ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று டிசம்பர் 25.


வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று டிசம்பர் 25.

* இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று *
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் தமது மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே!

************************************************************************
இராணி வேலுநாச்சியார்

இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு   நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.

தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.

படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை  தானே முன்னின்று நடத்தினார்.  சேனாபதிகளான மருது சகோதரர் கள்,  உற்ற துணையாக இருந்து படைகளுக்குத்  தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.

இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.

கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது!  இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!

சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

இந்தியக் கடலோரக் காவல் படை, கப்பல்களுக்கு சிறப்புமிக்க பெண்கள் பெயரை வைப்பது வழக்கம். தற்போது ராணி வேலு நாச்சியாரின் பெயரை புதிதாக வரவிருக்கும் இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வைப்பதற்கு பரிசீலித்து வருகிறது பாதுகாப்பு துறை. அந்தக் கப்பலில் பிரத்யேகமாக வைப்பதற்காகவே ஓவியர் மருது வரைந்து அளித்த வேலு நாச்சியாரின் ஓவியம்தான் இக்கட்டுரையை அலங்கரிக்கிறது.

நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும்  தானே!

வீரச் சிதறல்கள் !

1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க, இடம் மாறிச் சென்றார் வேலு நாச்சியார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக்கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.

காளையார்கோவிலை மீட்க நடந்த போரின்போது வேலுநாச்சியாரை, ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்க மறுத்தாள் உடையாள் என்ற பெண். இதனால், வெள்ளையரால் வெட்டப்பட்டாள் அந்தப் பெண். அவளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார். அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

1793ல் பேத்தி மறைந்து போக, நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார், டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி சட்டம்  போட்டிருந்தது. அதன்படி சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தது ஆங்கிலேய படை. ஆனால், இதை ஏற்க மறுத்தனர் ராணியின் தளபதிகளான மருது சகோதரர்கள். அவர்களே தங்களது இறப்பு வரையிலும் தளபதிகளாக இருந்து, சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு காத்து வந்தனர்.
***********************************
இராணி வேலுநாச்சியார்
பதினெட்டாம் நூற்றாண்டில்
தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின்
இராணி மற்றும் பிரித்தானியக்
கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம்
ஏந்திப் போராடிய பெண் விடுதலைப்
போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின்
முதல் பெண் விடுதலைப் போராட்ட
வீராங்கனை ஆவார்.
இராணி வேலு நாச்சியார்
சிலையும் சிவகங்கை அரண்மனையும்
இளமை
1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம்
மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி
முத்தாத்தாளுக்கு ஒரே பெண்
மகளாக பிறந்தார் வேலுநாச்சியார்.
எனினும் ஆண் வாரிசு போலவே
வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி
பெற்றார்; பல மொழிகள்
கற்றார். 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர்
முத்துவடுகநாதத்தேவருக்கு
மனைவியானார்.
ஆங்கிலேயர்
படையெடுப்பு
1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால்
ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க
இடம் மாறி மாறிச் சென்றார்
வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை
எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார்
அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர்
அலியைச் சந்தித்து உருது மொழியில்
ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி
விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது
மொழித் திறமையைக் கண்டு
ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல
செய்வதாக உறுதியளித்தார்.
ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை,
விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை
என இடம் மாறி மாறி முகாமிட்டு
வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது
எட்டு வயது மகளையும் பாதுகாக்க
வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர்
தாண்டவராயன் பிள்ளையின்
முயற்சியினால் சிவகங்கை மக்கள்
பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து
பேசியதின் படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று
உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள்
இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆங்கிலேயர்களின்
சட்டதிருத்தம்
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை
(அரசாங்கத்தை) தாமே எடுத்து
நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின்
கிழக்கிந்திய கம்பெனியின்
அவகாசியிலிக் கொள்கை
(ஆங்கிலம்: Doctrine of Lapse )
தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு,
சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும்
பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே
ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள்
சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும்,
தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை
சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர்.
படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள்
வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை
திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப்
புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை
வீரர்களையும் 5000 போர்வீரர்களையும்,
பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
படை காளையார் கோயிலை கைப்பற்றியது.
சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக்
காட்டிக் கொடுக்காது
வெள்ளையரால் வெட்டுண்ட
உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது
திருமாங்கல்யத்தை முதல்
காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி
செலுத்தினார். இந்தக் கோயில்
கொல்லங்குடி
வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று
அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை
நகரைக் கைப்பற்ற சின்னமருது , பெரிய
மருது , தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை
அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி
விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில்
பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து
அதில் குயிலி , என்ற பெண் தன்
உடம்பில் தீ வைத்து வெள்ளையரின்
ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை
அழித்தாள். வேலுநாச்சியார், தனது
ஐம்பதாவது வயதில், தனது கணவரைக்
கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி
பான் ஜோரையும் தோற்கடித்தார்.
இறுதி நாட்கள்
1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின்
மரணத்தால் நாச்சியாருக்கு துயரம்
அதிகமானது. அதனால் விருப்பாட்சி
அரண்மனையில் தங்கினார். பெரும்
போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட
வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று
இறந்தார். இதன்
தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை
ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே
உள்ளது.
அருங்காட்சியகம்
வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி,
வாள் முதலான பல பொருட்கள்
சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப்
பாதுகாக்கப்படுகின்றன.
நினைவு தபால்தலை
ராணி வேலு நாச்சியார் நினைவு தபால்
தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008
அன்று வெளியிடப்பட்டது.
சிவகங்கைச் சீமை பதவி
வகித்த மன்னர்கள்
1. 1728–1749 - முத்து வீஜயரகுநாத உ.
சசிவர்ணத்தேவர்
2. 1749–1772 - சசிவர்ண விஜயரகுநாத
முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780–1790 - வீரமங்கை ராணி வேலு
நாச்சியார் முத்துவடுகநாத பெரிய
உடையாத்தேவர்
4. 1790–1793 - வெள்ளச்சி
நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793–1801 - வேங்கை பெரிய உடையனத்
தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர்
வெள்ளச்சி நாச்சியார் கனவர்
5. 1801–1829 - கெளரிவல்லப
உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத
பெரிய உடையணத்தேவரின் உடன்
பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
தத்து மைந்தன்
6. 1829–1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831–1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841–1848 - போ. உடையணத்தேவர்
9. 1848–1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863–1877 - ராணி
காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878–1883 - துரைசிங்கராஜா
13. 1883–1898 - து. உடையணராஜா
1892ஆம் ஆண்டு ஜமின்தார் முறை
ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர்
நியமிக்கப்பட்டார். ஜே. எப். பிரையன்ட் முதல்
கலெக்டர் ஆவார்.
1910ஆம் ஆண்டில் ராமநாதபுரம்
மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக்
கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில்
ராமநாதபுரம் ராமநாடு என
அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு
மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3
பகுதிகளாக பிரிக்கப்பட்டது. 
சிவகங்கைச் சீமை
வாரிசுகள்
1. 1898–1941 - தி. துரைசிங்கராஜா
2. 1941–1963 - து. சண்முகராஜா
3. 1963–1985 -
து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி
ராஜா
4. 1986 - முதல் ராணி
டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக