வியாழன், 30 நவம்பர், 2017

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.



உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள்
எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது  ,இதில் 270,000 குழந்தைகள்.

வரலாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.
டிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.
எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது .
ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின .
முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.
ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள்
இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

நோக்கம்

எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்க்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்
எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).
இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம் . இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா ,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.
கருப்பொருட்களை தேர்ந்தெடுத்தல்
30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக
வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா
2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின்
புவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள
ஆணுறை
1988- 2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" ( உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2015

1988 தொடர்பாடல்
1989 இளைஞர்
1990 எய்ட்சும் பெண்களும்
1991 சவாலை பகிர்ந்து கொள்ளல்
1992 சமூகத்தின் ஈடுபாடு
1993 செயலாற்றுதல்
1994 எய்ட்சும் குடும்பமும்
1995 உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்
1996 ஒரு உலகம் ஒரு நம்பிக்கை
1997 எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்
1998 மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.
2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்
2001 நான் கவனிக்கிறேன்.நீங்கள்?
2002 வடு மற்றும் பாகுப்பாடு
2003 வடு மற்றும் பாகுப்பாடு
2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்
2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability
2007 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2008 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2009 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2010 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று
2011 பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்
2012 ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம்
2013 பூஜ்ஜிய பாகுபாடு
2014 இடைவெளியை குறைப்போம்
2015 விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம்.


டிசம்பர் - 1 உலக எய்ட்ஸ் தினம் - எச்சரிக்கை
2015-ம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வி தொற்றை அறவே அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.டி தெரப்பி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.17 கோடி பேர் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்கும் ‘ஏ.ஆர்.டி தெரப்பி’ சிகிச்சையை எடுக்கின்றனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடம்தான்.

ஹெச்.ஐ.வி தாக்கிய ஒருவரின் உடலில் ஒரு துளி ரத்தத்தில் 250-க்கும் கீழ் வெள்ளை அணுக்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக ஏ.ஆர்.டி தெரப்பியை எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இந்த ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை 12 மணி நேர இடைவேளையில் எடுக்க வேண்டும். ஒரு நாள்கூட மருந்தை நிறுத்தக் கூடாது. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமே மருந்துகள் இருக்கின்றன. குணப்படுத்த முடியாது.
பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவே 90 சதவிகிதத்தினரை ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ அவர்களது எச்சில், வியர்வை மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை செலுத்தும்போதும், ஊசிமருந்து செலுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவும்.
ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய `எலிசா' பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் பரிசோதனை முடிவை அறிந்துகொள்ள நாட்கணக்கில் காத்திருக்கத் தேவை இல்லை. 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவமனையிலேயே எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர்.
எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் வரும் சிறு ரத்தக் காயம்கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். உடலில் வரும் புண்கள் விரைவில் ஆறாது. காலணிகள் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.



வினையாக முடியும் "விளையாட்டு' : -உலக எய்ட்ஸ் தினம்

எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை "கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
எப்படி பரவுகிறது:
பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.
என்ன சிகிச்சை:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.
எத்தனை பேர் :
உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.
எப்படி தடுப்பது:
எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.



உலக எய்ட்ஸ் தினம்: இனி ஒரு விதி செய்வோம்.. எய்ட்ஸை ஒழிப்போம்

1988-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1-ம் நாள் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எச்.ஐ.வி (Human Immuno Deficiency Virus) என அழைக்கப்படும் கொடுமையான வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, உடலில் வேகமாக பரவிக் உயிர் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது. இந்த வைரசே எய்ட்ஸ் நோயிக்கு முக்கிய காரணமாகும். உலகில் அதிக எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நாடுகளில் இந்தியா 3-வதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தியாவில் 2.1 மில்லியன் பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. அதில் 36% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்.ஐ.வி, பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் பரவுகிறது.
அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும்.
எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்: எடை குறைதல், தொடர்ந்த இருமல், நகம் பிரிந்து அவற்றின் வண்ணங்கள் குறைவது, களைப்பு, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி, தோலில் எரிச்சல் ஆகியவை ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக