புதன், 26 பிப்ரவரி, 2020

இன்றைய நாள் பிப்ரவரி 27... வரலாறு யாரை சிறப்பிக்கிறது?



இன்றைய நாள் பிப்ரவரி 27... வரலாறு யாரை சிறப்பிக்கிறது?

முத்தான சிந்தனை துளி !
நூறு நண்பர்கள் தரும் ஊக்கத்தை விட, நாம் வளர ஒரே ஒரு எதிரி தரும் ஊக்கம் மிகச் சிறந்தது..!!

விஜய் சிங் பதிக்

🌟 சுதந்திரப் போராட்ட வீரரான விஜய் சிங் பதிக் 1882ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்திரப் பிரதேசத்தில் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பிறந்தார்.

🌟 இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டப் புரட்சி இயக்கத்தில் இணைந்தார். இவரது இயற்பெயர் பூப் சிங் குர்ஜர். இவரது பெற்றோர் பூப் சிங் குர்ஜர் என்ற பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினர்.

🌟 ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை நிறுத்த ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கப்பட்டன. விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்ற பெயரில் சத்தியாக்கிரக இயக்கத்தை இவர் நடத்தினார்.

🌟 இவரது அயராத முனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. தன் எழுத்துக்களாலும் பேச்சாலும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை உண்டாக்கினார். அஜய் மேரு என்ற இவரது நாவல் மிகவும் பிரபலமானது.

🌟 புரட்சி வீரராக தனது வாழ்நாள் முழுவதும் தேச சேவையில் ஈடுபட்ட, தன்னலமற்று சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவருமான விஜய் சிங் பதிக் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.சந்திரசேகர ஆசாத்


இன்று இவரின் நினைவு தினம்....!!
🏁 இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

🏁 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தபோது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

🏁 கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். இவர் ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்" என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்" என்று அழைக்கப்பட்டார்.

🏁 சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பை தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

🏁 லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.முக்கிய நிகழ்வுகள்
👉 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரேடியோ கார்பன் என்ற கார்பன்-14 (ஊயசடிழn-14) கண்டுபிடிக்கப்பட்டது.✍ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா (எஸ்.ரங்கராஜன்) மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக