புதன், 23 நவம்பர், 2016

எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த நாள் நவம்பர் 24, 1961.

எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த நாள் நவம்பர் 24, 1961.

சுசானா அருந்ததி ராய் (பி.
நவம்பர் 24, 1961 ) ஓர் இந்திய
எழுத்தாளர் ஆவார் .
வாழ்க்கைக்
குறிப்பு
அருந்ததி ராய் மேகாலயாவின்
தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.
கேரளத்தை சேர்ந்த மேரி
ரோசுக்கும்[1] வங்காளத்தைச்
சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில்
வேலை செய்த தந்தைக்கும்
பிறந்தார்.
தனது சிறுவயதில் கேரளாவில்
உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற
சிற்றூரில் வளர்ந்தார்.
கோட்டயத்திலும் நீலகிரியிலும்
பள்ளிப்படிப்பை முடித்தார்.
பின்னர் தில்லிப்
பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை
படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது
முதல் கணவரைச் சந்தித்தார். பின்
தங்கள் படிப்பை விடுத்து
இருவரும் வெளியேறினர். தன்
முதல் கணவருடன் நான்கு
ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர்
அவர் பிரதீப் கிரிஷன் என்ற
திரைப்பட இயக்குநரை மணந்தார்.
இருவரும் சேர்ந்து சில படங்களை
எடுத்தனர். இப்படங்களுக்கு
அருந்ததி திரைக்கதை
எழுதியது குறிப்படத்தக்கது.
அவற்றில் சில In Which Annie Gives It
Those Ones and Electric Moon [2] .
சமூகக் குரல்
அருந்ததி ராய் தனது பள்ளி
பருவத்திலிருந்தே தானாகச்
சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த
பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை
காரணமாகத் திகழ்ந்தது. இவரது
பல படைப்புகளில்
சமுதாயத்திலுள்ள பெண்
அடிமைத்தனம் , குழந்தைத்
தொழிலாளர் பிரச்சனை ,
அமெரிக்காவின் வெளியுறவுக்
கொள்கைகள் முதலியவற்றை
விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.
மேதா பட்கர் தொடங்கிய நர்மதா
பச்சாவோ அந்தோலன் ( en:Narmada
Bachao Andolan ) என்ற அமைப்பில்
தீவிரமாக பங்கு கொண்டார்.
இவ்வாறே இவரது குரல்
சமுதாயத்தின் மறுபக்கத்தை
மக்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்தக் குரல் பல முறை எழுத்து
வடிவமாக இருந்தது என்பது
குறிப்பிடத் தகுந்தது.
நர்மதை போராட்டம்
காஷ்மீர் பிரச்சனை
படைப்புகள்
தன் எழுத்து மக்களைச்
சென்றடைவதை உணர்ந்த
அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல்
கட்டுரைகள் , விமர்சனங்களைப் என
பல விதமான படைப்புகளை
படைத்து வருகிறார். இவரது
படைப்புகளின் தன்மை பல நேரம்
எதனையும் கருப்பு
வெள்ளையேன்று பிரித்து
அடையாளம் காட்டாது. மனிதர்கள்,
நாடுகள், கொள்கைகள் என்று
அனைத்திலும் உள்ள தீமை மற்றும்
நன்மையை உணர்ச்சி
நிலையிலிருந்து விலகி
படைப்பதால் இவரது படைப்புகள்
உலகில் பல பத்திரிக்கைகளில்
இடம் பெற்றுவருகின்றன.
விமர்சனம்
பேண்டிட் குவீண் [5] en:Bandit Queen
புதினங்கள்
1. த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் ( en:The
God of Small Things)
விருதுகள்
1. 1997 ஆம் ஆண்டு தனது முதல்
புதினமான த காட் ஆப் ஸ்மால்
திங்ஸ்க்கு புக்கர் பரிசு
பெற்றார். புக்கர் பரிசு வென்ற
முதல் இந்தியர் [6] என்பது
குறிப்பிடத்தக்கது.
2. 2003ஆம் ஆண்டு இவருக்கு
வழங்கப்படவிருந்த சாகித்ய
அகாதமி பரிசை இவர் மறுத்து
விட்டார்  .
3. மே 2004-ல் சிட்னி அமைதிப்
பரிசையும் வென்றார்.
4. 2015 ஆம் ஆண்டுக்கான
அம்பேத்கர் சுடர் விருது
பெற்றுகிறார். விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி சார்பில்
வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக