புதன், 25 ஏப்ரல், 2018

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25

இன்று உலக மலேரியா தினம் ஏப்ரல் 25 - உலகில் ஒரு வினாடிக்கு ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறது!

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2007-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி மலேரியாவால் உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு குழந்தை இறப்பதாக தெரிவித்துள்ளது. மலேரியாவால் 2012ல் மட்டும் கிட்டத்தட்ட 6,27,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இதில் 80 சதவீதம், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்

மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது கொசுவினால் ஒருவர் உடலிலிருந்து மற்றவர்களுக்கு கடத்தப்படுகிறது. மிகவும் அரிதாக ஒரு சில நேரங்களில் ரத்தம் ஏற்றும் போதும் ஏற்படுகிறது.

உலக மக்கள் தொகையில் அதிகம் பேரை பாதிப்புக்குள்ளாக்கும் ஆபத்து வாய்ந்த நோயாக மலேரியா பார்க்கப்படுகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் அதிகம் காண்டப்படுகிறது.

தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.

மலேரியா காய்ச்சல் 3 கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். பின்னர் குளிர்க் காய்ச்சலோடு உடல் நடுக்கம் தொடங்கும். சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.

இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்.

மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். தற்போது மலேரியா-வால் தாக்கப்பட்டவர் சாதாரனமாக காணப்படுவார்

இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியாவை கண்டறியலாம். நோயின் தீவிரத்தைப் பொருத்து ஆண்டி-மலேரியல் மருந்துகள் மூலம் இதனை குணப்படுத்தலாம்.

ஆரம்பக் கட்டத்திலேயே இது கண்டறியப்பட்டால் முழுமையான நிவாரணம் சாத்தியம்.

கொசுக்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் மலேரியாவை தடுக்க முடியும். கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் கொசு வலைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.

இன்று உலக மலேரியா தினம்- உலகில் ஒரு வினாடிக்கு ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறது!

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2007-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி மலேரியாவால் உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு குழந்தை இறப்பதாக தெரிவித்துள்ளது. மலேரியாவால் 2012ல் மட்டும் கிட்டத்தட்ட 6,27,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இதில் 80 சதவீதம், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்


மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது கொசுவினால் ஒருவர் உடலிலிருந்து மற்றவர்களுக்கு கடத்தப்படுகிறது. மிகவும் அரிதாக ஒரு சில நேரங்களில் ரத்தம் ஏற்றும் போதும் ஏற்படுகிறது.
உலக மக்கள் தொகையில் அதிகம் பேரை பாதிப்புக்குள்ளாக்கும் ஆபத்து வாய்ந்த நோயாக மலேரியா பார்க்கப்படுகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் அதிகம் காண்டப்படுகிறது.
தொற்றுள்ள கொசு கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.
மலேரியா காய்ச்சல் 3 கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். பின்னர் குளிர்க் காய்ச்சலோடு உடல் நடுக்கம் தொடங்கும். சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.
இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்.
மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். தற்போது மலேரியா-வால் தாக்கப்பட்டவர் சாதாரனமாக காணப்படுவார்
இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியாவை கண்டறியலாம். நோயின் தீவிரத்தைப் பொருத்து ஆண்டி-மலேரியல் மருந்துகள் மூலம் இதனை குணப்படுத்தலாம்.
ஆரம்பக் கட்டத்திலேயே இது கண்டறியப்பட்டால் முழுமையான நிவாரணம் சாத்தியம்.
கொசுக்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் மலேரியாவை தடுக்க முடியும். கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் கொசு வலைகளை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். Thanks Tamil Eenadu India 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக