செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ஏப்ரல் 21 வரலாற்றில் இன்று



ஏப்ரல் 21 வரலாற்றில் இன்று :
 தேசிய குடிமை பணிகள் தினம்..!!

👉 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

👉 நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மேக்ஸ் வெபர்


✍ உலக புகழ்பெற்ற சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் நகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மேக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்.

✍ இவர் 1903ஆம் ஆண்டு பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார்.

✍ 1905ஆம் ஆண்டு இவர் எழுதிய 'தி ப்ரொடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கேப்பிடலிசம்" கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது. பின்பு அது புத்தகமாக வெளியிடப்பட்டது.

✍ பொது நிர்வாகத்துறையிலும், சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளை தொடங்கி வைத்த மேக்ஸ் வெபர் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.
வி.கிருஷ்ணமூர்த்தி


✍ சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.

✍ இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்" என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிக்கைகள் மாநாட்டில் இவரது பத்திரிக்கை முதல் பரிசு பெற்றது.

✍ இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா" என்று பெயர் சூட்டினார்.

✍ கல்கியின் 'கோகுலம்" குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

✍ 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய இவர் 2014ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக