வெள்ளி, 6 ஜூலை, 2018

உலக முத்தம் தினம் ஜூலை 06.


உலக முத்தம் தினம் ஜூலை  06.

இன்று உலக முத்த தினம். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் இன்று முத்தச் சத்தம் அமோகமாக இருக்கிறது. மேலை நாடுகளில் வழக்கம் போல உற்சாக முத்தங்களுடன் இந்த முத்த தினத்தை காதலர்களும், மற்றவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். அன்பின் வெளிப்பாடுதான் முத்தம்.
கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்து இதற்கு அர்த்தம் மாறும். அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுவது இந்த முத்தம். இதை வலியுறுத்தியே இந்த முத்த தினம் கொண்டாடுகிறார்களாம்.
அதேசமயம், காதலர் தினம் போல இந்த முத்த தினம் இன்னும் வணிக மயமாகவில்லை. மாறாக உண்மையான அன்புப் பரிமாற்ற தினமாக இருக்கிறது. அதுவரை ஆறுதலான விஷயம்தான்.
முதல் முத்தம் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.. கண்டிப்பாக அதைப் பெற்ற அத்தனை பேருக்கும் அது மறக்க முடியாத ஒன்று. முத்தத்திற்கு அப்படி ஒரு சக்தி.
இந்த நாளில் அந்த முத்தத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.. காதலர்களுக்கு மட்டும்தானா முத்தம் சொந்தம்.. இல்லை இல்லை.. பிள்ளைக்குத் தாய் தந்தை கொடுக்கும் முத்தம்.. அதற்கு நிகர் ஏது..!
இந்த முத்த நாளில்... ஒரு சாதனை முத்தத்தைப் பார்த்து விட்டு வருவோமா.. உலகிலேயே மிக நீண்ட முத்தம் என்ற பெருமை, தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய் திரினராத், லக்சனா திரினராத் ஜோடியிடம் உள்ளது. இந்த ஜோடி 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தொடர்ந்து இடைவிடாமல் 58 மணி நேரம் 35 நிமிடம் 58 விநாடிகளுக்கு முத்த நிலையில் இருந்து.. கிஸ்ஸில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.


சர்வதேச முத்த தினம்..! முத்தத்தில் இத்தனை வகையா..?! யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.?

அன்பை வெளிப்படுத்த மிகவும் பெரிய ஆயுதமாக கருதப்படுவது வழக்கம். அந்த அவகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இன்றைய தினம் முத்தம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
ஒருவருக்கு இன்னொருத்தர் மீது அன்பு பாசம் இருக்கும் தருவாயில், அவர்களை எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோம் என்பதை உணர வைக்கும் ஒரு ஆயுதம் தான் முத்தம்
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நொடி பொழுதில் பறந்துப்போக மிகவும் உறுதுணையாக இருப்பது முத்தம் தான்.
அது நண்பர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாய் இருந்தாலும் சரி, காதலன் காதலி என இருந்தாலும் சரி....யாராக இருந்தாலும் முத்தம் கொடுத்து விட்டால் அந்த பிரச்சனை சரி ஆகி விடும்.
சர்வதேச முத்த தினம்
சர்வதேச முத்த தினத்தை ஒட்டி, உலக நாடுகள் பல முத்த தினத்தை, தனக்கு பிடித்த நபர்களுக்கு முத்தம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்
முத்தத்தில் பல வகை
நேற்று, கன்னம், உதடு என பல இடங்களில் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதில் நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் உண்மையில் மிக சிறந்த ஒன்று...நெற்றி முத்தம் பொறுத்தவரை பெற்றோர்கள் நண்பர்கள் வாழ்க்கை துணை என இவர்களுக்கு இந்த முத்தம் கொடுக்கப்படுகிறது
கன்னத்தில் முத்தம் அதிக அன்பின் காரணமாக நண்பர்கள், உறவினர் என எதாவது நிகழ்ச்சியில் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கமாக உள்ளது
கையில் முத்தம்
திருமண நிகழ்வுகளில், தன்னுடைய துணைக்கு மாறி மாறி கையில் முத்தமிட்டுக்கொள்ளும் கலாசாரத்தை பார்க்க முடியும்
உதட்டில் முத்தம்
அன்பு காதல் கலந்து எப்போது காமத்திற்கு செல்கிறதோ அப்போது உதட்டில் முத்தம் கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு முத்தத்தில் பல வகை இருந்தாலும், எந்த இடத்தில் யாருக்கு முத்தம் கொடுக்கிறோம் என்பதில் உள்ளது பொருள். ஆக மொத்தத்தில் இன்றைய தினத்தில் சர்வதேச முத்த தினம் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


உலக முத்த தினம் - மருத்துவ முத்தத்தின் நன்மைகள்

எல்லா முத்தங்களும் காமத்தைச் சேர்ந்தவை அல்ல. முத்தம் ஒரு மருத்துவம் என்கிறது விஞ்ஞானம். முத்தம் கொடுக்கும்போது பெறும்போதும் சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளும் அன்புணர்வு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ அறிஞர்கள்.
முத்தம் கொடுக்கும்போதும், பெறும் போதும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்கிற நம் உடலில் இருக்கும் ஹார்மோனுடைய சுரப்பு இன்னும் தூண்டப்படுகிறது.. அப்போது அது நமது அன்புணர்வை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம், தலைவலி, உடல் அசதி, சில வகையான இதயநோய்கள், மனஅழுத்தம் போன்ற நோய்களைக் குறைக்கும் பண்பும் முத்தங்களுக்கு இருக்கின்றன.
மேலும் முத்தம் என்பது முகப் பொலிவையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோவ் ஓவியாவிற்கு கொடுத்தது மட்டும் மருத்துவ முத்தம் இல்லை. முத்தமே ஒரு மருத்துவம்தான்.


 உலகில் பல தினங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் முத்த தினம். அதிலும் இன்று சர்வதே முத்த தினம். பொதுவாக முத்தம் என்பது அதிகப்படியான அன்பு மற்றும் காதலின் ஒரு வெளிப்பாடு ஆகும். அந்த முத்தமானது மகள், மகன், தம்பி, அக்கா, அண்ணன், அம்மா, அப்பா, வாழ்க்கைத் துணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பதாக இருக்கும். இது அன்பின் ஓர் வெளிப்பாடே.
முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...
அதிலும் வாழ்க்கைத் துணைக்கு அன்போடு லிப்-டூ-லிப் முத்தம் கொடுப்பதால், இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். இன்று சர்வதேச முத்த தினம் என்பதால், முத்தம் பற்றிய சில சுவாரஸ்ய மற்றும் கவர்ச்சிகரமான உண்மைகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது.
நச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்!
அதைப் படித்து தெரிந்து கொண்டு, இன்று இதைக் காரணமாகக் கொண்டு உங்கள் வாழ்க்கை துணையை முத்த மழையில் நனைய வையுங்கள்.


முத்தம் பற்றிய சில ருசீகரமான உண்மைகள்!!!

கலோரிகள்
முத்தம் கொடுப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும். அதிலும் 1 நிமிடத்திற்கு மேல் உங்கள் துணைக்கு முத்தம் கொடுத்தால், 3-4 கலோரிகளைக் கரைக்கலாமாம்.
பாக்டீரியாக்கள்
வாயில் ஏற்கனவே எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கும். அதுவும் துணைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுக்கும் போது, சுமார் 1 பில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாற்றப்படுகிறதாம்.
கைக்குலுக்கலை விட சிறந்தது
முத்தம் கொடுப்பது, கைக்குலுக்குதலை விட மிகவும் சிறந்ததாம். இதற்கு காரணம், முத்தம் கொடுப்பதை விட, கைக்குலுக்குதலின் போது எண்ணற்ற நச்சுக்கிருமிகள் பரிமாறப்படுகிறதாம்.
பற்களுக்கு நல்லது
தினமும் துணைக்கு முத்தம் கொடுத்து வந்தால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காதாம். ஏனெனில் துணைக்கு வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுக்கும் போது, வாயில் எச்சில் அதிகமாக சுரக்கப்பட்டு, அதனால் எச்சிலில் உள்ள கனிமங்கள் வாயில் உள்ள உணவுத்துகள்களை வெளியேற்றி, பற்களின் எனாமலை பாதுகாத்து, பல் சொத்தையாவதைத் தடுக்குமாம்.
நீண்ட நேர முத்தம்
தாய்லாந்தைச் சேர்ந்த தம்பதிகள் நீண்ட நேர முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். அதுவும் 58 மணிநேரம் 35 நிமிடம் மற்றும் 58 நொடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளனர் என்றால் பாருங்களேன்.
முத்தம் கொடுக்கும் திசை
மற்றொரு சுவாரஸ்யமான முத்தம் பற்றிய உண்மை என்னவென்றால் முத்தம் கொடுக்கும் திசை. உலகில் பாதி மில்லியன் மக்கள் தங்களின் தலையை வலதுபுறமாக சாய்த்து தான் முத்த பரிமாற்றம் செய்து கொள்கிறார்களாம்.
மீசையுடன் ஆண்கள்
நெவாடாவில், மீசையுடன் இருக்கும் ஆண்களுக்கு பெண்கள் முத்தம் கொடுப்பது சட்டவிரோதமானது. அதனால் தான் நெவாடா ஆண்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை.
முத்தத்திற்காக 2 வாரம்
சராசரி மனிதன் தனது வாழ்க்கையில் 2 வாரங்களை முத்தத்திற்காக செலவழிக்கிறான் என்றால் பாருங்களேன்.
இங்கிலாந்தில் முத்தம்
இங்கிலாந்தில் முத்தம் கொடுப்பதற்கான சராசரி வயது 15 ஆகும். 15 வயது நிரம்பியிருந்தால் மட்டுமே, உங்களால் இங்கிலாந்தில் முத்தம் கொடுக்க முடியும்.
குட்-பை முத்தம்
கணவன் வெளியே செல்லும் போது மனைவி முத்தம் கொடுத்தால், கணவனின் வாழ்நாள் 5 வருடங்கள் அதிகரிக்குமாம். இதற்கு முத்தம் கொடுப்பதன் மூலம் முத்தத்தைப் பெறுபவருக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருக்க வழி செய்கிறதாம்.


முத்தத்தின் மூலமாக பிரபலமடைந்த சில முக்கிய பிரபலங்கள்!!!

 "இச்சு" கொடுப்பது இச்சையின் வெளிப்பாடாக மாறியிருப்பதற்கு காரணம் இன்றைய மற்றும் நேற்றைய திரையுலகம். இதில், நாளையும் சேர்ந்துக் கொள்ளும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. காதலில் பூக்கும் முதல் பூவாக இருந்த முத்தத்திற்கு "இச்சு" என்று பெயர் வைத்தது முதல் இவ்வாறு ஆகிவிட்டது.
18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!
முதல் காதலை மட்டுமல்ல முதல் முத்தத்தையும் மறக்க முடியாது. அதே போல ரீலில் இருந்து ரியல் வரைக்கும் திரையுலகில் சிலர் கொடுத்த முத்தங்களையும் வருடங்கள் பல கடந்தாலும் மறக்கவே முடியாது. இந்திய திரையுலகில் முத்தத்தின் மூலம் பிரபலமான பிரபலங்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!! !
அவர்களில் முத்தத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்த சிலரை பற்றி இங்கு காணலாம்....

கமல்ஹாசன்
நீரின்றி அமையாது உலகு போல, தமிழ் திரையுலகில் கமலின்றி அமையாது முத்தம். 1980'களிலேயே முத்தத்திற்கு பெயர் போனவர் கமல்ஹாசன். இவரது இதழ்கள் பதியாத இடமே கிடையாது. நடிகைகள் ஆட்சேபனை இன்றி அனுமதி வழங்கியதும் இவரது இதழ்களுக்கு தான்.
சிம்பு
ஒரே படத்தில் ஓஹோ என உயர்ந்தவர்கள் மத்தியில் ஒரே முத்தத்தில் ஓஹோவென்று உயர்ந்தவர் சிலம்பரசன். இது நயனுடன் இவர் பகிர்ந்துக் கொண்ட ரியல் முத்தம் என்பது அதற்கான காரணம் ஆகும்.
இம்ரான் ஹாசிம்
இம்ரான் ஹாசிமை பாலிவுட்டின் கமல்ஹாசன் என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு முத்தத்தில் தூள் கிளப்பும் நடிகர். மர்டர் திரைப்படத்தில் மல்லிகா செராவத்திற்கு இவர் கொடத்த முத்தங்கள் எண்ணிலடங்காதவை. இடங்கள் சொல்லி மாளாதவை. மற்றும் இந்த திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யாராய்
ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யாராய். அதனாலோ என்னவோ, எவ்வளவோ பேர் இவருக்கு முன்பு முத்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட போதிலும் கூட, இவரது தூம் 2 முத்தம் உச்சக்கட்டமாக பேசப்பட்டது.
நயன்தாரா
ஆரம்பத்திலேயே சரத்குமார், ரஜினியுடன் சேர்ந்து நடித்தாலும் அவ்வளவு பெரிய பெயர் கிடைக்கவில்லை நயனுக்கு. ஆனால், வல்லவனில் சிம்புவுடன் கைகோர்த்ததும், காதல் மலர்ந்ததும். கூடவே இவர்களது இறுக்க பிடித்த (கடித்த) அந்த உம்மாவும் தான் இவரை தென்னிந்தியா முழுவதும் வைரல் ஆக்கியது.
ஹிரிதிக் ரோஷன்
ஹிரிதிக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யாராயின் தூம் 2 முத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அந்த திரைப்படம் வெளியாகும் அதே காலகட்டத்தில் தான் ஐஸ்வர்யாராய்க்கும் அமிதாபின் மகன் அபிஷேக்கிற்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதனால், தூம்-2வில் இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கமான காட்சிகளை கூட கத்தரிக்க கூறினார் அமிதாப்.
தீபிகா படுகோனே
இவரது அனைத்து முத்தங்களும் மிக பிரபலம். இவர் காதலித்த ஒவ்வொரு நபருடனும் முத்த பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. அனைத்து முத்தங்களும் இவரை ஏணியில் ஒவ்வொரு படியாக ஏற்றிவிட்டவை தான்.
மல்லிகா ஷெராவத்
பாலிவுட் முதல் ஹாலிவுட்டில் ஜாக்கி சான் வரை முத்தங்களை டெபாசிட் செய்தவர் மல்லிகா ஷெராவத். இதில் சிலமுறை இவர் துகிலுரித்த தருணங்களும் உண்டு. அந்த காட்சிகளுக்கு இவர் "உஷ்" சொல்லிருக்க வேண்டும் பதிலாக "ஹிஸ்" சொல்லிவிட்டார்.
ரன்வீர் சிங்
தீபிகாவுடனான காதலில் இவர் மிக பிரபலம். அதைவிட இவர்கள் இருவரும் பப்பு முதல் பொது நிகழ்சிகள் வரை இட்டுக்கொண்ட "இச்சு"-ன் மூலமே மிக பெரிய அளவில் பிரபலம் ஆனார். கடைசியாக ராம் லீலா படத்தில், லீலைகள் புரிந்தனர்.
ரன்பீர் கபூர்
விராத் கோலியின் காதலியான அனுஷ்கா சர்மாவை அவர் கவ்வியதை விட ரன்பீர் கவ்வியது தான் அதிகம். கடைசியாக சமீபத்தில் வெளியான 'பாம்பே வெல்வட்" படத்தில் இவர்கள் இருவரும் கவ்விய காட்சிகள் உச்சகட்டம்.

முத்தம் - வெகு சாதாரணமாக கடந்துவிட முடியாத வார்த்தை. திளைக்கும் காமத்தில் முத்தம் ஒரு சிறு அங்கம் என்பது அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் பதம். ஆனால் முத்தத்தில் காமமில்லை என்பதுதான் சகலத்தவரும் உணர வேண்டிய உண்மை.  KISS - a way to express love.
முத்தம் - முழுநிலை
முத்தமென்றால் சட்டென நினைக்கத்தூண்டுவது காதலின் முத்தங்கள்தான். துளியும் காமம் சேராத முத்தங்களையும் இங்கு ஆசீர்வதிக்கப்பட்ட காதலர்கள் பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிறந்த குழந்தையின் முதல் தொடுகையை எப்படி உணர்ந்தீர்கள் என்று நீயா நானா கோபிநாத் ஒரு தாயிடம் கேட்பார்.
"அந்தக் குட்டி சுண்டு விரல் என் மேல படறப்போ உலகத்துல இருக்க எல்லா கடவுளோட ஆசீர்வாதமும் ஒன்னா கிடைச்ச மாதிரி தோனுச்சு" - என்று அந்தத் தாய் பதில் சொல்லும்போது விழியோரத்தில் ஒரு நீர்த்துளி கசிந்திருக்கும். அத்தகைய முதல் தொடுகையின் அனுபவத்தைக் கொஞ்சம் கடன்வாங்கி உணர்ந்தால் முதல் முத்தத்தின் அனுபவம் கிடைக்கும்.
முதல் முத்தம்- காதலின் ஏற்பு (ரஞ்சித்-மெட்ராஸ்)
காதலின் மீதும் காதலனின் மீதும்  தனக்குள்ள பார்வைகளை எதிர்பார்ப்புகளை மற்றவரோடு ஒப்பிட்டு அவள்  கோபித்துக்கொள்ளும்போது அவன் மனநிலை அந்த அதிகாலை நேரத்தில் விடிய காத்துக்கொண்டிருக்கும் பகலின் மனநிலையை ஒத்திருக்கும்.
காட்சி தொடங்கி அவள் அழத்தொடங்க 'ஏன் இப்போ அழற' என்று அவன் குரல் உயர்ந்தவுடன் அதே அழுகையினூடே அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த egoistic characterization சுக்குநூறாய் உடையத்தொடங்கும். அதனோடு உடைந்த கண்ணீரில் 'கல்யாணம் பண்ணிக்கிறியா' என்ற அவளது வார்த்தைகள் கண்ணீரோடு கீழிறங்கி நீளும்.
ஆச்சர்யம் கலந்த ஆசையின் மகிழ்வில் 'எப்போ' என்று அவன் கேட்க,  'இப்போ. வா தாலி கட்டு' என்று சொல்லும் அவள் பதிலில் இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கும்.
அவள் தாலி கட்டச் சொல்லி முடித்ததும் அவளிடம் இன்ச்களில் நெருங்கி 'அப்போ ஒரு முத்தம் கொடு' என்று கேட்பான். அதுவரை கரையில் நின்று அலையை ரசித்த சிறுவன் மெது மெதுவாக தனது கால்களை நனைத்து ஒரு பிடி அலையை எனது கடல்தானே என்று கையில் ஏந்துவது போல இருக்கும் அந்த முதல் முத்தம் கேட்கும் நொடி.
ஏனென்றால் முதல் முத்தம் ஒரு பொக்கிஷம்.
இடைநிலை முத்தம் - பிழைத்தலின் சுகம் (மணிரத்னம் - அலைபாயுதே)
"சக்தி முழிச்சுக்கோ முழிச்சுக்கோ" என்று உயிர் தேடும் கார்த்திக்கிடம் உயிர் பிழைத்த சக்தி சொல்லும் காதல் காதலிப்பவர்கள் அனைவரும் நனையவேண்டிய மழை
சக்தி : பயந்துட்டியா
கார்த்திக் : உயிரே போச்சு
சக்தி : பொண்டாட்டி பொயிட்டா ஜாலியா இருக்கலாம் பாத்தியா..........,
கார்த்திக்: ஐ லவ் யூ
கார்த்திக் : எனக்காக என்ன வேணாலும் செய்வியா
சக்தி : ஐ லவ் யூ
கார்த்திக் : எனக்காக ட்ரைன்ல இருந்து குதிப்பியா
சக்தி : ஐ லவ் யூ
கார்த்திக் : அப்டினா என்ன மீன் பண்ற
சக்தி : தெரியாது.. ஆனா... ஐ லவ் யூ
இந்த உரையாடல் முழுவதுமே ஐ லவ் யூக்கள் பதிலைச் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் காட்சியில் சக்தி சொல்லும் ஒவ்வொரு ஐ லவ் யூக்கும் எதிர்வினையாக சக்தியின் தோளில் கார்த்திக்கின் முத்தம் பதிந்துகொண்டே இருக்கும். அவனுக்கான காதலை அவளுக்கான பரிதவிப்பை ஒவ்வொரு முத்தமும் சொல்லும். இங்கு கண்ணீரை மீறிய முத்தங்கள் இறுக்கத்தில் இணைய வைத்திருந்தன.
கடைசி முத்தம் (1) - பிரிவின் துயர் (வைரமுத்து - பார்த்தாலே பரவசம்)
காதலில் பிரிவென்பது நிரந்தரமல்ல. மரணம் கூட காதலில் பிரிவல்ல. செல்லச் சண்டைகளிலும் சிதறும் கோபங்களிலும் ஏற்படும் பிரிவுகள் காதலைக் கூர் செய்யும் ஆயுதங்கள். பிரிவின் இரு திசைகளிலிருந்து அதை அப்படியே மீட்டிச்செல்ல நலமறிய ஏங்கிக்கொள்ளலாம். காதலுக்காக ஏங்குவதை விட காதலியின் ஞாபகங்களோடு ஏங்குவது சுகம்.
கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
பிரிந்து சென்றவளின் முகத்துடன் அன்று பதித்த கடைசி முத்தமும் கூட அவனுக்கு ஞாபகமிருக்கிறது. சர்வசாதாரணமாக மிஸ் யூ என்று சொல்லிவிடுவதைவிட இப்படிப் பிரிந்து வாடும்போது கடைசி முத்தத்தின் ஞாபகம் கலந்திருப்பது வலிநிகர் மென்மை. காரணம் பிரிவில் கொடுத்த முத்தமென்பது வெறும் செய்கையல்ல. சொல்லிவிட முடியாத சோக உணர்வின் வெளிப்பாடு.
கடைசி முத்தம் (2) - பயணமுடிவு (கே.பாலச்சந்தர் - புன்னகை மன்னன்)
காதல் கைகூடாத காதலர்கள் பிரிவை யாசிக்காமல் மரணத்தினை தேர்வு செய்கிறார்கள். "இந்தப் புனிதப் பயணம் இன்னுமொரு சரித்திரம்" என்று கல்லறைக்காவியம் எழுதி வைத்துவிட்டு தங்கள் பயணத்தின் இறுதி நொடிகளை வாழ்ந்து களிக்கிறார்கள்.
'கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே' - முத்தங்களின் ஈரம் காயாமலிருப்பது ஒரு பாக்கியம். அந்த ஈரங்களில் காதலும் காயாது உயிர் மறைந்தாலும் மரணிக்காதிருக்கும் . மலையுச்சியில் நின்றுகொண்டு "உங்க favorite புன்சிரிப்ப நான் பாக்கணும் சேது. கடைசியா நான் பாத்தது அதுவாத்தான் இருக்கணும்" என்று கன்னத்தைப்பற்றி அவள் கேட்கும்போது அவனது கன்னத்தில் மீதமிருந்த ஈரத்தை அவள் உணர்ந்திருப்பாள். அழுகைக்குள் பொதிந்திருந்த சிரிப்பு உடைந்தும் 1,2,3 என்ற countdownஇல் நிகழ்ந்தது மரணம் மட்டுமல்ல அவர்களது கடைசி முத்தமும்தான்.


இன்று ஹேப்பி கிஸ் டே..!!

உலக அளவில் இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு முத்தங்களைப் பறிமாறி மகிழும் தினம்.
பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.
காதலர்கள் மட்டுமின்றி, தாத்தா, பாட்டிகள் தங்களின் பேரன், பேத்திகளுக்கும், பெற்றோர் அவர்களின் குழந்தைகளுக்கும் என அனைவரும் முத்தத்தின் வாயிலாக இன்று தங்களின் அன்பை பரிமாறிகொள்கின்றனர். சிலர் அவர்களது செல்ல பிராணிகளுடன் கூட கிஸ் டேவை கொண்டாடி வருகின்றனர். உலகமே கொண்டாடும் இந்த நாளில் டுவிட்டரில் #KissDay என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டில் உள்ளது.


திருமணத்தை உறுதிசெய்யும் முத்தம் - மகா கவி பாரதியார்

இன்று உலக முத்த தினம், முத்தம் குறித்து மகாகவி பாரதியார் என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம் .
முத்தம் என்பது திருமணத்தை உறுதிசெய்யப் பயன்படும் நிச்சயதார்த்தம் என்கிறார் பாரதியார். பொதுவாக இருவீட்டார் பேசி முடிவு செய்யும் திருமணங்களில் பேசி முடித்த முகூர்த்த ஓலை எழுதப்பட்டுக் கையெழுத்திடுவார்கள். அப்போது மணமகன், தனது எதிர்கால மனைவிக்கு முத்திரை மோதிரம் அணிவிப்பார். பதிலுக்குப் பெண்ணும் தன் வருங்கால கணவனுக்கு ஒரு மோதிரம் போடுவார். ஆக நாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்பதற்கான அச்சாரமாக இதைக் காட்டுகிறார்கள். மோதிரம் இருப்பவர்கள் மோதிரம் போடுகிறார்கள். மோதிரம் இல்லாதவர்கள் முத்தம் போடுகிறார்கள் என்கிறார் மகாகவி பாரதியார்.

சாத்திரம் ஏதுக்கடி கண்ணம்மா என்ற கேள்வியுடன் பாரதி சொல்கிறார் பாருங்கள்...
' மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனாடி?-இதுபார், கன்னத்து முத்தமொன்று!'
மூத்தவர்கள் நம்மை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதற்கான முறைகளை பிறகு செய்வோம். அதற்கு முன், நீ எனக்கு நான் உனக்கு என்ற அச்சாரமாக இதோ பார் கன்னத்தில் ஒரு முத்தம் என்கிறார் பாரதியார்.


முத்தத்தால் இத்தனை நன்மைகளா! - கிறங்கடிக்கும் தகவல்கள்

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.
பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்... காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்?

.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந்தைக்குப் புகட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிடம் ஒரு குழந்தை முதல் முத்தத்தைப் பெறுகிறது. தாய்க்கும் சேய்க்குமான முத்தப் பரிமாற்றம் குறிப்பிட்ட காலம் வரையே நீடிக்கிறது.
பருவம் வந்து காதல் உணர்வு ஏற்படும்போது அதே முத்தம் எல்லையற்ற இன்பமாய்க் கொண்டாடப்படுகிறது. முதல் முத்தம் தரவும் பெறவும் எவ்வளவு தவித்தோம் என்ற கதை எல்லாக் காதலர்களுக்குள்ளும் புதைந்திருக்கும். முத்தம் பற்றி எண்ணும்போதும், செயல்படுத்தும்போதும் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது. Dopamine, Serotonin ஆகியவை மூளையில் சுரந்து மனிதனுக்கு ஆனந்தத்தையும் உடல்நலத்தையும் அளிக்கிறது.
முத்தத்தை உளவியல் பார்வையில் அணுகினால் மனிதனை மனிதனாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழி செய்கிறது. ஆண்- பெண் இணைந்து பயணிக்கும் தாம்பத்ய வாழ்வில் மிகுந்த சுவாரஸ்யங்களை அள்ளித் தரும் வள்ளலே முத்தம். முத்தம் உங்களை உற்சாகத்துடனும்
எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்கிறது.
முத்தமிடும் தருணத்தில் இதயத் துடிப்பின் டெசிபில் எகிறுகிறது. சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது. ஆழமான சுவாசிப்பு நுரையீரல் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. உதட்டோடு உதடு வைத்துக்கொடுக்கும் லிப்லாக் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சமீபத்தில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முத்தம் தம்பதியரின் இடையே அன்பின் பிணைப்பை வலுப்படுத்தவும் செய்கிறது. முத்தத்தில் துவங்கி விளையாடும்போது மூளையில் Oxytocin ஹார்மோன் அளவு அதிகரித்து இணைக்கு மன அமைதியைக் கொடுக்கிறது. இதன் வழியாக நம்பிக்கையும் அன்பும் பெறுகி காமத்துக்கான சூழலை அன்பு மயமாக மாற்றுகிறது.
இதழோடு இதழ் சேர்த்துக் கொடுக்கும் முத்தத்தில் உடலின் கலோரிகள் எரிக்கப்படுகிறது. பாலுறவின்போது திருப்தியை, பேரன்பை வெளிப்படுத்த கழுத்து, கன்னம், இதழ் என முத்தம் பரிமாறுவதால் உடலின் மெட்டபாலிச வேகம் அதிகரித்து, அதிகளவு கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடையும் குறையும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முத்தமிடும்போது எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பாட்டினால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதை நேரடியாகவே உணரலாம்.
உடல்வலியையும் முத்தம் போக்குகிறது. கடுமையான வேலைப்பளு, டென்ஷன், தலைவலி, மாதவிடாய்க் காலங்களின் வலிகள் ஆகியவற்றின் போது நம் இணைக்குத் தேவையான முதல் மருந்து முத்தமே. முத்தத்தின் போது உணர்வுகள் தூண்டப்படுவதால் மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொந்தரவுகளும் இணைகளை இம்சிக்காது. ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போது உற்சாகத்துடன் வலம் வர இணைகள் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முத்தம் பரிமாறலாம். காதல் பசியாறலாம்.
முத்தத்தினை காதலின் அளவுகோலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியாகவும் புரிந்துகொள்ளலாம். அன்பு அதிகம் இருப்பவர்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள் அல்லது முத்தத்தை அதிகமதிகமாக எதிர்பார்ப்பார்கள். அன்பு இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பதும் குறையும் அல்லது பெற்றுக் கொள்ள விரும்புவதும் குறையும்.
இன்று பல குடும்பங்களில் கடமைக்காக தாம்பத்யம் நிகழ்வதாகவே பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முத்தமே இல்லாமல் நடைபெறும் காமம் அன்பில் ஏற்படும் வறட்சியையே காட்டுகிறது. இத்தகைய தாம்பத்யம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது வெறும் உடல் இச்சையாக மட்டுமே இருக்குமே தவிர அதில் வேறு எந்த சிறப்பும், நன்மையும் இருக்காது.


அதேநேரத்தில் தாம்பத்யமே நிகழாவிட்டாலும் முத்தம் மட்டுமே
பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு அந்த முத்தமே அளப்பரிய நன்மையைத் தரும்.
முத்தமிடும் முன் இருவரும் தயாராக வேண்டியுள்ளது. அதற்கான சில ஆலோசனைகள்...
*அவரவர் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும்.
*உங்களது வாய் துர்நாற்றம் தவிர்க்க ப்ரஷ் செய்திருப்பது அவசியம். பிடித்தமான உடை, நறுமண ஸ்பிரே என ரொமான்ஸ் மூடில் இருப்பது அவசியம்.
*முத்தத்துக்கு முன்பாக வார்த்தையால், சின்னச் சின்னத் தொடுகையால் வெட்கத்தோடு விளையாடலாம்.
*இதழில் முத்தமிடும்போது இதமான வருடல் மேலும் முத்த இன்பத்தின் அளவைக் கூடச் செய்கிறது.
*உன்னைச் சரணடைந்தேனடி என்ற நிலையே உதட்டு முத்தம். தாம்பத்ய உறவின் துவக்கத்தில் இதழ்களில் இடும் முத்தம் காமத்தின் கதவு திறந்து வைக்கிறது.
*எதிர்பாராத நேரத்தில் சமையல் அறையில் மனைவியை இழுத்து அணைத்து அளிக்கும் முத்தம் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.
*அன்றைய சமையல் சூப்பர் என அவளது கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தலாம்.
*அவள் ஏதோ ஒரு வேலையில் இருக்கும்போது அவளறியாமல் பின்னிருந்து அணைத்து காதுமடல் கவ்வி விடுவிக்கலாம்.
*வேலைக்கோ வெளியூருக்கோ பிரிந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இதழ் முத்தம் பெண்ணுக்கு பேரின்பம் தருகிறது.
*காலை முதல் மாலை வரை இப்படிக் கணக்கின்றிப் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களுக்கான பரிசை பெண் தாம்பத்ய வேளையில் திருப்பிததருகிறாள்.
*லிப்லாக்கின்போது கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுவது அந்தத் தருணத்தை ரசனைக்குரியதாக மாற்றுகிறது.
*ஒரு அணைப்பில் இணையக் கைது செய்து கழுத்தில் முத்தமிடுவது நீ இப்போது வேண்டுமென அவளுக்கு உணர்த்தும் செயல்.
*அதிகபட்ச அன்பின் வெளிப்பாடே கண்களில் இடும் முத்தம். இமைப்பொழுதும் உன்னை அகலாதிருக்கவே விரும்புகிறேன் என்பதே
இந்த முத்தம் சொல்லும் அர்த்தம்.
*உச்சி முதல் பாதம் வரை மிச்சமின்றி முத்தமிடுவது பெண்ணை பேரின்ப விளையாட்டுக்குத் தயார்படுத்தும். தாம்பத்ய நேரத்தில் நெருக்கத்தைப் பலப்படுத்தும்.
* தாம்பத்ய உறவின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பரிமாறிக் கொள்ளப்படும் முத்தங்கள் அதிகபட்ச இன்பத்தை உணர வழி செய்கிறது.
* அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் கொள்வது முகத் தசைகளை இறுக்கமடையச் செய்து இளமையைத் தக்க வைக்கிறது.

நன்றி  விகடன் .ஒன் இந்தியா தமிழ். புதிய தலைமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக