ஞாயிறு, 22 டிசம்பர், 2019

விவசாயிகள் தினம் டிசம்பர் 23.


விவசாயிகள் தினம் டிசம்பர் 23.

விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை

நமக்கு உணவிடும் விவசாயிகளுக்கு இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் !!
🌾இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். உணவு மனித வாழ்வில் மகத்தான இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விவசாயம்.

🌾இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

🌾ஊருக்கே உணவளிப்பவன் விவசாயி. விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஒரு தினம் தான் விவசாயிகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

📅இல்லை இல்லை.. டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டதே தவிர, இந்த நாளை இதுவரை யாரும் கொண்டாடி நாம் பார்த்திருக்க மாட்டோம். அதுமட்டுமில்லாமல் இப்படியொரு தினம் இருப்பது பலருக்கும் தெரியுமா..? என்றால் அதுவும் சந்தேகம் தான்.

👉இந்த தேசிய விவசாயிகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? என இப்போதாவது தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

👉நம் நாட்டின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்தநாளே விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


👉உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராக வாழ்ந்து வந்தார்.

👉இவர் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 7 மாதங்கள் வரை மட்டுமே ஆட்சியில் இருந்த இவர் முதன் முதலில் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார்.

👉மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பதற்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார்.

👉அதோடு இவர் கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

👉தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காகவும், விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தவர். அதனால் இவருடைய பிறந்தநாளை 2001ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌱பலர் தனக்கும், விவசாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் விவசாயிகள் தினம் கொண்டாடுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

🌱ஆனால் அது தவறு.. நாம் உண்ணும் உணவிற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நம் மீது அக்கறை கொண்ட யாரோ ஒரு விவசாயி, ஏதோ ஒரு மூலையில், பல கஷ்டங்களுக்கு மத்தியில் காய்கறி, பழம், அரிசி என அனைத்தையும் நமக்காக விளைவித்து கொடுக்கிறார்.

🌱அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாகவும், விவசாயத்தை காக்கவும் தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாட வேண்டும் என விரும்பி உங்களில் ஒருவராக நாங்கள் விவசாயிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🌱இந்த தலைமுறைக்கு தெரியாமல் போன மகிழ மரமும், இலுப்பை மரமும் ஊருக்கு ஊர் வைக்க வேண்டியதும் நமது கடமையே.

பல பேர் சோற்றில் கை வைக்க..
தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து பாடுபடுபவன்...
விவசாயி..🌱


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக