புதன், 4 டிசம்பர், 2019

உலக தன்னார்வலர் தினம் டிசம்பர் 5. (International Volunteer Day)

உலக தன்னார்வலர் தினம் டிசம்பர் 5.
 (International Volunteer Day)  

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளை சிறப்பு நாளாக அறிவித்தது. இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.

பன்னாட்டுத் தன்னார்வத் தொண்டர் நாள் அரசு சார்பற்ற அமைப்புகள், சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்களினாலும் நினைவுகூரப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் திட்டத்தினாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறது.

தன்னார்வலர்

தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள்.

தன்னார்வலர் மேலாண்மை

மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி ஒரு தடவையோ ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் தன்னார்வலர்கள்

இந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டத் நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும்.

1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக