புதன், 21 மார்ச், 2018

உலக கவிதை தினம் மார்ச்21 (WORLD POETRY DAY)


 உலக கவிதை தினம் மார்ச்21  (WORLD POETRY DAY)

மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன.
இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும்”,,, எழுதி வெளியிடுவதை மற்றும் உலகம் முழுவதும் கவிதை கற்பித்தல் மற்றும், படித்தல்ஊக்குவிப்பது என்ற நோக்கில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.


உலக கவிதைகள் தினம்: கவிதை பற்றி சில புத்தகங்கள்

உலக கவிதைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான கவிதை பற்றிய புத்தகங்களை அறிந்துகொள்ள உதவும் தொகுப்பு இது.
கொங்குதேர் வாழ்க்கை
தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியானது. ஒன்றில் பழந்தமிழ் கவிதைகளும் மற்றொன்றில் புதுக்கவிதைகளும் அடக்கம். தமிழ் கவிதைகள் பற்றிய முழுமையான அறிமுகம் தரும் முக்கியமான தொகுப்பு நூல்.
கவிதை என்ன்னும் வாழ்வீச்சு
கவிஞர் ஆனந்த் எழுதிய கவிதை சார் கட்டுரைகளின் தொகுப்பு இது. சில ஆத்மாநாம், எம்.யுவன், பிரம்மராஜன் போன்ற சில கவிஞர்களின் கவிதையாக்கம் குறித்த மதிப்பீட்டுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. தமிழில் கவிதை பற்றி எழுதப்பட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நூல்.
நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்
கவிஞர் தேவதேவனுடன் வெவ்வேறு காலங்களில் நடத்தப்பட்ட கவிதை பற்றிய உரையாடலின் தொகுப்பு. கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே கவிதை ஏற்படுத்தும் உறவு, கவிதையில் படிமங்களுக்கான இடம், நல்ல கவிதையை வாசகன் கண்டுகொள்ளும் தருணம் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தேவதேவனின் பதில்கள் இதில் உள்ளன. முதல் பதிப்பில், கவிதை பற்றி என்ற தலைப்புடன் வெளியாகி, மறுமதிப்பில் 'நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்' என்ற பெயரில் வெளியானது.
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் மலையாளக் கவிதைகளை அறிமுகம் செய்யும் மூன்று நூல்களில் ஒன்று. தற்கால மலையாளக் கவிதைகள், இன்றைய மலையாளக்கவிதைகள் ஆகியவை மற்ற இரு நூல்கள். இந்நூல்களில் ஜெயமோகன் மலையாளக் கவிஞர்கள் பற்றி எழுதியுள்ள அறிமுகக் குறிப்புகள் சிறப்பானவை.
சங்கச் சித்திரங்கள்
சமகால புதுக்கவிதை வாசகனுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிய ஈடுபாட்டையும் தேடலையும் அளிக்கும் முக்கியமான நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளியானபோது பரவலான வாசக கவனம் பெற்றது.
சமகால உலகக் கவிதை
உலக அளவில் கவிதை இயக்கம் பற்றிய திறப்பை அளிக்கும் நூல் இது. கவிஞர் பிரம்மராஜன் தொகுத்திருக்கும் இந்த நூல் உலக அளவில் குறிப்பிடத்தக்க 58 கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக