.

இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.

முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.

அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.

தீபாவளி, ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.


#பெயர்க் காரணம்

‘தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ’ஆவளி‘ என்றால் வரிசை.

வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது . அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.

#தோற்ற மரபு

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

புராணக் கதைகளின் படி நரகாசுரனின் நிஜப்பெயர்
நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.


#தீபாவளியின் பெருமை

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு.

#சீக்கியர்களின் தீபாவளி

1577- இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

#சமணர்களின் தீபாவளி

சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

#கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர். தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.

வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள். தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.

#சகோதரிகளுக்கு பரிசு

தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.

தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும்.

அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வர்.

அந்த நீராடலைத்தான் ”கங்கா ஸ்நானம் ஆச்சா” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும்” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.


#மேற்குநாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.


#தலைத் தீபாவளி

தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 18 அக்டோபர், 2019

உலக வெண்கோல் தினம் அக்டோபர் 15

உலக வெண்கோல் தினம் அக்டோபர் 15 

பார்வையற்றோர் பயணத்தின் வழிகாட்டி; பள்ளம் மேடுகள் உரைக்கிற உற்ற தோழன்
அன்பார்ந்த பொதுமக்களே, சக பயணிகளே!
நீங்கள் பயணிக்கிற சாலைகளில் வெண்கோல் பிடித்த பார்வையற்றவரை எதிர்கொண்டால், கண்டும் காணாததுபோல் அமைதியாகக் கடந்துவிடாமல், அவரை அணுகி, அவர் சாலை கடக்க உதவுங்கள். இவ்வாறு செய்வதில் எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ, அச்சமோ கொள்ளாமல் அதனைத் தன்னைப் போன்ற சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதுங்கள்.
பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க உதவும்போது, அவரின் கையைப் பற்றி, நீங்கள் இரண்டு அடிகள் அவருக்கு முன் நடந்தவாறு அழைத்துச் செல்லுங்கள். வெண்கோலின் ஒரு முனையைப் பிடித்து அழைத்துச் செல்வது, முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு  செல்வதுபோன்ற செய்கைகளைத்  தவிர்ப்பதன் மூலம், அவருடைய கண்ணியமான பெருமிதப் பயணத்தை நீங்கள் உறுதி செய்கிறீர்கள்.
வெண்கோலின் உதவியுடன் நடந்து செல்லும் பார்வையற்றவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள்.
வாகனங்களில் செல்வோர், வெண்கோளுடன் எதிர்படும் பார்வையற்றவரின் நலன்கருதி, வேகத்தைக் குறைத்து அவர் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவுங்கள்.
இடது வலது பக்கங்கள் சொல்லி, நடந்து செல்லும் பார்வையற்றவரை நெறிப்படுத்த விரும்புவோர்,  தங்களின் இடது, வலது பக்கங்களைச் சொல்வது தவறு. பார்வையற்றவரின் இடது வலது பக்கங்களைச் சொல்வதே சரியான முறையாகும்.
பாதுகாப்பான  பயணம் நம் ஒவ்வொருவரின் உரிமை. அதைப் பார்வையற்றவருக்கும் உறுதி செய்வது நம் அனைவரின் கடமை.

வியாழன், 17 அக்டோபர், 2019

உலக கிராமத்து பெண்கள் தினம் அக்டோபர் 15.


உலக கிராமத்து பெண்கள் தினம் அக்டோபர் 15.



உமோஜா கிராமம் கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம். இது தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் தப்பிய 15 பெண்களைக் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்தின் தலைவியாக பிரித்தானிய இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்ற பெண் செயற்பட்டு வருகிறார். இங்கு வாழ்பவர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர். ஆகத்து 2015ன் கணக்கெடுப்பின் படி இந்தக் கிராமத்தில் 47 பெண்களும், 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.

உமோஜா கட்டுப்பாடுகள் தொகு
உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய உடைகளையும், ஆபரணங்களையும் அணிய வேண்டும். இங்கு புகைப்பிடிப்பதற்கும், பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால், வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்ற சொல்வழக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக மகளிர் தின வரலாற்றுக்கும் இதுதான் நேர்ந்துள்ளது.

உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம் என்ன?

இந்த நாள் ஆண்டுதோறும் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது?

மார்ச் 8-தான் மகளிர் தினத்துக்கான தேதி என்று முடிவுசெய்தது எந்த அமைப்பு?

இவை பற்றி மிகப் பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்கள், மற்ற ஊடகங்கள், ஏன் ஐ.நா. சபையின் அதிகாரபூர்வமான சில இணைய தளங்களில்கூடத் தவறான தகவல்களே உள்ளன. இவற்றில் முக்கியமான சில தவறான தகவல்களையும் உண்மையான வரலாற்றுத் தகவல்களையும் பார்ப்போம்.

தவறான தகவல்கள்

1. தமிழ் விக்கிபீடியா இணையதளக் கட்டுரையில், “பிரான்ஸ், பிரஷ்யாவில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848, மார்ச் 8-ம் நாளாகும்.

அந்த மார்ச் 8-ம் நாள்தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது” எனக் கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல். உண்மையில் நடந்தது என்ன? இன்றைய ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளின் பகுதிகளைக்கொண்ட பிரஷ்ய நாட்டின் மன்னர் பிரெடெரிக் வில்லியம்ஸ், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 1848, மார்ச் 19 அன்று அளித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். எனவே, மார்ச் 8-க்கு இது காரணமில்லை.

2. “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடை மற்றும் துணித் தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள் 1857 மார்ச் 8 அன்று வேலை நிறுத்தம் செய்து போராடினார்கள். அதை நினைவுகூரும் வகையில்தான் உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது” என்று ஐ.நா. சபையின் ஓர் இணைய தளத்திலும் ஏராளமான கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை பிரான்ஸ் நாட்டின் பெண் ஆய்வாளர்கள் இருவர் விரிவாக ஆய்வுசெய்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்கள்.

3. “நியூயார்க் நகரில் ஆடை ஆலைகளின் பெண் தொழி லாளர்கள் மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள். இதைக் கவுரவிக்கும் வகையில் இந்த நாளைத் தேசிய மகளிர் தினத்துக்கான நாளாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி நிச்சயித்தது” என்ற தகவல் ஐ.நா. சபையின் இணையதளத்தில் உள்ளது.

இப்போதுள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 1908 மார்ச் 8 அன்று நியூயார்க் நகரத் தெருக்களில் ஊர்வலம் நடந்ததாகவும் மகளிர் தினத்தின் வரலாறு அதிலிருந்து தொடங்கியது என்றும் உள்ளது.

ஆனால், நியூயார்க் நகரில் 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தமோ மார்ச் 8 அன்று ஊர்வலமோ நடைபெறவில்லை. 1908 போராட்டம் தொடர்பான எந்தக் கட்டுரையிலும் இதற்கான ஆதாரம் ஏதும் அளிக்கப்படவில்லை.

4. உலக மகளிர் தினத்துக்கான நாள் மார்ச் 8 என்று எப்போது, எவ்வாறு நிச்சயிக்கப்பட்டது?

1977-ல் ஐ.நா. சபை மகளிர் தினத்தைக் கொண் டாட மார்ச் 8 என்ற தேதியை முடிவு செய்ததாக ஆங்கில விக்கிபீடியா கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகளில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நா. சபையின் தீர்மானத்தில் ‘ஏதேனும் ஒரு நாளில்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

magalirjpgகிளாரா ஜெட்கின்
உண்மையான வரலாற்றுத் தகவல்கள்

1. உலக மகளிர் தினம் உருவாக உண்மை யான காரணம் என்ன?

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ 1910-ல் நடந்தது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘மகளிர் தின’த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக மகளிர் தினத்தின் தாய் என்று சொல்லத்தக்க கம்யூனிஸ்ட் தலைவி கிளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) மாநாட்டுக்குத் தலைமை வகித்து, இந்தத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்மொழிந்தார்.

“அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women's Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மகளிர் தினத்துக்கான தேதி ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.) எனவே, 1910-ல்

நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம்தான் உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம்.

2. உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் ஏன் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாடப்படுகிறது?

உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 நவம்பர் 7-ல் லெனின் தலைமையில் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன்னோடிப் புரட்சியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னரின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது.

1917 மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கிய இந்தப் புரட்சியே, உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட உண்மையான காரணம்.

3. மார்ச் 8-ம் தேதிதான் மகளிர் தினத்துக் கான தேதி என்று முடிவுசெய்தது ஏன், எந்த அமைப்பு?

உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு முதல் பல நாடுகளில் பல தேதிகளில் கொண்டாடப் பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாடு 1921-ல் மாஸ்கோ நகரில் நடந்தது. ரஷ்யாவில் 1917, மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவுகூரும் வகையில், இனிமேல் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்த மாநாடுதான் முடிவுசெய்தது. அதன் பிறகுதான் மார்ச் 8-ல் உலக மகளிர் தினம் என்பது நடைமுறைக்கு வந்தது.

எனவே, 1921-ல் நடந்த ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாட்டுத் தீர்மானமே, உலக மகளிர் தினத்துக்கு மார்ச் 8-ம் தேதி நிச்சயிக்கப்படவும் நிரந்தரமாக்கப்படவும் உண்மையான காரணம்.

ஆகவே, உலக மகளிர் தினம் என்பது பெண்களின் புரட்சிகரப் பாரம்பரியத்தை நினைவுகூரும் நாள். அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்தி, அனைத்து ஆதிக்கங்களுக்கும் முடிவுகட்டச் சூளுரைக்கும் நாள் இது!

உமோஜா கிராமம் கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம். இது தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் தப்பிய 15 பெண்களைக் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்தின் தலைவியாக பிரித்தானிய இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்ற பெண் செயற்பட்டு வருகிறார். இங்கு வாழ்பவர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர். ஆகத்து 2015ன் கணக்கெடுப்பின் படி இந்தக் கிராமத்தில் 47 பெண்களும், 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.

உமோஜா கட்டுப்பாடுகள் தொகு
உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய உடைகளையும், ஆபரணங்களையும் அணிய வேண்டும். இங்கு புகைப்பிடிப்பதற்கும், பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

புதன், 16 அக்டோபர், 2019

உலக வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 . (International Day for the Eradication of Poverty)



உலக வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 .
 (International Day for the Eradication of Poverty) 

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.


வறுமையின் வகைகள்

வறுமையை முற்றிலும் வறுமை(absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்ஹ்ட அளவு வழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே.

விளைவுகள்
வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன
உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது' என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது.



இதனை ஐ.நா., சபை அங்கீகரித்தது. 'குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.

எது வறுமை

அனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உடை,
இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாதவர்கள் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகின்றனர்.வறுமை, வன்முறைக்கு வழிவகுக்கிறது. உலகில் அதிக மரணங்கள்
வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமை யினால் உயிரிழப்பவர்கள் அதிகம்.

காரணம் என்ன

வறுமை தொடர்வதற்கு ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை,
விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் கல்வி கிடைத்தால் ஓரளவுக்கு வறுமை குறையும்.

17.2
உலகில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில், 17.2 சதவீதம் வறுமையில் உள்ளனர். இது நகரங்களை விட மூன்று மடங்கு அதிகம்.

55
உலகில் 2018 கணக்கின் படி சமூக பாதுகாப்பு இல்லாமல், 55 சதவீத மக்கள் உள்ளனர்.
100

உலகில் 25 - 34 வயதுக்குட்பட்டவர்களில், 100 ஆண்களுக்கு, 122 பெண்கள் வறுமை நிலையில் உள்ளனர்.


73

உலகில் 73 கோடி பேர், உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 கோடி பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு நாளைக்கு ரூ.135க்கு கீழ் வருமானம் உடையவகள்.

41

உலகில் 2018 கணக்கின் படி, 41 சதவீத பெண்கள் மட்டுமே, குழந்தை பேறுகால நிதியுதவி
பெறுகின்றனர்.

5

உலகில் ஐந்தில் ஒரு சிறுவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


8

உலகில் 2018 கணக்கின்படி வேலைக்கு செல்பவர்களில், 8 சதவீதம் பேர் வறுமையில்
வாழ்கின்றனர்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக உணவு நாள் அக்டோபர் 16 .


உலக உணவு நாள் அக்டோபர் 16 .

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு நாள்
World Food Day
கடைபிடிப்போர்
அனைத்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
நாள்
அக்டோபர் 16
காலம்
1 நாள்
நிகழ்வு
ஒவ்வொரு ஆண்டும்
2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.


உலக உணவு தினம் – அக்டோபர் 16

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்துடன் உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்தால், வறுமையும் அதிகரிக்கிறது.அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியை ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

உலக வங்கி தகவல்படி 2010& 11ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.



உலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க
தெரியுமா #WorldFoodDay

 நாம் உண்ணும் உணவுதான் கடவுள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அதற்கு உணவு கொடுப்பது புண்ணியம். உலக உயிர்கள் அனைத்திற்கு உணவு கிடைத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவு தினமாக கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஜாதகப்படி உணவை வீணாக்குபவர்கள் யார் என்று என்றும் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த உணவு பிடிக்கும் ருசிக்காக சாப்பிடுபவர்கள் யார் பசிக்காக சாப்பிடுபவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம்.


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 20 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது, உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் உலக உணவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் தொடங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு ஐநா சபையின் 20வது பொது மாநாட்டில் அக்டோபர் 16ஆம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 40 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்


வீணாகும் உணவு
இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்கள், விருந்து நடைபெறும் இடங்கள், கேளிக்கை விடுதிகளில் சராசரியாக ஐம்பது முதல் 100 பேர் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுகளை தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கின்றனர். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதே. உணவை வீணாக்காமல் இருந்தாலே பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும்.


உணவு வீணாவது எப்படி
எப்போதும் வீட்டிலிருக்கும் வரை நமக்கு நம் அன்னையிடும் உணவின் அருமை தெரிவதில்லை. ஆனால் வேலைக்காகவோ படிப்பிற்காகவோ வெளியூர் சென்று தங்க நேர்ந்தால் வீட்டு சாப்பாட்டின் அருமையும் அம்மாவின் பெருமையும் தெரியும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அசுபராகி இரண்டாம் பாவத்தில் நிற்க விருந்து மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டு வீட்டு உணவுகளை வீணடிப்பார்.



காரமான உணவுகள்
ஒரு ஜாதகரின் இரண்டாம் பாவத்தில் சூரியன் அசுப தொடர்பு பெற்று அல்லது பாதகாதிபதியாகி நிற்க கோதுமை மற்றும் கோதுமையில் செய்த உணவு பொருட்களை வீணாக்குவார்களாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அசுபத்தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க அந்த ஜாதகர் ஊறுகாய், வடான், வத்தல் வகைகள், சூடான, காரமான சாப்பாடு வகைகளைக் கூட வீணாக்கி விடுவார்.


பழங்கள் வீணாகும்
ஒருவர் ஜாதகத்தில் புதன் அசுப கிரகத்தின் தொடர்பு பெற்று இரண்டாம் பாவத்தில் நிற்க பசுமையான காய்களை சமைக்காமலேயே வீணக்கிடுவார். மேலும் தேவைக்கு அதிகமாக நொறுக்கு தீனிகளை வாங்கி வீணடிப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் குரு அசுபராகி இரண்டாம் வீட்டில் நிற்க நெய்யில் செய்த இனிப்பு வகைகளையும், பழங்களையும் வீணடிப்பார்.



ருசியான உணவுகள்
சூடாகவும் சுவையாகவும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மேஷ ராசிக்காரர்கள். வேகமாக சாப்பிட்டு விடுவார்கள். இனிப்பு, துவர்ப்பு காரமான உணவுகள் ரொம்ப பிடிக்கும். அதே நேரம் ரிஷப ராசிக்காரர்கள் அறுசுவை உணவுகளையும் ரசித்து ருசித்து மெதுவாக சாப்பிடுவார்கள். இனிப்பு, உவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்குமாம்.


உணவும் தண்ணீரும்
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இனிப்பு, துவர்ப்பு சுவை ரொம்ப பிடிக்கும் குடும்பத்தோடு சேர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவார்கள். கடக ராசிக்காரர்கள் ரொம்ப டேஸ்டா ஹைஜீனிக்காக சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டில் சமைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பக்கத்தில் தண்ணீர்பாட்டில் ரெடியாக இருக்க வேண்டும் அப்போதான் உணவு உள்ளே இறங்கும்.


சுவையோ சுவை
சிம்ம ராசிக்காரர்கள் வெரைட்டியாக சாப்பிடுவார்கள். ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா என்று பாராட்டிக்கொண்டே சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சூடாகவும் காரகமாகவும் சாப்பிடுவார்கள். ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனிப்பு துவர்ப்பு பிடிக்கும். அதுவும் தனியாகத்தான் சாப்பிடுவார்கள். இவர்கள் தான் தின்னி தனிக்காட்டு ராஜாக்கள்.


உணவு வீணாகாது
துலாம் ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும் உணவுக்கு மரியாதை கொடுப்பார்கள். உணவை வீணாக்க மாட்டார்கள். பழைய உணவைக்கூட பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். ஊறுகாய், காரமான உணவுகள் பிடிக்கும். இனிப்பு துவர்ப்பு ரொம்ப பிடிக்கும். அதே போல செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பசிக்காக சாப்பிடுவார்கள். சூடாகவும் அதே நேரம் துவர்ப்பு சுவையுள்ள உணவும் ரொம்ப பிடிக்குமாம்.


கசப்பு ரொம்ப பிடிக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கும் மகரம் ராசிக்காரர்களுக்கும் கசப்பு ரொம்ப பிடிக்கும். நன்றாக பசித்த பின்னர் வேகமாக மென்று சாப்பிடுவார்கள். காய்கறிகள், கீரை, பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல கசப்பு சுவை ரொம்பவே பிடிக்கும் பழைய உணவு கூட ரொம்ப பிடிக்கும் உணவு வீணாகாது.


சுவையான உணவு
கும்பம் ராசிக்காரர்களுக்கு பல ஊர் உணவுகள் ரொம்ப பிடிக்கும் தேடி தேடி ருசியாக சாப்பிடுவார்கள். உண்ட மயக்கம் அப்படியே ரெஸ்ட் எடுப்பது பிடிக்கும். அறுசுவையும் அற்புதமாக சரி சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே போல மீனம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார். வேகமாக சாப்பிடுவார். காரம், இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு ரொம்பவே பிடிக்கும்.Thanks oneindia.


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வியாழன், 10 அக்டோபர், 2019

உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11




உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 .

இன்றைய பெண் குழந்தைகள்..! நாளைய சாதனைப் பெண்மணிகள்…!     
பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...!

 -த.புவனேஸ்வரி மகேந்திரன்,எம்.ஏ.எம்.எட்.,
இயக்குனர்,மதி கல்வியகம்,திருநெல்வேலி.

பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகிய தேவதைகள் வாழும் வீடு..

பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக  அக்டோபர் 11 ஆம் தேதி (இன்று) உலக பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும், அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும்,  ஐ.நா. சபை 2011-ல் எடுத்தமுடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதல் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்’’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து. பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.                                                             


''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம் செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  கூறியுள்ளார் .பெண்களை போற்றுவதற்கு கிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்கு பயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில் நதிகள் அனைத்திற்கும் பெண்களின் பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியை பூமாதேவி என்றும், நிலவை பெண்ணாக உருவகப்படுத்துவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

தொல்காப்பியம், போன்ற இலக்கண நூல்கள் ,சங்க இலக்கியங்கள்,நீதி நூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளைவிறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சிறப்பான சொற்களை பாடல்வரிகளில் கையாண்டுள்ளனர் .


வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை அறிந்து , அன்றே சங்ககாலப்  புலவர்கள் பெண்களின் பெருமையயும், முக்கியத்துவத்தையும் பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள் 2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள் இருந்துள்ளனர் .

வரலாற்றில்   போற்றத்தகுந்தவகையில் ஔவையார் ,காக்கைப் பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள் ,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா ,இந்திராகாந்தி ,எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்த சாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும் தொண்டுகள் அளவிட முடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக .1869-ல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்த முறையில்தொடங்கி நடத்தினார்.

வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும் நுால்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பலஅரிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்ட சான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்கு முதல் இடம் உண்டு.


பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும்சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றை பல்வேறு  நூல்களின்   வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின் வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில் பெண்கள் சிறந்த நிலையை அடைந்துள்ளனர்  என்பது வெளிப்படையான உண்மை .பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.

பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் எந்த திசையை நோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள் தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்த வேண்டும் .

இன்று பல சிறுமிகள் காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம் பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள் சுதந்திரமாக வளர வேண்டும் என்று குழந்தைகளின் நடத்தைகளை கண்டு கொள்ளமாட்டார்கள். இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழக வேண்டும்.

 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மனம்  நோகாதவாறு புரிய வைக்க வேண்டும்.உங்கள் பெண் குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட் டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பது காலத்தின்அவசியமாகும். உங்களைச் சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு  பெரிய வாழ்த்தாக அமையும்!.


இந்தியாவில் பெண் குழந்தைகளை வழிநடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூக சிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் கற்று கொடுக்க வேண்டும்.அவர்களை சரியான பாதையில் கால் பதிக் வைத்து, அவர்களுடன் கை கோர்த்து,அவர்கள் செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி, பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த வித கேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்த ஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களை சமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்த பாதுகாப்பு என்பதை பெண்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஆறுதலாக இளைப்பாறும் மடி ஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... இருக்க வேண்டும் .என சொல்லி கொடுக்க வேண்டும். பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண் குழந்தைகளை காட்டாமல்,தோல்வி கண்டாலும், துவண்டு போகாமல், அதை எதிர்த்துப்  போரிடும் குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக் கொண்டு ஒரு குடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள் அல்ல... அறிவுச்சுடர்கள்.

இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!

 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: பெண்மையை போற்றுவோம் ...!


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக மனநல நாள் (World Mental Health Day) அக்டோபர் 10


உலக மனநல நாள் (World Mental Health Day) அக்டோபர் 10 

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.

கருப்பொருட்கள் தொகு
1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.

ஆண்டு கருப்பொருள்
2017 பணியிடங்களில் மனநலம்
2016 உளவியல் முதலுதவி
2015 மனநலத்தில் கண்ணியம்
2014 மனப்பித்துடன் வாழ்தல்.


உடலும், உள்ளமும் நலந்தானா? இன்று உலக மனநில தினம்!

உலகம் முழுவதிலும், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
samayam-tamil
உடலும், உள்ளமும் நலந்தானா? இன்று உலக மனநில தினம்!
 
மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, உலக நல மருத்துவ அமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை உலக மனநல பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆரோக்கியம்' குறித்து உலக சுகாதர நிறுவனம்!

உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

மன நல பாதிப்புக்கான காரணங்கள்!
‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கு காரணங்கள். இதுதவிர 200-க்கும் மேற்பட்ட மனநோய்கள் உள்ளன. இவையெல்லாம் நம் மனதை தினம்தினம் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.


மன நோயிலிருந்து விடுதலை!

மனநோய் என்பது ஒரு சமூக நோய். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும் மனநோயையும், அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, மனநல மருத்துவர் அல்லது மனநல உளவியலாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.

எனவே மனநலத்தை பேணுவோம்..ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!!!


உலக மனநல தினம்: பின்பற்ற வேண்டிய 4 தெரபிக்கள்!
ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று உலக மனநல தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினம் மனநலக் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, வழிமுறைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாக கருதப்படுகிறது. 1992ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் நாம் கொண்டாடுகிறோம்.

இத்தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது

இத்தினத்தின் தனித்துவம் என்னவெனில், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளில் உலக மனநல நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு மனநலத்தில் கண்ணியம், 2016ஆம் ஆண்டு உளவியல் முதலுதவி, 2017ஆம் ஆண்டு பணியிடங்களில் மனநலம், 2018ஆம் ஆண்டு மாறிவரும் உலகில் இளைஞர்களும் மன ஆரோக்கியமும் என இதன் கருப்பொருள் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வரும்.

இவ்வருடம், மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

மன ஆரோக்கியம் குறித்த விவாதங்களும், விழிப்புணர்வுகளும் கடந்த சில ஆண்டுகளில் அதன் முக்கியத்துவம் கொண்ட நல்ல காரணத்திற்காக மைய நிலைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் மனநலன் குறித்த தங்கள் சந்தேகங்களை நண்பர்களுடன் தெரிவிக்க தயங்கியவர்கள் கூட சமீப காலங்களில் தயக்கம் எனும் எதிரியை வீழ்த்தி பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் மெதுவாக தங்களைச் சுற்றியுள்ள மனநல பிரச்சினைகளின் களங்கத்தைத் துடைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுகிறார்கள்.

சமீப காலங்களில் முன்னணி இடத்தில் வலம் வரும் பிரபலங்கள் கூட தாங்கள் சந்தித்த மனநலப் பிரச்சனைகளை பொது வெளியில் பகிரும் போது, இது அனைவருக்குமான பிரச்சனையாக பார்க்கப்படும் ஆரோக்கியமான மனப்பான்மை நம் சமூகத்தில் வளரத் துவங்கியிருக்கிறது. தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், ஆண்டிரியா போன்ற நடிகைகள் தாங்கள் சந்தித்த மனநல சிக்கல்கள், அவற்றிலிருந்து சிகிச்சை மூலமும், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் பகிர்ந்ததன் மூலமும் எவ்வாறு அவற்றிலிருந்து வெளியே வந்தோம் என சமூக வலைதளங்கள் பகிர்ந்ததை இங்கே முக்கியமானதாக குறிப்பிட்டுக் கூற வேண்டும்.

நல்ல மன ஆரோக்கியத்திற்கான சற்று சுவாரஸ்யமான பாதைகளை தேடுபவர்களுக்காக, சில முக்கியமான உளவியல் சிகிச்சைகள் இங்கே பார்க்கலாம்.

செல்லப்பிராணி சிகிச்சை

பெட் தெரபி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சிகிச்சை, உண்மையில் பல நல்ல ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. வீட்டுப் பிராணிகளான நாய்கள் அல்லது பிற விலங்குகளை வளர்க்கும் போதும், அவற்றுடன் நேரத்தை செலவிடும் போதும்: நம்முடைய கவலை, மனச்சோர்வு ஆகியவை அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தி நீண்டகால சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உதவுகிறார்கள்.

கலை சிகிச்சை

கலை உளவியல் சிகிச்சையின் கருவிகள் ஆக: ஓவியம் வரைதல், களிமண்ணில் கலைப் பொருட்கள் செய்வது, பொம்மைகள் செய்வது என எதுவாகவும் இருக்கலாம். சிகிச்சையாளர்கள் உணர்ச்சிகரமான சிக்கல்களை வெளிப்படுத்தவும் உரையாற்றவும் ஒரு ஊடகமாக கலையைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் துன்பகரமான நிலை அல்லது குழப்பமாக இருக்கும் போது இவற்றை முயற்சி செய்து பார்க்கும் போது, ஒரு நிம்மதி உணர்வை நம்மால் அடைய முடியும். இந்த நடைமுறை, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, சமூக திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் சுயமரியாதையை வளர்க்கிறது.

இசை சிகிச்சை

மியூசிக் தெரபி எனப்படும் இது, இயலாமையால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கும், வளர்ச்சி மற்றும் உணர்ச்சி சிக்கல்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும். புற்றுநோய் மையங்கள், ஆல்கஹால் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களில் மருத்துவ இசை சிகிச்சையாளர்கள் இந்த இசை சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்.

எழுத்து சிகிச்சை

எழுத்து சிகிச்சை மிக எளிமையான ஒன்று, ஜர்னல் தெரபி என்று இது அழைக்கப்படுகிறது. அதாவது உங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி எழுதுவது உங்களை அறிந்து கொள்ளவும் மன சிக்கல்களில் இருந்து வெளியேறவும் உதவும். பொதுவாக மனநல மருத்துவர்கள் இந்த சிகிச்சைகளை பரிந்துரைப்பது உண்டு.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையுடன் பெரிதும் வேறுபடுகிறது, எனவே மன ஆரோக்கியத்திற்கான பாதையும் ஒரே மாதிரி அமைவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். நமக்குப் பிடித்த பல சிகிச்சை முறைகள் இருக்கும் நிலையில், நம் வாழ்வு முறைக்கு ஏற்ற சிகிச்சை வடிவத்தை முயற்சிப்பதில் நாம் எப்போதும் தயங்கக்கூடாது என்பதைத் தான் இந்த உலக மனநல தினம் நம்மிடம் கூறுகின்றது.


இன்று உலக மன நல நாள் - மன நோயை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள் -அஸ்ட்ரோ சுந்தரராஜன்(Thanks oneindia)

 உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 10ம் தேதியை உலக மனநல தினம் என அறிவித்துள்ளது. உடலும் மனமும் ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டவை. உடலுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது மனதை பாதிக்கும்; அதே போல் மனதுக்கு ஏதாவது ஏற்பட்டால் அது உடலை பாதிக்கும் மன நலத்தின் முக்கியத்துவம் பற்றியும் ஜோதிடத்திற்க்கும் மன நலத்திற்க்கும் உள்ள தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதே உலக மனநல நாளில் இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.


மனநலம் குன்றுதல்:
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!).


மன நலம் பற்றிய விழிப்புணர்வு:
மனநலப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று மனநலம்

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் கொடுமை. தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அதற்கடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது.

கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் அதிகளவில் மனநோய்க்கு பாதிப்படைபவர்கள் அதிகமாக உள்ளனர் என்கின்றனர். மனநலம் பாதிப்பை நோய் என சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனநலம் சார்ந்தது, அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிச்செய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே அதிலிருந்து விடுபட சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களை சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதை தடுக்க முடியும்.



மன நலப் பிரச்சினைக்களுக்கு கீழ்க்காணுவது போன்று பல காரணிகள் உள்ளன:
தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம்.

போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம்.

வலை தளங்கள் மற்றும் சோஷியல் மீடியா எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குறியதாக உள்ளது.

மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள்

விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள்

மரபியல் பிறழ்ச்சிகள்,மூளைக்காயம்/குறைபாடு

மது, போதைப் பழக்கம்,தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு


ஜோதிடத்தில் சந்திரனுக்கும் மனதிற்க்கும் உள்ள தொடர்பு:
ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது , ஜாதகரின் மன நிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது , சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது , ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும் , ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும் , உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும் .


வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது. "சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத" . பொதுவாக முழு நிலவு அன்று மன.நோயளிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள்.

மனோகாரகன் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சி கொடுப்பவர். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் (மனம் தொடர்புடையவர்) என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்க்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும்.


ஜோதிடமும் மனோவசியமும்:

•மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும்.

•பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.

ஜோதிடத்தில் மன நோய்க்கான கிரஹ நிலைகள்:

ஜோதிடத்தில் மனதிற்க்கு சந்திரனையும், புத்திசாலிதனத்திற்க்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலிதனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலிதனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் பாவம் பூர்வ புன்னியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம்பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநி்லைக்கு முக்கியமானதாகு. ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்ச்ஙகளாகும்.

1. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.

2. ஒருவருடைய ஜாதகத்தில் பக்‌ஷ பலமற்ற சந்திரன் லக்னத்திற்க்கு 6/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது.

3. சந்திரன் விருச்சிக ராசி மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி 6/8/12 அதிபதிகளாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது.

4. சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜென்ன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது.

5. ஆத்ம காரகனாகிய சூரியன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜென்ன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது

6. லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது.

7. சந்திரனும் புதனும் 6/8/12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களூடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது.

8. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது.

9. கோப உணர்ச்சியை தூண்டும் கிரஹஙகளான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது.

மனபாதிப்பு எப்போது ஏற்படும்?
சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள்

ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள்,சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்

சந்திரன் கேது புத்தி காலங்கள்,சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.

ஜோதிட பரிகாரங்கள்:
குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு.

ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும்

ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.

ராகு கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம், திருகீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புறம், கேரளாவில் உள்ள மண்ணார்சாலா ஆகிய ஸ்தலங்களில் ஸர்ப வழிப்பாடு செய்வது.

கும்பகோணம் நாச்சியார் கோவிலை அடுத்துள்ள திருநாறையுரில் மாந்தியோடு சேர்ந்து அருள் புரியும் குடும்ப சனி பகவான்.

கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க ஸ்வாமிகோயிலில் ஜென்ம நக்‌ஷதிர நாளில் சென்று வழிபடுவது.

மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசிலம் மற்றும் திருப்பதி போன்ற சந்திர ஸ்தலஙளுக்கு சென்று வருவதும் சிறந்த பலனளிக்கும்.

சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.

மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.

சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பது.

உளவியல் ஆலோசனை:

மனநலம் முக்கியமானது எனத் தெரிந்தும், உடல் நலத்திற்கு மருத்துவரை பார்ப்பது போல் நாம் மன நலத்திற்கான பணியாளர்களை அணுகுவதில்லை. பைத்தியக்கார்கள் தான் உளவியல் ஆலோசகர்கள், உளவியலாளர்கள், மன நல மருத்துவர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள் போன்ற மனநல பணியாளர்களை அணுகுவார்கள் என்ற தவறான கருத்து நம் சமுதாயத்தில் பரவலாக உள்ளது.

உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள். உளவியல் ஆலோசனையின் போது, அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம்

உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்சனைகளை வரையறுத்து, உங்களை தெளிவாக சிந்திக்க தடுக்கும் தடைகளை கண்டுபிடிக்கக்கூடியவர். அந்த குறிப்பிட்ட தடைகளை போக்க, உங்களுடன் (தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும்) இணைந்து, நடைமுறைக்கு ஒத்துவரும் உளவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுபவர். மனச்சிதைவு, மனச்சோர்வு, அடிமைப் பழக்கங்கள் போன்ற சில மன பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சை அளிப்பதுண்டு.

பல ஜோதிடர்களும் சிறந்த உளவியல் ஆலோசகர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மன நலம் பாதிக்கப்பட்டோரை தகுந்த சிகித்சையோடு ஜோதிட ரீதியான ஆலோசனைகளை கடைபிடிப்பது மற்றும் ஜோதிடதில் கூறப்பட்ட பரிகாரஙகளை கடைபிடிப்பது ஆகியவை மன நோயிலிருந்து விரைவில் விடுபட வழி வகுக்கும் என்பது உண்மை.

 மனநலம்பைத்தியம்சந்திரன்ஜோதிடம்




Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 4 அக்டோபர், 2019

உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5


உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம் என்பர். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

இன்று அக்டோபர் மாதம் 6ம் தேதி- அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

1994ம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை உலக ஆசிரியர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ம் தேதியை ஆசிரியர் நாளாக கொண்டாடுகின்றன. இந்தியா செப்டம்பர் 5ம் திகதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறது.

பொதுவாக ஆசிரியர் தினம் வௌவேறு நாடுகளில் வௌவேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும்கூட, இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, ஏனெனில் இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்ப டுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான், இருக்கிறார், இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.


ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக் காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் செய்திகளை சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம்பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இவர்களை துஷ்பிரயோகம் செய்துவிட முடியாது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர்களை இனங்கண்டு சட்டரீதியாக கடுமையாக தண்டனைகளை வழங்கி ஆசிரிய தொழிலின் மாண்பினைப் பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.

ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.

ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80மூ ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.

நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாக ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!


ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

நாடுகளின் அடிப்படையில் ஆசிரியர் நாளின் தேதி தொகு
நாடு தேதி
ஆப்கானித்தான் அக்டோபர் 3
அல்பேனியா மார்ச்சு 7
அல்சீரியா பெப்ரவரி 28
அர்ச்சென்டினா செப்டம்பர் 11
ஆர்மீனியா அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு
ஆஸ்திரேலியா அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி
அசர்பைஜான் அக்டோபர் 5
பக்ரைன் பெப்ரவரி 28
பெலருஸ் அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு
புரூணை செப்டம்பர் 23
பூட்டான் மே 2
பொலிவியா சூன் 6
பிரேசில் அக்டோபர் 15
பல்கேரியா அக்டோபர் 5
சிலி அக்டோபர் 16
கொலொம்பியா மே 15
சீன மக்கள் குடியரசு செப்டம்பர் 10
செக் குடியரசு மார்ச்சு 28
எக்குவடோர் ஏப்ரல் 13
எகிப்து பெப்ரவரி 28
எல் சால்வடோர் சூன் 22
எசுத்தோனியா அக்டோபர் 5
செருமனி அக்டோபர் 5
குவாத்தமாலா சூன் 25
ஃகொங்கொங் செப்டம்பர் 10
அங்கேரி சூன் மாதத்தின் முதல் ஞாயிறு
இந்தியா செப்டம்பர் 5
இந்தோனேசியா நவம்பர் 25
ஈரான் மே 2
ஈராக் மார்ச்சு 1
யமேக்கா மே 6
ஜோர்தான் பெப்ரவரி 28
லித்துவேனியா அக்டோபர் 5
லெபனான் மார்ச்சு 9
லிபியா பெப்ரவரி 28
மலேசியா மே 16
மெக்சிகோ மே 15
மொல்டோவா அக்டோபர் 5
மங்கோலியா பெப்ரவரி மாதத்தின் முதல் சனி மற்றும் ஞாயிறு
மொரோக்கோ பெப்ரவரி 28
நேபாளம் நேபாள மாதம் அஷாதின் வறும் முழு நிலவு தினம்
நியூசிலாந்து அக்டோபர் 29
ஓமான் பெப்ரவரி 28
பாக்கித்தான் அக்டோபர் 5
பனாமா திசம்பர் 1
பராகுவே ஏப்ரல் 30
பெரு சூலை 6
பிலிப்பீன்சு அக்டோபர் 5
போலந்து அக்டோபர் 14
கத்தார் அக்டோபர் 5
உருமேனியா அக்டோபர் 5 ?
உருசியா அக்டோபர் 5
சவுதி அரேபியா பெப்ரவரி 28
செர்பியா அக்டோபர் 5
சிங்கப்பூர் செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளி
சிலோவாக்கியா மார்ச்சு 28
தென் கொரியா மே 15 (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்)
இலங்கை அக்டோபர் 6
எசுப்பானியா சனவரி 29
சிரியா மார்ச்சு 18
தாய்வான் (சீனக் குடியரசு) செப்டம்பர் 28
தாய்லாந்து சனவரி 16
துனீசியா பெப்ரவரி 28
துருக்கி நவம்பர் 24
உக்ரைன் அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு
ஐக்கிய அரபு அமீரகம் பெப்ரவரி 28
அமெரிக்க ஐக்கிய நாடு மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாள் ஆகும்
உசுபெக்கிசுத்தான் அக்டோபர் 1
வியட்நாம் நவம்பர் 20
யெமன் பெப்ரவரி 28
மொரிசியசு அக்டோபர் 5
இந்தியாவில் ஆசிரியர் நாள்
முதன்மைக் கட்டுரை: ஆசிரியர் நாள் (இந்தியா)
இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்