திங்கள், 15 ஜனவரி, 2018

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம் ஜனவரி 17, 1917 .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்  பிறந்த தினம் ஜனவரி  17, 1917 .

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர்,தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார்.சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.


தனிப்பட்ட வாழ்க்கை
இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

இல்லறம்
முதல் திருமணம்
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

இரண்டாவது திருமணம்
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.

மூன்றாவது திருமணம்
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த இராஜமுக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[7] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம்திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.


வளர்ப்பு குழந்தைகள்
மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை. எனவே ஜானகி- கண்பதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

கல்வி உதவி
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.

சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

திரைப்பட வாழ்க்கை
முதன்மை கட்டுரை: எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.



அரசியல் வாழ்க்கை
முதன்மை கட்டுரை: எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.


திட்டங்கள்
சத்துணவுத் திட்டம்
விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
தாலிக்கு தங்கம் வழங்குதல்
மகளிருக்கு சேவை நிலையங்கள்
பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
தாய் சேய் நல இல்லங்கள்
இலவச சீருடை வழங்குதல் திட்டம்
இலவச காலணி வழங்குதல் திட்டம்
இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.
தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்[மூலத்தைத் தொகு]
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13. சூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.
தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு[மூலத்தைத் தொகு]
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

பழ நெடுமாறன் கருத்து
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.


எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்[மூலத்தைத் தொகு]
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

இயக்குனர் சீமான் நம்பிக்கை
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

எழுத்துகள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்[மூலத்தைத் தொகு]
இதயக்கனி - அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்[மூலத்தைத் தொகு]
கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.



எம்.ஜி.ஆர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.


டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*****************************************************************************

எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
*****************************************************************************

டாக்டர் எம்.ஜி.ஆரின் முக்கிய திரை உலக குறிப்புகள்....

திரு.எம்.ஜி.ஆர்.இயக்கிய படங்கள் 1) நாடோடி மன்னன்,
2) உலகம் சுற்றும் வாலிபன்,

3) மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

திரு.எம்.ஜி.ஆர். நடித்த இரட்டை வேடங்கள் 17 படங்கள்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா-28 படங்கள்,
திருமதி. சரோஜாதேவி - 26 படங்கள்

அதிகப்படங்கள் இயக்கியவர் திரு. ப. நீலகண்டன்-17 படங்கள்,
திரு. எம்.ஏ. திருமுகம்-16 படங்கள்.

அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ்-16 படங்கள்
அதிக படங்கள் இசை அமைத்தவர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்-49 படங்கள், திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள் திரு. டி.எம். சௌந்தரராஜன்,
திருமதி. பி. சுசீலா.

100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிகண்டவை 86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை 12 படங்கள்
வண்ணப் படங்கள் (கலர்) 40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது என் தங்கை
உலகம் சுற்றும் வாலிபன்.

தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல் தமிழ் படம் மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை 9 படங்கள்.

********************************************************************************

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
நன்றி -விக்கிபீடியா ,லஷ்மண் சுருதி .
*********************************************************************************

புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....

வ. எண்திரைப்படம்
வெளியான நாள்
இயக்குநர்
இசை
கதா-          பாத்திரத்தின்        பெயர்
ஓடிய நாட்கள்
1.சதிலீலாவதி28/03/1936எல்லீஸ்.   ஆர்.டங்கன்   ரெங்கையா                              நாயுடு145
2.இரு சகோதரர்கள்10/09/1936எல்லீஸ்.   ஆர்.டங்கன்குன்னக்குடி வெங்கட்ராமய்யாமுஸ்லீம்       இளைஞன்100
3.தட்சயக்ஞம்31/03/1938ராஜா சந்திரசேகர்ஜி.பி.ராவ்-மாசிலாமணி-ரெட்டிவிஷ்ணு175
4.வீர ஜெகதீஷ்28/8/1938டி.பி.பிரகாசம்-ஆர்.பிரகாஷ்பாபநாசம் சிவன்காவல்துறை    அதிகாரி-
5.மாயா மச்சிந்திரா22/04/1939ராஜா சந்திரசேகர்பாபநாசம் சிவன்சூரியகேது100
6.பிரஹலாதா12/12/1939பி.என்.ராவ்மாணிக்இந்திரன்100
7.வேதவதி (அல்லது)
சீதா ஜனனம்
22/02/1941டி.ஆர்.ரகுநாத்ஜி.ராமநாதன்இந்திரஜித்100
8.அசோக்குமார்10/07/1941ராஜாசந்திரசேகர்பாபநாசம் சிவன்தளபதி175
9.தமிழ் அறியும் பெருமாள்30/04/1942டி.ஆர்.ரகுநாத்பாபநாசம் சிவன்கௌரவவேடம்169
10.ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்-எல்லீஸ்.   ஆர்.டங்கன்-ஆர்.எஸ்.மணிஜி.ராமநாதன்கௌரவவேடம்-
11.ஹரிச்சந்திரா14/01/1944நாகபூஷணம்ஜி.ராமநாதன்தளபதி157
12.சாலிவாகனன்16/02/1945பி.என்.ராவ்எஸ்.எம்.சுப்பையா            நாயுடுவிக்கிரமாதித்தன்160
13.மீரா03/11/1945எல்லீஸ்.   ஆர்.டங்கன்எஸ்.வி. வெங்கட்ராமன்அமைச்சர்140
14.ஸ்ரீமுருகன்04/06/1946ஏ.எஸ்.ஏ.சாமிசி.ஆர்.சுப்புராமன்சிவன்175
15.ராஜகுமாரி11/04/1947ஏ.எஸ்.ஏ.சாமிஎஸ்.எம்.சுப்பையா                நாயுடுமோகன்168
16.பைத்தியக்காரன்26/09/1947கிருஷ்ணன்                      -பஞ்சுசி.ஆர்.சுப்புராமன்மூர்த்தி133
17.அபிமன்யூ06/05/1948எம்.சோமசுந்தரம்-ஏ.காசிலிங்கம்எஸ்.எம்.சுப்பையா            நாயுடுஅர்ஜுனன்100
18.ராஜமுக்தி09/10/1948ராஜாசந்திரசேகர்சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா   நாயுடு-                   ஜி.ராமநாதன்தளபதி50
19.மோகினி31/10/1948லங்கா சத்யம்சி.ஆர்.சுப்புராமன்விஜயகுமார்133
20.ரத்னகுமார்15/12/1949கிருஷ்ணன்-பஞ்சுசி.ஆர்.சுப்புராமன்-ஜி.ராமநாதன்பாலதேவன்100
21.மருதநாட்டு இளவரசி02/04/1950ஏ.காசிலிங்கம்எம்.எஸ்.ஞானமணிகாண்டீபன்133
22.மந்திரி குமாரி24/06/1950எல்லீஸ்.   ஆர்.டங்கன்ஜி.ராமநாதன்வீரமோகன்151
23.மர்மயோகி02/02/1951கே.ராம்நாத்சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா நாயுடுகரிகாலன்151
24.ஏக்த ராஜா (ஹிந்தி)15/06/1951கே.ராம்நாத்---
25.சர்வாதிகாரி14/09/1951டி.ஆர்.சுந்தரம்எஸ்.எம்.சுப்பையா           நாயுடுபிரதாபன்142
26.சர்வாதிகாரி (தெலுங்கு)05/10/1951டி.ஆர்.சுந்தரம்எஸ்.எம்.சுப்பையா நாயுடுபிரதாபன்-
27.அந்தமான் கைதி14/03/1952வி.கிருஷ்ணன்கோவிந்தராஜுலு    நாயுடுநடராஜன்133
28.குமாரி11/04/1952ஆர்.பத்மநாபன்சி.ஆர்.சுப்புராமன்விஜயன்112
29.என் தங்கை31/05/1952சி.எச்.நாராயணமூர்த்திசி.என்.       பாண்டுரங்கன்ராஜேந்திரன்352
30.நாம்05/03/1953ஏ.காசிலிங்கம்சி.எஸ்.ஜெயராமன்குமரன்50
31.ஜெனோவா (மலையாளம்)05/03/1953எஃப்.நாகூர்டி.ஏ.கல்யாணம்-.ஞானமணி-சி.ஆர்.சுப்புராமன்சிப்ரேஸா-
32.பணக்காரி05/03/1953கோபால     கிருஷ்ணன்எஸ்.வி.   வெங்கட்ராமன்சுந்தர்50
33.ஜெனோவா (தமிழ்)05/03/1953எஃப்.நாகூர்.ஞானமணி-எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திசிப்ரேஸா133
34.மலைக்கள்ளன்22/07/1954ஸ்ரீராமுலு           நாயுடுஎஸ்.எம்.சுப்பையா நாயுடுகுமாரதேவன்150
35.கூண்டுக்கிளி26/08/1954டி.ஆர்.ராமண்ணாகே.வி.மகாதேவன்தங்கராஜ்42
36.குலேபகாவலி29/07/1955டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திதாசன்166
37.அலிபாவும் 40 திருடர்களும்14/01/1956டி.ஆர்.சுந்தரம்தட்சணாமூர்த்திஅலிபாபா168
38.மதுரை வீரன்13/04/1956டி.யோகானந்த்ஜி.ராமநாதன்வீரன்200
39.தாய்க்குப் பின் தாரம்21/09/1956எம்.ஏ.திருமுகம்கே.வி.மகாதேவன்முத்தையா166
40.சக்ரவர்த்தி திருமகள்18/01/1957ப.நீலகண்டன்ஜி.ராமநாதன்உதயசூரியன்140
41.ராஜராஜன்26/04/1957டி.வி.சுந்தரம்கே.வி.மகாதேவன்ராஜன்50
42.புதுமைபித்தன்02/08/1957டி.ஆர்.ராமண்ணாடி.ஆர்.பாப்பாஜீவகன்105
43.மகாதேவி22/11/1957சுந்தர்ராவ்         நட்கர்னிஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திதாசன்177
44.நாடோடி மன்னன்22/08/1958எம்.ஜி.ஆர்.எஸ்.எம்.சுப்பையா நாயுடுவீராங்கன்-மார்த்தாண்டன்200
45.தாய் மகளுக்குக் கட்டிய தாலி31/12/1959ஆர்.ஆர்.சந்திரன்டி.ஆர்.பாப்பாகனகு-
46.பாக்தாத் திருடன்06/05/1960டி.வி.சுந்தரம்இப்ராஹீம்அபு112
47.ராஜாதேசிங்கு02/09/1960டி.ஆர்.ரகுநாத்ஜி.ராமநாதன்தேசிங்கு                    -தாவுத்கான்50
48.மன்னாதி மன்னன்19/10/1960எம்.நடேசன்எம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமணிவண்ணன்100
49.அரசிளங்குமரி01/01/1961ஏ.எஸ்.ஏ.சாமிஜி.ராமநாதன்அறிவழகன்50
50.திருடாதே23/03//1961ப.நீலகண்டன்எஸ்.எம்.சுப்பையா நாயுடுபாலு161
51.சபாஷ் மாப்பிளே14/07/1961எஸ்.ராகவன்கே.வி.மகாதேவன்வாசு50
52.நல்லவன் வாழ்வான்31/08/1961ப.நீலகண்டன்டி.ஆர்.பாப்பாமுத்து70
53.தாய் சொல்லைத் தட்டாதே07/11/1961எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்140
54.ராணி சம்யுக்தா14/01/1962டி.யோகானந்த்கே.வி.மகாதேவன்பிரிதிவிராஜன்50
55.மாடப்புறா16/02/1962எஸ்.ஏ.சுப்பராமன்கே.வி.மகாதேவன்ராமு40
56.தாயைக் காத்த தனயன்13/04/1962எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சேகர்140
57.குடும்பத் தலைவன்15/08/1962எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்வாசு108
58.பாசம்31/08/1962டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திகோபி70
59.விக்கிரமாதித்தன்27/10/1962டி.ஆர்.ரகுநாத்-என்.எஸ்.ராமதாஸ்சி.ஆர்.சுப்புராமன்மாதித்தர்50
60.பணத்தோட்டம்11/01/1963கே.சங்கர்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திசெல்வம்80
61.கொடுத்து வைத்தவள்09/02/1963ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்செல்வம்60
62.தர்மம் தலைகாக்கும்22/02/1963எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சந்திரன்117
63.கலை அரசி19/04/1963ஏ.காசிலிங்கம்கே.வி.மகாதேவன்மோகன்50
64.பெரிய இடத்துப் பெண்10/05/1963டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமுருகப்பன்131
65.ஆனந்த ஜோதி28/08/1963வி.என்.ரெட்டி-ஏ.எஸ்.ஏசாமிஎம்.எஸ்.  விஸ்வநாதன் -டி.கே.ராமமூர்த்திஆனந்த்50
66.நீதிக்குப் பின் பாசம்15/08/1963எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்கோபால்100
67.காஞ்சித் தலைவன்26/10/1963ஏ.காசிலிங்கம்கே.வி.மகாதேவன்நரசிம்ம             பல்லவர்50
68.பரிசு15/11/1963டி.யோகானந்த்கே.வி.மகாதேவன்வேணு100
69.வேட்டைக்காரன்14/01/1964எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்பாபு147
70.என் கடமை13/03/1964எம்.நடேசன்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திநாதன்70
71.பணக்கார குடும்பம்24/04/1964டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திநல்லதம்பி133
72.தெய்வத்தாய்18/07/1964பி.மாதவன்எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமாறன்105
73.தொழிலாளி25/09/1964எம்.ஏ.திருமுருகம்கே.வி. மகாதேவன்            -ராஜ்77
74.படகோட்டி03/11/1964டி.பிரகாஷ்ராவ்எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமாணிக்கம்102
75.தாயின் மடியில்18/12/1964ஏ.சுப்பாராவ்எஸ்.எம்.சுப்பையா நாயுடுராஜா50
76.எங்க வீட்டுப் பிள்ளை14/01/1965சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்இளங்கோ-            ராமு236
77.பணம் படைத்தவன்27/03/1965டி.ஆர்.ராமண்ணாஎம்.எஸ்.  விஸ்வநாதன்ராஜா90
78.ஆயிரத்தில் ஒருவன்09/07/1965பி.ஆர்.பந்துலுஎம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்திமணிமாறன்125
79.கலங்கரை விளக்கம்28/08/1965கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்ரவி90
80.கன்னித்தாய்10/09/1965எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சரவணன்60
81.தாழம்பூ23/10/1965என்.எஸ்.ராமதாஸ்கே.வி.மகாதேவன்துரை50
82.ஆசைமுகம்10/12/1965பி.புல்லையாகே.வி.மகாதேவன்மனோகர்-   வஜ்ரவேலு70
83.அன்பே வா14/01/1966ஏ.சி.திருலோகசந்தர்எம்.எஸ்.  விஸ்வநாதன்பாலு(ஜே.பி.)154
84.நான் ஆணையிட்டால்04/02/1966சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்பாண்டியன்70
85.முகராசி18/02/1966எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்100
86.நாடோடி14/04/1966பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்தியாகு70
87.சந்திரோதயம்27/05/1966கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்சந்திரன்100
88.தாலிபாக்கியம்27/08/1966கே.பி.நாகபூஷணம்கே.வி.மகாதேவன்முருகன்45
89.தனிப்பிறவி16/09/1966எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்முத்தையா70
90.பறக்கும் பாவை11/11/1966டி.ஆர்.ராமண்ணாகே.வி.மகாதேவன்ஜீவா70
91.பெற்றால்தான் பிள்ளையா09/12/1966கிருஷ்ணன்-பஞ்சுஎம்.எஸ்.  விஸ்வநாதன்ஆனந்தன்100
92.தாய்க்குத் தலைமகன்13/01/1967எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்மருது70
93.அரச கட்டளை19/05/1967எம்.ஜி.சக்ரபாணிகே.வி.மகாதேவன்விஜயன்150
94.காவல்காரன்07/09/1967ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மணி169
95.விவசாயி01/11/1967எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்முத்தையா100
96.ரகசிய போலீஸ் 11511/01/1968பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்ராமு113
97.தேர்த் திருவிழா23/02/1968எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்சரவணன்50
98.குடியிருந்த கோயில்05/03/1968கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்-பாபு133
99.கண்ணன் என் காதலன்25/04/1968ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கண்ணன்70
100.புதிய பூமி27/06/1968சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்கதிரவன்50
101.கணவன்15/08/1968ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்30
102.ஒளி விளக்கு20/09/1968சாணக்யாஎம்.எஸ்.  விஸ்வநாதன்முத்து175
103.காதல் வாகனம்21/10/1968எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்பாலு40
104.அடிமைப் பெண்01/05/1969கே.சங்கர்கே.வி.மகாதேவன்வேங்கையன்176
105.நம் நாடு07/11/1969ஜம்புஎம்.எஸ்.  விஸ்வநாதன்துரை147
106.மாட்டுக்கார வேலன்14/01/1970ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்வேலன்-ராமு177
107.என் அண்ணன்21/05/1970ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்ரங்கன்112
108.தலைவன்24/07/1970தாமஸ்சிங்கமுத்து-எஸ்.எம்.சுப்பையா நாயுடுராஜா50
109.தேடி வந்த மாப்பிள்ளை29/08/1970பி.ஆர்.பந்துலுஎம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்105
110.எங்கள் தங்கம்09/10/1970கிருஷ்ணன்-பஞ்சுஎம்.எஸ்.  விஸ்வநாதன்தங்கம்112
111.குமரிக் கோட்டம்26/01/1971ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கோபால்119
112.ரிக்ஷாக்காரன்29/05/1971எம்.கிருஷ்ணன்எம்.எஸ்.  விஸ்வநாதன்செல்வம்167
113.நீரும் நெருப்பும்18/10/1971ப.நீலகண்டன்கே.வி.மகாதேவன்மணிவண்ணன்-கரிகாலன்108
114.ஒரு தாய் மக்கள்09/12/1971ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்கண்ணன்50
115.சங்கே முழங்கு04/02/1972ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்60
116.நல்ல நேரம்10/03/1972எம்.ஏ.திருமுருகம்கே.வி.மகாதேவன்ராஜ்113
117.ராமன் தேடிய சீதை13/04/1972ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்ராமன்110
118.நான் ஏன் பிறந்தேன்09/06/1972எம்.கிருஷ்ணன்சங்கர் கணேஷ்கண்ணன்100
119.அன்னமிட்டகை15/09/1972எம்.கிருஷ்ணன்கே.வி.மகாதேவன்துரைராஜ்50
120.இதய வீணை20/10/1972கிருஷ்ணன்-பஞ்சுசங்கர் கணேஷ்சுந்தரம்133
121.உலகம் சுற்றும் வாலிபன்11/05/1973எம்.ஜி.ஆர்.எம்.எஸ்.  விஸ்வநாதன்ராஜ்-முருகன்300
122.பட்டிக்காட்டுப் பொன்னையா10/08/1973பி.எஸ்.ரங்காகே.வி.மகாதேவன்முத்தையா-பொன்னையா30
123.நேற்று இன்று நாளை12/07/1973ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மாணிக்கம்124
124.உரிமைக்குரல்07/01/1974சி.வி.ஸ்ரீதர்எம்.எஸ்.  விஸ்வநாதன்கோபி200
125.சிரித்து வாழ வேண்டும்30/11/1973எஸ்.எஸ்.பாலன்எம்.எஸ்.  விஸ்வநாதன்ராமு-ரஹ்மான்105
126.நினைத்ததை முடிப்பவன்09/05/1975ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்சுந்தரம்-ரஞ்சித்112
127.நாளை நமதே04/07/1975கே.எஸ்.சேதுமாதவன்எம்.எஸ்.  விஸ்வநாதன்சங்கர்-விஜய்140
128.இதயக்கனி22/08/1975ஏ.ஜெகநாதன்எம்.எஸ்.  விஸ்வநாதன்மோகன்151
129.பல்லாண்டு வாழ்க31/10/1975கே.சங்கர்கே.வி.மகாதேவன்ராஜ்112
130.நீதிக்குத் தலைவணங்கு18/03/1976ப.நீலகண்டன்எம்.எஸ்.  விஸ்வநாதன்விஜய்151
131.உழைக்கும் கரங்கள்23/05/1976கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்ரங்கா103
132.ஊருக்கு உழைப்பவன்12/11/1976எம்.கிருஷ்ணன்எம்.எஸ்.  விஸ்வநாதன்செல்வம்-குமார்101
133.நவரத்தினம்05/03/1977ஏ.பி.நாகராஜன்குன்னக்குடி வைத்தியநாதன்தங்கம்70
134.இன்று போல் என்றும் வாழ்க05/05/1977கே.சங்கர்எம்.எஸ்.  விஸ்வநாதன்முருகன்119
135.மீனவ நண்பன்14/08/1977சி.வி.ஸ்ரீதர்எம்.எஸ்.  விஸ்வநாதன்குமரன்151
136.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்14/01/1978எம்.ஜி.ஆர்.எம்.எஸ்.  விஸ்வநாதன்சுந்தரபாண்டியன்60
137.அவசர போலீஸ் 10017/01/1990கே.பாக்யராஜ்எம்.எஸ்.  விஸ்வநாதன்-கே.பாக்யராஜ்ராஜ்60

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக