திங்கள், 30 மார்ச், 2020

உலக இட்லி தினம்! சில சுவாரசிய தகவல் இதோ!!


உலக இட்லி தினம்! சில சுவாரசிய தகவல் இதோ!!


இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.

இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


அனைத்து உணவுகளுக்கும் தாய் இட்லி என்று ஒரு பேச்சு உண்டு. உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும்.


தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.


உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.


எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி விடும்.


இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அதில்:-


செட்டிநாடு இட்லி
மங்களூர் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
சவ்வரிசி இட்லி
சேமியா இட்லி
சாம்பார் இட்லி
குஷ்பு இட்லி
குட்டி இட்லி
சாம்பார் இட்லி
பொடி இட்லி

இந்நிலையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் (மார்ச் 30-ம் தேதி) உலக இட்லி தினமாக கொண்டாடி வருகின்றனர்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

உலக இட்லி தினம் மார்ச்-30.


 உலக இட்லி தினம் மார்ச்-30.
 உருவான சுவாரசிய வரலாறு!

#உலக #இட்லி #தினம் #உருவான #சுவாரசிய #வரலாறு!

உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது. அதன்படி கடந்த, 2015ம் ஆண்டு முதல் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.

கோயமுத்தூரை சேர்ந்தவர் இனியன், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இவர், ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இத்தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.


அப்போதுதான், தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். அப்படித்தான், மார்ச்-30 தேதி என்ற தினம் இட்லி தினமாக அறிவிக்கப்பட்டது.

#இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. அதோடு, சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். இதுபோக 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.


ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது. இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும்.

ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி சாம்பார் இட்லி, ஃப்ரைடு இட்லி, மசாலா இட்லி, சில்லி இட்லி, கைமா இட்லி... என இட்லி வகைகள் ஏராளம்.


இட்லி நல்லது... ஏன், எதற்கு, எப்படி?

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. `ரெண்டு இட்லி’ என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது. நாற்பது வயதைத் தாண்டியவர்கள், தங்களின் இளம் பிராயத்தில் அம்மாவின் கையால் பதினைந்து, இருபது இட்லிகளை அள்ளிப் போட்டுக்கொண்டதாகச் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போகும் இன்றைய தலைமுறையினரும் உண்டு. பந்தயமெல்லாம் வைத்து, கபளீகரம் செய்த இட்லிதான்... இன்றைக்கு நான்கு அல்லது ஐந்துக்கு மேல் உள்ளே இறங்க மறுக்கிறது. என்ன காரணம்?

ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள்... போன்ற முக்கிய தினங்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது. போதாக் குறைக்கு இன்ஸ்டன்ட் மாவுக் கடைகள்! அது, இரவோ, பகலோ... அரை கிலோ மாவு வாங்கிக்கொள்ளலாம். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்கிற லெவலுக்கு இறங்கிவந்துவிட்டது இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் நம் ஆட்களுக்குக் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.


குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள்... என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான். என்னதான் தென்னிந்தியாவில் கர்நாடகா மாநில மக்களும், தமிழ்ச்சமூகமும் `இட்லியைக் கண்டுபிடித்தது நாங்கள்தான்’ என்று கட்டைவிரலை உயர்த்தட்டும்... வரலாற்றில் சில எதிர்க் கருத்துகளும் உள்ளன. இந்தோனேஷியாதான் இதன் தாயகம் என்று தன் `ஹிஸ்டரிக்கல் டிக்‌ஷனரி ஆஃப் இந்தியன் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார், வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சய்யா (K.T.Achaya).  அதோடு, சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதையும் சொல்கிறார். ஆக, இது இந்தியாவுக்கு கி.பி.800-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வந்திருக்கலாம் என்கிறது ஒரு சாரார் வரலாறு.

இந்தோனேஷியாவில் இதை `கெட்லி” (Kedli) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் மருவி, `இட்லி’ ஆனது என்கிறார்கள். `அதெல்லாம் இல்லை கன்னடத்தில் இதற்கு ஒரு வார்த்தை உண்டு... இட்டாலிகே’ (Iddalige). கி.பி.920-ம் ஆண்டிலேயே சிவகோட்டிஆச்சார்யா என்பவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்’ என்றும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டுகிறார்கள். கி.பி.1130-ம் ஆண்டில் மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” (Manasollaasa) என்ற நூலில், `இட்டாரிகா’ (Iddariga) என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ (Idada) எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு. சமீபத்திய வரலாற்று ஆய்வுகளோ, கி.பி.1250-க்குப் பிறகுதான் இந்தியாவில் இதை தயாரித்திருக்கிறார்கள்... அதுவும் இந்தியாவுக்கு வந்த அரேபிய வணிகர்களால்தான் சாத்தியமானது என்கின்றன. இதன் ரிஷிமூலத்தைத் தேடிப் போவது உண்மையின் கடினமான வேலையே.

இது, ரவை, கோதுமை, ஓட்ஸ், சிறுதானியங்கள்... என விதவிதமான தானியங்களில் செய்யும் அளவுக்கு இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. ஒருபடி மேலே போய், `இட்லி திருவிழா’ நடத்துகிறவர்களும், அதற்கு அலைமோதும் கூட்டமும் உண்டு.` சாம்பார் இட்லி’, `ஃப்ரைடு இட்லி’, `மசாலா இட்லி’, `சில்லி இட்லி’, `கைமா இட்லி’... என விதவிதமான வெரைட்டிகள். சினிமாவில் பிரபலமாக்கப்பட்டு, மீந்துபோனது, `இட்லி உப்புமா’வாக பல வீடுகளில் வலம் வந்த கதையெல்லாம் இங்கு உண்டு. விதவிதமாக, வகை வகையாக செய்து பார்த்து, சுவைத்து மகிழ மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மகத்தான படைப்பு இது என்பதில் சந்தேகம் இல்லை.

`எல்லாம் சரி... இது ஆரோக்கியமானதுதானா?’ என்கிற கேள்வியை டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம். “உலக அளவில் இட்லி ஒரு சிறந்த, சுவை மிகுந்த காலை உணவு. ஏனெனில், ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது என்பதே இதற்குக் காரணம். ‘ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் சுவையான கேக்’ என்று இதைச் சொல்லலாம். இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும். தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னி, புளித்துவையல் மற்றும் சாம்பாருடன் சாப்பிட ஏற்ற அருமையான உணவு இது.

சரி... ஒரு இட்லியில் சராசரியாக என்னென்ன பொருள்கள் இருக்கின்றன... பார்க்கலாமா? 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து இல்லை.

இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி, ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை. குறிப்பாக, தேங்காய் சட்னி. ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன. தேங்காயில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சாப்பிடும்போது அதிகமான அளவில் கலோரிகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது. இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய், நெய் அதிகமாக ஊற்றினால், இதுவும் அதிக கலோரி உடலில் சேரக் காரணமாகிவிடும்.

இதனோடு மெதுவடை சாப்பிடுவது பொருத்தமானது அல்ல. வடை, எண்ணெயில் பொரிக்கப்படுவது. அதிக கலோரிகளை உடலில் சேர்க்கக்கூடியது. வடையை மாலை நேரத்தில் லேசாக பசி வயிற்றைக் கிள்ளும்போது சாப்பிடலாம், தவறில்லை. காலையில் இட்லியுடன் வேண்டாம்.

பெஸ்ட் சைடுடிஷ்...

இட்லிக்கு பெஸ்ட் சைடுடிஷ் சாம்பார்தான். சாம்பாரில் உள்ள பருப்பு உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. அதனுடன் தேங்காய், புதினா, தக்காளி அல்லது வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிட்டால் புரதம், கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்தும் கிடைக்கும்’’ என்கிறார் சௌமியா.

ஆக, இட்லி நல்லது. சாம்பார், தக்காளி, வெங்காய சட்னிகளுடன் ஒரு வெட்டு வெட்டலாமா?

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

ஞாயிறு, 29 மார்ச், 2020

பல விருதுகளைப் பெற்ற... இந்தி உலகின் படைப்பாளி பிறந்த தினம் மார்ச் 29



பல விருதுகளைப் பெற்ற... இந்தி உலகின் படைப்பாளி பிறந்த தினம் !
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,


✍ இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியான பவானி பிரசாத் மிஸ்ரா 1913ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்திலுள்ள டிகரியா என்ற கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கி விட்டார். பிரபல கவிஞர்களின் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். இவர் காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார்.

✍ இவரது நூல்கள் மொத்தம் 22 வெளிவந்துள்ளன. சம்பூர்ண காந்தி, வாங்மய, கல்பனா உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார்.

✍ இவரது புனீ ஹுயி ரஸ்ஸி படைப்புக்காக 1972ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்மஸ்ரீ, உத்தரப் பிரதேச இந்தி அமைப்பின் இலக்கிய விருது, மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

✍ இவர் இலக்கிய வட்டாரத்தில் பவானி பாய் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மிக எளிமையான, நேரில் நின்று பேசுவதுபோலவே காவிய நடையைப் படைக்கும் ஆற்றல் கொண்ட பவானி பிரசாத் மிஸ்ரா 1985ஆம் ஆண்டு மறைந்தார்.
சாமுவேல் வால்டன்


🏢 உலகப் புகழ்பெற்ற வால்மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் 1918ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

🏢 இவர் ஓட்டப்பந்தய வீரராகவும் பிரகாசித்தார். 1942ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். பின்னர் ஒரு பிரபல விற்பனை நிலையத்தின் விநியோக உரிமையை பெற்றார்.

🏢 இதுபோல பல உத்திகளை செயல்படுத்தி வெற்றி கண்டார். செல்ஃப் சர்வீஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் கிளைகள் திறந்தார். அமெரிக்காவின் நம்பர் ஒன் அங்காடியாக அது வளர்ந்தது.

🏢 1998ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை 20-ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. சிறந்த தொழிலதிபரான சாம் வால்டன் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நார்வே நாட்டின் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.



செவ்வாய், 24 மார்ச், 2020

இன்ப துன்பங்களை பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும் யுகாதி பண்டிகை…

இன்ப துன்பங்களை பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும் யுகாதி பண்டிகை…


தமிழ், ஆங்கில புத்தாண்டுகள் போல தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு யுகாதி ஆகும். இதை உகாதி பண்டிகை எனவும் சொல்வர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகைஉணர்த்துகிறது.
சைத்ர மாதத்தின் முதல்நாளில்தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்
உகாதியன்று அறுசுவைகள் சேர்ந்த பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.
உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும். 
உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து நலன்களும் கிட்டும்.
சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||
அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை வாழ்த்துகள்

வெள்ளி, 20 மார்ச், 2020

காடுகள் தினம் மார்ச் 21


வனம்... வாழ்வின் அங்கம் - உலக காடுகள் தினம் !மார்ச் 21

இவ்வுலகை விட்டு தான் சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும், கண்டுபிடிப்புகளையும் நினைவுகூறுவதே வரலாறு.
உலக காடுகள் தினம்


🌳 வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக பொம்மலாட்ட தினம்


🎎 உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🎎 உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.நா.மகாலிங்கம்


🏢 ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.

🏢 இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.

🏢 சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுப்படுத்தினார்.

🏢 காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.

🏢 இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🏢 பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த 'அருட்செல்வர்" என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.
✍ 1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை 'பாரத் ரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார். ✍ 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.


வியாழன், 19 மார்ச், 2020

உலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20

உலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20
 
சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ. நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். *சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.

நன்றி மாலைமலர்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை



வரலாறு... பல அறிவியல் விதிகளை வெளியிட்டவர்... இவரை தெரியுமா?
 உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் 2006ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.ஏர்ல் நைட்டிங்கேல்

புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் (நுயசட Niபாவiபெயடந) 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.

பேர்ல் ஹார்பர் (Pநயசட ர்யசடிழச) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டு தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார்.

'திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்" என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது முதன்முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது.

1960ஆம் ஆண்டு லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் (Niபாவiபெயடந-ஊழயெவெ) கார்ப்பரேஷனை நிறுவினார். 1976ஆம் ஆண்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது.

1980ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது.

ஏராளமான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989ஆம் ஆண்டு மறைந்தார்.குஸ்டவ் கிர்க்காஃப்


மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.

உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார். ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு 'கரும்பொருள் கதிர்வீச்சு" பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.

ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக 'ரூம்ஃபோர்டு" பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.

தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1887ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20


மகிழ்ச்சி எனும் மலர்ச்சிப் பூ இன்று உலக மகிழ்ச்சி தினம்

நாம் அணியும் எல்லாப் பொன் நகைகளையும் விடவும் அழகானது நம் முகம் சிந்தும் இனிமையான புன்னகை. மலர்ச்சியும் மகிழ்ச்சியும் நம் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்கிறது. ஒவ்வொரு விடியலிலும் மகிழ்வலைகள் நம்முள் எழ என்ன செய்யவேண்டும்?
வெறுப்பை மறுத்துச் சிரிப்பை நம் உள்ளத்திற்குள் ஊற்ற என்ன செய்யவேண்டும்?


ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்பவனுக்கு அவன் மனம் அருவிபோல் பொங்கத் தான் செய்யும். அந்தந்த கணத்தை அனுபவித்து வாழ்பவனுக்கு இந்த வினாடி மட்டுமன்று எல்லா வினாடிகளும் அருமையானதுதான். வளர்ந்த செடியால் தொட்டியையும் துளைத்துக் கொண்டு மண்ணில் வேர் பரப்ப முடிகிறது. சென்டி மீட்டர்களால் வளர்ந்ததாய் காட்டிக் கொண்டிருக்கும் நம்மால் அவ்வாறு ஏன் முடியவில்லை? வேதனைப் பரப்பில் நம் வேர்களைப் படரவிட்டு வருத்தத்தின் நிறுத்தத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
வெளியில் இல்லை

நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாமே பொறுப்பு என்று உணரத் தொடங்கினால் எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். தேனடையில் தேனீ சேர்த்து வைத்திருக்கும் தேனைத் தன் கரங்களால் பிழிந்தெடுக்க முடிந்த மனிதனால் எவ்வாறு மலர்களுக்கு வலிக்காமல் தேனைச் சேகரிப்பது என்ற ரகசியத்தை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை. சந்தோஷம் என்றும் வெளியில் இல்லை. அது உள்ளுக்குள் உள்ளது, உணர்வாய் தெரிவது.


பிறந்தகுழந்தையின் பிஞ்சுப்பாதம், இளங்காலைப் பொழுதின் இனிய தென்றல், ஆலம் விழுது களில் ஆடிய ஆட்டம், கால்நுனி நனைக்கும் கடலலை நுரை. பேருந்துப் பயணத்தில் வழியும் இசை. தேடிவந்து காது நிறைக்கும் நண்பர்களின் இனிய பேச்சு, பதறிச் செய்யாத நல்ல காரியம், நதிப்புனல் குளியல் என எல்லாம் இன்பமயம், ஏன் துன்ப பயம்?நம்மை வேறுயாரும் ஊக்கப் படுத்தாவிட்டால் பரவாயில்லை, நம்மை நாமே நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வோம்.


மகிழ்ச்சியின் திசைநோக்கி நம்மைத் திருப்பிக்கொள்வோம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? என்று கேட்டுக்கொள்வோம், அப்படிக்கேட்கமுடிந்ததால்தான் பாரதியால் தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடமுடிந்தது.

சிரிப்பு தரும் சிறப்பு

புன்னகை மலர்கள் பூக்கும் வேளையில் சோகங்கள் எல்லாம் சுகங்களாகும். விக்கலைத் தண்ணீர் ஊற்றி நிறுத்துகிறமாதிரி சிக்கலைச் சிரிப்பைச் சிந்துவதால் மட்டுமே நிறுத்த முடியும். தீமையறியா மனம் மகிழ்வைத் தரும் தினம். பூத்துக் குலுங்குகிற மலர்களைப்போல் பார்த்துக் குலுங்குகிறது வாழ்வெனும் வனம். தற்படம் எடுக்கிறவரின் முகமாய் வாழ்வு நம் மகிழ்வலைகளைப் பதிவு செய்துகொண்டே இருக்கிறது.


நான் இப்போதும் எப்போதும் உற்சாகமாய் இருப்பேன் என்று நமக்குள் சொல்லிக் கொள்ளும் போதுதான் மகிழ்ச்சியாய் வாழ்கிறோம். சின்ன சின்ன மகிழ்ச்சிகளால் நிறைகிறது இந்த வாழ்வு. கவனிக்காமல் சைடுஸ்டாண்ட் போட்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கிற சகமனிதனைச் சப்தமிட்டு கவனமாக்குவது முதல் வடிவேல் காமெடி பார்த்து வயிறுகுலுங்கச் சிரிப்பது வரை சின்னசின்ன சந்தோஷங்களால் நிறைந்திருக்கிறது இந்த வாழ்வு.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக நம்மை எல்லாவற்றுக்கும் மாற்றிக்கொள்ளத் தொடங்கினால் என்றும் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் மனம்தான் தீர்மானிக்கிறது, அதனால்தான் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம், மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம். துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்” என்று கண்ணதாசன் எழுதினார்.

நிறைவான வாழ்வு

நிறைவான வாழ்வில்தான் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் உள்ளது. மரமேறத் தெரியவில்லையே என்று மீன்கள் வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? தொட்டிக்குள் வாழ முடிய வில்லை என்று புலிகள் புலம்பினால் நன்றாக இருக்குமா? வளர்ச்சியின் தொடக்கம் வாய்ப்பு களைப் பயன்படுத்துவதில் உள்ளது. நமக்குகிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கும் கிடைக்காமல் போகவேண்டும் என்கிற எண்ணம் நம்மையும் அழித்து மற்றவர்களையும் அழிக்கிறது. மற்றவர்களிடம் அன்புக்கு ஏங்குகிற நாம், அந்த அன்பை மற்றவர்கள் பெற அவர்களை வெகுவாக ஏங்க வைக்கிறோம்.


வேரில்லாமலும் நீரில்லாமலும் நம்முள் வளர்கிறது பொறாமை எனும் பெருஞ்செடி! தினமும் அஞ்சியஞ்சிச் சாவதைவிட ஒருநாள் சவாலை எதிர்கொள்வது எவ்வளவோ மேலானது. துணிவே துணை என்று வாழ்பவர்களுக்கு எல்லா நாட்களும் மகிழ்ச்சி நாட்களே!

மகிழ்ச்சியும் மலர்ச்சியும்

எப்போதும் எங்கேயும் குறைகூறிக்கொண்டே இருக்காமல் எல்லோரையும் நேசிப்பவர்களையே எல்லோரும் நேசிக்கிறார்கள், அவர்கள் வாழ்வில் எல்லா நாட்களும் மகிழ்வான நாட்கள்தான். இல்லாத மாயைகளுக்காக இருக்கிற இனிமையான வாழ்வைப் பணயம் வைக்கிற மனிதர்களாக நாம் ஏன் இன்னும் இருக்க வேண்டும்? விட்டுவிடுதலையாகி விரிவானில் பறக்கிற சிட்டுக்குருவிகளைப் பார்க்கும்போது நம் மனம் பரபரப்பதை மகிழ்ச்சி என்று சொல்லாமல் வேறுஎன்ன சொல்ல?

மகிழ்ச்சியும் மலர்ச்சியும் மனதின் புன்னகை மலர்கள். சருகுகளின் சப்தத்தில் கானகங்கள் வருந்துவதில்லையே!அதைப்போல இறந்த நாட்களுக்காகவும் இழந்தபொருட்களுக்காகவும் புன்னகை மனிதர்கள் எப்போதும் புலம்புவதேயில்லை. நினைவுகள் எப்போதும் புனைவுகளாயிருந்தாலும் இன்பமாய் இருந்த நிமிடங்களில்தான் இளைப்பாறிச் செல்கிறது இளகிய மனம்.

எப்போதெல்லாம் நம் மனம் சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம் நாம் ஏற்கனவே மகிழ்ச்சியாயிருந்த நிமிடங்களை நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம். தினமும் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்தாலும், சிலர் நம் மன அறைக்குள் தங்கள் செயல்களாலும் ரசனையாலும் நின்று நிலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் ரசித்து ருசித்து உணவருந்துவதைக் காணலாம்.

சிலர் தலையை ஆட்டியபடி கண்களை மூடி இன்னிசை கேட்பதைக் காணலாம், சிலர் ஓடியாடி பயணப்பட்டுக் கொண்டே வாழ்வை ரசிப்பதைக் காணலாம். சிலர் வண்ணவண்ண மீன்களை ரசித்து அவற்றோடு பேசியபடி நந்தவன நிமிடங்களைக் கழிப்பதில் மகிழ்ச்சியடைவதைக் காண்கிறோம், சிலர் பூங்காவில் நடைபயின்றபடி நண்பர்களோடு சிரித்து மகிழ்ந்து நடப்பதைக் காணமுடிகிறது. சிலர் காலை முதல் இரவுவரை நுாலகத்தின் புத்தகப் பக்கங்களுக்குள் தன்னைத் தொலைத்து மகிழ்வதைக் காண்கிறோம்.

இந்தப் பட்டியல் போல்ஆயிரமாயிரமாய் தொடரும் மகிழ்வலைப் பட்டியலில் ஏதோவொரு பக்கத்தில் உங்கள் பெயரிருந்தால் நீங்களும் மகிழ்வர்தான். ரசித்து வாழ்தல் ஒன்றே சிரித்து மகிழும் வாழ்வின் அடையாளம்.
நன்றி தினமலர்

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

வியாழன், 5 மார்ச், 2020

இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!

இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
incredible women from indian history

1/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
ஜெ., மர்ம மரணதிற்கு நீதி கேட்டு ஓபிஎஸ் உண்ணாவிரம்
கருத்தை எழுதவும்
“மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்கள் சிலரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்!
2/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
கிட்டுர் சென்னம்மா (23 அக்டோபர் 1778 – 21 பிப்ரவரி 1829)
கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள கிட்டுர் எனும் ஊரின் ராணியாக வாழ்ந்து வந்தவர் கிட்டுர் சென்னம்மா. சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள் பயிற்சி, வில் வித்தை போன்ற பயிற்சிகளை பெற்றவர் இவர். கிட்டுர் சென்னம்மா சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வந்த இவர், ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே இறந்த இவரை கர்நாடகா மாநிலத்தின் வீர மங்கையாக மக்கள் போற்றுகின்றனர்.
3/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
ராணி லக்ஷ்மிபாய் (19 நவம்பர் 1828 – 17 ஜூன் 1858)
வட இந்தியாவில் உள்ள ஜான்சி எனும் மாநிலத்தின் அரசியான ராணி லக்ஷ்மிபாய் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர். இவர் வில்வித்தை, குதிரையேற்றம், தற்காப்பு ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர். இந்திய சுதந்திரத்தில் லக்ஷ்மிபாயின் பங்கு அளப்பறியது. மாவீரரான ராணி லக்ஷ்மிபாயின் பெயரில் தான் பெண்களுக்கான தனிப்படை உருவாக்கப்பட்டது. 1800ஆம் ஆண்டுகளின் மத்தியில் ராணி லக்ஷ்மிபாய் தனக்கு சொந்தமாக தனியே ஒரு படை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வந்தார். நாட்டுக்காக தன் 30வது வயதில் உயிர் தியாகம் செய்ததால் இவர் தேசத்தின் நாயகி என வர்ணிக்கப்படுகிறார்.

4/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
சாவித்ரிபாய் பூலே (3 ஜனவரி 1831 – 10 மார்ச் 1897)
மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் பகுதியில் பிறந்த சாவித்ரிபாய் பூலே தன்னுடைய 9வது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவர் ஜோதிராவ் பூலேவுடன் புனேவுக்கு இடம் பெயர்ந்தார். புனேவுக்கு செல்லும் போது கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த புத்தகங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார். தன்னுடைய கணவரின் உதவியால் எழுத, படிக்க கற்றுக்கொண்ட சாவித்ரிபாய் இந்தியா முழுவதும் கல்வியை கொண்டு சென்றார். அஹமத்நகரில் உள்ள ஃபரார்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் புனேவில் உள்ள மிட்செல் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனும் பெருமையை பெற்றார். 1848ஆம் ஆண்டு சாவித்ரி பாய் பூலே பெண்களுக்கான பிரத்யேக பள்ளிக்கூடத்தை தொடங்கினார்.
5/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
ஆனந்திபாய் ஜோஷி (31 மார்ச் 1865 – 26 பிப்ரவரி 1887)
மேற்கத்திய மருத்துவமுறையில் பயிற்சி பெற்ற முதல் தெற்கு ஆசிய பெண் மற்றும் முதல் இந்திய பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆனந்திபாய் ஜோஷி. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமைக்கு உரியவர் இவர். 17ஆம் நூற்றாண்டின் போது ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை பெண்கள் மிகவும் அசௌகர்யமாக உணர்ந்தனர். மருத்துவம் படிக்க விண்ணப்பித்த ஜோஷி தனது விண்ணப்ப படிவத்தில் இந்தியாவில் உள்ள ஏழை பெண்களுக்கு மருத்துவம் பார்க்க விரும்புவதாகவும், பெண்களின்அசௌகர்யத்தையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய 22 வயதில் ஆனந்திபாய் ஜோஷி இறந்துவிட்டாலும், பெண் சமூகத்தின் மீது பாய்ந்த நம்பிக்கை ஒளி அவர் என்று இன்றும் புகழ்கின்றனர்.
6/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
சரோஜினி நாயுடு (13 பிப்ரவரி 1879 – 2 மார்ச் 1949)
கவிஞராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த சரோஜினி நாயுடு, ஒருங்கிணைந்த மாகாணங்களானஆக்ரா மற்றும் ஓத்தின் முதல் கவர்னராக இரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். மேலும் இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னரும் இவர் தான். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு. மகாத்மா காந்தி மற்றும் மதன் மோகன் மாலவியா உடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். இவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார்.
7/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
விஜய லட்சுமி பண்டிட் (18 ஆகஸ்ட் 1900 – 1 டிசம்பர் 1990)
இந்தியாவில் கேபினட் பதவி வகித்த முதல் பெண் விஜய லட்சுமி பண்டிட் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இரண்டு முறை இவர் பதவி வகித்துள்ளார். ரஷ்ய அரசின் இந்திய தூதராக நாற்பதுகளில் பணியாற்றிய இவர், அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்தார். மேலும் ஐநா பொது அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர் விஜய லட்சுமி பண்டிட்!
8/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
கமலா தேவி சட்டோபாத்யாய் (3 ஏப்ரல் 1903 – 29 அக்டோபர் 1988)
லண்டனில் கல்வி பயின்ற கமலா தேவி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார். சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியாவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் கமலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. கலை மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய பாரம்பரிய கைத்தறி துறையை பாதுகாப்பதிலும், அதனை புதுப்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 1955ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1987ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் கமலா தேவி சட்டோபாத்யாய் பெற்று இருக்கிறார்.
9/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
நீதிபதி அன்னா சாண்டி (4 மே 1905 – 20 ஜூலை 1996)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த அன்னா தனது மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார். வழக்குரைஞராக அன்னா பணியாற்றிய காலத்தில் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடி வந்தார். 1931ஆம் ஆண்டு ஸ்ரீ முலம் பாப்புலர் அசெம்ளிக்கு நடத்திய தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் பெண் போட்டியிடுகிறார் என்ற வெறுப்பின் காரணமாக, பத்திரிகைகளின் எதிர்ப்பால் 1932ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சில வருடங்களுக்கு பிறகு “முன்சீஃப்” எனப்படும் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார். 1948ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பெறுப்பேற்றார். 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக அன்னை பதவியேற்றார். அங்கு 9 வருட காலம் அவர் நீதிபதியாக பணியாற்றினார்.
10/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
சுசேத்தா கிரிப்லானி (25 ஜூன் 1908 – 1 டிசம்பர் 1947)
இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கிரிப்லானி, இந்திய பிரிவினையின் போது மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியவர். அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிப்லானி, இந்திய அரசியலமைப்பு வரையறுத்த துணைக்குழுவிலும் அங்கம் வகித்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். அகில இந்திய மகிளா காங்கிரஸை நிறுவியர் சுசேத்தா கிரிப்லானி என்பது குறிப்பிடத்தக்கது.

11/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
கேப்டன் பிரேம் மாத்தூர் ( 17 ஜனவரி 1910 – 22 மார்ச் 1992 )
1947ஆம் ஆண்டு கமர்ஷியல் விமானங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற பின்னரும் எட்டு தனியார் விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார் கேப்டன் பிரேம் மாத்தூர். ஏனென்றால் ஒரு பெண்ணை விமானியாக நியமிப்பதில் யாருக்கும் விருப்பமில்லை. கடைசியாக ஹைதராபாத்தில் இருந்த டெக்கான் ஏர்வேஸில் நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த நேர்காணலில், உங்களுடன் எல்லோரும் ஆண்களாக இருப்பார்கள், எப்படி இரவு நேரங்களில் உங்களால் தங்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, என்னை நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுப்பதால் ஒரு நாளும் வருத்தப்பட மாட்டீர்கள் என்று பதில் அளித்துள்ளார். எல்லா விதமான சட்ட ரீதியான தேவைகள், எல்லா தேர்வுகளையும் கடந்த பின்னர், 1949ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
12/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
கேப்டன் லக்ஷ்மி சாகல் (24 அக்டோபர் 1914 – 23 ஜூலை 2012)
மருத்துவம் படித்த லக்ஷ்மி சாகல், இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி படையை உருவாக்கிவர் லக்ஷ்மி சாகல். இதற்கு பெண்கள் பலரும் ஆதரவு தெரிவித்து படையில் இணையவே கேப்டன் லக்ஷ்மி என்று அழைக்கப்பட்டார். லக்ஷ்மி சாகல் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட புரட்சியாளர் ஆவார். லக்ஷ்மி சாகல் இந்திய அரசின் பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
13/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
அசிமா சாட்டர்ஜி (23 செப்டம்பர் 1917 – 22 நவம்பர் 2006)
வங்காள மாகாணத்தில் பிறந்த அசிமா சாட்டர்ஜி இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் இந்திய பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கரிம வேதியியலிலும், மருந்து தயாரிப்பு மற்றும் மூலிகை ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். இவர் ராஜ்ய சபாவின் உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.
14/14
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்கள்!
கருத்தை எழுதவும்
கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )
இந்திய-அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சாவ்லா முதல் பெண் இந்திய விண்வெளி வீரர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பியா எனும் விண்களத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்களத்தில் ஏழு பேருடன் கல்பனா சாவ்லா பயணித்த போது விண்வெளியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்தியர்கள் மற்றும் உலகில் உள்ள பல பெண்களுக்கு கல்பனா சாவ்லா ஒரு ரோல் மாடலாக திகழ்கிறார். தன் குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்த்து போதிலும் தனக்கு பிடித்தமான விண்வெளித்துறைக்கு தான் வேலைக்கு செல்வேன் என்று உறுதியுடன் இருந்து தனது கனவை நினைவாக்கினார். அதனால் தான் மற்றவர்களிடம் இருந்து கல்பனா சாவ்லா தனித்து தெரிகிறார்!

மகளிர் தின வரலாறு

மகளிர் தின வரலாறு

மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.


மகளிர் தின வரலாறு!


மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.


சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

திங்கள், 2 மார்ச், 2020

இந்திய தொழில்துறையின் தந்தை... பிறந்த தினம் !!


இந்திய தொழில்துறையின் தந்தை... பிறந்த தினம் !!
உலக வனவிலங்குகள் தினம்

🐅 உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

🐅 வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது, அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

📞 தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

📞 இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

📞 பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

📞 1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.

📞 ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார்.ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா


🏢 இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார்.

🏢 தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார்.

🏢 தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

🏢 இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்திற்கு அஸ்திவாரமாக இருந்த இவர் 1904ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் மறைந்தார்.👉 1940ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பிறந்தார்.