சனி, 25 பிப்ரவரி, 2017

உலக சாரணர் தினம் 22 - 02 - 2017.

உலக சாரணர் தினம்  22 - 02 - 2017.

---------------------
      *பேடன் பவல்*
---------------------

👮 தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய, சாரணர் இயக்கத்தைத் தொடங்கிய *ராபர்ட் பேடன் பவல் பிரபு* 1857ஆம் ஆண்டு பிப்ரவரி-22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


👮 இவர் 1906-ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

👮 இவருடைய பிறந்த நாளையே 1995-ஆம் ஆண்டிலிருந்து, *உலக சாரணர் தினமாக* அனுசரிக்கப்படுகிறது.


👮இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உள்ளது.

👮 சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர், தனது 83-வது வயதில் (1941-ம் ஆண்டு) மறைந்தார்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக