புதன், 24 ஜனவரி, 2018

பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் 25 சனவரி 1920.


பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பிறந்த தினம் 25 சனவரி 1920.

பித்துக்குளி முருகதாஸ் ( Piththukkuli Murugadas , 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர் .

இளமைப்பருவம்

பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.

பக்தி வழி

1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில்
இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.
தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர். 1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.
பாடிய பிரபல பக்திப் பாடல்கள்
அலை பாயுதே கண்ணா
கண்ணா .. மதுர மதுர வேணுகீத மோக
ஆடாது அசங்காது வா கண்ணா
திரைப்பட பக்திப் பாடல்கள்
நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை - தெய்வம் (திரைப்படம்)

விருதுகள்
சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது
கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
குரு சுராஜானந்தா விருது 1989 இல்
மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.

மறைவு
2015 நவம்பர் 17 அன்று உடல் நலக் குறைவு காரணமாக தனது 95 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


முருக பக்தர், பாடகர்

சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான பித்துக்குளி முருகதாஸ் (Pithukuli Murugadas) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:


l கோவையில் (1920) பிறந்தவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டரை வயதில் தாயையும், 7 வயதில் தந்தையையும் இழந்தார். இவருக்கு பல பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார் பாட்டி. கோவை பிக் பஜார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் வீராசாமி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.


l பழநியில் உள்ள சித்தி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஒருமுறை, பழநி மலை வெட்டாற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பஞ்சவர்ண குகைக்கு சென்றார். அங்கு அடிக்கடி சென்று, தியானம் செய்யத் தொடங்கினார். அங்குள்ள துறவிகள் முழங்கும் சரவணபவ மந்திரம் உபதேச மந்திரமாக இவரது மனதில் பதிந்தது.

l பிரம்மானந்த பரதேசியாரிடம் நாதயோகத்தை அக்கறையுடன் கற்றார். அவர்தான் இவருக்கு ‘பித்துக்குளி’ என்ற பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது. தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.

l சிறந்த மாணவராக இருந்தாலும், ஆன்மிகம், விடுதலைப் போராட்டம் என்று ஈடுபட்டதால், படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 13 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். மெக்கானிக், சமையல் வேலை, ஹோட்டல் சர்வர் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பழநியில் சித்தப்பா நடத்திய லாட்ஜில் சிறிது காலம் வேலை செய்தார்.

l உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கைது செய்யப்பட்டு, சிறையில் பல சித்ரவதை களை அனுபவித்தார். ஏற்கெனவே விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவரது இடது கண்ணில் போலீஸார் தாக்கியதால், பார்வை பறி போனது. அதிலிருந்து கருப்புக் கண்ணாடி அணியத் தொடங்கினார்.

l சுயமாக முயன்று ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றினார். இவருக்கு உபதேசம் அளித்து, ‘முருகதாஸ்’ என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பரமானந்த ஸ்வாமிகள் தனக்கு வைத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, ‘பித்துக்குளி முருகதாஸ்’ ஆனார்.

l நாடு முழுவதும் 1940-களில் பாத யாத்திரை மேற்கொண்டார். கங்கை நதிக்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து பாடுவார். மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர் உள்ளிட்ட ஏராளமான புண்ணியத் தீர்த்தங்களை தரிசித்தார்.

l பின்னர் தமிழகம் திரும்பியவர், வெள்ளியங்கிரி மலைக் காட்டில் பல மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

l திருப்புகழ் பாராயணத்துக்கு பெயர்பெற்றவர். திரைப்படங்களிலும் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

l தனது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த நவம்பர் 17-ம் தேதி 95-வது வயதில் மறைந்தார். தீவிர முருக பக்தரான இவர், தைப்பூசத்தில் பிறந்து, கந்த சஷ்டியன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.

பித்துக்குளி முருகதாஸ் பிறந்தநாள் இன்னிக்கு தான்

 சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான  பித்துக்குளி முருகதாஸ் பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்

சிறந்த பாடகர், முருக பக்தர், சுதந்திரப் போராட்ட வீரரான பித்துக்குளி முருகதாஸ் (Pithukuli Murugadas) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில..
கோவையில் (1920) பிறந்தவர். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டரை வயதில் தாயையும், 7 வயதில் தந்தையையும் இழந்தார். இவருக்கு பல பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார் பாட்டி. கோவை பிக் பஜார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் வீராசாமி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
பழநியில் உள்ள சித்தி வீட்டுக்கு அடிக்கடி செல்வார். ஒருமுறை, பழநி மலை வெட்டாற்றில் தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் உள்ள பஞ்சவர்ண குகைக்கு சென்றார். அங்கு அடிக்கடி சென்று, தியானம் செய்யத் தொடங்கினார். அங்குள்ள துறவிகள் முழங்கும் சரவணபவ மந்திரம் உபதேச மந்திரமாக இவரது மனதில் பதிந்தது.
பிரம்மானந்த பரதேசியாரிடம் நாதயோகத்தை அக்கறையுடன் கற்றார். அவர்தான் இவருக்கு ‘பித்துக்குளி’ என்ற பெயரை சூட்டியதாக கூறப்படுகிறது. தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்.
சிறந்த மாணவராக இருந்தாலும், ஆன்மிகம், விடுதலைப் போராட்டம் என்று ஈடுபட்டதால், படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 13 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். மெக்கானிக், சமையல் வேலை, ஹோட்டல் சர்வர் எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். பழநியில் சித்தப்பா நடத்திய லாட்ஜில் சிறிது காலம் வேலை செய்தார்.
உப்பு சத்தியாகிரகம், சுதேசி இயக்கம் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார். கைது செய்யப்பட்டு, சிறையில் பல சித்ரவதை களை அனுபவித்தார். ஏற்கெனவே விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த இவரது இடது கண்ணில் போலீஸார் தாக்கியதால், பார்வை பறி போனது. அதிலிருந்து கருப்புக் கண்ணாடி அணியத் தொடங்கினார்.
சுயமாக முயன்று ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றினார். இவருக்கு உபதேசம் அளித்து, ‘முருகதாஸ்’ என்ற பெயரை சூட்டினார் சுவாமி ராமதாஸ். பரமானந்த ஸ்வாமிகள் தனக்கு வைத்த ‘பித்துக்குளி’ என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டு, ‘பித்துக்குளி முருகதாஸ்’ ஆனார்.
நாடு முழுவதும் 1940-களில் பாத யாத்திரை மேற்கொண்டார். கங்கை நதிக்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து பாடுவார். மதுரா, பிருந்தாவனம், துவாரகை, மும்பை, பண்டரிபுரம், பீஜப்பூர் உள்ளிட்ட ஏராளமான புண்ணியத் தீர்த்தங்களை தரிசித்தார்.
பின்னர் தமிழகம் திரும்பியவர், வெள்ளியங்கிரி மலைக் காட்டில் பல மாதங்கள் தியானத்தில் ஈடுபட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பக்தி இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். கலைமாமணி, சங்கீத சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
திருப்புகழ் பாராயணத்துக்கு பெயர்பெற்றவர். திரைப்படங்களிலும் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
தனது கச்சேரிகள் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து வந்தார். கடந்த நவம்பர் 17-ம் தேதி 95-வது வயதில் மறைந்தார். தீவிர முருக பக்தரான இவர், தைப்பூசத்தில் பிறந்து, கந்த சஷ்டியன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக