வெள்ளி, 13 டிசம்பர், 2019

இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14.





இந்திய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14.

#இந்திய_எரிசக்தி_சேமிப்பு_தினம்

எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.
இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவேஇ நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அதனால்இ எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும்இ எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன
சேமிப்பே உற்பத்திக்கு சமம்: இன்று தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.

காலை எழுந்தவுடன் சமைப்பதில் ஆரம்பித்து, பயணம் செய்ய பஸ்சில் சென்று, இரவு தூங்கும் போது மின்விசிறி இயக்கும் வரை, அனைத்துக்கும் தேவைப்படுவது ஆற்றல் (எனர்ஜி). மனித வாழ்க்கையில் ஆற்றல் என்பது, உணவுக்கு சமமான ஒன்றாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, வாழ்க்கை நவீனமாகி விட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை ஆற்றல் சக்தி மூலமே இயங்குகிறது. ஆற்றல் பெரும்பாலும் புதுப்பிக்க இயலாதவையாக உள்ளன.

நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் குறைந்து கொண்டே வருகின்றன. இவை இன்று கிடைப்பது போலவே, எதிர்காலத்திலும் கிடைக்கும் என சொல்ல முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆற்றல் சக்திகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவ., 14ம் தேதி தேசிய ஆற்றல் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. எரிசக்தியை குறைவாக பயன்படுத்தினால் அதுதான் சேமிப்பு. எரிசக்தி சேமிப்பு என்பது, எரிசக்தி உற்பத்திக்கு சமம். எரிசக்தியை உற்பத்தியைவிட, அதிகமாக செலவழித்து வருகிறோம். இந்தியாவில் ஆற்றல் வளங்கள் குறைவாகவே உள்ளன. நாம் இறக்குமதியைத் தான், அதிகம் சார்ந்திருக்கிறோம்.


ஆற்றலை எப்படி சேமிப்பது:

* மின்சாரத்தை அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார சேமிப்பு, நமக்கு பணத்தையும் சேமிக்கிறது. எதிர்காலத்தில் சூரியசக்தி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கும்.
* மின்சாரத்துக்கு அடுத்தாக, வாகனப் பயன்பாடு. கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விலையை பொறுத்தே, அனைத்து பொருட்களின் விலையும் உள்ளது. வாகனத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* சமையல் எரிவாயு சிக்கனமும், அவசியம் பின்பற்ற வேண்டும்.
* ஆற்றல் சேமிப்பு என்பது, வீட்டில் தொடங்கி, நமது தெரு, பள்ளி, அலுவலகம், ஊர், மாநிலம் என பயணித்து, இந்தியா முழுவதும் ஆற்றல் சேமிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எரிசக்தி சேமிப்பு
இந்த பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேண்டியவற்றைத் தருமே தவிர ஒவ்வொருவரின் பேராசையைத் திருப்திப் படுத்துமளவிற்கு அல்ல.

நாம் எரிசக்தியை உற்பத்தி செய்யும் வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் செலவழிக்கிறோம்-நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை மிகப்பெரும் அளவில் பயன்படும் வளஆதாரங்கள். இவை உருவாவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன
எரிசக்தி வள ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன-இந்தியாவில் உலக எரிசக்தி வள ஆதாரத்தில் 1% மட்டுமே இருக்கிறது. ஆனால் உலக மக்கள்தொகையில் 16% இந்தியாவில் உள்ளது.
நாம் பயன்படுத்தும் எரிசக்தி வள ஆதாரங்களில் பெரும்பாலானவை, மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவோ புதுப்பிக்கப்படக்கூடியதாகவோ இல்லை- மறுபடி புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திதான் 80% எரிபொருளாகப் பயன்படுகிறது. நம்மிடமுள்ள எரிசக்தி வள ஆதாரங்கள் இன்றும் 40 வருடங்கள் வரையில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
நாம் எரிசக்தியைச் சேமித்தால், நாட்டிற்காக பெரும் பணத்தைச் சேமிப்பதற்கு சமம்- நமது கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) தேவையில் 75% இறக்குமதி மூலமே நிறைவேற்றப் படுகிறது. இதற்கான செலவு வருடத்திற்கு ரூ. 1,50,000 கோடி
நாம் எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கிறோம்- உங்களது எல்பிஜி சிலிண்டர் ஒரு வாரம் அதிகமாகப் பயன்பட்டாலோ, உங்களது மின்சாரக் கட்டணம் குறைந்தாலோ, எந்த அளவுக்கு சேமிக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்
எரிசக்தியை சேமிப்பதன் மூலம் நமது சக்தியை நாம் சேமிக்கிறோம்.- நாம் விறகுகளை சிக்கனமான முறையில் எரிக்கப் பழகினால், அதைக் சேகரிக்கத் தேவையான வேலைபளு குறைவாகும்.
சேமிக்கப்பட்ட எரிசக்தி, எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமமாகும்- நாம் ஒரு யுனிட் மின்சாரத்தைச் சேமித்தால், அது 2 யூனிட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க, எரிசக்தியை சேமியுங்கள் - எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியன, காற்று மாசுபடுவதற்கும் மிகப் பெரிய காரணிகள்
இந்தியப் பழமொழி ஒன்று சொல்வது போல, “இந்த பூமி, நீர், மற்றும் காற்று ஆகியன நமது பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்ற பரிசு அல்ல மாறாக, நமது குழந்தைகளிடமிருந்து நாம் பெற்ற கடன்”


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக