சனி, 29 ஜூலை, 2017

உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு மாத முதல் ஞாயிறு.


உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு மாத முதல் ஞாயிறு.

உலக நண்பர்கள் தினம் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாத முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதுடன் தங்கள் அன்பைத் தெரிவிக்கும் விதமாக பூக்கள், வாழ்த்தட்டைகள், கங்கணக் கயிறுகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
வரலாறு
1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், காங்கிரசு, ஆகத்தின் முதல் ஞாயிறை தேசிய நண்பர்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.
இதனைப் பின்பற்றி உலகின் பல நாடுகளும் நண்பர்களுக்காக ஒருநாளை ஒதுக்கி கொண்டாடி வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வின்னி த பூ என்ற பொம்மை கரடியை உலகின் நட்பு தூதராக அறிவித்தது.


உலக நண்பர்கள் தினம்- சிறப்பு பார்வை

நட்பு ஒரு தும்மல் மாதிரி எப்ப வரும்னு தெரியாது சில பேருக்கும் அது நம்மையும் அறியாமல் அது நம்மை தொற்றிகொள்ளும் ஒரு ஆனந்த கூத்தாட்டம். தும்மல் ஆனந்த கூத்தாட்டமா என்ன ரவின்னு கேட்பவர்களுக்கு தும்மல் அடிக்கடி வந்தால் கஷ்டம் ஆனால் ஒவ்வொரு முறை தும்மின பிறகு உங்களுக்கு கிடைக்கும் பாருங்கள் ஒரு புத்துணர்ச்சி அது ஆயிரம் குற்றாலத்தில் குளித்ததற்க்கு சமம். ஆம் ஒரு தும்மலில் வாய் மற்றும் வயிற்று பகுதியில் இருக்கும் அத்தனை கெட்ட பேக்டீரியாவும் அப்படியே சம்மர் சால்ட் அடித்து வெளியே வரும். அது போக இதயத்துக்கு நம் உடம்பில் இனைந்தத ஒரு சி பி ஆர். ஒவ்வொரு தும்மலும் மைல்ட் பிளாக்கை எடுக்க உதவும் என்பது விஞ்சான கருத்து.
பெண் ஒரு ஆணிடம் கொள்ளும் நட்பு அப்பாபா அது ஒரு புரியாத பொக்கிஷம். எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறார்கள் என்று தெரியாது நான் அதை அன்றும் இன்றும் என்றும் அனுபவித்து இருக்கிறேன். அது அப்பா அம்மா, அண்ணா தம்பி, காதலன் காதலி, கணவன் மனைவி அதற்க்கு மேல் உள்ள ஒரு அப்பாற்பட்ட அனுபவம். ஆனால் நட்பு பல சமயங்களில் மாறுபடுகிறது என கூறுபவர்கள் உண்மையில் அது வெளியே மட்டும் தானே தவிர உள்ளே இருக்கும் நட்பில் அல்ல. பெண்ணுக்கு நல்ல நண்பர் ஒரு இரண்டு பேர் கிடைத்து விட்டால் போதும் அவள் மிக பாக்கியமானவள் ஆனால் இதற்க்கு எந்த பருவம் என்பது தேவையில்லை பள்ளி காலத்திலும் இருக்கலாம், பையன் காலேஜ் போகும் பருவத்திலும் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல ஆணாக அமைய அவனுக்கு சரியாக காதல், காமம் இது தெரிவதற்க்கு முன் ஒரு நல்ல பெண் நட்பு கிடைத்துவிட்டால் அவனை பத்து அம்மா திருத்துவதற்க்கு சமம். பெற்றொற்களும், சுற்றத்தார்களும் தான் ஒரு பெண் ஒரு ஆண் கண்டிப்பாக அவர்கள் தான் இவர்கள் என எண்ணி இவர்களீன் நட்பை முளைக்கும் முன்பே பிடுங்கிவிடுகின்றனர்.
நட்புக்கு அடிக்கடி சோதனை பெண்களுக்குத்தான். ஆம் ஒரு ஆண் பிறந்தததில் இருந்து ஒரு பையனிடம் நட்பு தடையில்லாமல் போய்கிட்டே இருக்கும் ஆனால் அதே ஒரு பெண்ணுக்கு பல வகையில் தடங்கல். பெண் வயதுக்கு வரும்போது ஒரு கட், அப்புறம் கல்யான சமயத்தில், அப்புறம் குழந்தை பிறந்து அவர்கள் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் சமயத்தில் இன்னுமொருமுறை என்று பல ஸ்டேஜ்கள். கல்யானம் ஆன பெண்களுக்கு ஆண் நட்பு கன்டினியூ செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவளின் அரேன்ஞ் மேரேஜ். பொண்ணுக்கு கல்யானம் நல்லபடியா ஆனா போதும்னு அப்பா அம்மா நிறைய பொய்யை கூறி என் பொண்ணுக்கு காலேஜ் வீடு இதை இரண்டை தவிர வேறு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டு பிரன்டு கிரன்டு எல்லாம் கட் பண்ணிடு உன் நல்லதுக்கு தான் இதை சொல்றேன் கேட்டுக்கோனு அப்படியே வெளியுலகத்திற்க்கு டாடா பை பை.
ஆனால் ஆண் தன் நண்பர்களை விட்டு கொடுக்கவே மாட்டார்கள். இதன் நன்கு உணர்ந்து கல்யாணத்திற்க்கு பிறகு ஜாடை மாடையா பேசி பேசி நண்பர்களை ஒதுக்க முயல்வார்கள். அப்போது தான் பிரச்சினை அவன் வீட்டுக்கு தெரியாமல் நண்பர்களை சந்திக்க செல்லுவான் அப்போது தான் பிரச்சினை ஆரம்பம். எனக்கு தெரிந்து பல குடும்பங்களில் கள்ள காதலை விட இந்த புருஷன் பிரன்ட்ஸ் பிரச்சினை தான் பிரதானம்.
நட்பின் இலக்கணம் என்னைக்கேட்டால் நம்பிக்கை தான். ஆம் இதை குறையாத டெபாஸிட்டாக வைக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு ஆண் இன்னொரு ஆண் நண்பனிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் அதை இன்னொரு நண்பன் ரசிப்பான் அல்லது மச்சான் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோடா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு சொல்லுவான். நட்புக்கு சிட்டி, கிராமம் என எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. சிட்டியில நல்ல நண்பியை நடு வழியில் பார்த்து விட்டால் எந்த ஒரு டீக்கடையிலும் கண்னாடி கிளாஸில் கூட இரண்டு பேர் அவங்க கொடுக்கும் கொஞ்சமான டீ காஃபியை வாயால் உறிஞ்சி குடிக்கும் காட்சியை நான் பர்த்திருக் கிறேன். அதே சமயம் பெண் நட்பு என்றால் காஃபி டேவில் மட்டும் தான் என்றி நினைத்தால் அது அவர்களின் ஈகோவைத்தான் காட்டுமே தவிர கன்னியத்தை அல்ல. அதே மாதிரி கிராமத்தில் கூட மிக அதிகம் குளிக்கும் குளமாகட்டும், தரை டிக்கடில் படம் பார்க்கும் டூரிங் தியேட்டர் ஆகட்டும் நட்பு பாவாடை சட்டை காலத்தில் இருந்து பாம்படம் போடும் வரை அதையும் நான் பார்த்திருகிறேன்.
அதனால தான் மனைவிமார்கள் எங்கே ஃப்ரீ ஸ்பேஸ் கிடைக்குதோ அப்பல்லாம் நம்ம கஸ்டடியில தான் இருக்கனும்னு நினைக்கிறது சகஜம், ஆனா நம்ம ஊட்டு ஐயாக்கள் எப்படா இங்கிருந்து எஸ்கேப் ஆகி மசசான் மாமன் பிரன்ட்ஸோடு கடலை போடலாம்னு சரியான பிட்டை போட்டு எஸ் ஆகிருவாங்க……… அதனாலயே பாதி பெண்கள் சரி ஆன்லைன்ல நட்பை தேடுவோம்னு வந்து ரொம்ப கஷ்டபட்டு சில பேரை லைன் அப் பண்ணி நட்பை வளர்த்து கொள்ளுவார்கள். தன்னை அப்பா அம்மா புருஷன் கூட கேட்டிருகுக்கமாட்டான் சாப்டியான்னு ஆனா இங்கே கண்ணியமிக்க நண்பர்கள் ஹலோ குட்மார்னிங், சாப்டாச்சா என்ன கதைன்னு அக்கறையா கேட்கும் போது மாமியாரின் சிக்ஸர் கூட சிக் பீ டால் மாதிரி சின்னதாயிடும்.
நல்ல நண்பர்கள் பேசி கொண்டிருக்கும் போது ஏதாவது கரென்ட் கட்டாகி போச்சு இல்லைனா லாக்கவுட் அகிடுச்சுனா மறு நாள் அவங்க வர்ற வரைக்கும் நம்ம பெண் நண்பர்கள் தவிப்பாங்க பாருங்க பிளஸ் டூ எக்ஸாம் டைம்ல கூட அவ்வளவு டென்ஷன் ஆகிருக்க மாட்டாங்க. அந்த பதட்டம், வீட்டீல் இருக்கும் எல்லோரும் எங்கோ பூகம்பம் வந்தா லைட்டா அடுமே நம்ம பிளாட்டும் அந்த மாதிரி ஒரு ஸ்மால் இம்பாக்ட் இருக்கும். நம்ம பசங்க மட்டும் என்ன நல்ல பெண் நண்பர்களுடன் அடிக்கடி ஏதாவ்து அண்டை போட்டு போடீ நீயும் உன் பிரன்ட்ஷிப்பும்னு லாக் அவுட் பண்ணிட்டு கூலா பீர் கிடைக்குமான்னு போயிடுவாங்க. ஆனால் மறு நாள் லாகின் பன்னும் போது இஷ்ட தெய்வம் எல்லாத்தையும் வேண்டிகிட்டு வந்து ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி ஹலோ குட்மார்னிங்னு நம்ம மானஸ்தன் சொல்லுவாங்க பாருங்க அங்க நிக்கிறான் நம்ம ஆண் நண்பன்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே… என்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்…
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி…
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை Viagra online காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாகரீக யுகத்தில், `மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்’ என்று சொல்லி நட்பினை நண்பர்கள் கவுரவப்படுத்தி வருகிறார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை நட்பை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே… என்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்…
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி…
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக