வெள்ளி, 2 டிசம்பர், 2016

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் பிறந்த தினம் டிசம்பர் 04.

இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் பிறந்த தினம் டிசம்பர் 04.

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr.
Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद;
3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963)
இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவரும் இந்திய விடுதலைப்
போராட்ட வீரரும் ஆவார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள்
ஒருவர். 1950 முதல் 1962 வரை
இந்திய குடியரசுத் தலைவராக
இருந்தார். இரு முறை
குடியரசுத் தலைவர் பதவிக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
குடியரசுத் தலைவர்.
இளமை
இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம்
தேதி பீகாரின் சிவான்
எனுமிடத்தில் பிறந்தார்.
இவருடைய தந்தை மகாவீர சாகி
பெர்சிய மொழியிலும்
சமஸ்கிருத மொழியிலும்
தேர்ந்திருந்தார். இவரது தாயார்
கமலேசுவரி தேவி சமயப்
பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு
வயதில் தன் குடும்பத்தாராலும்
நண்பர்களாலும் ‘ராஜன்’ என
அழைக்கப்பட்டார். தனது 12 ஆம்
வயதில் ராஜவன்சி தேவி என்ற
பெண்ணை மணந்தார்.
திருமணத்திற்குப் பின்பு
பிரசாத் தனது தமையனார்
மகேந்திர பிரசாத்துடன் வசித்து
வந்தார்.
கல்வி
இராஜேந்திர பிரசாத்திற்கு
ஐந்து வயதானபோது ஒரு
இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage
of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும்
கணிதம் கற்க இவருடைய
பெற்றோர் ஏற்பாடு
செய்தனர்.சாப்ரா
மாவட்டத்திலுள்ள பள்ளியில்
பிரசாத் தனது தொடக்கக்
கல்வியை முடித்தார். பின்னர் டி.
கே கோஷ் அகாடமியில்
இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா
பல்கலைக் கழகத்தில் நுழைவுத்
தேர்வு எழுதி மாதம் ரூ.30
உதவித் தொகைப் பெற்று தனது
இடைநிலைக் கல்வியைத்
தொடர்ந்தார். கல்கத்தா
பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம்
ஆண்டு பொருளியலில்
முதுகலைப் பட்டம் பெற்றார்.
படிக்கும் காலத்தில் பீகார்
மாணவர் அவையை
உருவாக்கினார் இராசேந்திர
பிரசாத். பல்வேறு கல்லூரிகளில்
பேராசிரியராகவும் பின்னர்
கல்லூரி முதல்வராகவும்
செயலாற்றியுள்ளார்.
பேராசிரியராக பணியாற்றிக்
கொண்டிருக்கும்போதே
சட்டத்தில் மேற்படிப்பு படித்து
தேர்வில் முதல் மாணவனாக தங்கப்
பதக்கத்தை வென்றார். பின்னர்
சட்டத்துறையில் முனைவர்
பட்டமும் பெற்றார்.
விடுதலைப்போரில்
ஈடுபாடு
மிகப் புகழ் பெற்ற
வழக்குரைஞராக பணியாற்றி
வந்த இவர், மகாத்மா காந்தியின்
ஒத்துழையாமை இயக்கத்தால்
கவரப்பட்டு தன் வேலையைத்
துறந்து, அவ்வியக்கத்தில்
இணைந்தார். 'வெள்ளையனே
வெளியேறு' என்ற போராட்டத்தில்
கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு
கைது செய்யப்பட்டு
மூன்றாண்டு கால
சிறைவாசத்திற்குப் பின் 1945ம்
ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி
விடுதலையானார்.
பதவி
1946ம் ஆண்டு இந்திய
அரசியலமைப்பு அவையின்
தலைவராக நியமிக்கப்பட்ட இவர்,
1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின்
தலைவராக மூன்றாம்
முறையாகப் பதவியேற்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த
இரண்டரை ஆண்டுகளுக்குப்பின்
புதிய அரசியலமைப்பு ஏற்றுக்
கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து,
1950ம் ஆண்டு இந்தியாவின் முதல்
குடியரசுத் தலைவராகப்
பதவியேற்றார் இராசேந்திர
பிரசாத். 1952, 1957 ஆகிய
ஆண்டுகளில் இரண்டு முறை
குடியரசுத் தலைவராகப்
பதவியேற்ற ஒரே குடியரசுத்
தலைவரான இராஜேந்திரப்
பிரசாத் 1962ம் ஆண்டு வரை
பதவியிலிருந்து, பின் ஓய்வு
பெற்றார்.
விருது
இவருக்கு இந்தியாவின் உயரிய
விருதான பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டது. இந்திய முதல்
குடியரசுத் தலைவர் இராசேந்திர
பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 28ம் தேதி காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக