திங்கள், 25 மே, 2020

உலக ஆமைகள் தினம் மே 23


உலக ஆமைகள் தினம் மே 23.

உலக ஆமைகள் தினம் இன்று?முழு விவரம்.

ஆமைகள் தினமின்று
நிதானத்திற்காக பெயர் போன ஆமைகள், பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது.

அழிந்து வரும் உயிரினமான ஆமைக்கு ஆமைகள் தினம் கொண்டாடுவதன் மூலம், அவற்றின் அத்தியாவசியத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். இது ஆமைகளைப் பாதுகாக்க மற்றும் செல்லப் பிராணிகளாகப் பராமரிக்க ஊக்குவிப்பதாக அமையும். 1990ஆம் ஆண்டு அமெரிக்க ஆமை மீட்புக் குழுவை சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் என்னும் தம்பதியினர் தோற்றுவித்தனர். விலங்குகளின் மீது ஆர்வம் கொண்ட இந்த தம்பதியினர், 2000ஆம் ஆண்டிலிருந்து, ஆமை தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், இந்தப் பிராணியை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு உண்டாக்குவதைப் பணியாகக் கொண்டுள்ளார்கள்.

இதுவரையில் அமெரிக்க ஆமை மீட்புக் குழு, 3000 ஆமைகளைப் பராமரிப்பு இல்லங்களில் சேர்த்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் பராமரிப்பதிலும், கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட ஆமைகளின் நலனிலும் இக்குழு அக்கறைக் காட்டுகிறது.

ஆமை தினம் பல்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. ஆமைகள் போல உடை அணிந்து கொள்வது, நெடுஞ்சாலைகளில் வழி தவறிச் சென்ற ஆமைகளை மீட்டு அவற்றின் வாழ்விடங்களில் சேர்ப்பது, என்பதில் இருந்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆமைத் தொடர்பான கைவினைப் பொருட்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆமைகளைக் குறித்து அறிவாற்றலை வளர்ப்பது என பலவகையாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் ஆமைகள், குறிப்பாக பால் ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த ஆமைகளை காப்பாற்றுவதில் நம் சென்னை முக்கிய பங்களிப்பைத் தருகிறது. மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். இதில் சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன. சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை.

கடல் மைல்:கடல் பாசிகள், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு, சுவாசிக்கும் போது கடல் நீரை மாசுபடுத்தாமல், சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டதால் ஆமையை, ‘கடல் சுத்தி கரிப்பான்’ என, மீனவர்கள் அழைக்கின்றனர்.

ஆமைகள் மணிக்கு, 3 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன;

1972ஆம் ஆண்டு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து கொண்டிருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டது. மீன் பிடிப்பு, எண்ணெய் கசிவு , கரையோர முன்னேற்றத் திட்டங்கள் மேலும் பலக் காரணங்களால் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்த இனத்தை பாதுகாக்க சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

மாணவர் கடலாமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்பது 1971ஆம் ஆண்டு ரோமுலஸ் வித்தேகர் மற்றும் வள்ளியப்பனால் தொடங்கப்பட்டது. இது பின்னர் சென்னை பாம்புப் பண்ணை மற்றும் வனத் துறையால் தொடர்ந்து நடத்தி வரப் படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதுவரையில் 22,000 ரிட்லி இன சிறிய ஆமைகளை இக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு இரவும் கடற்கரைக்கு சென்று முட்டைகளையும் ஆமைக்கூடுகளையும் மீட்டெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆமை தின நடைபயணம் நீலாங்கரையில் இருந்து பெசண்ட் நகர் வரையில் ஏழு கிலோ மீட்டராக கடைப்பிடிக்கப்படிகிறது.

சனி, 16 மே, 2020

மே 17 இன்றைய வரலாறு


இன்றைய வரலாறு... உலக உயர் இரத்த அழுத்த தினம் !
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

கண்டுபிடிப்புகளையும் Pனுகு வடிவில் அறிந்துகொள்ள

இங்கே கிளிக் செய்யுங்கள் !உலக தொலைத்தொடர்பு தினம்



👉 உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத்தொடர்பு துறையும் ஒன்றாகும். தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி அன்று பாரிசில் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது.

👉 பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

👉 இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக தொலைத்தொடர்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

👉 மேலும், இச்சங்கம் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.உலக உயர் இரத்த அழுத்த தினம்


👉 உலக சுகாதார நிறுவனம் கார்டியோவாஸ்குலர் நோயினால் (இருதய நோய்) ஏற்படும் இறப்பு விகிதத்திற்கான முக்கிய காரணமாக உயர் இரத்த அழுத்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

👉 உலகத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய நிலை குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

👉 இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதியை உலக உயர் இரத்த அழுத்த தினமாக அறிவித்திருக்கிறது.எட்வர்டு ஜென்னர்


💉 பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார்.

💉 1765ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (ஊழற-pழஒ) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.

💉 பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

💉 பின்பு கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார்.

💉 இயற்கையையும், மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 1823ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.

வியாழன், 14 மே, 2020

உலக குடும்ப தினம் மே 15.


உலக குடும்ப தினம் மே 15.

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதைக் கவனத்தில் கொண்டுதான் ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

family day may 15

“இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதைக் கூட வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பது வேதனையிலும் வேதனை. ஆம்.. இளைய தலைமுறையினரின் மெத்தனப்போக்கு, தான்தோன்றித் தனம், கட்டுப்பாடில்லா வாழ்க்கை முறை போன்றவை தற்போது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. காதல், திருட்டு, வன்முறை போன்றவற்றால் பிஞ்சு மனம் நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம். மேலும் சீரழிந்து வரும் கலாசார மாறுபாடும் இது போன்ற சம்பவங்களுக்கு அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. கணவன், மனைவி உறவில் விரிசல், மாமியார், மருமகளிடையே நல்லிணக்கம் இல்லாமை போன்றவற்றால் காலம் காலமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும்.இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை.

உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.
பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை.

இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது.தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள், சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும்.

இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும்.

அதிலும் முன்னரே குறிப்பிட்ட இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. அதாவது ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போ விட்டோம்.முன்னெக்காம் கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருந்தவர்கள் சிலர் இருந்தன்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்டக் குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினமின்று மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்

திங்கள், 11 மே, 2020

உலக செவிலியர் தினம் மே 12 !


செவிலியர்கள் இன்னொரு 'தாய்'.. உலக செவிலியர் தினம் இன்று கொண்டாட்டம்

உலக செவிலியர் தினம் மே 12 !

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி.

ஒரு காலத்தில் செவிலியர் சேவை கவுரவமான, மரியாதைக்குரிய பணியாக கருதப்படவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களே செவிலியர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் உயர்ந்த செல்வ குடும்பங்களில் சமையல்காரிகளாகவும் கூட செவிலியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. இந்த நிலைமையை மாற்றி செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கியவர்தான் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.


நவீன தாதியல் முறை

இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தன்னை செவிலியர் பணியில் ஈடுபடுத்தி கொண்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சி பள்ளியையும் தொடங்கியவர். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் உயிரிழந்த ஏழையின் மரணமே இவரது பாதையை புரட்டி போட்டது. வறியவர்களுக்கென்று யாருமே உதவி புரிய இல்லையே? என்று மனம் நொந்து போனார். இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அதுமுதல் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அவரது அக்கறை நீண்டுகொண்டே சென்றது.

கை விளக்கேந்திய காரிகை

அதன் முத்தாய்ப்பாக அமைந்தது ஒரு சம்பவம். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தனர். அவர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதி குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார். உயிரிருக்கு போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலை கவுரவித்தனர். அதனால்தான் அவர் "கைவிளக்கு ஏந்திய காரிகை" என்றும் அழைக்கப்பட்டார்.

உணர்வுபூர்வமான தருணம்

அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கி கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் இல்லாவிட்டால் செவிலியர் துறை இந்த அளவுக்கு இவ்வளவு காலம் நீண்டு வளர்ந்திருக்காது. அதனால் அவரை நினைவுகூர்ந்து இன்றைய தினத்தில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்கள் அந்த மாளிகையில் ஒன்று கூடுவர். அப்போது விளக்கு ஒன்று ஏற்றப்பட்டு அது செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். அதாவது ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதே இதன் அர்த்தம். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும்.


செவிலியர்கள் - இன்னொரு தாய்
இதேபோல, தமிழகம் உட்பட உலகின் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், செவிலியர்கள் அனைவரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி, சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்வோம்; நோயாளிகளுக்கு மதிப்பளிப்பது, நோயாளிகளின் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்தான் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் மறுக்க முடியாததுமான விஷயம் ஆகும். "செவிலியர்கள் - இன்னொரு தாய்"!! அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!! மதிக்கத்தக்கது!! வணங்கத்தக்கது!!

சர்வதேச செவிலியர் தினம் மே 12.


 சர்வதேச செவிலியர் தினம் மே 12.

தன்னலமற்ற சேவை.. செவிலியர் பணியே.. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்..!!
சாதனையாளர்கள் இவ்வுலகை விட்டு சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும்,

 சர்வதேச செவிலியர் தினம்

சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்



செவிலியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (குடழசநnஉந Niபாவiபெயடந) 1820ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் 1850ஆம் ஆண்டு லண்டனில் பணிபுரிந்த போது ரஷ்யப் பேரரசுக்கும், பிரிட்டிஷ் பேரரசுக்கும் இடையே ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

இவர் 1883ஆம் ஆண்டு விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருதை பெற்றார். மேலும், 1907ஆம் ஆண்டு ஆர்டர் ஆஃப் மெரிட் (ழுசனநச ழக ஆநசவை) எனும் விருதையும் பெற்றார். இவர் இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 1895ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.
💐 1949ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
✍ 1881ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வட ஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ்வந்தது.


ஞாயிறு, 10 மே, 2020

மே 11 இன்றைய வரலாறு... தேசிய தொழில்நுட்ப தினம் !



தேசிய தொழில்நுட்ப தினம்



👉 இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

👉 இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவியல் துறையில் சாதனை செய்தவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன.சுத்தானந்த பாரதியார்


✍ கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன்.

✍ இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். சுத்தானந்தம் என பெயரிட்டு சித்தர் ஒருவர் இவருக்கு தீட்சை வழங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானவை. மேலும், இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

✍ இவர் தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். பல சீர்திருத்தப் பணிகளையும் செய்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது பாரத சக்தி நூலுக்குக் கிடைத்தது.

✍ ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்திய இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1909ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தமிழில் பல வெற்றிப் படங்களை தந்த அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் பிறந்தார்.


வெள்ளி, 8 மே, 2020

அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு க்கிழமை


அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு

அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.  இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.

அன்னையர் நாள்
Mother's Day
Mothers Day card.png
அன்னையர் தின வாழ்த்து அட்டை
கடைபிடிப்போர்
பல நாடுகள்
வகை
வணிக
நாள்
பிராந்தியரீதியாக மாறுபடும்
தொடர்புடையன
தந்தையர் தினம், பெற்றோர் நாள், குழந்தைகள் நாள்
விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை "ஹால்மார்க் விடுமுறை தினம்" என்று கருதினர். அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[1][2]

வரலாற்று முன்நிகழ்வுகள் தொகு
லாம்பர்ட்ஸ்[யார்?] இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.

பண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது. தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது. கன்னி மேரியையும் "மாதா தேவாலய"த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.[சான்று தேவை]

அன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.

ஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட "அன்னையர் தின அறிவிப்பானது" அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று. 1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.

உச்சரிப்பு தொகு
1912 ஆம் ஆண்டில், அன்னா ஜார்விஸ் "மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை" மற்றும் "அன்னையர் தினம்" ஆகிய வாக்கியங்களைப் பதிவுசெய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார்.[1][3]

"She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."[1]

இது உச்சரிப்பாக U.S. விடுமுறை தின சட்ட உருவாக்க அதிகாரிகள் கூட்டத்தில் அமெரிக்க ஒன்றிய அதிபர் உட்ரோ வில்சன் அவர்களாலும், அமெரிக்க ஒன்றிய காங்கிரஸ் அறிவிப்புக்களினாலும்,[4][5] மற்றும் பிற அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் அவர்களின் அறிவிப்புகளின் மூலமும் பயன்படுத்தப்பட்டது.[6]

ஆங்கில மொழியின் பொதுவான பயன்பாடானது, மேம்போக்காக "Mother's Day" என்று ஒருமையைக் குறிக்க உச்சரிக்கத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது, இருப்பினும் "Mothers' Day" (பன்மைக்கு) கேட்டறியத் தேவையில்லை என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமான தேதிகள் தொகு
படிமம்:Moederdag (1925).ogvஊடகத்தை ஓடவிடு
நெதர்லாந்தில் அன்னையர் தினம் (1925)
அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தை பிற நாடுகளும் கலாச்சாரமும் ஏற்றுக்கொண்டதால், ஐக்கிய இராச்சியத்தில் தாய் ஞாயிறு மற்றும் கிரீஸில் உள்ள கோயிலில் பாரம்பரிய இறை வழிபாடு போன்ற தாய்மையைப் பெருமைப்படுத்த ஏற்கனவே கொண்டாட ஏற்றதாக இருந்த தேதி மாறியது. சில நாடுகளில் இந்தத் தேதியானது கத்தோலிக்க நாடுகளில் உள்ள கன்னிமேரி தினம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் இறைத்தூதர் முகமதுநபியின் மகள் பிறந்ததினம், போன்று பெரும்பான்மையான மதத்தின் தனித்தன்மையாக இருந்த தேதிகளுக்கு மாற்றப்பட்டது. பிற நாடுகளில், பொலிவியாவில் அங்கு நடைபெற்ற குறிப்பிட்ட போரில் பங்குபெற்ற பெண்களின் பிறந்த தேதிகளைப் பயன்படுத்துவது போன்று வரலாற்றுத் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. முழுமையான பட்டியலுக்கு "சர்வதேச வரலாறும் பாரம்பரியமும்" பிரிவைக் காண்க.

குறிப்பு: சர்வதேச பெண்கள் தினத்தை அன்னையர் தினத்திற்குப் பதிலாகக் கொண்டாடும் நாடுகள் குத்துவாள் '†' குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளன
.
சர்வதேச வரலாறும் பாரம்பரியமும் தொகு
பெரும்பாலான நாடுகளில், அன்னையர் தினம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மதிப்பிடப்பட்ட விடுமுறை தினத்திலிருந்து வருவிக்கப்பட்டு சமீபத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இது பிற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களால் ஏற்கப்பட்ட பொழுது, அது வேறுபட்ட அர்த்தங்களை அளித்தது. வேறுபட்ட நிகழ்வுகளுடன் (மதங்கள், வரலாறு அல்லது புராணம்) தொடர்புடையதாக இருந்தது. மேலும் வேறுபட்ட தேதி அல்லது தேதிகளில் கொண்டாடப்பட்டது.

பல நாடுகளில் தாய்மையைப் போற்றும் கொண்டாட்டங்கள் ஏற்கனவே இருந்தன. அவற்றின் கொண்டாட்டங்கள் தங்கள் சொந்த அன்னைக்கு கார்னேஷன் மலர்கள் மற்றும் பிற பரிசுப்பொருட்களை வழங்குதல் போன்ற பல நீட்டிக்கப்பட்ட அம்சங்களை அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்திலிருந்து ஏற்றுக்கொண்டன.

கொண்டாட்டங்களின் நீட்சியானது பெரிதும் வேறுபடுகின்றது. சில நாடுகளில், தாயாக உள்ள ஒருவர் அன்னையர் தினத்தைக் கொண்டாடவில்லை எனில் அது குற்றமாகும். பிறவற்றில், இது நன்கறிந்த சிறிய விழாவாக முக்கியமாகக் குடியேறியவர்களால் கொண்டாடப்படுகின்றது அல்லது வெளிநாட்டு கலாச்சாரத்தின் (ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒப்பீடு) அம்சமாக ஊடகத்தால் வழங்கப்படுகின்றது.

மதம் தொகு
கத்தோலிக்கத் திருச்சபையில், விடுமுறை தினமானது கன்னி மேரியின் பெருமதிப்புடன் வலிமையான தொடர்புடையது.[22]

இந்து பாரம்பரியம், இதை "மாதா தீர்த்த ஆயுன்ஷி" அல்லது "தாய் அரைத்திங்கள் புனிதப் பயணம்" என்று அழைக்கின்றது. மேலும் இது இந்து மக்கள்தொகை அதிகமுள்ள, குறிப்பாக நேபாளத்தில் கொண்டாடப்படுகின்றது.

நாடுகள் தொகு
ஆப்பிரிக்க நாடுகள் தொகு
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அன்னையர் தினக் கருத்தை பிரிட்டிஷ் பாரம்பரியத்திலிருந்து ஏற்றுக்கொண்டன. இருப்பினும் முன்னாளில் ஐரோப்பிய சக்திகளால் ஆப்பிரிக்கக் குடியேற்றத்தைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல வேறுபட்ட கலாச்சாரங்களிடையே அன்னைகளைப் போற்றும் பல திருவிழாக்களும் நிகழ்ச்சிகளும் உள்ளன.

வங்கதேசம் தொகு
வங்கதேசத்தில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளானது அரசாங்கம் மற்றும் அரசுசாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சிகளுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. வங்கதேச சமூகத்தில் அன்னையர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்ட ரத்னகர்வா மா விருதை சில அன்னையர்கள் வழங்குகின்றனர். அன்னைகள், அவர்களின் குழந்தைகள் பின்னாளில் நாட்டின் சிறந்த குடிமகன்களாக வர பாராட்டும்படி சிறப்பான முறையில் வளர்த்ததற்காக கிராண்ட் ஆசாத் ஹோட்டல் வழங்கிய விருதைப் பெற்றனர். மேலும், தலைநகரில் அந்த தினத்தைக் குறிக்க வரவேற்பு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின மற்றும் செய்தித்தாள்கள் அந்த தினத்தைக் குறிக்க சிறப்பு அம்சங்களையும் பத்தியையும் வெளியிட்டன. வாழ்த்து அட்டைகள், மலர்கள் மற்றும் தாயின் சிறப்பை குழந்தைகளுக்கு காண்பிக்கும் பரிசுப்பொருட்கள் ஆகியவை கடைகளிலும் சந்தைகளிலும் இருந்தன.

பொலிவியா தொகு
பொலிவியாவில் அன்னையர் தினம் மே 27 அன்று கொண்டாடப்படுகின்றது. இது நவம்பர் 8, 1927 அன்று கரோனில்லா போரின் நினைவைக் கொண்டாட சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் போரானது தற்போதைய நகரான கொக்ஹபம்பாவில் மே 27 1812 அன்று நடைபெற்றது. இந்தப் போரில், பெண்கள் நாட்டின் விடுதலைக்காகச் சண்டையிட்டு ஸ்பானிஷ் இராணுவத்தால் வதைக்கப்பட்டனர்.

கனடா தொகு
கனடாவில் பொது விடுமுறை தினம்#பிற சடங்குகள் என்பதைக் காண்க.
அன்னையர் தின விடுமுறை தினமானது, புனித காதலர் தினம், புனித பாட்ரிக் தினம், தந்தையர் தினம் மற்றும் ஹாலோவீன் போன்று கனடாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.[சான்று தேவை] பெரும்பாலும் அனைத்து அம்சங்களிலும் இது, அமெரிக்க ஒன்றிய அன்னையர் தினத்தை ஒத்திருக்கின்றது.

சீனா தொகு
சீனாவில் அன்னையர் தினம் மிகவும் பிரபலமாகி இருக்கின்றது. மேலும் கார்னேஷன்கள் என்பது மிகவும் பிரபலமான பரிசு மற்றும் அதிகம் விற்பனையாகும் மலர் வகையாக உள்ளன.[23] 1997 ஆம் ஆண்டில், இது ஏழைத் தாய்மார்களுக்கு, குறிப்பாக சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமப்புற ஏழைத் தாய்மார்களின் உதவும் நாளாக அமைக்கப்பட்டது.[23] சீனாவின் கம்யூனிஷக் கட்சியின் பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையில் ஒரு கட்டுரையானது, "அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும், சீனாவிலுள்ள மக்கள் எந்தவிதத் தயக்கமின்றி விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். ஏனெனில் இது தேசத்தின் பாரம்பரிய நன்னெறிகளுடன் சீராகச் செல்லுகின்றது -- பெற்றோர்களுக்கு மூத்தோர் மற்றும் மகளுக்குரிய பற்றுடன் மரியாதை செய்கின்றது" என்று விவரித்தது.[23]

சமீப காலத்தில் சீனாவின் கம்யூனிஷ கட்சியின் உறுப்பினர் லி ஹங்கியூ, மேங்க் ஸீயின் தாயான மேங்க் மூ அவர்களின் நினைவாக அன்னையர் தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு பரிந்துரைக்கின்றார். அவர் சீன அன்னையர் திருவிழா ஊக்குவிப்பு அமைப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பை 100 கன்ஃப்யூசியல் அறிஞர்கள் மற்றும் நன்னெறிகளின் விரிவுரையாளர்களின் ஆதரவைக் கொண்டு உருவாக்கினார்.[24][25] மேற்கத்திய கார்னேஷன் மலர்களைக் கொண்ட பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக, பண்டைய காலத்தில் குழந்தைகள் வீட்டில் விட்டுச்சென்ற பொழுது சீன தாய்மார்களால் வளர்க்கப்பட்ட லில்லி மலர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் கூறினர்.[25] இது குறைந்த எண்ணிக்கையிலான நகரங்கள் தவிர மீதி இடங்களில் இன்னமும் அதிகாரப்பூர்வமற்ற திருவிழாவாக உள்ளது.

கிரீஸ் தொகு
கிரீஸில் அன்னையர் தினமானது, ஆலயத்தில் இயேசு பற்றிய விளக்கக்காட்சியைக் கொண்ட கிழக்கத்திய பாரம்பரியம் திருவிழா தினத்தினை ஒத்திருக்கின்றது. இந்த திருவிழா தினத்தில் தியோடோகோஸ் (கடவுளின் தாய்) முக்கியமாகத் தோன்றியதிலிருந்து ஜெருசலேமிலுள்ள ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்துவை கொண்டுவருவது வரையில், இந்த திருவிழா தினமானது அன்னையர்கள் தொடர்புடையது.

இந்தியா தொகு
தேசிய அளவில் அன்னையர் தினம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.[26]

பத்தரே பிரபு திருவிழாவானது அதே நாளில் பம்பாய் மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் (உறுதியாக கொங்கன் மற்றும் மேற்கத்திய மலைத்தொடர்களின் கீழே அமைந்துள்ள மாவட்டங்கள்) மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இது பிறந்து ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்து இறந்த குழந்தைகளின் தாய்மார்கள் பற்றிய புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது மிகவும் தகவல் தொடர்பற்ற தூரமான இடத்தில் தோன்றியது. இருந்த போதிலும் இதுவும் "அன்னையர் தினம்" என்றழைக்கப்படுகின்றது. இதற்கும் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து நகலாக வந்து நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவீன கொண்டாட்டத்திற்கு தொடர்பின்றி இருக்கின்றது. பத்தரே பிரபு பிரிவினர் இந்த விடுமுறையை எப்போதும் கொண்டாடுகின்றனர்.[26]

ஈரான் தொகு
20 ஜூமாடா அல்தானியில், முகமதுவின் மகள் பாத்திமாவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றது.[27] இது பின்னர் ஈரானியப் புரட்சி தினமாக மாறியது. இதற்கான காரணம், பெண்ணிய நடவடிக்கைகளை குறைத்து குடும்பத்தின் பாரம்பரிய மாதிரிகளுக்கான முன்மாதிரியை வழங்க முயற்சிப்பதாகக் கொள்கைப்படுத்தப்பட்டுள்ளது.[28][29] இது முன்னதாக ஈரானிய நாட்காட்டியில் ஷா சகாப்தத்தில் 25 அசார் ஆக இருந்தது[சான்று தேவை]

ஜப்பான் தொகு
ஜப்பானில் அன்னையர் தினம் தொடக்கத்தில் ஷோவா காலம் நடைபெற்ற போது பேரரசி கோஜூன்வின் (பேரரசர் அக்கிஹிட்டோவின் தாயார்) பிறந்த தினமாக அனுசரிக்கப்பட்டது. தற்போது இது வணிகப்படுத்தப்பட்ட விடுமுறை தினமாக உள்ளது. மக்கள் வழக்கமாக கார்னேஷன் மற்றும் ரோஜா போன்ற மலர்களை பரிசாக அளிக்கின்றனர்.

மெக்சிகோ தொகு
அல்வரோ அப்ரேகன் அரசாங்கம் 1922 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்து, அதே ஆண்டு எக்ஸெல்சியர் செய்தித்தாளைக் கொண்டு அதை பெரிதும் முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை உருவாக்கியது.[30] பழமை விரும்புகிற அரசாங்கமானது, குடும்பங்களில் அன்னைகளின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்தை வலியுறுத்த இந்த விடுமுறையைப் பயன்படுத்த முயற்சித்தது. முன்னிலைப்படுத்தும் பெண்ணின் இந்த இயல்பற்ற உருவகம் இனப்பெருக்கத்தை விடவும் மிகுந்த மதிப்பு மிக்கதாக இல்லை என்று சமதர்மவாதிகளால் விமர்சிக்கப்பட்டது.[30]

1930களின் இடைக்காலத்தில், லாசரோ கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை "நாட்டுப்பற்றுத் திருவிழா"வாக வழங்கியது. கார்டேனஸ் அரசாங்கம் விடுமுறை தினத்தை வாகனமாகப் பயன்படுத்த முயற்சித்த பல்வேறு விளைவுகள்: குடும்பங்கள் தேசிய வளர்ச்சியில் பங்குபெறுவதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுதல், மெக்சிகர்கள் தங்களது தாய்களின் மீது கொண்டிருந்த பற்றுறுதியிலிருந்து நன்மையைப் பெறுதல், மெக்சிகன் பெண்களின் மூலமாக புதிய படிப்பினைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் மீது தேவாலயம் மற்றும் கத்தோலிக்க உரிமை கொண்டிருந்த தாக்கத்தைக் குறைத்தல்.[31] அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறையை வழங்கியது.[31] இருப்பினும், திரையரங்க நாடகங்கள் அரசாங்கத்திடமிருந்து வந்த கண்டிப்பான வழிமுறைகளை தவிர்த்துவிட்டு, அவை மதம்சார்ந்த ஐகான்கள் மற்றும் தீம்களைக் கொண்டு நிரப்பின. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மாறாக "தேசிய கொண்டாட்டங்கள்" "சமய விழாக்களாக" மாறின.[31].

அதிபர் மானுவேல் அவிலா காமக்கோ அவர்களின் மனைவி சோலேதத் ஓரோஸ்கோ கார்சியா, 1940களின் போது இந்த விடுமுறை தினத்தை பரப்பி, அதை முக்கியமான தேசம் வழங்கிய கொண்டாட்டமாக உருவாக்கினார்.[32] 1942 ஆம் ஆண்டில் கொண்டாட்டமானது வாரம் முழுவதும், அனைத்துப் பெண்களும் தங்களது அடகு வைக்கப்பட்ட தையல் எந்திரங்களை எந்தவித பணமும் செலுத்தாமல் மாண்டே டே பியாதத்திடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் கொண்டாடப்பட்டது.[32]

ஓரோஸ்கோவின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து, 1941 ஆம் ஆண்டில் விடுமுறை தின விழிப்புணர்வை ஏற்படுத்த கத்தோலிக்க தேசிய சைனர்கிஸ்ட் யூனியன் (UNS) தொடங்கப்பட்டது.[33] மெக்சிகன் புரட்சிக் கட்சியின் (தற்போது PRI) உறுப்பினர்கள், சொந்தமாக வைத்துள்ள கடைகளுக்கு அன்னையர் தினத்தில் செல்லும் ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்கள், அவர்களில் கடையிலிருந்து இலவசமாக எடுத்துச் சென்று அதை அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கலாம். இது பொருள் நிலைக் கொள்கை மற்றும் அடித்தட்டு வர்க்கத்தின் இயலாமை இரண்டையும் வலியுறுத்துவதாகவும், நாட்டின் பரவியுள்ள சமுதாயப் பிரச்சினையை மீண்டும் வலுவூட்டும் படியாக உள்ளதாகவும் சைனர்கிஸ்ட்கள் கவலையடைந்தனர்.[34] தற்போது இந்த மாதிரியான விடுமுறை தினத்தை மிகவும் பழமையானதாக நாம் பார்க்கும் அதே வேளையில், 1940களில் UNS அமைப்பானது அந்த விடுமுறை தினத்தை அந்த நேரத்தில் நிகழ்ந்திருக்கின்ற நவீனமாக்கலின் மிகப்பெரிய தொடக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்த்தனர்.[35] இந்த பொருளாதார நவீனமயமாக்கல் அமெரிக்க ஒன்றிய மாதிரிகளை பாதிப்பாகக் கொண்டு இது தேசத்தால் வழங்கப்பட்டது. மெக்சிகன் சமுதாயத்தில் முதலாக்கம் மற்றும் பொருள் நிலைக் கொள்கையை விதிக்கும் முயற்சி என்பதற்கான மேலும் ஒரு ஆதாரமாகக் காணும் போது மட்டுமே இந்த விடுமுறை தினமானது அமெரிக்க ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதற்கான காரணம் விளங்குகின்றது.[35]

மேலும், UNS மற்றும் லியோன் நகரின் கிளர்க் ஆகியோர் விடுமுறை தினத்தை சமயச் சார்பின்மையாக மாற்றும் விளைவு மற்றும் வீட்டில் பாரம்பரியச் செயல்பாடுகளிலிருந்து ஆண்களின் அடக்குமுறைகளில் நீண்டகாலமாக இருக்கும் பெண்களை விடுவித்து, சமூகத்தில் பெண்களின் மிகுதியான செயல்பாட்டை ஊக்குவிக்கும் விளைவுகளைக் கண்டனர்.[35] அவர்கள் விடுமுறை தினமானது கன்னி மேரிக்குச் செய்யும் சமயச் சடங்குகளை சமயச் சார்பின்மையாக மாற்றும் முயற்சியை பல விடுமுறை தினங்களில் கிறிஸ்துவத்தை மாற்றும் மிகப்பெரிய முயற்சிகள் வாயிலாகக் கண்டனர். அவர்கள் இதை மறுக்க பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தின் மூலம் முயற்சித்தனர். சமயம் சார்ந்த பெண்களை தேசம் வழங்கிய நிகழ்ச்சிளுக்கு உதவிபுரிய கேட்டு அவற்றை "மறுவடிமைக்க" முயற்சித்தனர்.[36] 1942 ஆம் ஆண்டில், சோலேதத்தின் விடுமுறை தினத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நேரத்தில், கிளர்க் லியோன் நகரில் கன்னிமேரியின் 210 ஆவது கொண்டாட்டத்தை பெரிய அணிவகுப்புடன் ஏற்பாடு செய்தது.[36]

1940 களில் மெக்சிகன் அரசாங்கம் அன்னையர் தின தாக்கத்தின் விளைவுகள் உட்பட அதன் புரட்சியை விட்டுவிட்டது என்ற ஒருமித்த கருத்து ஆராய்ச்சியாளர்களிடையே நிலவியது.[33] இப்பொழுது மெக்சிகோவில் விடுமுறை தினமானது அன்னையர் மற்றும் கன்னி மேரி தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தற்போது "தியா டே லாஸ் மாட்ரேஸ்" என்பது மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் மே 10 அன்று அதிகாரப்பூர்வமற்ற விடுமுறை தினமாக உள்ளது.[37]

நேபாளம் தொகு
"மாதா தீர்த்த ஆயுன்ஷி" என்பது "தாய் புனிதயாத்திரை அரைத்திங்கள்" என மொழிமாற்றப்பட்டது. இது பைஷாக் மாதத்தின் இருண்ட அரைத்திங்களில் (ஏப்ரல்) வருகின்றது. இந்தத் திருவிழாவானது அமாவாசை நேரத்தில் வரும். இது, "மாதா தீர்த்த ஆயுன்ஷி" என அழைக்கப்படுகிறது, ஏனெனில்: “மாதா” என்பதன் பொருள் அன்னை; “தீர்த்தா” என்பதன் பொருள் புனிதயாத்திரை. இந்தத் திருவிழாவானது நினைவு தினமாக மற்றும் வாழும் அன்னையர்களை வணங்கியும் பரிசில் வழங்கியும் மரியாதை செய்யும் பொருட்டு அல்லது பேறு அடைந்து அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் அன்னையர்களை நினைவு கூரும் பொருட்டு கடைபிடிக்கப்படுகின்றது. காத்மண்டு பள்ளத்தாக்கினை நோக்கி கிழக்குப் பக்கமாக மாதா தீர்த்தக் கிராமத்தின் மேம்பாட்டுக் கமிட்டியின் புற எல்லையில் அமைந்துள்ள மாதா தீர்த்த யாத்திரைக்குச் செல்வது நேபாளத்தில் பொதுவாக உள்ள மற்றொரு பாரம்பரியம் ஆகும்.

இந்த புனித யாத்திரை சம்பந்தமான ஒரு புராணக்கதை உள்ளது. பழங்காலத்தில் கடவுள் கிருஷ்ணரின் தாய் தேவகி சுற்றிப்பார்க்க வீட்டைவிற்றுச் சென்றுவிட்டார். அவர் நிறைய இடங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வெகுநேரம் ஆனது. தனது தாய் அங்கு இல்லாததால் கிருஷ்ணர் மிகுந்த வருத்தமடைந்தார். எனவே அவர் வெளியே சென்று பல இடங்களில் அவரது தாயைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, அவர் "மாதா தீர்த்த குண்டா"வை அடைந்தபொழுது, அங்குள்ள குளத்தின் நீர்வெளியேறும் பகுதியில் அவரது தாய் குளித்துக் கொண்டிருப்பதைக் பார்த்தார். கிருஷ்ணர் தனது தாயைக் கண்டவுடன் மிகுந்த சந்தோஷமடைந்து, அவர் இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சோகங்களைப் பற்றி விளக்கினார். தாய் தேவகி கிருஷ்ணரிடம், "ஓ! மகனே கிருஷ்ணா கவனி, இனி இது சமயப்பற்றுள்ளவர்கள் ஏற்பாடு செய்து தங்களது இறந்த அன்னையர்களை சந்திக்கும் இடமாக இருக்கும்” என்று கூறினார். எனவே, அதிலிருந்து இந்த இடம் இறந்த அன்னையின் மீது பற்றுள்ளவர்கள் அவர்களைக் காண புனித யாத்திரை செய்யும் இடமாக இது குறிக்கப்பட்டதைப் புராணங்கள் நம்புகின்றன. பற்றாளர் அவரது தாயின் உருவத்தை குளத்தின் உள்ளே தெரிவதைக் கண்டு தானும் அங்கே வீழ்ந்து இறப்பதும் நிகழ்ந்துள்ளதாக புராணம் நம்புகின்றது. இன்னமும் அங்கு சிறிய குளம் உள்ளது. அதே போல் தற்போதும் அங்கு நடைபெறக் கூடாது என்பதற்காக குளத்தைச் சுற்றிலும் இரும்புக் கம்பியினால் ஆன வேலி இடப்பட்டுள்ளது. வழிபாட்டிற்குப் பின்னர், யாத்திரையில் அந்நாள் முழுவதும் திருவிழா கோலத்தில் பாடல் மற்றும் ஆடலுடன் கொண்டாடப்படுகின்றது. இந்தப் பழங்கதைகளைப் படித்த பெரியவர்கள் வழியில் வந்துள்ளது போன்று, இது நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

தாய்லாந்து தொகு
தாய்லாந்தில் அன்னையர் தினமானது தாய்லாந்தின் அரசியான ஸ்ரீகிட் பிறந்த நாளில் (12 ஆகஸ்ட்) கொண்டாடப்படுகின்றது.[38] இது தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரேம் தின்சுலனோந்தா அவர்களால் தாய்லாந்தின் ராஜ குடும்பத்தை முன்னிறுத்தும் பிரச்சாரத்தின் பகுதியாக 1980களில் கொண்டாடத் தொடங்கப்பட்டிருக்கின்றது. தந்தையர் தினம் அரசனின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.

ரோமானியா

ரோமானியாவில் இது, அன்னையர் தினம் மற்றும் மகளிர் தினம் என இரண்டு தனித்தனி விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பிரிட்டன் மற்றும் அயர்லாந்து தொகு
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில், தாய் ஞாயிறு லெண்ட் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் வருகின்றது. அதாவது மிகச்சரியாக பெரிய ஞாயிறுக்கு மூன்று வாரங்கள் முன்பு வருகின்றது (2009 இல் மார்ச் 22). இது வருடம் ஒருமுறை மாதா தேவாலயம் சென்றுவருதல் என்ற 16 ஆம் நூற்றாண்டு கிறிஸ்துவ நடைமுறையிலிருந்து தோன்றியதாக நம்ப்படுகின்றது. பெரும்பாலான அன்னையர் இந்த நாளில் அவர்களின் குழந்தைகளை ஒருங்கிணைக்கின்றனர் என்பது இதன் பொருளாகும். பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள், பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் அடிமைப்பணி செய்யும் இளம்பெண்கள் அவர்களின் எஜமானர்களால் அந்த வாரத்தில் அவர்களின் குடும்பங்களைக் காணும் பொருட்டு விடுவிக்கப்படுகின்றனர்.  சமயச்சார்பின்மையின் விளைவால், அது இப்பொழுது வேறொருவரின் அன்னைக்கு பாராட்டித் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அது இன்னமும் பல தேவாலயங்களால் வரலாற்று ரீதியில், இயேசு கிறிஸ்துவின் அன்னையான மேரியை வழிபடுதல், அதே போன்று பாரம்பரியக் கோட்பாடான 'மாதா தேவாலயம்' ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

தாய் ஞாயிறானது முன்னதாக 1 மார்ச் அன்றும் (பெரிய ஞாயிறு 22 மார்ச் அன்று வரும் வருடங்களில்), இறுதியாக 4 ஏப்ரல் அன்றும் (பெரிய ஞாயிறு 25 ஏப்ரல் அன்று வரும்பொழுது) வரலாம்.

அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடாவில் அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

வியட்நாம்

வியட்னாமில் அன்னையர் தினம் லே வூ-லான் என்றழைக்கப்படுகின்றது. அது lலூனார் நாள்காட்டியில் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் கொண்டாடப்படுகின்றது. வாழும் அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களுக்கு நன்றி செலுத்துவர், இறந்தவிட்ட அன்னையர்களைக் கொண்ட மக்கள் அவர்களின் ஆன்மாவிற்காகப் பிராத்திப்பார்கள்.[சான்று தேவை]

வணிகமயமாக்கல் தொகு
முதல் அதிகாரப்பூர்வ அன்னையர் தினத்திற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்க ஒன்றிய விடுமுறை தினத்தின் வணிகமயமாக்கலானது மிகவும் மலிவாகிவிட்டது. அன்னா ஜார்விஸ் அவராகவே வணிகமாக மாறிய அந்த விடுமுறை தினத்தின் முக்கிய எதிர்ப்பாளராக மாறினார். அவரின் பரம்பரை உடைமை மற்றும் மீதமுள்ள வாழ்க்கை அனைத்தையும் கொண்டாட்டத்தின் முறைகேடாகத் தான் கண்டதை எதிர்த்துப் போராட செலவளித்தார்.[

பின்னர் அன்னையர் தினப் பயன்பாட்டின் வணிக மற்றும் பிற வெளிப்பாடுகள் அன்னாவை சினமூட்டியது. அவர் தனது விமர்சனங்களை அவரது காலம் முழுமையும் வெளிப்படையாகத் தெரியும்படி வெளியிட்டார். அவர் தனிப்பட்ட கடிதங்களை எழுத மிகவும் சோம்பேறித் தனமாக்குகின்ற வாழ்த்து அட்டைகளை வாங்கும் நடைமுறையை விமர்சித்தார். 1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தின் வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியைச் சீர்குலைத்ததற்காக கைது செய்யப்பட்டார். "இதுமாதிரி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த நாளைத் தொடங்கியிருக்க மாட்டேன், ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது ..." என்று அவர் இறுதியாகத் தெரிவித்தார்.

வணிக ரீதியில் மிகவும் வெற்றிபெற்ற அமெரிக்க ஒன்றிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் தொடர்ந்து வருகின்றது. தேசிய உணவுவிடுதி கூட்டமைப்பு கணிப்பின் படி, அன்னையர் தினமானது இப்பொழுது அமெரிக்காவில் உணவுவிடுதியில் இரவு விருந்துக்கு ஆண்டின் மிகவும் பிரபலமான நாளாக இருக்கின்றது.[41]

எடுத்துக்காட்டாக, IBISWorld என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின் படி, அமெரிக்கர்கள் ஏறக்குறைய மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், ஸ்பா சிகிச்சைகள் போன்ற விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும் மற்றும் பிற வாழ்த்து அட்டைகளுக்கு 68 மில்லியன் டாலர்களும் செலவு செய்வர்.[42]

அன்னையர் தினமானது 2008 ஆம் ஆண்டில் அன்னையர்களுக்கான மோதிரங்கள் போன்ற பரிசுப் பொருட்களுடன் அமெரிக்க ஒன்றிய நகைத் தொழில்துறையின் ஆண்டு வருமானத்தின் 7.8% ஐ உருவாக்கியது.[43]

விடுமுறை தினமானது மலர் வழங்கும் துறை மற்றும் பிற வணிகத் தொழில்துறை ஆகியவற்றின் ஆதரவும் தொடர்ச்சியான முன்னெடுப்பும் இல்லை எனில் வாடிவிடும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வரும் குழந்தைகள் தினம் மற்றும் மதுஒழிப்பு தினம் போன்ற பிற புரோட்டஸ்டண்ட் விடுமுறை தினங்கள் அதே அளவிலான பிரபலத்தைக் கொண்டிருக்கவில்லை

சனி, 2 மே, 2020

பூக்களை போன்று பூத்து குலுங்குவோம்... இன்று உலக சிரிப்பு தினம் !



பூக்களை போன்று பூத்து குலுங்குவோம்... இன்று உலக சிரிப்பு தினம் !

உலக சிரிப்பு தினம்

😃 ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன்முதலில் 1998ஆம் ஆண்டு டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது.

😃 அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன்



🎤 சோல் இசையின் தந்தை ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (துயஅநள துழளநிh டீசழறn) 1933ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தென் கரோலினாவில் (அமெரிக்கா) உள்ள பார்ன்வெலில் பிறந்தார்.

🎤 இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிக முக்கியமானவர். மேலும், பலத்த குரலில் பாடுவது, பாடிக்கொண்டே நடனம் ஆடுவது போன்று தனக்கென தனித்தன்மையை பெற்றிருந்தார்.

🎤 பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். இதுமட்டுமல்லாமல் ராக், ஜாஸ், டிஸ்கோ, டான்ஸ், இலத்திரனிசை, ரெகே, ஆஃப்ரோ-பீட், ஹிப் ஹாப் போன்ற இசை முறைகளிலும் இவர் தனது சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார்.

🎤 திரைப்படத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் என்ற பெயர் கொண்ட இவர் 2006ஆம் ஆண்டு மறைந்தார்.சுஜாதா



✍ தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா 1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எஸ்.ரங்கராஜன்.

✍ 1962ஆம் ஆண்டு இவருடைய, இடது ஓரத்தில் என்ற சிறுகதை குமுதம் என்ற இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு தன் மனைவி பெயரான சுஜாதா-வின், பெயரை தன் புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

✍ இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

✍ சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🎬 1913ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.🏁 1969ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் மறைந்தார்.


உலக சிரிப்பு தினம்! மே மாதம் முதல் ஞாயிறு..!


உலக சிரிப்பு தினம்! மே மாதம் முதல் ஞாயிறு..!

ஹா.. ஹா… ஹா..வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழியை கொண்டாடும் உலக சிரிப்பு தினம் பத்திய மினி குறிப்பு..

வருஷா வருஷம் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை என்பது தான் உண்மை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து மகிழ்கின்றனர்.


இத்தனைக்கும் இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா என்பவர்தான் ஆரம்பிச்சு வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர். இப்போ மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

தற்போதுஉலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கேன 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் செயல்படுகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது, இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது. மேலும், அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.

அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது. இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக இருக்கிறது. நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான். அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்விடுகின்றன என்பது எதற்த்தமாகும். சிரிப்பு என்பது ஒரு யோகக் கலையாகக் கூட சொல்லலாம். இவை, உடம்புக்கும் மனதிற்கும் நல்லதாகும். எனவே, சிரிப்போம் சிந்திப்போம் சிநேகமாக வாழ்வோம். ஒவ்வொரு தினமுமே சிரிப்பு தினமாகக் கொண்டாடுவோமே.