வியாழன், 11 நவம்பர், 2010

இசைக்குயில் பி. சுசீலா உதய நாள் நவம்பர் 13,

இசைக்குயில் பி. சுசீலா உதய நாள் நவம்பர் 13,
பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935) இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நான்கு தசாப்தங்களாக 2500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
இசைத் துறையில்
சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். கலைமாமணி பட்டம் பெற்ற இவருக்கு ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.
விருதுகள்
*இந்திய அரசின் பத்ம பூஷன் விருது - ஜனவரி 2008
*தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகி விருது ஐந்து தடவைகள்
*ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது (2001)
பி.சுசிலா பாடிய சில பாடல்கள்:
ஆலயமணியின் ( பாலும் பழமும் )


யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )

பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )

காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )

இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )

தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )

முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )

அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )

பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )

தூது செல்ல ( பச்சை விளக்கு )

பக்கத்து வீட்டு ( கற்பகம் )

நெஞ்சத்திலே நீ ( சாந்தி )

லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )

அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )

சிட்டுக்குருவி ( புதியபறவை )

அத்தை மகனே ( பாத காணிக்கை )

கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )

கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )

ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )

ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )

நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )

நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )

அழகே வா ( ஆண்டவன் கட்டளை )

உன்னைக் காணாத ( இதய கமலம் )

என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )

இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )

கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )

மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )

மலரே மலரே ( தேன் நிலவு )

மன்னவனே ( கற்பகம் )

நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )

நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )

காதல் சிறகை ( பாலும் பழமும் )

ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )

ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )

தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )

சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )

என்ன என்ன ( வெண்ணிற ஆடை )

அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )

காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )

அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )

பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )

பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )

உன்னை ஒன்று ( புதிய பறவை )

என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )

அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )

காண வந்த ( பாக்யலெட்சுமி )

மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )

பச்சை மரம் ( ராமு )

தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )

சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )

இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )

உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )

தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )

வெள்ளிக்கிழமை ( நீ )

ரோஜா மலரே ( வீரத்திருமகன் )

ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )

தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )

காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )

மதுரா நகரில் ( பார் மகளே பார் )

அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )

என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )

காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )

மெளனமே பார்வையால் ( கொடி மலர் )

பால் வண்ணம் ( பாச மலர் )

போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )

வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )

பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )

ஒருத்தி ஒருவனை ( சாரதா )

ஒரே கேள்வி ( பனித்திரை )

நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )

இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )

ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )

யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )

ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )

மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )

என் கண்மணி ( சிட்டுக்குருவி )

விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )

தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )

மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )

பேசுவது கிளியா ( பணத்தோட்ட )

அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )

அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )

வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )

அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )

அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )

நான் மலரோடு ( இரு வல்லவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக