செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம் செப்டம்பர் 18.


சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம் செப்டம்பர் 18.

இந்த நாளில்  குடிமக்கள் தங்கள் வாழும் சூழலில்
தங்களுக்கான நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும் அவற்றை கண்காணிப்பதற்குமான ஒரு ஈடுப்பாட்டை, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவற்றை  நினைவில் இருத்தி கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது.

மூன்று முக்கிய அம்சங்களாக இந்த நாளில், நமக்கான செயல் திட்டமாக கொள்ளலாம்.

1) நீரை சோதனை செய்தல்,(டெஸ்ட்)
2) அறிந்த  நீர் தன்மையின் விவரங்களை பகிர்தல் (ஷேர்),
3) கிடைத்த தகவலை வைத்து நீரை பாதுகாத்தல் (ப்ரொடெக்ட்)
- நம் தேசத்தில் மேற்கூறிய மூன்றும்
சாத்தியப்படும் நிலையில் இல்லை என்பதும், தனி மனிதனாகவும், தனிக்குழுக்களாகவும்  செயலில் இறங்க நாம் தயாராக இருந்தாலும், அதற்கான வசதிகள் நமக்கு அளிக்கப்படவில்லை என்பதும் நடைமுறை. மேற்கத்திய நாடுகளில் கைகளுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் தகவல் பகிர்வு,
நம் தேசத்திலும் சாத்தியமே, அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டும்.

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.நாமும் இன்னாளில் நீரின் தேவை உணர்ந்து நீரினை சேமிப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக