புதன், 14 டிசம்பர், 2016

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.

பன்னாட்டுத் தேயிலை நாள்
( International Tea Day ) 2005 ஆம் ஆண்டு
முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15
ஆம் நாள் தேயிலை உற்பத்தி
செய்யப்படும் வங்காளதேசம் ,
இலங்கை , நேபாளம் , வியட்நாம் ,
இந்தோனேசியா, கென்யா,
மலாவி, மலேசியா , உகாண்டா ,
இந்தியா , மற்றும் தன்சானியா
உட்படப் பல நாடுகளில் நினைவு
கூரப்பட்டு வருகிறது.
தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்கள், தேயிலை
உற்பத்தி செய்வோர், மற்றும்
தேயிலையைப்
பயன்படுத்துபவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை
அரசாங்கக்களுக்கும்,
குடிமக்களுக்கும் கொண்டு
செல்வதே இந்நாளின் முக்கிய
நோக்கம் ஆகும். முதலாவது
பன்னாட்டுத் தேயிலை நாள் 2005
டிசம்பர் 15 இல் புது தில்லி
நடைபெற்றது. இரண்டாவது
பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15
இல் இலங்கையில் கண்டி நகரில்
நடைபெற்றது. [3] பன்னாட்டுத்
தேயிலை நாள் கொண்டாட்டங்கள்
ஊடாக நடைபெறும் பன்னாட்டு
மாநாடுகள் தேயிலைத்
தொழிற்சங்க இயக்கங்கள்
முன்னெடுக்கின்றன.
பின்னணி
2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின்
அரசு சார்பற்ற அமைப்புகள்,
மற்றும் தொழிற்சங்கங்கள்
இணைந்து உலக சமூக மாமன்ற
மாநாட்டை பிரேசிலில் நடத்தின.
இதன் விளைவாக 2003 இல் உலக
சமூக மாமன்றத்தின் ஆசிய
மாநாடு இந்தியாவில்
ஐதராபாது நகரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இலங்கை,
இந்தியத் தேயிலைத் தோட்டத்
தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து
கொண்டனர். இதன் போது, 2004 ஆம்
ஆண்டு மும்பை மாநாட்டில்
தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்கள் பிரச்சினை
தொடர்பாக தனியான மாநாடு
ஒன்று நடத்துவது என்று
முடிவெடுக்கப்பட்டது. 2004
மும்பை மாநாட்டில் பன்னாட்டுத்
தேயிலைத் தொழிலாளர்களின்
பிரச்சினை ஏனைய
தொழிற்துறை சார்ந்த
தொழிலாளர்களின்
பிரச்சினைகளில் இருந்து
வேறுபட்டது என அடையாளம்
காணப்பட்டது. இவர்களது
பிரச்சினைகளை வெளிப்படுத்த
தனித்துவமான தினத்தின்
அவசியம் குறித்து உடன்பாடு
எட்டப்பட்டது. பிரித்தானியாவின்
முதலாவது இந்திய அசாம்
தேயிலைத் தோட்டத்தில் சீன
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838
டிசம்பர் 15 இல் மேற்கொண்ட
முதலாவது சம்பளப்
போராட்டத்தின் நினைவாக
ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல்
இந்நாளைக் கொண்டாடுவதென
2005 ஆம் ஆண்டில் பிரேசிலில்
நடந்த மாநாட்டில் முடிவு
செய்யப்பட்டது.
************************************
இன்று உலகில் தண்ணீருக்கு
அடுத்த படியாக உலக
மக்களால் அதிக அளவில்
அருந்தப்படும் பானமாக தேநீர்
உள்ளது. தேயிலையை சர்வ
நோய் நிவாரணி பானமாக
உலக சுகாதார நிறுவனம்
அறிவித்தமையினால் இன்று
உலகின் அனைத்து
நாடுகளும் தேநீரைப்
பருகும்படி தம்நாட்டு
மக்களை ஊக்குவித்து
வருகின்றன.
எனவே தேயிலை
உற்பத்தியின் தேவை
மக்கள்தொகை
அதிகரிப்பிற்கேற்ப
அதிகரித்துச் செல்லவேண்டிய
தேவை உள்ளது. எனவே,
தேயிலை உற்பத்திற்கான
சூழலைக் கொண்டுள்ள
நாடுகள் தேயிலை
உற்பத்தியில் ஈடுபட்டு
வருகின்றன.
அறுபதுகளுக்கு முன்பதாக
சீனா, இந்தியா மற்றும்
இலங்கை உள்ளிட்ட சில
நாடுகளே தேயி-லையை
உற்பத்தி செய்து வந்தன.
ஆனால் இன்று உலகின் 58
நாடுகள் தேயிலை
உற்பத்தியில் ஈடுபட்டு
வருகின்றன.
சர்வதேச தேயிலை
தொழிலாளர் மாநாடு
ஒன்றின் தொடர்ச்சியாக 2005
ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
பிரேஸிலின் போர்டே
அல்க்கிரியில் உலக சமூக
மாமன்ற கூடுதல் நிகழ்வு
நடந்தது. இந்த நிகழ்வில்
ஆங்கிலேயரின் ஆட்சியில்
முதலாவது இந்திய அஸாம்
தேயிலைத் தோட்டத்தில் சீன
நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத்
தொழிலாளர்கள் 1838
டிசம்பரில் நடத்திய
முதலாவது சம்பளப்
போராட்டத்தினை நினைவு
கூறும் விதமாக சர்வதேச
தேயிலைத் தினமாக டிசம்பர்
15 ஆம் திகதியை
அறிவிக்கலாம் என்று
முடிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக
முதலாவது சர்வதேச
தேயிலை தின மாநாடு
புதுதில்லியில் 2005 டிசம்பர்
15 அன்று நடந்தேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக