ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம் ஏப்ரல் 1 (1935).


இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம் ஏப்ரல் 1 (1935).

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது இன்று தான் .சட்ட வல்லுனராக நம்மில் பலரால் அறியப்படுகிற அண்ணல் அம்பேத்கர் தான் இந்த வங்கி உருவாவதற்கு காரணம் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உலக போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து அதற்கான ஹில்டன் எங் குழுவை அமைத்தது. அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோருடைய கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய "The Problem of the Rupee – It’s origin and it’s solution" எனும் நூல்தான் அது.

அதன் வழிக்காட்டுதலில்தான் இந்திய  ரிசர்வ் வங்கி உருவானது. முதலில் கொல்கத்தாவில் தலைமையகம் அமைக்கப்பட்டு பின் மும்பைக்கு மாற்றப்பட்டது . தனியார் பங்குகளை கொண்டு இயங்கிக்கொண்டிருந்த அமைப்பு விடுதலைக்கு பின் அரசு கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது.

நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது இந்த வங்கியே .தனி நபர்கள் இதில் கணக்கு வைக்க முடியாது .பர்மாவுக்கும் விடுதலைக்கு முன் வரை மத்திய வங்கியாக இதுவே செயல்பட்டது ;பாகிஸ்தானுக்கு கூட விடுதலைக்கு பின் பத்து மாதம் வரை வங்கியாக செயல்பட்டது.

இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில், செயல்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாழ்த்துகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக