வியாழன், 11 ஜனவரி, 2018


தேசிய இளைஞர் நாள் ஜனவரி 12  ( National Youth Day ) 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் ( National Youth Day ) என
இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984 -ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை "தேசிய வாலிபர் தினமாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985 -ல்
சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.
வரலாறு
ஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான
சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் தினமாக கடைப்பிடிக்க
இந்திய அரசு 1984 -ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி
விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார் மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.
2013 -ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி,
சுவாமி விவேகானந்தரின் 15௦-வது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் , விவேகானந்தரின் இப் பிறந்தநாள் விழாவை இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக