புதன், 3 அக்டோபர், 2018

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை


உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை

உலக புன்னகை தினம் என்பது அக்டோபர்
மாதம் முதல் வெள்ளிக்கிழமை
கொண்டாடப்படுகிறது. புன்னகை
என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின்
வெளிப்பாடு. ஆரோக்கியமான
மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. இது
மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க
உதவுகிறது.


ஹார்வே பால் ( Havey Ball) என்பவர் 1963-
இல் புன்னகை முகம் (Smiley) என்ற குறியீட்டை
1963 இல் அறிமுகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து உலக புன்னகை
தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்படுகிறது.

சிறிய புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுவோம்..


உலக புன்னகை தினம்
ஹலோ உங்களைத்தான்... சிரிச்சா என்ன குறைஞ்சா போவீங்க?!
எதிரிகளையும் நண்பர்களாக்கும் சக்தி உங்களது சிறு புன்னகைக்கு உண்டு எப்படிப்பட்ட கணத்திலும் புன்னகைப்பது அப்போதிருக்கும் சூழலை உற்சாகமாக்க உதவுகிறது ஒருவரின் தோற்றத்தை செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே...


இந்த புன்னகை என்ன விலை..?

சாலையில் நடந்து செல்கிறோம். பைக்கில் செல்கின்ற ஒருவர் இடித்துவிடுகிறார். தாங்க முடியாத வலி. கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் என்கிற அளவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் சின்னதாய் நம் உதடுகளில் பரவ விடுகின்ற ஒரு புன்னகை, அந்த இறுக்கமான சூழலிலும் ஒரு வித அமைதியையும், இடித்தவர் வெட்கம் கொண்டு ஓடி வந்து. உதவ நினைக்கும் நிலையையும் உருவாக்கிவிடுகிறது.


புன்னகைக்கு அப்படியொரு அசாத்தியமான ஆற்றல்

அடித்துத் துன்புறுத்துகின்ற ஒருவனை அரவணைத்து... நீ செய்வது தவறு என்று உணர்த்துகின்ற பாங்கு இருக்கிறதே அதை தான் அகிம்சை என்கிறோம்.

இந்த ஒற்றை ஆயுதத்தால்தான் இன்று உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனை உரத்து ஒலிக்கச் செய்த காந்தி உலக நாடுகளின் தெருக்களில் சிலையாய் நிறுத்திவைக்கப்பட்டு நன்றி கூறப்படுகிறார்.

அதே போன்ற வலிமையும், மாபெரும் ஆற்றலும் நம் உதடுகள் உதிர்க்கும் புன்னகையில் இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை. 'இந்தப் புன்னகை என்ன விலை?' என்று கண்ணதாசன் காதலுக்காக புன்னகைக்கு விலை வைத்தார். காதலுக்காக என்றாலும்கூட, அந்தப் புன்னகைக்கும்கூட இதயத்தையே விலையாய் வைத்தார்.



ஆனாலும் புன்னகை விலை மதிப்பற்றது...

அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இன்று உலக புன்னகை தினம்

முடியாது... இயலாது... வேண்டாம்... என்பதைக் கூட சிறிய புன்முறுவலோடு சொல்லிப் பாருங்கள்... அப்போது தெரியும் புன்னகையின் மகிமை...

யாரெல்லாம் திறந்த மனதோடு, வெளிப்படையாக எதையும் அணுகுகின்றார்களோ அவர்களுக்கே இந்த மகிழ்ச்சியும், புன்முறுவலும் வாய்க்கும். இதிலும் கூட கள்ளத்தனமான சிலரின் புன்னகை, அவர்களை யாரெனக் காட்டிக் கொடுத்துவிடும்.



ஆடம்பரமாய் நகைகள் இருக்காது. பகட்டான பட்டாடைகள் இருக்காது. அடித்துப் போடுகின்ற அலங்காரத்தை மறந்தும் காணமுடியாது.



ஆனாலும் அந்தப் பெண் அழகாக இருக்கிறார். இது போன்ற பலரை நாம் இயல்பாக கண்டிருப்போம்... அந்தக் கலையான முகம்தான் அதற்குக் காரணமாக இருக்கும். ஆனால் களையான அந்த முகம்... அழகான புன்னகையில்தான் சாத்தியம்.

ஒருநாளில் 400 முறை சிறு குழந்தைகள் சிரிக்கின்றனவாம். ஆனால் வளர வளர நாமோ ஒரு நாளில் வெறும் 15 முறையே சிரிக்கிறோம். இப்போது தெரிகிறதா ஏன் குழந்தைகள் அழகாய் இருக்கிறார்கள் என்று..!



வருகின்ற 2020ஆம் ஆண்டில் மன அழுத்தமே உலக நோயாகவும், முதல் நோயாகவும் இருக்கும் என்று மருத்துவப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. தற்போதைய நமது வாழ்வியல் முறையும், இயங்கும் வேகமும் அதை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சற்றேறக்குறைய 10 சதவிகிதம் பேர் மனநோய் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குத் தூண்டப்படுகின்றனர்.



மன அழுத்தம் மற்றும் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் ஆற, அமர குடும்ப உறவுகளோடு உட்கார்ந்து பேசி மகிழ்கின்ற தருணங்கள் குறைந்து வருவதாகவும், அலுவலகம் மற்றும் சுற்றுப்புற எதார்த்தம் போட்டி நிறைந்ததாக உள்ளன என்று அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஓவியம் இன்றைக்கும் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த ஓவியத்தின் பிரதிகள் விற்ற அளவிற்கு, உலகில் வேறு எந்த ஓவியமும் இதுவரை அந்தச் சிறப்பிற்கு அருகே கூட வரவில்லை.



மோனாலிசா... இந்த ஒற்றை ஓவியத்தால் உலகம் முழுவதும் பெயரைப் பெற்றார் லியானார்டோ டாவின்ஸி. சின்னதாய் இதழ்களில் இழையோடும் அந்தப் மர்ம புன்னகை... நம்மால் இன்றைக்கும் கூட ரசிக்க முடிகிறது. அவள் மர்மமாய் சிரித்தாளா... அல்லது மயக்கத்தில் சிரித்தாளா.. என்பது வேறு.

எனினும் அந்த ஒற்றைச் சிரிப்பு, உலகம் முழுவதும் நிறைய கவிஞர்களை இன்றைக்கும் எழுத ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.



ஒவ்வொரு நொடியும் புன்னகைப்போம்... பிறர் மனம் நோக அல்ல...

நம் மனம் நோய்வாய்ப்பட நேராமல் இருக்க...



உலகை வசமாக்க...புன்னகையை பதிலாக்குவோம்..!!

உலக புன்னகை தினம் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் புன்னகையை விதைத்து ஆரோக்கியத்தை அறுவடை செய்வோம்.

ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. 

ஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். 

இதனை தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகின்றது.

ஹார்வே பற்றிய நினைவுகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுவதோடு அவருடைய பெயரிலேயே ஒரு அறக்கட்டளையும் 2001-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

சிரிப்பு என்பது ஒரு தியானம் என்று யோகா வல்லூர்கள் கூறுகிறார்கள். இதுக்குறித்து ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் யோகா கலை நிபுணர் விஜயகுமார் கூறும்போது, 

சிரிப்பு தியானம், என்பது தன்னை உணர்தலுக்கான ஓர் உன்னத பயிற்சியாகும். இந்த பயிற்சியானது கோபம் பயம் மன அழுத்தம் இவற்றில் இருந்து ஒவ்வொரு மனிதனும் வெளியேற மிகவும் உறுதுணையாக உள்ளது என்று கூறுகின்றனார். 

ஓவ்வொரு முறையும் நாம் சிரிக்கும் போது அது உடலை தளர்த்தி உடல் சோர்வை நீக்கி செல் திசுக்களை புதுப்பிக்கின்றன. 

தசைகளின் சோம்பலுக்கு காரணமான லேக்டிக் ஆசிடை குறைக்கிறது. சிரிப்பு என்பது மனித உடலில் என்டார்பின் ஹார்மோன் சுரப்பியிலிருந்து நீர் சுரப்பி உருவாகி மனிதர்களுக்கு சோகத்தை தரக்கூடிய கார்டிசால் ஹார்மோனை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார். 

பொதுவாக சிரிப்பு என்பது மனிதனுடைய இதய நோய்களில் இருந்து 40 சதவீதம் வரை குறைக்கிறது. அதோடு மனித மூளையின் செரட்டின் உற்பத்தி கூடுகிறது. செலினீயம் அதிகரித்து நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பைட்டோ எஸ்ட்ரோஜன் சுரந்து கவலை குறைத்து மகிழ்ச்சியை தூண்டுகிறது. 

இந்த சிரிப்பு பயிற்சி, சிரிப்பு தியானம் போன்ற வகைகளுக்கு மேலை நாடுகளில் தனி படிப்புகள் உண்டு. கர்நாடக மாநிலத்தில் சிரிப்பு தியானத்திற்கான பல்கலைகழகம் இயங்கி வருகிறது. 

இங்கு முழுவதும் சிரிப்பு பற்றிய பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிரிப்பின் தன்மை சிரிப்பின் வெளிப்பாடு சிரிப்பின் தேவை சிரிப்பின் செயல்பாடுகள் சிரிப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட பலவற்றை குறித்த ஆராய்ச்சிகளுடன் கூடிய படிப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.



இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் விஜயகுமார் அவர் பணியாற்று கல்லூரியில் வாரம் ஒரு முறை மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சிரிக்கும் தியானத்தை கற்று தருகிறார். 

அவர்களுக்கு சிரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மாணவிகள் தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தும் விதமாகவும் அவர்களின் மனசோர்வு மன அழுத்தம் போன்றவற்றை நீக்க தொடர்ந்து அவர்களுக்கு சிரிப்பு தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். 

இந்த சிரிப்பு தியானத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ஒன்று தான் சிரிப்பு என்பது காரணம் இல்லாமல் சிரிக்க வேண்டும். காரணம் இல்லாமல் சிரித்தால் தான் நம்முடைய மூளை அந்த காரணத்தை பற்றி யோசிக்காமல் அமைதியாக இருக்கும் என்றும் காரணத்தோடு சிரிப்பது என்பதை தவிர்த்து சிரித்தால் உடல் முழுவதும் சோர்வடையாமல் துடிப்போடு செயல்பட முடியும் என்று கூறுகிறார்.



எனவே, சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, நீங்கள் சிரித்து மகிழ்வதோடு மற்றவர்களையும் சிரிக்க வைத்து வாழ்கையை ஆரோக்கியமுடன் வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக