சனி, 30 நவம்பர், 2019

உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 01.


உலக எய்ட்ஸ் நாள்  டிசம்பர் 01.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது[2] ,இதில் 270,000 குழந்தைகள்.

வரலாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.[4][5] . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

டிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது[6]. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின[6][7].

முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.[6][7][8]

ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

நோக்கம்

எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.

எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள் தொகு
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).

இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள் தொகு
எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள் தொகு
2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.
கருப்பொருட்களை தேர்ந்தெடுத்தல் தொகு

30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா

2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள ஆணுறை
1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (உலக எய்ட்ஸ் பிரச்சாரம்) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2015
1988 தொடர்பாடல்
1989 இளைஞர்
1990 எய்ட்சும் பெண்களும்
1991 சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992 சமூகத்தின் ஈடுபாடு
1993 செயலாற்றுதல்
1994 எய்ட்சும் குடும்பமும்
1995 உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்
1996 ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997 எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
1998 மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002 வடு மற்றும் பாகுப்பாடு
2003 வடு மற்றும் பாகுப்பாடு
2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
2007 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2008 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2009 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2010 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2011 பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்
2012 ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம்
2013 பூஜ்ஜிய பாகுபாடு
2014 இடைவெளியை குறைப்போம்
2015 விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம்
 
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.


உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதப்படுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் 2,70,000 குழந்தைகள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். தங்கள் யோசனையை எயிட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர் மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து, 1988-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

டிசம்பர் ஒன்றாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர். ஏனெனில் அப்பொழுதுதான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும். ஆதலால், புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது சரியானது என்று தீர்மானித்தார்கள். மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

எச்.ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக 1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி, அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின.

முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன. 2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரசாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது. ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான்பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.
நன்றி மாலைமலர்.
 
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 25 நவம்பர், 2019

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26.


சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் : குரு தரும் ஹம்சயோகம் உடம்பை குண்டாக்கவும் செய்யுமாம்

அவனுக்கு என்னப்பா யோகக்காரன் என்பார்கள். இன்றைக்கு யோகக்காரர்கள் எந்த அளவிற்கு செல்வ செழிப்போடு இருக்கிறார்களோ அதே அளவிற்கு நோய்களாலும் பாதிக்கப்படுகிறார். நவ கிரகங்களின் சுப கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஒருவருக்கு ஹம்ச யோகம், மளாவியா யோகங்களை கொடுத்தாலும் கூடவே உடல் பருமனையும் சேர்த்தே கொடுப்பதாக சொல்கிறது மருத்துவ ஜோதிடம். சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை பணத்தொப்பை எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தனகாரக குருதான் கொழுப்பு சத்திற்கும் காரகர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் உடல் பருமன் தினம் அனுசரித்த நிலையில் நவம்பர் 26ஆம் தேதியன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உலகளவில் மரணமடைகின்றன. உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜாதக ரீதியாகவும் உடல் பருமனம் ஏற்படுகிறது. ஒருவரின் உடல் பருமனுக்கு குருவும், சுக்கிரனும் காரணமாகின்றனர். உடல் பருமனுக்கு ஜோதிட ரீதியாக ஏற்படும் காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் எச்சரித்து வருகின்றன

ஒபிசிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எல்லோருமே இன்றைக்கு ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.

ஒபிசிட்டி பிரச்சினை
உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம் ஆணோ பெண்ணோ அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது நேரம் கெட்ட நேரத்தில் கண்டதை வாங்கி வயிற்றுக்குள் தள்ளுவது என மாறிவிட்டனர். இதனால் கொழுப்பு அதிகரிக்கிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவதும் ஒபிசிட்டி ஏற்பட காரணமாகிறது.

உடல் பருமன்
உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய் வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. உடல் பருமனுக்கும் நமக்கு ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. உடல் பருமனுக்கு காரகர் குரு என்றும் ஊளைச் சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

குரு சுக்கிரன்
ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம்பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்புகொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோணம், கேந்திர திரிகோணங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம், சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது உடல் பருமனும் ஊளைச் சதையும் ஏற்படுகின்றது. முக்கியமாகக் கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

குண்டாக்கும் குருபகவான்
ஒருவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, இரண்டாம் ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது இரண்டாம் ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும். லக்னம் நீர் ராசியான கடகம் அல்லது மீனமாகி அதில் குரு பகவான் ஆட்சி உச்சம் ஆகி நிற்பது அல்லது நீர் ராசியாகிய விருச்சிகமாகி அதை நீர் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்ப்பது. இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் ஒருமுறை குண்டாகிவிட்டால் பின் மீண்டும் உடல் பருமனில் இருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.

ராகு உடன் குரு சேர்க்கை
பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும் ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும். குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில் நிற்பது குறைந்த அளவிலாவது தொப்பை இருக்கும்.

சனியோடு குரு சேர்க்கை
கன்னி மற்றும் ஜனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனைச்சரனும் சேர்ந்துகொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.

குரு திசை ராகு புத்தி
ஒருவரின் ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை போன்ற வயிறு ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கண்ட கிரக நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது.

பெண்களுக்கு உடல் பருமன்
பெண்களுக்குப் புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் ஒல்லியாக இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல் பருமனடைவதை பார்க்க முடிகிறது. அதுவே நிரந்தரமாகி அப்புறம் குண்டம்மாக்களாக வளைய வருகின்றனர் பெண்கள். அதே நேரம் திருமணத்தின் போதே உடல் பருமனாக இருக்கும் பலருக்கும் குழந்தை பிறப்பது அரிதாகி விடுகிறது.


பத்தாம் வீட்டில் குரு சுக்கிரன்
ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் இருக்கும் கிரஹங்களை பொருத்து ஒருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை அமைந்துவிடுகிறது. பத்திலே ஒரு பாவி இருக்க வேண்டும் அல்லது ஒரு பாம்பாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட சொலவடை. பத்திலே அசுப கிரஹங்கள் இருந்தால் அவர்கள் வேலை கடுமையான உடல் உழைப்புடன் அமையும். மாறாக குருவோ சுக்கிரனோ அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வேலை வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசு வேலையிலேயே நாட்டம் இருக்கும். இவர்களையே உடற்பருமன் அதிகம் தாக்குவதை காணலாம்.


திருச்செந்தூர் முருகனை வணங்குங்க
உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள் ஜாதகத்தில் கொண்டவர்கள் குருவின் காரகம் நிறைந்த இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக நெய் சேர்த்த உணவுகளை மற்றவர்களுக்கு அளிக்கவேண்டுமே தவிர அவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் குருவின் அம்சம் நிறைந்தவர்களை இனிப்பு சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

யோகா செய்யுங்க
செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும். கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும். அழகன் எனப்படும் முருகப்பெருமானைத் திருச்செந்தூர் ஸ்தலத்தில் வணங்கலாம். கேதுவின் அதிதேவதையான விநாயக பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கலாம்.

ஜீரண கோளாறு நீங்கும்
செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளைப் பூண்டினை அதிக அளவு சேர்க்கும்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. இது அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்கப்பட்ட ஒரு எளிய வழியாகும். மேலும் செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.

ஆஞ்சநேயர் வழிபாடு
வாயு பொருட்கள், கிழங்குகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்த்து தன்வந்திரி பகவானை வணங்கலாம். வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை குறைக்கும்.

கருஞ்சீரகம்
வயிறு சமந்த பிரச்னைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. கருஞ்சீரக கஷாயம் உடல் பருமனை குறைக்கும். குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சையை காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் தேன் கலந்து குடிப்பது மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது. குருபகவானை வணங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
Thanks Oneindia.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்திய அரசியல் சாசன தினம் நவம்பர் 26.


இந்திய அரசியல் சாசன தினம் நவம்பர் 26.

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

அரசியல் சாசன தினம்
संविधान दिवस
Constitution of India.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
துவக்கம்

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

வரலாறு

தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முனவைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.

1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை
பற்றிய சில தகவல்கள்

*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946 திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.
*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.
*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தர்க்காலிகம்) செயற்பட்டார்.
*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.
*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.
*இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.
*இந்திய அரசியலமைப்பு பொதுவாக இங்கிலாந்து அரசியலமைப்போடு ஒத்ததாகும்.

Thanks Wikipedia.
#டாக்டர்_ அம்பேத்கர் #அரசியலமைப்புச்சட்டதினம்
#November_26
#Dr_Ambedkar
#Constitution of India constitution day 2

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - நவம்பர் 26


இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் - நவம்பர் 26

Updated: 26 Nov 2019, 1:35:27 AM
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26- ஆம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது.
 
நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. மக்களாட்சி சிறப்பாக நடைபெறவும், அதன் மாண்பு காப்பாற்றப்படவும் இந்நான்கு தூண்களும் வலுவாக இருப்பது அவசியம்.
ஜனநாயக தூண்களை எப்போதும் வலிமையுள்ளதாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது தான் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம். 1949 நவம்பர் 26 -ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையை ஏற்று, நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டது.
samayam-tamil
cdi2


அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26- ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, அரசியலமைப்புச் சட்ட தினம், நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியலைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது குறித்த பல சுவாரஸ்மான தகவல்கள், மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பக்க பதிவிலிருந்து இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது.

மண்டல் இடத்தில் அம்பேத்கர் : இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள், 1946 டிசம்பர் 9 - ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் 296 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். முதலில் இக்குழுவில் டாக்ட அம்பேக்தர் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியதால், அவருடைய இடத்தில் அம்பேத்கர் இடம் பெற்றார்.


பி.என்.ராவ் : நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ்காரர்கள் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. இந்த தலையாய பணியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந் பி.என்.ராவ் என்பவர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.
samayam-tamil
cdi3

அரசியலமைப்பு நிர்ணய மன்றம் : பல அறிஞர்களின் கடினமாக உழைப்பின் பயனாக, மூன்றாண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949 நவம்பர் 26-ஆம் தேதி இந்தச் சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மன்றத்தில் ஜவாஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்.

ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ், முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர், விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை.

அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

சட்ட வரைவுக் குழு: 1947, ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத, பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
பி.ஆர்.அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி,கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

1950 ஜனவரி 26 : இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21 இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 - ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 - ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் கையொப்பத்தை பெற்றது.

ஜனவரி 24இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஆம் தேதி, இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜனவரி 26 -ஆம் தேதியை, இந்தியக் குடியரசு நாளாக ஏற்பதென்றும், அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது. அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

ஜனநாயக நாடா? குடியரசு நாடா? : இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டின்படி பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது.

வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

ஆனால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. இதேபோல் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.

மறைக்கப்பட்ட மாமனிதர் : இதுகுறித்து, பிரபல நாளேடுகளில் பல பத்திகளை எழுதியுள்ளேன். இருப்பினும் இதுகுறித்தான சிந்தனைகளையும், பிரச்சனைகளையும் இந்த பத்திகளில் அடக்கிவிட முடியாது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் எனக் கொண்ட பன்மையில் ஒருமை என்ற அடிப்படையில் பல வட்டாரங்கள் இணைந்து வாழ்கின்றோம்.

சமஸ்டி அமைப்பின் வேகத்தையும், தாக்கத்தையும் மத்தியில் ஆளும் மத்திய அரசு உணர வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே பாரபட்சமில்லாமல் சம உரிமைகளோடு, மாநில சுயாட்சி பெற்றிடும் வகையில் நம்முடைய பணிகளும், நம் அணுகுமுறைகளும் இருக்கவேண்டும்.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்து உயிரோட்டமான ஜீவனாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் எழுத்து வடிவம் இல்லை. நம்முடைய உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிபடுத்துகின்ற பிரகடனமாகும் .
இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபை, பல நாள்கள் அமர்ந்து விவாதங்களும், ஆலோசனைகளும் நடத்தி வடித்தெடுக்கப்பட்ட அரசியல் சிற்பம் தான் நம் அரசியல் சாசனம்.

டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து ஆந்திராவை சேர்ந்த அறிஞர் பி.என்.ராவ் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டங்களை எல்லாம் அறிந்து கொண்டு அதை நம் நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து, இந்திய அரசியல் சாசனம் எழுத பெரும் பங்காற்றினார்!

அவர் இல்லையென்றால் பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கும். திரு பி.என். ராவ் அவர்கள் மறைக்கப்பட்ட மாமனிதர்களில் ஒருவராவார்.

இந்நாளில், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை நாட்டுக்கு தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், திரு பி.என். ராவ் அவர்களையும் நினைவு கூறுவோம் !
Thanks samayam-tamil.
#டாக்டர்_ அம்பேத்கர் #அரசியலமைப்புச்சட்டதினம் #November_26
Dr_Ambedkar
Constitution of India constitution day 2
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 21 நவம்பர், 2019

உலகத் தொலைக்காட்சி தினம் நவம்பர் 21.


உலகத் தொலைக்காட்சி தினம் நவம்பர் 21.

( WORLD TELEVISION DAY, November 21 )  

உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY, November 21 ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
nov 21 - world t v day
உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.

இந்த தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.

1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதனூடாக வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொலிகள், புதிய ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு போன்றவை மக்களை அதிகளவில் கவர்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஊடகமாக தொலைக்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு பிரதான காரணம் உலகளாவிய ரீதியில் மிகவும் குறைந்த வசதியில் தொலைக்காட்சியை நாடமுடியும் என்பதால் அதற்கான ரசிகரகளும் உலகளாவிய ரீதியில் அதிகமாக காணப்படுகின்றனர். சமூக வேறுபாடு வயது வேறுபாடு மற்றும் தேசிய வேறுபாடு ஆகியவற்றை களைந்து அனைவர் மத்தியிலும் பொதுவான விருப்பத்திற்கு உரிமையுடைய சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிரபப்பாகும் காணொலிகளிளை புரிந்துகொள்வதற்கு மேலதிக அறிவு தேவையில்லை. இதனால்; கல்வியறிவு குறைந்தவர்களும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம செலுத்துகின்றனர்.

தற்போது மனித உணர்வுகளை நேரடியாகவும் அவர்களின் நிலைமையை விளக்கிக்கூறும் பலம்மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. இதனால் உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதில் யுனெஸ்கோ அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்பாடு மற்றும் சிறந்த காணொளிகள் என்பது யுனெஸ்கோ திட்டங்களுக்கு அவசியம் என்பதால் தொலைக்காட்சி தினம் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டது. உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் என்பன தொடர்;பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக தொலைக்காட்சி பயன்பத்தப்பட வேண்டுமென யுனெஸ்கோ தெரிவித்திருந்தது. இதன்மூலம் சிறுவர்கள் மாத்திரமன்றி இளைஞர்களையும் தெளிவுபடுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற ஊடகத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் வன்முறைகளை குறைக்கலாம். அந்த வகையில் குறித்த செயற்பாட்டை செய்யும் பெரிய பங்கை தொலைக்காட்சி வகிக்கின்றது. இந்நிலையில் உள்ளுர் சமூகங்களின் முக்கியத்துவம் மற்றும் கலாசாரங்களின் கௌரவம் அவற்றின் பாதுகாப்பு என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி படைப்புகள் அமைய வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நன்றி ஆந்தை.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 20 நவம்பர், 2019

உலக மீனவர் தினம் நவம்பர் 21


உலக மீனவர் தினம் நவம்பர்  21.

உலக மீனவர் தினம் - தமிழகத்தில் ஆண்டுக்கு 35 மீனவர் ஆழ்கடலில் உயிரிழப்பு: பாதுகாப்பின்மையால் மாற்றுத்தொழிலை நாடும் இளைஞர்கள்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 35-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடி பணியின்போது உயிரிழக்கும் சோகம் நிகழ்ந்து வருகிறது.

நவ.21-ம் தேதியான இன்று உலக மீன்வள தினமாகும். இதையே மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 35-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகள் குறித்து தெற்காசிய மீனவதோழமை அமைப்பு எடுத்த புள்ளி விவரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.


இந்த அமைப்பின் செயலாளர் ஆரோக்கியராஜ் கூறியதாவது:

சுனாமி, புயல் போன்ற பேரிடர்கள் தவிர, சாதாரண சூழலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து கீழே விழுவது, படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சை பெறமுடியாமல் போவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் சென்று, அங்கேயே தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் குமரி மாவட்ட மீனவர்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு, தகவல்தொடர்பு இன்மையால் 75 சதவீத இறப்பு ஏற்படுகிறது.

200 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு புயல், மழை நேரத்தில் தகவல்களைப் பரிமாற உபகரணங்கள் இல்லை. 10 விசைப்படகுக்கு ஒரு சேட்டிலைட் போனை, அரசு வழங்கியுள்ளது. பேரிடர் காலத்தில் இவற்றின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ரேடியோ போன் வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழில் அதிகம் நடைபெறும் கன்னியாகுமரியில் கடலில் காணாமல் போனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

குளச்சலைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பொறுப்பாளர் ரக்சன் கூறியதாவது: வானிலை எச்சரிக்கையால் பாதி நாட்களுக்கு மேல் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாமல் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நாட்களில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும்.

வளைகுடா நாடுகளில் தங்கி அரேபிய முதலாளிகளிடம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததால் சிறைபிடிக்கப்படுவதும், கடலிலேயே மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்பிடி தொழிலில் பாதுகாப்பில்லாததால் மீனவ இளைஞர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர் என்றார்.

நன்றி இந்துதமிழ்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 18 நவம்பர், 2019

உலக ஆண்கள் தினம் நவம்பர் 19, (International Men's Day)


உலக ஆண்கள் தினம் நவம்பர் 19, (International Men's Day)

November 19, 2019 10:09:43 am

 சர்வதேச ஆண்கள் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

1999-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோ நாட்டில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும் ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்துவரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுப்படுத்தும் நாளாக அமைகிறது.

#சர்வதேச_ஆண்கள்_தினம்
#International_Mens_Day

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 16 நவம்பர், 2019

உலக மாணவர் நாள் (International Students' Day) நவம்பர் 17 .

உலக மாணவர் நாள் (International Students' Day) 
நவம்பர் 17 .

அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

வரலாறு தொகு
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.

நவம்பர் 17 நிகழ்வுகள் தொகு
கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

தேசிய பத்திரிக்கை தினம் நவம்பர் 16:


தேசிய பத்திரிக்கை தினம் நவம்பர் 16: 

நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திரமான மற்றும் பொறுப்புடைய பத்திரிக்கைத் துறையை அடையாளப்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிமுறைப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India) செயல்படத் தொடங்கிய நாளான நவம்பர் 16-ல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முதலில் 1966-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 4-ஆம் தேதி நிறுவப்பட்டது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவானது இந்திய பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் (press council Act 1978) கீழ் உருவாக்கப்பட்ட ஓர் தன்னதிகாரமுடைய, சட்ட மற்றும் பகுதி - நீதி அமைப்பாகும்.

இருப்பினும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான J.R. முதோல்கரை தலைவராகக் கொண்டு 1996, நவம்பர் 16-ஆம் தேதிதான் இந்த அமைப்பு செயல்படத் துவங்கியது.

இது, இந்தியாவிலுள்ள அச்சு ஊடகங்கள் உயர்தர நிலைகளைப் பேணுகின்றனவா என உறுதி செய்யவும், அவை புற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாமல் செயல்படுகின்றனவா என கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
நன்றி தினசி.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16


சர்வதேச பொறுமை தினம் நவம்பர் 16.

உலகளாவிய ரீதியில் சர்வதேச பொறுமை தினம் இன்று நவம்பர் 16 கொண்டாடப்படுகிறது.

UNESCO ஆனது சர்வதேச பொறுமை தினத்தினை 1995 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இத்தினமானது வன்முறைகளை அழித்தொழித்து பொறுமையினை கடைப்பிடிப்பதை வலியுறுத்தி ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு சமூகங்கள் வாழும் இவ்வுலகில் ஒரே நாளில் பொறுமை குணத்தினை கட்டியெழுப்ப முடியாது. அதனை ஒவ்வொருவரும் இளமையிலிருந்தே தங்களது சிறந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும் .

பொறுமை (Patience)

பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

அறிவியல் பார்வை

பரிணாம உளவியலிலும் அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணையதளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நூல்களில் குறிப்புகள்

திருக்குறள்

திருக்குறளில், பொறையுடைமை என்ற அதிகாரத்தில் பொறுமையின் பெருமைகளை திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.

எடுத்துக்காட்டாக:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள் விளக்கம்:
தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா (Birsa Munda) பிறந்த தினம் நவம்பர் 15, 1875.


பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர்
பிர்சா முண்டா (Birsa Munda) பிறந்த தினம்
நவம்பர் 15, 1875.

பிர்சா முண்டா (Birsa Munda) இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் ஆவர். பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.


#பிர்சா_முண்டா
#Birsa_Munda, photograph in Roy (1912-72).JPG
பிறப்பு
நவம்பர் 15, 1875
உலிகாட், இந்தியா
இறப்பு
9 சூன் 1900
ராஞ்சிசிறை
இவரின் பெயரால் சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சின்த்ரி என்ற இடத்தில் பிர்சா தொழில் நுட்ப மையம் Birsa Institute of Technology Sindri) ஒன்றும், பெருல்லா (Purulia) என்ற இடத்தில் சித்தா கன்கோ பிர்சா பல்கலைக்கழகம் (Sidho Kanho Birsha University) மற்றும் ராஞ்சியில் பிர்சா முன்டா அத்லடிக் வளாகம் (Birsa Munda Athletics Stadium) ஒன்றும் அவரின் நினைவாக அரசு நிறுவியுள்ளது. அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்.

இவர் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த போராளிகளில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள். இவர் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று அறைகூவல் விடுத்துப் போராடினார்.

இளமை

இவர் 1875ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி இராஞ்சி  மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகண் முண்டா ஆவார்.

பழங்குடி விடுதலை

ஆங்கிலேயர்களின் ஆட்சி இவருக்குப் பிடிக்கவில்லை அவர்கள் இந்திய மக்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று வாதிட்டார். மக்களைச் சித்திரவதை செய்து அவர்களின் சொத்துக்களைச் சுரண்டி செல்கிறார்கள் என்று கூறினார். ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். சோட்டா நாக்பூர் பகுதியில் பழங்குடிகளுக்காக அவர் செய்த சாதனை மிகவும் பாராட்டப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பொகாரோ ஸ்டீல் சிட்டி, என்ற இடத்தில் அமைந்துள்ள அவரின் உருவச் சிலை
உரிமைப் பறிப்பு

ஜமீன்தார்கள் பழங்குடிகளின் நிலத்தை வட்டிக்குக் கடன் கொடுக்கிறேன் என்ற போர்வையில் பிடுங்கி வைத்திருந்தார்கள். பழங்காலத்தில் எழுத்துப்பூர்வமான பத்திரப்பதிவுகள் எதுவும் இல்லாததால் ஆங்கிலேயர்களின் சட்டங்கள் அவர்களின் நில உரிமைகளை எளிதில் பிடுங்கிக்கொள்ள உதவியாக இருந்தது. நீதிமன்றங்களில் இவர்களின் வழக்குகள் தோல்வியைத் தழுவின. இதன் காரணமாக நிலவுடைமைதாரர்களிடம் அடிமையாகவும், கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.


உரிமைப் போராட்டம்

அவர் பேசிய வாதங்கள் பழங்குடி மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்தது. அந்த காலகட்டமான 1890ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அபோதுதான் சோட்டா நாக்பூர் பகுதிகளில் மக்களை ஒன்று சேர்த்தார். 1894 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிளேயே நடந்த முதல் போராட்டம் ஆகும். 1990ஆம் ஆண்டு கெரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார்.


பொய்த்துப்போன கனவு

இந்தியா விடுதலை அடைந்தும் இன்றுவரை அவரின் கனவு நிறைவேறவே இல்லை. பழங்குடிமக்கள் இன்னமும் தங்களை உயர்குடி என்று கூறிக்கொள்ளும் மக்களால் மறைமுக அடிமைத்தனத்தில் இருந்து மீண்டும் வரமுடியாத கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தொழிற்சாலை, நீர்ப்பாசனத் திட்டம் என்று அவர்களின் குடியிருப்பு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறது.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 14 நவம்பர், 2019

நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day)


நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு.

அக்டோபரின் 2ம் திங்கட்கிழமை (கனடா)
நவம்பரின் 1வது வியாழன் (லைபீரியா)
நவம்பரின் கடைசி புதன் (நோர்போக் தீவு)
நவம்பரின் 4வது வியாழன் (ஐக்கிய அமெரிக்கா)
இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளின் பன்முக வெளிப்பாடு தொகு
இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து தம் பெற்றோர், உடன்பிறப்புகளோடு சேர்ந்து விழாக் கொண்டாடுகின்றனர்.

இந்நாளில் மக்கள் உண்ணும் விருந்தில் சில உணவுகள் மரபுவழி சமையல் செய்யப்படுகின்றன. வான்கோழியை முழுக் கோழியாக வைத்து அவித்தல், வறட்டியெடுத்தல், பொரித்தல் போன்ற வகைகளில் சமைப்பர். குடல் பகுதியை நீக்கிவிட்டு, அதில் அப்பத்துண்டுகள் மற்றும் மூலிகைகள் கொண்ட கலவையை வைத்திருப்பர். வான்கோழி இறைச்சி தவிர மக்காச் சோளம் அவித்து உண்ணப்படும். மேலும், கிரான்பெரி என்னும் பழங்களைக் கலவையாக்கி உணவோடு அருந்துவர். அமெரிக்க பூசணியிலிருந்து செய்யப்படும் கேக் உண்ணுவதும் வழக்கம்.


அமெரிக்க முதல்வர் வான்கோழியை "மன்னித்தல்": ஜான் எப். கென்னடி (1963). இவ்வழக்கம் 1985இலிருந்து தொடர்கிறது.
நன்றி தெரிவித்தல் நாளில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. முக்கியமான போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். குறிப்பாக அமெரிக்க கால்பந்தாட்டம் என்று அழைக்கப்படும் விளையாட்டு பிரபலமானது.

சமயத்தைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவில் பல இடங்களில் கோவில் வழிபாடுகளில் நன்றி மன்றாட்டுகள் இடம்பெறும். மனித வாழ்விலும் வரலாற்றிலும் இறைவன் மக்களுக்குச் செய்துள்ள, தொடர்ந்து செய்துவருகின்ற நன்மைகளுக்கு மக்கள் நன்றிசெலுத்துவர்.

அரசியல் சார்ந்த பொருள் தொகு
அரசியல் பின்னணியில், இவ்விழா மக்களிடையே நல்லுறவை வளர்க்க பயன்படுவதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முதற்குடிகளும் ஐரோப்பிய குடியேற்றத்தவரும் தமக்குள்ளே மோதலில் ஈடுபடாமல் நல்லுறவைப் பேணுவதன் தேவையும் இவ்விழாவின் ஒரு பொருளாக உள்ளது.

நாட்டு முதல்வர் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கல் தொகு
இவ்விழாவைச் சார்ந்த இன்னொரு வழக்கம் அமெரிக்க முதல்வர் தமது இல்லமாகிய வெள்ளை மாளிகையில் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கு ஆகும். அமெரிக்க குடும்பங்களில் பல்லாயிரக் கணக்கான வான்கோழிகள் இவ்விழாவை முன்னிட்டுக் கொல்லப்படுவதால், அவ்வாறு "கொலைத் தண்டனை" பெறுவதிலிருந்து தப்பித்துப் பிழைக்கின்ற இரண்டு வான்கோழிகள் நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும். இவ்வாறு அவை சாவிலிருந்து தப்புகின்றன.

மேசி நிறுவனத்தின் ஊர்வலக் காட்சி

ஐக்கிய அமெரிக்காவில் கொண்டாடப்படுகின்ற நன்றி தெரிவித்தல் நாள் நிகழ்ச்சியில் நியூயார்க் நகரில் மேசி (Macy's) என்னும் மாபெரும் வர்த்தக நிறுவனம் பெரியதொரு ஊர்வலக் காட்சிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். நன்றி விழா நாளன்று காலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நியூயார்க் வந்து கூடுவார்கள். அப்போது அமெரிக்க கலாச்சாரத்தில் பிரபல்யமான கார்ட்டூன் பாத்திரங்கள் பிரமாண்டமான பலூன் வடிவில் உருவமைக்கப்பட்டு ஊர்வல ஊர்திகள் உதவியோடு பவனியாகச் செல்லும். இசைக் குழுக்கள் இன்னிசை முழங்கும். அப்போது மேலிருந்து சிறு தாள் துண்டுகள் தூவப்படும்.

மேசி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்கிறது. 2012ஆம் ஆண்டு நிகழும் ஊர்வலம் அந்நிறுவனம் நடத்துகின்ற 86ஆம் நிகழ்ச்சி ஆகும்.

இந்த ஊர்வலத்தின் போது சாந்தா கிளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தோன்றி குழந்தைகளோடு நடனம் ஆடி விளையாடுவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.



நன்றியறிதல் நாள் (Thanksgiving Day) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளில்....

நன்றியறிதல் நாள் (Thanksgiving Day) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வியாழனன்று கொண்டாடப்படுகின்ற முக்கியமானதொரு விழா ஆகும்.

வரலாறு

அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1863ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் வியாழக்கிழமை "நன்றியறிதல் நாள்" எனக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்த ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு விழா, புத்தாண்டு விழா ஆகிய கொண்டாட்டங்கள் போன்று இதுவும் நீண்ட விடுமுறை கொண்ட விழா ஆகும்.

அமெரிக்கர்கள் "முதல் நன்றியறிதல் விழா" என்று அழைப்பது ஐரோப்பியர்கள் புதிய கண்டமாகிய அமெரிக்காவுக்கு வந்து அங்கே குடியேறுவதற்குத் துணை செய்த கடவுளுக்கு நன்றிசெலுத்தும் வகையாக அமைந்தது. அந்த முதல் நன்றியறிதல் விழா 3 நாள்கள் நீடித்தது. அதில் 13 ஐரோப்பிய பயணிகளும் (Pilgrims) 90 பூர்வீக அமெரிக்க குடிமக்களும் கலந்துகொண்டு விருந்து உண்டனர்.

அவர்கள் உண்ட உணவில் மீன்கள், சிப்பி வகை மீன்கள், காட்டுக்கோழிகள் (வாத்து, தாறா, அன்னப் பறவை, வான்கோழி), மான் இறைச்சி, காட்டுப் பழங்கள், காய்கறிகள் (பூசணி, பீட்) மற்றும் பார்லி, கோதுமை ஆகியவை அடங்கியிருந்தன. மேலும், அவரை, மக்காச் சோளம், புடலை போன்றவையும் இருந்தன.

இக்காலக் கொண்டாட்டம் தொகு
இன்று அமெரிக்க நன்றியறிதல் நாள் குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடி வந்து, விருந்து உண்ணும் விழாவாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வாழ்கின்றவர்களும் தம் குடும்பத்திற்குச் சென்று, பெற்றோர் பிள்ளைகள், தாத்தா பாட்டி பேரப்பிள்ளைகள் என்று அனைவரும் குடும்பமாகக் கூடுவது சிறப்பு.

விருந்துக்கு முன்னால் கடவுளுக்கு நன்றிசெலுத்தும் மன்றாட்டைச் சொல்லி வேண்டுதல் செய்வார்கள். விருந்தின்போது அல்லது அதன்பின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அந்த ஆண்டின்போது தாங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றிகூறுவார்கள்.

கோவில்களில் வழிபாடு தொகு
அமெரிக்காவில் கிறித்தவக் கோவில்களில் நன்றியறிதல் நாள் விழாக் கொண்டாடும் பொருட்டு சிறப்பு வழிபாடுகள் நிகழ்வதும் உண்டு.


2011ஆம் ஆண்டு நன்றியறிதல் நாள்

2011ஆம் ஆண்டு நன்றியறிதல் நாள் விழா, நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையாகிய 24ஆம் நாள் நடைபெறுகிறது.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

புதன், 13 நவம்பர், 2019

உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14.


உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14.

November 14, 2019 at 7:45 AM

மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய்….முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது. இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.

பிரசாரங்கள்:

ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் இன்றைய நாளில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத்  தொண்டு நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருகின்றன. வானொலி, தொலைக்காட்சி என தொடர்பு சாதனங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.

இன்சுலின் அதிகமாவதால் நீரிழிவு நோய்:

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து.

தடுப்பதில் அதிக கவனம் செலுத்துவோம்:

மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது. மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்றி விகடன்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

இந்தியா குழந்தைகள் தினம் நவம்பர் 14


இந்தியா குழந்தைகள் தினம் நவம்பர் 14

இந்தியாவில் குழந்தைகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.


உலகமெங்கும் குழந்தைகள் தினம் எப்போது, எப்படிக் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இன்று கொண்டாடப்படும் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் போன்ற இந்தியாவின் முக்கியக் கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரப்போகின்றன. இந்த ஆண்டு யுனிசெஃப் முதல் முறையாக 14 வயதான குழந்தை நட்சத்திரம் மில்லி பாபி பிரவுனை அதன் நல்லெண்ண தூதராக நியமித்திருக்கிறது.


இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்தியேகமாகக் கொண்டாடப் படுகின்றது. அப்படி உலக நாடுகளில் எல்லாம் குழந்தைகள் தினம் என்று..? எதற்காக, எப்படிக் கொண்டாடப்படுகிறது, என்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்று சற்று ஆராய்ந்தேன். என் ஆராய்ச்சி முடிவுகள் பின்வருமாறு:

இந்தியா: நவம்பர் 14, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் என்றாலே அனைவரும் நினைவலை ரயிலேறி பள்ளி நாள்களுக்குச் சென்றுவிடுகிறோம். அன்று மட்டும் சீருடை தவிர்த்து கலர் உடை அணியலாம், பள்ளியில் இனிப்பு வழங்கப்படும். நேரு மாமா புகழ் பாடும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும், சில பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர்கள் ஆடிப் பாடி கலைநிகழ்ச்சிகள் நடத்துவர். பெரிதாக வகுப்புகள் நடக்காது, வாழ்த்து ஒலிகளால் அன்றைய தினம் முழுவதும் நிறைந்திருக்கும், நண்பர்களுக்குள் யார் முதலில் வாழ்த்துவது என்ற போட்டி நடக்கும். இப்படிப் பல்வேறு நினைவுகளுடன், அனைவரின் உள்ளே இருக்கும் குழந்தைத் தன்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இன்று `ஹாப்பி சில்ட்ரன்ஸ் டே’ என்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்தியுடன், இந்த நாள் வழக்கமாகக் கடந்துவிடுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள்கூட அந்த நாளைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. காரணம், அவர்கள் வாழ்க்கைக்குள் யூடியூப் வீடியோக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், மொபைல் கேம் இப்படி பலவிஷயங்கள் நிறைந்திருக்கின்றன. சில்ட்ரன்ஸ் டே அளிக்கும் சிறிய சந்தோஷங்களை எல்லாம் அவர்கள் பெரிதாய் ரசிப்பதில்லை.

பல்கேரியா: ஜூன் மாதம் 1-ம் தேதி இங்கு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விழிப்பு உணர்வுக்காகக் குழந்தைகள் தினத்தன்று வாகனங்களில் விளக்குகளைப் பகலிலும் எரியவிட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது இங்கு வழக்கம்.

டொக்லியு தீவுகள்: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, இங்கு குழந்தைகள் வெள்ளை உடை அணிவது வழக்கம். மற்றொரு சிறப்பம்சமாக அன்று முழுவதும் குழந்தைகளுக்குப் பெற்றோர் சேவை செய்து மகிழ்கின்றனர். "அப்பா அதை எடுங்க, அம்மா இதைப் பிடிங்க" என்று பெற்றோரை வேலை வாங்குவது குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

சிலி: பொம்மைகள் வாங்குவதற்கு என்றே ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும்? சிலியில் குழந்தைகள் தினத்தன்று குட்டீஸ் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர். இங்கு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம்.

கனடா: நவம்பர் 20, குழந்தைகள் நலத்தைப் பற்றிய சட்டங்களைப் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்கு உகந்த சட்ட வரைவுகளை அறிமுகம் செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

எகிப்து: நவம்பர் 20, எகிப்தில் இது பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது, தெருக்களில் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு, ஆங்காங்கே நாட்டுப்புற நடனங்கள், காலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஜப்பான்: இதிலும் ஜப்பானியர்கள் வித்தியாசம்தான். ஜப்பானில் மட்டும் இரண்டு குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுகின்றன. மார்ச் 3, பெண் குழந்தைகளுக்காகவும் மே 5, ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகள் தினத்தன்று மக்கள் ஹெய்ன் வகை பொம்மைகளால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் தினத்தன்று மீன் வடிவப் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர்.

மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் ஏப்ரல் 30-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் எல்லாம் ஒரே விளையாட்டு மயமாகவே இருக்கும். மேலும் மெக்ஸிகோவின் சிறப்பு குழந்தைகள் தினத்தன்று மிக அடர்த்தியான வண்ணங்களில் குழந்தைகள் ஆடை அணிவது ஆகும். வசந்த காலத்தை, புது தொடக்கத்தை அனுசரிப்பதற்காக இது செய்யப்படுகிறது.

பராகுவே: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, 'அகோஸ்டா நு' (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 - 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெரு: இங்குக் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது வர்த்தக நிறுவனங்கள். அனைத்துக் கடைகளிலும் நமது ஆடி மாதம்போல சிறப்புச் சலுகைகளும் தள்ளுபடி விலைகளும் இன்று கொடுக்கப்படுகிறது. பெரு நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்று சொல்லலாம்.

இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக இந்தக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. கொண்டாட்டங்கள் என ஒரு தினத்தை தாண்டி, குழந்தைகளைக் கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும் நாம். அற்புதமானவர்கள் குழந்தைகள், அறியா பருவம் எனத் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அனைத்தையும் அறிந்துகொள்ளும் பருவத்தில் இருப்பவர்கள் குழந்தைகள். அதைப் புரிந்துகொள்வதே குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தைத் தாண்டிய நமது கடமை.


குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்களை பார்க்கலாம்.

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.

* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.

* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.




* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

செவ்வாய், 12 நவம்பர், 2019

உலக கருணை தினம் நவம்பர் 13


உலக கருணை தினம் நவம்பர் 13.

கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார். கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார். இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.


நவம்பர் 13-ம் தேதியன்று கருணை நாளாக பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. லூயிஸ் பர்பிட் டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதே ஆகும்.

வயதான நபர் சாலையை கடக்க உதவி செய்தல், குழந்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் இரக்கம் முக்கிய பங்காகும்.

இந்த உலக கருணை தினம் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதே செய்கிறது. நாம் அன்புடன் ஒருவரை அணுக அதே அன்பு நம்க்கும் திரும்பக் கிடைக்கிறது. இதனால் நம் மனம் மகிழ்ச்சியடைகிறது.

உலக மஹான்கள் பலரும் மதங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அன்பையும் கருணையும் முக்கியமாகக் கருதி போதித்தார்கள் .எனவே நாம் சில மனிதாபிமான வேலை செய்ய வேண்டும் என்றும் நாம் வெளிப்படையாக அல்லது மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க உறுதியேற்க வேண்டும். இன்று ஒரு நாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்கள் சிந்திக்க வேண்டும்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 9 நவம்பர், 2019

உலக அறிவியல் தினம் நவம்பர் 10.



உலக அறிவியல் தினம் நவம்பர் 10.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது அறிவியல் தினம் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தலாம். மேலும் அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், நமது அன்றாட வாழவில் அறிவியலின்  முக்கியத்துவம் குறித்தும்  ஒரு பரவலான விவாதத்தை உருவாக்கலாம். 

இந்த ஆண்டில் அறிவியல் தினம் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாக அறிவியல் சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்புகளை  நினைவு கூறும் விதமாக அறிவியல் மையங்கள் மற்றும் அறிவியல் அருங்காட்சியகங்களை நாடு முழுவதும் உருவாக்குவது பற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது. 

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 8 நவம்பர், 2019

சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம், நவம்பர் 9 .


சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம், நவம்பர் 9 .

கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சட்ட சேவைகள் தினம் நவம்பர் 9


சட்ட சேவைகள் தினம் நவம்பர் 9

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1987- ஆம் ஆண்டு பாராளமன்றத்தால்  சட்ட சேவைகள் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த தினமே சட்ட சேவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. .

இதன் மூலம் சமுதாயாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு தகுதியான சட்ட உதவி இலவசமாக  கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது.    இதை உறுதிசெய்யவே மேற்சொன்ன சட்டமானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 

புதன், 6 நவம்பர், 2019

குழந்தைகள் பாதுகாப்பு தினம் நவம்பர் 07.


குழந்தைகள் பாதுகாப்பு தினம் நவம்பர் 07.

குழந்தை பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும்  வன்முறை, சுரண்டல், தீங்குழைத்தல்  மற்றும் புறக்கணிப்பு.  ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல்,மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாக்கப்படுவது குழந்தை பாதுகாப்பு ஆகும்

குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை .  ஜக்கிய  நாடுகளின்  [[குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை குழந்தை உரிமைகள பாதுகாப்பு வழங்குகிறது 54 ஷரத்துகள் உள்ளாடக்கிய இந்த உடன்படிக்கையில்கூறப்பட்டிற்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும் குழந்தைகள் மற்றும் வீட்டில் மற்றும் வெளியே  அவர்கள் தங்களின் உரிமகளை நிலை நாட்டவும், சுதந்திரமாக செயல்படுவும்

குழந்தை பாதுகாப்பு அமைப்புகள்

ஒரு தொகுப்பு, வழக்கமாக அரசு நடத்தும் சேவைகள் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் யார் வயது மற்றும் ஊக்குவிக்க குடும்ப நிலைத்தன்மை. யுனிசெப் வரையறுக்கிறது ஒரு 'குழந்தை பாதுகாப்பு அமைப்பு':
குறிப்பாக சமூக நலம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நீதி - - சட்டங்கள், கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் அனைத்து சமூக துறைகளிலும் தேவை சேவைகளை தொகுப்பு பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் தடுப்பு மற்றும் பதில் ஆதரிக்க. இந்த அமைப்புகள் சமூக பாதுகாப்பு பகுதியாக, அது தாண்டி விரிவுபடுத்தப்பட்டது. தடுப்பு மட்டத்தில், அவர்களது இலக்கு ஆதரவு மற்றும் சமூக விலக்கல் குறைக்க, பிரிவே, வன்முறை மற்றும் சுரண்டல் ஆபத்து குறையும் என்பது குடும்பங்கள் வலுப்படுத்தும் அடங்கும். உள்ளூர் அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக குழுக்கள் ஆகியவற்றால் வழங்கப்படும் சேவைகள், வழக்கமான குறிப்பு முறைமைகள் உட்பட, துறைகளினதும் மட்டங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு செய்வதும், பயனுள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்புகளின் அவசியமான கூறுபாடுகளுடன் அரசாங்க பொறுப்புணர்வுகளிலும் பெரும்பாலும் பொறுப்புகள் பரவப்படுகின்றன. - ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (2008),



குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் தொகு
குழந்தை தொழிலாளர் தொகு
வீட்டின் வறுமை  காரணமாகவும் மற்றும்  பொருளாதார காரணங்களுக்காக, குறிப்பாக ஏழை நாடுகளில் மற்று வளரும் நாடுகளில், குழந்தைகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அவர்கள் தங்களின்  உயிர்வாழ்வதற்காக தங்களின் குடும்ப சூழ்நிலையில் . குழந்தை தொழிலாளர் அடிக்கடி நடக்கும் கடினமான சூழ்நிலைகள், எந்த ஆபத்தான மற்றும் முடக்குகின்றன கல்வி எதிர்கால குடிமக்கள் மற்றும் அதிகரிக்க பாதிப்பு பெரியவர்கள். அது எனக்கு கடினமாக உள்ளது போலவே, வயது மற்றும் பல குழந்தைகள் யார் வேலை. குறைந்தது 150 மில்லியன் குழந்தைகள் வயது 5 ஆண்டுகளுக்கு கீழ் வேலை 2004, ஆனால் இந்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன, ஏனெனில் உள்நாட்டு தொழில் எண்ணி இல்லை.[சான்று தேவை]
குழந்தைகளின் மீதான துன்புறுத்தல் மற்றும் சிசுக்கொலை தொகு
சில நாடுகளில், குழந்தைகள் இருக்க முடியும், சிறையில் பொதுவான குற்றங்கள். சில நாடுகளில், போன்ற ஈரான், சீனா, குற்றவாளிகள் கூட தண்டனை மரண தண்டனை குற்றங்களை போது அவர்கள் குழந்தைகள் இருந்தன (அமெரிக்கா நடைமுறையில் கைவிடப்பட்ட 2005). அதில் சூழல்களில் அங்கு இராணுவ பயன்பாடு குழந்தைகள் செய்யப்படுகிறது, அவர்கள் ஆபத்து இருப்பது போர் கைதிகள். மற்ற குழந்தைகள் கட்டாயம் விபச்சாரம், சுரண்டப்பட்டு பெரியவர்கள் சட்டவிரோத போக்குவரத்து குழந்தைகள் அல்லது அருகிவரும் மூலம் வறுமை மற்றும் பசி. சிசுக்கொலை இன்று தொடர்கிறது அதிக விகிதம் உள்ள பகுதிகளில் மிக அதிக வறுமை மற்றும் அதிக மக்கள் தொகை, போன்ற பகுதிகளில் சீனா மற்றும் இந்தியா. பெண் குழந்தைகளுக்கு பின்னர், மற்றும் இப்போது கூட, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய, ஒரு காரணியாக செக்ஸ்-குறிப்பிட்ட சிசுக்கொலை.

துன்புறுத்தல் தொகு
பெரும்பாலான குழந்தைகள் யார் வந்து கவனத்தை குழந்தை நல அமைப்பு, ஏனெனில் அவ்வாறு செய்ய, பின்வரும் சூழ்நிலைகளில் எந்த, இது பெரும்பாலும் மொத்தமாக சங்கத் முறைகேடு. தவறாக அர்த்தம் அதிகார துஷ்பிரயோகம், உடற்பயிற்சி ஒரு சக்தி ஒரு நோக்கம் நோக்கம் இல்லை. இந்த அடங்கும் புறக்கணிப்பு வேண்டுமென்றே, தெரிந்தே இல்லை உடற்பயிற்சி ஒரு சக்தி நோக்கத்திற்காக அதை நோக்கமாக இருந்தது. ஏன் இந்த முறைகேடு வரையறுக்கப்படுகிறது சாதகமாக பயன்படுத்தி, ஒரு நிலையை நம்பிக்கை கொண்ட முதலீடு செய்யப்பட்டுள்ளது அதிகாரங்கள்

உடல் உபாதை, உடல் தாக்குதல் அல்லது பேட்டரி குழந்தை. அதே நேரத்தில் ஒரு தாக்குதல் சில பாதகமான விளைவு என்று பாதிக்கப்பட்ட ஒப்புக்கொள்ள வில்லை (இடையே உள்ள வேறுபாடு அறுவை சிகிச்சை மற்றும் குத்தல்) பாதிக்கப்பட்ட ஒப்புக்கொள்கிறார் விளைவுகளை பேட்டரி ஆனால் ஒப்பந்தம் மோசடி சில வழியில் (எ. கா., தேவையற்ற அறுவை சிகிச்சை கீழ் தவறான pretences). உடல் உபாதை மேலும் துன்புறுத்தல், ஒரு உடல் இருப்பை நோக்கம் தூண்டும் பயம்.
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தாக்குதல் அல்லது பேட்டரி குழந்தை. பெரும்பாலான உடல் தாக்குதல்கள் ஒரு எதிர்வினை ஒரு நிலைமை தொடர்பான ஒரு குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட. பாலியல் தாக்குதல் பெரும்பாலும் புரிபவர் மனநிறைவு எதிராக எந்த பொருத்தமான இலக்கு. பாலியல் துஷ்பிரயோகம் ஒரினச்சேர்க்கைப் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்கள் (எ. கா படங்கள்) மற்றும் பொருள் வசதி போன்ற மறைவினை மற்றும் இணைய குற்றங்கள்.
புறக்கணிப்பு, தோல்வி உட்பட எடுக்க போதுமான நடவடிக்கைகளை பாதுகாக்க ஒரு குழந்தை இருந்து தீங்கு, மற்றும் மொத்த அலட்சியம் வழங்கும் ஒரு குழந்தையின் அடிப்படை தேவைகளை. தேவைகளை நடவடிக்கைகள் எடுக்கப்படும் பாதுகாக்க மற்றும் வழங்க ஒரு குழந்தை. பாதுகாப்பதிலும் கடமை ஒரு நபர் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் பொறுப்பை குழந்தை தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழந்தை பாதுகாக்க. என்றால் ஒரு குழந்தை உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் பின்னர் அங்கு ஒரு (தவறான) பொறுப்பான நபர் தாக்குதல் மற்றும் ஒரு (அலட்சியமாகவும்) பொறுப்பான நபர் பாதுகாக்க மற்றும் தவறியதற்காக இருந்து தாக்குதல். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அதே இருக்கலாம்.
உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், சந்தித்த போது, குழந்தையின் தேவைகளை எடுத்து தேவையான நடவடிக்கைகளை பாதுகாக்க மற்றும் வழங்க, குழந்தை, குழந்தையின் விருப்பத்திற்கு மற்றும் உணர்வுகளை இருக்க வேண்டும் கருதப்படுகிறது மீது தீர்மானிக்கும் போது,, விநியோக ஏற்பாடு என்று சிறந்த உதவுகிறது குழந்தையின் தேவைகளை. Wilfully வழங்க தவறிய ஏற்ப குழந்தையின் விருப்பத்திற்கு மற்றும் உணர்வுகளை, அதே நேரத்தில் அது அவரது/அவரது சிறந்த நலன்களை உள்ளது உணர்ச்சி துஷ்பிரயோகம் (வேண்டுமென்றே ஏற்படுத்தும் உணர்ச்சி துயரத்தில்) அல்லது negligently உணர்ச்சி புறக்கணிப்பு (அலட்சியமாகவும் ஏற்படுத்தும் உணர்ச்சி துயரத்தில்).
பெற்றோர்களின் பொறுப்பு தொகு
1984 ஆம் கவுன்சில், ஐரோப்பா, உடல் என்று supervises, ஐரோப்பிய மாநாடு, மனித உரிமைகள் செய்ய [1] பரிந்துரை ஆர்(84) 4 ம் தேதி பெற்றோர் பொறுப்புக்கள்]. இந்த வரையறுக்கப்பட்ட பெற்றோர் பொறுப்பு என ஒரு 'செயல்பாடு' கடமைகளை சந்தித்து வேண்டும் மற்றும் அதிகாரங்கள் இருக்க முடியும் என்று வாக்காளர்கள் சந்திக்க அந்த கடமைகளை.பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு தோல்வி மூலம் ஒரு நபர், பெற்றோர் பொறுப்பு அதிகாரங்களை உடற்பயிற்சி நோக்கம், பயன் குழந்தை.

செயல்கள் பொதுவாக அடங்கும் சேவைகள் இலக்காக ஆதரவு at-அபாயம் குடும்பங்கள் அதனால் அவர்கள் முடியும் இருக்க அப்படியே பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க நலன்புரி குழந்தை, விசாரணை கூறப்படும் முறைகேடு மற்றும், தேவைப்பட்டால், அனுமானித்து பெற்றோர் பொறுப்பு மூலம் வளர்ப்பு பராமரிப்பு மற்றும் தத்தெடுப்பு சேவைகள்.

குழந்தை கொடுமைப்படுத்தப்படும் தொகு
சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது பெருநிறுவன உடல்கள் (அல்லது சட்ட பிரமுகர்கள்). பெற்றோர் பொறுப்பை கொடுக்கிறது பெற்றோர்கள் மற்றும் தொழில்கள் என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் சமமான சட்ட நிறுவனங்கள். இதில் பொது உடல்கள் மற்றும் பொது உடல்கள் கட்டுப்படுத்தும் என்று தனியார் உடல்கள். இந்த வர்ணிக்கப்படுகிறது இடையே கூட்டு மாநில மற்றும் குடும்பம்பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

ஒரு நிலையில் நடைபெற்ற ஒரு உடல் நிறுவன இடங்களில் ஒரு நபர் ஒரு நிலையில் நம்பிக்கை. குழந்தை கொடுமைப்படுத்தப்படும் உள்ளது அலட்சியத்தில் அல்லது தவறான உடற்பயிற்சி சக்தியை ஒரு நிலையில் நம்பிக்கை அல்லது வணிக விநியோக பொருட்கள் என்று சிறந்த சேவை குழந்தையின் தேவைகளை பெற்றோர்கள் வழங்க குழந்தை அல்லது பெற்றோர்கள் மூலம் வழங்கும் குழந்தை அந்த பொருட்கள்.

மற்ற தொகு
ஒரு 2014 ஐரோப்பிய ஆணையம் ஆய்வு மீது குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் பட்டியலிடப்பட்ட பின்வரும் பிரிவுகள் குழந்தைகள் தேவைப்படும் உதவி:பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்/சுரண்டல்
குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு புறக்கணிப்பு அல்லது துஷ்பிரயோகம்
குழந்தை கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள்
குறைபாடுகள் குழந்தைகள்
குழந்தைகள் ஒரு நிலைமை இடம்பெயர்வு
ஆதரவற்ற குழந்தைகள் ஒரு நிலைமை இடம்பெயர்வு
குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் பார்த்து/மாற்று பராமரிப்பு
குழந்தைகள் போலீஸ் காவலில் அல்லது தடுப்பு
தெரு குழந்தைகள்
குழந்தைகள் பெற்றோர்கள் சிறையில் அல்லது போலீஸ் காவலில்
குழந்தைகள் நீதிமன்ற விசாரணை
குழந்தைகள் அல்லது ஆபத்து வறுமை
குழந்தைகள் காணாமல் (எ. கா., ஓடு, கடத்தப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போகும்)
ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காவலில் மோதல்களில் உட்பட, பெற்றோர் குழந்தை கடத்தல்
குழந்தைகள் இடது பின்னால் (பெற்றோர்கள் செல்ல மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வேலை)
குழந்தைகள் சேர்ந்த சிறுபான்மை இன குழுக்கள், எ. கா. Roma
குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண் genital mutilation அல்லது கட்டாய திருமணம்
இல்லை யார் குழந்தைகள் கட்டாய கல்வி அல்லது பயிற்சி அல்லது வேலை குழந்தைகள் கீழே சட்ட வயதில் வேலை
குழந்தை கொடுமைப்படுத்துதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது சைபர்புல்லிங்
சர்வதேச ஒப்பந்தங்களால் தொகு
, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) என்பது ஒரு ஐக்கிய நாடுகள் நிறுவனம் கையாள்வதில் தொழிலாளர் பிரச்சினைகள், உருவாக்கப்பட்ட 1919. அதை கவனித்து மேலும் குழந்தை தொழிலாளர் பிரச்சினைகள், குறிப்பாக மரபுகளை 138 மற்றும் 182.

20 நவம்பர் 1959, ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்கப்பட்டது ஒரு பிரகடனம் குழந்தை உரிமைகள் போது Convention on the Rights of the Child.

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நியூயார்க் நகரம் தலைமையிடமாக, என்று வழங்குகிறது நீண்ட கால மனிதாபிமான மற்றும் வளர்ச்சி உதவி, குழந்தைகள் மற்றும் தாய்மார்கள், வளரும் நாடுகளில்.

2000 இல், ஒரு உடன்பாட்டை அடைந்தது மத்தியில் ஒன்று[ambiguous] நாடுகள் பற்றி, இராணுவ பயன்பாடு குழந்தைகள்.

திறன் இந்த திட்டங்கள் போட்டியிட்ட தெரிகிறது மட்டுமே சில.[vague]

வரலாறு தொகு
மாகாண அல்லது மாநில அரசாங்கங்கள்' குழந்தை பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்துகிறார் அரசு துறை அல்லது நிறுவனம் சேவைகளை வழங்க பகுதியில் தலையிட குடும்பங்கள் அங்கு முறைகேடு அல்லது மற்ற பிரச்சினைகள் சந்தேகிக்கப்படுகிறது. நிறுவனம் நிர்வகிக்கும் இந்த சேவைகளை பல்வேறு பெயர்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, எ. கா., துறை குழந்தைகள் சேவைகள், குழந்தைகள் உதவி, துறை குழந்தை மற்றும் குடும்ப சேவைகள். அங்கு சில நிலைத்தன்மையும் இயற்கை சட்டங்கள் என்றாலும், பயன்பாடு சட்டங்கள் மாறுபடும் நாடு முழுவதும்.

, ஐக்கிய நாடுகள் உரையாற்றினார் முறைகேடு என மனித உரிமைகள் பிரச்சினை சேர்த்து, ஒரு பிரிவில் குறிப்பாக குழந்தைகள், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்:

Recognizing that the child, for the full and harmonious development of his or her personality, should grow up in a family environment, in an atmosphere of happiness, love and understanding… should be afforded the right to survival; to develop to the fullest; to protection from harmful influences, abuse and exploitation; and to participate fully in family, cultural and social life.

குழந்தை பாதுகாப்பு மூலம் நாடு தொகு
ஐக்கிய நாடுகள் பெரும்பாலான நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது சட்டங்கள் பாதுகாக்க மற்றும் தடுக்க குழந்தைகள் மற்றும் இளம் நபர்கள் இருந்து சில அச்சுறுத்தல்கள் அல்லது பாதித்து.

வரலாறு தொகு
1908, குழந்தைகள் சட்டம் 1908 அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளம் நபர் சட்டம் 1920 ஒரு மூட்டை சட்டங்கள் பாதுகாக்க இளம் நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆரம்ப 20 ஆம் நூற்றாண்டில். , குழந்தைகள் மற்றும் இளம் நபர்கள் சட்டம் 1933 தொகுக்கப்பட்டு சட்டங்கள் ஒரு சட்டம்.

குழந்தைகள் சட்டம் 1933 வரையறுக்கப்பட்ட குழந்தை புறக்கணிப்பு மற்றும் முறைகேடு என இப்போது தற்போது புரிந்துபிழை காட்டு: The opening tag is malformed or has a bad name சூழலில் நலன்புரி மற்றும் நல்வாழ்வை. நல (சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி), 'கட்டணம்', உணவு செய்கிறது என்று ஒரு நபர் 'சரி', ஆரோக்கியமான.

லூசி Delap என்று குறிப்பிடுகிறார் 'முன் காலத்தில் 1948 பார்த்தேன் பெரும்பாலான வேலை பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மேற்கொள்ளப்பட்ட 'தார்மீக' அல்லது குடும்ப நல தொழிலாளர்கள். இந்த பெரும்பாலும் தன்னார்வ தொழிலாளர்கள் சார்ந்த உள்ள குழுக்கள் போன்ற சர்ச் ஆப் இங்கிலாந்து நாட்டின் தார்மீக நல சங்கங்கள். தங்கள் எல்லைக்கு கூட சேர்க்கப்பட்டுள்ளது ஆதரவு 'நண்பர்களே பெண்கள்', திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், கோட்டா தடுக்க விபச்சாரம், மற்றும் உதவி சிகிச்சை மற்றும் பரவுவதை தடுக்க பால்வினை நோய். சிறுவர்கள் பரவலாக அறியப்பட்ட பாலியல் பாதிக்கப்படக்கூடிய, மற்றும் அரிதாகவே இடம்பெற்றது விவாதங்கள் குழந்தை தாக்குதல் மற்றும் விபச்சாரம்.'பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

நன்கு இருப்பது தனிப்பட்ட ஊக்குவிப்பு மற்றும் ஆசையும், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் உணர்ச்சி மனநிறைவு செலுத்துகிறது என்று செயல்முறை. குற்றம் குழந்தை கொடுமை கீழ் பிரிவு 1, குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1989 வழங்குகிறது பாதுகாப்பு, சுகாதார மற்றும் பாதுகாப்பு. கற்றல், மற்ற அத்தியாவசிய மூலப்பொருள் நோக்கத்தில் நல்வாழ்வை, மூடப்பட்ட பிரிவு 44.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் தடுப்பு புறக்கணிப்பு மற்றும் முறைகேடு பின்வருமாறு இந்த மாதிரி முழுவதும். இந்த அணுகுமுறை வழிவகுத்தது என்று கொள்கை கட்டாயம் ஒழித்துக்கட்ட குழந்தை வறுமை ஒரு அமைப்பு பொது சுகாதார தொற்று நோய். ஒரு திட்டம் சர்வதேச பதவி உயர்வு மூலம், உலக சுகாதார அமைப்பு, சுகாதார அனைத்து நிரலாக்க இலக்கு மற்றும் தேசிய அளவில் என சுகாதார அனைத்து குழந்தைகள். பொது சுகாதார கட்டாயமாகும் நல்வாழ்வை சரியாக பிரதிபலிப்பதாக சமூக-பொருளாதார தத்துவம் திறன்களை என நல பொருளியல்.

அதே நேரத்தில், குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933 நிறுவப்பட்டது அடித்தளங்களை அவர்கள் பின்னர் தொகுக்கப்பட்டு, மாநில வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி மூலம் குழந்தைகள் சட்டம் 1989 மற்றும் பின்வரும் பகுதிக்கும் சட்டம். சர்வதேச அளவில், கொள்கைகள் இருந்தன பொதிந்துள்ள UN Convention on the Rights of the Child.

முக்கியமான மாற்றங்கள் 1933:

குறைந்தபட்ச வயது மரணதண்டனை எழுப்பப்பட்டது 16 முதல் 18 ஆண்டுகள்.
, குற்றவியல் வயதை எழுப்பப்பட்டது இருந்து 7 முதல் 8 ஆண்டுகள்.
அறிமுகம் ஒரு குறைந்தபட்ச வேலை வயது , 14 ஆண்டுகள்.
குறைந்தபட்ச வயது, புகை மற்றும் வாங்க புகையிலை பொருட்கள் இருந்தது அமைக்க 16 ஆண்டுகள்.
குறைந்தபட்ச வயது விபச்சாரம் மற்றும் நுழைய ஒரு விபச்சார அமைக்க 16 ஆண்டுகள்.
குறைந்தபட்ச வயது கொடுக்க மது மீது ஒரு குழந்தை ஒரு தனியார் வளாகத்தில் அமைக்க 5 ஆண்டுகள் ஆகும்.
தற்போதைய சட்டங்களிலும் தொகு
Protection from Legislation Regulation
Alcohol Licensing Act 2003
Children and Young Persons Act 1933

It is illegal to sell, serve or offer alcoholic drinks to anyone under the age of 18.
It is illegal to sell or offer liqueur confectionery to anyone under the age of 16.
It is illegal to serve beer, wine or cider on licensed premises to anyone under the age of 16; 16- and 17-year-olds may be served if an adult orders with a meal (not needed in Scotland).
It is illegal to give alcohol to children under the age of 5 years on private premises.
Tobacco The Children and Young Persons (Sale of Tobacco etc.) Order 2007
Children and Young Persons Act 1933
(Tobacco and Primary Medical Services (Scotland) Act 2010)
Tobacco Retailers Act (Northern Ireland) 2014

It is illegal to sell tobacco products to anyone under the age of 18. (previously 16 before 2007)
It is illegal to permit anyone under the age of 18 to smoke in Scotland and Northern Ireland.
It is illegal to permit anyone under the age of 16 to smoke in England and Wales.
Gambling Gambling Act 2005
National Lottery Regulations 1994

It is illegal to permit anyone under the age of 18 to enter a casino or licensed gambling premises, and to permit them to gamble.
It is illegal to sell scratch cards or lottery tickets to anyone under the age of 16.
Child employment Children and Young Persons Act 1933 (England)
Management of Health and Safety at Work Regulations 1999

To start part-time work one must be at least 13 years of age.
Children can work a maximum 40 hours per week, if they have reached the minimum school leaving age.
To work full-time one must be at least 16 years of age.
Some hazardous or high risk work requires a person to be 18 or over, (working as a police officer or a firefighter for example) and in some cases 21 and over (working as a driving instructor or large HGV driver for example)
Fireworks Pyrotechnic Articles (Safety) Regulations 2010
Fireworks Regulations 2004

It is illegal to sell or possess adult fireworks (category 2 and 3) under the age of 18.
It is illegal to sell or possess fireworks (category 1) under the age of 16.
It is illegal to sell or possess "Christmas crackers" under the age of 12.
Video games and films Video Recordings Acts of 1984 and 2010
It is illegal to sell, rent or permit to see a movie to anyone under the approved age restriction.
Films, as of 2015 the age ratings currently include,

U (Universal, recommended for all ages)
PG (Parental Guidance, recommended for all ages, although some content may be unsuitable for younger children, typically under the age of 8)
12 and over (only suitable for persons 12 and over)
12A (only suitable for persons 12 and over, although a person under 12 may view a 12A in a cinema if accompanied by a person 18 or over. This is a special rating only used in cinema's and does not include films bought from a shop for example)
15 (only suitable for persons aged 15 or over)
18 (only suitable for persons aged 18 or over)
18R (only suitable for person aged 18 over. This is a special rating used only for the sale and viewing of pornography in licensed sex shops).
It is illegal to sell or rent films to anyone under the approved age restriction.
(U and PG ratings are unrestricted)

Video games, as of 2015 the age ratings currently include,

PEGI 3 (only suitable for persons aged 3 or over)
PEGI 7 (only suitable for persons aged 7 or over)
PEGI 12 (only suitable for persons aged 12 or over)
PEGI 16 (only suitable for persons aged 16 or over)
PEGI 18 (only suitable for persons aged 18 or over)
It is illegal to sell or rent video games to anyone under the approved age restriction.
(PEGI 3 and PEGI 7 are unrestricted)

Aerosol spray paint Anti-social Behaviour Act 2003 It is illegal to sell aerosol spray paint to anyone under the age of 16.
Cruelty to persons under sixteen Children and Young Persons Act 1933 It is illegal to anyone 16 or over who has responsibility for any child or young person under that age to: wilfully assaults, ill-treats, neglects, abandons, or exposes him, or causes or procures him to be assaulted, ill-treated, neglected, abandoned, or exposed, in a manner likely to cause him unnecessary suffering or injury to health (including injury to or loss of sight, or hearing, or limb, or organ of the body, and any mental derangement).
Causing or allowing persons under sixteen to be used for begging Children and Young Persons Act 1933 It is illegal to let anyone beg in public places under the age of 16.
Sexual abuse Sexual Offences Act 2003
Sexual Offences (Scotland) Act 2009

The age of sexual consent is 16 in the whole of the UK, England, Scotland, Wales and Northern Ireland. This also includes all Crown Dependencies and Overseas Territory's. However, it is illegal for someone in a position of trust to have sex with anyone under the age of 18. A person in a position or trust includes a person such as a teacher, doctor, etc. It is illegal to possess indecent or pornographic still/moving images of a person under 18 (previously under 16 before the sexual offences act 2003 raised the age to 18)
குழந்தை நல தொகு
சட்டங்களை அலட்சியம் மற்றும் ஒப்பந்த தொகு
இருந்து பார்க்க முடியும் என மேலே விதிகள், இது அனைத்து கொள்கைகளை பின்பற்ற குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933, குழந்தை பாதுகாப்பு கவலை குழந்தையின் வெளிப்பாடு, மற்றும் நுகர்வு, உள்ளடக்கங்களில் அபாயகரமான பொருட்கள் அனைத்து விளக்கம்.

சட்டத்தின் தொடர்ந்து Donoghue வி ஸ்டீவன்சன் [1932] UKHL 100 பிரதிபலிக்கும் புதிய சட்டம் அலட்சியம் மற்றும் இடிப்பு privily தடையாக உள்ள ஒப்பந்த சட்டம். புதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்று தயாரிப்பு உற்பத்தியாளர் இருக்கலாம் பல கட்சிகள் நீக்கப்பட்டது இருந்து இறுதி தயாரிப்பு நுகர்வோர் மற்றும் தயாரிப்பு கொண்டிருக்கலாம் அபாயத்திற்கு ஆனால் ஐ. நா-examinable உள்ளடக்கம். இது இருக்கலாம் ஒன்று மூலம் மூலப்பொருள் அல்லது பேக்கேஜிங். உணவு சகிப்புத்தன்மை ஒரு எளிய உதாரணம். வாங்குபவர் இருக்கும் தெரியாமல் நிகழும் தன்மை, ஒவ்வாமை உள்ளடக்கத்தை வரை தெளிவாக அறிவுரை மூலம் தயாரிப்பாளர்.

வாங்குபவர், அல்லது மேலும் பொதுவாக 'procurer' (நபர் யார் பயின்று), தயாரிப்பு இருக்கலாம், இறுதி நுகர்வோர். ஒரு பெற்றோர் கொள்முதல் ஒரு குழந்தை யார், திறன், மிகவும் பாதிக்கப்படும் நுகர்வோர். பிரிவு 1(1) குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933 செய்கிறது அது ஒரு கிரிமினல் குற்றம் குழந்தை கொடுமை பொறுப்பான நபர் ஒரு குழந்தை அம்பலப்படுத்த அவனை/அவளை "ஒரு முறையில் ஏற்படும் வாய்ப்பு அவரை தேவையற்ற துன்பம் அல்லது காயம் சுகாதார" (முக்கியத்துவம் கொடுக்கப்படும்). அணுகுமுறை வேறு இல்லை, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, ஆனால் நுகர்வோர் விட ஊழியர்.

அது "முறையில்" நடிப்பு என்று முக்கியம்: இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பாக பிறகு ஒரு பொருத்தமான இடர் மதிப்பீடு சந்திக்க, கடமை பாதுகாப்பு சட்டம் அலட்சியம் நிறுவப்பட்டது மூலம் Donoghue. பொறுப்பான நபர் ஒரு குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும், குழந்தையின் உணவு ஒவ்வாமை மற்றும் சரிபார்க்க எந்த தயாரிப்பு உள்ளடக்கம் சாத்தியமான உணவு சகிப்புத்தன்மை அனுமதிக்கும் முன் குழந்தை நுகர்வு தயாரிப்பு.

பாதுகாப்பதிலும் நலன் குழந்தை தொகு
குழந்தை பாதுகாப்பதிலும் பின்வருமாறு இருந்து நேரடியாக இந்த கொள்கைகளை. பாதுகாப்பதிலும் அர்த்தம் எடுத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை குழந்தையின் பாதுகாப்பான நுகர்வு எந்த தயாரிப்பு, படிக்கட்டு கதவுகள், seatbelts, பாதுகாப்பு காலணி, கண்ணாடிகள், அடிப்படை சுகாதாரம், போன்றவை. பட்டியலில் இருவரும் முடிவற்ற மற்றும், பெரும்பாலான, பொதுவான, வெளிப்படையான உணர்வு. தோல்வி பொறுப்பு நபர் ஒரு குற்றமும் குழந்தை கொடுமை அடிப்படையில் தவறிய குழந்தை பாதுகாக்க சூழ்நிலையில் சீரான ஒதுக்கீடு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு .பிழை காட்டு: The opening tag is malformed or has a bad nameபிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

ஒரு பெற்றோர், நபர், பெற்றோர் பொறுப்பு ஒரு குழந்தை, ஒரு எக்ஸ்பிரஸ் பொறுப்பு, எவர் பொறுப்பு நேரத்தில் குழந்தை (எஸ்.17 சட்டம்). வெறும் வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, சக்திகள் பெற்றோர்கள் இருக்க முடியும், பேராண்மை ஆனால் கடமைகளை. பெற்றோர்கள் வேண்டும் ஏற்பாடுகளை செய்ய பொருத்தமான மற்றும் ஒழுங்காக தகவலறிந்த மற்றவர்கள் பொறுப்பு வேண்டும், தங்கள் குழந்தைகள் (பார்க்க மேலும் எஸ்.2(9)-(11) குழந்தைகள் சட்டம் 1989).

முறையான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம் தொகு
தயாரிப்பு பாதுகாப்பாக இருக்க மின் மூலம் ஒரு குழந்தை என்று அர்த்தம் பொறுப்பான நபர் வேண்டும் முழுமையாக புரிந்து கொள்ள தயாரிப்பு பாதுகாப்பான பயன்படுத்த அதன் நோக்கம். மிஸ்-விற்பனை ஒப்பந்த சட்டம், கருத்து, தயாரிப்பு இல்லை ஏதோ அது இல்லை அல்லது விற்பனை பொருட்கள் இல்லை என்று அந்த முழுமையாக புரிந்து கொள்ள அவர்கள் என்ன செய்து அபாயத்திற்கு குழந்தை என இறுதி நுகர்வோர். சுகாதார மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளடக்கியது சில வடிவம் உடல் தொடர்பு எந்த வழக்கில் இல்லாததால், முறையான அனுமதியின்றி ஒரு திறன் பேட்டரி, அல்லது கூட தாக்குதல், நபர். இந்த procurer வைக்கப்படும் ஒரு நிலையை மதிப்பீடு செய்ய எந்த சாத்தியமான ஆபத்து குழந்தை நம்பகமான தயாரிப்பு பயன்படுத்த. (பார்க்க 1.19 குறிப்பு கையேடு ஒப்புதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை (DOH 2009)).

நலன்புரி, இடர் மதிப்பீடு மற்றும் கால்குலஸ் அலட்சியம் தொகு
வெறும் அனைத்து வாழ்க்கை, வாய்ப்பு நன்மைகள் ஒரு கொள்முதல் தயாரிப்பு கொண்டு வர சாத்தியம் அல்லாத நன்மை குணங்கள். கொள்முதல் ஒரு கவனமாக நடவடிக்கை முயற்சிக்கும் அடைய பணம் சிறந்த மதிப்பு. தயாரிப்பு சலுகைகள் இருக்க வேண்டும் திருப்திகரமாக வழங்கப்படும் என குறிப்பிட்ட செயல்திறன் உள்ள ஒப்பந்த சட்டம். வெறும் உணவு சகிப்புத்தன்மை மற்றும் ஒப்புதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை, procurer செய்யப்பட வேண்டும் தெரியும் எந்த சாத்தியமான ஆபத்துகள் தங்கள் சூழ்நிலைகளில் ஒரு தயாரிப்பு செய்கிறது என்று நம்பத்தகுந்த.

ஒரு சமநிலை இருக்க வேண்டும் தாக்கி இடையே கடமைகளை தயாரிப்பாளர் மற்றும் கடமைகளை procurer குழந்தையின் பாதுகாப்பான தயாரிப்பு நுகர்வு. இந்த கால்குலஸ் அலட்சியம் ஒரு சட்ட அணுகுமுறை, ஆவி கொள்முதல் திறன், என்று முயற்சிகள் வேலைநிறுத்தம் என்று சமநிலை பொருளாதார அடிப்படையில். இந்த மிக எளிதாக புரிந்து அடிப்படையில் காப்பீட்டு பொறுப்பு. வேண்டும் ஒரு கார் டிரைவர் ஒரு கடமை பாதுகாப்பு நோக்கி வரை சைக்கிள் இரவில் அல்லது வேண்டும், சைக்கிள் ஒட்ட வீரன், ஒரு பாதுகாப்பு கடமையை ஒழுங்காக ஒளிர அவரது சைக்கிள் இரவில்? செலவுகள் சைக்கிள் வெளிச்சம் கணிசமாக செலவு குறைவாக ஓட்டுநர் ஒரு கடமை பாதுகாப்பு unlit சைக்கிள் ஒட்டவீரன்.

ஊக்குவித்து நலன் குழந்தை மற்றும் கனடிய மதிப்பீடு தொகு
ஒரு பெற்றோர் வேண்டும் மேலும் கொள்முதல் (பெற) தேவையான அனைத்து பொருட்கள், சூழலில், விடுதி, பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் குழந்தையின் பாதுகாப்பான நுகர்வு. அவ்வாறு செய்ய தவறினால், மீண்டும், ஒரு குற்றமும் குழந்தை கொடுமை கீழ் எஸ்.1(2) சட்டத்தின் அடிப்படையில் உடல் புறக்கணிப்பு மற்றும் தவறிய தடுக்க தீங்கு என கோளாறு சுகாதார மற்றும் வளர்ச்சி ஒன்றாக வேலை பாதுகாக்க குழந்தைகள் (பார்க்க பகுதி 2 பி, 24, தண்டனை வழிகாட்டல், நீண்டு வளையும் கொள்கைகளை: நீண்டு வளையும் கொள்கைகளை: தாக்குதல்கள் குழந்தைகள் மீது தாக்குதல்கள் குழந்தைகள் மற்றும் கொடுமை ஒரு குழந்தை; மற்றும் அறிமுகம், வேலை பாதுகாக்க ஒன்றாக குழந்தைகள் (HMG 2015) அரசு சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல்).

கொள்முதல் செயல்முறை ஒருங்கிணைந்த ஏற்பாடு என்று ஒரு குழந்தைகள் மற்றும் குடும்ப மதிப்பீடு, கனடிய மதிப்பீடு, ஒருங்கிணைந்த ஏற்பாடு. விளைவு ஒரு கனேடிய செயல் திட்டத்தை பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க, குழந்தை நல குறிப்பிட்ட விளைவுகளை சேவைகள் என்று சிறந்த சேவை குழந்தையின் தேவைகளை கீழ் வழங்க வேண்டிய விதிமுறைகள் சரியான ஒப்புதல் (பார்க்க 1.35 ஒன்றாக வேலை).

குடும்ப நீதி அமைப்பு, கனடிய மதிப்பீடு நடத்தப்படும் குழந்தைகள் மற்றும் குடும்ப நீதிமன்றம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு சேவை (CAFCASS) பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட குடும்ப நீதிமன்ற நடவடிக்கைகள். இளைஞர் நீதி அமைப்பு மற்றும் சிறப்பு கல்வி தேவைகளை, கனடிய மதிப்பீடு நடத்தப்படும் உள்ளூர் கவுன்சில் பெற்றோர் பொறுப்பு அலகுகள் பின்வரும் அட்டவணை 2 சிறப்பு கல்வி தேவைகளை ஒழுங்குவிதிகள் (தொகுக்கப்பட்டு,) 2001.

சிறந்த குழந்தை நலன்களை தொகு
முடிவெடுக்கும் தொகு
செய்து முடிவுகளை அனைத்து தேவையான பொருட்கள்:environments, விடுதி, பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் வழங்கப்படும் குழந்தையின் பாதுகாப்பான நுகர்வு இருக்க வேண்டும், சிறந்த குழந்தை நலன்களை. ஒரு குழந்தை ஒரு நபர், இல்லை, ஒரு பொருள் கவலை யார் வெறுமனே திறன் இல்லை ஒப்புதல் கொடுக்க அவரது சொந்த சார்பாக வரை Gillick தகுதிவாய்ந்த அவ்வாறு செய்ய. அவன்/அவள் வேண்டும் இன்னும் ஈடுபட்டு முடிவெடுக்கும் செயல்முறைகள் என்று தயாரிப்புகள் சிறந்த பணியாற்ற அவரது/அவரது தேவைகளை ஏற்ப சிறந்த நலன்களை உறுதியை எஸ்.4 மன திறன் சட்டம் 2005. தோல்வி பொறுப்பான நபர், அதனால் ஒரு குற்றமும் அடிப்படையில் உணர்ச்சி புறக்கணிப்பு (பார்க்க பகுதி 2 பி, 24, தண்டனை வழிகாட்டல், நீண்டு வளையும் கொள்கைகளை: நீண்டு வளையும் கொள்கைகளை: தாக்குதல்கள் குழந்தைகள் மீது தாக்குதல்கள் குழந்தைகள் மற்றும் கொடுமை ஒரு குழந்தை; மற்றும் அறிமுகம், வேலை பாதுகாக்க ஒன்றாக குழந்தைகள் (HMG 2015) அரசு சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல்).

நலன்புரி பட்டியல் தொகு
வேலை பாதுகாக்க ஒன்றாக குழந்தைகள் பரவியுள்ளது மன திறன் பெற்றோர் திறன் கொண்ட ஒரு நபர் பெற்றோர் பொறுப்பு மற்றும் சிறந்த நலன்களை கருத்தில் கீழ் எஸ்.1(3)(ஏ)-(ஊ), என்று அழைக்கப்படும், [நல பட்டியல் குடும்ப சட்டம் http://www.legislation.gov.uk/ukpga/1989/41/section/1 குழந்தைகள் சட்டம் 1989]. இந்த இங்கிலாந்து செயல்படுத்த கட்டுரை 3 UN Convention on the Rights of the Child சிறந்த குழந்தை நலன்களை.

எஸ்.1(3)(அ) வாழ்த்துக்கள் மற்றும் உணர்வுகளை குழந்தை ஒளி அவரது வயது மற்றும் அனுபவம்; குழந்தையின் ஈடுபாடு முடிவெடுக்கும் செயல்முறை (பார்க்க மேலும் எஸ்.17(4A) மற்றும் எஸ்.47(4A) குழந்தைகள் சட்டம் 1989).

எஸ்.1(3)(b) குழந்தையின் உடல், உணர்ச்சி மற்றும் கல்வி தேவைகளை; உடல் மற்றும் உணர்ச்சி புறக்கணிப்பு தடுத்தது மற்றும் பெற ஒரு முறையான கல்வி (எஸ்.36 குழந்தைகள் சட்டம் 1989) ஏற்ப அவரது/அவரது விசேட திறமைகளை, திறன்கள் மற்றும் எந்த சிறப்பு தேவைகளை அவர் இருக்கலாம் (எஸ்.7 கல்வி சட்டம் 1996).

எஸ்.1(3)(சி) வாய்ப்பு விளைவு சூழ்நிலைகள் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது அம்மதிப்பீட்டாய்வுகளின், குழந்தை போன்ற பொருட்கள் சூழலில், விடுதி, பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் வழங்கப்படும் அவரை/அவளை.

எஸ்.1(3)(டி) , வயது, பாலினம், பின்னணி, மற்றும் பிற தொடர்புடைய பண்புகள் குழந்தை குறிப்பிடுகிறது குழந்தையின் தற்போதைய நிலையில், இது ஒதுக்கீடு தேவை உரையாற்ற.

எஸ்.1(3)(e) தீங்கு குழந்தை அடைந்துவிட்டார், அல்லது ஆபத்து உள்ளது துன்பம்; குறிப்பிடுகிறது தீங்கு, தவறான சிகிச்சை அல்லது கோளாறு உள்ளது சுகாதார மற்றும் வளர்ச்சி குழந்தை அடைந்துவிட்டார் அல்லது ஆபத்துகள் அவரது/அவரது எந்த சூழ்நிலையில் அவர் ஆபத்து பாதிக்கப்பட்ட தீங்கு. வெறும் வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, இந்த அபாயங்கள் உள்ளன தற்போதைய பாதுகாப்பு சூழல்.

எஸ்.1(3)(ஊ) திறனை பெற்றோர்கள், அல்லது வேறு யாராவது கருதப்படுகிறது சம்பந்தப்பட்ட, கூட்டம், குழந்தையின் தேவைகளை; திறன் உள்ளது, மற்றும் பொறுப்பு பெற்றோர்கள் வாங்குவது தேவையான பொருட்கள் சூழலில், விடுதி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஊக்குவிக்க, குழந்தை நல இருக்க பாதுகாப்பாக வழங்கப்படும் அவனை/அவளை பாதுகாப்பதில் அவரது/அவரது நலம்.

முடிவெடுக்கும் மற்றும் சட்ட இயலாமை தொகு
அங்கு இருவரும் ஒரு வணிக மற்றும் சமூக கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அனைத்து வாய்ப்பு பாதுகாப்பாக மற்றும் திருப்திகரமாக சாப்பிடும் பிரசாதம் தயாரிப்பாளர்கள். சில, இல்லை இருக்கலாம், திறன் திறன் இருக்கும் கொடுத்து முறையான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம் என்று தயாரிப்புகள் சிறந்த அவர்களின் தேவைகளை சேவை செய்ய பயன்படுத்த அந்த பொருட்கள் பாதுகாப்பாக. வழக்கில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் வைக்க வேண்டும், தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான. இந்த உள்ளது என்று சட்ட இயலாமை.

இயலாமை இடையில் வித்தியாசம் உள்ளது திறன் மற்றும் திறன். வழக்கில் பெற்றோர்கள் பெற்றோர் திறன் ஒன்றாக வேலை மற்றும் பெற்றோர் திறனை எஸ்.1(3)(f) குழந்தைகள் சட்டம் 1989. இயலாமை என வரையறுக்கப்படுகிறது ஒரு மன அல்லது உடல் கோளாறு மற்றும் பாதகமான விளைவு சாதாரண நாள் முதல் நாள் நடவடிக்கைகள். ஒரு நபர் பயன்பாடு இல்லாமல் தங்கள் கால்கள் இல்லை, உடல் திறன் நடக்க வேண்டும். அவர்கள் ஒன்றை நடத்தி சாதாரண நாள் முதல் நாள் நடவடிக்கை, சொல்ல, ஷாப்பிங் இல்லாமல் சில சீர்படுத்துவத்ற்கான நடவடிக்கை போன்ற ஒரு இயக்கம் ஸ்கூட்டர் (பார்க்க எஸ்.6 சமத்துவம் சட்டம் 2010பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name மற்றும் வழிகாட்டல் விஷயங்களில் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் மதிப்பிடும் போது இயலாமை).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

மன திறன் செய்ய திறன் உள்ளது முடிவுகளை ஒரு சிறந்த நலன்களை உறுதியை ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இருக்கும் என மன கொடுக்கும் திறன் முறையான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம். தீர்மானிக்கிறது மன திறன் தேவைப்படுகிறது தகவல் இது முடிவு செய்யப்படும் பாதுகாக்க நபர் நல. ஒரு இல்லாததால், மன திறன் செயல்முறை தகவல் மற்றும் முடிவுகளை எடுக்க ஒரு சட்ட இயலாமை நபர் விட்டு, incapable அறிவுரைகள் ஒரு வழக்குரைஞர் (எஸ்.3 மன திறன் சட்டம் 2006,பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name 26 விளக்கக் குறிப்புகள், மன திறன் சட்டம் (2005);பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name 1.6 குடும்ப சட்டம் நெறிமுறை (Law Society 2010)).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

உடல், தார்மீக மற்றும் உணர்ச்சி சுகாதார, மன துறைகளின் முடிவு செய்யும் தொகு
உடல் மற்றும் தார்மீக சுகாதார பார்க்கவும் துறைகளின் மனதில் பயன்படுத்தப்படும் முடிவுகளை எடுக்கும். உடல் ஆரோக்கியம், மன திறன் புரிந்து கொள்ள விளைவுகள் விவகாரம் மற்றும் எரிசக்தி இருவரும் சுய மற்றும் மற்றவர்கள். என்று, புரிந்து கொள்ள எப்படி ஒரு நபர் இருக்கலாம் உடல் பாதிக்கப்படவில்லை என்று அழைக்கப்படும் காரணகாரிய சட்டம் அலட்சியம். தார்மீக சுகாதார மன திறன் அங்கீகரிக்க நபர்கள் மற்றும் சுற்றுச்சூழல் இருக்கலாம் என்று சேதமடைந்த மூலம் சட்டங்கள் மற்றும் விட்டுவிடுதல் சட்டம் அலட்சியம், அண்டை மற்றும் அண்டை வீட்டாருடன்.

பாகம் 1, குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name தலைமையில் "வதை தடுப்பு குழந்தைகள் மற்றும் வெளிப்பாடு உடல் மற்றும் தார்மீக ஆபத்து". குற்றம் குழந்தை கொடுமை கீழ் எஸ்.1(1) அடங்கும் "...வெளிப்பாடு ஒரு முறையில் ஏற்படும் வாய்ப்பு ஒரு தேவையற்ற காயம் சுகாதார...". மீண்டும், முறையில் வெளிப்பாடு ஆபத்துக்குள் குழந்தையின் உடல் மற்றும் தார்மீக என சுகாதார துறைகளின் மனதில். அது வேறொன்றுமில்லை அமைப்பை ஒரு மோசமான உதாரணமாக ஒன்று நடத்தை மற்றவர்களை நோக்கி (தார்மீக சுகாதாரம்) அல்லது கவனக்குறைவால் கொண்டு, ஆபத்தான பொருட்கள், எ. கா. வேகமாக ஒரு மோட்டார் கார்.

உணர்ச்சி சுகாதார முதலாவதாக அறிவுசார் ஆரோக்கியம், திறன் காரணம் அடிப்படையில் புரிந்துகொள்ளல் உடல் மற்றும் தார்மீக சுகாதார முடிவுகளை எடுக்கும் போது இல்லை என தீங்கு ஒரு அண்டை அல்லது அக்கம். இது இரண்டாவதாக, திறன்களில் ஈடுபட சமூக உறவுகள், தனிப்பட்ட அல்லது வணிக அடிப்படையில் கீழ், முறையான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம் என்று பின்வரும் பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும். மூன்றாவதாக, அது வாய்ப்பு திறனை விண்ணப்பிக்கும் அந்த திறன்களில் எடுத்து வாய்ப்புகளை ஏற்படுத்தும் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை மற்றும் பின்னர் செய்ய நம்பத்தகுந்த.

குழந்தை வளர்ச்சி மற்றும் பெற்றோர் பொறுப்பு தொகு
சுகாதார துறை அறிமுகம், குழந்தைகள் சட்டம் 1989 விவரித்தார் புதிய கருத்தை பெற்றோர் பொறுப்பு என "அதிகாரிகள் மூலம் சர்ச்சிலுக்கு பெற்றோர் பொறுப்பு மட்டுமே இருக்க உயர்த்தும் குழந்தை உடல், உணர்ச்சி மற்றும் தார்மீக சுகாதார". இறைவன் மெக்கே, Clasfern, கர்த்தர் அதிபர் போது அறிமுகம் சட்டம் பாராளுமன்றத்தில் கூறினார் "...பெரும் பணி பெற்றோர்கள் மற்றும் அனைத்து உரிமைகள் அதை கொண்டு உள்ளன உயர்த்தும் குழந்தை இருக்க வேண்டும், ஒரு ஒழுங்காக உருவாக்கப்பட்டது வயது, இருவரும் உடல் மற்றும் விறைப்பான.".

குழந்தையின் உடல் மற்றும் தார்மீக சுகாதார போன்ற வளர்ந்த உடல் வளர்ச்சி மற்றும் நடத்தை (தார்மீக) வளர்ச்சி உடல் மற்றும் தார்மீக கொள்ளளவில்; குழந்தையின் உணர்ச்சி சுகாதார உருவாக்கப்பட்டது என அறிவுசார் வளர்ச்சி திறன் காரணம் அந்த அடிப்படையில் புரிந்துகொள்ளல் முடிவுகளை எடுக்கும் போது; சமூக வளர்ச்சி என, திறன்களில், நுழைய சமூக உறவுகள், இருவரும் தனிப்பட்ட மற்றும் வணிக; மற்றும் உணர்ச்சி வளர்ச்சி வாய்ப்பு திறனை எடுத்து வாய்ப்புகளை ஏற்படுத்தும் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை மற்றும் செய்ய நம்பத்தகுந்த (பார்க்க எஸ்.17(11) குழந்தைகள் சட்டம் 1989).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

"ஒரு குழந்தை ஒரு நபர் இல்லை, ஒரு பொருள் கவலை" தொகு
பெண் எலிசபெத் பட்லர் Sloss செய்யப்பட்ட இந்த அடிக்கடி மேற்கோள் கருத்து அவரது விசாரணை Cleveland முறைகேடு ஊழல். ஒரு மருத்துவ ஒழுக்கம், குழந்தை நல கீழ் எஸ்.1 மற்றும் எஸ்.44 குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933 மட்டுமே உள்ளது distinguished இருந்து விலங்கு நல கீழ் எஸ்.9 விலங்கு நல சட்டம் 2006பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name மூலம் கருத்தில் குழந்தையின் விருப்பத்திற்கு மற்றும் உணர்வுகளை முடிவுகளை எடுக்கும் போது அவரது சிறந்த நலன்களை தொடர்ந்து எஸ்.4 மன திறன் சட்டம் 2005 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பெற்றோர் திறன் மூலம் வேலை பாதுகாக்க ஒன்றாக குழந்தைகள் மற்றும் எஸ்.1(3)(ஏ)-(ஊ) குழந்தைகள் சட்டம் 1989.பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

ஒரு விலங்கு ஒரு வைத்திருந்த அதே நேரத்தில், ஒரு குழந்தை ஒரு நபர் மற்றும் இந்த வேறுபாட்டை ஒரு மத்திய எண்ணம் குழந்தைகள் சட்டம் 1989. இறைவன் மெக்கே மேலும் கூறினார் போது அறிமுகம் சட்டம், "நாட்கள் போது ஒரு குழந்தை இருந்தது regraded ஒரு வைத்திருந்த அவரது குடும்பம், உண்மையில் சூ அவர்களின் இழப்பு, இன்று அடக்கம் எப்போதும்". குழந்தை சமூக மற்றும் உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் அவர் இல்லாத திறன், முழு ஈடுபாடு முடிவெடுக்கும் செயல்முறை அவரது சிறந்த நலன்களை வரை அவர் ஆகிறது திறமையான என Gillick தகுதிவாய்ந்த.

இயலாமை, பெற்றோர் இயலாமை மற்றும் சமூக சேர்த்து தொகு
துறை வேலை மற்றும் ஓய்வூதியங்கள் இயலாமை மதிப்பீடு ஒரு நடவடிக்கையாக உள்ளது, உடல் மற்றும் மன திறமைகளை கீழ் மருத்துவ அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகள் இருந்து தொழில் சுகாதார மரியாதை வேலை செயல்திறன். சோதனை இயலாமை திறன் உள்ளது என "மன அல்லது உடல் பலவீனத்திற்கு ஒரு பாதகமான விளைவை நாள் முதல் நாள் நடவடிக்கைகள்" என சமூக செயல்திறன். மதிப்பீடு திறன் பயன்படுத்தப்படுகிறது உள்ள ஒரு வீட்டில் சார்ந்த இயலாமை மதிப்பீடு கீழ் எஸ்.47 NHS மற்றும் சமூக பாதுகாப்பு சட்டம் 1990.பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

ஒரு பெற்றோர், ஒரு பெற்றோர் இயலாமை மன அல்லது உடல் குறைபாடு கொண்ட பாதகமான விளைவை day-to-day செயல்பாடு கொடுத்து குழந்தை பராமரிப்பு அது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே ஒரு பெற்றோர் கொடுக்க ஒரு ஒத்த குழந்தை (எஸ்.31 குழந்தைகள் சட்டம் 1989).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

என்ன தங்கள் மன அல்லது உடல் கோளாறுகளை பெற்றோர்கள் வழங்கப்பட வேண்டும் தேவையான இயலாமை ஆதரவு தங்கள் குழந்தைகள் கவலை பராமரிக்க ஒரு நியாயமான நிலையான சுகாதார மற்றும் வளர்ச்சி. (எஸ்.17(10) குழந்தைகள் சட்டம் 1989).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

அந்த பெற்றோர் பொறுப்பு மன திறன் முடிவுகளை எடுக்க சொந்த சிறந்த நலன்களை நீட்டிக்க செய்ய பெற்றோர் முடிவு செய்ய திறன் உள்ள சிறந்த குழந்தை நலன்களை மூலம் வேலை பாதுகாக்க ஒன்றாக குழந்தைகள். எஸ்.47 இயலாமை மதிப்பீடு மூலம் நீட்டிக்க பகுதி III மற்றும் எஸ்.8 பகுதி 1 அட்டவணை 2 குழந்தைகள் சட்டம் 1989.

பகுதி III குழந்தைகள் சட்டம் 1989 அடங்கும் எஸ்.17 மற்றும் உள்ளூர் அதிகார கடமை பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க குழந்தைகள் நலன் மூலம் சேவைகளை வழங்குவதற்கான குடும்பங்கள் குழந்தைகள் வேண்டும். சேவைகள் அடங்கும் வாதிடும் சேவைகள் ஆலோசனை மற்றும் உதவி முடிவெடுக்கும் போது உடற்பயிற்சி அதிகாரிகள் பெற்றோர் பொறுப்பு. இந்த மற்றொரு தெளிவான எண்ணம், செயல் விவரித்தார் சுகாதார துறை அறிமுகம் என "...என்று நம்பிக்கை குழந்தைகள் சிறந்த வரை கொண்டு குடும்ப இருவரும் விளையாடும் பெற்றோர்கள் ஒரு முழு பகுதி...உள்ளூர் அதிகார கடமை ஆதரவு வழங்க குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்..."

இந்த MARAC செயல்முறை மற்றும் இடர் மதிப்பீடு தொகு
எஸ்.47 இயலாமை மதிப்பீடு ஆதரவு மன சுகாதார, சமூக மற்றும் உள்ளது நடத்திய ஒரு பார்வை ஒரு சாத்தியமான இழப்பு அந்த சுதந்திரம் இல்லாத திறனை பார்த்து தங்களை சமூகத்தில் கீழ் அட்டவணை A1 மன திறன் சட்டம் 2005. முடிவு செய்த பிறகு ஒரு எம்ulti ஒருgency ஆர்isk ஒருssessment சிonference என அழைக்கப்படும் MARAC.

வழக்கில் இல்லாத ஒரு பெற்றோர் திறன் கூட்டம் குழந்தையின் தேவைகளை பின்னர் உள்ளூர் ஆணையம் தலையிட முடியும் ஒரு நீதிமன்ற உத்தரவை கீழ் எஸ்.31(2) குழந்தைகள் சட்டம் 1989. அவ்வாறு செய்ய அவர்கள் சந்திக்க வேண்டும் பொது சட்டம் நிலையை என்று குழந்தை துன்பம், அல்லது பாதிக்கப்படுகின்றனர் வாய்ப்பு, குறிப்பிடத்தக்க தீங்கு இடர்களால் பார்த்து அது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே ஒரு ஆதார கொடுக்க, அதே அளவுகோல் என பெற்றோர் இயலாமை ஆதரவு.

அரசு தலையீடு தொகு
அது என்று கருதப்படுகிறது பெற்றோர் கொடுக்கப்பட்டுள்ளது தேவையான ஆதரவு எந்த பெற்றோர் இயலாமை அடிப்படையில் கீழ் முறையான ஒப்புதல், என்று நலம், குழந்தை வருகிறது பாதுகாக்கப்பட மற்றும் ஆபத்து குழந்தை பெற்றோர் அலட்சியம். சோதனை பெற்றோர் அலட்சியம் உள்ளது, பின்வரும் Donoghue பின்னர் என்று Bolam சோதனை, அதே சோதனை தொழில்முறை அலட்சியம். என்றால் ஒரு பாதுகாப்பு ஒழுங்கு செய்த உள்ளூர் ஆணையம் கையகப்படுத்தியது பெற்றோர் பொறுப்பு கீழ் எஸ்.33 செயல் என, அழைக்கப்படும், பெருநிறுவன பெற்றோர்.

இந்த நிலையை மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் சரியாக புரிந்து. பல ஆச்சரியத்திற்குரிய சட்ட கொள்கைகள் தொடர்பு மற்றும் மிகவும் எளிதாக புரிந்து அடிப்படையில் வேலை செயல்திறன் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு.

ஒரு பெற்றோர் போல், தலைமை நிர்வாக அதிகாரி ஒரு பெருநிறுவன உடல், இருக்க வேண்டும், மற்றும் இருக்கலாம் இருக்க பார்த்த ஒரு பொருத்தம் மற்றும் பொறுப்பான நபர். என்று இருந்தால் ஒரு கேள்வி நீதிமன்றம் முதலில் ஆய்வு உண்மைகள். வேலைவாய்ப்பு, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளன உண்மைகளை விபத்துக்கள், விபத்து சாதனை புத்தகத்தில் தீங்கு பாதிக்கப்பட்டார்,பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name மற்றும் உண்மைகளை வேலை சூழல், தீங்கு இருக்க வாய்ப்பு பாதிக்கப்பட்டார்,பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name சொல்ல, ஒரு பயணம் இருந்து தீங்கு.

உண்மைகள் காணப்படுகின்றன சிவில் நிலையான ஆதாரம், சமநிலை இருக்கிறதா, 'செய்தார் உண்மைகளை கூறப்படும் பயணம் தீங்கு ஏற்படும்?", இது 'என்று, உண்மையில் Trier'. அப்படி இருந்தால், இந்த காணப்படும் உண்மைகள் அளவு ஒரு பயணம் கேடாக?, இந்த உள்ளது என்று கேள்வி சட்டம். இந்த ரத்து போகிறது என்று கூறப்படும் நிகழ்வுகள் ஏற்பட்டது மற்றும் சட்டத்திற்கு புறம்பான ஆனால் அந்த போதாது உள்ளது, அடுத்த பிரச்சினை culpability அல்லது மனதில் நிலை. அலட்சியம் மனதில் ஒரு மாநில உள்ளது. இந்த கருத்தை இருந்து வருகிறது, குற்றவியல் சட்டம் மற்றும் குற்றம் குழந்தை கொடுமை கீழ் எஸ்.1 குழந்தைகள் மற்றும் இளம் மக்கள் சட்டம் 1933. என்ன உள்நோக்கம், கவனக்குறைவால் அல்லது அழுக்கும்? அங்கு ஒரு பாதுகாப்பு நெருக்கமானவர்கள் பொறுப்பு, குற்றம் ஏற்பட்டது, ஆனால் இல்லை தன்னார்வ அல்லது விரைவானதும் foreseeable மூலம் ஒரு குறைபாடு அல்லது முடியாதவராக பிரதிவாதி.

குற்றம் குழந்தை கொடுமை அனுமதிக்கிறது ஒரு பாதுகாப்பு பெற்றோர் தகுதியின்மை, ஒரு பரவலான அடிப்படையில் (பார்க்க தண்டனை வழிகாட்டல், நீண்டு வளையும் கொள்கைகளை: நீண்டு வளையும் கொள்கைகளை: தாக்குதல்கள் குழந்தைகள் மீது தாக்குதல்கள் குழந்தைகள் மற்றும் கொடுமை ஒரு குழந்தை).பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

வேலைவாய்ப்பு, சுகாதார மற்றும் பாதுகாப்பு அணுகுமுறை மீண்டும் பயனுள்ளதாக புரிதல் இந்த சிக்கலான. சுருக்கமாக, இதுவரை, உண்மையில் ஒரு விஷயத்தை என காணப்படும் இருப்பு இருக்கிறதா, குழந்தை அடைந்துவிட்டார் தீங்கு அல்லது வெளிப்படும் ஒரு பாதுகாப்பற்ற சூழல். பொறுப்பான நபர் குழந்தை இருந்தது, குறைந்தது, ஒரு அலட்சியமாகவும் மாநில மனதில் தவறிய குழந்தை பாதுகாக்க பாதுகாப்பதிலும் ஊக்குவிக்க அல்லது அவரது/அவரது நலம். இந்த அனைத்து அடிப்படையில் தற்போதைய மற்றும் இறுதி கண்டுபிடித்து உள்ளது என ஒரு பொருத்தம் மற்றும் சரியான நபர் நடத்த இந்த பொறுப்பை ஒரு எதிர்கால. அங்கு ஒரு வரலாறான இது போன்ற பொறுப்பற்ற நடத்தை?

தடுக்கும் குழந்தை புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோகம் தொகு
குற்றம் குழந்தை கொடுமை இருக்க முடியும் முன்னெடுத்த ஒரே நேரத்தில் எந்த தாக்குதல் குழந்தை. என்றால் ஒரு குழந்தை தாக்கினார், பாலியல் அல்லது உடல், பின்னர் இருவரும் பகைவன் மற்றும் பொறுப்பான நபர் வைத்து குழந்தை பாதுகாப்பாக இருந்து தாக்குதல் உள்ளன கொலைக்குற்றம் தீங்கு பாதிக்கப்பட்ட உடல் தவறாக தவறாக அல்லது பாலியல் துஷ்பிரயோகம். இந்த முடித்து வரையறைகள் குழந்தை புறக்கணிப்பு மற்றும் முறைகேடு இணைப்பு ஒரு ஒன்றாக வேலை (பார்க்க கூட தடுக்கும் குழந்தை கொடுமைப்படுத்தப்படும்: ஒரு கையேடு நடவடிக்கை எடுத்து உருவாக்கும் மற்றும் ஆதாரங்கள் (2006)).

குற்றம் குழந்தை கொடுமை இங்கிலாந்து செயல்படுத்த பிரிவு 19(1) UN Convention on the Rights of the Child Protection of Children From வன்முறை. பிரிவு 19(2) தேவைப்படுகிறது சமூக திட்டங்களை தடுக்கும் வன்முறை குழந்தைகள் மற்றும் இந்த காணப்படுகின்றன கீழ் எஸ்.4 பகுதி 1 அட்டவணை 2 குழந்தைகள் சட்டம் 1989 மற்றும் அடங்கும் சேவைகளை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கீழ் பகுதி III அதே அரங்கேற்றம் கூட்டத்தில், உள்ளூர் அதிகார கடமை பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க குழந்தைகள் நலன்.

குழந்தை பாதுகாப்பு மதிப்பீடு தொகு
ஒரு முக்கிய பகுதியாக குழந்தை பாதுகாப்பு பணி உள்ளது மதிப்பீடு.

ஒரு குறிப்பிட்ட சவால் எழுகிறது அங்கு குழந்தை பாதுகாப்பு தொழில் மதிப்பிடுகிறார்கள் குடும்பங்கள் அங்கு புறக்கணிப்பு நிகழும். தொழில் நடத்தி மதிப்பீடுகளை குடும்பங்கள் அங்கு புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது கூறினார், சில நேரங்களில் செய்ய பின்வரும் பிழைகள்:பிழை காட்டு: The opening tag is malformed or has a bad name

தோல்வி கேட்க சரியான வகையான கேள்வி உட்பட
என்பதை புறக்கணிப்பு நிகழும்?
ஏன் புறக்கணிப்பு நிகழும்?
என்ன நிலைமை போன்ற குழந்தை?
என்பதை முன்னேற்றம் குடும்பத்தில் இருக்க வாய்ப்பு உள்ளன நீடித்த?
என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய நீண்ட கால பாதுகாப்பு, குழந்தை?
See மேலும் தொகு
முக்கிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் தொகு
ஒடிசா மாநில குழந்தை பாதுகாப்பு சமூகத்தின்
இலவச குழந்தைகள்
நண்பர்கள்-சர்வதேச
Save the Children
போர் குழந்தை
உலக பார்வை
யுனிசெப்
தாரா வீடுகளில் குழந்தைகள்
தலைப்புகள் தொகு
தத்தெடுப்பு மற்றும் பாதுகாப்பான குடும்பங்கள் சட்டம்
முறைகேடு
சிறுவர் பாதுகாப்பு மற்றும் ஆபாசம் அமலாக்க சட்டம்
குழந்தை பாதுகாப்பு சேவைகள்
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்
சிக்கலான பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு
குழந்தைகள் (அரசியலில்)
சுயாதீன பாதுகாப்பதிலும் அதிகாரம்
Landeros v. வெள்ளம்
ரியாக்டிவ் பற்றுதல் கோளாறு
நாடுகடந்த குழந்தை பாதுகாப்பு

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144