வியாழன், 30 மே, 2019

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.


உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'புகையிலை மற்றும் நுரையீரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

 புகைபிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு, இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.80 லட்சம்: புகையிலை பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 10 லட்சம் பேர், புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள்.10 இந்தியாவில் புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 10 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களில், 6.25 லட்சம் பேர் தினமும் சிகரெட் புகைக்கின்றனர்.1,000 உலகில் தினமும் ஆயிரம் கோடி சிகரெட் பயன்படுத்தப்படுகிறது.4 உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் புகையிலையால் உயிரிழக்கின்றனர்.50 புகைப்பவர்களில், 50 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.4,000
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இதில் 250 தீங்கு விளைவிப்பன மற்றும் 50, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

78உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது.


உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.

புகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.

இதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். #NoTobacco #WorldNoTobaccoDay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக