ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ( World Health Day )


உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ( World Health Day ) 

உலக நலவாழ்வு நாள் ( World Health Day ) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
உலக நலவாழ்வு நாள் 2007: வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்
1. நலவாழ்வுக் கேடுகள் எல்லை கடந்தவை.
2. வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்.
3. நலவாழ்வே பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நலக்கேட்டை உண்டுபண்ணும்.
4. பன்னாட்டளவிலான நலவாழ்வு அச்சுறுத்தல்களுக்கு விரைந்து முகம் கொடுக்க வேண்டும்.
5. உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.
முன்னைய உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்
1. 2007 - அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
2. 2006 - ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
3. 2005 - ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
4. 2004 - சாலை வீதிப் பாதுகாப்பு
5. 2003 - குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
6. 2002 - நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
7. 2001 - மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
8. 2000 - பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
9. 1999 - சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
10. 1998 - பாதுகாப்பான தாய்மை
11. 1997 - முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
12. 1996 - தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
13. 1995 - இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.


உலகம் முழுவதும் சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1950ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதியை உலக சுகாதார தினமாக கடைப்பிடிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, ‘Depression: Lets Talk’ என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர், மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். உலகில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவரும், இருபது ஆண்களில் ஒருவரும் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்களுடைய உடல்நலக்குறைவு மற்றும் நோய்களுக்கு காட்டும் அக்கறையை மன அழுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மன அழுத்தத்தின் அடையாளங்களான ஆற்றலின்மை, பசியெடுக்கும் தன்மையில் மாறுதல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை, கவனச் சிதறல், தன்னம்பிக்கையின்மை, குற்றவுணர்ச்சி, தன்னை வருத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவற்றை உணர்ந்தால் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களைச் சந்தித்து தீர்வு காண்பது அவசியமாகும்.

தனி மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுக்குள் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தாலும் 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்த நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் பாதிப்படைகின்றனர். மன அழுத்த நோயினால் வெகுநாள்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமன் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாளில் மனநலம் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியமான தேவையாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக