திங்கள், 13 நவம்பர், 2017

குழந்தைகள் தினம் நவம்பர் 14.


குழந்தைகள் தினம் நவம்பர் 14.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் இன்று. குழந்தைகளிடம் அன்பை பரிமாறிக்கொள்வதில் இவருக்கு இணை இவர்தான்.
குழந்தைகள் இவரை நேரு மாமா என்று அழைப்பார்கள். இவர் குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.


குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்  பிறந்த தினமான நவம்பர் 14ஆன இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, "குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்" என்றார்.
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர்.
அன்பான நேரு மாமா:
இவர்களது குழந்தைகளும் நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.
மலர்தூவி மரியாதை:
குழந்தைகளுக்கு அன்பான மாமாவாக திகழ்ந்த நேருவின் 126வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
குதூகலமான குழந்தைகள் தினம்:
உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா அறிவித்தது. எனினும் நவம்பர் 14 ஆம் தேதிதான் இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தைகள் தினம் - சிறப்புக் கட்டுரை!

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடச் சொன்னார் . உலகநாடுகளில் பட்டம் பெற்ற நேருவுக்குள் குழந்தை மனம் இருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .
சிறப்பு தினங்கள் என்று ஏராளமான நாட்கள் கொண்டாடப் பட்டு வருகின்றன . அதில் துக்ககரமான நினைவு நாட்களும் வருவது குறிப்பிடத்தக்கது .
இப்படி சிறப்பு தினங்கள் எல்லாம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன ?
மனிதர்கள் , சிறப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் , அதை மகிழ்ச்சியின் குறியீடாகவும் கொண்டாடுவதற்கும் வழி வகை ஏற்படுகிறது.
அந்த வகையில் , குழந்தைகள் தினத்தை எத்தனை பேர் உணர்ந்து கொண்டாடுகிறார் என்பது தெரியவில்லை . பெரிய ஜம்பவான்கள் எல்லோருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் .
தேவையான வசதிகளையும் சுதந்திரத்தையும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்கிறார்கள் .
இப்போதெல்லாம் நடைமுறையில் குழந்தைகள் சாதிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இதற்கெல்லாம் வசதி வாய்ப்புகள் ஊடகத்தில் கொட்டிக் கிடக்கின்றன .
உரிய நேரத்தில் குழந்தைகளை வெற்றிப் பெறச் செய்வதே பெற்றோர்களின் முதல் கடமையாகும் . ஆனால் , தான்தோன்றியா பிள்ளைகளை விட்டு விடும் பெற்றோர்கள் இருப்பதால் தான் , ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தெருவுக்கு வந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .
கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை கைதிகள் போல வளர்க்கும் போக்கை நிறுத்தி விட்டு குழந்தைகள் மொழியில் திருத்த கூடுதலான திறமை ஒவ்வொரு பெற்றோருக்கும் நிச்சியம் வேண்டும் .
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வதற்காக ஐந்திலே இளம் மூங்கில்களை ஒடித்து விடுகிறார்கள் .
குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகளாகவே மாறினால் மட்டும் தான் , இன்றைய குழந்தைகள் நாளைய வெற்றியாளராக முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக