புதன், 16 அக்டோபர், 2019

உலக வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 . (International Day for the Eradication of Poverty)



உலக வறுமை ஒழிப்பு நாள் அக்டோபர் 17 .
 (International Day for the Eradication of Poverty) 

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.


வறுமையின் வகைகள்

வறுமையை முற்றிலும் வறுமை(absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்ஹ்ட அளவு வழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே.

விளைவுகள்
வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன
உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது' என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது.



இதனை ஐ.நா., சபை அங்கீகரித்தது. 'குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.

எது வறுமை

அனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உடை,
இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாதவர்கள் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகின்றனர்.வறுமை, வன்முறைக்கு வழிவகுக்கிறது. உலகில் அதிக மரணங்கள்
வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமை யினால் உயிரிழப்பவர்கள் அதிகம்.

காரணம் என்ன

வறுமை தொடர்வதற்கு ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை,
விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் கல்வி கிடைத்தால் ஓரளவுக்கு வறுமை குறையும்.

17.2
உலகில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில், 17.2 சதவீதம் வறுமையில் உள்ளனர். இது நகரங்களை விட மூன்று மடங்கு அதிகம்.

55
உலகில் 2018 கணக்கின் படி சமூக பாதுகாப்பு இல்லாமல், 55 சதவீத மக்கள் உள்ளனர்.
100

உலகில் 25 - 34 வயதுக்குட்பட்டவர்களில், 100 ஆண்களுக்கு, 122 பெண்கள் வறுமை நிலையில் உள்ளனர்.


73

உலகில் 73 கோடி பேர், உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 கோடி பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு நாளைக்கு ரூ.135க்கு கீழ் வருமானம் உடையவகள்.

41

உலகில் 2018 கணக்கின் படி, 41 சதவீத பெண்கள் மட்டுமே, குழந்தை பேறுகால நிதியுதவி
பெறுகின்றனர்.

5

உலகில் ஐந்தில் ஒரு சிறுவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


8

உலகில் 2018 கணக்கின்படி வேலைக்கு செல்பவர்களில், 8 சதவீதம் பேர் வறுமையில்
வாழ்கின்றனர்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக