புதன், 20 ஜூன், 2018

உலக இசை தினம்: ஜூன் 21


உலக இசை தினம்: ஜூன் 21

நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்து; சிறந்த பொழுதுபோக்கு அம்சம். வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் திகதி உலக இசை தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.
தோற்றம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன், பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.
பலவிதம்
பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை.
இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும்.


இசைக்கு இசைந்திடுவோம்: -உலக சர்வதேச இசை தினம்

வளரும் வருங்காலத் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இன்பம், துன்பம் என்று அனைத்து தருணங்களிலும் மனித வாழ்வில்
இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இராம தூதராகிய ஹனுமன் இசையில் வல்லவர்.
 "குண்டக்ரியா' ராகத்தை மெய்மறந்து பாடிய போது, பாறைகள் எல்லாம் உருகின.
நாரதர் அவரைப் பார்க்க வந்த போது, ஹனுமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாறைகள் உடனே உறைந்து கெட்டியாகப் போக, நாரதரின் மஹதி வீணை அதில் சிக்கிக் கொண்டு விட்டது.
நாரதர் அதே ராகத்தைப் பாடினார். ஊஹும். பாறைகள் உருகவில்லை. ஏனென்றால் அவருடைய இசையில் அகங்காரம் இருந்தது.
இசையை ஒரு பூசையாகச் செய்யும் போதுதான் அது அதிக சக்தி பெறுகிறது.''

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்
உன்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே
என்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் வரவில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே தீபங்களே தீபங்களே தீபங்களே
Image
முகலாய பேரரசர் அக்பரின் அவையில் சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் தன் குருவான ஹரிதாசரிடம் கற்ற ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, அணைந்து இருந்த விளக்குகளை ஒளிரச் செய்தாராம்..!.
இசையால் வசமாக இதயமேது?
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை
நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
தியாகராஜ சுவாமிகளும் ‘ஜோதிஸ்வரூபிணி’
என்ற ராகத்தைப் பாடி தீபத்தை எரியச் செய்துள்ளார்.
மும்மூர்த்திகள் எனப் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள்; ராமதாசர், கபீர்தாசர், துளசிதாசர், மீராபா இப்படிப் பலர் இசையால் இறைவனின் பேரருளைப் பெற்றதுடன், நமக்கும் வழிகாட்டினார்கள்.
அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம்.
‘இசைந்த பண் எழுத்தும் நீ’ என்று இறைவன் போற்றித் துதிக்கப்படுகிறார் ..
முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு சமயம் எட்டயபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் மரங்கள் பட்டுப்போய், பயிர்கள் காய்ந்து மக்கள் குடிதண்ணீர் இன்றித் தவிப்பதைக் கண்டு வருந்தினார். ‘அம்ருத வர்ஷினி’ ராகத்தில் ஆனந்தாம் ருதவர்ஷிணி என்ற பாடலைப் பாடினார்.
‘வர்ஷா, வர்ஷா’ என்று அவர் பாடுகையில், மழை கொட்டித் தீர்த்தது.
பின்பு அவர் ‘ஸ்தம்பய’ என்று பாடியதும்தான் மழை நின்றதாம்!
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் மூடிய கதவு திறக்கவும், மீண்டும் மூடவும் தேவாரம் பாடினார் என்பது வரலாறு.
‘சம்பந்தர் பெருமான் இயற்றிய கோளறு பதிகமும், அருணகிரிநாதர் இயற்றிய ‘நாள் என் செய்யும்’ என்னும் கந்தரலங்காரப் பாடலும் கிரக தோஷங்களைப் போக்கவல்லவை.
திருமாலின் கரத்தில் சங்கு;
கண்ணனிடம் புல்லாங்குழல் என்று இசைக்கருவிகள்.
தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவனும் வீணையுடன் காட்சி தருகிறார்.
கலைமகள் வீணையையும் நாரதர் தம்பூராவையும் மீட்ட,
நந்தி மத்தளம் வாசிக்க, நடராசர் ஆடுகின்றார்.
தெய்வங்களும் இசையுடன் ஒன்றும்போது, அந்த இசையின் பெருமை எல்லை காணமுடியாமல் திகழ்கிறது ...!
நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்ட தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், இசைப்பண்கள் யாவும் தமிழும் இசையுமாக இணைந்த கலந்த பொக்கிஷங்கள்.
வீணை கொடியுடைய வேந்தன்
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் பத்துத்தலை ராவணன்
கயிலை நாதரை தன் கானத்தால் கவர்ந்த ராகம் - காம்போதி
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு,
தனிமையை விரட்டும் கருவி
கவலையை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது குறையும்
அதே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.
அப்படி தான் இசையும். கவலையாக இருக்கையில் பிடித்த பாடல்களை கேட்டால் கவலை குறையும்.
மகிழ்ச்சியாக இருக்கையில் இசையைக் கேட்டால் அது அதிகரிக்கும்.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா’ என்று மனத்துக்கு எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் உற்சாகத்தையும் தரவல்லது இசை.
எந்த எல்லையும் கட்டுப்படுத்த பொழுதுபோக்கு அம்சமாகவும்
அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும் என்கிற பொறுப்பு இசை கலைஞர்களுக்கு உள்ளது. இசைக்கும், சமூக பொறுப்பு உள்ளது.
இசை எனது மதம்
இசை உள்ளவரை, நீ இசையாகவே இரு -
இசை உணர்ச்சியின் சுருக்கெழுத்தாக இருக்க வேண்டும்
இசை கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டம்
இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது -
இசையால் விளைந்த அதிசயங்கள்தான் எத்தனை எத்தனை?!
இசையில் தன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என்று கர்வம் கொண்டு, ‘பாண்டிய நாட்டில் என்னை வெல்ல யாராவது இருக்கிறார்களா’ என்று அறைகூவல் விடுத்த பாடகர் ஹேமநாதனின் கர்வம் போக்க, சொக்கநாதர் மதுரையில் புரிந்த லீலை இசையின் மேன்மையை விளக்கும் ..
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - திருவிளையாடல்
இசை, வேறுபாடு இல்லாத எல்லையற்ற வானம் போன்றது.
கிராமப்புற மக்கள் வயல்களில் வேலை செய்து கொண்டே பாடும் எளிமையும் இனிமையுமான நாட்டுப் பாடல்கள் முதல் திருமணம் என்றால் நலங்கு, ஊஞ்சல், வாழ்த்துப் பாக்கள்... அந்தந்தப் பண்டிகைகளுக்குரிய பாடல்கள் எல்லாமே இசை வடிவானவை!

வாடிய பயிர்கள் இசையைக் கேட்டுத் துளிர்க்கவும்,
நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் கூட இருக்கிறது இசை இன்பம்!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
இசை ஒரு வேள்வி...

ரத்த அழுத்தத்துக்கு ‘நீலாம்பரி’,
மன அழுத்தத்துக்கு ‘லதாங்கி’,
ஞாபகமறதி, அம்னீஷியா போன்ற நோய்களுக்கு ‘ரேவதி’,
பால்வினை நோகளுக்கு ‘மார ரஞ்சனி’,
சர்வரோக நிவாரணியாக ‘ஸ்வேதாம்பரி’. ..
இப்படி பற்பல ராகங்கள் இசை மருத்துவமாகப் பயன்படுகின்றன.
சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன.
இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே
கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர்.
ஹிஸ்டீரியா என்ற நோயை நரம்புக் கருவிகளின்
இசை குணமாக்கி விடுகிறதாம்.

அமெரிக்காவில் ஒரு பல் மருத்துவர் மயக்க மருந்தோ அல்லது வலி குறைப்பு மருந்தோ இல்லாமல், மெல்லிய இசையை எழுப்பியே நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
மெல்லிசையைக் கேட்கும் போது இதய நோய் குணம் ஆகிறதாம். அதிலும் குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளிகள் குணமாக மெல்லிசை பெரிதும் பயன்படுகிறது.
பிறந்த பின் தாலாட்டு குழந்தைக்கு பாடப்படுகிறது.
இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது.
இசைக் கருவிகளை வாசிக்கும் போது மனிதரின் மனதிற்குள் இருக்கும் கோபம், அன்பு , அமைதி, இறக்கம், கருணை, அழுகை, மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சக்தி இந்த இசைக்கருவிகளுக்கு உண்டு..


உலக இசை தினம் இன்று!
‘இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது மற்றும் அமைதியாகவும் இருந்திட முடியாது’ என்று இசை குறித்து பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். அதேபோல், இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை.
இசையில் வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ஆம் தேதி (இன்று) உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் இருவிதமான இசைகள்தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை. மற்றொன்று, தென்னிந்தியாவின் கர்னாடக இசை. இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும்.
கலைமகள் வீணையையும் நாரதர் தம்பூராவையும் மீட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, நடராசர் ஆடுகிறார். சரஸ்வதி வீணைக் கொண்டு மீட்டிக்கொண்டிருக்கிறார்.
முகலாய மன்னரான அக்பரின் அரசவைப் பாடகர் தான்சேன். இவர், தன் குருவான ஹரிதாசரிடம் கற்ற ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, அணைந்து இருந்த விளக்குகளை ஒளிரச் செய்தார்.
பக்தி இலக்கியங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசையை உயிர்ப்பித்தனர். திருமணத்துக்காக ஓர் இளைஞர் தயாராக இருக்கிறார். ‘நீ என் அடிமை வா’ என்று வயதான முதியவர் ஒருவர் பத்திரம் காண்பித்து அவரை தன் அடிமையென மெய்ப்பிக்க நீதிமன்றத்துக்கு அழைத்து செல்கிறார். முதியவர் வெற்றி பெற்று அந்த இளைஞரை கரடு முரடு என எல்லா இடங்களுக்கும் அழைத்துச்சென்று இறுதியில் மலைமேல் இருக்கும் கோயிலுக்குள் சென்றதும் மறைந்து விடுகிறார். ‘நீ யார் பித்தனா, பேயனா?’ என்று அந்த முதியவரை வசைபாடுகிறார் இளைஞர். பின்பு ஒரு ஔி தோன்றுகிறது. முதியவர் சிவபெருமானாக காட்சியளிக்கிறார். ‘என்னை பாடு’ என்று வேண்டுகிறார். ‘பித்தா பிறைசூடி பெருமானே’ என பாடுகிறார் அந்த இளைஞர். அவர் சுந்தரர்பெருமான். இப்படி இறைவனே ஆட்கொண்டு இசையை வளர்த்ததாகப் பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன.
திருவிளையாடல் புராணம்தனில் மதுரையில் குடிகொண்டிருக்கும் சொக்கநாதப்பெருமானே இசையில் வல்லவர் என நிரூபிக்க லீலை செய்த அற்புதங்களையும் வாரி வழங்குகிறது பக்தி இலக்கியங்கள். அதைப்போன்று இன்னும் ஒவ்வொரு கோயில்களிலும் இசைத்தட்டுகள் எனும் தூண்களும் காணப்படுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் வடக்கு கோபுர வாசலுக்கு அருகிலும் உள்ளது. இவ்வாறு மன்னர்களும் வளர்த்தனர் என்றே கூறலாம்.
‘மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன்’ என்று கூறிய கிருஷ்ண பரமாத்மாவுக்காக மார்கழி மாதம் முழுவதும் அந்தக் குளிரில் திருப்பாவை பாடி, இசையை வளர்த்தார் ஆண்டாள்.
மும்மூர்த்திகள் எனப் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இசைக்கு செய்த அற்புதங்கள் ஏராளம். அவர்களைப் பின்பற்றியே கர்னாட்டிக் இசையும் வளர்ந்தது. அவர்களோடு மற்றோரும் அதன்பின் வந்த சந்ததியினரும் வளர்த்தார்கள்.
கிராமப்புற மக்கள் வயல்களில் வேலை செய்துகொண்டே பாடும் எளிமையும் இனிமையுமான நாட்டுப் பாடல்கள், கிராமப்புற கோயில்களில் பாடக்கூடிய கும்மியோடு கூடிய பாடல்கள்... இப்படி தமிழர்களோடு தொன்றுதொட்டு கூடவே வந்தது இசை.
இசை தமிழனின் வாழ்வியலில் ஒவ்வொரு நிமிடமும் கலந்தேதான் இருக்கிறது. திருவாசகத்தை தன் சிம்பொனி இசையால் உலகத்துக்கே தமிழனின் எழுத்தைக்கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசை. அதைப்போலவே இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் தன் கைகளில் கொண்டுவர காரணமாக இருந்தது இசை.
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு, தனிமையை விரட்டும் கருவி... கொண்டாடுவோம் இசையை. உலக இசை தினத்தன்று, இசையால் இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.
- வீரசோழன் க.சோ.திருமாவளவன்


ஜூன் 21: உலக இசை தினம் இன்று கொண்டாடப்படுகிறது
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
அனைத்து இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துகளை பகிர்வோம்..
உங்களுக்கு பிடித்த இசைக் கலைஞரை இங்கே நினைவுப்படுத்தி அவருக்கும் வாழ்த்துகளை பகிர்வோம்....
நன்றி தினமலர்.விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக