ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

உலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.


உலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) ஆண்டுதோறும்
விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம்
மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
புனித ஜெரோம் தனது படிப்பறையில். டொமெனிக்கோ கிர்லாந்தையோ வரைந்தது.
1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.
தமிழகத்தின் பங்கு
தமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.
பல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன.
1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான்.]எழுதிய
தீர்க்கதரிசி , ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய
வேக்பீல்டு பாதிரியார்  போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு...


உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு...

ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பின் சார்பில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதயத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்பது இந்த ஆண்டு இதய தினத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக உயிரிழப்புகள்: ஆண்டுதோறும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகிலேயே அதிக உயிரிழப்புக்கு காரணமான நோயாக இதய நோய்களே கருதப்படுகின்றன. இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய நோய்களால் மரணமடைகின்றனர்.
பொருளாதார இழப்பு: இந்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து இதய ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக இதய கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக நடுத்தர வயதில் மரணமடைபவர்களால் அந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இழப்பு. இந்தியாவில் மட்டும் இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு தடைவிதிப்பது, உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக பொருளாதார மன்றம், பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
நோய்களை தவிர்க்க...: முறையான உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம் உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இதய நோயிலிருந்து பாதுகாக்கும். கொழுப்பு இல்லாத மீன், பருப்பு வகைகள், பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
கட்டுப்பாடான எளிய வழிகளை கடைப்பிடித்து காப்போம் இதயத்தை.....



உலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு

இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ஆம் தேதியை உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர் .



இன்று உலக இதய தினம்; இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ வழிகள்!

இதய நோய்களிலிருந்து தப்பிக்க, கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.
மனித உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு இதயம். அத்தகைய இதயம் நோய்வாய்ப்பட்டால், எளிதில் மீண்டு வர இயலாது.
எனவே இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளால், பல்வேறு இதய நோய்கள் ஏற்படுகின்றன. உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அத்தகைய இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள worldheartday.org என்ற இணையதளத்தில் 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 - இதயம் அறிவோம்:
நமது இதயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வரவிருக்கும் நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்க முடியும். சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
2 - போதிய உணவு:
ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் இதயத்தின் நலத்திற்கு ஏற்றது.
3 - செயல்பாட்டு இதயம்:
உடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலைப் பேணலாம்.
4 - இதயம் காப்போம்:
ஃபாஸ்ட் புட், ஒழுங்கற்ற உணவு நேரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.




உலக இதய தினம் 2017: இதய நோய்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..

நமது உடலுறுப்புகளில் எல்லா பாகங்களுமே முக்கியம்தான். ஆனால், இதயம் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு. இதய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதய நோய்கள் தாக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளையும், ஒழுங்கான வாழ்வியல் முறைகளையும் கடைபிடித்தாலே இதய நோய்கள் நம்மை நெருங்காது. இன்றைய நாளில் இதய நோய்கள் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
இருதய நோய்கள் என்றால் என்ன?
இதயத்தில் ரத்த திட்டுகள் இருத்தல், ரத்த நாளங்களில் கோளாறு, இதய வடிவமைப்பில் பிரச்சனைகள், பக்கவாதம், பிறவியிலிருந்து இருக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், இதய தமனி நோய், இதய அடைப்பு நோய் உள்ளிட்ட அனைத்துமே இருதய நோய்களில் அடங்கும். ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகள், உடல் பருமன், புகைபிடித்தல், அளவுக்கதிகமான குளுக்கோஸ், தீய கொழுப்புகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தாண்டு worldheartday.org இணையத்தளமானது இதய நோய்களிலிருந்து நம் இதயத்தைக் காத்துக்கொள்ள 4 முக்கியமான பரிமாணங்களை உருவாக்கியுள்ளன. அவற்றை காண்போம்.
1. உங்கள் இதயத்தை அறிந்துகொள்ளுங்கள்:
உங்கள் இதயத்தை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரவிருக்கும் இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சீரான கால அளவில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தல் மூலம் இதய நோய்களிலிருந்து முன்கூட்டியே தப்பித்துக் கொள்ளலாம்.
2. இதயத்திற்கு சரியான உணவை அளியுங்கள்:
ஆரோக்கியமான உணவை உண்பது முக்கியமான விஷயம். ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ், இதுதவிர ஆரோக்கியமான உடல்நலத்திற்காக உங்களால் நுகர முடிந்த உணவுப்பொருட்களை உண்ணலாம்.
3. இதயத்தை ஆக்டிவாக வைத்திருங்கள்:
வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்வது முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள்.
4. உங்கள் இதயத்தை காதலியுங்கள்:
துரித உணவுகள், ஒழுங்கற்ற வேலை நேரம் இவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்பது, புகை பிடித்தலை தவிர்ப்பது, மது பழக்கத்தை நிறுத்துவது உள்ளிட்டவற்றால் இதயம் நன்றாக செயல்படும்.



 உலக இதய தினம்: இதயம் பற்றிய சில செய்தி துளிகள்

இன்று உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.
* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.
* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.
கவனிக்க வேண்டியவை:
* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.
* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.
* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.
* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.
* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது
* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.
* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.



உலக இதய தினம்: வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கும் நோய்
இதயநோய் தற்போது வயதானவர்களை மட்டுமின்றி இளைஞர் களையும் அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், அப்பல்லோ மருத்துவமனை இதய மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பால் ரமேஷ் தங்கராஜ் ஆகியோர் கூறியதாவது:

இந்த ஆண்டில் உலக இதய தினத்தின் கருப்பொருள் ‘இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்குவோம்’ என்பதாகும். வீடு, விளையாடும் இடம், பணிபுரியும் அலுவலகம் போன்ற வற்றில் இதயத்துக்கு இதமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். உலக அளவில் இதய நோய் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மாரடைப்பு ஏற்படும் 100 பேரில் 20 பேர் உயிரிழக்கின் றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50, 60 வயதுகளில் வந்த இதய நோய், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே வருகிறது. வாழ்க்கை முறை மாற்றம், மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகை மற்றும் மதுப்பழக்கம் போன்றவை இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இவை தவிர இதய ரத்தக் குழாய்கள் சுருங்குதல் மற்றும் வீங்குதல், இதய தசைகள் செயலிழத்தல், இதயம் செயலிழந்து போதல், இதய துடிப்புகளில் பிரச்சினை போன்ற இதய நோய்களும் உள்ளன. இதய நோய்களால் பாதிக்கப்படும் 80 சதவீதம் பேரை மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும். 20 சதவீதம் பேருக்குத்தான் அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதய நோய்களுக்கு பல நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்
இதய நோய்களில் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உள்ளது. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். மாரடைப்புக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது திடீரென மாரடைப்பு வந்து வந்து விட்டாலோ உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.
இதய நோய்களை தவிர்க்க...
மது, புகை பழக்கத்தை விட்டு சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். உணவுடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிறு நிறைய சாப்பிடுவதை விட்டுவிட்டு குறைவாக சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே இதய நோய்கள் வராமல் 80 சதவீதம் தடுக்கமுடியும்.




மனித உடலின் மகத்தான எந்திரம்... இதயம்! #WorldHeartDay
இதயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்குக் கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதயம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி 'உலக இதய தினம்'-ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 'சக்தியைப் பரப்புவோம்' ('Share the power') என்ற கருத்தின் அடிப்படையில் உலக இதயக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு இந்த நாளைக் கொண்டாடவிருக்கின்றன.
இந்த உலக இதய நாளில், நம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கும் இதயத்தை பாதுகாப்பது குறித்தும், இதய நோய்கள் குறித்தும், முதலுதவி, சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்குகிறார் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.
இதயம் நம் கைகளில்!
இதயத்தின் அளவென்பது, நம்முடைய மூடிய கைகளின் அளவு தான். 400 கிராம் எடை கொண்டது. நாம் கருவிலிருக்கும்போதே இதயம் துடிக்க துவங்கும். ஒரு நிமிடத்துக்கு, சராசரியாக 72 முறையும், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறையும் துடிக்கும். 'Myocardium' என்னும் இதயத் தசைகளால் ஆன இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் உடையது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதான பணியாகும்.



இதயம் பத்திரம்! – உலக இதய தினம்!
September last Sunday.
* இதயநோய் ஏற்படுவதற்கு, உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
* புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இதயம், ரத்தக் குழாய்கள், நுரையீரல், கண், வாய், இனப்பெருக்க மண்டலம், எலும்பு, செரிமான மண்டலம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது.
* சாதாரண மக்களைக் காட்டிலும், சர்க்கரைகள் நோயாளிகளுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.
* மாரடைப்புக்கான வாய்ப்புகள் உள்ளவர்கள், வருடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.
* 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக இதய தினம் செப்டம்பர் 29.


உலக இதய தினம் செப்டம்பர் 29.
இதயம் பற்றிய சில செய்தி துளிகள்

 உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.

* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.

கவனிக்க வேண்டியவை:

* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.

* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.

* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.

* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது

* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.

* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக காது கேளாதோர் தினம்: செப்டம்பர் 28!


உலக காது கேளாதோர் தினம்: செப்டம்பர் 28!

காதுகொடுத்துக் கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்...

காதோடுதான் நான் பேசுவேன்...

காதோரம் லோலாக்கு...

ஆம். இன்று காது கேளாதோர் தினம். அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். சற்று வித்தியாசமாக பழகுவதோ அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கி பார்ப்பதோ இல்லாமல், அதை ஒரு குறைபாடாக கருதாமல், இயல்பாக அவர்களுடன் பழகுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவியாகும்.

முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்துகொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். சிலர் நாம் சொல்வதை திரும்ப திரும்ப கேட்பார்கள். அப்படியெனில் அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இயர்போனில் பாடல்கள் கேட்கும்போது, இசை சத்தமாக இருந்தாலோ, நீண்ட நேரம் இசையைக் கேட்டாலோ காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இசையை இயர்போனில் கேட்கும்போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் கேட்பது நல்லது.

காதில் வலி, காதில் நீர்வடிதல், கேட்கும் திறன் பாதிப்படைதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



காது கேளாதோர் மற்றும் காது கேட்போர் ஆகிய இருதரப்பினரின் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க சைகை மொழிக் கல்வியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன.

காதுகளில் ஏற்படும் தொற்று, வயதாதல், சத்தமான இடங்களில் பணிபுரிவது, மரபு, நீண்டகாலமாக அதிக சத்தத்தை கேட்டல் ஆகியவற்றால் காது கேளாமை ஏற்படுகிறது.

சளிபிடித்தல், தொண்டை வலி ஏற்படுதல் ஆகியவற்றால் நடுச்செவியையும் தொண்டையையும் இணைக்கும் குழாய் வீங்கிவிடுகிறது. இதனால் தற்காலிக காதுகேளாமையும் ஏற்படுகிறது.



தொலைக்காட்சி, ஸ்டீரியோ, ஹெட்செட் ஆகியவற்றின் ஒலியைக் குறைப்பதன் மூலம் கேட்கும் திறன் இழப்பதைத் தவிர்க்கலாம். முக்கியமாக கூர்மையான பொருள்களைக் காதில் இடுவதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில், இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும். அலைபேசி கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.

இதற்குப் பதிலாக அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ‘பஞ்ச்’ உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளைப் பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.



மருத்துவர் ஆலோசனை இல்லாமல் திரவங்களையோ, மருந்துகளையோ காதில் ஊற்றக் கூடாது. சாலையோரத்தில் இருப்போரிடம் காதைச் சுத்தம் செய்ய சொல்ல வேண்டாம். தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் அதிநவீன காதுகேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு கடந்து சென்றுவிடாமல், நமக்குத் தெரிந்தவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும்போது ஆரம்பத்திலேயே தடுக்க முயல்வோம். பாதிக்கப்பட்டோருக்கு தற்போதுள்ள அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைத் தெரியப்படுத்தி அவர்களையும் சமூகத்தில் சகஜமாக வாழ வைப்போம். நன்றி மின்னம்பலம்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 28 செப்டம்பர், 2019

பெனிசிலின் கண்டறியப்பட்ட தினம் செப்டம்பர்-28


பெனிசிலின் கண்டறியப்பட்ட தினம் செப்டம்பர்-28

Sir Alexander Fleming:-

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

கண்டுபிடிப்பு:-

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது.

பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம்.
லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன.

ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.

பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங்.

பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

காளானிலிருந்து பெனிசிலின்:-

அலெக்ஸாண்டர் பிளெமிங்
1928 ஆம் ஆண்டில் செம்டம்பர் 28 நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார்.

கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்.

காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங்.

   

பாதுகாப்பான கருக்கலைப்பின் சர்வதேச தினம் செப்டம்பர் 28. (International Safe Abortion Day)


பாதுகாப்பான கருக்கலைப்பின் சர்வதேச தினம் செப்டம்பர் 28.
(International Safe Abortion Day)

இத்தினம் 1984 ல் இருந்து செயல்படும் சர்வதேச Women's Global Network for Reproductive Rights (WGNRR)  அமைப்பினரால் உருவாக்கப்பட்டது.  

வியாழன், 26 செப்டம்பர், 2019

கூகுள் பிறந்தத நாள செப்டம்பர் 27


கூகுள் பிறந்தத நாள செப்டம்பர் 27

கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..? சுவாரசிய தகவல்கள்

கூகுள்- இந்த வார்த்தையை பயன்படுத்தாதவர்களையே காண முடியாது என்ற அளவுக்கு நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி இருக்கிறது. எந்த சந்தேகமாக இருந்தாலும் கூகுளை நாடலாம். கூகுளை நம்பினோர் கைவிடப்படார் என்றும் கூறலாம். பல்வேறு சந்தேகங்களுடன் தன்னை தேடி வருபவர்களை கூகுள் ஒரு நாளும் ஏமாற்றியதில்லை. பல சமயங்களில் நமக்கு ஆசானாக இருக்கும் கூகுள் தேடுபொறி அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் 1998-இல் கூகுள் என்ற தேடுபொறியை அறிமுகம் செய்த போது இந்த அளவு வளர்ச்சியடையும் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

கூகுளின் இயற்பெயர் தெரியுமா?

லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் இணையதளத்தில் குவிந்திருக்கும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைக்கும் வகையில் ஒருதேடு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை 1996-ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். பின்னர் அப்படி ஒரு தளத்தை உருவாக்கி அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் BACKRUB-ஆம், BACKRUB என்ற பெயர் தான் பின்னாளில் கூகுள் என்றானது. எண் 1ஐத் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு பெயர் GOOGOL.. இதனை அடிப்படையாக கொண்டே கூகுள் என பெயர் சூட்டினர்.

கூகுள் ஆண்டவர்

1998-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் கூகுள் தேடுதளம் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்தது. வெறும் ஆங்கிலத்தோடு நில்லாமல் பல்வேறு மொழிகளிலும் தேடுதல் வசதியை அறிமுகம் செய்ததே கூகுள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய காரணம். அவரவர் தாய்மொழியில் தகவல்களை கொண்டு சேர்ப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு கூகுளின் வளர்ச்சியே ஒரு சான்று. இன்று 150-க்கும் அதிகமான மொழிகளில் கூகுளில் தகவல்களை தேட முடியும். கிட்டதட்ட 190 நாடுகளில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தலாம்.

ஜிமெயில் சேவை

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தான் ஜிமெயில் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் வசதியை தான் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களுக்கும் கூட பயன்படுத்தி வருகிறோம். காலத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை வழங்கி வருவதும், கூகுளின் வெற்றிக்கு மற்றொரு காரணம். கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடமும் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் சந்தை மதிப்பு கணக்கிட முடியாத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கூகுள் நிறுவனர்களான லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றனர்.

ஆர்குட்டை மறக்கமுடியுமா?

நமக்கெல்லாம் 2004-ஆம் ஆண்டிலேயே ஆர்குட் என்ற சமூக வலைதள பக்கத்தை அறிமுகம் செய்ததும் கூகுள் தான். ஆனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளகளின் வளர்ச்சியால் ஆர்குட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்ததால் 2014-ஆம் ஆண்டு ஆர்குட்டின் செயல்பாடு முடித்துவைக்கப்பட்டது. ஆர்குட் மட்டுமல்ல, கூகுள் பிரெண்ட் நெட்வொர்க் என்ற சமூகவலைதளமும் கூகுளால் தொடங்கப்பட்டு பின்னாளில் அதுவும் முடக்கப்பட்டது. தற்போது கூகுள் பிளஸ் சேவையை கூகுள் வழங்குகிறது.

நம்பிக்கையே முதலீடு

கூகுளின் மிக முக்கிய முதலீடு நம்பகத்தன்மை. கூகுள் வரும் தகவல்கள் அனைத்தையும் நாம் நம்புகிறோம். ஆனால் சமீபகாலமாக பல்வேறு இணையதளங்கள் வாயிலாக பொய்யான செய்திகளும் தகவல்களும் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் கூகுளில் நாம் ஒரு தகவலை தேடினால் முதலில் இந்த பொய்யான தகவல்களே வருகின்றன. எனவே நம்பகத்தன்மையை கைவிடக் கூடாது என்ற நோக்கில் கூகுள் பொய்யான தகவல்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஊடகங்களை சேர்ந்தவர்களுக்கும் கூகுள் பயிற்சி அளித்து வருகிறது.

அனைவரும் உச்சரிக்கும் வார்த்தை கூகுள்

யூடியூப், ஆண்டிராய்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் வாங்கி அவற்றின் வளர்சிக்கும் கூகுள் காரணமாக அமைந்துள்ளது. கூகுள் வரைபடம், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களையும் நமக்கு வழங்கி வரும் கூகுள், இன்னும் பல்வேறு வசதிகளை நமக்கு அளிக்க காத்திருக்கிறது.. உலகில் பல்வேறு மொழி பேசுபவர்கள் இருந்தாலும் அனைவரும் பொதுவாக உச்சரிக்கும் வார்த்தையாக கூகுள் மாறி இருக்கிறது. 20 ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக உருவெடுத்திருக்கும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 (World Tourism Day)


உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27
(World Tourism Day)

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா.

2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).


உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக, உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.
கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள், புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா, சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில், எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.
நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால், சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.
ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.
மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும் பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத, கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள் அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
ஹோட்டல் கழிவுகள், நீர்மாசமடைதல், சட்டவிரோத குடிசைகளும், விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா, கடற்கரைச் சிறுவர்கள், போதைவஸ்து பாவனையும் கடத்தலும், அந்நியரின் அரைநிர்வாணப்பவனி, கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும்.
இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த காலம் இன்று மாறி விட்டது. அதே வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும். இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.
1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)


சுற்றுலா செல்ல விரும்பாத, புதிய இடங்களை சுற்றிப் பார்க்க விரும்பாத மனிதர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. சுற்றுலா எனபது மனிதனுக்கு பல்வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள வழிவகுக்கிறது. பல்வேறு புதிய இடங்களை காண்பதால் மனிதன் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
சுற்றுலா மூலம் மனித சமூகத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டில் ஐ.நா. சபை அங்கீகாரம் செய்து அறிவித்தது. அன்று முதல் சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்போது சுற்றுலா என்பது சுற்றுசூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல்வேறு வகைகளாக பிரிந்து வளர்ந்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டை சுற்றுலா ஆண்டாக அறிவித்து சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.


தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27.

சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். 
 சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.       
  எத்தனையோ இடர்பாடுகளை கடந்து ‘தினத்தந்தி’ இன்று உயர்ந்து நிற்கிறது. பத்திரிகை நடத்தும்போது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கையில் பணம் இல்லை என்ற நிலையில், ‘சேட்டிடம்’ வெற்றுத்தாளில் கையெழுத்திட்டுப் பணம் பெற்று ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். தான் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லை.
  காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்த்து, ‘காலை முதல் மாலை’ வரை அதைக் காகிதமாக மாற்ற உழைத்தார். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பத்திரிகை நடத்தினார். ‘தினத்தந்தி’ அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று வாழ்ந்தவர். அந்தத் தொடரைஅறிமுகப்படுத்திய ஆதித்தனாரிடம் இருந்து விடாமுயற்சியை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
  தன் கோட்பாட்டில் உறுதியோடு வாழ்ந்தார். தமிழர் என்று சொன்னால் சி.பா.ஆதித்தனார்தான் முன் நிற்கிறார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார். எங்களுக்குப் பரிசளிக்கும் செய்தியை ‘தினத்தந்தி’யில் முதல் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். இதைவிடத் தமிழ் மொழியின் படைப்பாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைக்க முடியும். எங்களுக்கு இவ்வளவு பெரிய புகழைத் தந்த ‘தினத்தந்தி’க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மொழியை வளர்க்க தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாடுபட்டது போல எல்லா தலைவர்களும் துணிந்து வெளியே வந்து போராடவேண்டும்.
  எதைச்செய்தாலும் தமிழ், தமிழ் என்று ஐயா வாழ்ந்தார். அவர் நடத்திய இதழுக்குப் பெயர் ‘தமிழ்’. அவர் அமைத்த இயக்கம் ‘நாம் தமிழர்’. தாய் இல்லத்துக்குப் பெயர் ‘தமிழன் இல்லம்’. அவர் வெளியிட்ட பதிப்பகத்துக்குப் பெயர் ‘தமிழ்த்தாய் பதிப்பகம்’. அவர் அமைத்த இரண்டு இயக்க அமைப்பு பெயர்  ‘இளந்தமிழர்’, ‘மகளிர் தமிழ்மன்றம்’. எழுதிய நூல் ‘தமிழ்ப் பேரரசு’.
  அவருடைய தமிழ் உணர்ச்சிதான் எங்களைப் போன்றவர்களுக்கு உந்துதலைத் தந்தது. தமிழ் மக்கள் மானத்துடன் வாழவேண்டும், பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும். தமிழ் உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகச் சி.பா.ஆதித்தனார் பாடுபட்டார்.
  ஒருமுறை ஐயா அவர்களை பார்க்க ஒரு நடிகர் வந்தார். அவர் உள்ளே வரும்போதே “தமிழ் வாழ்க” என்றார். உடனே ஐயா அவர்கள் தமிழ் எப்போதும் வாழும். அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் வென்றதா? என்றுதான் பார்க்கவேண்டும். அதனால் தமிழ் வெல்க என்று சொல்லுங்கள் என்று அன்றே சொன்னார். அவரிடம் மட்டுமல்லாமல் எப்போதுமே தமிழ் வாழ்ந்தால் மட்டும் போதாது, தமிழ் வெல்லவேண்டும் என்பதை ஐயா அவர்கள் சொல்வார்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11.


சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
அக்டோபர் 11.

பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. "பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.


என்ன செய்வது:

பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.


* பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தேவையான, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தைகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.


* பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.


* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.


* தொழில்நுட்ப கல்வி , கிராமப்புற மாணவிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

கண்ணின் மணியே... கண்ணின் மணியே! - இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'

என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல்வேறு துறைகளில் சிகரங்களை தொடுகின்றனர். சில கிரிமினல்களால், பெண் குழந்தைகள் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பெண் குழந்தைகளை சிசுவிலேயே அழிக்கும் செயலும்வேதனை தருகிறது.

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'அறிவார்ந்த பெண் படைகளுடன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், இந்த சமூகம் முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
பாலின விகிதம் :


இந்தியாவில் 2011 சென்சஸ் படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் உள்ளனர். ஆனால் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 என மிக குறைவாக உள்ளது. இது 2001ல் 927 ஆக இருந்தது. அதே போல தமிழகத்தில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்களாக உள்ளது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதிலிருந்து பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டிய அவசியம் புரிகிறது. 'மருமகள் தேவைப்படும் போது, மகள் வேண்டாமா?' என்பதை சிந்திக்க வேண்டும்.

வானிலை மாறுகிறது:


பெண் சிசுக்கொலைகளுக்கு, 'வரதட்சணையே' முக்கிய காரணம். திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளை சுமையாக கருதினர். தற்போது இதில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது பரவலாக வேண்டும். அப்போது பெண் குழந்தை சுமையல்ல, வரம் என்பது அனைவருக்கும் புரியும்.

என்ன செய்யலாம்:

* பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருதல்.
* பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தைகள் மீதான உடல், மனம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முற்றிலும் தடுத்தல்.
* படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது குடும்பங்களில் மகன்களுக்கு சமமாக மகள்களையும் நடத்த வேண்டும்.



மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி பாட்டிற்க்கிணங்க பெண் குழந்தைகள் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.

பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கவும் அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் ஐ.நா. சபை 2011-ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்’ என்பது இத்தினத்தின் மையக்கருத்து.

பெண்குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர்களின் பங்கு முக்கியம். வீட்டை விட்டு வெளியே செல்கிற பெண் குழந்தைகள் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எத்தகைய பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது.

பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. பெண்குழந்தைகளுக்கு கற்றுத்தருவது போல் ஆண் குழந்தைகளையும் சிறுவயது முதலே விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளை 18 வயது நிறைவதற்கு முன் திருமணவாழ்கையில் தள்ளப்படுவது தவறு. இவை இன்று சதவிகித அளவில் குறைந்தாலும் இன்றளவும் சரியான தீர்வினை எட்டவில்லை.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிப்பால் கலாச்சாரமும், கரும்பலகை இல்லா மாநிலமும் இன்றளவும்  இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப் பட்ட போதிலும் இன்னும் வேர்கள் களையவில்லை. எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கும் நாமும் துணையாக நிற்போம்.


இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
 
சென்னை: பாலின பாகுபாட்டை நீக்கி, பெண் குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் வகையில் இன்று நான்காவது சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. இது, தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைகிறது.


சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புரிமையை நிலைநாட்டவும், பாலியல் வன்முறையில் இருந்து பெண் குழந்தைகளை காக்கவும் சட்டங்கள் இயற்றபட்டு கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


இந்நிலையில், பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. சமூகத்தில் பெண்கள் அவமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கபட வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஒவ்வொருவரும் ஏற்றால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் குறையும்.


பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்! #WorldGirlChildDay

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும்,  19- 12- 2011 அன்று ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக  அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஃபேஸ்புக், ட்விட்டரில் #SaveGirlChild என்று பதிவுகள் போடும் முன், உங்களைச் சுற்றி இருக்கும்  பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் சிறுமிகள் எத்தனை ஆபத்துகளுக்கு நடுவில் வளர்ந்து வருகிறார்கள் என்பதை, தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!

எனக்கு புரிகிறது.. இந்த நாள் மட்டும் அல்ல. பெண்களுக்கான எந்த நாள் என்றாலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பற்றி பேசிக்கொண்டே இருப்பது படிக்கும் உங்களுக்கு அலுப்பையும், கசப்பையும் தரலாம். ஆனால் இன்று உலகில் சுமார் 1.1 பில்லியன் சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான சிறுமிளை பாலியல் ரீதியாக மனித மிருகங்கள் சீரழிக்கிறார்கள். இந்த அவலம் மறையும்வரை, இந்தக் கசப்புக்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும். காரணம், எந்த மனிதன் எப்போது மிருகமாகிறான் என்பது யாராலும் யூகிக்க முடிவதில்லை.



நவீன குழந்தைத் திருமணம் பற்றி தெரியுமா?

பெண் கல்விக்கு முக்கியத் தடையாக இருப்பது குழந்தைத் திருமணம். சீனாவைத் தவிர, உலகில் வளர்ந்த நாடுகளில் 18 வயதில் இருக்கும் மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. இதனால் அவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு, கணவரால் பதின் வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, இளம் வயதில் தாயாகி, உடலாலும் மனதாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்குகிறார்கள் பெண் குழந்தைகள்.

இப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் பரவலாகி இருப்பதால், பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில்லை. பரவலாக, பெண் பிள்ளைகள் படிக்க வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், கல்லூரி செல்லும்போது காதலித்து விடுவார்களோ என்று பயந்து, பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடுகிறார்கள். இதுதான் குழந்தைத் திருமணத்தில் ஏற்றப்பட்ட நவீன மாற்றம்.

உங்கள் பெண் குழந்தைக்கு என்ன தற்காப்புக் கலை தெரியும்?

இன்று டிவி ஷோக்களின் மோகத்தால் பாட்டு, நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அதிகம். தவறில்லைதான். ஆனால், அதைவிட குழந்தையின் பாதுகாப்புதான் முதல் தேவை. குறைந்தபட்சம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண் குழந்தைகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற எதாவது ஒரு தற்காப்புக் கலை கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் பாதுக்காப்புடன், அந்தப் பெண் குழந்தைகள்  தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெற்று, வாழ்வையும், சமூகத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.




அதிகரிக்கும் இளம் வயது காதல்!


சிறுமிகள் பதின் வயதில் அவர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ''சமீபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி, 'என் எதிர்காலக் கணவரைப் பற்றின கனவு எனக்கு இருக்காதா?' என்று கேட்டபோது நான் அதிர்ச்சியாகிவிட்டேன்'' என்கிறார்,  மனநல மருத்துவர் பீனா. “இப்போது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கேள்வியைக் கேட்ட குழந்தையைபோல், இன்று பலர சிறுமிகள் காதல்(!) வசப்படுகிறார்கள்.  இதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். சிலர், 'நான் ரொம்ப சோஷியலா பழகுறேன்' என்று, குழந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். இன்னும் சிலர் தங்கள் குழந்தையிடம் ராணுவ ஆட்சி செலுத்துவார்கள். இவை இரண்டுமே தவறு.

குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடு, நட்போடு பழக வேண்டும். அது கடினம்தான். இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும். அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்கும் அதே நேரம், அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மன நோகாதவாறு புரியவைக்கவேண்டும்.

உங்கள் பெண் குழந்தையின் மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதும், அதைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

குட் டச், பேட் டச்... கற்றுக்கொடுங்கள்!

பெண் குழந்தையின் உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அதைப் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுப்பது காலத்தின் அவசியம்'' என்கிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை.

''ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்களே!"

''2014ல் 1,565 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். இதில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை 1,110. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் 60% - 68% பெண் குழந்தைகள் மீது நடந்தப்படுபவையே. பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம்.

வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். பாலியல் வன்முறைக்கு ஆடைதான் காரணம் என்றால், சிறுமிகளையும் சேலையால் போர்த்த வேண்டுமா? பின் தொடர்ந்து வருவது, தவறான ஜாடை காட்டுவது, தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது என பலதரப்பட்ட வன்முறைகளை பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்" என்கிறார் சமூக ஆர்லவர் எவிடன்ஸ் கதிர்.

''நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட பெண் பிள்ளைகளில்  80 % பேருக்கு 20 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடனேயே எச்சில், நகம், முடி, காயங்கள் போன்ற நுணுக்கமான தடயங்கள் ஆராயப்படுகின்றன. இங்கு அதுபோன்று இல்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் கவுன்சிலிங்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை.

பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல... குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல... உலகத்தின் எல்லா நாடுகளிலும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. வன்முறையின் அளவுகோல் வேறுபடுமே தவிர, பெண் இனத்தை நசுக்காத சமூகம் இந்தப் பூமியில் இல்லை.

நான் உட்பட் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்களாக ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடுகிறார்கள். அது காந்தி, பெரியார், பாரதியார், அம்பேத்கார் என யாராக இருந்தாலும் பொருந்துகிறது. அவர்கள் பெரிய புரட்சி செய்திருக்கலாம்.  ஆனால் அனைவருமே ஏதோ ஓர் இடத்தில், 'நான் ஆண்' என்ற ஒரு திமிரான மனோபாவத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். எங்களுக்குத் தெரியாமலேயே அந்த எண்ணம் எட்டிப்பார்த்துவிடுகிறது. ஓர் ஆண் பிறந்து இறப்பதற்குள் தனக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சதவிகிதத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்'' என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

பெண் பிள்ளை கடத்தல்!


பெரும்பாலும் 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்தி கடத்தல்கள் நடக்கின்றன. இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பாலியல் தொழிலுக்காகவும், ஆபாச படங்கள் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம், 20 மாவட்டங்களில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.  உங்களுக்குத் தெரிந்து குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், படிக்கத் தடை என்ற செயல்பாடுகள் நடந்தால்.. உடனே  1098 என்ற எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்போது புரிகிறதா... உங்களைச் சுற்றியிருக்கும் பெண் பிள்ளைகள், எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்பது. அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக் கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது. நீங்கள் முன் பின் அறியாத பெண் பிள்ளைகள் உட்பட, நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே பெரிய வாழ்த்தாக அமையும்!


வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

'வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே...'

என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.

இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம்.

ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.

கல்வியும், ஆளுமையும் அவசியம் :

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:

பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? என அறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.

அடிப்படை வசதிகள் தேவை:

கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.


பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: கற்பிப்போம்
   

ஆணும் பெண்ணும் சமம் தான் என்பது நமது மந்திரம்

“பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அவளுக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் தான் இது.

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் அரியானா மாநிலம் பானிபட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய மனிதவள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தின் பிரதான அம்சமே பெண் குழந்தையை கருவிலே முன்கூட்டி கண்டறிந்து சிசுவதை செய்வதை தடுக்கும் சட்டமான பி..சி. மற்றும் பி.என்.டி.டி. சட்டத்தினை முழுமையாக அமல்படுத்துவதாகும். அதாவது, தேசிய அளவில் பெண்குழந்தை குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். பெண்குழந்தை பிறப்பு வீதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களை தேர்வு செய்து பெண் குழந்தையின் தேவை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வது ஆகியவை முக்கிய அம்சமாகும். இதுபோன்று பெண்குழந்தைகள் குறித்து மக்கள் மனதில் உள்ள எண்ணத்தினை மாற்றுதல், உணர்வுப்பூர்வமாக்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமுதாய அடிப்படையிலான ஆதரவை திரட்டுதல் ஆகியவையும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.


பெண்குழந்தைகள் குறித்து இந்திய சமுதாயத்தில் ஊறிகிடக்கும் மனப்போக்கை மாற்றுவது தான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய முயற்சியாக உள்ளது. அரியானா மாநிலத்தில் பிபூர் கிராமத்தலைவர் “பெண்குழந்தையுடன் சுயபடம்” ( செல்பி) எடுக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை பிரதமர் நரேந்திரமோடி தனது மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பாராட்டி உள்ளார். இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தங்கள் மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு உலக அளவில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் இதுபோன்று செல்பி போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் இது பெண்குழந்தைகளை பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பலதுறை சார்ந்த மாவட்ட அளவிலான செயல் திட்டங்களும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் அது சார்ந்த பயிற்சிகள், முதல் நிலை பணியாளர்களுக்கும் மாவட்ட அளவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு (2015) மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 9 முறை அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரேதசங்களையும் உள்ளடக்கி இத்தகைய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சில உள்ளூர் முயற்சிகள்

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பித்தோரோகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்விக்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கு இதற்காக மாவட்ட முனைப்புக்குழு மற்றும் வட்ட முனைப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்குழந்தை பிறப்பு விகிதாச்சாரத்தினை சமன்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை இந்த அமைப்புகள் அழகாக தடம்போட்டு கொண்டு செல்கின்றன. சமுதாயத்தில் ஆழமாக ஊடுருவிச்சென்று இந்த திட்டத்தின் சிறப்பினை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது இந்த அமைப்புகள். அரசு துறை ஊழியர்கள், இராணுவப் பள்ளிகள், மற்றும் இதர பள்ளிக்கூடங்களின் ஒத்துழைப்போடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேரணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம், திட்டத்தின் தாக்கத்தினை அதிகரிப்பதற்காக பித்தோரோகர் மாவட்டத்தில் தெரு முனை நாடகங்களும் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன. கிரமாங்களில் மட்டும் இந்த தெரு முனை நாடகங்கள் நடத்தப்படவில்லை, மக்கள் கூடும் சந்தைகளிலும் நடத்தப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நாடகங்களில் காட்சி சார்ந்த கதையாக மக்களிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கான பிரச்சினைகள், அவர்களின் கஷ்டங்கள், வாழ்க்கையில் அவள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவையும் இந்த தெரு முனை நாடகங்களில் எடுத்துச் சொல்லப்படுகிறது. இது தவிர, கையெழுத்து பிரச்சாரம், உறுதிமொழி கூறுதல் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி, பெண் குழந்தைகள் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் தகவல்கள் முதுநிலை கல்லூரி மாணவர்கள் 700 பேர் மற்றும் இராணுவத்தினர் வாயிலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. உங்கள் கனவுக்காக ஒருநாள் வாழ்வோம் என்ற திட்டத்தின் கீழ் அந்த மாவட்ட நிர்வாகம் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு முன்மொழிவு விண்ணப்பங்களை கொடுத்துள்ளது. இதன்படி, அந்த மாணவிகள் தாங்கள் விருப்பம் போல டாக்டர், போலீஸ் அதிகாரி என்ஜினீயர் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் செலவிட முடியும்.

இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 70க்கும் மேற்பட்ட மாணவிகள் இதுவரை இத்தகைய தொழில் வல்லுநர்களுடன் ஒரு நாளை மகிழ்ச்சியுடன் செலவிட்டுள்ளனர். அவர்களின் தொழில் சார்ந்த சூழலை அவர்கள் உணர்ந்துகொள்ள முடிகிறது.. அத்துடன் அவர்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கான முடிவுகளை எடுக்கும் நல்ல வாய்ப்பாகவும் இது அமையும்.


பெண் குழந்தை ஒரு பாக்கியம்


பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.
இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத் 10202

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)

என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127


முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.


வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான்.

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்:

தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்!

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை ஆறாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.


இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

திங்கள், 23 செப்டம்பர், 2019

சம இரவு தினம் செப்டம்பர் 23, 2019 (Equinox Day)


சம இரவு தினம் செப்டம்பர் 23, 2019
(Equinox Day)

சம இரவு நாள் (Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். லத்தீனிய மொழியில் Equinox   என அழைக்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22, 23  அன்றும் இவை நிகழும்.   

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

மகள்கள் தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை


மகள்கள் தினம் செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

மகள்கள் தினம் என்றால் என்ன? எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா!
#Happy Daughters Day

மகள்கள் தினம் என்றால் என்ன?

இதன் பெயரிலேயே தெளிவாகப் பதில் இருக்கிறது. மகள்களைக் கொண்டாடும் அற்புதமான நாள். பல்வேறு நாடுகள் வெவ்வேறு நாட்களில் மகள்கள் தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 22ல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்?

குழந்தைகள் என்றுமே கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது யாராக இருந்தாலும் சரி. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இருப்பினும் குறிப்பிட்ட நாளில் மகள்களைக் கொண்டாடுவது, அவர்களை மேலும் பெருமைப்படுத்தும் தருணம் என்றே கூறலாம். முன்னதாக பெற்றோர்களைக் கொண்டாட தாய் தினம், தந்தையர் தினம் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மகள்கள் தினத்தின் வரலாறு:

குழந்தைகளைக் கொண்டாடுவதற்கு காரணம் எதுவும் வேண்டுமா என்ன? இருப்பினும் பல்வேறு நாடுகளில் பெண் குழந்தைகள் ஒரு சுமையாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆண் குழந்தைகளுக்கு சமமான மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ஆண் - பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள் தினத்தை முன்னெடுத்துள்ளன. இதனைத் தேசிய அளவிலான நிகழ்வாக அறிவித்து கொண்டாடுகின்றனர். அரசு மற்றும் சட்டத்தின் முன்னிலையில் அனைத்து குடிமக்களும் சமம். இந்த மனப்பான்மை பொதுமக்களிடையே ஊக்குவிக்கப்பட வேண்டும்.
Daughter Day Quotes: மகள்களின் அன்பைப் போற்றும் ‘மகள்கள் தின’ வாழ்த்துச் செய்திகள்!!

மகள்கள் தினத்தின் சிறப்புகள்:
இந்த நிகழ்வின் வெற்றியானது, காலம் எவ்வாறு மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. மகள்களைக் கொண்டுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒட்டுமொத்த குடும்பமும் தங்கள் மகள்களுக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் அளித்து பெருமைப்படுத்துகின்றனர். இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அனைவரும் விடுமுறை நாளில் இருப்பர். இதனால் கொண்டாட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்து விடுகின்றது.
மகள்கள் தினக் கொண்டாட்டம்:
குடும்பத்தினர் மகள்கள் தினத்தைக் கொண்டாட ஏராளமான வழிகள் இருக்கின்றன. வாழ்த்து அட்டைகள், அன்புக் கடிதங்கள், குறுந்தகவல்கள், ஆச்சரியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்கலாம். இதன் பிறகான கொண்டாட்டம் என்பது குடும்பத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. சிலர் பிரம்மாண்ட விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். மகள்களுடன் வெளியில் சென்று, விருந்திற்கு ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றனர். இருப்பினும் கொண்டாட்ட முறையை மகள்களே தீர்மானிப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு தந்தைக்கு இன்னொரு தாயாக இருக்கும் மகள்களைக் கொண்டாடும் ‘மகள்கள் தினம்’ செப்டம்பர் 23 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை வாரிசு என்பார்கள், அதே ஒரு பெண் குழந்தைப் பிறந்தால் மகாலட்சுமி என்பார்கள். ஒரு வீட்டை அன்பானதாகவும் அழகானதாகவும் மாற்றுபவர்கள் பெண் குழந்தைகள்.
எப்போதும் ஒரு மகனை விட மகளையே வீட்டில் அதிக செல்லத்துடன் வளர்ப்பார்கள். அதிலும், வீட்டில் மற்றவர்களை விட மகளை அதிகம் நேசிப்பவர் தந்தையே. ஏனென்றால், ஒரு தந்தை தனது மகளின் வழியே தன் தாயைப் பார்ப்பதால்தான், அந்த அளவு பாசம்.
வாட்ஸ்ஆப்பில் சமயம் தமிழ் Subscribe
திருமணத்திற்குப் பின், தன் பிறந்த வீட்டை விட்டு, புதிதாக ஒரு வீட்டிற்குச் சென்று, அதை தன் வீடாக மாற்றும் ஒரு மனப்பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் இடையே தன் அன்பால் பாலத்தை ஏற்படுத்துபவர் பெண்கள்.
அத்தகைய மகள்களின் அன்பை போற்ற வார்த்தைகள் பத்தாது. இன்று அத்தகைய மகள்களின் தினத்தை கொண்டாடுவோம்.

பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்....
பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது...
சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.
மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்..

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

உலக அமைதி நாள் (International Day of Peace) செப்டம்பர் 21.


உலக அமைதி நாள் (International Day of Peace) 
செப்டம்பர் 21.

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.


உலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்
தொடர்ந்து 10 வருடங்களாக முதலிடம் வகிக்கும் ஐஸ்லாந்து...

உலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்
உலக அமைதி தினம் : நம் கண் முன்னே எங்கும் பரவி இருக்கிறது ஒரு போரை உருவாக்குவதற்கான காரணிகள். பதட்டமான சூழலின் மத்தியில் அமைதி என்ற வார்த்தையை நாம் பல்வேறு விதங்களில் தொலைத்திருக்கிறோம். தொலைத்துக் கொண்டும் இருக்கிறோம்.

போர்கள் ஒவ்வொரு மனிதனின் மனதையும், ஒவ்வொரு நிலத்தின் தன்மையையும் குருதியோடு பிணைத்துப் போட்டு வன்முறைகளாலும் வெறுப்புகளாலும் கட்டுண்டு கிடக்கிறது. அமைதி. அதைத்தான் நாம் அனைவரும் தேடுகிறோம்.


பலதரப்பட்ட இனங்களையும், இறை நம்பிக்கைகளையும், மதக் கோட்பாடுகளையும், பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வெள்ளைப் புறாக்களுக்கான தேவைகளும், வெள்ளைப் பூக்களின் மணத்திற்கான தேவைகளும் அதிகமாய் தான் தேவைப்படுகிறது.

உலக அமைதி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டே உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் இருந்தது என்றால் அது மிகையாகது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உலக நாடுகள் அனைத்தையும் அமைதியற்றதாக நிம்மதியற்றதாக மாற்றியது. உலக நாடுகள் மத்தியில் மீண்டும் இப்படியான போர்கள் மீண்டும் வராமல் இருக்க ஐக்கிய நாடுகளின் சபை 1945ல் உருவாக்கப்பட்டது.

இந்த நாடுகளின் சபை உலக நாடுகளின் மத்தியில் நிலவும் பதட்டமான சூழல்களை சரி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் 1945ற்கு பிறகு பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு வந்தது. புதிது புதிதாக நாடுகள் உருவாக ஐக்கிய நாடுகளின் சபையின் பொறுப்புகள் அதிகரிக்க துவங்கியது.

1961ம் ஆண்டும் ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவு கூறும் விதமாக செப்டம்பர் மூன்றாவது வாரம் வரும் செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடித்து வந்தது.

பின்னர் 2002ம் ஆண்டு உலக அமைதி தினம் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2002ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினம் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் கடைபிடித்து வருகிறது.

அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 137வது இடத்தினை பிடித்திருக்கிறது.

ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது.

சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், ஈராக், மற்றும் சோமாலியா நாடுகள் கடைசி ஐந்து இடங்களைப் பெற்றிருக்கிறது. கடந்த வருடம் இந்தியா 141வது இடத்தினைப் பிடித்திருந்தது. வன்முறை மற்றும் கலவரங்களுக்கு எதிராக இந்தியா எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விளைவாக இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

2016ம் ஆண்டில் இருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் மத்தியிலான உறவு முறை சரியாக இல்லாததன் காரணத்தால் தொடர்ந்து கீழ் இடங்களைப் பிடித்திருக்கிறது இந்தியா என சிட்னி நகரத்தில் இருந்து இந்த கருத்துக் கணிப்பினை வெளியிட்ட இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும் பீஸ் (Institute of Economics and Peace (IEP)) அமைப்பு அறிவித்துள்ளது.


உலக அமைதி (world peace) என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே.

மனிதரும் உலக அமைதியும் தொகு
உலக அமைதி என்பது கருத்தளவில் நிகழலாம் என்றாலும், நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.[1][2] மனிதர்கள் தம் இயல்பிலேயே வன்முறைச் சார்புடையவர்கள் என்றும், பகுத்தறிவு கொண்டவர்கள் என்னும் முறையில் சில சூழ்நிலைகளில் அவர்கள் வன்முறைச் செயலில் ஈடுபடுவார்கள் என்றும் இக்கருத்து உள்ளது.

மேற்கூறிய கருத்துக்கு மாறான ஒரு கருத்தும் உள்ளது. அதாவது, போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும்.இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது.

உலக அமைதி பற்றிய கொள்கைகள் தொகு
உலக அமைதியை நடைமுறைக்குக் கொணர்வது எவ்வாறு என்பது குறித்து பல கொள்கைகள் எழுந்துள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:

உலகிலுல் உள்ள வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் மோதல் ஏற்படவில்லை என்றால் உலக அமைதி ஏற்படும் என்பது ஒரு கொள்கை.

உலக அமைதி பற்றிய அரசியல் கருத்தியல்கள்

ஒரு குறிப்பிட்ட அரசியல் கருத்தியல் செயலாக்கப்பட்டால் அதன் கட்டாய விளைவாக உலக அமைதி தோன்றும் என்றொரு பார்வை உள்ளது. ஐக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் "உலகில் குடியரசு ஆட்சிமுறை பரவினால் அதுவே அமைதிக்கு வழி" என்று கூறினார் மார்க்சிய கருத்தியலாளர் லியோன் திரொட்ஸ்கி உலகப் புரட்சி நிகழ்ந்தால் அதன் விளைவாகப் பொதுவுடைமை அமைதி ஏற்படும் என்றுரைத்தார்.


குடியரசு ஆட்சிமுறையும் உலக அமைதியும்

குடியரசு ஆட்சி நிலவும் நாடுகள் அரிதாகவே ஒன்று மற்றொன்றுக்கு எதிராகப் போர்தொடுக்க முன்வருகின்றன என்பதற்குப் போதிய நடைமுறை ஆதாரம் உள்ளது என்று, குடியாட்சி வழி அமைதிக் கொள்கையினர் வாதாடுகின்றனர்.
இக்கொள்கைக்கு விதிவிலக்காக மூன்று "போர்கள்" மட்டுமே உள்ளன. அவைகூட, இரத்தம் சிந்தாத விதத்தில் நடந்தேறின. அப்போர்கள்: 1) ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐசுலாந்து நாட்டிற்கும் இடையே வட அட்லாண்டிக் கடலில் "காட்" மீன் பிடிக்கும் உரிமை பற்றி 1950களிலும் 1970களிலும் எழுந்த பிரச்சினை.[11] 2) கானடாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே பன்னாட்டுக் கடல்நீரில் மீன் பிடித்தல் பற்றி 1995இல் எழுந்த பிரச்சினை [12]. 3) இரண்டாம் உலகப்போரின்போது ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்து போரில் ஈடுபட்டது (1940, மே 10).

ஜேக் லேவி என்பவர் 1988இல் கூறியது: "பன்னாட்டு உறவுகளைப் பொறுத்தமட்டில், ஏறக்குறைய ஒரு நடைமுறைச் சட்டம்போலக் குடியாட்சி முறைவழி உலக அமைதி என்னும் கொள்கை உள்ளது."

தொழிற்புரட்சிக்குப் பிறகு, உலகின் பல நாடுகள் குடியரசு ஆட்சிமுறையைத் தழுவியுள்ளன. குடியரசு ஆட்சிமுறை பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றினால் உலக அமைதி ஏற்படும் என்பது எதிர்பார்ப்பு. ஆயினும், இக்கொள்கைக்கு விதிவிலக்குகள் பல எழக்கூடும்.

முதலாளித்துவ அமைதிக் கொள்கை தொகு
ஐன் ராண்ட் (Ayn Rand) என்னும் அறிஞர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கையை" ஆதரிக்கிறார். அக்கொள்கைப்படி, உலகில் இதுவரை நடந்துள்ள பெரும் போர்களில் பெரும்பான்மைப் போர்கள் "கட்டுப்பாட்டு பொருளாதார" அமைப்பு நிலவிய சூழ்நிலைகளிலேயே ஏற்பட்டுள்ளன. சுதந்திர பொருளாதார அமைப்பு நிலவிய நாடுகளில் பொதுவாக அமைதி நிலவி வந்துள்ளது. 1815இல் நடந்த நெப்போலியனிய போர்களுக்குப் பிறகு 1914 வரை (முதல் உலகப்போர்) நாடுகள் போரில் ஈடுபடவில்லை. இரு விதிவிலக்குகள் 1870இல் நிகழ்ந்த பிராங்கோ-புருச்சியப் போரும், 1898இல் நிகழ்ந்த எசுப்பானிய-அமெரிக்கப் போரும் ஆகும்.

19ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் கட்டுப்பாடற்ற, சுதந்திர அமைப்பாக இருக்கவில்லை. மாறாக, கலப்புப் பொருளாதார அமைப்பாகவே இருந்தது. எனினும், அங்கே முதலாளித்துவம் சிறப்பிடம் வகித்தது. அரசுகள் பொருளாதார அமைப்பில் தலையிட்டு, பொருளாதாரப் போக்கை நெறிப்படுத்த முனைந்தன. அச்சூழலில்தான் 1914இல் முதல் உலகப்போர் வெடித்தது.[14][15]

மேற்கூறிய "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" மேற்கத்திய நாடுகள் ஐரோப்பாவுக்கு வெளியே குடியேற்ற ஆதிக்கத்தைப் போர்மூலம் பரப்பியதைக் குறிப்பிடத் தவறுகிறது. தவிர, இத்தாலியும் செருமனியும் நாட்டு ஐக்கியம் உருவாக்க மேற்கொண்ட போர்கள், பிராங்கோ-புருச்சியப் போர், கிரிமேயப் போர், ஐரோப்பாவில் நிகழ்ந்த பிற போர்கள் ஆகியவையும் "முதலாளித்துவ அமைதிக் கொள்கைக்கு" ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லை.

மேலும், உலக அமைதி என்பது "போரில்லாத நிலைமை" என்பதில் மட்டுமே அடங்கிவிட முடியாது என்பதும் கருதத்தக்கது. வர்க்கங்களுக்கிடையே மோதல் மனப்பான்மை தொடர்ந்து நிலவுவது அமைதியென அழைக்கப்பட முடியாதது. முதலாளித்துவம் உலக அமைதிக்குக் காரணமாக அமைந்தது என்னும் கொள்கை ஏற்புடையதென்றால், அரசுத் தலையீடு குறைவாகும்போது அமைதி நிலவும் என்றோ, ஒழுங்கற்ற நிலை ஏற்படும்போதும் அமைதி பிறக்கும் என்றோ கூட வாதிட முடியும். எனவே, பலர் "முதலாளித்துவ அமைதிக் கொள்கை" நிறைவுதருவதாக இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

கோப்டன் கொள்கை தொகு
ரிச்சர்டு கோப்டன் (1804-1865) என்னும் பிரித்தானிய அறிஞர், "நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வாணிகம் நடைபெறுவது அமைதிக்கு வழிகோலும்" என்னும் கொள்கையை எடுத்துரைத்தார். அரசியல் உறவுகள் குறைந்து, பொருளாதார உறவுகள் கட்டுப்பாடற்ற, சுதந்திர முறையில் வளரும்போது உலக அமைதியும் மக்களிடையே புரிதலும் உருவாகும் என்று அவர் கூறினார். அக்கொள்கைப்படி, வாணிகத்தைக் கட்டுப்படுத்துகின்ற அரசியல் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும். நாட்டு ஆட்சியாளர் தனி மனிதரின் சுதந்திர வணிகச் செயல்பாடுகளைத் தடுக்காமலும், சுங்கவரி விதித்துக் கட்டுப்படுத்தாமலும் இருக்க வேண்டும். சுதந்திர வணிகம் நடக்கும்போது எந்த நாடும் முற்றிலும் தன்னுரிமை கொண்டதாக மாறாது. எடுத்துக்காட்டாக, ஒரு நாடு துப்பாக்கி உற்பத்தி செய்கிறது, மற்றொரு நாடு வெடிமருந்து செய்கிறது என்றால் அந்த இரு நாடுகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட முடியாது. ஏனென்றால், துப்பாக்கி இருக்குமிடத்தில் வெடிமருந்து இராது, வெடிமருந்து இருக்கும் இடத்தில் துப்பாக்கி இராது.[16]

மேற்கூறிய கோப்டன் கொள்கையிலும் குறையுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நாடு போருக்குப் போகத் தீர்மானித்துவிட்டால், தற்காலிகமாக ஓரளவு தன்னிறைவை உருவாக்கிக் கொள்ள முடியும். அதுபோலவே, தனக்குத் தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை வேறு பல நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள முடியும். இரண்டாம் உலகப்போர் இதற்கு எடுத்துக்காட்டு. செருமனி போர்க்கால பொருளாதார அமைப்பை உருவாக்காமல் இருக்கும்போதே, போதிய அளவு தன்னிறைவு கொண்டதாக மாறியது. அதுபோல, பிரிட்டனும் போதிய தன்னிறைவு பெற்றது. போரும் நிகழ்ந்தது.

கோப்டன் கொள்கையை ஆதரிப்பவர்கள் மேலும் கூறுவது: கட்டுப்பாடற்ற, சுதந்திர வாணிகம் நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் போர்கள் எழவே செய்யாது என்று கூற முடியாவிட்டாலும், உற்பத்தி, ஆய்வு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபடுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்படும். செலவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அந்நிறுவனங்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும். இவ்வாறு, கட்டுப்பாடற்ற, சுதந்திர வணிகம் உலக அமைதிக்கு வழிவகுக்கும்.

ஒருவரையொருவர் அழிக்கும் செயல் தொகு
"ஒருவரையொருவர் அழிக்கும் செயல்" என்பது ஒரு இராணுவக் கொள்கை ஆகும். அதன்படி, அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டுள்ள இரு நாடுகள் அந்த ஆயுதங்களை முழுப்போரில் பயன்படுத்தும்போது எந்தவொரு நாடுமே வெற்றிபெற முடியாது; மாறாக ஒரு நாடு மற்ற நாட்டை அழிக்கின்ற அதே வேளையில் தானும் அழிந்துபோகும். தாக்கிய நாடும் தாக்கப்பட்ட நாடும் அழிவதை இக்கொள்கை எடுத்துரைக்கிறது.[17][18]

இக்கொள்கைப்படி, அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் அனைவருக்கும் அழிவே என்னும் அடிப்படையானது உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவித பனிப்போர் தொடர்ந்தாலும், போர் நடவடிக்கைகள் நிகழாமல் இருக்கும்.

உலக அமைதி பற்றி ஐக்கிய நாடுகள் பட்டயமும் பன்னாட்டுச் சட்டமும் தொகு
இரண்டாம் உலகப்போருக்குப் பின், "பிற்காலத் தலைமுறைகளைப் போர் என்னும் கேட்டிலிருந்து காக்கும் பொருட்டு" 1945இல் உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய பன்னாட்டு நிறுவனமே ஐக்கிய நாடுகள் அவை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் போர்கள் நிகழ்ந்து உலக மக்களுக்கு மாபெரும் இடர் விளைவித்த அனுபவம் கசப்பான ஒன்றாயிற்று. என்வே, உலக அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளை வலியுறுத்தி, பன்னாட்டுச் சட்ட அமைப்புக்கு இணங்கத் தனி நாடுகள் இயங்க வழிவகுக்கவும், பன்னாட்டுப் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்க்கவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமாகிய ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் சாற்றுரையை உருவாக்கியது. அதன் முகப்புரையில்:

மனிதக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் மாண்பையும், அவர்களது சமமான, அன்னியப்படுத்தப்பட முடியாத உரிமைகளையும் ஏற்றுப் பேணுதலே சுதந்திரம், நீதி, உலக அமைதி என்பவற்றிற்கு அடிப்படை ஆகும்
என்னும் கூற்று உள்ளது.[19][20]

உலகமயமாதலும் அமைதியும் தொகு
இன்றைய உலகில் நாடுகள் மற்றும் மக்கள் குழுக்களிடையே உறவுகள் பெருகி, வாணிகம் தழைத்து, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, அரசியல், பண்பாடு, தொழில்நுட்பம் முதலியவை பகிரப்பட்டு மனித இனம் ஒன்றிணைந்து வருகின்ற போக்கு உலகமயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய உறவு வளர்ச்சிகள் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு வழி என்னும் கருத்து உள்ளது.

பிளவுபட்ட பகுதிகளாகக் கிடந்த நாடுகள் பல இன்று மைய அரசியல் அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நாடுகளாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இத்தாலி, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், செருமனி, இந்தியா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும், பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வளர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தைக் காட்டலாம். படிப்படியாக, உலகளாவிய ஒன்றியம் பிறக்கவும் வழி திறந்துள்ளது.

தனித்துநிற்றலும் தலையீடு தவிர்க்கும் கொள்கையும் தொகு
நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை "தலையீடு தவிர்க்கும் கொள்கை" எனப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது சொந்த ஆட்சிமுறையில் கவனம் செலுத்தி, நல்லாட்சியை ஏற்படுத்தும்போது அமைதி நிலவும் என்பது கருத்து.

இத்தகைய "தலையீடு தவிர்க்கும் கொள்கை" "தனித்தியங்கும் கொள்கை"யிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். தனித்தியங்கும் கொள்கை பிற நாடுகளின் உள் ஆட்சிப்போக்கில் தலையிடலாகாது என்பதை வலியுறுத்துவதோடு, "பாதுகாப்பு வாதத்தையும்" (protectionism) முன்வைக்கின்றன. அதாவது, தமது சொந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மானியங்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் கொடுத்து, சுதந்திர முறை வாணிகத்துக்கு வரையறைகள் விதிக்கின்றன.

கடந்த காலத்தில் "தனித்தியங்கும் கொள்கை"யைச் சப்பான் போன்ற நாடுகள் கடைப்பிடித்ததுண்டு. சப்பானின் இராணுவத் தளபதிகளாக ஆட்சிசெய்த தோக்குகாவா மரபினர் 1603-1868 ஆண்டுகளில் தனித்தியங்கும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.[21]

அடிமட்ட உறவுகள் வழி அமைதி வளர்த்தல் தொகு
உலக அமைதி ஏற்பட அடிமட்டத்தில் மக்களிடையே அமைதி வளர வேண்டும் என்பது இன்னொரு கருத்து ஆகும் [22] அதிகாரம் ஓர் இடத்தில், ஆளில், அமைப்பில் குவிவதற்கு மாறாக, பரவலாக விரியும்; அப்போது வன்முறையும் குறையும் என்பது இக்கருத்துக்கு அடிப்படை. முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் இங்குக் கிடையாது. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரமோ, தெய்வீக அதிகாரமோ ஏற்கப்படுவதில்லை. மாறாக, தல அளவில், வலைப்பின்னல் போன்ற உறவுப் பரிமாற்றங்கள்மூலம் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் உறவுகள் வலுப்படும். சமய, இன, நாட்டு வேறுபாடுகளை வலியுறுத்தாமல், அனைவரும் பங்கேற்க வாய்ப்பளித்தல் இதன் ஒரு பகுதியாகும்.

மேலும், "சிந்தனைச் சோதனகள்" வழியாகவும், "பின்முறை உரை" (backcasting) வழியாகவும், இலட்சிய உலக அமைதி எவ்வாறிருக்கும் என்பதைக் கருத்தில் வரவழைத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியாக உறவு மேம்படுத்தலை இக்கருத்து முன்வைக்கிறது.

இத்தகைய ஒத்துழைப்புத் திட்டங்களாக விக்கிப்பீடியா, "அமைதியின் தேவை" (Need4peace) மற்றும் சமூக வலைத்தளங்களைக் கருதலாம்.

பொருளாதார நெறிக் கொள்கை தொகு
மைக்கல் மூசோ (Michael Mousseau) என்னும் அறிஞர் உலக அமைதி பேணுதல் குறித்து "பொருளாதார நெறிக் கொள்கை" என்றொரு கருத்தியலை முன்வைக்கிறார்[23]. பொருளாதார முறைகள் ஒன்றில் "காவலர்-பெறுநர்" (patron-client) வகையதாக இருக்கலாம், அல்லது பொதுச் சந்தை சார்புடையதாக இருக்கலாம். காவலர்-பெறுநர் வகைப் பொருளாதாரம் உட்குழுக்கள் சலுகை பெற்று முன்னேறுவதைக் கருத்தில் கொண்டிருக்கும். அதில் தலைவர் கையில் அதிகாரம் இருக்கும். அவரிடமிருந்து பெறுநர்கள் சலுகைகள் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தங்கள் ஆதரவை அளிப்பார்கள். இவ்வகைப் பொருளாதாரம் நிலவும் சமூகங்களில் சமூக உடன்பாடு (social contract) வலுவோடு இராது.

மாறாக, சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்களில் உட்குழு மனப்பான்மை என்னும் குறுகிய பார்வை இராது. சமூக உடன்பாட்டில் அன்னியரும் வெளிக்குழுவினரும் இருப்பதால் அவர்களும் பொருளாதாரச் செயல்பாட்டில் மைய இடம் வகிப்பர். சந்தைச் சார்புடைய பொருளாதாரம் தழைக்கும். இவ்வாறு, விரிந்த போக்கில் பொருளாதார நெறி அமையும்போது உட்குழுக்களுக்கும் வெளிக்குழுக்களுக்கும் இடையே உறவுகள் விரியும். ஒருவரின் நலன் வளரும்போது மற்றவரின் நலமும் வளரும். எனவே, ஆட்சியில் இழுபறி ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பதில் எல்லாத் தரப்பினரும் ஆவல் காட்டுவர். இவ்வாறு உலக அமைதி வளரும்.[24][25]

இவ்வாறு சமூக உடன்பாடு வலுவுடன் விளங்கும் சமூகங்கள் "சுதந்திரக் குடியரசுகள்" (liberal democracies) ஆகும். இவையே அமைதியை வளர்க்கும் தன்மை கொண்டுள்ளன.

ஆனால், காவலர்-பெறுநர் வகையில் அமைந்த பொருளுதார-அரசியல் அமைப்புகள் உட்குழுக்களின் முன்னேற்றத்தையே மையப்படுத்துவதால் பிற குழுக்களைப் புறக்கணிக்கும் போக்கு அங்கே தோன்றும். இதனால் குழுப் பகைமைகள் உருவாகும். இனங்களுக்கிடையே மோதல்களும் போர்களும் ஏற்படும். இனப்படுகொலை போன்ற கொடுமைகள்கூட நிகழும்.[26]

சந்தைச் சார்புடைய பொருளாதார அமைப்புகள் தனிமனித உறவின் அடிப்படையில் எழாமல் பொதுவான பொருளாதார சக்திகளின் செயல்பாட்டால் உருவாகின்றன. அரசு வகுக்கின்ற சட்டங்களுக்கு உட்பட்டு, பொருளாதார உறவுகள் அன்னியரையும் வெளியாட்களையும் நம்பி ஏற்பதிலிருந்து எழுவதால், அங்கே உட்குழு வெளிக்குழு என்னும் வேறுபாடு எழுவதில்லை. ஒருதலை சார்பும் தோன்றுவதில்லை. மாறாக, சந்தையை மையமாகக் கொண்ட "நடுநிலை" (market neutrality) வெளிப்படும்.

எனவே, சந்தையை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்ற நாட்டுப் பொருளாதார அமைப்புகள் அமைதிக்கு வழிகோலும் தன்மையன. அந்நாடுகள் எளிதாகப் போரில் ஈடுபட முன்வர மாட்டா. போர் என்பது "எதிரிக்குத்" தீங்கிழைப்பதை உள்ளடக்கும். அவ்வாறு தீங்கிழைப்பதால் போர் தொடுக்கும் நாடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். நாடுகள் இவ்வாறு தமக்குத் தாமே தீங்கு வருவிப்பதைத் தவிர்க்கப் பார்க்கும். மாறாக, ஒத்துழைப்பையும் கூட்டுச் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். எனவே, சந்தை மையப் பொருளாதாரங்கள் எங்கு உளவோ, அங்கு உலக அமைதிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.[24][26]

மேலே விளக்கப்பட்ட "பொருளாதார நெறிக் கொள்கை" தொழிற்புரட்சியைத் தொடர்ந்து வரலாற்றில் எழுந்த "கட்டற்ற முதலாளித்துவக் கொள்கை"யிலிருந்து மாறுபட்டது. சந்தை என்பது தன்னிலேயே "நடுநிலை" கொண்டது, கட்டுப்பாடற்ற சந்தையே செல்வம் உருவாகும்/உருவாக்கும் வழி என்பது கட்டற்ற முதலாளித்துவக் கொள்கையின் கருதுகோள். ஆனால், பொருளாதார நெறிக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்தை மனித உறவுகளின் வெளிப்பாடாகக் காண்கிறது. உட்குழுக்களும் வெளிக்குழுக்களும், உறவினரும் அன்னியரும் சமூக உடன்பாட்டின் வழி ஒருவர் ஒருவரின் வளர்ச்சியையும், அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும் வாய்ப்பு இவ்வாறு எழுகின்றது. அங்கே அரசு கட்டுப்பாட்டுக்கு இடம் உண்டு; சமூக உறவுகளின் அடிப்படையில் "சமூகச் சந்தை" (social market) தோன்றும். இதுவே உலக அமைதிக்கும் வழியாகிறது.[27]

உலக அமைதி பற்றிச் சமயங்களின் பார்வை தொகு
பொதுவாக, அனைத்து உலக சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும் என்பது சமயங்களின் பொதுவான அணுகுமுறை.

பகாய் சமயம் தொகு
பகாய் சமயம் 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட மதம் ஆகும். உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பகாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இச்சமயத்தின் முக்கிய கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார்; உலக சமயங்கள் தனித்தனியாக வேறுபட்டு நின்றாலும், அவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றே; மனிதகுலம் பலவாகப் பிளவுண்டு நின்றாலும் அது அடிப்படையில் ஒன்றே.

இவ்வாறு, பகாய் சமயம் உலக அமைதிக்கான அடிப்படைகளைத் தெளிவாகக் கொண்டுள்ளது. உலக அமைதி ஏற்படுவதற்கு உலகளாவிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற ஓர் பொது அமைப்பு வேண்டும் என்றும் பகாய் கூறுகிறது. உலக அமைதி ஏற்படுவதற்கான வழிகளைப் பகாய் மைய நிறுவனமாகிய "நீதியின் பொது இல்லம்" (Universal House of Justice) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.[28]

புத்த சமயம் தொகு
மனிதர் தம் உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே உலகில் அமைதி ஏற்பட முடியும் என்பது புத்த சமயக் கருத்து. புத்த சமயத்துக்கு அடிகோலிய கவுதம புத்தர் "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார்.[29] மனித உள்ளத்தில் இருக்கின்ற கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளே போர்களும் சண்டைகளும் உருவாகக் காரணமாய் உள்ளன. எதிர்மறை உணர்வுகளைக் களைந்துவிட்டு, அன்பு, இரக்கம் போன்ற ஆக்கமிகு உணர்வுகளை மனிதர் வளர்ப்பதே உலக அமைதிக்கு வழி.

கிறித்தவ சமயம் தொகு
உலக அமைதி பற்றிக் கிறித்தவம் போதிக்கின்ற கருத்துகள் விவிலியத்திலும் வெவ்வேறு திருச்சபை அமைப்புகளின் போதனைகளிலும் காணக்கிடக்கின்றன. கிறித்தவத்தின் மூன்று முக்கிய பிரிவுகளாக விளங்குகின்ற கத்தோலிக்கம், மரபுவழி சபைகள், புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகிய அனைத்துமே சில பொதுவான கருத்துகளைக் கொண்டுள்ளன. அதாவது, கடவுள் உலக மக்கள்மீது அன்புகொண்டு, அவர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவித்து, மீட்பளிக்கும் வண்ணம் தம் ஒரே திருமகனாகிய இயேசு கிறித்துவை உலகுக்கு அனுப்பினார். இயேசு சிலுவையில் அறையுண்டு, உயிர்துறந்து, தம் சிலுவைச் சாவின் வழியாக மனித குலத்தை மீட்டார். எனவே, இவ்வுலகும் இவ்வுலக மக்களும் கடவுளோடு ஆழ்ந்த உறவிலும் ஒன்றிப்பிலும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஒன்றிப்பின் வெளிப்பாடாக, மனிதர்களுக்கிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு, ஒன்றிப்பு, அமைதி நிலவ வேண்டும். மேலும், இயேசு அன்புக் கட்டளையை மிகவும் வலியுறுத்தினார். குறிப்பாக, பகைவர்களை மன்னித்து, அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள இயேசு போதித்தார் (மத்தேயு 5:43-48). எவ்வாறாயினும், உலக அமைதி நிறைவான விதத்தில் இவ்வுலகில் ஏற்படும் என்று கிறித்தவம் கருதுவதில்லை. மாறாக, விவிலியத்தில் குறிப்பிடப்படுவது போல (காண்க: திருவெளிப்பாடு 21), மனித வரலாற்றின் முடிவில், "புதிய உலகில்" அமைதி நிறைவாக நிலவும்.

கத்தோலிக்க திருச்சபையின் போதனை
உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் மனிதர் தனிப்பட்ட முறையிலும், குழுக்களாக, நாடுகளாக இணைந்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, கிறித்தவ சபைகளுள் பெரும் பிரிவாக விளங்குகின்ற கத்தோலிக்க திருச்சபை விரிவான போதனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, 1962-1965 காலகட்டத்தில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உலக அமைதி பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தைக் கூட்டிய திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1960களில் ஐக்கிய அமெரிக்க நாடடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் முற்றிய நிலையில் அந்நாடுகளின் தலைவர்களோடு தொடர்புகொண்டு, அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடாமல், அமைதிக்கான வழிகளைத் தேடுமாறு அறிவுறுத்தினார்.[30]

குறிப்பாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் "அவனியில் அமைதி" (Peace on Earth) என்னும் தலைப்பில் 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் "நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்" ஒரு சுற்றுமடல் எழுதினார்.[31]. அம்மடலில், அவர் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்றால் மனித உரிமைகள் எல்லா மட்டத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உரிமைகளுள்ள இடத்தில் கடமைகளும் உண்டு என்பதால், தனிமனிதரும் நாடுகளும் ஒருவர் மற்றவருக்குப் பொறுப்புடையோராய்ச் செயல்பட வேண்டும். இவ்வாறு, உலக அமைதி என்பது மனித உரிமைகளை மதித்து, ஏற்று, மேம்படுத்துவதில் அடங்கும். அமைதியின் அடித்தளங்களாக இருப்பவை நான்கு: 1) உண்மை; 2) சுதந்திரம்; 3) அன்பு; 4) நீதி.

இந்து சமயம் தொகு
பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். வேத கால சிந்தனைப்படி, எங்கும் பரவி நிற்கும் பிரமமும் மனிதரின் அகம் உறையும் ஆன்மாவும் ஒன்றே. உயிர்கள் தமக்குள் பிரிந்து நிற்பது போல் தோன்றினாலும், அடிப்படையாக உள்ள ஒன்றிப்பை உணர்வுகடந்த நிலையில் அனுபவிப்பதே விடுதலை ஆகும்.[32] பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற சைவமும் வைணவமும் இறைபணியையும் மனிதருக்கு ஆற்ற வேண்டிய சேவையையும் வலியுறுத்தின. அண்மைக் காலத்தில் இராமகிருசுண இயக்கம் போன்ற அமைப்புகள் பொதுநல சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவ்வாறு, மனிதரிடையே நல்லுறவுகளை உருவாக்கி, உலகில் அமைதி கொணரும் பணி சமயத்தின் ஒரு பெரும் பொறுப்பு என்பது ஏற்கப்படுகிறது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கருத்து வேரூன்றியுள்ளது. குறிப்பாக, மனிதர்கள் சமய வேறுபாடுகளை மறந்து, உலக அமைதிக்காக உழைத்தல் வேண்டும் என்றும், உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அகிம்சையே வழியாக அமைய வேண்டும், போரல்ல என்றும் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கருத்துகள் இந்து சமய மற்றும் சமண சமயப் பின்னணியிலிருந்து எழுந்தனவென்பது பொதுவான கருத்து. இயேசு பகைவரையும் அன்புசெய்ய வேண்டும் என்று வழங்கிய போதனையும் தம் வாழ்வில் தாக்கம் கொணர்ந்ததாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.

இசுலாம் தொகு
இசுலாம் சமயம் உலக அமைதியின் தேவையை எடுத்துரைக்கிறது. கடவுள் ஒருவராக உள்ளார். அல்லா என்னும் பெயர் கொண்ட அவர் மனித குலத்தை ஆதாம் ஏவா என்னும் முதல் பெற்றோரிடமிருந்து தோன்றச் செய்தார். இவ்வாறு மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர். தமக்குள் உடன்பிறப்புகளாகத் திகழ்கின்றனர். மனிதர்கள் இந்த உறவினை உணர்ந்து தம் வாழ்க்கை முறையை அமைதியான விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இசுலாம் சமயத்தின் திருநூலாகிய திருக்குர்ஆன் கூறுகிறது. "சொல்லாலோ செயலாலோ பிறருக்குத் தீங்கு இழைக்காதவனே முசுலிம்" என்பது குர்ஆனின் போதனை.

அண்மைக் காலத்தில் இசுலாம் சமயத்தின் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபட்டு உலக அமைதியைக் குலைத்தார்கள் என்பதால், இசுலாம் சமயம் தன்னியல்பிலேயே உலக அமைதிக்கு எதிராக உள்ளது என்னும் முடிவுக்கு வருதல் தவறு என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.[33][34].

யூத சமயம் தொகு
யூதம் எதிர்காலத்தில் "மெசியா" வருவார் என்றும், அவர் சகல யூதர்களையும் இசுரேலிய நிலத்திற்கு கொண்டு வருவார் என்றும், அதனைத் தொடர்ந்து உலகில் நிரந்தர நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவார் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்கள் யூதர்களின் தனாக்கில் இருந்தும் யூதப் போதகர்களின் விளக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.[35] யூதர்களிடம் "உலகைத் திருத்துதல்" என்ற பொருளுடைய டிக்குன் ஒலம் என்ற கருத்தும் உள்ளது. அதன்படி, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்தல், சமூக நீதி ஆகியவற்றைச் செய்வதன் ஊடாக உலகை நீதிநெறியில் நடத்தலாமெனக் கருதுகின்றது. இது மெசியாவின் காலத்திற்கு ஆரம்பமாக இருக்குமென நம்பப்படுகின்றது.

சமணம் தொகு
உலக அமைதியைப் பேணுவதில் சமண மதம் சிறப்புப் பங்கு அளிக்கிறது. எல்லா உயிர்களையும் போற்றும் பண்பைச் சமணம் ஊக்குவிக்கின்றது. பிற உயிர்களுக்குத் தீங்கு விளைப்பது பாவம் என்பது சமணக் கொள்கை. எனவே, அகிம்சை இச்சமயத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு மூலமாகச் சமணத்தின் தாக்கத்தைக் கருதலாம். மேலும், சமணம் "அனேகவாதம்" என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, எந்தவொரு சிக்கலும் ஒரே தீர்வுக்கு உட்பட்டது என்று கூற முடியாது, மாறாக, பல தீர்வுகள் இருக்கலாம். இதையே "பன்மைவாதம்" என்றும் கூறலாம். இந்த அணுகுமுறை உலக அமைதியைப் பேணுகின்றது. கருத்து வேற்றுமைகள் ஏற்படும்போது, பிறரது பார்வையிலும் உண்மை இருக்கலாம் என்று ஏற்கும் "சகிப்புத் தன்மை" வேண்டும். அது அமைதிக்கு வழியாகும்.[36]

சீக்கிய சமயம் தொகு
சீக்கிய சமயத்தில் உலக அமைதி பற்றிய கருத்துகள் குறிப்பாக மனிதரிடையே வேறுபாடுகள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுகின்றன. சீக்கியம் ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிக்கிறது. சமபந்தி நடத்தி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஏழை-செல்வர் போன்ற வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே கடவுளின் மக்கள் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
சீக்கியத்தின் அடிப்படைக் கொள்கைகள்: கடவுள் ஒருவரே ஆவார். மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புகள் என்பதால் தமக்குள் உடன்பிறப்புகள். நேர்மையான வழியில் செல்வம் ஈட்டுவதே முறை. தான் சேர்ப்பதைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். கடவுள் நினைவில் நிலைத்திருந்து, இயற்கையோடு இசைந்து வாழ்தல் வேண்டும்.

இக்கொள்கைகள் உலக அமைதியை வளர்க்க துணையாகும் எனச் சீக்கியம் கருதுகிறது.

உலக அமைதியின் பொருளாதார விளைவு தொகு
உலகில் அமைதி நிலவும்போது பொருளாதார வளர்ச்சியும் அதிகமாக நிகழ்கிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2011 மே மாதம் "உலக அமைதிக் குறிப்புகள்" (Global Peace Index) என்னும் ஆய்வின்படி, அதற்கு முந்திய ஓர் ஆண்டில் உலகம் 25% அதிகமாக அமைதியாக வாழ்ந்திருந்தால், உலகப் பொருளாதாரம் கூடுதலாக 2 த்ரில்லியன் டாலர்கள் பயன்பெற்றிருந்திருக்கும். அத்தொகை உலக மொத்த உற்பத்தியில் 2% ஆகும். அத்தொகையைக் கொண்டு, புவி சூடாதல் நிலையைச் சீர்படுத்தவும், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை அடைய அனைத்துச் செலவுகளை ஏற்கவும், ஐரோப்பாவில் கிரீசு, அயர்லாந்து, போர்த்துகல் போன்ற நாடுகளின் கடன் பிரச்சினையைத் தீர்க்கவும், 2011இல் சப்பானில் நிகழ்ந்த ஆழிப்பேரலையால் உண்டான அழிவைச் சமாளித்து மறுவாழ்வு கொணரவும் முடிந்திருக்கும்.[38]

உலகில் அமைதி நிலவும்போது மனிதரிடையே நல்லுறவுகள் வளரும். இயற்கை வளங்கள் காக்கப்படும். மனித இனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தடையின்றி நிகழும்.

உலக அமைதியும் அரசியல்-பொருளாதார-பண்பாட்டு ஆதிக்க நெருக்கடிகளும் தொகு
உலக அமைதி மனித உள்ளத்திலிருந்து உருவாக வேண்டும் என்று சமயங்களும் ஆன்மிகவாதிகளும் கூறுவர். எனினும், நடைமுறையில் உலகளாவிய அமைதி ஏற்பட வேண்டும் என்றால், உலக நாடுகள் அரசியல், பொருளாதாரம், பண்பாடு தொடர்பான ஆதிக்கத்தைத் தம் நாட்டு எல்லைகளுக்கு அப்பால் விரிவடையச் செய்ய முனைகின்றன என்னும் உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்காக இன்று போர்கள் நிகழ்வது குறைவே. ஆனால், பொருளாதாரத்தை வளர்க்க, சக்திப் பொருள்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாடுகள் போரில் ஈடுபடுகின்றன. சில நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் தொடர்ந்து நிகழ ஆதரவு அளிக்கின்றன. போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து, இலாபம் ஈட்டுகின்றன. தமது ஆதிக்கத்தை (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்) விரிவுபடுத்த மூன்றாம் கட்சியினரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இத்தகைய போர்கள் "பிறதரப்புப் போர்கள்" (proxy wars) எனப்படுகின்றன.[39]. அதுபோலவே, அண்டை நாடு அணு ஆயுதம் உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தைப் பெற்று, தன்மீது தாக்குதல் நிகழ்த்திவிடுமோ என்னும் அச்சத்தில் அந்நாட்டின்மீது முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல் நிகழ்த்துவது நல்லது என்னும் கருத்தும் உள்ளது.

மேலும், உள்நாட்டுப் போர்கள் இன்று உலக அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கின்றன. சில வேளைகளில், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக மாபெரும் அநீதி இழைக்கப்படும்போது அச்சமுதாய மக்கள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடும். அந்நேரத்தில் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த நீதிப் போராட்டத்தின் நியாயமான குரலை அடக்கப்பார்க்கும். இந்த உள்நாட்டுப் போர்கள் உலக அமைதியைக் குலைக்கின்றன என்று கூற முடியாது. மாறாக, நீதியின் அடிப்படையில் அமைகின்ற உலக அமைதியைக் கட்டி எழுப்ப அத்தகைய போராட்டங்கள் தேவையாகலாம். எனினும், நீதிக்கான போராட்டமும் அகிம்சை முறையில் நிகழ வேண்டும் என்று சிலர் வாதாடுவர். வேறு சிலரோ, தற்பாதுகாப்புக்காக நாடுகளும் மக்களும் அகிம்சைப் போராட்டங்கள் வெற்றி கொணராத நிலையில், வன்முறையைப் பயன்படுத்துவது முறையே என்பர்.[40]

ஏற்கெனவே வன்முறையும் போரும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், ஒடுக்கப்படுகின்ற குழுவுக்கு ஆயுதங்கள் வழங்கியும் வேறு விதங்களில் ஆதரவு அளித்தும், குறிப்பாக, உணவு மருந்து ஆகிய இன்றியமையாப் பொருள்களை வழங்கியும் உதவியளித்து, நிகழ்த்துகின்ற போர்முயற்சி "மனிதநலப் போர்" (humanitarian war) என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு, இருபத்தோராம் நூற்றாண்டில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகியவற்றில் செயலாற்றுகின்ற நேரடி மற்றும் மறைமுக சக்திகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, "உலக அமைதி" என்பது சிக்கல் நிறைந்த ஒரு பொருளாகவே உள்ளது.