செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தேசிய கண் தான நாள். செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி

செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண் தான நாள்.


"நமது விழிகளால் அவர்கள் சிரிக்கட்டும்.

அவர்களைக் கண்டு நம் வாரிசுகள் மகிழட்டும்."
நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏன் கண்தானம்: நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல். இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 1 கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
யார் கண்தானம் செய்யலாம்: ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது.
செய்ய வேண்டியவை: கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும்.
கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது வெளியிடப்படுகிறது. கண் தானம் ஏன் செய்ய வேண்டும் ? கண் தானத்தினால் எப்படி உதவி செய்யமுடியும் ? செய்ய வேண்டியது என்ன ? என்பதைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு தகவல்தான் இது.
1) எப்படி உதவி செய்ய முடியும் ?
*************************
மரணமடைந்தவர்களுடைய கண்களை, அவர் இறந்த ஆறு மணிநேரத்திற்குள், கண் வங்கிகளைத் தொடர்புக் கொண்டு தானமாக அளிக்கலாம். அதற்காக காலம் தாழ்தாமல் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் தொடர்புக் கொண்டு தானமாகக் கொடுங்கள்.
2) ஏன் கண் தானம் செய்ய வேண்டும் ?
*****************************
கார்னியா பார்வைக் கோளாறினால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்காது. கண் மாற்று அறுவை சிகிச்சை(ஆப்ரேஷன் ) மூலமாகத்தான், அவர்களுக்கு மீண்டும் பார்வைக் கிடைக்க சாத்தியமாகும். எனவே தான் நாம் கண் தானம் செய்யவேண்டும்.
3)கண் வங்கி என்பது என்ன ?
**********************
மரணமடைந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியா கண் மாற்று ஆப்ரேஷனுக்காக வினியோகிக்கும் அமைப்பே, கண் வங்கி என அழைக்கப்படுகிறது.
4) கார்னியா என்பது என்ன ?
**********************
நம் கண்களுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்தக் குழாய்கள் எதுவுமில்லாத ஒரு மெல்லிய திசு கண்ணுக்கு ஒரு சன்னலைப் போல அமைந்துள்ளது. இதுவே கார்னியா என அழைக்கப்படுகிறது. தமிழில் 'விழி வெண்படலம்' எனலாம். இதை படித்தோ, கேட்டோ, அறிந்தோ இருப்பீர்கள்.
5) கார்னியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?
*****************************
தொற்றுநோய் கிருமிகள், விபத்துக்கள், ஊட்டச்சத்து குறைவு காரணமாக, கண் சிகிச்சை குறைப்பாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியாவானது பாதிக்கப்படுகிறது.
6) யார் கண் தானம் செய்யலாம் ?
*************************
ஒரு வயது நிரம்பிய குழந்தைகளிலிருந்து அதிகபட்ச வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.
7)உறவினர் செய்ய வேண்டியது என்ன ?
******************************
இறந்தவர்களின் கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஜஸ் கட்டிகளை, இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும். தலைக்கு நேராக, மேலாக சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிடவேண்டும். தலையை (6) ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து, உயர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால், மருத்துவர்கள் வரும்வரை, இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளி நேரம் விட்டு போடலாம்
8) பொது மக்கள் அல்லது உறவினர் என்ற முறையில் கண்தான இயக்கத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்வது ?

******************************
அ)நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்தால், அவரது கண்களை தானம் செய்யும்படி அவரது நெருங்கிய உறவினரை ஊக்குவித்து, அவரது சம்மத்ததுடன் 044-28281919 மற்றும் 044-28271616 என்ற தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டால், மருத்துவர்கள், மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள்.

ஆ)நம் கண்களையும், நமது குடும்பத்தார் கண்களையும் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தூண்டலாம். நேரில் செல்லத் தேவையில்லாமலேயே, தொலைப்பேசி அல்லது இ-மெயில் மூலமாகவோ, நமது பெயர்,முகவரி,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் :: 044-28271616, 044-28271036.

இ-மெயில் முகவரி [e-mail]:: api@snmail.org,irungovel@gmail.com

இவ்வாறு சென்னை சங்கர நேத்ராலயா கண்வங்கி தலைவர் திரு.அ.போ.இருங்கோவேள்

கைதொலைபேசி எண் [mb.no:] 98408 21919 அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக