வியாழன், 26 ஜனவரி, 2017

தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .




தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் பிறந்த நாள் ஜனவரி 27 .

நெல்லைக் கண்ணன் (பிறப்பு: சனவரி 27, 1945) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்[சான்று தேவை].

திருநெல்வேலியில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாயார் முத்துஇலக்குமி, இவருடன் உடன் பிறந்தோர் எட்டுப் பேர். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லைக் கண்ணன்
தந்தை - ந.சு. சுப்பையாபிள்ளை

தாய் - முத்துஇலக்குமி அம்மாள்

ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.

எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.

ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.

1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.

முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.

இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.

இரண்டாம் மனைவி தெய்வநாயகி

தமிழறிவு, தந்தை தந்தது. தந்தையாரின் மிகப்பெரிய நூலகம், தந்தையார்
பள்ளியே செல்லாதவர், தமிழறிஞர்கள் பலர் அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்.
-எழுதியது நெல்லை கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக