வியாழன், 1 ஜூன், 2017

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் 02-06-17 ( வயது 80 ) இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.



கவிஞர் கவிக்கோ  அப்துல் ரகுமான் 02-06-17 ( வயது 80 )  இன்று அதிகாலை 2 மணியளவில்  காலமானார்.

அப்துல் ரகுமான் ,( நவம்பர் 9 , 1937 - சூன் 2 ,2017 ), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப்
புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில்
ஹைக்கூ , கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.
ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிறப்பு
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார் ,
ஔவை துரைசாமி , அ. கி. பரந்தாமனார்,
அவ்வை நடராசன் , அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து
சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும்
தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.
வக்பு வாரிய தலைவராக
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.



நூல்கள்
படைத்தவை
வ.எண் ஆண்டு நூல்
01 1974 பால்வீதி கவி
02 1978 நேயர் விருப்பம் கவி
03 1985 கரைகளே நதியாவதில்லை கட்ட
04 1986 அவளுக்கு நிலா என்று பெயர் கட்ட
05 1986 முட்டைவாசிகள் கட்ட
06 1986
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
கட்ட
07 1987 விலங்குகள் இல்லாத கவிதை கட்ட
08 1987 சொந்தச் சிறைகள் வசன
09 1989 புதுக்கவிதையில் குறியீடு ஆய்
10 1989 சுட்டுவிரல் பாட
11 1990 கம்பனின் அரசியல் கோட்பாடு ஆய்
12 1995 ஆலாபனை கவி
13 1998 பித்தன் கவி
14 1998 விதைபோல் விழுந்தவன்
கவி கவி
15 1998 முத்தமிழின் முகவரி
கவி கவி
16 1999 பூப்படைந்த சபதம் கட்ட
17 1999 தொலைப்பேசிக் கண்ணீர் கட்ட
18 2003 காற்று என் மனைவி கட்ட
19 2003 உறங்கும் அழகி கட்ட
20 2003
நெருப்பை அணைக்கும் நெருப்பு
கட்ட
21 2003 பசி எந்தச் சாதி கட்ட
22 2003 நிலவிலிருந்து வந்தவன் கட்ட
23 2003 கடவுளின் முகவரி கட்ட
24 2003 முத்தங்கள் ஓய்வதில்லை கட்ட
25 2004 காக்கைச் சோறு கட்ட
26 2004 சோதிமிகு நவகவிதை கட்ட
27 2004 மின்மினிகளால் ஒரு கடிதம் கவி
28 2005 தாகூரின் 'சித்ரா' மொ
29 2005 ரகசிய பூ கவி
30 2005 சிலந்தியின் வீடு கட்ட
31 2005 இது சிறகுகளின் நேரம் கட்ட
32 2006 இல்லையிலும் இருக்கிறான் கட்ட
33 2006 பறவையின் பாதை கவி
34 2007 இறந்ததால் பிறந்தவன்
கவி கவி
35 2008 தட்டாதே திறந்திருக்கிறது கட்ட
36 2010 எம்மொழி செம்மொழி கட்ட
37 2010 பூக்காலம் கட்ட
38 2011 தேவகானம் கவி
39
கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை
கவி
40 2013 பாலை நிலா கவி
நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்
முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில்
ஆனந்தவிகடனில் வெளிவந்த ஈழ வரலாறு
கவியரங்கக் கவிதைகள்
பதிப்பித்தவை
குணங்குடியார் பாடற்கோவை
ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள்
இதழ்ப் பணி
விருதுகள்
கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு:
வ.எண் ஆண்டு விருது வழங்கிய
1 1986
கவியரசர் பாரிவிழா விருது
குன்றக்குட அடிகளார்
2 1989 தமிழன்னை விருது
தஞ்சைத் தம பல்கலைக் க
3 1989 பாரதிதாசன் விருது தமிழக அரச
4 1989 கலைமாமணி விருது தமிழக அரச
5 1992 அக்ஷர விருது அக்னி
6 1996
சிற்பி அறக்கட்டளை விருது
கவிஞர் சிற் அறக்கட்டள
7 1997 கலைஞர் விருது தி. மு,க.
8 1998
ராணா இலக்கிய விருது
9 1999
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி, டெல்லி
10 2006 கம்ப காவலர்
கொழும்ப கம்பன் கழகம் இலங்கை
11 2007 பொதிகை விருது
பொதிகை தொலைக்க சென்னை
12 2007 கம்பர் விருது கம்பன் கழகம் சென்னை
13 2007
சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு
தினத்தந்தி நாளிதழ்
14 2008 உமறு புலவர் விருது
சென்ற நாடுகள்
சான்றடைவு
1. ↑ (1) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, (2) சென்னை புதுக்கல்லூரி, (3) வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி, (4) திருச்சி ஜமால் முகமது கல்லூரி (5) இசுலாமியா கல்லூரி, வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக