புதன், 22 ஜூன், 2011

கண்ணதாசன் உதய நாள் ஜூன் 24 .

கண்ணதாசன் உதய நாள் ஜூன் 24 .

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
படைப்புகள்.

*இயேசு காவியம்

*அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

*‍திரைப்படப் பாடல்கள்

*மாங்கனி

கவிதை நூல்கள்

*கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்

*பாடிக்கொடுத்த மங்களங்கள்

*கவிதாஞ்சலி

*தாய்ப்பாவை

*ஸ்ரீகிருஷ்ண கவசம்

*அவளுக்கு ஒரு பாடல்

*சுருதி சேராத ராகங்கள்

*முற்றுப்பெறாத காவியங்கள்

*பஜகோவிந்தம்

*கிருஷ்ண அந்தாதி,
*கிருஷ்ண கானம்

புதினங்கள்

*அவள் ஒரு இந்துப் பெண்

*சிவப்புக்கல் மூக்குத்தி

*ரத்த புஷ்பங்கள்

*சுவர்ணா சரஸ்வதி

*நடந்த கதை

*மிசா

*சுருதி சேராத ராகங்கள்

*முப்பது நாளும் பவுர்ணமி

*அரங்கமும் அந்தரங்கமும்

*ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி

*தெய்வத் திருமணங்கள்

*ஆயிரங்கால் மண்டபம்

*காதல் கொண்ட தென்னாடு

*அதைவிட ரகசியம்

*ஒரு கவிஞனின் கதை

*சிங்காரி பார்த்த சென்னை

*வேலங்காட்டியூர் விழா

*விளக்கு மட்டுமா சிவப்பு

*வனவாசம்

*அத்வைத ரகசியம்

*பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

*எனது வசந்த காலங்கள்

*எனது சுயசரிதம்

*வனவாசம்

கட்டுரைகள்

*கடைசிப்பக்கம்

*போய் வருகிறேன்

*அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

*நான் பார்த்த அரசியல்

*எண்ணங்கள்

*தாயகங்கள்

*வாழ்க்கை என்னும் சோலையிலே

*குடும்பசுகம்

*ஞானாம்பிகா

*ராகமாலிகா

*இலக்கியத்தில் காதல்

*தோட்டத்து மலர்கள்

*இலக்கிய யுத்தங்கள்

*போய் வருகிறேன் .

நாடகங்கள்

*அனார்கலி

*சிவகங்கைச்சீமை

*ராஜ தண்டனை .

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
விருதுகள்

*சாகித்ய அகாதமி விருது
மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

நன்றி-விக்கீபிடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக