வியாழன், 19 ஏப்ரல், 2018

உலகப் பாரம்பரிய நாள் ஏப்ரல் 18.


உலகப் பாரம்பரிய நாள் ஏப்ரல் 18. ( International Day for Monuments and Sites) 

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் ( International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற
நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என அறிவிப்பது பற்றி ஆலோசிக்கும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக