வியாழன், 16 பிப்ரவரி, 2017

திரைப்படத்துறையின் தந்தை தாதாசாகெப் பால்கே நினைவு தினம் பிப்ரவரி 16.




திரைப்படத்துறையின் தந்தை தாதாசாகெப் பால்கே நினைவு தினம் பிப்ரவரி 16.

தாதாசாகெப் பால்கே ( Dadasaheb Phalke ) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே ( Dhundiraj Govind Phalke ,
ஏப்ரல் 30 , 1870 - பிப்ரவரி 16 , 1944 ) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.
தாதாசாஹெப் பால்கே
தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.
இந்திய சினிமா
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.
அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
திரைப்படங்கள்
ராஜா ஹரிஷ்சந்திரா (1913)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக